ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
கிழக்கு மாகாண விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்கள் கிழக்கு ஆளுநரால் கையளிப்பு! Published By: Nanthini 10 Jun, 2023 | 01:26 PM கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் நிலைபேண்தகு விவசாய அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் செயற்பட்ட 22 விவசாய நிறுவனங்களுக்கு இரு சக்கர உழவு இயந்திரங்களை பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (9) திருகோணமலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல, மாகாண பிரதம செயலாளர் மற்றும் விவசாய அமைச்சின் செயலாள…
-
- 2 replies
- 429 views
-
-
யாழில் சுயமரியாதை நடைபயணம் adminJune 10, 2023 சகலவிதமான ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகவும் LGBTQIA+ சமூகத்திற்கு எதிரான பாகுபாடுகளைப் பற்றி வலியுறுத்தியும் சுயமரியாதை நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் சனிக்கழமை இடம்பெற்றது. சுயமரியாதை மாதத்தை முன்னிட்டு ‘யாழ். சுயமரியாதை வானவில் பெருமிதம் – 2023’ நிகழ்ச்சித் திட்டத்தின் ஓர் அங்கமாக, ‘ இச்சமூகத்தில் வாழும் அனைவருமே சமூக பொறுப்புடையவர்கள்’ என்பதை வலியுறுத்தும் முகமாகவும், LGBTIQA+ சமூகத்தினரையும் சக மனிதர்களாக கருதுவதுடன் அவர்கள் தமது வாழ்வை வாழ்வதற்கான உரிமைகளை மதிப்பதுடன் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தாத வாழ்தலை நோக்கிய பயணத்தின் ஓர் அங்கமாக சுயமரியாதை நடைபயணம் யாழ்ப்பாணத்தில் இடம்ப…
-
- 6 replies
- 978 views
- 1 follower
-
-
வடக்கு, கிழக்கில் பரவிய தோல் கழலை நோய் குருநாகலிலும் பரவல் - 100க்கும் அதிகமான கால்நடைகள் பாதிப்பு Published By: Vishnu 28 May, 2023 | 06:34 PM (எம்.வை.எம்.சியாம்) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கால்நடைகளில் பரவிய தோல் கழலை நோய் குருநாகல் மாவட்டத்திலும் மாடுகளிடையே பரவ ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக 100 க்கும் அதிகமான கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கால்நடைகளிடையே ஒரு வகையான …
-
- 1 reply
- 227 views
- 1 follower
-
-
மாகாண சபை தேர்தல் விரைவில் – தயராகுமாறு பசில் அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்தை அடுத்து மாகாண சபை தேர்தலை விரைவில் நடத்துவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஆகவே தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதை கண்டு மனதை தளரவிடாமல் தேர்தலுக்கு தயாராகுமாறு பொதுஜன பெரமுனவின் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுக்கு பசில் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் உள்ளூராட்சித் தேர்தல் பிற்போடப்பட்டுள்ளமை மற்றும் மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் ஆளுநரின் கட்டுப்பாட்டில் …
-
- 1 reply
- 582 views
-
-
Published By: RAJEEBAN 11 JUN, 2023 | 11:30 AM இலங்கையில் இன மத சிறுபான்மையினரை மௌனமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு கவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் செனெட் வெளிவிவகார குழுவின் உத்தியோகபூர்வ டுவிட்டரில் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் விடுதலைசெய்யப்பட்டதை நான் வரவேற்க்கும் அதேவேளை அவர் கைதுசெய்யப்பட்டமை அச்சுறுத்தப்பட்டமை துன்புறுத்தப்பட்டமை குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன் என செனெட் குழுவின் தலைவர் செனெட்டர் மெனெட்டெஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் பாதுகாப்பு படையினர் புலனாய்வு பிரிவினரின…
-
- 2 replies
- 683 views
- 1 follower
-
-
10 JUN, 2023 | 09:00 AM காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபத்துவரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர் கிறிஸ்டின் சிபோல்லா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது. https://www.virakesari.lk/article/157380
-
- 4 replies
- 222 views
- 1 follower
-
-
இலங்கை மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச வீதி வரைபடத்திற்கும் காலவரையறைக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். புதிய மின்சார சட்டத்தின் இறுதி வரைவு மே மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சீர்திருத்த செயலகத்தை நிறுவுவதற்கும் அபிவிருத்தி முகவர்களிடமிருந்து உதவிகளை பெற்றுக் கொள்வதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID மற்றும் JICA ஆகியவற்றிலிருந்து இந்த செயல்முறைக்கு உதவி பெறப்படும், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திற்குள் இதனை நிறைவு …
-
- 5 replies
- 382 views
- 1 follower
-
-
ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான அலரிமாளிகையை கொழும்பு நகருக்கு வெளியே மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே சுற்றுலா தலமாக மட்டுமே திறந்து வைக்கப்படும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர – கோட்டே பிரதேசத்தில் ஒரே இடத்தில் நிர்வாக வளாகத்தை அமைப்பதற்கு மாற்று காணியை தேடி வருவதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் (UDA) பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர தெரிவித்த்துள்ளார். உத்தேச ‘புதிய கொழும்பு பாரம்பரிய நகரத் திட்டத்தின்’ கீழ், ஜனாதிபதி மாளிகை, செயலகம் மற்றும் அலரிமாளிகை கட்டிடம் மற்றும் பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகம் ஆகியவை சுற்றுலா தலங்களாக பாதுகாக்கப்படும். இத்திட்…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பு !! பயணிகளுக்கு வினைத்திறனான சேவையை வழங்குவதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தானியங்கி குடிவரவு கட்டுப்பாட்டு அமைப்பை நிறுவ, சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. அதன்படி, ஆரம்ப கட்டத்தில், புறப்பாட்டு முனையத்தில் இரண்டு தானியங்கி குடிவரவு செக்-இன் கவுண்டர்கள் நிறுவவும் 8 மாதங்களின் பின்னர் வருகை முனையத்திலும் இரண்டு கவுண்டர்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை குடிவரவுத் துறையும், விமான நிலைய மற்றும் ஏவியேஷன் செர்வீசஸ் நிறுவனமும் நிதி ஒதுக்கீடுகளையும் வழங்கும். சிங்கப்பூர் நிறுவனமான தேல்ஸ் டிஸ் தயாரி…
-
- 0 replies
- 656 views
-
-
பிரித்தானியா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு பிரித்தானியாவிற்கு தொழில் நிமித்தம் செல்லும் இலங்கையர்களும் அங்கிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளும் தத்தமது நாடுகளில் வழங்கப்பட சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த நாடுகளிலேயே வழங்கப்பட சாரதி அனுமதிப்பத்திரத்தை பயன்படுத்தும் வகையிலான ஒரு இணக்கப்பாடு இரு நாடுகளுக்கும் இடையில் எட்டப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது. அவ்வாறானதொரு இணக்கப்பாடு எட்டப்பட்டால் பயிற்சி பரீட்சைக்கு தோற்றாமல் சாரதி அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு வழங்கப்படும் என மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாள…
-
- 0 replies
- 221 views
-
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது! kugenJune 7, 2023 தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுதிசெய்துள்ளது தன்மீதான தாக்குதல் தனது உயிருக்கு ஆபத்து தொடரும் ஒடுக்குமுறைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட பிரேரணையை சமர்ப்பித்து இன்று உரையாற்றவிருந்த நிலையிலேயே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் http://www.battinews.com/2023/06/blog-post_969.html
-
- 43 replies
- 3k views
- 2 followers
-
-
பொறுமையின் எல்லையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிா்வரும் ஜூலை மாத இறுதிக்குள் தமிழ் மக்களின் அரசியல் தீா்வுக்கான பேச்சுவாா்த்தை ஒரு கட்டத்தை அடையும் என ஜனாதிபதி கூறியுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தொிவித்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினா்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் அண்மையில் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொிவிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினா் சிவஞானம் சிறீதரன் குறிப்பிட்டுள்ளாா். குறித்த கால இடைவௌிக்காக காத்திருப்பதாக தொிவித்த அவா், தமிழ் மக்களின் அரசியல் தீா்வு தொடா்பில் பொறுமையின் எல்லையில் இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலை…
-
- 1 reply
- 471 views
-
-
மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும் ஏற்பாடானது எங்களது நிலைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிக்கும் – சுரேந்திரன் June 10, 2023 ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்டு அல்லது முன்வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைக்கான ஆலோசனைக்குழு ஒன்றை அமைக்கும் ஏற்பாடானது, ஏற்கனவே நாங்கள் கோரிக்கை வைத்திருக்கும், மாகாண சபை தேர்தலை நடாத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பதாக அமைகிறது என ரெலோ அமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி தெரிவித்துள்ளார். இன்றையதினம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். குறித்த அறிக்கையில் , அரசியல் யாப்பிலே ஏற்கனவே இருக்கின்ற அதிகாரங்களை பகிர்ந்து, மாகாண சபை தேர்தல் சட்…
-
- 0 replies
- 183 views
-
-
ஐ.எம்.எப். : 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி சர்வதேச நாணய நிதியத்தின் கடனை பெறுவதற்கு முன்னர் நிறைவேற்றப்பட வேண்டிய 62 நிபந்தனைகளில் இதுவரை இருபத்தைந்து நிபந்தனைகள் மட்டுமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் செய்து கொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டாவது தவணையைப் பெறுவதற்கு முன்னர் இந்த ஒப்பந்தங்களை பூர்த்தி செய்திருக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் தொடர்பாக தயாரிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்றப்படவிருந்த புதிய மத்திய வங்கிச் சட்டத்திற்கு…
-
- 0 replies
- 181 views
-
-
முதலாம் திகதி முதல் யாழ்ப்பாணத்தில் ஏற்படவுள்ள மாற்றம் எதிா்வரும் ஜுலை முதலாம் திகதி முதல் யாழ்ப்பாண மாவட்டத்தில் தரம் ஒன்பதிற்குட்பட்ட மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளிலும் வெள்ளிக்கிழமைகளிலும் தனியார் வகுப்புக்களை நடாத்துவதை நிறுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் ஏழு நாட்களும் ஓய்வின்றிக் கல்விச் செயற்பாட்டில் ஈடுபடுவதனால் மாணவர்களுக்கும் சமுதாயத்திற்கும் ஏற்படும் சாதக மற்றும் பாதக விளைவுகளும் எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்களும் தொடர்பாக தனியார் கல்வி நிலையங்களுக்க…
-
- 0 replies
- 326 views
-
-
33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள காணிகள் adminJune 10, 2023 யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது. கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் ஆலயமும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர். மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது. https://globaltamilnews.net/2023/191754/
-
- 1 reply
- 227 views
-
-
இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் சீனாவின் தயக்கம் !! இந்தியா, ஜப்பான் மற்றும் இறையாண்மைக் கடனாளர்களின் பாரிஸ் கிளப் ஆகியவற்றின் நிதித் தலைவர்கள் இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் கலந்துரையாடலுக்காக கூட்டு மாநாட்டை நடத்தியுள்ளனர். இந்த மாநாட்டின் ஊடாக இலங்கையின் கடன் பிரச்சினைகளை எவ்வாறு சிறந்த முறையில் கையாள்வது என்பது தொடர்பில் சீனாவிற்கும் ஏனைய கடன் வழங்குநர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். அத்துடன், பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ள இலங்கையின் கடன் பேச்சுக்களில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இதில் சீனா பங்கேற்றிருக்கவில்லை. ‘இ…
-
- 0 replies
- 266 views
-
-
வெளிநாட்டில் உள்ள தொழிலார்கள் மூலம் இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் பணம் !! 023 ஆம் ஆண்டில் இதுவரை வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பணம் அனுப்பப்பட்டுள்ளது. மே மாதத்தில் வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்களிடமிருந்து 479.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இது 2022 ஆம் ஆண்டு மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 175 மில்லியன் டொலர்கள் அதிகம் என்றும் 2022 மே மாதத்தில் இலங்கைக்கு 304.1 மில்லியன் டொலர் கிடைத்ததாகவும் அறிவித்துள்ளது, இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மே வரையிலான மொத்தம் 2,346.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரி…
-
- 0 replies
- 296 views
-
-
காணாமற் போனோர் அலுவலகம் தொடர்பாக ஜனாதிபதி விடுத்துள்ள விசேட அறிவிப்பு! நல்லிணக்கத்திற்கான செயற்திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான சட்டங்கள் தயாரிப்பதைத் துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நல்லிணக்கத்திற்கான செயற்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இங்கு சட்ட வரைவு, நிறுவன நடவடிக்கைகள், காணிப் பிரச்சினைகள், கைதிகளை விடுதலை செய்தல், அதிகாரப் பரவலாக்கம் ஆகிய 05 பிரதான பகுதிகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்…
-
- 0 replies
- 307 views
-
-
Published By: RAJEEBAN 10 JUN, 2023 | 09:42 AM விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்ற கேள்விக்கு என்ன பதில் சொல்ல முடியும் என்று எனக்கு தெரியவில்லை என இந்தியாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொராகொட இதனை தெரிவித்துள்ளார். இந்திய ஊடகமொன்றிற்கான நீண்ட பேட்டியொன்றின் போது கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் இதனை தெரிவித்துள்ளார் அனுபவம் மிக்க அரசியல்வாதியொருவர் சமீபத்தில் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என தெரிவித்தார் என்ற கேள்விக்கு என்னால் இதற்கு என்ன பதில் சொல்ல முடியும் என தெரியவில்லை என மிலிந்தமொராகொட தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/157383
-
- 3 replies
- 386 views
- 1 follower
-
-
லங்கா பிரிமியர் லீக் தொடருக்கு முழுமையான ஆதரவு – லைக்கா நிறுவன ஸ்தாபகர் அல்லிராஜா சுபாஸ்கரன் உறுதியளிப்பு லைக்கா நிறுவனத்தின் ஸ்தாபகர் அல்லிராஜா சுபாஸ்கரனை லங்கா பிரிமியர் லீக்கினை ஒழுங்கமைக்கும் IPG குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான அனில் மோகன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, இந்த ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான தனது முழுமையான ஆதரவை அல்லிராஜா சுபாஸ்கரன் உறுதிப்படுத்தியுள்ளார். அல்லிராஜா சுபாஸ்கரன் கிரிக்கெட் மற்றும் லங்கா பிரீமியர் லீக்கிற்கு நிபந்தனையற்ற ஆதரவாளராக இருந்துள்ளார் என்றும் அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பும், மகத்தான ஆதரவும் லங்கா பிரீமியர் லீக்கின் வளர்ச்சி…
-
- 14 replies
- 811 views
-
-
Published By: VISHNU 09 JUN, 2023 | 08:03 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) 225 பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்புக்காக 44 ஆயிரம் பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றதாகும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆறு பொலிஸ் அதிகாரிகள் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (09) இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரட்சி முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு …
-
- 8 replies
- 394 views
- 2 followers
-
-
Published By: DIGITAL DESK 3 10 JUN, 2023 | 09:04 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 2015 - 2020க்கு இடைப்பட்ட காலங்களில் நாட்டுக்கு 24 இலட்சத்து 98 ஆயிரத்து 714 வாகனங்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அதன் பிரகாரம் நாட்டில் 5 பேருக்கு ஒருவர் வாகனம் கொள்வனவு செய்துள்ளனர் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது, 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2020 ஆம் ஆண்டு வரை நாட்டுக்கு வருடாந்தம் இறக்குமதி செய்யப்பட்டுள்ள வாகனங்களின் எண்ணிக்கை எவ்வளவு என பிரேம்நாத் சீ தொலவத்த எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
யாழ். விவசாயியால் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் கண்டுபிடிப்பு! வெங்காயச் செய்கையினை இலகுவாக்கும் வகையில் வெங்காயம் நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை யாழ்ப்பாணம் அச்சுவேலியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் உருவாக்கியுள்ளார். குறித்த விவசாயி லாண்ட் மாஸ்டர் இயந்திரத்தை பயன்படுத்தி வெங்காயத்தை நடுகை செய்யும் இயந்திரம் ஒன்றினை உருவாக்கி அதன் மூலம் செலவினங்களைக் குறைத்து வெங்காயத்தினை நடுகை செய்யும் முறையினை கண்டுபிடித்துள்ளார். இதனூடாக வெங்காயத்தினை நடுகை செய்வதற்கு ஏற்படும் செலவீனத்தை பல மடங்கு குறைத்து அதன் ஊடாக பல ஏக்கர் நிலங்களில் வெங்காயத்தினை நடுகை செய்து வெற்றி கண்டுள்ளார். இதனை அனைவருக்கும் அறிமுகப்படுத்தும் வகையில் முதற்கட்டமாக…
-
- 4 replies
- 571 views
- 1 follower
-
-
யாழ்ப்பாணம் வண்ணை வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (09) காலை ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றில் இன்றைய தினம் வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் குருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்யுமாறும் நீதிபதியினால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தடை ஏற்…
-
- 3 replies
- 398 views
-