Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பதில் சொல்வோம் - அரசியல்துறை, தமிழீழ விடுதலைப் புலிகள் (மட்டக்களப்பு மாவட்டம்.) சனி, 02 ஆகஸ்ட் 2008 [செய்தியாளர் மயூரன்] பதில் சொல்வோம் அன்பார்ந்த தமிழீழ மக்களே! இன்று எமது இனத்தின் விடுதலைப் போராட்டம் பல சாவால்களுக்கு மத்தியில் உலகத்தின் மனட்சாட்சியை தட்டிவிடும் அளவிற்கு உயர்ந்து வந்துவிட்டது. இக்காலங்களில் எமது மக்களும் விடுதலைக்காக போராடும் போராளிகளும் பல பின்னடைவுகள் வந்ததும், அது மீண்டதும் பின் பின்னடைவுகள் வந்ததும் விடுதலைப்போராட்டத்திற்கு புதியவையல்ல. நாங்கள் மீண்டும் எமது இடங்களை மீட்போம். அதற்கு துணைநிற்க வேண்டியவர்கள் நீங்களே. மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போது எமது மண்ணையும் மக்களையும் எதிரிக்கு காட்டிக்கொடுத்து விற்கும் த…

    • 0 replies
    • 1.3k views
  2. மன்னார் மாவட்டத்தை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாகப் படையினர் தெரிவித்துள்ளனர் [ சனிக்கிழமை, 02 ஓகஸ்ட் 2008, 12:52.27 PM GMT +05:30 ] மன்னாரின் வெள்ளாங்குளம் கிராமத்தை இலங்கைப் படையினர் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிராமம் மன்னாரில் இருந்து வடக்கே 10 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கிராமத்தைக் கைப்பற்றியதை அடுத்து மன்னார் மாவட்டம், முழுமையாகத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகப் படைத்தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுகுறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.com/view.php?2a36QVR4b...2g2hF0cc2tj0Cde

  3. ஈழத்தமிழர்ளையும் தமிழக மீனவர்களையும் படுகொலை புரியும் சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்வதைக் கண்டித்து சென்னையில் நாளை ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிகளும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  4. சார் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில், பிராந்திய நாடுகளின் தலைவர்களிற்கு; இடையே காணப்பட்ட இணக்கத்தினை எதிர்க்க விடுதலைப்புலிகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளனர் என பாதுகாப்பு புலனாய்வு தகவல்கள் தெரிவித்துள்ளன. இதனால் புலிகளை தோற்கடிக்க சார்க் நாடுகள் கூட்டு புலனாய்வு நடவடிக்கையை மேற்கொள்ள் இணக்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. சார்க் நாடுகள் தற்போது வழங்கி வரும் புலனாய்வு ஒத்துழைப்புகளை மேலும் வினைதிறன்மிக்க வகையில் இலங்கைக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பது அவற்றின் கருத்தாக உள்ளது. அந்த வகையில் விடுதலைப்புலிகள் நடவடிக்கைகளை அந்த நாடுகளில் தடுத்தல், அவர்களின் திட்டங்களை அறிந்து கொள்ள இலங்கைக்கு நவீன வசதிகளை பெற்றுக்கொடுத்தல் என்பவற்றை ம…

    • 0 replies
    • 957 views
  5. சிறிலங்கா அரசு உடனடியாகப் போரினை நிறுத்தி தமிழரின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்கான அழுத்தத்தை சார்க் மாநாட்டின் மூலம் தாங்கள் மேற்கொள்ள வேண்டும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திருகோணமலை தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 560 views
  6. அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த அதிகாரி உட்பட இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 671 views
  7. இந்திய தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சந்தித்திருப்பதற்கு, துணைப்படைகுழுவின் தலைவரும்,கிழக்கு முதலைச்சர் பிள்ளையான் (விநாயகமூர்த்தி முரளிதரன்)கண்டனம் தெரிவித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கட்சி எனவும், அவர்களை மன்மோகன் சிங் சந்தித்திருப்பது தமக்கு ஆச்சரியத்தை அளிப்பதாகவும் அவர் கூறினார்.தமது கட்சி கிழக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்டது எனவும், மன்மோகன் சிங் தம்மை சந்திக்காது தவிர்த்திருப்பது வேதனை தருவதாகவும் பிள்ளையான் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதம் ஒன்றை சிறீலங்காவிற்கான இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை, இந்திய தலைமை…

    • 0 replies
    • 1.6k views
  8. (2ம் இணைப்பு)அம்பாறையில் புலிகளின் பாசறையை தாக்க வந்த படையினர் மீது தாக்குதல்: ஒருவர் பலி [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:21 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறை மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பாசறை மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தினர். இத்தாக…

    • 0 replies
    • 720 views
  9. தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு 54.25 விழுக்காடு தமிழர்கள் தமது கருத்துக்கணிப்பில் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ்நாட்டின் முன்னணி ஏடான "ஆனந்த விகடன்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  10. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கைத் தமது கட்சியினர் சந்திக்க முடியாது போயுள்ளமை குறித்துக் கருணா கவலை வெளியிட்டுள்ளார். கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்........... தொடர்ந்து வாசிக்க.................

  11. பொலிஸாரின் சைகைகளை மீறிச்சென்ற முச்சக்கர வண்டி சாரதி மீது நேற்றுமுன்தினமிரவு பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர் இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டி சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். பாதுக்கை போப்பே பகுதியைச் சேர்ந்த துஷார (வயது23) என்ற இளைஞரே கொல்லப் பட்டவராவார் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளார். இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக பாதுக்கை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்படுகிறது http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

  12. வெள்ளை வானில் சென்றவர்களால், கடந்த புதன்கிழமையன்று இரவு 10 மணிக்கு, அம்பாறை கல்முனையில், 16 வயது சிறுவன் ஒருவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். கோவில் வீதி கல்முனையை சேர்ந்த தர்சன் என அழைக்கப்படும், பாஸ்கரன் துஷாந்தன் என்பவரே கடத்திச்செல்லப்பட்டுள்ளார். கல்முனை பாத்திமா கல்லூரியில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரத்தில் பயிலும் தர்சன் கடந்த 6 மாதக்காலமாக இந்த வீட்டில் வசித்து வருவதாக அவரின் தாயார் தெரிவித்துள்ளார். இந்த கடத்தல் சம்பவம் குறித்து கல்முனைக் காவற்துறை மற்றும் மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றில் முறையிட்டுள்ளதாக இந்தத் தாய் தெரிவித்துள்ளார். http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.co…

    • 0 replies
    • 668 views
  13. அம்பாறை கஞ்சிகுடிசாறு வனப் பகுதியில் அமைந்துள்ள விடுதலைப் புலிகளின் முகாம் மீது தாக்குதல் நடத்தச் சென்ற அதிரடிப் படைடியினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இரு அதிரப்படையினர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் இவ் வனப் பகுதிக்குள் நுழைந்த படையினர் விடுதலைப் புலிகள் தற்காப்புச் சமரை நடத்தியுள்ளனர். இதன் போதே இரு அதிரடிப் படையினர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த படையினருள் ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதென விடுதலைப் புலிகள் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 710 views
  14. நாகர்கோவில் ஊடாக தரையிறங்கி குடாநாட்டை கைப்பற்ற புலிகள் திட்டம்: சிறிலங்கா புலனாய்வுத்துறை எச்சரிக்கை [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 07:29 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] யாழ். வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி ஊடாக தரையிறக்கம் ஒன்றை மேற்கொள்வதன் மூலம் யாழ். குடாநாட்டை கைப்பற்றுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் முயற்சிக்கலாம் என்று சிறிலங்கா புலனாய்வுத்துறை வட்டாரங்கள் இராணுவத்தை எச்சரித்துள்ளன. இது தொடர்பாக கொழும்பில் உள்ள படைத்துறை வட்டாரங்கள் கருத்து வெளியிடும்போது தெரிவித்திருப்பதாவது: ஏ-9 வீதிக்கு மேற்காக தற்போது பாரிய இழப்புக்களை சந்தித்துவரும் விடுதலைப் புலிகள், புதிய களமுனையை திறக்க வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். சிறிலங்கா இராணுவத்…

  15. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் என் காலில் மண்டியிடும் வரை, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஆவேசம் தெரிவித்துள்ளார். இலங்கையில் நடக்க உள்ள சார்க் மாநாட்டையொட்டி விடுதலைப்புலிகள் தரப்பில் போர் நிறுத்தம் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், போர் நிறுத்தத்துக்கு இலங்கை இராணுவம் மறுப்பு தெரிவித்து, தொடர்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இலங்கை அரசும் போர் நிறுத்தத்துக்குச் சம்மதிக்கப் போவதாக, "டி வி' சேனல்களிலும், பத்திரிகைகளிலும் செய்தி வெளியானது. விடுதலைப் புலிகளுடனான போரில் காயமடைந்த இராணுவ வீரர்களுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காயமடைந்து அனுராதபுரம் இராணுவ முகாம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்…

  16. சிறிலங்கா - இந்தியா இரு நாடுகளினதும் சுபீட்சம் நெருங்கிய தொடர்புடையது: இந்திய பிரதமர் மன்மோகன் [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 09:14 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] சிறிலங்காவினதும் இந்தியாவினதும் சுபீட்சம் நெருங்கிய தொடர்புடையது என்று கொழும்பு சென்றுள்ள இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிமை மதியம் கொழும்பு சென்றடைந்த இந்திய பிரதமர், இன்று பிற்பகலே சிறிலங்கா அரசு தலைவர் மகிந்த ராஜபக்ஷவை அவரது செயலகத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பில் இந்திய பிரதமர் மேலும் தெரிவிக்கையில் - அயல்நாடுகளுடன் நெருக்கமான உறவு இல்லாமல் எந்த ஒரு நாடும் தனது சுபீட்சத்தை எட்டிவிடமுடியாது. அவ்வாறான ஒரு நெருக்கமான உறவை பேணிக்கொள்ளும் சந்தர்ப்பமாக சார்க் மா…

    • 3 replies
    • 779 views
  17. சிறிலங்கா கடற்படையின் புதிய படகு படையணி [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 05:04 பி.ப ஈழம்] [க.நித்தியா] ஆழமில்லாத கடற்பரப்பிலும் வேகமாக சென்று தாக்குதல் நடத்தக்கூடிய அதிவேக அதிரடிப் படகு படையணியினை சிறிலங்கா கடற்படை புதிதாக தொடக்கியுள்ளது. ஆழமில்லாத கடற்பிரதேசங்களில் நடமாடும் கடற்புலிகளின் படகுகளை தேடி அழிப்பதில் சிறிலங்கா கடற்படை இவ்வளவு காலமும் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகவும் - அதற்கு தீர்வுகாணும் வகையிலேயே இந்த புதிய படகு படையணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் - கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் சில டசின் படகுகளை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த அதிரடிப் படகு படையணி, சிறிலங்கா கடற்படையில் ஏற்கனவே சேவையில் உள்ள சிறப்பு படகு…

    • 2 replies
    • 1.1k views
  18. அம்பாறையில் புலிகளின் பாசறையை தாக்க வந்த படையினர் மீது தாக்குதல்: அதிரடிப்படையினர் இருவர் படுகாயம் [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 10:21 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசறை மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் பாசறை மீது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப் புலிகள் தற்காப்புத் தாக்குதலை நடத்தினர். இத்த…

  19. கிளிநொச்சி மாவட்டத்துக்குள் இலங்கைப் படையினர் பிரவேசித்திருப்பதாகக் கூறுகிறது பாதுகாப்பு அமைச்சகம் [ வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 04:28.26 PM GMT +05:30 ] [ பி.பி.சி ] இலங்கையின் வடக்கே விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தொடரும் இராணுவ நடவடிக்கைகளில் மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லைப்புறங்களில் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ள படையினர் குறிப்பிட்டு அடையாளம் சொல்ல முடியாத இடம் ஒன்றில் கிளிநொச்சி மாவட்டத்தினுள் பிரவேசித்திருப்பதாகப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்திருக்கின்றது. மன்னார் பூனகரி வீதியில் மூன்றாம்பிட்டிப் பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற மோதல்களில் கொல்லப்பட்ட விடுதலைப் புலிகளில் 5 பேரின் சடலங்கள் படையினரால் கண…

  20. சிறிலங்கா - பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தம்: துரிதப்படுத்த கோருகிறார பாக். வெளிவிவகார அமைச்சர் [வெள்ளிக்கிழமை, 01 ஓகஸ்ட் 2008, 08:40 பி.ப ஈழம்] [கி.தவசீலன்] சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் வேலைகைளை துரிதமாக மேற்கொள்ளுமாறு பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவை வலியுறுத்தியுள்ளார். சார்க் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு வந்துள்ள பாகிஸ்தானின் வெளிவிவகார அமைச்சர் ஷா முகமட் குரேஷி, சிறிலங்கா வெளிவிகார அமைச்சர் ரோகித போகல்லாகமவிடம் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் - இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான நகலை பாகிஸ்தான் ஏற்கனவே சிறிலங்காவிடம் சமர்ப்பித்துவிட்ட…

    • 0 replies
    • 594 views
  21. சிறிலங்காவில் நடைபெறும் சார்க் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மூன்று நாள் பயணம் மேற்கொண்டு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு சென்றடைந்தார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 588 views
  22. லெப். கேணல் சூரியன், எதிரியின் பகுதிகளுக்குள் தனித்து ஒரு போராளியாக கடினங்களுக்குள் நின்று செயற்பட்டு எதிரிகளை அதிகளவில் அழித்தவன் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறை பொறுப்பாளர்களில் ஒருவரான அன்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 6 replies
    • 1.7k views
  23. சார்க் அங்கத்துவ நாடுகளின் அரச தலைவர்கள் கலந்துகொள்ளும் 15 ஆவது உச்சிமாநாடு நாளை சனிக்கிழமை முற்பகல் 11:02 மணிக்கு உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகவுள்ளதாகவும் இதற்கான அனைத்துப் பூர்வாங்க வேலைகளும் நிறைவடைந்திருப்பதாகவும் இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. "எமது மக்களுக்கான ஒத்துழைப்பு" எனும் தொனிப்பொருளில் கொழும்பு பண்டார நாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது. இலங்கையின் வரலாற்றில் சமகாலத்தில் நடைபெற்ற அரச தலைவர்களின் உயர் மட்டக் கூட்டமாக இதனைக் கருதமுடியும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் நான்கு பிரதான உடன்படிக்கைகளில் அரச தலைவர்கள் கைச்சாத்திடவுள்ளனர். பிராந்திய அபிவிருத்தி ஸ்தாபனத்தை உரு…

    • 0 replies
    • 682 views
  24. 2008 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், பயங்கரவாத செயற்பாடுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை 3 ஆவது இடத்தில் உள்ளதாக பயங்கரவாதத்துக்கு எதிரான சிறப்பு பாதுகாப்பு நிலையம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் ஈராக் முதலிடத்தில் இருப்பதாக துருக்கியைத் தளமாகக் கொண்டியங்கும் மேற்படி நிலையம் குறிப்பிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் இந்நிலையம் மேற்கொண்ட ஆய்வின்படி, இந்தக் காலப்பகுதியில் உலக நாடுகளில் 2396 பயங்கரவாத சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், இவற்றில் 4204 பேர் கொல்லப்பட்டிருப்பதுடன், 7614 பேர் காயமடைந்திருப்பதாகவும் அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் ஈராக் உள்ளது. குறித்த காலபபகுதியில்…

    • 2 replies
    • 888 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.