ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143622 topics in this forum
-
-
- 16 replies
- 4.2k views
- 1 follower
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் உள்ள மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து சிறிலங்கா வான்படையின் வானுர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று திங்கட்கிழமை காலை 8:20 மணியளவில் சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தின. இதில் ஜி.சசிதமலர் என்பவர் காயமடைந்துள்ளார். பொன்னம்பலம் செல்வரத்தினம் என்பவரின் வீடு முற்றுமுழுதாக சேதமடைந்துள்ளதுடன் பத்து வரையான வீடுகள் மற்றும் பயன்தரு மரங்கள் சேதமாகியுள்ளன. www.puthinam.com
-
- 1 reply
- 822 views
-
-
பௌத்த மதத்தினர் எப்படி யுத்தம் செய்யலாம் என தமிழர்கள் தற்போது கேள்வி எழுப்புகின்றனர். தமது மதத்தை பரப்புவதற்காக கொலைகளை செய்யாதவர்கள் பௌத்தர்கள் மாத்திரமே. பொறுமை என்ற பண்டைய மரண தண்ணீரின் இறுதிக்குச் செல்ல இடமளிக்க முடியாது. அரச அதிகாரம் சிங்களவர்களுக்கு இல்லாதுபோனால் பௌத்த சாசனம் காணாமல்போவதுடன் பௌத்த தர்மமும் காணாமல் போகும் என சுற்றாடல்த்துறை அமைச்சரும், ஜாதிக ஹெல உறுமையவின் கொள்கை வகுப்பாளருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். உடனடி சரிவை எதிர்கொண்டுள்ள சிங்கள நாகரிகத்தை அதிலிருந்து தடுப்பதற்கு புத்த மதத்தின் பாதுகாவலனான துட்டகைமுனுவின் வழியில் செல்ல அனைவரும் ஒன்றுதிரள வேண்டுமெனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செயலமர்வ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், சிரேஷ்ட அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பகிரங்கமாக விமர்சித்துள்ளதாக பி.பி.சீ. உலக சேவை செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தின் செயற்பாடுகளை 100 வீதம் ஏற்றுக் கொள்ள முடியாதெனப் பொலன்னறுவைப் பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது விவசாய அமைச்சர் தெரிவித்துள்ளார். அமைச்சர் என்ற ரீதியில் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் பல கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாதென அவர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி…
-
- 2 replies
- 1.2k views
-
-
அரச படையினரால் மேற்கொள்ளப்படும் வான் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டுமெனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார். வன்னிப் பிரதேசத்தில் இடம்பெயர்ந்துள்ள சிவிலியன்களைக் கருத்திற் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளும், அரச படையினரும் யுத்த நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார். இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களை நிறுத்துவதன் மூலம் சிவிலியன்களைப் பாதுகாக்க முடியுமென அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நாட்டின் சகல பாகங்களிலும் உள்ள சிவிலியன்களைப் பாதுகாக்கும் தார்மீகப் பொறுப்பு அரசாங்கத்திற்குக் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கையொன்றின் மூலம் ஆனந்தசங்கரி இந்தக் கருத்துகளை முன்வை…
-
- 6 replies
- 2k views
-
-
வடக்குப் பிரதேசத்தின் முன்னரங்க நிலைகளில் கடும்மோட்டார் மற்றும் ஆட்லெறித் தாக்குதல்கள் இடம்பெறுவதோடு, வன்னிப் பகுதியினுள் கிளைமோர்த் தாக்குதல்களும் விமானக் குண்டுவீச்சுக்களும் மேற்கொள்ளப்பட்டுவருவதனால் பெருமளவு மக்களும் இடம்பெயர்ந்துள்ளனர் என ஐ.நா.முகவர் அமைப்புக்களின் நிலையியற் குழு தெரிவித்துள்ளது. வன்னிப் பிரதேசத்தினுள் உள்ள வைத்தியசாலைகளில் அடிப்படை மருந்துகளுக்குக்கூட பாரிய தட்டுப்பாடு நிலவி வருவதாகவும் அதுமேலும் சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாக ஐ.நா.முகவர் அமைப்புக்களின் நிலையியற் குழுவெளியிட்டுள்ள இறுதி அறிக்கையில் வன்னி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் இராணுவு நடவடிக்கைகள் காரணமாக மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட…
-
- 0 replies
- 701 views
-
-
மீண்டும் ஒரு அரசியல் கண்ணோட்டம் எங்கட தமிழ்வின் இணையத்தில பார்த்தேன் யான் வாசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நன்றி இலங்கையின் அரசியலில் பல்வேறு குழப்பநிலைகள் ஏற்பட்டுள்ளன. எனினும், படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தாக்குதல்களை நடத்துகிறார்கள் என்ற செய்தியை வைத்துக்கொண்டு அரசாங்கம் அனைத்து விடயங்களையும் மூடிமறைத்துக் கொண்டிருக்கிறது. இதனையும் மீறிக்கொண்டு தற்போது, அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணியை பதவியில் அமர்த்தவும் மஹிந்த ராஜபக்சவை ஜனாதிபதியாகத் தெரிவு செய்யவும் முக்கிய உந்துதலை அளித்த ஜே வி பி இன்று அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவு வைத்தியசாலையிலிருந்து 300 மீற்றர் சுற்றுவட்ட பிரதேசத்தை மோதலற்ற வலயமாக பேணுமாறு இராணுவத்தை அரசாங் கம் அறிவுறுத்த வேண்டும் என தாம் கோரு வ தாக முல்லைத்தீவு வைத்தியசாலை மருத்துவ அத்தியட்சகர் வி.சண்முகராஜா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக சகல தரப்பின ரிடமிருந்தும் மீள் உத்தரவாதத்தை நான் எதிர் பார்க்கிறேன். வைத்திய சாலை பாதுகாப்பாக இயங்குவதற்கு அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு வைத்தியசாலையை அண்டிய பகுதியில் இடம் பெற்ற ஷெல் தாக்குதல்களைத் தொடர்ந்தே இக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேற்படி தாக்குதலில் மாவட்ட செயலாளர் திருமதி இமெல்டா சுகுமார், மருத்துவ அத்தி யட்சர் வி. சண்முகராஜாவின் மனைவி…
-
- 0 replies
- 624 views
-
-
சட்டவிரோதமான முறையில் போலி கடனட்டைகளைத் தயாரித்து விநியோகித்ததாகக் கூறப்படும் தமிழ் இளைஞர்கள் ஐவரை வெள்ளவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசிய தகவலொன்றை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது தொடர்பில் பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது கடந்த 7ஆம் திகதி மாலையே பொலிஸாரால் இவர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர். வெள்ளவத்தை பகுதியில் மிகவும் இரகசியமான முறையில் நடத்தப்பட்ட நிலையமொன்றை பொலிஸார் சுற்றிவளைத்ததை அடுத்து இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களால் தயாரிக்கப்பட்ட போலி கடனட்டைகள் அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கு வழங்க…
-
- 1 reply
- 914 views
-
-
வன்னியில் இராணுவக் கட்டுப்பாடற்ற பகுதிகளில் செயற்படும் அரசுசார்பற்ற அமைப்புகள் அப்பகுதியில் தாங்கள் பயன்படுத்தும் பொருள்கள், சொத்துக்க ளின் விவரங்களை சமர்ப்பிக்கவேண்டும் என அனர்த்த முகாமைத்துவ அமைச்சு உத்தரவிட்டுள்ளது. அரசுசார்பற்ற அமைப்புகளின் வளங்கள் விடுதலைப் புலிகளின் கைகளுக்குச் செல்வதைத் தடுப்பதற்காகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அதி காரிகள் குறிப்பிட்டுள்ளனர். "நோர்வே பீப்பிள் எய்ட்' எனும் அரச சார்பற்ற அமைப்பிற்கு சொந்தமான சில விசேட பயன்பாட்டு வாகனங்கள் தற்போது விடுதலைப் புலிகளிடம் உள்ளன எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசு அதிகாரிகள் இது குறித்து "நோர்வேபீப்பிள்' எய்ட் அதிகாரிகளுடன் தனிப்பட்ட பேச்சுகளை மேற்கொண்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. விட…
-
- 0 replies
- 654 views
-
-
"மன்னார் தொடக்கம் பூநகரி வரையிலான ஏ 32 வீதியை பொதுமக்க ளின் பாவனைக்குத் திறப் பதே படையினரின் வடக்கு நடவடிக்கையின் அடுத்த இலக்காகும்.'' இவ்வாறு பாதுகாப்புத்துறைப் பேச் சாளரும் அமைச்சருமான ஹெகலிய ரம்புக் வெல கூறியிருக்கிறார். ஊடகம் ஒன்றிறுக்கு நேற்றிரவு வழங்கிய செவ்வியிலே ஹெகலிய இப்படித் தெரி வித்திருந்தார். ""விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு வந்தால் மாத்திர மே பேச்சுக்கான கதவுகள் திறக்கப்படும்'' என்றும் அவர் குறிப்பிட்டார். ஹெகலிய அந்தச் செவ்வியில்மேலும் கூறியவை வருமாறு: தற்போது படையினர் வடக்குப் பகுதி யில் தமது படை நடவடிக்கைகளை வெற் றிகரமாக முன்னெடுத்துச் சென்றுகொண் டிருக்கின்றனர். அவர்கள் திட்டமிட்டு இந்த முன்நகர்வை மேற்கொண்டு வரு கின்றனர். படை…
-
- 1 reply
- 1.1k views
-
-
வன்னி மீதான தனது கொடூரப் போரைத் தீவிரப்படுத்தியிருக்கின்றத
-
- 0 replies
- 750 views
-
-
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினருக்கும் ஜே வி பினருக்கும் இடையில் பாரிய மோதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுக் காலை இரத்தினபுரி எல்விட்டிக்கல என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. இதன் போது அமைச்சர் ஜெயசேகரவும் நேரடியாகச் சம்பவத்தில் சம்பந்தப்பட்டிருந்ததாக ஜே வி பி குற்றம் சுமத்தியுள்ளது. இரண்டு தரப்பினருக்கும் இடையில் பொல்லு மற்றும் கல்வீச்சுச் சண்டைகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு கட்டத்தில் அமைச்சர் ஜெயசேகரவும் கல்வீச்சுக்கு உள்ளானார். இரண்டு தரப்பும், ஒரு தரப்பை மறுதரப்புத் துரத்திச் சென்று தாக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த பல ஜே வி பியினர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்…
-
- 2 replies
- 1k views
-
-
யாழ்ப்பாண ஏரிப் பகுதியில் உள்ள நிலைகளில் இருந்து படையினர் நேற்று மாலை 6 மணியில் இருந்து தொடர்ச்சியாகத் தமிழீழ விடுதலைப் புலிகளின் பூநகரிப் பிரதேசம் மீது எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இதன் காரணமாக யாழ்ப்பாணத்தில் பாரிய சத்தங்களைக் கேட்கக்கூடியதாக இருந்துள்ளது. இதனால் குருநகர், கொழும்புத்துறை, பாசையூர் மற்றும் அரியாலை ஆகிய இடங்களின் மக்கள் பீதியடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தமிழீழ விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல்கள் எதனையும் நடத்தவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது www.tamilwin.com
-
- 1 reply
- 928 views
-
-
இது தமிழர்கள் தமது வேற்றுமைகளை மறந்து ஒன்றுபடவேண்டிய தருணம். உலகின் பல்வேறு நாடுகளிலும் இயங்கும் விடுதலை ஆதரவாளர்கள் கடந்த கால அணுகுமுறையினால் அன்னியப் படுத்திவிட்ட புலம் பெயர்ந்த சமூக சக்திகளை மீண்டும் அணிதிரட்டியாகவேண்டிய தருணம். புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் விடுதலை சக்திகள் இதுகாறும் முன்வைக்கப் பட்ட எதிர் விமர்சனங்களை கருத்தில் எடுத்து விமர்சனம் மட்டுமன்றி சுயவிமர்சனங்களுக்கும் ஊடாக பரந்துபட்ட ஐக்கிய முன்னணிக்கான வாய்ப்பை உருவாக்கவேண்டும். எல்லா அணிதிரட்டல்களும் கடந்த காலங்களைப்போல துருக்கிய பி.கே.கே பாணியில் எங்கள் பலத்தை காட்டுவதற்க்குப் பதிலாக முனர் ஏ.என்.சி செயல்பட்டதுபோல நாம் வாழும் மேற்க்கு நாடுகளின் மக்களை வெண்றெடுப்பதையே முன்னிலைப் படுத்த வேண்டியது அவசி…
-
- 8 replies
- 2.1k views
-
-
வன்னியைக் கைப்பற்றப் போவதாக் கூறிக்கொண்டு அரசு அப்பாவித் தமிழ் மக்கள் மீது விமானக் குண்டுத் தாக்குதல்களையும் ஷெல் தாக்குதலையும் நடத்திக் கொலை செய்வதை கடுமையாகக் கண்டிக்கின்றோம். தென் பகுதி சிங்கள மக்கள் மத்தியில் வன்னியை கைப்பற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி மாகாண சபைத் தேர்தல்களில் வெற்றி பெறவே தமிழ் மக்கள் அழிக்கப்படுகின்றனர் என்று இடது சாரி முன்னணி தெரிவித்துள்ளது. முல்லைத்தீவில் விமானத் தாக்குதல் மற்றும் ஷெல் தாக்குதல்கள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே இடது சாரி முன்னணியின் அமைப்புச் செயலாளரும் சம்பிரகமுவ மாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருமான சமில் ஜயநெத்தி இவ்வாறு தெரிவித்தர். மேலும் : விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்திக் கொண்டு பிரத…
-
- 0 replies
- 545 views
-
-
சிங்கள தீவிரவாதப் போக்குடையவர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைப் போக்கும், பரிவு மனப்பான்மை, புரிந்துணர்வு, பகிர்ந்தளிக்கும் ஆற்றல் என்பவற்றிலுள்ள குறைபாடுகளுமே இன்று நாட்டின் இனப்பிரச்சினை இவ்வளவு தூரம் வளர்ச்சியடைவதற்கு முக்கிய காரணம் என பொறியியல் மற்றும் கட்டுமான அமைச்சர் டாக்டர்.ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். http://www.tamilseythi.com/srilanka/rajitha-2009-08-10.html
-
- 0 replies
- 775 views
-
-
வன்னியில் மணலாறுக் களமுனையில் ஆண்டாங்குளத்துக்கு கிழக்கே முல்லைத்தீவை நெருங்கி நடந்த சண்டையில் 7 போராளிகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்களும் ஆயுத தளபாடங்களும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை பாலமோட்டையில் நடந்த சண்டையில் இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இரு போராளிகளின் உடலங்களும் ஆயுத தளபாடங்களும் இராணுவத்தால் மீட்கப்பட்டுள்ளன. இதற்கிடையே கிளாலியில் படையினர் திடீர் தாக்குதல் நடத்தி போராளிகளைக் கொன்றுவிட்டு மீண்டும் தமது நிலைக்குத் தரும்பியுள்ளனராம். இரண்டு பெண் போராளிகளின் உடலங்கள் படையினரால் மீட்கப்பட்டுள்ளன. இச்சண்டைகளில் சில படையினருக்கு காயம் மட்டும் ஏற்பட்டுள்ளது. என்று படைத்தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
-
- 28 replies
- 5.2k views
-
-
அக்கினிக்களமாக விரிந்திருக்கும் போர்க்களத்தை அணிதிரண்டு வென்றெடுப்போம்: தமிழீழ விடுதலைப்புலிகளின் அம்பாறை மாவட்ட அரசியல்துறை அழைப்பு http://www.puthinam.com/full.php?2b34OOI4b...3f1eW2cc4OcY4be அன்பார்ந்த அம்பாறை மாவட்ட தமிழீழ மக்களே! படைகளின் நோக்கத்தை மட்டுமே பிரதான காரணியாக கொண்டு எமது வனப்பகுதி எல்லையில் கூடியிருக்கும் அரச பயங்கரவாத படைகளை எமது தாய்மண்ணிலேயே சமாதியாக்கும்வரை தங்களின் ஒத்தழைப்பை அன்புடன் வேண்டிநிற்கிறோம். வெள்ளைக்கல் என அழைக்கப்படும் பகுதிக்கு உள்ளிருக்கும் வேட்டையடிக்குளம்இ வன்னேரிக்குளம் ஆகிய வனப்பகுதிகளுக்கோ வயல்பகுதிகளுக்கோ பெரியதளவா குளம்இ கூதைக்குளம் மற்றும் கஞ்சிகுடிச்சாறு பாடசாலைஇ தங்கவேலாயுதபுரம்இ கேணிக்குளம்இ கோமார…
-
- 6 replies
- 1.9k views
-
-
யூதர்களுக்கு ஹிட்லர் போல, தமிழர்களுக்கு வாய்த்த ராஜபக்ச - சு.ஞாலவன் - குடியானவன் ஒருவன் கடும் பிரயத்தனங்களின் இறுதியிலே பேராற்றல் மிக்க முனிவர் ஒருவரைச் சந்திக்கிறான். 'சுவாமி! வாழ்க்கையில் துன்பங்களை மாத்திரமே சந்தித்து வரும் எனக்கு விரும்பியவற்றை எல்லாம் பெற்று மேன்மையான வாழ்க்கையை அடைந்துகொள்வதற்கான சக்தியை நீங்கள் அளிக்கவேண்டும்" என்று அவரை வணங்கினான். அவனுடைய வேண்டுதலுக்கு இரங்கிய முனிவர் தன் கைகளினால் அவனை ஆசீர்வதித்து விட்டு 'நீ கேட்டுக்கொண்ட சக்தியை இக் கணத்திலிருந்தே நான் உனக்கு அருளிவிட்டேன். இனிமேல் எது உனக்குத் தேவைப்பட்டாலும் என்னை நினைத்துக்கொண்டு தேவையானதை உரத்துக்கூறு! உடனே அது உனக்குக் கிடைக்கும். ஆனாலும், ஒரு நிபந்தனை: என்னை நினைக்கும்போது …
-
- 5 replies
- 1.6k views
-
-
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை மீதும் அதனைச் சுற்றியுள்ள குடிமனைகள் மீதும் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுள்ள கண்மூடித்தனமான எறிகணைத்தாக்குதல் ஐக்கியநாடுகள் சபையின் போரியல் விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என்பதுடன் இத்தாக்குதலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச ஊடகமொன்றுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “வன்னி பெருநிலப்பரப்பை கைப்பற்றப்போவதாகக் கூறிக்கொண்டு படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படை தற்போது அங்கு விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது தாக்குவதாகக் கூறிக் கொண்டு மக்கள் குடியிருப்புகள், வைத்தியசாலை பாடசாலைகள், சிறுவர் இல்…
-
- 0 replies
- 642 views
-
-
அழுத்துக http://puspaviji13.net84.net/page6.html http://puspaviji13.net84.net/
-
- 0 replies
- 1.1k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள கஞ்சிகுடிச்சாறு வனப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை தேடியழிக்கும் நோக்குடன் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட ஊடுருவல் நடவடிக்கையில் - விடுதலைப் புலிகளின் பொறிவெடியில் சிக்கி - சிறப்பு அதிரடிப்படை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 645 views
-
-
வீரகேசரி நாளேடு 8/10/2008 7:44:52 PM - பெல்மதுளை, ஐக்கிய தேசியக் கட்சி தற்போதைய நிலையில் நொண்டிக் குதிரையாகவுள்ளது. அக்குதிரையில் ஓட முடியாது. தற்போது ஓடும் குதிரையாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் திகழ்கிறது. இதனால்தான் நாம் அரசுடன் இணைந்துள்ளோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார். யானைக்கு மேல் சேவல் போகலாம், கதிரை மற்றும் வெற்றிலைக்கு மேலும் சேவல் போகலாம். ஆனால் சேவலுக்கு மேல் எதுவும் பயணிக்க முடியாது என்றும் அவர் கூறினார். இறக்குவாணை கிழமை மாலை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது, இலங்கை த…
-
- 6 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் சார்க் மாநாடு நடைபெற்ற காலப்பகுதியில் இந்திய - சிறிலங்கா நாடுகளின் தலைவர்கள் சிரித்தவாறே கைலாகு கொடுத்த புகைப்படங்கள் ஊடகங்களில் வெளிவந்தபோதும் அங்கு இடம்பெற்ற பல சம்பவங்களால் சிறிலங்கா அரசு தரப்பு மீது இந்திய அரசின் உயர்மட்டத்தினர் பயங்கர கடுப்பில் இருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 959 views
-