Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா கடற்படையின் படுகொலையைத் தடுக்காத இந்திய அரசைக் கண்டித்து ஜூலை 27-இல் உண்ணாநிலைப் போராட்டம்: வைகோ [புதன்கிழமை, 16 யூலை 2008, 06:03 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] தமிழ்நாட்டு மீனவர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்கா கடற்படையைத் தடுக்காத இந்திய மத்திய அரசாங்கத்தைக் கண்டித்து எதிர்வரும் ஜூலை மாதம் 27 ஆம் நாள், தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்த உள்ளதாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். சென்னையில் இன்று புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா கடற்படையினரால் தமிழ்நாட்டு மீனவர்கள் நமது கடல் எல்லையிலேயே தாக்கப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் அன்றாட நிகழ்வாகிவிட்டது. நமது கடல் எல்லையி…

    • 2 replies
    • 677 views
  2. தமது ஆயுதக்குழுவை அரச படைகளுடன் இணைக்கும் செயற்றிட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதன் முதல்கட்டமாக 200பேர் திருகோணமலையில்; இலங்கை இராணுவத்தில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும

  3. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவுடன் பிரித்தானிய அமைச்சர் சந்திப்பு வீரகேசரி நாளேடு 7/16/2008 6:21:34 PM - இலங்கை வந்துள்ள பிரித்தானிய ராஜாங்க அமைச்சர் மலொக் பிரவுண் நேற்று மாலை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை சந்தித்து பேசியுள்ளார். கொழும்பிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில் தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பாகவே கலந்துரையாடப்பட்டுள்ளது. சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, பிரித்தானிய அமைச்சர் சந்திப்பில் தற்போதைய நாட்டு நிலைமை குறித்து கேட்டறிந்தார். பிரித்தானியா ஜனநாயக நாடாகும் அங்கு வெட்டிக்கொல்லும் சம்பவங்கள், படுகொலைகள் இடம்பெறுவதில்லை. நாட்டின் தற்போதைய ந…

  4. அளவெட்டியில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை [புதன்கிழமை, 16 யூலை 2008, 06:50 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். அளவெட்டி அம்பனையில் அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குடும்பஸ்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அம்பனை மேற்கைச் சேர்ந்த இ.ரவீந்திரன் (வயது 48) என்பவரே சுட்டுக்கொல்லப்பட்டவர் ஆவார். அம்பனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்த நிலையில் யாழ். மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அவர், மறுநாள் திங்கட்கிழமை காலை உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்படுகிறது. அம்பனையில் இவர் விவசாயம் செய்து வந்தவர் என்றும் இவரது கொலைக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை என்றும் காவல்துறையினர் தெர…

    • 0 replies
    • 597 views
  5. மட்டக்களப்பு மனிதப் புதைகுழி: அனைத்துலக விசாரணையை கோருகிறது வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகம் [புதன்கிழமை, 16 யூலை 2008, 06:04 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மட்டக்களப்பு மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனிதப் புதைகுழி தொடர்பில் அனைத்துலக விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகப் பணிப்பாளர் தெரிவித்துள்ளதாவது: மட்டக்களப்பு பாலமீன்மடுப் பகுதியில் இன்று புதன்கிழமை சான்றுகளுடன் பாரிய மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றுக்கு தீர்வு எதுவ…

    • 0 replies
    • 634 views
  6. மகிந்த ராஜபக்சவின் இராணுவ முனைப்புகள் போராளிகளால் வெற்றிகொள்ளப்படும் - இளந்திரையன் புதன், 16 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] ஆயுதங்களை கைவிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச அண்மையில் இந்தியாவில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் சமாதான முனைப்புகள் குறித்து தெரிவித்த கருத்துத் தொடர்பாக, விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இளந்திரையனிடம் கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ”ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைகளுக்கு வரவேண்டும் என்ற நிபந்தனையை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்…

    • 3 replies
    • 980 views
  7. தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் தாக்குதல் தளபதி லெப். சீலனின் 25 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு மிகுந்த எழுச்சியுடன் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 586 views
  8. வவுனியா, மன்னார் களமுனைகளில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள், மிதிவெடிகள் மற்றும் பொறிவெடிகளில் சிக்கி படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 22 பேர் காயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 502 views
  9. வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டையில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 19 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 632 views
  10. மட்டக்களப்பிலிருந்து 6 கிலோ மீற்றார் தூரத்தில் உள்ள பாலமீன்மடு என்ற கடற்கரை கிராமத்தில் பாரிய மனித புதைகுழியொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மூதூர் பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பாலமீன்மடு கிராமத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். குறித்த கிராம மக்கள் குடிநீர் கிணறு ஒன்றை தோண்டும் பணிகளை ஆரம்பித்த போது பாரியளவிலான எலும்புக் கூடுகளை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். சுமார் ஐந்து அடி ஆழத்தில் 16 பேரது எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. கிராம மக்கள் குறித்த சம்பவத்தை கிராம சேவகருக்கு அறிவித்துள்ளனர். பின்னர் கிராம சேவகர் அரச அதிபருக்கு அறிவித்ததாகவும் அரச அதிபர் மாவட்ட நீதவான் இராம கமலனுக்…

  11. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள பாலமீன்மடுப் பகுதியில் பாரிய மனிதப்புதைகுழி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 510 views
  12. குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார் மழையில், மரத்தின்கீழ் [ செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2008, 22:32 GMT+02:00 ] [இன்போதமிழ்] சிறீலங்கா படையினர் மக்கள் குடியிருப்புக்களை நோக்கி மேற்கொண்டுவரும் கண்மூடித்தனமான எறிகணை வீச்சுகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்து வருகின்றனர். மன்னாரில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ள படையினர், அந்த மாவட்டத்தின் எல்லையாகவுள்ள முல்லைத்தீவு மாந்தை கிழக்கு, துணுக்காய் பிரதேச செயலர் பிரிவுகளை நோக்கி தொடாச்சியான எறிகணைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதனால் கிளிநொச்சி நோக்கி இடம்பெயர்ந்துள்ள மக்கள் மரங்களின் கீழ் தங்கியுள்ளனர். நேற்று கடுமையான மழை பெய்த நிலையில், மழையின் மத்தியிலும் பல்வேறு சிரமங்களுடன் …

    • 0 replies
    • 642 views
  13. சீன கம்யூனிஸ்ட் கட்சியுடனான உறவுகளை வலப்படுத்திக் கொள்ளும் நோக்கத்துடன் ஜே.வி.பி.யின் உயர் மட்டக்குழு ஒன்று சீனாவுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருக்கின்றது. ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர் சுனில் ஹன்டுனட்டி தலைமையிலான இக்குழுவினர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகர்களுடன் முக்கியமான பேச்சுக்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் யுனான் மாகாணத்தக்கு விஜயம் செய்ய ஜே.வி.பி. தூதுக்குழுவினர் மாகாணச் செயலாளர் லீ ஹன்பாய் என்பவருடன் விரிவான பேச்சுக்களை நடத்தி இருக்கின்றார்கள். இம்மாகாணத்தில் 25 வெவ்வேறான சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கின்ற போதிலும், அவர்கள் அனைவரும் சமாதானமாகவும் அமைதியாகவும் வாழ்ந்து வருவதாகவும். இதற்கு சோஷலிசக் கோட்பாடுகளே க…

    • 0 replies
    • 605 views
  14. இலங்கையின் கிராமமொன்றில் யுத்தம் மட்டுமே தொழில்வாய்ப்பு [16 - July - 2008] [Font Size - A - A - A] தென்னிலங்கையில் இயத்திகேவேவா என்ற கிராமம் தொழிற் சாலைகளைக் கொண்டிருந்தாலும் அங்குள்ள இளைஞர்கள் படையணியில் இணைவதனையே பிரதான தொழிலாகக் கொண்டுள்ளனர். நாட்டின் தெற்கு எல்லையிலிருந்து 27 மைல் தொலைவில் அமைந்துள்ளது இக்கிராமம், இங்குள்ள இளைஞர்கள் இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் பொலிஸ் படை ஆகியவற்றிலேயே இணைந்துள்ளனர். பொலிஸ் படையில் கடமையாற்றும் இக்கிராமத்தைச் சேர்ந்த 38 வயதுடைய சிசிர சேனாரட்ண என்பவர் தெரிவிக்கையில் ; நாம் ஒரு வேலையைத் தேட ஆரம்பித்தால், மிகவும் இலகுவானவழியாக படையணியில் சேர்வதொன்றுதான் உள்ளதென கூறினார். இதேவேளை இவருடைய இருசகோதர…

    • 1 reply
    • 772 views
  15. மன்மோகன்சிங்கின் விசேட பாதுகாப்புக் குழு வருகை [16 - July - 2008] [Font Size - A - A - A] இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கின் விசேட பாதுகாப்புக் குழுவிலுள்ள 70 உறுப்பினர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்புக்கு வருகை தந்துள்ளனர். சார்க் உச்சி மாநாட்டின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளுக்காகவே இவர்கள் வருகை தந்திருப்பதாக கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி இணையத்தளமொன்று தெரிவித்தது. இந்தியப் பிரதமருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் விசேட பாதுகாப்பு வழங்கும் குழுவினருக்கு மேலதிகமாக மூன்று கடற்படைக் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தந்து கொழும்புத் துறைமுகத்தின் வெளிப்புறத்தில் தரித்து நிற்பதற்கான அனுமதியை இந்திய அரசாங்கம் …

    • 0 replies
    • 654 views
  16. ஆகஸ்ட் 1,2,3 திகதிகள் அரச விடுமுறை தினங்கள் வீரகேசரி நாளேடு 7/15/2008 7:45:39 PM - கொழும்பில் நடைபெறவுள்ள 15 ஆவது சார்க் மாநாட்டை முன்னிட்டு ஆகஸ்ட் மாதம் 1,2,3 ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பை கருத்தில் கொண்டே விடுமுறை தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதா

  17. காங்கேசன் துறை சீமெந்து ஆலையை பார்வையிடுவதற்காக இந்தியாவிலிருந்து 'ஆதித்தியா பிர்லா' என்ற நிறுவனத்தின் அதிகாரிகள் இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றனர். கட்டுமான மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் ரஜித இதனைத் தெரிவித்துள்ளார். காங்கேசன் துறைக்குச் செல்வதற்கான பாதுகாப்பு அனுமதி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க காங்கேசன் துறை சீமேந்து ஆலையை மீண்டும் இயங்கச் செய்வதற்கான திட்டமொன்றை ஏற்கனவே இந்த நிறுவனம் அரசிடம் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நிறுவனத்துடன் சேர்ந்து காங்கேசன் சீமெந்து ஆலையை மீண்டும் இயக்குவது குறித்து அரசு ஆலோசித்து வருவதாக அவர் கூறினார். சீமேந்திற்கு ஏற்பட்டுள்ள தட்டு…

    • 3 replies
    • 1.5k views
  18. கொசோவோ விடுதலை இராணுவத்தினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்துள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை லண்டனில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்ட கொசோவோவின் நகரசபை மேயர் ஒருவர் கலந்து கொண்டுள்ளனர். கொசோவோவின் நகரசபை மேயரான பஜ்ரேட் ரெக்செனாய் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகித்ததனை ஒப்புக் கொண்டுள்ளார். இதனால், அமெரிக்கா, ஜெர்மன், பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்துமீட்கப்பட்

    • 5 replies
    • 1.4k views
  19. மட்டக்களப்பு இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் பாரிய மனித புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [ புதன்கிழமை, 16 யூலை 2008, 05:28.29 AM GMT +05:30 ] மட்டக்களப்பிலிருந்து 6 கிலோ மீற்றார் தூரத்தில் உள்ள பாலமீன்மடு என்ற கடற்கரைக் கிராமத்தில் பாரிய மனிதப் புதைகுழியொன்று இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை மூதூர்ப் பிரதேசத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்த அகதிகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் பாலமீன்மடுக் கிராமத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். குறித்த கிராம மக்கள் குடிநீர் கிணறு ஒன்றைத் தோண்டும் பணிகளை ஆரம்பித்த போது பாரியளவிலான எலும்புக் கூடுகளை அவர்கள் கண்டு பிடித்துள்ளனர். சுமார் ஐந்து அடி ஆழத்தில் 16 பேரது எலும்புக் கூடுகள் கண்டு பிட…

    • 0 replies
    • 566 views
  20. அனைத்துலக அரசியலில் தீர்க்கமான ஞானம் கொண்ட பிரபாகரன், தனது அடுத்து நகர்வினை முன்னெடுப்பதற்கு அமெரிக்க, இந்திய அரசு மாற்றங்களை எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்தவகையில், சிறிலங்கா அரசின் தற்போதைய போருக்கு அடுத்த வருடமே புலிகள் பதிலளிப்பார்கள் என்று பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் எதிர்வு கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  21. *தென்னாபிரிக்க அமைச்சர் படையாச்சி இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்திற்கு இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் சாதகமான சமிக்ஞைகளைக் காட்டி நல்லிணக்க புரிந்துணர்வோடு செயற்பட முன் வந்தால் இந்திய அரசின் ஒத்துழைப்போடு சாதகமான பேச்சுக்களை தொடங்குவதற்கு தனது பங்களிப்பையும் செலுத்த தயாராக இருப்பதாக தென்னாபிரிக்க தொலைத்தொடர்புகள் அமைச்சரும், சர்வதேச சமாதான செயற்பாட்டாளருமான ராதாகிருஷ்ணாபடையாட்சி (ரோய்) தெரிவித்தார். தென்னாபிரிக்காவிற்கு விஜயம் செய்த சமுதாய அபிவிருத்தி சமூக அநீதிஒழிப்பு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணித் தலைவருமான பெ. சந்திரசேகரனை கௌரவிக்கும் முகமாக அமைச்சர் ராதாகிருஷ்ண படையாட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே படையாட்சி இந்த உறுதி…

    • 0 replies
    • 559 views
  22. Posted on : 2008-07-16 மீனவர்கள் மீதான கொடூரத் தாக்குதல்கள்: தமிழகத்தின் சீற்றத்தால் பலன் உண்டா? இலங்கைக் கடற்படையினரால் ஈழத் தமிழர்கள் மட்டுமன்றி, இந்திய மீனவர்களும் சொல்லொணாத் துன்ப, துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஆயுதம் ஏந்திய படையினர் அப்பாவிப் பொதுமக்களைத் துச்சமாக நினைத்து நடத்தும் அட்டகாசங்கள், தாக்குதல்களால் இப்போது தமிழகம் பொறுக்கமுடியாத எல்லையைக் கடந்திருக்கின்றது. தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து அரசியல் கட்சிகளையுமே தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்கள், அராஜகங்கள் கொதிக்க வைத்திருக்கின்றன. அங்குள்ள எல்லாத் தரப்பினருமே சீற்றத்துடன் இவ்விவகாரம் குறித்துத் தங்களின் கருத்தை வெளியிட்டு வருகின்றனர். தமிழகத்தின் ஆளும் தி.மு.க. த…

  23. தமிழக மீனவர்களை தாக்கும்போது கேட்க நாதியில்லை விஜயகாந்த் ஆவேசம் 14.07.2008 / நிருபர் எல்லாளன் வடமாநிலத்தில் ஏதேனும் பிரச்னை என்றால் ராணுவம் செல்கிறது. ஆனால், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கும்போது அதை கேட்க நாதியில்லை' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார். தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதையும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் ராமேஸ்வரத்தில் நேற்று தே.மு.தி.க., சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைமை வகித்து அவர் பேசியதாவது: தமிழக மீனவர்களின் மீன் பிடிப்பு பகுதியான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்க்க மத்திய அரசு முன் வந்த போது பதவியை காப் பாற்றுவதற்காக எதிர்ப்பு தெரிவிக்காத கருணாநிதி, தற்போது கடற்படைய…

  24. கடந்த 10 ஆம் திகதி நடந்ததைப் போன்று அதைவிடப் பாரிய அளவில் மூன்று நாள்கள் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க ஜே.வி. பி. மீண்டும் ஏற்பாடுகளைச் செய்து வரு கின்றது. தொடர் வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக் கும் ஜே.வி.பியின் தொழிற்சங்கங்கள், இது தொடர்பாக ஐ.தே.கட்சி மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களுடன் கலந்தாலோசித்து விட்டு, போராட்டத்துக்கான திகதிகள் தீர்மானிக்கப்படும் என்றும் அறிவித்திருக் கின்றன. தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக் கப்படும்வரை தொடர்ச்சியாகப் போராட் டம் நடத்துவ÷ த எமது திட்டம். இந்த வேலை நிறுத்தப் போராட்டம் மூலம் முழு நாடுமே ஸ்தம்பித்துப் போகும் என்றும் இந்தப் போராட்டத்திற்குப் பிறகாவது அரசு தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக…

  25. சிறீலங்காவுக்கு 4 நாள் அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர், ஆயுததாரியும் பல மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினரும்,கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையானை சந்திக்க உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சந்திப்பு திருமலையில் நிகழ உள்ளது. இதற்கிடையே இதே பிள்ளையானை பிரிட்டன் அங்கம் வகிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று முன்னர் ஒரு சிறிலங்கா விஜயத்தின் போது சந்திக்க மறுத்துவிட்டிருந்தது. அதற்கு பிள்ளையானும் அவரின் குழுவினரும் மேற்கொண்ட மனித உரிமை மீறல்களை ஐரோப்பிய பிரதிநிதிகள் குழுவினர் காரணமாகக் காட்டி இருந்தனர். ஆனால் பிரிட்டன் கருணா விடயத்தில…

    • 9 replies
    • 2.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.