ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143388 topics in this forum
-
ஆகஸ்ட் 1ம் நாள் விசேட விடுமுறை: சிறீலங்கா அரசாங்கம் அறிவிப்பு செவ்வாய், 15 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] சார்க் மாநாட்டை முன்னிட்டு எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் நாள் விசேட விடுமுறையாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சார்க் மாநாட்டை முன்னிட்டு இந்த விடுமுறை நாளை சிறீலங்கா அறிவித்துள்ளது. இதேநேரம் திட்டமிட்டபடி பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் ஆகஸ்ட் 4 நாளிருந்து நடைமுறைக்க வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டாரநாயக்க விமான நிலையம், பண்டார நாயக்கா ஞாபகார்த்த மாநாட்டு மண்டபம், கல்கிச விடுதி ஆகிய பகுதிகள் எதிர்வரும் 25ம் நாளிலிருந்து உயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. http://www.pathivu.com/
-
- 0 replies
- 858 views
-
-
வான்படை மூலமும், கடற்படை மூலமும், தரைப்படை மூலமும் சிங்களப் படைகளை எதிர்த்துப் பல நாடுகளிலிருந்து சிங்களவர் வாங்கிக்குவித்த ஆயுதப் பலத்தை எதிர்த்தும் ,சிங்களவர் உருவாக்கிய துரோகத்தை முறியடித்தும், உச்சக்கட்ட போரை புலிகள் எதிர்நோக்கி உள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு முழு அளவில் துணைநிற்க முன்வாருங்கள் என்று வைகோ அழைப்பு விடுத்துள்ளார். வான்படை மூலமும், கடற்படை மூலமும், தரைப்படை மூலமும் சிங்களப் படைகளை எதிர்த்துப் பல நாடுகளிலிருந்து சிங்களவர் வாங்கிக்குவித்த ஆயுதப் பலத்தை எதிர்த்தும், சிங்களவர் உருவாக்கிய துரோகத்தை முறியடித்தும், உச்சக்கட்ட போரை புலிகள் எதிர்நோக்கி உள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு முழு அளவில் துணைநிற்க முன்வாருங்கள் என்று வைகோ அழைப்பு விட…
-
- 0 replies
- 905 views
-
-
http://www.blackjuly83.com/
-
- 5 replies
- 1.8k views
-
-
அம்பாறையில் படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: மூவர் பலி [செவ்வாய்க்கிழமை, 15 யூலை 2008, 10:29 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை மாவட்டத்தில் உள்ள மொனறாகல சாலையில் சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: பொத்துவில் - மொனறாகல சாலையில் உள்ள செங்காமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7:25 மணியளவில் சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். காய…
-
- 0 replies
- 942 views
-
-
சார்க் மாநாட்டில் கலந்துக்கொள்ள உள்ள மூன்று தலைவர்கள் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள தெரிவித்து, அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் போர்வையில் இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இந்தியாவின் றோ உளவுப்பிரிவை ஈடுபடுத்தும் வேலைத்திட்டம் ஒன்றை பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளதாக லங்கா ருத் செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை பாதுகாப்பு பிரிவினருடன் இணைந்து மேற்கொள்ளப்படவுள்ள இந்த பாரிய திட்டத்தின் கீழ் தொலைபேசி வலையமைப்பை கண்காணித்தல், அதிசக்தி வாய்ந்த ஜேமர் இயந்திரம், நடமாடும் ஜேமர் இயந்தரம் போன்ற முக்கிய புலனாய்வு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதுடன் இதற்கான ஒத்துழைப்புகள் ரோ உளவுப்பிரிவிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஊடகம் தெரிவிக்கிறது. இ…
-
- 0 replies
- 1.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு மாற்றீடாக கிழக்கில் வேறு அடிப்படைவாத சக்திகள் தலைத்தூக்க இடமளிக்காது, அவ்வாறாது தலைத்தூக்கி வரும் சக்திகளை வேரூடன் அறுத்தெறிந்து, தமிழ் சிங்கள மக்களின் அமைதியான வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என ஜாதிக ஹெல உறுமயவின் செயலாளர் ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். கல்முனையில் மூன்று சிங்களவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்த கட்சி விடுத்துள்ள அறிக்கையில் இதனை அவர் குறிப்பிட்டுள்ளார். சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் அனைவரும் அமைதியாக வாழ படையினர் கிழக்கை விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றினர். இதனடிப்படையில் தற்போது கிழக்கில் ஜனநாயக சூழல் உறுதிப்படுத்தப்பட்டு வருகிறது. எனினும் புலிகளின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்ட கிழக்க…
-
- 0 replies
- 692 views
-
-
நேற்று மாலை சிறிலங்கா தலைநகர் கொழும்பின் வெள்ளவத்தப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் ஒருவர் சயனைட் அருந்திய நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைத் தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து யாழ். களத்தின் உறுப்பினரான அஜீவன் அவர்களின் இணையத்தளத்திலிருந்த செய்தி: புலிப் பயங்கரவாதிகளின் ஆண் தற்கொலையாளியொருவர் நேற்று மாலை சயனைட் உட்கொண்டு ஆபத்தான நிலையில் கொழும்பு பெரியாஸ்பத்திரியின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. வெள்ளவத்தையில் நேற்று மாலை இவரை விசேட பொலிஸ் புலனாய்வுக் குழுவினர் கைது செய்ய முயன்ற வேளையிலேயே இவர் சயனைட் உட்கொண்டதாக…
-
- 17 replies
- 2.2k views
-
-
3 நாட்கள் தொடர் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கத் தீர்மானம் - லால்காந்த செவ்வாய், 15 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] மூன்று நாட்கள் தொடர்ச்சியாகப் பணிப்புறக்கணிப்புப் போராட்டதை முன்னெடுக்கப் போவதாக அகில இலங்கை தொழிலாளர் சம்மேளத்தின் தலைவரும் ஜேவிபியின் நாடாளுமன்ற உறுப்பினருமான லால் காந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்… தமது கோரிக்கைகளுக்கு சிறீலங்கா அரசாங்கத்திடம் இருந்து உரிய பதில் கிடைக்காவிட்டால், சம்பள உயர்வு கோரி கடந்த 10 ஆம் திகதி அகில இலங்கை தொழிற்சங்க சம்மேளனம் நடாத்திய பணிப்புறக்கணிப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாகவ…
-
- 0 replies
- 541 views
-
-
விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கோ அல்லது விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதற்கோ அரசாங்கத்துக்கு நேரம் இல்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மேலும் காலத்தை இழுத்தடிக்காமல் பயங்கரவாதத்தை ஒழிக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் தமது இராணுவச் செயற்பாடுகளுக்கே கூடுதல் நேரத்தைச் செலவுசெய்வார்கள் என சுயதொழிலாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் சந்தித்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். விடுதலைப் புலிகள் நேரத்துக்கு நேரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்கள் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் காலப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயார…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரித்தானியா பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள்! பிரித்தானியாவில் இன்று நடைபெற்றுக்கொண்டுள்ள பொங்குதமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.றிச்சர்ட் இவன்ஸ் விளையாட்டுத் திடலில் இன்று மாலை 3:00 மணிக்கு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருப்பதாக எமது நிருபர் தெரிவித்தார். ஈழத்தமிழ் மக்களின் பொங்குதமிழ் நிகழ்வுகளுக்கு தமிழீழத் தேசியத் தலைவர் பாராட்டுத் தெரிவித்துள்ள நிலையில், இன்றைய பொங்குதமிழ் எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்றுதிரண்டுள்ளதாக கூறப்படுகின்றது. தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை, விடுதலைப் புலிகளே ஈழத்தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்பவற்றை வல…
-
- 57 replies
- 6.4k views
-
-
இலங்கையில் இம்மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள சார்க் உச்சி மாநாட்டில் சுமார் 250 வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்தியாவிலிருந்து மட்டும் 125 ஊடகவியலாளர்கள் வருகை தருவார்களென்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்தார். உள்நாட்டிலிருந்தும் சுமார் 200 ஊடகவியலாளர்கள் கலந்துகொள்ளவுள்ள இந்த மாநாட்டில், ஊடகவியலாளர்களின் பாதுகாப்புக் கருதி பார் கோட் எனப்படும் குறியீட்டு முறையுடனான புதிய அடையாள அட்டைகளை அரசாங்கம் அறிமுகப்படுத்தவுள்ளது என்றும் அவர் கூறினார். இதேவேளை எதிர்காலத்தில் இலங்கையிலுள்ள சகல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கும் தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய அடையாள அட்டைக…
-
- 0 replies
- 686 views
-
-
அம்பாறை மாவட்ட சென்கமுவ - ராகுகல வீதியில் யாழ்பொதவெவுக்கு அருகாமையில் உள்ள வீதிச் சோதனைச்சாவடியில் காவலில் இருந்த விஷேட அதிரடிப்படையினரை இலக்கு வைத்து இன்று காலை கிளேமோர் குண்டுத் தாக்குதலொன்றைப் விடுதலைப்புலிகள் மேற்கொண்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. காலை 7.30 மணியளவில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது விஷேட அதிரடிப்படை உறுப்பினர்களுக்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை எனவும்,குறித்த பிரதேசத்தில் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிருபர்:சிறிதரன் http://www.tamilseythi.com/srilanka/lanka-...2008-07-15.html
-
- 0 replies
- 799 views
-
-
சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பை முன்னிட்டு கொம்பனி வீதி ரயில்கடவையோரம் அமைந்திருக்கும் சட்டரீதியற்ற கட்டிடங்கள் அகற்றப்படவிருப்பதாகவும், அப்பகுதியில் குடியிருப்போருக்கு மாற்று இடங்களில் குடியிருப்புகள் வழங்கப்படவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இராணுவ மற்றும் விமானப் படையினரின் தலைமையலுவலகங்கள், பொலிஸ் மற்றும் இராணுவ வைத்தியசாலைகள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள சுமார் 200 சட்டரீதியற்ற குடியிருப்புகளே இவ்வாறு அகற்றப்படவிருக்கின்றன” என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். கொம்பனித்தெரு பகுதியில் அமைந்துள்ள சட்டரீதியற்ற குடியிருப்புக்கள் மற்றும் வியாபார நிலையங்களில் தங்கியிருப்போரை ஜூலை 10 ஆம் திகதியிலிருந்த…
-
- 0 replies
- 739 views
-
-
விடுதலைப் புலிகளுடன் போர்நிறுத்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கோ அல்லது விட்டுக்கொடுப்புக்களை மேற்கொள்வதற்கோ அரசாங்கத்துக்கு நேரம் இல்லையெனத் தெரிவித்திருக்கும் மஹிந்த ராஜபக்ஷ, மேலும் காலத்தை இழுத்தடிக்காமல் பயங்கரவாதத்தை ஒழிக்கத் தீர்மானித்திருப்பதாகக் கூறியுள்ளார். பயங்கரவாதிகள் தமது இராணுவச் செயற்பாடுகளுக்கே கூடுதல் நேரத்தைச் செலவுசெய்வார்கள் என சுயதொழிலாளர் சம்மேளனத்தின் பிரதிநிதிகளை நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் சந்தித்த போது மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் நேரத்துக்கு நேரம் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வார்கள் எனக் குறிப்பிட்ட மகிந்த, விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் காலப்பகுதியில் சமாதானப் பேச்சுவார்த்தைக்குத் தயாரெனக் கூறி பேச்…
-
- 0 replies
- 733 views
-
-
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையின் இனநெருக்கடிக்கு அரசியல் தீர்வே தேவை. அதுவே நிரந்தரமானது. ஆகை யால் அரசியல் தீர்வைக் காண்பதற்கான நடைமுறைகளை அரசாங்கம் துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு இன்று இலங்கை வந்துசேரும் பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் மனோச் பிறவுண் பிரபு இங்குள்ள உயர்மட்ட அரசியல் தலைவர்களைச் சந்தித்து வலியுத்துவார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. பிரிட்டனின் வெளிவிகார மற்றும் பொது நலவாய அலுவல்கள் அமைச்சர் மனோச் பிறவுண் பிரபு நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று கொழும்பு வருகிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத் தலைவர்களையும் எதிர்க்கட்சி களைச் சேர்ந்த தலைவர்களையும் அமைச் சர் பிறவுண் சந்தித்துப் பேசவுள்ளளார். அப்போது போரை நிறுத்தி …
-
- 1 reply
- 785 views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலைக் கண்டித்து, சென்னை உயர்நீதிமன்ற வக்கீல்கள் இன்று இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கொடும்பாவியை எரித்து போராட்டம் நடத்தினர். இன்று காலை உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டவக்கீல்கள், உயர்நீதிமன்றம் அமைந்துள்ள என்.எஸ்.சி. போஸ் சாலையில் கூடினர். தமிழக மீனவர்களை சுட்டுக்கொல்லும் இலங்கை கடற்படைக்கும், இலங்கை அரசுக்கும் எதிராக கோஷம் எழுப்பினர். பின்னர் ராஜபக்சேவின் கொடும்பாவியை தீவைத்து எரித்தனர். இதையடுத்து போலீஸார் கொடும்பாவியை அணைக்க முயன்றனர். ஆனால் அவர்களை வக்கீல்கள் தடுத்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீஸார் கொண்டு வந்த தண்ணீரையும் தூக்கி தூர வீசினர். இதனால் பெரும் பரபரப…
-
- 4 replies
- 1.3k views
-
-
அம்பாறையில் கிளைமோர் தாக்குதல்: படைத்தரப்பைச் சேர்ந்தவர் பலி 15.07.2008 / நிருபர் குளக்கோட்டன் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மொனறாகல சாலையில் சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: பொத்துவில் - மொனறாகல சாலையில் உள்ள செங்காமம் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 7:25 மணியளவில் சுற்று நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சம்பவ இடத்திலேயே படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். நான்கு படையினர் காயமடைந்தனர்…
-
- 1 reply
- 539 views
-
-
சிறிலங்காவில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் 15.07.2008 / நிருபர் குளக்கோட்டன் இனப்பிரச்சினைக்கு அரசு என்ன தீர்வைக்கொண்டுள்ளது என்பது தொடர்பாக அறிந்து கொள்ளும் முகமாக பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் சிறிலங்காவுக்கு சென்றுள்ளார். இது தொடர்பில் பிரித்தானியா தூதரகம் தெரிவித்துள்ளதாவது: ஆபிரிக்கா, ஆசியா மற்றும் ஐ.நா. ஆகியவற்றின் விவகாரங்களுக்குப் பொறுப்பான பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் லோட் மலோச் பிறவுண், நேற்று திங்கட்கிழமை இரவு சிறிலங்கா சென்றுள்ளார். இவர் அரச அதிகாரிகள், எதிர்க்கட்சி உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள், சமூகத்தலைவர்கள் மற்றும் பொது நிறுவனங்களைச் சார்ந்தோரை சந்தித்து பேச்சுக்களை நடத்தவுள்ளா…
-
- 0 replies
- 485 views
-
-
இவ்வருடத்தில் சிறிலங்காவுக்கு அதிகளவு பண உதவிசெய்த நாடு ஈரான் சிறிலங்காவின் நிதி அமைச்சர் தெரிவிப்பு. இவ்வருட முதல் 5 மாதங்களில் சிறிலங்காவுக்கு அதிகளவு உதவிசெய்த நாடுகளும்/வங்கிகளும் 1) ஈரான் 1.5 பில்லியன் வெள்ளிகள் 2) டென்மார்க் 155.2 மில்லியன் வெள்ளிகள் 3) இந்தியா 109.2 மில்லியன் வெள்ளிகள் 4) ஆசியன் அபிவிருத்தி வங்கி 90 மில்லியன் வெள்ளிகள் 5) உலக வங்கி 43.1 மில்லியன் வெள்ளிகள் 6) யப்பான் 42.2 மில்லியன் வெள்ளிகள் Iran Becomes Sri Lanka's Top Donor COLOMBO, Iran has emerged as Sri Lanka's biggest donor this year, knocking Japan from the position of being the island's main benefactor, the finance ministry said Monday. In the five months …
-
- 0 replies
- 710 views
-
-
வவுனியாவில் இருமுனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 745 views
-
-
வான்படை மூலமும், கடற்படை மூலமும், தரைப்படை மூலமும் சிங்களப் படைகளை எதிர்த்துப் பல நாடுகளிலிருந்து சிங்களவர் வாங்கிக்குவித்த ஆயுதப் பலத்தை எதிர்த்தும், சிங்களவர் உருவாக்கிய துரோகத்தை முறியடித்தும், உச்சக்கட்ட போரை புலிகள் எதிர்நோக்கி உள்ள இந்த நேரத்தில் அவர்களுக்கு முழு அளவில் துணைநிற்க முன்வாருங்கள் என்று வைகோ அழைப்பு விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 786 views
-
-
வீரகேசரி நாளேடு 7/14/2008 11:19:55 PM - விடுதலைப் புலிகளை அழித்தொழிப்பதற்கு இந்தியா இலங்கைக்கு வழங்கும் ஆதரவினை வரவேற்கிறோம். ஆனால், அதற்கு கப்பமாக இலங்கையின் வளங்களை சூறையாடுவதற்கு இடமளிக்க முடியாது. கொழும்பில் இடம்பெறும் சார்க் மாநாட்டின் போது இந்தியாவுடன் கைச்சாத்திடவுள்ள உடன்படிக்கையினை அரசாங்கம் கைவிட வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான விமல் வீரவன்ச தெரிவித்தார். சார்க் மாநாட்டின் போது இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் மேற்கொள்ளப்படவுள்ள சுதந்திர வர்த்தகம் மற்றும் முதலீட்டு நாடுகளுக்கிடையே மனித வளங்களை பரிமாறிக் கொள்ளும் உடன்படிக்கையினால் இலங்கைக்கு எந்த நன்மையும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார். பத்தரமுல்லை…
-
- 0 replies
- 630 views
-
-
களத்தில் தமிழர்களின் பலம் ஆயுதமுனையில் இருக்கும் அதேவேளை, புலம்பெயர் நாடுகளில் பொங்கு தமிழாக, மக்கள் திரட்சி அலையாக வெளிப்பட்டு கொண்டிருக்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார் முழங்காவில் ஜெயபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்க நிகழ்வில் சிறப்புரையாற்றும் போது அவர் மேலும் தெரிவிதுள்ளதாவது: ஜெயபுரம் மண்ணில் தமிழ் மக்கள் பற்றும் உறுதியும் திடமுமாக மகிழ்ச்சியான ஒன்றுகூடலில் பொழுதினை கழித்துக்கொண்ருக்கின்றனர். தமிழ் மக்கள் திடமான நிலையில் உறுதியுடன் எழுச்சிகொள்வதையும் இவ்வாறு நிகழ்வுகளை நடத்துவதையும் சிங்கள ஆட்சியாளர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. …
-
- 0 replies
- 494 views
-