ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
தற்போது நடைபெற்றுவரும் யுத்தத்தை 2வருடங்களுக்குள் முடிவுக்கு கொண்டுவர எதிர்ப்பார்ப்பதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் இன்று கண்டி மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடாதிபதிகளை சந்தித்து உரையாடிய போதே இராணுவத்தளபதி இவ்வாறு கூறியுள்ளார். நிலப்பரப்பைக் கைப்பற்றுவது மாத்திரம் அரசாங்கத்தின் நோக்கமல்ல எனத் தெரிவித்துள்ள சரத்பொன்சேகா ஜனநாயகத்தை ஸ்தாபித்து மக்களை மீளக் குடியமர்த்துவதற்குச் செயற்பாடுகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இராணுவத் தளபதி சரத்பொன்சேகா இந்த வருட இறுதிக்குள் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரப்போவதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடதக்கது. இதற்கிடையில் விடுதலைப்பலிகளின் மூன்றில் இரண்டு வீதப்பலத்தை படையினர் குறைத்துள்ளதாக கு…
-
- 0 replies
- 608 views
-
-
சார்க் மாநாட்டுக்கு வருகை தரும் தலைவர்களின் பாதுகாப்புக்காக வரும் பாதுகாப்புத் தரப்பினரின் சேவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் செயற்படுவது என அரசாங்கம் தீர்மானித்துள்ளது அதேநேரம் இலங்கையின் பாதுகாப்பு நிகழ்ச்சித்திட்டங்களுக்கு அமைய இவர்கள் செயற்படுவார்கள் என்றும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது இலங்கையின் மேல் மாகாண சிரேஷ்ட காவல்துறை அதிகாரி நிமல் மெதிவக்க இந்த தகவல்களை வெளியிட்டுள்ளார். இதேவேளை இலங்கைக்கு வரும் வெளிநாட்டுப் படையினர் முதலில் தமது ஆயுதங்களை இலங்கையின் அதிகாரிகளுக்கு காண்பித்த பின்னர் தமது ஆயுதங்களுடன் செயற்பட அனுமதிக்கப்படுவர் என அவர் குறிப்பிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. http://puspaviji.blogspot.com/
-
- 0 replies
- 485 views
-
-
புத்தளம் 9மைல்கல் கல்லடி எனும் இடத்தில் சுமார் 15அடிநீளமான முதலை சட்டவிரோதமாக அறுக்கப்பட்டு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வேளையில் சுற்றிவளைத்த பொலிஸார் குறித்த இறைச்சியையும் அறுக்க பயன்படுத்திய ஆயுதங்களையும் கைப்பற்றியதை படங்களில் காணலாம்.. (செய்தி & படங்கள்.. ரொம்ப முக்கியம் http://puspaviji.blogspot.com/2008/07/blog-post_19.html
-
- 0 replies
- 792 views
-
-
ஈழப்பிரச்னை, போரை தமிழ்நாட்டு, இந்திய ஊடகங்கள் இன்று அணுகும் முறை பற்றி உங்களுக்கு வரலாற்றுரீதியான விமர்சனப்பார்வை இருக்குமல்லவா… இந்திய, தமிழ்நாட்டு ஊடகங்கள் உங்கள் சமுதாயத்தின் பிரச்னையை அணுகுவது, இலங்கைப்பிரச்னையை அணுகுவது எப்படிங்கறதுக்கு முன்னால இதற்குப் பின்னணியாக ஒரு முக்கிய விஷயத்தைப் பார்க்கணும்… பொதுவாகவே தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு ஒரு சர்வதேசப்பார்வையோ, வீச்சோ கிடையாது. ஏன், இந்தியாவிலேயே. டில்லி, பெங்களூரை விட்டா இந்திய நகரங்களிலேயே அதுக்கெல்லாம் நிருபர்கள் இல்ல. தென்னாசியாவை எடுத்துக்கிட்டீங்கன்னா, தமிழ்நாட்டு ஊடகங்கள் பலதுக்குக் கொழும்புல முழுநேர நிருபர்கள் இல்ல. மலேசியாவில், சிங்கப்பூரில் முழுநேர நிருபர்கள் இல்ல. தினமணிக்கு மாத்திரம் ஒருகாலத…
-
- 0 replies
- 786 views
-
-
தமிழக கடற்றொழிலாளர்களை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்வதைக் கண்டித்தும் இது தொடர்பில் சிறிலங்கா அரசை இந்திய அரசு கண்டிக்க வலியுறுத்தியும் தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று உண்ணாநிலைப் போராட்டம் எழுச்சியுடன் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 960 views
-
-
வெள்ளை வான் கலாச்சாரத்தை இல்லாதொழித்து நாட்டில் சுபீட்சத்தை ஏற்படுத்த அனைவரும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொள்ளுமாறு..... தொடர்ந்து வாசிக்க.....
-
- 5 replies
- 1.2k views
-
-
கிழக்கின் உதயம்.. ஒரு வருடப் பூர்த்தி....! போர் செய்து போர் செய்து தமிழனின் உரிமைகளை தட்டிப்பறிக்கும் சிங்களம்.. நயவஞ்சகத் தமிழ் குழுக்களுடன் இணைந்து கண்டுவிட்ட கிழக்கு விடிவு.. சாதாரண மக்களுக்கு எந்த விடிவையும் தரவில்லை..! சிறீலங்கா அரசாலும் அதனோடு இணைந்து இயங்கும் துணைப்படைக் கும்பல்களாலும் விடிந்து விட்டதாகச் சொல்லப்படும் கிழக்கில் விடியாத உணர்வைத் தாங்கும் கிழக்கு மக்கள். பிபிசியின் பார்வையில்.. எங்கும் இராணுவம் நிற்கிறது. சோதனைச் சாவடிகளில் சந்தேகத்தில் சோதனைகள் தொடர்கின்றன. மக்கள் எல்லோருமே புலி என்று சந்தேகிக்கப்படுகின்றனர்.. அச்ச சூழலிலேயே வாழ வேண்டி இருக்கிறது. இப்படிச் சொல்கிறார்கள் கிழக்கு மக்கள். "அவர்கள் ( ஆமி) எனது மகனைப் …
-
- 2 replies
- 962 views
-
-
வடக்கு, கிழக்கில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்படுபவர்கள் தென்பகுதிச் சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டிருப்பவர
-
- 0 replies
- 607 views
-
-
மன்னாரில் படையினர் நால்வர் மீது பதுங்கிச் சூட்டுத்தாக்குதல் [சனிக்கிழமை, 19 யூலை 2008, 10:01 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் கட்டாடிவயல் பகுதியில் சிறிலங்காப் படையினர் நால்வர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் பதுங்கிச் சூட்டுத்தாக்குதல் நடத்தியுள்ளனர். மன்னார் வடக்கு முதன்மைச்சாலையை அண்டியை கட்டாடிவயல் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை சிறிலங்காப் படையினருடன் மோதல் இடம்பெற்றது. இம் மோதலின் போது படையினர் நால்வர் மீது விடுதலைப் புலிகள் பதுங்கிச் சூட்டுத்தாக்குதலை நடத்தினர். புதினம்
-
- 0 replies
- 752 views
-
-
கியூபெக் தமிழ் சமூகம் நடத்தும் பொங்குதழிழ், மொன்றியல். 19.07.2008 சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு பின்வ௫ம் இடத்தில். Howard Park (Parc Extention)
-
- 5 replies
- 1.3k views
-
-
தென்மராட்சி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரு படையினர் பலி [சனிக்கிழமை, 19 யூலை 2008, 09:33 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ். தென்மராட்சிப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது நடத்தப்பட்ட இருவேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். சாவகச்சேரி மடத்தடிப் பகுதியில் உள்ள சிறிலங்காப் படை அரண்மீது இரவு 7:30 மணிக்கும், மீசாலை வேம்பிராய்ச் சந்தியில் உள்ள படை அரண்மீது இரவு 8:30 மணிக்கும் துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டன. இந்த இரு வேறு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். புதினம்
-
- 0 replies
- 718 views
-
-
மன்னாரில் படையினரின் நடவடிக்கை முறியடிப்பு: 7 படையினர் பலி- 15 பேர் காயம் [சனிக்கிழமை, 19 யூலை 2008, 08:49 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் மாவட்டத்தில் உள்ள குருந்தன்குளம் பகுதியில் நடவடிக்கை மேற்கொண்ட சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி முறியடித்தனர். இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 15-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். குருந்தன்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை முற்பகல் 9:00 மணிமுதல் பிற்பகல் 4:00 மணிவரை விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் மோதல் நடைபெற்று படையினரின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது. இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 15-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். …
-
- 0 replies
- 617 views
-
-
படைத்தளபதியாரே ரெலிகொம் முகாமையாளரே பதில் கூறுங்கள் கடந்த யூன் மாதம் நடுப்பகுதியில் இருந்து யாழ்மாவட்டத்திற்கான சீ.டி.எம்.ஏ தொலைபேசி சேவை செயலிழந்திருக்கின்றமை அனைவருக்கும் தெரிந்த விடயம். குறித்த தொலைபேசி இணைப்பினை பெறுவதற்கு நமது யாழ் மக்கள் எதிர்கொண்ட நடைமுறைகள் மற்றும் அலைச்சல்களும் நீங்கள்; அறிந்ததே. இதுவரை சிறீலங்கா ரெலிகொம் நிறுவனம் இது குறித்து மக்களுக்கு முறைப்படி எதுவும் அறிவிக்கவில்லை இது விடயத்தில் தொடர்ந்தும் பொறுப்பற்றவகையில் மௌனம் சாதித்துக்கொண்டிருப்பது சிறீலங்கா ரெலிகொம்மினது யாழ் பிராந்திய முகாமையாளருக்கு அழகான விடயமல்ல. மக்களின் பணத்தில் ஊதியம் பெறும் அதிகாரிகளின் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்கனவே பல வசதியீனங்களுடன் வாழும் யாழ் மக்களுக்கு பெர…
-
- 0 replies
- 993 views
-
-
கடந்த வாரம் கொழும்பிலிருந்து ஒரு கோஸ்டி சென்னைக்கு வந்தது. அந்தக் கோஸ்டியில் பழைய கெடுப்பாளர் டொக்டர். விக்கினேஸ்வரன், நிஜாம் காரியப்பர், மைக் பெரேரா, வீ.எம்.எஸ். விக்னேஸ்வரன் (விக்கி) ஆகியோர் முக்கியமான நபர்களாக சவேரா உயர்தர ஓட்டலில் அலைந்து கொண்டிருந்தனர். செய்தி கேள்விப்பட்டதும் ஓட்டலுக்கு விரைந்து வினவியதில், ராஜபக்சேயின் ராஜதந்திரத்துக்கு கிடைத்த வெற்றிதான் கிழக்கு மாகாண சபை என்றும், நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அது கிடைத்தது என்றும், இந்தியாவில் இருப்பவர்கள் அந்தச் சபைக்கு ஆதரவு தெரிவிக்கவேண்டும் என்று பார்ப்பவர்களிடத்து புலம்பிக்கொண்டிருந்ததாகவும
-
- 0 replies
- 1.1k views
-
-
on : 2008-07-20 குடாநாட்டு மக்களின் உரிமைகளை அப்பட்டமாக மீறும் விதிமுறைகள் " ஏ 9' கண்டி வீதி ஊடான போக்குவரத்துப் பாதையை மூடி யாழ். குடாநாட்டு மக்களைத் திறந்த வெளிச் சிறை யில் அடைத்துள்ளது அரசு என்பது வெளிப்படையான விடயம். அப்படிச் "சிறை' வைக்கப்பட்டிருக்கும் குடாநாட்டு மக்களுக்கு மேலும் மேலும் தொந்தரவு கொடுக்கும் கெடுபிடிகள் அநேகம். ஊரடங்குகள், சுற்றிவளைப்புகள், தேடுதல்கள், சந் திக்குச் சந்தி தடை நிலைகள், சோதனைச் சாவடிகள், வாக னப் பதிவுகள் என்று சாதாரண வாழ்க்கை யையே வாழவி டாமல் இம்சிக்கும் கட்டுப்பாடுகள் அதி கம், அநேகம். அந்த வகையில் ஒன்றுதான் யாழ்ப்பாணக் குடா நாட்டு மக்கள் வெளிமாவட்டங்களுக்குச் செல்வதற்கு பயண அனுமதிப்பத்திரம் (பாஸ்) பெற வேண்டும் என்ற விதிமுற…
-
- 0 replies
- 533 views
-
-
ஒரு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் வைத்து ஈ.பி.டி.பி.யினரால் கடத்தப்பட்ட வர்த்தகரான தேவதாசன் சுரேஷ்குமார் சடலமாக ஈ.பி.டி.பி.அலுவலகத்தில் இருந்து நேற்றையதினம் மீட்கப்பட்டுள்ளார் இக்கொலை தொடர்பாக ஈ.பி.டி.பி. அமைப்பைச் சேர்ந்த நால்வர் ஏறாவூர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் மேலும் இரு ஈ.பி.டி.பி. உறுப்பினர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதுடன் அவர் கொடுத்த தகவலின் பிரகாரம் வர்த்தகரான சுரேஷ்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் வைத்து கொலை செய்யப்பட்ட வர்த்தகர் ஈ.பி.டி.பி.யின் பாவனையில் உள்ள காணி ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் நேற்றையதினம் சடலமாக …
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு எதிர்வரும் மாதம் நடைபெறவுள்ள சார்க் தலைவர்கள் மாநாட்டை குழப்புதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு இந்த சதித்திட்டத்திற்கு பட்டாளி மக்கள் கட்சி பூரண ஆதரவு வழங்கி வருவதாக அந்த நாளேடு கூறுகிறது. இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரியல் மற்றும் இரசாயன ஆயுதத் தாக்குதல்களுக்கு முகங்ககொடுக்கும் வகையில் விசேட கப்பலொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களே விடுதலை புலிகளை உசுப்பேத்தி விடுவார்கள் போல கிடக்குது???? http://isoorya.blogspot.com/ http://isoorya.blogspot.com/ http://isoorya…
-
- 0 replies
- 2k views
-
-
வவுனியாவில் முன்நகர்வு முறியடிப்பு: 7 படையினர் பலி- 13 பேர் காயம் [வெள்ளிக்கிழமை, 18 யூலை 2008, 08:58 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டத்தில் உள்ள வடமேற்கு பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏழு படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர். வடமேற்கு பாலமோட்டை, குஞ்சுக்குளம் பகுதிகளில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் முன்நகர்வினை மேற்கொண்டனர். இம் முன்நகர்வுக்கு எதிராக பிற்பகல் 1:00 மணி தொடக்கம் இரவு 7:00 மணிவரை விடுதலைப் புலிகள் நடத்திய செறிவான முறியடிப்புத் தாக்…
-
- 1 reply
- 815 views
-
-
யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 வயது சிறுமி மீது பாலியல் வல்லுறுவு! யாழ்ப்பாணம் உரும்பிராயில் 9 அகவையுடைய சிறுமி மீது பாலியல் வல்லுறுவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.சிறு
-
- 6 replies
- 2.4k views
- 1 follower
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிக்க மேலும் இரண்டு வருடங்கள் தேவை என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
வீரகேசரி நாளேடு 7/18/2008 6:23:21 PM - இந்திய இலங்கை கடலெல்லையைத் தாண்டி தவறுதலாக உட்பிரவேசிக்கும் தமிழக மீனவர்களை சுட்டுக் கொல்ல வேண்டிய அவசியமில்லை. கச்சதீவு விவகாரத்தில் தமிழக மீனவர்களின் உரிமைகளை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. உயர்நிலை செயற்திட்டக் குழு கூட்டத்துக்குப் பின்னர் நிருபர்களுக்கு முதலமைச்சர் கருணாநிதி அளித்த பேட்டியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பேட்டியின் விபரம் வருமாறு: கேள்வி: மத்திய அரசிடம் உங்களுக்கு இருக்கின்ற செல்வாக்கைப் பயன்படுத்தி, மீனவர் பிரச்சினை தொடர்பில் அவர்களுக்கு நீங்கள் ஏன் ஒரு அழுத்தம் கொடுக்க கூடாது என்று எதி…
-
- 0 replies
- 1k views
-
-
முல்லைதீவில் தரையிறங்க முயற்சித்த தமிழ்நாட்டு இளைஞர்கள் சிங்களவர்களால் கைது. http://ourlanka.com/srilankanews/mysteriou...r-territory.htm ! ? !
-
- 5 replies
- 2.8k views
-
-
இலங்கைக்கு அதிக நிதி உதவி வழங்கும் நாடாக ஈரான்! ஜப்பானையும் முந்துகின்றது இலங்கைக்கு அதிகளவு நிதியுதவி வழங்கும் நாடாக ஈரான் மாறியுள்ளமை இலங் கையின் நிதியமைச்சு வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இலங்கைக்கு அதிகளவு நிதியுதவி வழங்கி வந்த ஜப்பான், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவை பட்டியலில் பின்தள்ளப்பட்டுள்ள அதேவேளை, 2008ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலங்கைக்கு அதிகளவு நிதியுதவி வழங்கிய நாடாக ஈரான் மாறியுள்ளது. இலங்கையின் அரசியல், மனித உரிமை நிலைவரங் கள் போன்றவற்றால் தனது உதவியை இடை நிறுத்திய ஜேர்மனி, கொழும்பிற்கு உதவி வழங்கும் முன்னணி நாடுகளின் பட்டியலில் இடம் பெறவில்லை. ஈரான் வழங்கிய சுமார் ஐயாயிரம் கோடி ரூபா உதவி கிடைத்திராத பட்சத்த…
-
- 0 replies
- 622 views
-
-
பங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பில் தென்னாசிய நாடுகளுக்கு இடையில் புலனாய்வு தகவல்களை பரிமாறிக் கொள்வதன் முக்கியத்தும் குறித்து இலங்கை எதிர்வரும் சார்க் மாநாட்டின் போது வலியுறுத்தும் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹேன தெரிவித்துள்ளார். பயங்கரவாத்தை ஒழிப்பது தொடர்பில் சார்க் நாடுகளுக்கிடையில் தற்போதைய ஒத்துழைப்புகளை விடவும் அதிகமான ஒத்துழைப்புகள் அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதனை தவிர அதிகரித்து வரும் எரிபொருள் பிரச்சினையை சமாளிக்க பிராந்திய ரீதியில் மாற்று எரிபொருளின் பயன்பாட்டின் முக்கியத்துவம் தொடர்பிலும் சார்க் பிரதிநிதிகள் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளனர். அது மாத்திரமல்லாது, புவி வெப்பமடைதல், காலநிலை மாற்றங்கள், உலக உணவு பிரச்சி…
-
- 0 replies
- 523 views
-
-
சார்க் மாநாட்டில் கலந்துகொள்ளவரும் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு அந்தந்த நாடுகளின் பாதுகாப்புத் தரப்பினர் பாதுகாப்பு வழங்க அனுமதிக்கப்பட்டுள்ள போதும், சார்க் மாநாட்டுக்கான பாதுகாப்பில் அவர்கள் தலையிட அனுமதிக்கப்படமாட்டார்கள் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சார்க் தலைவர்களின் சொந்தப் பாதுகாப்புப் பிரிவினர் தமது பணிகளை முன்னெடுப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என நேற்றுக் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த மேல்மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிமல் மெதிவக்க கூறினார். வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் பாதுகாப்புப் பிரிவினர் தாம் பயன்படுத்தவிருக்கும் ஆயுதங்கள் குறித்து உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்து அனுமதியைப் பெற்ற பின்னரே தமது பணிகளை அவர்…
-
- 0 replies
- 511 views
-