ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143612 topics in this forum
-
வீரகேசரி நாளேடு 7/17/2008 10:12:35 PM - தமிழக மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படையினரின் தாக்குதல் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். சார்க் மாநாட்டின் போது இவ்விடயம் குறித்து இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கலந்துரையாடப்படும் என்று பிரதமர் மன்மோகன் சிங் தம்மிடம் உறுதியளித்துள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியஸ்தரும் சுகாதார அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கினை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. குழுவினர் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர…
-
- 2 replies
- 837 views
-
-
வீரகேசரி நாளேடு 7/17/2008 9:49:18 PM - அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் யுத்தத்திற்கு அன்றிலிருந்து இன்றுவரை நாம் ஆதரவு வழங்கி வருகின்றோம். எனினும், எம்மையே புலிகள் எனக் கூறும் அளவுக்கு அரசாங்கம் நன்றி கெட்ட தனமாக செயற்படுகின்றது. வேலை நிறுத்தம் செய்தமையினால் லால்காந்த எம்.பி. இன்று புலியாகி விட்டார் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார். மக்களின் ஆதரவை உரசிப் பார்க்கவே இரு மாகாண சபைத் தேர்தல்களை அரசாங்கம் நடத்துகின்றது என்றும் அவர் மேலும் கூறினார். அநுராதபுரத்தில் கடபனஹவில் நேற்று மாலை நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில், அரசு முன்னெடுக்கும் பயங்கரவாதிகளுக்கு …
-
- 1 reply
- 831 views
-
-
இலங்கை மைதானத்தில் நடக்கும் பகல்-இரவு ஆட்டங்கள்-பைரவி- இந்தியா - சீன மறைமுகப் போரின் மைதானமாக மாறியுள்ள இலங்கை தனது அத்தனை தேசிய சொத்துக்களையும் இரண்டு நாடுகளிடமும் அடகுவைத்துவிட்டு, அதற்கு வட்டி கேட்பதுபோல தான் போட்டு வைத்துள்ள இராணுவ நிகழ்ச்சி நிரலுக்கு ஆயுதங்களை கேட்டுப்பெற்றுக்கொள்வதில் முனைப்பாக உள்ளது. இந்த இரு பொருளாதார புலிகளின் சண்டைக்கு சாமரம் வீசுவதன் மூலம் இலங்கையில் புலிகளை நசுக்கி ஒழிப்பதற்குக காய்களை நகர்த்தலாம் என்ற பெரும் நம்பிக்கையுடன் சிங்கள அரசு செயற்பட்டு வருகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் அப்படி என்னதான் குடுமிப்பிடி சண்டை என்று சற்று ஆழமாக நோக்கினால் அது பல படிநிலைகளில் அனல் பறக்க நடைபெற்று வருவதை காணலாம். கடற…
-
- 0 replies
- 1.5k views
-
-
நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் - ஐரோப்பிய நீதிமன்றம் வெள்ளி, 18 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] நாடுகடத்தப்படும் ஈழத்தமிழர்கள், கட்டுநாயக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்படக்கூடும் என்று, ஐரோப்பிய நீதிமன்றம் எச்சரித்துள்ளது. கொழும்புக்கு நாடுகடத்தப்படும் பட்சத்தில், சிறீலங்கா படைகளாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் தான் துன்புறுத்தப்படக்கூடும் என அச்சம் வெளியிட்டு, கடந்த 1999ஆம் ஆண்டு பிரித்தானியாவில் அகதித் தஞ்சம் கோரிய ஈழத்தமிழர் ஒருவரால், சென்ற ஜுன் மாதம் 25ஆம் நாளன்று, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கான தீர்ப்பை இன்று வெளியி…
-
- 5 replies
- 1.2k views
-
-
கட்சத்தீவின் மீதான உரிமைகளை மீட்கும் நேரம் வந்து விட்டது என்று கூறியுள்ள முதல்வர் கருணாநிதி, சிறிலங்கக் கடற்படையினர் நடத்தும் துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர்கள் தொடர்ந்து பலியாகி வருவதைக் கண்டித்து எல்லா கடலோர நகரங்களிலும் கடலோர மாவட்டங்களின் தலைநகரங்களிலும் தி.மு.க. சார்பில் வருகிற 19 ஆம் தேதி ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அண்மையில் சிறிலங்கக் கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நாகப்பட்டிணத்தை சேர்ந்த மீனவர்கள் இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, சென்னையில் இன்று தமிழக முதல்வரும் தி.மு.க. தலை…
-
- 8 replies
- 2.8k views
-
-
ஆசிரியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவது மாணவர்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும். இதனை நன்கு உணர்ந்து ஆசிரியர்கள், செயற்பட வேண்டும் என உள்ளுராட்சி, மாகாணசபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார். கனெவள மகுள்கஸ்வௌ மகாவித்தியாலயத்தில் இருபத்தைந்து இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட கணனி அறை கட்டிட திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஆசிரியர்களுக்கும், பெற்றோர்க்குமிடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒவ்வொரு பெற்றோரும் தனது பிள்ளையின் கலவிக்காக மிகவும் கஸ்டப்படுகின்றனர். தனது பிள்ளையின் கல்விக்கு பெருமளவு பணத்தை மிகவம் கஸ்டத்திற்கு மத்தியில் செலவு செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாணவருக்கும் ஒழுக்கத்தை கற்…
-
- 1 reply
- 743 views
-
-
இலங்கையில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்த அமெரிக்கா காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமென அமெரிக்க பிரதிநிதிகள் சபையைச் சேர்ந்த மூன்று முக்கிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையில் ஸ்திரமான சமாதானத்தை நிலைநாட்ட முடியுமென அவர்கள் தெரிவித்துள்ளனர் அமெரிக்க அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச சமூகம் இது தொடர்பில் அதிக முனைப்பு காட்ட வேண்டும் எனச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையில் சிவில் மற்றும் ஊடக சுதந்திரத்தைப் பேணுவதற்கும் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கும் சர்வதேச சமூகம் அதிக கரிசனை எடுத்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப் படுகிறது. தமிழ்மக்கள் விடுதலைப் புலிகளும் தமிழீழ விடுதலைப்புலிகளும…
-
- 0 replies
- 749 views
-
-
திரு. பாலகுமார், திரு.நடேசன் அவர்கள் பொங்கு தமிழ் பற்றி ......
-
- 0 replies
- 936 views
-
-
திரு. ஜெயானந்தமூர்த்தி அவர்கள் லண்டன் பொங்குதமிழ் 2008ல்........
-
- 0 replies
- 738 views
-
-
இலங்கைக்கு விஜயம் செய்த பிரித்தானியாவின் ஆசிய ஆபிரிக்க பிராந்தியத்திற்கான பிரதி வெளியுறவு அமைச்சர் மிலொக் பிறவுண் வெளியிட்ட கருத்துக்களை ஜனாதிபதி செயலகம் தவறாக பயன்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளதாக பிரித்தானிய தூதரகம் குறிப்பிட்டுள்ளது. ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் அதிக முனைப்பு காட்ட வேண்டுமென மிலொக் பிறவுண் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளார் என தூதரகம் அறிவித்துள்ளது. எனினும், மனித உரிமைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பணிகள் காத்திரமானதெனவும், உலக நாடுகள் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும் எனவும் மிலொக் பிறவுண் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி செயலகம் தகவல் வெளியிட்டுள்ளமை தொடர்பில் பிரித்தானிய தூதர…
-
- 0 replies
- 1k views
-
-
ஆனையிறவை நோக்கிய நடவடிக்கை களநிலைமையின்படி மேற்கொள்ளப்படும்: யாழ். கட்டளைத் தளபதி [வியாழக்கிழமை, 17 யூலை 2008, 06:46 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] களநிலைமைகளை பொறுத்துத்தான் ஆனையிறவை நோக்கிய தமது அடுத்து நடவடிக்கை அமையும் என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தென்பகுதியிலிருந்து சென்று சிங்கள ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: ஆனையிறவை நோக்கிய எமது அடுத்த நடவடிக்கை களநிலைமைகளை கருத்திற்கொண்டே இடம்பெறும். கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் எமக்கு பின்னடைவுகளை தரவில்லை. எதிரிக்கு பாரிய இழப்ப…
-
- 13 replies
- 2.2k views
- 1 follower
-
-
‘சார்க்’ மாநாட்டுக்காக இலங்கை வருகைத்தரும் இந்திய பிரதமரின் பாதுகாப்புக்காக இந்திய கடற்படை மூன்று கப்பல்களை இலங்கையில் கடற்பரப்பில் நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு முன்னரங்க, பாதுகாப்பு ஏவுகனை அழிப்பு கப்பல்களும் இதில் அடங்குகின்றன. தமிழீழ விடுதலைப்புலிகளிடம் வான்படை, கடற்படை மற்றும் கடலுக்கடியிலான தாக்குதல் பிரிவு என்பன இருப்பதால் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக இந்த பாதுகாப்பு தரப்பு செய்திநிறுவனம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளது. இந்திய பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது, நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு விடயங்களை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம் கே நாராயணன் நேரடியாக கவனி;ப்பதாகவும் அந்த செய்தி நிறுவனம் குறிப…
-
- 11 replies
- 1.7k views
-
-
பாதுகாப்புச் செயலாளரும் மஹிந்தவின் சகோதரனுமான கோதபாயவை பாரளுமன்றிற்கு உள்வாங்க முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தேசியப் பட்டியல் மூலமாக கோதபயாவை பாரளுமன்றில் நியமிக்கவுள்ளதாக தெரியவருகின்றது. இதற்கிடையில் ஜே.வி.பியின் பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசிங்க பாரளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதன் காரணமாக ஏற்பட்டுள்ள அவ் வெற்றிடத்திற்கு மஹிந்தவின் சகோதரன் கோத்தபயாவை நியமிக்கும்படி ஹெல உறுமைய அமைச்சர் சம்பிக்கவும் தே.வி.மு.யின் விமல் வீரவன்சவும் நிதிபதியான தயாசிறி உட்பட்ட குழுவொன்று மஹிந்தவை சந்தித்து வேண்டுகோள் விடுத்துள்ளதாக அறியவருகின்றது. யுத்தம் தீர்மானமானதோரு வெற்றியை நோக்கி செல்வதாலும், யுத்தத்தை வெற்றியின் இலக்கை நோக்கி வழிநடத்திக…
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணைப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாக ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் தெரிவித்துள்ளார். தற்பொழுது ஐஸ்லாந்து சென்றிருக்கும் சுவீடனுக்கான இலங்கைத் தூதுவர் ரஞ்சித் ஜெயசூரியவை, ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோதே ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டிருக்கும் ஜஸ்லாந்து ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் பட்சத்தில் அனுசரணையாளர்களாகப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார…
-
- 1 reply
- 735 views
-
-
ஜப்பானிய புலமையாளர் சுசுமு ஒஹொனொ காலமானார் வியாழன், 17 ஜுலை 2008 [செய்தியாளர் மயூரன்] தமிழ் மொழில் இருந்து தான் ஜப்பான் மொழி உருப்பெற்றது என தனது ஆராச்சி மூலம் கருத்து தெரிவித்த ஜப்பானிய புலமையாளர் சுசுமு ஒஹொனொ கடந்த திங்கட்கிழமை தனது 89 வது வயதில் காலமானார். இவர் கடந்த 30 வருடகாலமாக தமிழுக்கும் ஜப்பான் மொழிக்கும் இடையேயான ஒற்றுமைகள் தொடர்பில் ஆராய்து நூல் ஒன்றை வெளியிட்டுள்ளர். இவ் நூலில் சுமார் இருமில்லியன் பிரதிகள் விற்பனையாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. இவர் 1919 ஆம் ஒகஸ்ட் மாதம் 23 ம் திகதி பிறந்தவர் என்பதுவும் தமிழ்புலமையாளர்களுடன் நெருங்கியதொடர்பு உடையவர் என்பது மட்டுமல்லாமல் தனது மாணவர்களை தமிழ்கற்பதற்கு ஊக்கிவிப்பவர் என்பதுவும் குறிப்பிடத்த…
-
- 0 replies
- 649 views
-
-
வவுனியாவில் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த பூந்தோட்டம் முகாமில் இன்று ஏற்பட்ட தீ அனர்த்தத்தில் 112 குடிசைகள் முற்றாக எரிந்து சாம்பராகியதனால் சுமார் 3,000 பேர் நிர்க்கதியாகியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 941 views
-
-
ஏறாவூர் ஈ.பி.டி.பி. முகாம் புதைகுழியில் உடலம் [வியாழக்கிழமை, 17 யூலை 2008, 03:59 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூரில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணைப் படைக்குழுவான ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் கடத்தப்பட்ட ஒருவரின் உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏறாவூரில் உள்ள ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தின் பின்பக்கமாகவுள்ள ஓரிடத்தில் இந்த உடலம் புதைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்களால் தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஈ.பி.டி.பியின் அலுவலக வளாகத்தில் உள்ள குறிப்பிட்ட பகுதிக்கு காவல்துறையினர் சென்றபோது அங்கே புதைக்கப்பட்ட ஒருவரின் தலைப்பகுதி புதைகுழிக்கு வெளியே தெரிந்துகொண்டிருந்ததால்…
-
- 5 replies
- 1.5k views
-
-
சார்க் உச்சி மாநாட்டு பாதுகாப்பு: தயார் நிலையில் இந்திய கரையோரத் தளங்கள்! Thursday, 17 July 2008 கொழும்பில் இடம்பெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்க (சார்க்) உச்சிமாநாட்டின் போது கொழும்புக்கு மூன்று போர்க் கப்பல்களை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பிற்காக அனுப்புவதற்கு புதுடில்லி திட்டமிடுகின்ற அதேவேளையில், இந்தியாவின் கரையோரப் பகுதி தளங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் இராமநாதபுரத்திலுள்ள படைத்தளங்கள் போன்றவை உச்சிமாநாட்டின்போது ஏதாவது அசம்பாவிதம் இடம்பெற்றால் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தயார்நிலையில் வைக்கப்பட்டிருக்கும் இந்தியப் பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர வட்டாரங்களை…
-
- 0 replies
- 488 views
-
-
இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளில் அனுசரணைப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாக ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் தெரிவித்துள்ளார். தற்பொழுது ஐஸ்லாந்து சென்றிருக்கும் சுவீடனுக்கான இலங்கைத் தூதுவர் ரஞ்சித் ஜெயசூரியவை, ஜனாதிபதி மாளிகையில் சந்தித்தபோதே ஐஸ்லாந்து குடியரசின் ஜனாதிபதி ஒலாஃவூ ரங்னர் கிரிம்ஸன் இவ்வாறு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடனான பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சாத்தியக் கூறுகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டிருக்கும் ஜஸ்லாந்து ஜனாதிபதி, விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் பட்சத்தில் அனுசரணையாளர்களாகப் பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ள…
-
- 0 replies
- 779 views
-
-
அவுஸ்திரேலியாவில் வர்த்தக கல்லூரி அதிபரான தமிழர் ஒருவர் அவுஸ்திரேலியப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மெல்போன் நகரில் தனியார் வர்த்தக கல்லூரி ஒன்றை நடாத்தி வரும் துளசிதரன் சந்திரராஜா (வயது 34) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவில் புலிகளுக்கு ஆயுதங்கள் சேகரித்தார்கள் என்ற வழக்கு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் அமெரிக்காவின் புலனாய்வுத் துறையான எப்.பி.ஐ. இதனால் வழங்கப்பட்ட தகவலை ஆதாரமாக வைத்தே சந்திரராஜா அவுஸ்திரேலியப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. http://www.tamilseythi.com/srilanka/tamil-...2008-07-17.html
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் எல்லைமீறிச் சென்றிருப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு சர்வதேசக் கண்காணிப்பாளர்கள் விரைவில் நியமிக்கப்படவேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தியிருக்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், கொழும்பிலுள்ள விடுதிகளில் தங்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறித்தும் கவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை இலங்கையில் நியமிக்கவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் சபையின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர், சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் முன்வைத்த யோசனைகளுக்கு எதிராக சில …
-
- 2 replies
- 887 views
-
-
கொழும்பில் நடைபெறவிருக்கும் 15வது சார்க் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புக்கு எந்தவிதமான குந்தகமும் ஏற்படுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்க இந்தியா விரும்பவில்லையெனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைக் கருத்தில்கொண்டு இந்திய மத்திய அரசாங்கம் மூன்று போர்க் கப்பல்களையும், இரண்டு முன்னணி ஏவுகணை எதிர்ப்புக் கலங்களையும் இலங்கைக்கு அனுப்பத் தீர்மானித்திருப்பதாக 'த டைம்ஸ் ஒவ் இந்தியா' செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதால் மன்மோகன் சிங்கின் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராணயன் நேரடியாகக் கையாண்டுவருவதாகவும், கொழும்பு செல்லும் இந்தியப் பிரதமரின் பாதுக…
-
- 0 replies
- 693 views
-
-
வெள்ளை வான் கடத்தல்களில் கருணாவுடன் மீண்டும் கூட்டுச்சேர்ந்த சுமன் [வியாழக்கிழமை, 17 யூலை 2008, 01:42 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகளில் வெள்ளை வான் கடத்தல் மற்றும் படுகொலைகளை மேற்கொண்டு வரும் குழுவுடன் வெளிநாட்டிலிருந்து சிறிலங்கா திரும்பிய துணைப்படையைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினரான சுமன் என்பவரும் இணைந்துள்ளதாக சிறிலங்காவின் புலனாய்வு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறிலங்காப் படைத்தரப்புடன் இணைந்து செயற்படும் துணைப்படையான கருணா குழுவில் சுமன் முன்னர் செயற்பட்டு வந்தார். இருப்பினும் நிதி மோசடி மற்றும் பெண்கள் தொடர்பு போன்ற பிரச்சினைகளால் பிள்ளையானால் எச்சரிக்கப்பட்டு அவரது குழுவிலிருந்து சுமன் நீக்கப்பட்டா…
-
- 0 replies
- 839 views
-
-
வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் முகாம் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும்இ 5 பேர் தீக் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு அகதி முகாம்களில் தங்கியிருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட அகதிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று காலை 9.30 அளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. மின்சார ஒழுக்கின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக வவுனியா பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். சுமார் 20 நிமிடங்களில் முழு அகதி முகாமும் எரிந்து சாம்பராகியதாகத் தெரிவிக்கப்படுகிறது. பொலிஸார்இ இராணுவத்தினர் மற்றும் வான்படையினர் இணைந்து தீயனைப்பு பணிகளை மேற்கொண்டதாகவும்இ எனினும் அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை எனவ…
-
- 0 replies
- 734 views
-
-
50 பேர் கொண்ட பாகிஸ்தான் குழு கொழும்பு வந்துள்ளதாக தகவல். 17.07.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பில் நடைபெறவுள்ள தெற்காசிய மக்கள் பேரவையின் (South Asian People’s Assembly) 2008ஆம் ஆண்டிற்கான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக 50 பேர் கொண்ட பாகிஸ்தான் குழுவினர் கொழும்பை சென்ற டைந்துள்ளனர். சார்க் மாநாட்டுக்கு ஒரு வாரம் முன்பாக நடைபெறவுள்ள இந்த மாநாடு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெறும். இதில் கலந்துகொள்வதற்காகவே பாகிஸ்தான் பிரதிநிதிகள் நேற்று கொழும்பை சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. www.sankathi.com
-
- 2 replies
- 1.2k views
-