Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீரகேசரி நாளேடு - இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண அதிகாரங்களை பகிர்ந்தளிக்க வேண்டியது அவசியமாகும். இலங்கையில் தற்போதைய நிலைவரம் கவலையளிப்பதாகவுள்ளது. அங்கு அமைதியற்ற சூழல் நிலவுவதனால் பொதுமக்கள் நிம்மதியின்றி சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இலங்கையில் ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லை. ஊடகங்கள் மீது அரசாங்கம் நெருக்குதல்களை கொடுப்பதனால் உண்மைச் சம்பவங்கள் வெளியே தெரிவதில்லை என்றும் அவர் மேலும் கூறினார். புதுடில்லிக்கு விஜயம் செய்யும் வழியில் நேற்று சென்னை விமான நிலையம் வந்த எதிர்க்கட்சித் தலைவர் அங்கு செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.இங்கு அவர் மேலும் கூறியதாவது: …

  2. மஹிந்தவின் லண்டன் விஜயத்தை ஒட்டி சர்வதேச மன்னிப்புச்சபை லண்டனில் உள்ள பொதுநலவாய அமைப்புக்களின் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக நேற்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது எனத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கை பிரஜைகள் , மனிதநேய ஆர்வலர்கள் மற்றும் பலவேறு தரப்பினர் உட்பட கணிசமான எண்ணிக்கையிலானோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றியிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் இடம் பெறும் மனித உரிமை மீறல்கள், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அச்சுறுத்தல்கள், ஆட்கடத்தல்கள் என்பனவை குறித்தும் அவற்றைக் கவனத்ததுக்குக் கொண்டு வரும் நோக்கிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர் என பி.பி.ஸி வானோலி சேவை தெரிவித்தது. …

    • 0 replies
    • 1.3k views
  3. நான்காம் கட்ட ஈழப்போரை எதிர்கொள்ள புதிதாக நான்கு படையணிகளை அமைத்துள்ள சிறிலங்கா இராணுவம் தற்போது ஐந்தாவது படையணியை உருவாக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 577 views
  4. மன்னாரில் சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளர் வெட்டிக்கொலை [செவ்வாய்க்கிழமை, 10 யூன் 2008, 06:02 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மன்னார் எமில் நகரில் சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளர் ஒருவர் மூன்று நாட்களுக்கு முன்னர் வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார். இராசு காந்தன் என்று அழைக்கப்படும் சுரேஸ் அல்லது காந்தன் என்பவரே கொல்லப்பட்டவர் ஆவார். சிறிலங்கா கடற்படைப் புலனாய்வாளராக செயற்பட்டு வந்த இவர், சுற்றிவளைப்புக்களின் போது காட்டிக்கொடுப்பது உள்ளிட்ட தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தார். அதிகளவிலான மக்கள் இவரால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதி மக்களால் இவர் வெட்டிக்கொல்லப்பட்டு எமில் நகர் குளத்துக்குள் போடப்பட்டுள்ளார் என தெரி…

    • 0 replies
    • 959 views
  5. வவுனியாவிலும் மும்முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 4 படையினர் பலி- 9 பேர் காயம் [செவ்வாய்க்கிழமை, 10 யூன் 2008, 05:56 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா பாலமோட்டையில் சிறிலங்காப் படையினர் நேற்று மும்முனைகளில் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது: பாலமோட்டைப் பகுதியில் இருந்து சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் நேற்று திங்கட்கிழமை காலை 6:00 தொடக்கம் பாரிய முன்நகர்வுகளை மும்முனைகளில் மேற்கொண்டனர். படையினரின் முன்நகர்வுகளை முறியடிக்கும் நடவடிக்கையினை விடு…

    • 0 replies
    • 651 views
  6. மன்னாரில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 571 views
  7. கிழக்கில் சட்டவிரோத ஆயுதக் குழுவின் (பிள்ளையான்) நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் அச்சம் - முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்! June 09,2008 கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் உயிரச்சத்துடன் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் இவ்வமைப்பிடமிருந்து உடனடியாக ஆயுதங்களை களையுமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எழுதியுள்ள அவசரக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. 120 க்கும் மேற்பட்ட முஸ்லிம் அமைப்புக்களின் கூட்டமைப்பான ஸ்ரீலங்கா முஸ்லிம்கவுன்சிலின் தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் எம்.டி.எம்.ரிஸ்வி ஆகியோர் கையெழுத்திட்டு ஜனாதிபதிக்கு எழுதியிருக்கும் கடிதத்திலேயே மேற்கண்ட கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது. …

  8. தம்புள்ள மற்றும் அநுராதபுரத்தில் மூன்று எலும்புக்கூடுகள் மீட்பு திங்கள், 09 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] தம்புள்ளப் பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது. மீ்ட்கப்பட்ட எலும்புக்கூடு ஆணினுடையயது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதேபோன்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் அநுராதபுரத்ததில் ஆணினதும் பெண்ணினதும் இரு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவை 30 அகவைக்கும் 40 அகவைக்கும் இடைப்பபட்டது என உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எலும்புக்கூடுகள் காணாமல் போனவர்களுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/?p=1018

  9. நெடுந்தீவு படையினரால் சுற்றிவளைப்பு: ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடும் தேடுதல் Monday, 09 June 2008 யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள தீவுகளில் ஒன்றான நெடுந்தீவில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்த சிறிலங்கா கடற்படையினர், இராணுவம் மற்றும் காவல் துறையினரின் ஆதரவுடன் அப்பகுதியில் கடுமையான தேடுதல் நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கை பிற்பகல் வரையில் தொடர்ந்தது. இந்தத் தேடுதல் நடவடிக்கைக்காக நூற்றுக்கணக்கான படையினர் நேற்றுக்காலை படகுகள் மூலம் கொண்டு செல்லப்பட்டு நெடுந்தீவில் இறக்கப்பட்டார்கள். நெடுந்தீவின் அனைத்துப் பகுதிகளும் சல்லடை போட்டுத் தேடப்பட்ட…

  10. சிறிலங்கா கடற்படைக்கு புதிய போர்க் கப்பல்கள்: குரோசிய அரசுடன் புதிய கூட்டு முயற்சி [திங்கட்கிழமை, 09 யூன் 2008, 10:24 மு.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்கா கடற்படைக்கு போர்க் கப்பல்களை உருவாக்கும் முயற்சியில் குரோசிய நாட்டுடன் இணைந்து சிறிலங்கா கடற்படை இறங்கியுள்ளதாக படைத்தரப்பு வட்டாரங்களில் இருந்து அறிய வருகின்றது. சிறிலங்காப் பிரதமரின் குரோசியப் பயணத்தினைத் தொடர்ந்து அங்கு சென்ற சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரன்னகொட அந்நாட்டு அதிகாரிகளுடன் இந்த வேலைத்திட்டம் தொடர்பான சாத்தியப்பாடுகள் குறித்து பேச்சு நடத்தியுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. பாக்கு நீரிணை பக்கமாகவும் வடக்கு - கிழக்குப் பகுதிகளை அண்டிய ஆழ்கடலிலும் அதிகிரித்துள்ள க…

    • 6 replies
    • 1.2k views
  11. மன்னார் வளைகுடாவில் இருகக் கூடிய எண்ணை வளத்தை பல்வேறு பிராந்திய வல்லாதிக்கச் சக்திகளுக்கு விலை பேசி விற்றுக் கொண்டிருக்கிறது சிறிலங்கா அரசு.இதில் வரும் பெரும் வருமானத்தை வைத்து தமீழீழ மக்களை அழிக்கும் யுத்த தளபாடங்களை வாங்கிக் குவித்து வருகிறது. சீனாவுக்கு ஹம்பந்தோட்டை துறைமுகத்தையும் வீரவில விமானத் தளத்தையும் தாரை வார்த்து சீனாவிடம் இருந்து ஆயுதக் கொள்வனவை நாடத்துகிறது.இந்தியாவுக்கு மன்னார் வளை குடாவில் எண்ணை வள ஆராச்சி செய்வதற்காக ஒரு துண்டுப் பகுதியை விற்று பில்லியன் டொலர்களை கடனாகப் பெற்றது.இந்த பணத்தைக் கொண்டே அது பாக்கிஸ்தானிடம் இருந்து ஆயுதங்களை அண்மையில் கொள்வனவு செய்தது.மன்னார் வளைகுடாவில் இன்னும் சில பகுதிகளை நோர்வே எண்ணை வள ஆராச்சி நிறுவனம் ஒன்றுக்கும் வளங…

  12. மன்னாரில் நான்கு முனை முன்நகர்வுகள் முறியடிப்பு: 20 படையினர் பலி. பல படையினர் காயம். [ திங்கட்கிழமை, 09 யூன் 2008, 02:11.31 AM GMT +05:30 ] [ புதினம் ] மன்னார் மாவட்டம் பெரியமடுப் பகுதியில் நான்கு முனைளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. இதில் 20-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பெரும் தொகையான படையினர் படுகாயமடைந்துள்ளனர். பெரியமடுப் பகுதி ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10:00 மணி தொடக்கம் சிறிலங்காப் படையினர் முன்நகர்வுகளை மேற்கொண்டனர். படையினரின் பின்தளங்களில் இருந்து ஆட்லெறி எறிகணை மற்றும் பல்குழல் வெடிகணைத் தாக்குதல்கள் நடத்த, டாங்கிப் படையினரின் உக்கிர தாக்குதலுக்கு …

    • 4 replies
    • 1.1k views
  13. கிளைமோர் தாக்குதலில் தப்பிய கட்டளையதிகாரி [09 - June - 2008] பதவிய சிங்கபுர படைப்பிரிவின் கட்டளையதிகாரி கிளைமோர்த் தாக்குதலிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பினார். பதவிய சிங்கபுர 224 ஆவது படைப்பிரிவின் கட்டளையதிகாரியை இலக்கு வைத்து சனிக்கிழமை நண்பகல் 12.35 மணியளவில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் கட்டளையதிகாரி மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தெரியவருகின்றது. 224 ஆவது படைப்பிரிவின் கட்டளையதிகாரி கேணல் சன்ன கொடித்துவக்கு பயணம் செய்த வாகனத்தை இலக்கு வைத்தே இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது thinakural.com

    • 0 replies
    • 1.6k views
  14. கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் கிட்டு நினைவாக நேற்று தேசிய கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 537 views
  15. மணலாறுப் பகுதியில் சிறிலங்காப் படையினரின் பெருமெடுப்பிலான முன்நகர்வுத் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர் தாக்குதலை தீவிரமாக நடத்திக்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 946 views
  16. இலங்கையில் இன வன்முறையைத் தூண்டிவிடும் முயற்சிகள் இடம்பெறுவதாகப் பல தரப்புகளும் குற்றங்களைச் சுமத்தி வருகின்றன. எனினும் யார் யாரைக் குற்றஞ் சுமத்துவது என்பது தொடர்பில் மக்கள் மத்தியில் இன்று திக்கற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கிழக்குத் தம்மால் கைப்பற்றப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருந்த நிலையில் சிங்கள மக்கள் அதனை நம்பினர். ஆனால் தமிழர்களைப் பொறுத்தவரையில் இன்னமும் அதனை நம்பவில்லை. இதற்குக் காரணம் ஒன்று தமிழ் மக்களில் பெரும்பாலானோர் அவர்கள் மாற்று இயக்க ஆதரவாளர்களாக இருந்தாலும், தமிழீழ விடுதலைப்புலிகளின் மீது அதீத நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றனர். இரண்டாவது அவர்களுக்குப் பழைய வரலாறுகள் ஓரளவுக்குத் தெரியும். அதன் காரணமாகச் சிங்களவர்களை எளிதில் நம்பமாட்டார்கள். ச…

    • 1 reply
    • 859 views
  17. மணலாறில் நான்கு முனை முன்நகர்வுகளுக்கு எதிராகப் புலிகள் எதிர்த் தாக்குதல்: 15 படையினர் பலி- 25 பேர் படுகாயம் [ திங்கட்கிழமை, 09 யூன் 2008, 02:13.09 AM GMT +05:30 ] மணலாறுப் பகுதியில் நான்கு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்டு வரும் முன்நகர்வுகளுக்கு எதிராகத் தமிழீழ விடுதலைப் புலிகள் தீவிர எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் 15 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 25-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். மணலாறில் இருந்து கொக்குத்தொடுவாய், மண்கிண்டிமலை, நித்தியகுளம் உள்ளிட்ட நான்கு முனைகளில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 6:00 மணி தொடக்கம் படையினர் பாரிய முன்நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். படையினருக்குப் பின்தளங்களில் இர…

    • 0 replies
    • 1.4k views
  18. தற்போது இடம்பெறுவது போர் அல்ல, மகிந்த ராஜபக்சவின் பலி பூசையே என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  19. முப்படைகளும் பாரிய போர்ப் பயிற்சி: வடபகுதியில் மற்றொரு தாக்குதலுருக்கான தயாரிப்பு? Monday, 09 June 2008 யாழ்ப்பாணக் குடாநாட்டில் வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தம்முடைய கடல் மற்றும் தரை ரோந்து நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருக்கும் சிறிலங்காவின் முப்படையினரும், பாரிய போர் ஒத்திகை ஒன்றையும் மேற்கொண்டிருப்பதாக குடாநாட்டிலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பலாலி அதிஉயர் பாதுகாப்பு வலயப் பகுதியிலேயே படையினரின் ஒத்திகை இடம்பெற்றதாகவும், இவை அனைத்தும் மற்றொரு பாரிய நடவடிக்கைக்கு சிறிலங்கா படையினர் தயாராகிவருவதை உறுதிப்படுத்துவதாக அமைத்திருக்கின்றது என யாழ்ப்பாண வட்டாரங்கள் தெரிவித்தன. பலாலித் தளத்திலிருந்து புறப்பட்ட சிறிலங்கா விமானப்…

    • 2 replies
    • 1.2k views
  20. ரணிலின் இந்தியப் பயணத்தின் பின்னணி என்ன? [திங்கட்கிழமை, 09 யூன் 2008, 11:07 மு.ப ஈழம்] [பூ.சிவமலர்] இந்தியாவுக்கு தற்போது சென்றுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அந்நாட்டு அரசின் சிறப்பு அழைப்பின் பேரிலேயே அங்கு சென்றுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியவருகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது: சிறிலங்காவின் தென்பகுதியில் அதிகரித்துள்ள தொடர்ச்சியான மனிதஉரிமை மீறல்கள் மற்றும் குண்டுவெடிப்புகள் ஆகியன, சிறிலங்கா தொடர்பில் மீண்டும் அனைத்துலக கவனத்தை திருப்பியுள்ளதுடன் அதன் கண்டனத்துக்கும் உள்ளாகியுள்ளது. அனைத்துலக சமூகத்தின் இந்த கண்டனம் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் தேர்தலில் வெளிப்பட்டும் இருக…

    • 2 replies
    • 958 views
  21. இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் ஐ,தே.கட்சி பிரசார செயலாளர் லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தாவது : நீண்டு கொண்டு செல்லும் யுத்தத்தினால் இலங்கையின் எதிர்காலம் அழித்தொழிக்கப்படுவதானால் உடனடியாக இந்த அரசு புலிகளுடன் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். புலிகளுடன் எமது அரசு போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கு முன்னர் அரசின் இராணுவ முகாம்கள் பல அழிக்கபட்டிருந்தன. ஆயினும் போர் நிறுத்தின் மூலம் மீண்டும் அவ்விராணுவ முகாம்களையும் இராணுவத்தையும் பலப்படுத்த ஐ.தே.க அரசால் முடிந்தது. எனினும் இன்று மறுபடியும் அம் முகாம்கள் அழிவதையும் அழிவை நோக்கிச் செல்லுதை அவதானிக்க முடிகிறது. இவ்வரசு ஜெனிவாவில் நடைபெற்ற ஆறுமாதகால சமாதான பேச்சு வார்த்தையின் பின் தான்தோன்றித…

    • 1 reply
    • 976 views
  22. பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு சமர்ப்பணம்

  23. எமன்னார் மருத்துவமனை பெண் பணியாளர்கள் தங்கும் அறைக்குள் உறக்கத்தில் இருந்த பெண்களிடம் முறைகேடாக நடக்கும் நோக்கில் அதிகாலையில் அத்துமீறி புகுந்த படையினரின் செயற்பாட்டைக் கண்டித்து மன்னார் மருத்துவமனையில் இன்று ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 633 views
  24. அம்பாறையில் விறகு வெட்டச்சென்றவர்களை ஓடவிட்டு படையினர் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி- ஒருவர் காயம் [திங்கட்கிழமை, 09 யூன் 2008, 03:53 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாறை எல்லைக்கிராமமான ஊத்துமடுவின் காட்டுப்பகுதியில் விறகு வெட்டச் சென்றவர்களை ஓட விட்டு சிறிலங்காப் படையினர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். 10 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: அம்பாறை எல்லைக்கிராமங்களான மங்கிக்காடு மற்றும் நாவற்குடாவைச் சேர்ந்த 12 பேர் நேற்று முன்நாள் சனிக்கிழமை ஊத்துமடு காட்டுப் பகுதிக்கு உழவூர்தியில் விறகு வெட்டச் சென்றுள்ளனர். இவர்களில் எட்டு பேர் வி…

    • 0 replies
    • 602 views
  25. மன்னார் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறிலங்காப் படையினருக்கும் இடையில் நடைபெறும் மோதலில் காயமடைந்த இரண்டு படையினர் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த படையினர் வைத்தியசாலைக்கு தொடர்ந்து அழைத்துவரப்படுவதால் மன்னார் பொது வைத்தியசாலையின் வெளிவளாகத்தில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி சங்கதி இணையம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.