ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143385 topics in this forum
-
வீரகேசரி இணையம் - வவுனியாவில் இன்று காலை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் சம்பவத்தையடுத்துஇ வவுனியா மன்னார் பகுதிகளில் இருந்து கொழும்பு உட்பட நாட்டின் தென்பகுதிகளுக்குச் செல்லும் தமிழ்ப் பயணிகள் மதவாச்சி சோதனைச்சாவடியில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாகப் பயணிகள் பலரும் தெரிவித்தனர். மதவாச்சி சோதனைச்சாவடி ஊடாக வீதி வழியாகவோஇ ரயில் மூலமாகவோ தென்பகுதிகளுக்குப் பிரயாணம் செய்வதற்கு தமிழ்ப்பயணிகளுக்கு பொலிசார் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் பயணிகள் பலரும் தெரிவித்தனர். இவ்வாறு பிரயாண அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து பெரும் எண்ணிக்கையிலான பயணிகள் தமது பிரயாணத்தைத் தொடர முடியாமல் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
-
- 0 replies
- 888 views
-
-
அண்மைக்காலமாக இலங்கை மீதான மேற்குலகத்தின் அழுத்தங்கள் படிப்படியாக அதிகரித்து வருவது கவனிக்கத்தக்கது. இந்த அழுத்தங்களுக்கு மத்தியில் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பேச்சுக்களும் மெல்ல மெல்ல வலுப்பெற்று வருகின்றன. உலகின் இந்த மாற்றத்திற்கு இந்துமா கடலில் ஏற்பட்டுவரும் முனைவாக்கம் ஒரு முக்கிய காரணமாகும். தென் ஆசியாவை பொறுத்தவரையில் அங்கு அமைந்துள்ள எட்டு நாடுகள் மீதான பார்வைகள் தற்போது அதிகம். ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பூட்டான், பங்களாதேஷ், மாலைதீவு, நேபாளம் என்பன மீதான மேற்குலகத்தின் கவனம் தற்போது அதிகரித்து செல்கின்றது. இந்த வலையத்திற்கு வடக்கு மற்றும் மேற்காக சீனா அமைந்துள்ளது, மத்திய கிழக்கு, பல்கன் நாடுகள், ஐரோப்பிய நாடுகள் இதற்கு மேற்காக அமைந்த…
-
- 9 replies
- 2.7k views
-
-
சிறிலங்காவிற்கான பாதுகாப்புப் பிரிவை மூடியது பிரித்தானியா [திங்கட்கிழமை, 16 யூன் 2008, 07:19 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவிற்கான பிரித்தானியா தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவை மூடுவதற்கு பிரித்தானியா அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடாபில் தூதரகத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளதாவது: பிரித்தானியா தூதரகத்தின் பாதுகாப்புப் பிரிவு ஆலோசகரை மீளப்பெறுவதற்கு பிரித்தானியா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எனினும் சிறிலங்காவுடனான பாதுகாப்பு உறவுகளை பிரித்தானியா பேணிவரும். பாதுகாப்புப் பிரிவு அற்ற நிலையில் இந்த உறவுகள் பேணப்படும். உலகளாவிய ரீதியில் கவனமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறையின் செலவீ…
-
- 2 replies
- 1.5k views
-
-
படைத்தரப்பில் 749 பேர் ஹெய்டிக்கு இன்று பயணம் ஐக்கிய நாடுகளின் சமாதானப் படையினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக இலங்கைப் படையினர் 749 பேர் இன்று ஹெய்ட்டிக்குச் செல்லவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. அங்கு செல்லவுள்ள படையினரில் 52 அதிகாரிகள் தரத்தைச் சேர்ந்தவர்களும் 697 ஏனைய தரங்களைச் சேர்ந்தவர்களும் அடங்குகின்றனர் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்துள்ளார். இவர்கள் 6 மாதம் வரை ஹெய்ட்டியில் ஐக்கிய நாடுகளின் சமாதானப்படையினருடன் இணைந்து பணியாற்றவுள்ளனர் என்று கூறப்பட்டது. குக்குலைக்களையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் சமாதானப் படை முகாமில் பயிற்சிபெற்ற இப்படையினர் தமது பயிற்சிகளை நிறைவு செய்து நேற்று வெளியேறியுள்ளனர். இவர்கள் ஹெய்ட்டியைச்…
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கைத் தமிழருக்காக போரட 10 ஆயிரம் சான்றோர்களை ஒருங்கிணைத்து அரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்ச்சியோன்றை விரைவில் நடத்தவுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனா டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்ப்படைப்பாளிகள் பேரியக்கம் என்ற அமைப்பொன்றை ராமதாஸ் ஏற்படுத்தியுள்ளார். இதன் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்ற போது அதில் கலந்துகொண்ட உரையாற்றுகையிலே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது : எனது கட்சியை வளாப்பதற்காக இந்த இயக்கத்தை ஆரம்பிக்கவில்லை. தமிழை வளர்க்க, தமிழனை வளர்க்க பேரியகம் தேவை என்பதால் தொடங்கியுள்ளேன். இலங்கைத் தமிழர்கள் விடுதலைக்காக எந்தளவுக்கு நாம் பாடுபடுகின்றோம் என்பதை ஒவ்வொருவரும் எண்ணிப்பார்க்க வேண்டும். இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல இங்கிருந்து …
-
- 1 reply
- 1.8k views
-
-
மணலாற்றில் ஊர்காவல் படைச்சிப்பாய் சுட்டுக்கொலை மணலாறு ஜனகபுரப் பகுதியில் இனம்தெரியாதோரால் சிறீலங்கா ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. -பதிவு
-
- 1 reply
- 881 views
-
-
புலிகளின் குரலின் செய்மதி ஒலிப்பினை நிறுத்த சிறிலங்கா அரசு முயற்சி [திங்கட்கிழமை, 16 யூன் 2008, 07:39 மு.ப ஈழம்] [பி.கெளரி] சேர்பிய நாட்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கும் அனைத்துலக நாடுகளுக்கும் ஒலிபரப்புச் செய்யப்படும் புலிகளின் குரலின் ஒலிபரப்புச் சேவையினை நிறுத்தும் முயற்சிகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தி: ஜூன் மாதம் 1 ஆம் நாள் புலிகளின் குரலின் வானொலி சேவை தனது ஒலிபரப்புச் சேவையை சேர்பிய நாட்டில் இருந்து ஆரம்பித்துள்ளது. இதற்குரிய அனுமதியை சேர்பிய அரசாங்கம் வழங்கியிருந்தது. இந்த ஒலிபரப்புச் சேவை ஐரோப்பா, வட ஆபிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளுக்கு சேர்பியாவின் செய்மதி ஊடாக மேற்கொள்ளப்பட்டிர…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழர்கள் தமிழீழத்தை எப்போதோ பெற்று விட்டார்கள். அந்த நாட்டை அங்கீகரிக்க வேண்டிய பொறுப்பும் தேவையும் சர்வதேச சமூகத்திற்கு உள்ளது. இதனைச் செய்ய வேணடும் என்பதை வலியுறுத்தும் வேண்டுகோளை விடுப்பதற்கான ஒன்றுகூடலே இந்த 'பொங்கு தமிழ்'. டென்மார்க் ஒருஸ் நகரில் நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போது த.தே.கூட்டணி எம்.பியான ஜெயானந்த மூர்த்தி இதனைத் தெரிவித்தார். மேலும் : ஈழத்தமிழர்களாகிய நாம் பரந்த மொழி, சிறந்த நிர்வாகம், சிறந்த படைபலம் என அனைத்தையும் கொண்டுள்ள தேசிய இனமாக இருக்கிறோம். இவற்றையெலலாம் முன்வைத்து எங்களுடைய நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சர்வதேசத்திடம் முன்வைக்கின்றோம். அன்றி வேறு எதனையும் நாம் கேட்கவில்லை. எங்களிடம் பலம் …
-
- 0 replies
- 691 views
-
-
பாதுகாப்புத்துறைப் பேச்சாளாரும் அமைச்சருமான கேஹலிய ரம்புக்வெலவின் மகன் கொழும்பு ரோயல் கல்லூரியில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் மற்றும் கண்ணாடிகளை உடைத்த சம்பவம் என்பவை தொடர்பில் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளார். எனினும் இந்தக் குற்றத்தை கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொள்ளும் வகையில் அமைச்சர் கேஹலிய ரம்புக்வெல பாடசாலை அதிபரை மிரட்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த குற்றச்சாட்டைக் கல்லூரியின் அதிபர் விலக்கிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கைவிரல் அடையாளங்களின் அடிப்படையில் இந்தக் குற்றங்களுக்காக அமைச்சர் கேஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித்திற்கும் ஏனைய நான்கு மாணவர்களுக்கும் தண்டனை வழங்க முடிவெடுக்கப்பட்டது. ஏனைய மாணவர்கள் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்…
-
- 4 replies
- 2k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கல்லடிப் பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 சிறிலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 634 views
-
-
“எந்தவொரு தாக்கத்திற்கும் சமனும் எதிருமான மறுதாக்கம் உண்டு” என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. வன்னியில் ஆழஊடுருவும் படையினரால் நடத்தப்படும் கிளைமோர் தாக்குதல்கள் மற்றும் விமானத் தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படும் போதெல்லாம் தென்னிலங்கையில் குண்டு வெடிப்புகள் இடம்பெறுவது வழக்கமாகி விட்டது. வன்னியில் புலிகளின் இலக்குகளை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று உண்மைக்கு மாறாகப் பெருமை பேசிக்கொண்டிருக்க மறுபுறத்தே தலைநகரின் பாதுகாப்பு ஆட்டங்காணத் தொடங்கியிருக்கிறது. விபரம்: http://www.swissmurasam.info/
-
- 0 replies
- 1.2k views
-
-
தகவல்: மணிவாசகன் மூலம்: http://www.frictiontv.com/ftv_debate.php?debate_id=3359 நன்றி!
-
- 2 replies
- 3.3k views
-
-
மட்டக்களப்பு கல்லடியில் இரு காவல்துறையினர் சுட்டுக் கொலை. முச்சக்கர வண்டியில் இவர்கள் சென்றுகொண்டிருந்தபோதே இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றதாகத் தெரியவருகிறது. இவர்கள் கைவசமிருந்த ஆயுதங்களும் களவாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. Two policemen shot in Kalladi Two policemen were shot dead in Kalladi, Batticaloa this evening. They were traveling in a three wheeler at the time of the incident. Their weapons were also stolen. ஆதாரம் Daily mirror
-
- 0 replies
- 788 views
-
-
புதுக்குடியிருப்பில் வான் குண்டுத்தாக்குதல்: 4 பேர் பலி- 10 பேர் காயம் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 03:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் வானூர்திகள் இன்று நடத்திய மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதலில் 4 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். [2 ஆம் இணைப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்வு] புதுக்குடியிருப்பு நகர மையத்தில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள், புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி உள்ளடங்கலான பகுதிகள் மீது சிறிலங்கா வான்படையின் கிபீர் ரக வானூர்திகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9:50 மணியளவில் குண்டுத்தாக்குதலை நடத்தின…
-
- 0 replies
- 636 views
-
-
சிறிலங்கா கடற்படையின் கடற்கலங்கள் என்ன வடிவில் உலா வந்தாலும் எமது கடற்கரும்புலிகள் உடைப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் துணைத்தளபதி விநாயகம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 909 views
-
-
இத்தாலி பொங்கு தமிழ் நிகழ்வினை குழப்ப சிறிலங்கா தூதரகம் முயற்சி [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 08:00 பி.ப ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] இத்தாலியில் நடைபெறும் பொங்கு தமிழ் நிகழ்வினை குழப்பும் முயற்சியில் அந்நாட்டில் உள்ள சிறிலங்காத் தூதரகம் ஈடுபட்டுள்ளது. இத்தாலி மிலானோ நகரில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் தொடங்கிய இந்நிகழ்வினை குழப்பும் முயற்சியிலேயே சிறிலங்கா தூதரகத்துடன் இணைந்து அங்கு வாழும் சிங்களவர்களும் ஈடுபட்டுள்ளனர். முறைப்படி அனுமதி பெற்று நடத்தப்படும் இந்நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடியினை இறக்கச் செய்யுமாறு இத்தாலிய காவல்துறையினரிடம் சிறிலங்கா தூதரகத்தினரும், சிங்களவர்களும் முறையிட்டுள்ளனர். அவர்களின் முறைப்பாட்டினை பொங்கு தமி…
-
- 0 replies
- 929 views
-
-
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நேற்று அனைத்துப் பிரதேசங்களில் இருந்தும் தமிழர்கள் அணிதிரண்ட பொங்கு தமிழ் நிகழ்வு பேரெழுச்சியுடன் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 776 views
-
-
-
சிறீலங்கா படையின் வான்வழித் தாக்குதலில் 2 பொதுமக்கள் பலி: 5 பேர் காயம் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான யுத்த விமானங்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணியளவில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் குடியிருப்பு மீது கண்மூடித்தனமாக மேற்கொள்ளப்பட்ட வான்வழித் தாக்குதலில் இருபொதுமக்கள் கொல்லப்பட்டும் நான்கு பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. -பதிவு
-
- 4 replies
- 1.1k views
-
-
குமாரபுரம் பாடசாலை மீது சிறிலங்கா வான் படை குண்டுத்தாக்குதல். மாணவர்கள் தெய்வாதினமாக உயிர் தப்பினர் SLAF fighter jets bomb preschool in Kumarapuram [TamilNet, Sunday, 15 June 2008, 05:48 GMT] Two Sri Lanka Air Force (SLAF) Kfir fighter jets, in four sorties, bombed the Kaaththaan preschool area in Kumarapuram, Paranthan in Ki’linochchi Saturday around 1:10 p.m when the school children, teachers and parents were gathered for the school’s sports meet to begin, sources in Ki’linochchi said. 35 children, 2 teachers and the parents narrowly escaped death in the bombing which caused damage to the school building and ten houses, the sources added. The children, teach…
-
- 0 replies
- 919 views
-
-
யாழை நோக்கி புலிகள் பாரிய நடவடிக்கை: புலனாய்வுத் தகவலால் உயர் விழிப்பு நிலையில் படையினர் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூன் 2008, 09:21 மு.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் நோக்குடன் எதிர்வரும் 19 ஆம் நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய படை நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக சிறிலங்கா புலனாய்வுத்துறையினருக்கு கிடைத்துள்ள தகவலை அடுத்து குடாநாட்டில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படைகள் முழுநேர உயர் விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் கல்முனை கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்குச் சென்ற குடாநாட்டு மீனவர்களிடம் விடுதலைப் புலிகள் இத்தகவலை தெரிவித்து, இழப்புக்களை தவிர்த்துக்கொள்ளும் வகையில் குடாநாட்டின் க…
-
- 1 reply
- 1.5k views
-
-
அரசாங்கத் திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்களின் எரிபொருள் செலவிற்காக இந்த வருடம் 1163 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதில் பாதுகாப்பு படையினரின் எரிபொருள் செலவீனங்களுக்காக 750 கோடி ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரயில் சேவைக்காக 270 கோடி ரூபாவும், எஞ்சிய 150 கோடி ரூபாக அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களின் எரிபொருள் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. அரசாங்க அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் சபைகள் என்பவற்றினால் சுமார் 10,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாக நிதியமைச்சின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 904 views
-
-
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐ.தே.கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல்களில் அரசாங்கத்துக்கு எதிரான பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளதாக தெரியவருகிறது. நாட்டின் சமகால அரசியல் போக்கில் ஐக்கிய தேசியக் கட்சித்தலைவரால் தனித்து நின்று போராட்டங்களை முன்னெடுக்க முடியாத நிலையிருப்பதாகச் சுட்டிக்காட்டும் அரசியல் தரப்புகள், அதன்காரணமாக அவர் சந்திரிகாவுடனும், மங்கள சமரவீரவுடனும் இணைந்து புதிய கூட்டணியை அமைக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கின்றன. அதேவேளை, மாகாண சபைத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிரசாரங்களில் ஈடுபடுவார் எனவும், அவரது வருகை ஐக்கிய தேசியக் கட்சிக்கு பெரும் பலமாக அ…
-
- 0 replies
- 802 views
-
-
வடமத்திய மற்றும் சபரகமுவ மாகாணங்களுக்கு தேர்தலை நடத்த 40 கோடி ரூபா செலவாகும் என தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து கொடுப்பனவுகள், கடமையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கான ஊதியம், எரிபொருள் கொடுப்பனவு உட்பட அனைத்து செலவினங்களுக்காகவும் இந்த பணம் செலவிடப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. கடந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் 20 கோடி ரூபா செலவானதுடன் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி சபை தேர்தலுக்கு 6 கோடி ரூபா செலவானதாகவும் தேர்தல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதே வேளை வெளிநாட்டு வங்கிகளிடமிருந்து இலங்கை 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெற்றுள்ளது இதற்கிடையில், இலங்கையின் வெளிநாட்டுக் கடன்கள் அதிகரித்துச் செல்கின்றமை தொடர்பில் தாம் கவனம் செலுத்த…
-
- 0 replies
- 681 views
-
-
தொடக்கத்தில் மடு மீதும் பின்னர் மன்னாரில் அடம்பன் பிரதேசத்தின் மீதும் இருந்த படையினரின் தீவிர கவனம் இப்போது மணலாறு போர் அரங்கை நோக்கித் திரும்பியிருக்கிறது. மணலாறு போர் அரங்கில் படைத்தரப்பு தமது உச்சகட்ட படைவலுவைப் பயன்படுத்தி முன்னேளறும் நடவக்ககைளை ஆரம்பிரத்ததிருக்கிறது. இதையடுத்து 'மணலாறு' 'மரணஆறு' ஆக மாறிவருகிறது. கடந்த வாரம் சிங்கள நாளிதழான தினமினவுக்கு அளித்த பேட்டியொன்றில் பிரபாகரன் ஒளிந்திருக்கும் முல்லைத்தீவை படையினர் நான்கு முனைகளில் நெருங்கி வருகின்றனர். இன்னும் 21 கி.மீ. தூரத்துக்கு முன்னெறிச் சென்றால் படையினர் இறுதி இலக்கை அடைந்துவடுவர். அத்;துடன் பதுங்குகுழியில் ஒளிந்திருக்கும் பிரபாகரனை படையினர் பிடித்து விடவார்;' என்று சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்…
-
- 2 replies
- 2.2k views
-