Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்பு சென்ற இந்திய உயர்மட்டக்குழு மகிந்த அரசுக்கு பாரிய இராஜதந்திர அழுத்தம் [சனிக்கிழமை, 21 யூன் 2008, 08:47 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவுக்கு திடீர் பயணத்தினை மேற்கொண்ட இந்தியாவின் சிறப்பு அதிகாரிகள் குழு, மகிந்த ராஜபக்ச அரசு மேற்கொண்டு வரும் அரசியல் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பில் பாரிய இராஜதந்திர அழுத்தத்தினைக் கொடுத்திருப்பதாக தெரியவருகின்றது. முன்னறிவிப்பு ஏதும் இன்றி இரண்டு நாள் பயணமாக திடீரென கொழும்பு சென்று இறங்கிய இக்குழுவினர், சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் அரசாங்கத்தின் முக்கிய உறுப்பினர்களை சந்தித்துப் பேசினர். இம்முறை கொழும்பில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வருவதாக இரு…

  2. வீரகேசரி இணையம் 6/21/2008 4:51:35 PM - கொழும்பில் நடைபெறவுள்ள "சார்க்' மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வருகை தரவுள்ள இந்தியப் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு மக்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மேலக மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன், இலங்கையில் உள்ள இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத்திடம் கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

  3. இணைந்த வடக்கு - கிழக்கு ஈழத்தமிழர்களின் "பிராந்தியம்" என்று தாம் ஏற்றுக்கொள்வதாக சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு சென்றுள்ள சிறப்புத் தூதுவர் இந்தியத் தூதுக்குழு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  4. வீரகேசரி இணையம் யாழ். குடாநாட்டில் அரிசியின் விலை நாளுக்கு நாள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி அதிகரித்துச் செல்கின்றது. தற்போது ஒரு கிலோ அரிசியின் விலை நூற்றி முப்பது ரூபாவினைத் தாண்டியுள்ளது. ஆயினும், அரசினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அரிசிக்கான நியம விலை நடைமுறை பற்றி எவருமே கண்டுகொள்வதில்லையென நுகர்வோர் நலன்புரி அமைப்புக்கள் கவலை வெளியிட்டுள்ளன. குடாநாட்டில் விலைக் கட்டுப்பாட்டுத் திணைக்கள அதிகாரிகள் எவருமே கடமையில் இல்லையெனவும் அவை கேள்வி எழுப்புகின்றன. குடாநாட்டின் உள்ளூர் உற்பத்தி அரிசி கையிருப்புக்கள் தீர்ந்து வருகின்ற நிலையில் அதன் விலையும் அதிகரித்துச் செல்லத் தொடங்கியுள்ளது. இதனால், கப்பல் மூலமாக இறக்குமதி செய்யப்படும் அரிசியே யாழில் நிவாரணக் கொடுப்பனவுகள் உள்ள…

  5. தவறுதலான வெடிவிபத்தில் பிள்ளையான் குழு ஆயுததாரி காயம் சனி, 21 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் மட்டக்களப்பு கரடியனாறு பிள்ளையான் ஆயுதக்குழுவின் முகாமில் இடம்பெற்ற வெடிவிபத்தில் ஆயுததாரி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்தவர் ஆயுததாரி தமிழ்வாணன் (அகவை 19) எனத் தெரியவருகிறது. இவர் தற்பொழுது மட்டக்களப்பு ஆசிரியர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/?p=1352

  6. திரைப்படக் கூட்டுத்தாபன பணிப்பாளர் சபையைச் சேர்ந்த தேவதாசன் கைது கொழும்பில் இடம் பெற்ற தாக்க்குதல்களுக்கு உடந்தையாக இருந்தார் என்ற பேரில் இவர் கைது செய்யப்பட்டார். கொட்டாஞ்சேனை பொதுச் சந்தையில் கடை ஒன்று இருப்பதாகவும், அங்கிருந்தே இவர் தற்கொலை குண்டுதாரிகளுக்கு அடைக்கலம் கொடுத்தார் எனவும் defence.lk இணையத்தளம் தெரிவித்துள்ளது. ஆதாரம் வீரகேசரி இணையத்தளம் Major LTTE operative arrested in Colombo Police have arrested an LTTE operative who posed himself as a film director, and assisted numerous terrorist activities in Colombo. A special police team arrested this person hailing from Kilinochchi, based on information extracted from another LTTE activist arrested …

  7. மன்னாரில் கடந்த 2 நாட்களில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 492 views
  8. நோயாளர் மருத்துவ வசதிகளை மேம்படுத்தி தருமாறு கிளிநொச்சி மருத்துவ அதிகாரிகள் அவசர வேண்டுகோள் [சனிக்கிழமை, 21 யூன் 2008, 03:39 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] கிளிநொச்சி மருத்துவமனையின் மருத்துவ வசதிகளை மேம்படுத்தித் தருமாறு கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் அனைத்து மருத்துவ அதிகாரிகள் அவசர வேண்டுகோளினை விடுத்துள்ளனர். இது தொடர்பில் கிளிநொச்சி மருத்துவ அதிகாரிகள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனை மருத்துவர்களாகிய நாம், தற்போது எமது மருத்துவமனையில் நிகழும் நெருக்கடி நிலை குறித்து மனிதாபிமான அடிப்படையிலான இந்த அவசர வேண்டுகோளினைச் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் முன்வைக்கிறோம். பின்னணி …

    • 0 replies
    • 558 views
  9. லண்டனில் இலங்கை தூதரக கணக்காளரிடம் புதிய முறையில் கொள்ளை [21 - June - 2008] [Font Size - A - A - A] லண்டன் ஸ்ரீலங்கா உயர் ஸ்தானிகர் அலுவலகத்தைச் சேர்ந்த கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா வங்கியிலிருந்து பணம் எடுத்துக்கொண்டு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இடைவழியில் வைத்து அவரை ஒருசில நபர்கள் வழிமறித்து அவரிடம் அந்தச் சந்தர்ப்பத்தில் பறித்துக்கொள்ளக்கூடியதாக இருந்த சுமார் நாலாயிரம் பவுண்ஸ் தொகையைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கடந்த 17 ஆம் திகதி பட்டப்பகலில் நடந்துள்ளது. இதுபற்றி ஸ்தானிகர் அலுவலக கணக்காளர் ரஞ்ஜித் பெரேரா அலுவலகத்துக்கு அறிவித்திருக்கும் தகவல்களுக்கேற்ப அவர் தினமும் லண்டன் உயர் ஸ்தானிகர் அலுவலகத்திலிருந்து சும…

  10. HERE IS A MUST READ PASS IT ON......... Dear SINHALESE: I understand that you are upset by us. Indeed, it appears that you are quite upset, even angry. Today, it is the 'Barbarism of LTTE terrorism' yesterday it was the Federal party, before that it was the 'favouritism of the British'. It appears that Tamil, who could achieve equality and who, therefore, could live, upset you. Indeed, every few years you seem to become upset by us. Your were upset in 1956, 1958, 1961 and 1977 and went on acts of arson, rape, pillage, murder and plain barbarity and we were scornfully asked to go to the federal party for help Of course, dear…

  11. இந்திய எல்லைக்குள் 28 சிங்கள மீனவர்கள் கைது சனிக்கிழமை, ஜூன் 21, 2008 தூத்துக்குடி: இந்திய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி, அத்துமீறி நுழைந்த 28 இலங்கை மீனவர்களை இந்திய கடலோர காவல் படை கைது செய்த்து. இந்திய கடலோர காவல் படை கப்பல் சாகர் வழக்கம் போல் ரோந்து பணியை மேற்கொண்டிருந்தது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து தென்கிழக்கு திசையில் 65 கடல் மைல் தொலைவில் சில படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தன. உடனே அவற்றின் அருகில் சென்று காவல் படையினர் விசாரிக்க முயன்றனர். அப்போது அவை இலங்கையைச் சேர்ந்த சிங்கள மீனவர்கள் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த இடம் இந்திய கடல் எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் படகுகளைச் சு…

  12. இலங்கை பிரச்சினை தொடர்பில் இணைந்து செயற்பட்ட பா.ம.க.வின் முறிவால் தொல்.திருமாவளவன் அதிர்ச்சி வீரகேசரி நாளேடு 6/21/2008 11:33:06 AM - இலங்கைப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகளில் பா.ம.க.வுடன் இணைந்து செயல்பட்டு வந்த விடுதலைச் சிறுத்தைகளுக்கு தி.மு.க.வின் முடிவு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஜூன் 17ஆம் திகதி நடைபெற்ற கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தில் பாமகவுடனான உறவை முறித்துக் கொள்வதாக திமுக அறிவித்தது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தமிழகத்தில் உள்ள இடதுசாரி கட்சித் தலைவர்களை கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது, பா.ம.க.வை கூட்டணியில் மீண்டும் இணைக்க இடதுசாரி கட்சிகளுடன் இணைந்து…

  13. எம்மால் ஈழத்தமிழர்களுக்கு விடுதலையளிக்க முடியும் - முடியாதென்று எதுவுமேயில்லை என்கிறார் வைகோ வீரகேசரி இணையம் 6/21/2008 11:07:07 AM - நம்மால் ஈழத்தமிழர்களை விடுதலை அடையச் செய்ய முடியும். கச்சத்தீவை மீட்க முடியும். தமிழக மீவர்களுக்கு எதி ரான நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த முடியும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். ம.தி.மு.க.வின் சென்னை மண்டல மாநாடு சென்னை தீவுத்திடலில் கடந்த புதன்கிழமையன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இங்கே பெரியார், அண்ணாவை நாங்கள் முன்னிறுத்தி இருக்கிறோம். படங்களில் அல்ல, மின் விளக்குகளில் அல்ல. அவர்களின் கொள்கைகளில் முன்னிறுத்தி இர…

  14. போராட்டம், பயங்கரவாத எனும் போர்வையில் தமிழ் மக்கள் அடக்கபட்டு, அவர்களது உரிiமைகள் ஒடுக்கப்படுவதை இனிமேலும் அனுமதிக்க முடியாது. இழந்த உரிiமைகளைப் பெற்று புதிய அரசியல் பாதையில் நாம் செல்ல வேண்டும்." இவ்வாறு த.ம.வி.பு. அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதியும், ஜனாதிபதியின் இணைப்பாளருமான இனியபாரதி சூளுரைத்துள்ளார்;. மேலும், நாம் போராட்டத்திற்கு எதிரானவர்கள் அல்லர். தமிழீழம் கிடைத்தால் நாமும் சேர்ந்து ஆளுவோம். எனினும், தமிழர்களின் போரட்டம் பயங்கரவாதம் எனச் சித்தரிக்கபட்டு, அதைக் கொண்டு மாற்று இனத்தவர்கள் தமது இருப்பைத் தக்க வைக்கும் நிலையைத் தொடரவிடக்கூடாது. நாமும் அரசியல் ரீதியில் பலம் பெறவேண்டும்'. மேலும் தெரிவித்ததாவது : இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் நல்…

  15. தமிழ் மக்களின் பிரச்சினைகளை புலிகளால் தீர்க்க முடியாது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 928 views
  16. தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகள் போலி ஆவணங்கள் மூலம் தமிழகத்தில் சொத்து வாங்குகின்றனர் எனத் தகவல்கள் வருகின்றன. இதை அனுமதிகக் கூடாது என்று கலலெக்டர் மற்றும் பொலிஸாருக்கு கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். கலெக்டர்கள் மற்றும் எஸ்.பிக்கள் மாநாட்டில் இது குறித்து, கருணாநிதி பேசியவை வாருமாறு : தமிழ்நாட்டிலுள்ள 117 இலங்கை அகதி முகாம்களில் 73,433 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் சிலர் பல்வேறு ஆவணங்களைத் தவறான வழிகளில் பெற்று, தமிழகத்தில் சொத்து வாங்குவதில் ஈடுபடுவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்தியக் குடிமகனாக அல்லாதவர் இந்த உரிமை அனுபவிக்க வழியில்லை என்பதை நீங்கள் உறுதிப்படுத் வேண்டும். நாட்டின்; இறையான்மைக்கு ஊறு விளைவிப்போரை தமிழகத்தில் ஊடுருவ அனுமதிக்கக் கூடாது. …

  17. முஸ்தபாவின் முசுப்பாத்தி..... ஆதாரம் வீரகேசரி

    • 3 replies
    • 2k views
  18. ஒரு தந்தையின (ஸ்ரீ லங்கா படைச் சிப்பாய்) வேண்டுகோள் ஆதாரம் வீரகேசரி

  19. நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமில் 15ற்கும் அதிகமான கடற்படையினர் கடந்த திங்கட்கிழமை இரவு உயிரிழந்துள்ளனர். இவர்களின் சாவிற்கான உறுதிப்படுத்தப்பட்ட காரணங்கள் எதுவும் இதுவரை தெரியவரவில்லை. எனினும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களின் படி இதுவொரு கூட்டுத் தற்கொலையென தெரியவருகிறது. கடற்படையில் புதிதாக இணைக்கப்பட்ட 16 - 20 அகவை வரையான இளைஞர்களிற்கு நெடுந்தீவில் உள்ள கடற்படை முகாமில் பயற்சியளிக்கப்பட்டு வந்த நிலைலேயே அவர்களில் 15ற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கடுமையான மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பயிற்சியினால் விரக்கியடைந்த இவர்கள் தற்கொலை செய்திருக்கலாமென கூறப்படுகிறது. திங்கள் இரவு சம்பவம் நடைபெற்ற கடற்படை முகாமிலிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்டதாக தெரிவி…

    • 18 replies
    • 3.6k views
  20. தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு நோக்கிய பாதை இன்று திறந்து விடப்பட்டிருக்கின்றது. மாகாணசபைகளுக்கான அரசியல் அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதே அரசியல் தீர்வுக்கான பாதையை திறந்துவிடுவதற்கான வழிமுறையாகும். 20 வருடங்களாக தொடர்ந்து வந்த கடின உழைப்பின் வெற்றியும், இரத்தமும், தசையும் கலந்த சேர்வையும் தான் இன்று பிறந்திருக்கும் இந்த மாகாணசபையும், வடக்கில் தேர்தல் நடக்கும் வரையிலான ஒரு சிறப்பு நிர்வாகமும் கிடைத்திருப்பது. எமது மக்களுக்கு ஒரு நிம்மதியை கொடுத்திருக்கின்றது. நாம் நினைத்தது வேறாக இருப்பினும் இன்று கிடைத்திப்பது இதுதான் என்ற நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் கிடைத்ததை எடுத்துக்கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்த வழிமுறை... என அரசின் எடுப்பு டக்ளஸ் கருத்து ப…

  21. வீரகேசரி நாளேடு 6/20/2008 9:30:00 PM - பிரபாகரன், பிள்ளையான், தமிழ்ச்செல்வனை நானறியேன். அரசாங்கத்துக்கே அவர்களுடன் நல்லுறவு உள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின் போது காணி அதிகாரம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையின் போது வடக்கின் காணி அதிகாரத்தை ரணில் பிரபாகரனுக்கு வழங்கியதாக அரசாங்கத் தரப்பு உறுப்பினர்கள் கோஷமெழுப்பினர். அதற்கு பதிலளித்து உரையாற்றிய போதே ரணில் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது டிரான் அலஸ் தலைமையிலான குழுவினரை கிளிநொச்சிக்கு அனுப்பி, ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதை தடுப்பதற்கு பேரம் பேசப்பட்டது. அப்…

    • 5 replies
    • 1.6k views
  22. உந்துருளியை தரமறுத்த இளைஞன் கடத்தப்பட்டார். 20.06.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பில் சிறிலங்காப் படையினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் உந்துருளியை தரமறுத்த இளைஞன் கடத்திச்செல்லப்பட்டுள்ளார். கிண்ணையடி நாகதம்பிரான் வீதியில் வசித்துவந்த பிரபாகரனது உந்துருளியை பறிமுதல் செய்வதற்கு பிள்ளையான் குழுவைச் சேர்ந்த ஓவியன் என்பவர் முயற்சி செய்து வந்திருந்ததாகக் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 7 ஆம் திகதி வாழைச்சேனையிலுள்ள அலுவலகத்திற்கு பணிக்குச் சென்ற பிரபாகரனை பிள்ளையான் குழுவினர் கடத்திச்சென்றுள்ளதாக தெரியவருகின்றது. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  23. உலகத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டங்களில் விடுதலைப் போராட்டப் பாடல்கள் பெரும் வரவேற்பையும் மக்கள் எழுச்சியையும் உருவாக்கியுள்ளன என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலகத் தொடர்பகத்தைச் சேர்ந்த அன்பரசு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 833 views
  24. உலகத் தமிழர் இயக்கத்துக்கு எதிரான கனடிய அரசாங்கத்தின் நடவடிக்கையானது கனடாவில் உள்ள தமிழர்களின் அடிப்படை உரிமைகள் யாவற்றையும் அழித்துவிடும் வழுக்கல் பாதையின் முதற்படி என்று நம்புவதாக உலகத் தமிழர் இயக்கத்தின் முன்னாள் தலைவர் சித்தா சிற்றம்பலம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  25. இயக்குனர் நடிகர் சீமான் அவர்கள் ஈழமுரசு ஆண்டுவிழாவில் நிகழ்த்திய உரை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 1 reply
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.