ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
தமிழ்நாடு, காரைக்குடியில் நடைபெறும் மாகாநாட்டில் பங்குபற்ற சோனியா காந்தி வருகை தந்திருந்த போது, இலங்கை அரசுக்கு சோனியா ஆதரவளிப்பதாகக் கூறி கண்டன ஊர்வலம் மேற்கொள்ள இருந்த சிவசேனாவின் 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புலிகள் மீது தாக்குதல் நடத்தி வரும் இலங்கை அரசுக்கு ஆதரவாக சோனியா செயற்படுவதைக் கண்டிப்பதாக கூறி கறுப்புக் கொடியுடன் சிவசேனா கட்சியினர் காரைக்குடிக்கு ஊர்வலமாக புறப்படத் தயாரக இருந்த வேளையில் கட்சி செயற் தலைவர் தூதை செல்வம் உட்பட 10 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
-
- 18 replies
- 2.4k views
-
-
வரும் சிங்கள பொளத்த புத்தாண்டிற்கு அரிசி வினியோகம் கட்டுப்பாடான முறையில் (rationing) செய்ய வேண்டிய அளவிற்கு தட்டுப்பாடு எற்படலாம் என்று கருதப்படுகிறது. முக்கிய அரிசி ஏற்றுமதியாளர்களான வியட்னாம் பார்மா இந்தோனேசியா தாய்லாந்து போன்று நாடுகள் உலகளாவிய ரீதியான அரிசி மற்றும் தானிய வகைகளிற்கான தட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தமது ஏற்றுமதியின் அளவை கட்டுப்படுத்த மீள்பரிசீலனை செய்ய திட்டமிடுகிறார்கள். சிறீலங்கா தனது அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பர்மாவின் உதவியை நாடியுள்ளது.
-
- 2 replies
- 962 views
-
-
வடக்கை நெருக்கடிக்குள் தள்ளியபடி தென்னிலங்கையைப் பாதுகாக்க முடியாது -வேல்சிலிருந்து அருஸ்- பொருளாதாரம் சீரழிந்து வருகின்றது, பொதுமக்கள் அதிகளவில் காணாமல் போகின்றனர், மனித உரிமைகள் மோசமடைந்து வருகின்றன, நீதிக்குப் புறம்பான படுகொலைகள் அதிகரித்து வருகின்றன. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் அனைவரும் படுகொலை செய்யப்படுகின்றனர். ஊடகவியலாளர்கள், மனிதாபிமானப் பணியாளர்கள் என யாருமே கொலை அச்சறுத்தல்களில் இருந்து தப்புவதில்லை. மேற்கூறப்பட்டவை சிறிலங்கா அரசு தொடர்பாக பொது அமைப்புக்கள், மனிதாபிமான அமைப்புக்கள், அனைத்துலக அமைப்புக்கள். அனைத்துலக சமூகம் என்பன ஒவ்வொரு சந்தர்ப்பங்களில் தெரிவித்து வரும் கருத்துக்கள். அதாவது, அரசைத் தக்க வைத்…
-
- 0 replies
- 850 views
-
-
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------------------------
-
- 1 reply
- 2.4k views
-
-
தமது இளமைக் காலத்தை கட்சிக்காக தியாகம் செய்ததனை நினைத்து மனம் வேதனையடைவதாக அண்மையில் கட்சி அங்கத்துவம் ரத்து செய்யப்பட்ட மக்கள் விடுதலை முன்னணியின் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். “தொழுநோயாளியைப் போன்றதொரு நிலைமை கட்சியில் எனக்கு ஏன் ஏற்படுத்தப்பட்டது” என விமல் வீரவன்ச கேள்வி எழுப்பியுள்ளார். கட்சி அங்கத்துவத்திலிருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். “நான் சோசலிச கலைச் சங்கத்தில் அங்கம் வகித்தேன், சோசலிச பிக்குகள் முன்னணியை உருவாக்க அரும்பாடுபட்டேன் எனினும் இவற்றிலிருந்தும் நான் நீக்கப்பட்டுள்ளேன்” அவர் குறிப்பிட்டுள்ளார். எனது கட்சி அங்கத்தினர்களே எனக்கு எதிராக சூழ்ச்ச…
-
- 7 replies
- 1.6k views
-
-
மடு மாதாவின் திருவுருச் சிலை அகற்றப்பட்டதற்தகு சிறிலங்காவும் அனைத்துல நாடுகளும்தான் பொறுப்பு என்று வடக்கு - கிழக்கு மனித உரிமைகள் செயலகத்தின் பணிப்பாளர் அருட்தந்தை எம்.எக்ஸ்.கருணாரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 920 views
-
-
மடு தேவாலயம் மீது சிங்களப் படைகள் நடத்தும் தாக்குதலை உடனடியாக நிறுத்த நோர்வே அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
ஜெயராஜ் பொனாண்டோ புள்ளே தாக்குதலில் பலி வெலிவேரியா என்னும் பகுதியில் புத்தாண்டையொட்டிய மரதன் போட்டியை ஆரம்பித்து வைக்கச் சென்ற புள்ளே பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Jeyaraj dead Minister Jeyaraj Fernandopulle was killed following the blast in Welliweriya this morning. The blast occurred when he was about to flag off a marathon run as part of a Sinhala New Year celebration event. ஆதாரம் Daily Mirror
-
- 86 replies
- 13.7k views
-
-
நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளேயின் படுகொலை ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் உள் வீட்டு சதியாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி குண்டு வெடிப்பிற்கு வெளியில் இருந்து வீசப்பட்ட மர்மப் பொதியே காரணம் என்று கூறியுள்ள போதிலும் பொலிசார் அதனை கவனத்தில் கொள்ளாது தற்கொலை குண்டு வெடிப்பாக அதனை அறிவித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மேலும் வாசிக்க : http://pathivu.com/
-
- 2 replies
- 2k views
-
-
யாழ்குடாநாட்டில் விசேட அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது [ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2008, 12:51.30 PM GMT +05:30 ] யாழ். குடாநாட்டு மக்களுக்கு அடுத்த சில மாதங்களில் விசேட அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படும் என யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய பகுதிகளிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கான பயணத்திற்கு ஆளடையாளத்தை நிரூபிப்பது உட்பட பல்வேறு நடைமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இப்புதிய விசேட அடையாள அட்டைகளை விநியோகித்தால் ஆட்களை அடையாளம் காணும் நடவடிக்கைகளை இலகுவாகிவிடும். அத்…
-
- 0 replies
- 824 views
-
-
தம்புள்ள பிரதேசத்தில் பூமியதிர்ச்சி [ செவ்வாய்க்கிழமை, 08 ஏப்ரல் 2008, 06:29.18 AM GMT +05:30 ] நேற்று பகல் 12.14 அளவில் பல்லேகலே பிரதேசத்திலிருந்து 60 – 70 கிலோ மீற்றர் தொலைவில் பூமியதிர்வு ஏற்பட்டுள்ளதாக புவியியல் திணைக்களம் திவயினவிற்கு தெரிவித்துள்ளது.பல்லேகளே மற்றும் தெஹிவளையில் அமைந்துள்ள பூமியதிர்வு கணிப்பீட்டு மத்திய நிலையங்களில் இந்த அதிர்வு பதிவாகியுள்ளது. தம்புள்ள சீகிரிய இனமலுவ போன்ற பிரதேசங்களில் சற்று பலத்த சத்தத்துடன் இந்த அதிர்வு ஏற்பட்டதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.மக்களிடமிர
-
- 0 replies
- 1k views
-
-
வெலிவெரியாத் தாக்குதலை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கின்றதாம்... வெலிவெரியாக் குண்டுத் தாக்குதல் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் நேற்று திங்கட்கிழமை 07-04-02008 பத்திரிகை செய்தியொன்றை விடுத்துள்ளது. ஐக்கிய அமெரிக்கா "ஏப்பிரல் 6 ஹம்பகா மாவட்டத்தில் உள்ள வெலிவெரியாவில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலினால் நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சரும், அரசின் முக்கிய பிரமுகருமான ஜெயராஜ் பெர்னாள்டோபுள்ளே படுகொலை செய்யப்பட்டதை மிகவும் வன்மையாக கண்டிக்கின்றது. மேலும் இம்மிருகத்தனமான தாக்குதலினால் தேசிய விளையாட்டு பயிற்சியாளர் லக்ஸ்மன் டி அல்விஸ், பிரபல்யமான மரதன் ஒட்டக்காரர் கே. ஏ.கருனாரத்ன, மற்றும் பலர் கொல்லப்பட்டுள்னர். மேலும் பலர் காயமடைந்தும் உள்ளனர். அமைச்சர் ஜெயராஜ…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஊடக அமைச்சினால் இடைநிறுத்தப்பட்ட ஏ.பி.சீ. ஊடக நிறுவனத்தின் மூன்று வானொலிச் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. ஹிரு எப்.எம், சூரியன் எப்.எம்.................. தொடர்ந்து வாசிக்க............................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_08.html
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சார்பு அமைப்புக்களின் கிளைகளை அமெரிக்காவில் விரிவுபடுத்தி வருவதாக வாஷிங்டனிலுள்ள இலங்கை அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இக்கிளை அமைப்புகள் பல்வேறு நாடுகளிலும் புலிகள் அமைப்புக்காக நிதி சேகரித்தல், ஆயுதக் கொள்வனவில் ஈடுபடுதல் ஆகிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் இலங்கை அரசு சுட்டிக் காட்டியுள்ளது. விடுதலைப் புலகளின் கிளை அமைப்புக்கள் அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, பிரானஸ் உள்ளிட்ட முக்கியமான 12 நாடுகளில் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள 'வாஷிங்டன் டைம்ஸ்' பத்திரிகை நேற்று தற்போது நியூயோர்க், நியூஜேர்சி, மாநிலங்களிலும் புலிகள் தமது கிளைகளை விரிவுபடுத்தியுள்ளதாகச் செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்கா இராஜாங்கத் திணைக்களம் கடந்த 199…
-
- 2 replies
- 1.7k views
-
-
தமிழீழம் உருவாக இருந்த சந்தர்ப்பங்களில் மக்கள் விடுதலை முன்னணியே அதனை தடுத்தது. ஜே.ஆர்.ஜயவர்த்தனா,பிரேமதாஸ, சந்திரிகா ஆகியோர் நாட்டைப் பிரித்துக் கொடுக்கும் முயற்சியில் ஈ:டுபட்டமைடயாலேயே தங்கள் முழுப் பதவிக்காலத்தையும் வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்று 13ம் திருத்த சட்டத்தை அமுல்படுத்த முடியும் என நினைத்துச் செயற்படும் மஹிந்தவிற்கும் இந்த நிலையே ஏற்படும், என்று ஜே.வி.பி.யின் களுத்துறை மாவட்ட பா.உ பியசிறி விஜேநாயக்க தெரிவித்தார். கிராமியத் தலைவர்களுடன் ம.வி.மு இணைந்து செயற்பட தீர்மானித்துள்ளது. ஏனைய கட்சிகள் நாட்டுப் பிரச்சினையை அறிய முன் நாம் அவற்றை தெளிவாக மக்களுக்கு விளக்கி வருகின்றோம். சந்திரிகாவுடன் அரசமைத்து அதிலிருந்து நாம் விலகினோம். மஹிந்தவை ஜனாதிபதியாக்கி…
-
- 3 replies
- 2.1k views
-
-
பிரிவினை வாதத்தை தோற்கடிக்கும் ஒரு களமாக கிழக்கு மாகாணசபைத் தேர்தலை மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) பயன்படுத்தப் போவதாக அம்முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். இந்த தேர்தல் மூலம் “முதலமைச்சரை” பெற்றுக்கொள்ள முஸ்லிம்................... தொடர்ந்து வாசிக்க................................................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5465.html
-
- 2 replies
- 1.1k views
-
-
கரும்புலியின் கடைசி வார்த்தைகள் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 14 replies
- 3k views
-
-
'அரசின் சிரேஷ் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயைப் படுகொலை செய்தவர்கள் விடுதலைப் புலிகளே' என்று குற்றம் சுமத்தியுள்ள அரச உயர்பீடங்கள் அதற்காகப் புலிகளுக்கு எதிpரான கடும் நடவடிக்கைளை விரைந்து எடுக்க வேண்டும் என்று சீற்ற முற்றிருக்கின்றனர். தக்க பதிலடி தரும் விதத்தில் புலிகள் மீதான நடவடிக்கை விரைந்து தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்து நிலைப்பாடு அரசுதலைமைக்குள் வலுத்து வருவதாகவும் விடயமறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கினறன. அமைச்சர் ஜெயராஜை கொன்றமைக்காக புலிகளுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கபட வேண்டும் என்பதை ரட்ணசிரி விக்ரமநாயக்கா வெளிப்படையாகவே வற்புறுதிதியிருக்கின்றார். 'பயங்கரவாதிகளுக்கு எதிரான எமது நடவடிக்கைகளை நாம் மேலும் தீவிரப்டுத்த வேண்டிய வேள…
-
- 0 replies
- 1.2k views
-
-
வடபகுதியிலிருந்து மதவாச்சி சிறிலங்கா இராணுவச் சோதனைச் சாவடி ஊடாக தமிழ்ப் பயணிகள் தெற்கே செல்ல நேற்று திங்கட்கிழமை முதல் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 790 views
-
-
சியம்பலாவ காட்டுப்பபகுதியில் கஞ்சா பயிர் செய்கையில் ஈடுபட்ட மூவர் மீது துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. சியம்பலாவ - கொட்டியகல காட்டப்பகுதியில் இனந்தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலதிக தகவல்கள் தெரியசரவில்லை என எதிமலை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 1k views
-
-
இதனிடையே 14 நாட்களுக்கு முன்னர் அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோ புள்ளையை 2 தற்கொலையளிகள் நெருங்கியுள்ளதாக தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2551.html
-
- 0 replies
- 1.5k views
-
-
குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பர்ணாந்து புள்ளே அவர்களின் பதவி ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஸவுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. இவை இப்படி இருக்க கொலைக்கான பொறுப்பை STF ஏற்க மறுத்துள்ளது. ஆரம்பம் முதலே அமைச்சர் ஜெயராஜின் பாதுகாப்பு தொடர்பாக கடமை புரிந்த MSD எனும் பிரபுகளுக்கான பாதுகாப்பு படையை நீக்கி விட்டு STF படையை கடந்த பெப்ரவரி மாதம் முதல் அரசு நியமித்து இருந்தது. குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அமைச்சர் ஜெயராஜ் பர்ணாந்து புள்ளே அவர்களின் பதவி ஜனாதிபதியின் சகோதரரான பசில் ராஜபக்ஸவுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. ஜெயராஜ் அவர்கள் உயிரோடு இருக்கும் போதே இப் பதவியை பசில் ராஜபக்ஸ அவர்களுக்கு பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி முயன்ற வேளையில் …
-
- 0 replies
- 1.3k views
-
-
உலகுக்கு சொல்லப்படாத கதைகள். வாகரையில் இருந்து.. படங்கள் இணைப்பு!
-
- 0 replies
- 1.4k views
-
-
வன்னிக் களமுனையில் நேற்றைய நாள் இடம்பெற்ற மோதல்களில் 10 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் சிறிலங்காப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 689 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவில் இன்று காலை சிறப்பு அதிரடிப்படையினரால் குடும்பஸ்தர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 775 views
-