ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143595 topics in this forum
-
அதீத நம்பிக்கை காரணமாக இலங்கைப்படையினர் இரண்டு வருடக்காலப்பகுதிக்குள் தமிழீழ விடுதலைப்புலிகளின் பொறிக்குள் வீழ்ந்த சம்பவமே முகமாலையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்றதாக இந்திய அமைச்சரவையின் முன்னாள் செயலரும் தற்போது சென்னையில் உள்ள கற்கை மையத்தின் பணிப்பாளருமான பி.ராமன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் இலங்கை அரசாங்கம் சிங்கள மக்களை திருப்திபடுத்துவதற்காக இந்த சம்பவத்தின் உயரிழப்புகளை குறைத்துக்கூறும் உத்தியை பயன்படுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார் எனினும் இவ்வாறாக பிழையான செய்தியை தமது மக்களுக்கு கொடுப்பதானது இறுதியில் அரசாங்கத்தின் மீதும் படையினர் மீதும் மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்தும் என ராமன் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை வான்படையினர் தமிழீழ விடுதலை…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாலமோட்டையில் ஒரு இராணுவத்தினன் கொல்லப்பட்டும் நாவற்குளத்தில் 4 இராணுவத்தினர் படுகாயம் அடைந்தும் உள்ளனர். இன்று ஞாயிற்குக்கிழமை பகல் 12.30 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தினர் புலிகளின் முன்னரங்க நிலைகளை தாக்க முயன்றுள்ளனர். விடுதலைப்புலிகள் மேறஆ கொண்ட தற்காப்பு தாக்குதலால் ஒரு இராணுபத்தினன் கொல்லப்பட்டுள்ளான். இச்சண்டை ஒரு மணித்தியாலம் வரை நடைபெற்றுள்ளது. நாவற்குளத்தில் நடைபெற்ற பிறிதொரு தற்காப்பு சண்டையில் 4 இராணுவத்தினர் படுகாயம் அடைந்துள்ளனர். இத்தாக்குதலழல் இரு இராணுவத்தினர் தமது கால்களை இழந்துள்ளனர்.காலை 09.45 தொடக்கம் காலை 10.20 வரை நடைபெற்ற இத் தற்காப்பு தாக்குதலின் போது ஒரு றி-56 துப்பாக்கி ஒன்றும் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. http://www.pathivu.co…
-
- 0 replies
- 743 views
-
-
முகமாலையில் "ஐயோ மகே அம்மே" ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 4.3k views
-
-
தமிழர் படிக்க வேண்டியவை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.6k views
-
-
அன்பிற்கினிய கிழக்கு மாநில, தமிழ் முஸ்லிம் மக்களே ! கிழக்கு மாநிலத்தை சிங்களமயப்படுத்தி அதனை முழுமையாக கபளீகரம் செய்யும் மகிந்த சிந்தனையின் நோக்கத்தை நிறைவேற்றும் ஓர் கட்டமாகவே அரசாங்கம் கிழக்கு மாநிலத் தேர்தலை அவசர அவசரமாக எம் மக்கள் மீது திணித்துள்ளது. கிழக்கு மாநிலத்தை சிங்கள மயப்படுத்துவதற்கு தமிழ், முஸ்லிம் மக்களில் இருக்கக் கூடிய சில சுயநலக் குழுக்களையும் அரசாங்கம் முழுமையாகப் பயன்படுத்துகின்றது. ஆயுதம், பணம், பதவி என்ற பேராசையால் இவர்களும் அரசாங்கத்தின் சிங்கள மயப்படுத்தலுக்கு முட்டுக் கொடுப்பவர்களாகவே இருக்கின்றார்கள். ..... http://www.orunews.com/?p=798
-
- 0 replies
- 1.6k views
-
-
ஏன் இந்த அவலம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.4k views
-
-
தந்தை செல்வாவின் 32 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 865 views
-
-
ஜே.வி.பியின் உள்விவகாரங்களை தீர்ப்பதற்கு தன்னால் அனுசரணையாளராக செயற்பட முடியும் என்று தொலைபேசி உடாக ஜே.வி.பி. கட்சியின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவிடம் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்ததையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கொழும்பு வார ஏடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 891 views
-
-
மணலாறில் நடந்த மோதலில் 7 இராணுவம் பலி என்றும் ஒருவரைக் காணவில்லை என்றும்.. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சகத்துக்காக செய்தி தயாரித்து வெளியிடும்.. இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக சி என் என் செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப்புலிகள் விமானம் மூலம் நடத்திய தாக்குதலையும் சி என் என் குறிப்பிட்டுள்ளது. http://edition.cnn.com/2008/WORLD/asiapcf/...a.ap/index.html
-
- 9 replies
- 2.2k views
-
-
விடுதலைப்புலிகளின் விமானப்படை மணலாற்றில் குண்டுவீச்சு விடுதலைப்புலிகளின் விமானங்கள் மணலாற்றின் பாதுகாப்பு முன்னரங்க நிலைகளின் மீது 3 குண்டுகளை வீசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. LTTE aircraft drop bombs in Welioya LTTE aircrafts dropped three bombs at the Welioya Forward Defence Line in the North a short while ago but the military says it did not cause any major damage ஆதாரம் Daily Mirror
-
- 24 replies
- 7.4k views
-
-
வடபகுதியைக் கைப்பற்றும் திட்டத்தில் எந்த மாற்றமுமில்லை-சரத்பொன்சேகா தெரிவிப்பு [ ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2008, 04:43.10 AM GMT +05:30 ] வடபகுதியை படையினரின் முழுமையான கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் தமது திட்டத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினட் ஜென்ரல் சரத் பொன்சேகா ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார். வடபோர்முனையில் ஏற்பட்ட இழப்புகள் குறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: கடந்த புதன்கிழமை முகமாலை முன்னரங்கப் பகுதியில் படைத்தரப் பினருக்கு ஏற்பட்ட இழப்புக்களானது வடக்கை முழுமையாகக் கட்டுப்படுத்தும் தமது நோக்கத்தைத் தடுக்காது. அதேநேரம் விடுதலைப் புலிகளின் பலத்தை நாம் குறைத்து மதிப்பிடவுமில்லை. வடக்கில் கடந்தகால…
-
- 0 replies
- 854 views
-
-
பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றியே இராணுவத்தளபதி முகமாலை தாக்குதலுக்கு உத்தவிட்டார்? Sunday, 27 April 2008 பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றியே இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, முகமாலை தாக்குதலுக்கு உத்தரவிட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில் அதில் ஏற்பட்ட தோல்விக்கு அவரே பொறுப்பேற்கவேண்டும் என்ற கருத்துக்களும் வெளியாகியுள்ளன. எனினும் இதனை மறுத்துள்ள தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல் மையம், பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி முகமாலை தாக்குதலுக்கு இராணுவத்தளபதி உத்தரவிட்டார் என்ற தகவலை நிராகரித்துள்ளது. தமிழீழ விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்திய போது படையினரும் எதிர்தாக்குதலை நடத்திய சம்பவமே முகமாலையில் இடம்பெற்றதாக அந்த மைய…
-
- 1 reply
- 1.4k views
-
-
எதிர்வரும் மே 10ம் திகதி நடைபெறவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்கும் தேர்தல் பிரசாரப் பணியிலீடுபடும் அரசியல் முக்கியஸ்தர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பாதுகாப்பு அதிகாரிகள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். கிழக்கு மாகாணத்தை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட போதும் இன்றும் அங்கும் இங்கும் புலிகள் தமது கைவரிசையைக் காட்டியே வருகின்றனர். கடந்த வாரத்தில் திருகோணமலையில் தம்பலகாமம் வீதியில் கிளைமோர் குண்டொன்று வெடிக்க வைக்கப்பட்டதை அடுத்து தேர்தல் பிரசாரத்தில் பங்குபற்றும் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதில் பாதுகாப்புத் துறையினர் பெரும் சவாலை எதிர்நோக்கியுள்ளனர். குறிப்பிட்ட சம்பவத்தில் இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர். ரவூப் ஹக்கீம் அந்த …
-
- 0 replies
- 747 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் நெடுங்கேணி கோட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான புலிகளின் குரலின் முத்தமிழ் கலையரங்கம் நேற்று சிறப்புற நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 594 views
-
-
இலங்கை பிரச்சினையில் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன? என விஜய டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். லட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் விஜய டி.ராஜேந்தர், சென்னையில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, கடந்த 2 மாதங்களில் தமிழகத்தில் 10 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, இலங்கை தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருவதாக தெரிவித்தார். இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்தும், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி செய்வதை நிறுத்தக்கோரியும் ஏப்ரல் 5-ந் தேதி மயிலை மாங்கொல்லையில் பொதுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.. ஆனால், இது சட்ட விரோத என்று கூட்டம் நடத்த தடை விதித்திக்கப்பட்டது. இந்த நிலையில் 18 நாட்கள் கழித்து தற்போது இல…
-
- 0 replies
- 969 views
-
-
இராணுவச் சிறப்புப் படைப் பிரிவின் முன்னாள் தளபதியான ஜயவி பெர்னாண்டோ சிஙகள வாரப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இராணுவ நடவடிக்கைகளை குறிப்பாக வன்னியைக் கைப்பற்றும் முயற்சியை கடுமையாக விமாசித்துள்ளர்h. இந்தப் பேட்டி வெளியானதையடுத்து நாட்டிலுள்ள இராணுவ முகாம்கள் எதற்கும் செல்வதற்கு அவருக்கு தடை விதிக்கபட்டுள்ளது. அவரது பேட்டியின் முக்கியமான பகுதிகள் இங்கு : இராணுவத் தளபதிகளும் அரச தலைவர்களும் இவ்வருட இறுதிக்குள் போரை முடிக்கப் போவதாக நாள் குறித்திருந்தர்hகள். ஆனால், அவ்வாறு நாள் குறிப்பி;ட்டு கூற முடியாது என்று கூறுகின்றனர். அதனை நீங்கள் எப்படி நோக்குகின்றீர்கள்? ஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் இவ்வருட இறுதிக்குள் யுத்தத்தை முடிக்கப் போவதாக கூறியிருந்தனர…
-
- 4 replies
- 1.6k views
-
-
சிறிலங்கா அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் சுதந்திரக் கட்சியின் அதிருப்தியாளரான மங்கள சமரவீரவுக்கும் இடையே லண்டனில் இரகசிய சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 551 views
-
-
எதிர்வரும் மே மாதம் முதலாம் நாளுக்கு முன்னர் தாக்குதல்கள், அவதூறு சுமத்தல் போன்றவற்றை நிறுத்துவதாயின் தமது குழு, கட்சியுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்குத் தயாராக இருப்பதாக ஜே.வி.பியின் அதிருப்திக் குழு நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 516 views
-
-
முகமாலைச் சமரில் இரு வகைக் குண்டுகளைப் புலிகள் பயன்படுத்தினர் - இக்பால் அத்தாஸ் முகமாலை சமரில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட இரு வகையான குண்டுகளை விடுதலைப் புலிகள் பயன்படுத்தியதாகப் படைத்துறை ஆய்வாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை வெளிவரும் சண்டே ரைம்ஸ் ஆங்கில வாரஏட்டில், பாதுகாப்பு தொடர்பிலான பத்தியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த 23ம் நாள் இடம்பெற்ற முகமாலை சமரில், உள்ளுரில் தயாரிக்கப்பட்ட சமாதானம் மற்றும் இராகவன் என்ற இரு வகையான குண்டுகள் விடுதலைப் புலிகள் பயன்படுத்தியுள்ளனர். இதில் விடுதலைப் புலிகளால் ஏவப்பட்ட சமாதானம் என்ற குண்டில் பொஸ்பரசு பதார்த்தம் கலக்கப்பட்டிருந்தாக தகவல் தெரிவிக்கின்றது போதும் இதனை சுயாதீனமாக இதனை உறுதி ச…
-
- 2 replies
- 1.9k views
-
-
படையினரின் பாவனையில் இருந்து வந்த யாழ். துரையப்பா விளையாட்டரங்கு சுமார் 28 மாத கால இடைவெளியின் பின்னர் மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று படையினரால் கையளிக்கப்பட்டுள்ளது. உத்தியோகபூர்வமாக கையளிக்கும் வைபவம் நேற்று கோலாகலமாக இடம்பெற்றது. இவ்வைபவத்தை படையினரின் வேண்டுகோளையடுத்து யாழ். அரசாங்க அதிபர், யாழ். மாநகர சபை, வர்த்தக சம்மேளனம் என்பன ஒழுங்கு செய்திருந்தனர்.. புத்தாண்டு சந்தை என்னும் பெயரில் சில தற்காலிக கடைகளும் அங்கு திறக்கப்பட்டிருந்தன.. காலையில் உள்ளூர் கலைஞர்களின் நாதஸ்வரக்கச்சேரியுடன் ஆரம்பமான நிகழ்வுகள் பின்னர் கலை நிகழ்ச்சிகள், என நீடித்தன. விளையாட்டரங்கின் வடக்குப் புறமாக நுழைவாயிலினூடாகவே மைதானத்துக்குள் செல்ல பொது மறக்கப்பட்டது மேற…
-
- 2 replies
- 1.5k views
-
-
மணலாற்றில் இருந்து சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 693 views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் பாரிய எடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம், படைக்கலங்கள் மற்றும் வெடிபொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 977 views
-
-
மன்னார் உப்புக்குளம் பகுதியில் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 528 views
-
-
pic: dailymirror.lk நேற்று முந்தினம் இரவு பிலியந்தலவில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் புத்த பிக்கு ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அது அப்படி இருக்க.. சிறீலங்கா அரச படைகள்.. தாங்கள் மன்னாரில் புலிகளின் பகுதிக்குள் ஊடுருவிச் செயற்படுவதை ஒத்துக் கொண்டு இருக்கின்றன. ஆனால் மன்னாரில் ஆழ ஊடுருவி நடத்தும் தாக்குதல்களில் பொதுமக்களும் முக்கியஸ்தர்களும் பலியாகும் போது அதை புலிகளுக்குள் உள்ள பிளவுபட்ட அணி ஒன்று செய்வதாகக் காட்டுவதற்கு தமிழ் தேசத் துரோகிகளுடன் இணைந்து அரசு பிரச்சாரம் செய்வது இன்றைய டெயிலிமிரர் கட்டுரையின் கீழ் அம்பலமாகியுள்ளது. முகமாலையில் ஏற்பட்ட இழப்பை மறைக்க பொய் சொல்ல வெளிக்கிட்டு...மற்றைய பொய்களை டெயிலி மிரர் கோட்டை விட்டுவிட்டது..! "Meanwhile, …
-
- 1 reply
- 1.3k views
-
-
முகமாலையில் சிக்கிய படையினர் [27 - April - 2008] விதுரன் வட போர்முனையில் படையினர் மீண்டுமொரு முறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். விடுதலைப் புலிகள் தொடர்பாக இராணுவ தலைமைப்பீடம் தொடர்ந்தும் தவறான கணிப்பைக் கொண்டிருக்கிறதென்பதை முகமாலை சமர் மீண்டும் நிரூபித்துள்ளதுடன், இந்தப் பின்னடைவானது வடபோர் முனையில் அடுத்துவரும் படை நடவடிக்கைகளைப் பெரிதும் பாதித்து விடப்போகின்றதென்பதையும் காட்டுகிறது. வன்னியில் வவுனியா, மன்னார், மணலாறு களமுனை நகர்வுகள் மிகவும் நீண்டு செல்கிறது. குறிப்பிட்ட காலப் பகுதிக்குள் அங்கு குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற படையினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. எட்டு கி.மீ. தூரத்திலிருந்த மடுவைச் சென்றடைய படையினருக்கு ஒரு வருடத்த…
-
- 0 replies
- 2.2k views
-