Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர்களைப் படுகொலை செய்யும் சிறிலங்காவுக்கு இந்தியா ஆயுத உதவி செய்வதனைக் கண்டித்து புதுவை யூனியன் பிரதேசத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (21.03.08) கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 661 views
  2. யாழ். பரவைக்கடல் பகுதியில் பொதுமக்கள் சென்ற படகு மீது சிறிலங்கா கடற்படை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 767 views
  3. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மட்டக்குளியில் இன்று மாலை ஏற்பட்ட குண்டுப்புரளியால் மக்கள் அல்லோகல்லோலப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.7k views
  4. ------------------ --------------------------------- ------------------------------------- ---------------------------

    • 0 replies
    • 650 views
  5. இலங்கையில் காணாமல் போனோரினது நிலை இன்னமும் புரியாத புதிராக நீடிக்கிறது என்று கனடிய ஊடகமான "நசனல் போஸ்ட்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 915 views
  6. அச்சமும் நம்பிக்கையீனமுமே உலகிற்கான அமெரிக்காவின் ஏற்றுமதி [14 - March - 2008] 2001 செப்டெம்பர் 11 இல் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதலைத் தொடர்ந்து சர்வதேச ரீதியில் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையில் தனது பொருளாதார, இராணுவ நலன்சார் ந்த நடவடிக்கைகளை அமெரிக்கா தொடர்ந்தும் தீவிரமாக உலகளாவிய ரீதியில் முன்னெடுத்து வருவதாக பரவலாக குற்றச்சாட்டுகள் தொடுக்கப்பட்டுவரும் நிலையில் ஜனாதிபதி புஷ்ஷின் நிர்வாகத்தில் பிரதி வெளிவிவகார அமைச்சராக முன்னர் பணியாற்றிய ரிச்சர்ட் ஆர்மிரேஜ் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். அண்மையில் அவர் அளித்த பேட்டியொன்றின் போது, `9/11 இற்குப் பிறகு எமது அச்சத்தையும் ஆத்திர உணர்வையுமே நாங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி …

    • 0 replies
    • 966 views
  7. கிழக்கு மாகாணசபைக்கான வேட்பு மனுக்கள் இம்மாதம் 27ம் திகதி முதல் அடுத்த மாதம் 3ம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது . வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் டபிள்யூ டி சுமனசிறி தெரிவித்தார் . எவ்வாறாயினும் தேர்தல் நடைபெறும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை . கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களையும் உள்ளடக்கியதாக இத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. வேட்பு மனுக்களை ஏற்பது தொடர்பாக தேர்வு அத்தாட்சி அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக உதவி தேர்தல் ஆணையாளர் சுமணசிறி மேலும் தெரிவித்துள்ளார். ஆதாரம் வீரகேசரி

  8. மட்டக்களப்பில் ஆயுதக்குழுக்களை எதிரும் புதிருமாக தேர்தல் களத்தில் இறக்கி மோசடியான தேர்தல் நடத்தப்பட்டுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 528 views
  9. ரூபவாஹினி நேரடி நிகழ்ச்சிகள் நிறுத்தம் மற்றுமொரு ரூபவாஹினி ஊழியர் தாக்கப்பட்டதையடுத்து நேரடி நிகழ்ச்சிகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. Rupavahini stops live programmes Employees of the Rupavahini Corporation have stopped all live programmes with immediate effect till President Mahinda Rajapaksa intervenes and gives an assurance that spree of violence against Rupavhini employees would be brought to an end ஆதாரம் : Dailymirror

    • 1 reply
    • 965 views
  10. வெள்ளி 14-03-2008 12:54 மணி தமிழீழம் [சிறீதரன்] கடந்த 8 நாட்களில் 35 குண்டுவெடிப்புகள் பெருமளவில் படையினர் பாதிப்பிற்குள்ளாகியிருக்கல

  11. 24 மணிநேரமும் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில் ஆயுதபாணிகள் கொள்ளையடித்துவிட்டு தப்புவது எப்படி? [14 - March - 2008] *வவுனியா பகுதி மக்கள் மத்தியில் சந்தேகம் வவுனியாவின் சகல பகுதிகளிலும் 24 மணிநேரம் பலத்த பாதுகாப்பு உள்ள நிலையிலும் ஆயுதபாணிகள் மிக இலகுவாக வந்து பெரும் கொள்ளைகளில் ஈடுபட்டு விட்டு தப்பிச் செல்வது மக்கள் மத்தியில் கடும் விசனத்தையும் பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. வவுனியா சுற்றாடலில் இரவு நேரக் கொள்ளையர்களின் பெரும் அட்டகாசம் காரணமாக நித்திரையின்றி பலர் விழித்திருக்கின்றனர். இவர்கள் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொள்ளையிட முற்படுவதனால் சாதாரண குடி மக்களினால் எதுவுமே செய்ய முடியாதுள்ளது. பூந்தோட்டம், வேப்பங்குளம், சமயபுரம், மகா …

  12. யாழ்.மாவட்டத்தில் உயிரியல் பிரிவில் தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகளில் வீழ்ச்சி' [14 - March - 2008] யாழ். மாவட்டத்தில் கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கு கணிதபாடப் பிரிவில் தோற்றும் மாணவர்கள் தேசிய மட்டத்திலும் மாவட்ட மட்டத்திலும் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவதால் அதிக எண்ணிக்கையானவர்கள் பொறியியல் பீடத்துக்கு தெரிவாகும் நிலை இருந்துவருகின்றது. இதேவேளை, உயிரியல் பாடப் பிரிவில் தோற்றும் மாணவர்களின் பெறுபேறுகள் பெருமளவு வீழ்ச்சியடைந்துவருகின்றது. இதனால், எதிர்காலங்களில் மருத்துவபீடத்துக்கு தெரிவாகும் மாணவர் எண்ணிக்கை குறைவடைவதுடன் மாவட்டத்தில் சேவையாற்ற மருத்துவர்கள் இல்லாமல் போகும் நிலையும் உருவாகிவருகின்றது. கல்வித்துறை சார்ந்தவர்கள் இதுவிடயத்தில் கவனமெடுத்து, …

  13. வியாழன் 13-03-2008 17:26 மணி தமிழீழம் [நிலாமகன்] மன்னாரில் களமுனைகளில் மோதல்கள் மன்னார் களமுனைகளில் மோதல்கள் இடம்பெறுவதாக குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன. இன்று அதிகாலை முதல் மாந்தை மற்றும் அடம்பன் பகுதிகளில் பெரும் எறிகணை வெடியோசைகள், துப்பாக்கி வேட்டுகள் செவிமடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  14. கிழக்கின் உதயம் பூரணமாக அமுல்படுத்தப்படுகின்றது-ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு 3/14/2008 12:23:17 PM வீரகேசரி இணையம் - கிழக்கின் உதயம் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட கருத்திட்டங்கள் கிழக்கு மாகாணத்தில் வாழும் சமூகங்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் பூரணமாக அமுல்படுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, கிழக்கு மாகாணத்தில் இருந்து புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் மாகாணத்தில் இயல்பு நிலையைக் கொண்டுவருவதற்காக அரசாங்கம் 2007 ஜூலையில் கிழக்கின் உதயம் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்தது. இத்திட்டத்தின் கீழ் உடனடியாக கவனம் செலுத்தப்பட்ட துறைகளில் விவசாயம், நீர்ப்பாசனம், வீதிகள், மின்சக்தி, வாழ்…

  15. வடக்கை மீட்டு தோ்தல் - மகிந்தா முழக்கம் புலிகளின் அடக்க முறைக்குள் சிக்கி தவித்த மக்களை விடுவித்து அவா்களிற்கு சுதந்திர வாழ்வளித்து சனநாயக வாழ்வியைலை நாம் அளித்து தோ்தலை நடாத்தியதன் ஊடாக அந்த மக்கள் மிகவும் மகிழ்சியல் திகழ்கிறார்கள். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1339#1339

  16. புலிகள், ஐ.தே.க.தவிர்ந்த எவருடனும் கூட்டுச்சேர தயார் [14 - March - 2008] * கிழக்கு மாகாணசபை தேர்தல் குறித்து ஆளும் கட்சி அறிவிப்பு -எம்.ஏ.எம்.நிலாம்- கிழக்கு மாகாண சபைக்கான தேர்தலை உடனடியாக நடத்தும் பொருட்டு விரைவில் வேட்பு மனுக்களைக் கோருமாறு தேர்தல் ஆணையாளரைக் கேட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கும் அரசாங்கம். ஆளும் கட்சி விடுதலைப் புலிகளையும், ஐக்கிய தேசியக் கட்சியையும் தவிர எவருடனும் கூட்டுச் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் வேட்பு மனுக்குழுவை நியமித்திருப்பதாகவும் அதில் சுசில்பிரேமஜயந்த, பசில் ராஜபக்ஷ ஆகியோர் இடம் பெற்றிருப்பதாகவும் அம…

  17. இலங்கை இனப்பிரச்சனையில் இந்தியா மிக மோசமான நிலைப்பாட்டையே மேற்கொண்டு வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 663 views
  18. இலங்கையில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றைச் சேர்ந்த டக்ளஸ் தேவானந்தவுடன் இந்தியாவின் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவசங்கர் மேனன் ஆகியோர் புதுடில்லியில் சந்தித்துப் ஆலோசனை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 764 views
  19. வவுனியாவிலிருந்து கொழும்பு வந்த ரயிலில் பயணித்த இரு புலி உறுப்பினர்கள் கைது [14 - March - 2008] * பொலிஸார் தெரிவிப்பு வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி ரயிலில் சென்று கொண்டிருந்த இரு விடுதலைப் புலி உறுப்பினர்களை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். 2004 ஆம் ஆண்டு தொடக்கம் புலிகள் இயக்கத்தின் உளவுப்பிரிவில் சேவையாற்றி வரும் செட்டிகுளத்தைச்சேர்ந்த ராமச்சந்திரன் சுரேந்திரன் (வயது 18) என்ற இளைஞனும் முதலியார்குளத்தைச் சேர்ந்த பீ.ஜயந்தினி (வயது 25) என்ற யுவதியுமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம் பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இரவு 11.40 க்கு அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கிச் செல்…

  20. ஆலையடிவேம்பு பகுதிகளில் ஆயுதபாணிகள் பெண்களை மானபங்கப்படுத்த முயன்ற அதிர்ச்சி சம்பவங்கள் [14 - March - 2008] * பத்மநாதன் எம்.பி.யிடம் முறைப்பாடு அம்பாறையில் ஆலையடிவேம்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு இரவு நேரங்களில் வரும் ஆயுதம் தாங்கியோர் பெண்களை மானபங்கப்படுத்த முயன்ற பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த மாதம் 25 ஆம் திகதிக்குப் பின்னர் ஆலையடிவேம்பு , கோளாவில், நாவற்காடு, வாச்சிக்குடா, அக்கரைப்பற்று -8 உட்பட பல பிரதேசங்களைச் சுற்றி வளைத்து பாரிய தேடுதல்களை நடத்திய விசேட அதிரடிப்படையினர் வீடு வீடாகச் சென்று அனைவரையும் வீடியோ படமெடுத்துள்ளனர். இதற்குப் பின்னரே இவ்வாறான மோசமான சம்பவங்கள் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் பலர் தன்னிடம் …

  21. பாதாள குழுவின் முக்கிய ஆவணங்கள் பொரளையில் கண்டுபிடிப்பு பாதாள உலக கழவினின் குற்றவாளி ஒருவரது என சந்தேகிக்கப்படும் ஆவணங்களை பொரளை காவல்துறையினா் கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு பொரளை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சற்றிவளைப்பு சோதனையின் போது இவ் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=959

  22. -------------------------------------------------------------------------------- 215 போ் புசா தடுப்பு முகாமில் -சிறை பயங்கர வாத தடுப்பு சட்டத்தின் கீழ் 215 அப்பாவி மக்கள் புசா சிறையில் தடுத்தவைக்கப்பட்டுள்ளனா் இவா்களில் பெரும்பாலானனோர் தமிழா்கள். தற்கொலை தாரியின் அங்கிகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்தே இவா்கள்கைது செய்யப்பட்டுளனா். இதில் மெதடிஸ் பங்கு தந்தையின் வகன சாரதிக்கும் இந்த தற்கொலை அங்கி தாரிக்கும் தொடா்புடையதாக கூறி மேலும் படிக்க..# http://www.kalakam.com/forum/viewtopic.php?t=959

  23. விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியாக முன்னெடுக்கும் பிரச்சாரங்களை எதிர்கொள்ளக்கூடிய வல்லமையுடன் வெளிநாடுகளிலுள்ள சிறிலங்காவின் இராஜதந்திரிகள் இல்லை என சிறிலங்கா பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்க தெரிவித்திருக்கின்றார். விடுதலைப் புலிகளின் பிரச்சாரத்தால் கவரப்பட்டுள்ள சில நாடுகள் சிறிலங்காவுக்கான ஆயுதங்களை விற்பனை செய்வதற்கே பின்நிற்கின்றன. பணத்துக்கு ஆயுதங்களைத் தருவதற்குக் கூட அவை மறுக்கின்றன எனவும் பிரதமர் குறிப்பிட்டார். பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த இரண்டு வருட காலத்தில் எமது நாடு பெற்றுக்கொண்டுள்ள முக்கியமான வெற்றி என்னவென்றால், பயங்கரவாதத்துக்கு எதிராக…

  24. ஒட்டுக்குழு யேயதேவன் மகிந்தாவுடன் சந்திப்பு.புலதமிழருக்குசதி ஒட்டு குழு யெயதேவன் மகிந்த ராஜபக்சாவுடனும் அவருடைய இனவாத சிங்கள பாராளுமன்ற உறப்பினா்களுடனும் இரகசிய மந்திராலோசளை நடாத்தப்பட்டுள்ளது. அவை புலம் பெயா் நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கு ஆதரவாக செயற்படுபவா்களை முடக்கல். குறிப்பாக இளையோர் அமைப்பு. வெண்புறா அமைப்பு.தமிழா் புனா்வாழ்வுகழகம். விளையாட்டுகழகங்கள் ஊடகவியாளா்கள். என பல்வேறு பட்ட நபா்களை முடக்குவது. பொய் பிரச்சாரங்களை லண்டன் புழுகு கூட்டுதாபனத்தின் ஊடாக பரப்புவது. மேலம்படிக்க... http://www.kalakam.com/forum/viewtopic.php?p=1326#1326

  25. ஈழத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க தொடர் முழக்கப் போராட்டம் - மருத்துவர் ராமதாஸ் ஈழத்தமிழர்களின் நலன்களைப் பாதுகாக்க தொடர் முழக்கப் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை சென்னையில் தியாகராஜ நகரில் இன்று ராமதாஸ் தலைமையில், இலங்கைத் தமிழர் பாதுகாப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் விடுதலைப் சிறுத்தைகள் தலைவர்கள் உட்பட தொண்டர்கள் இதில் கலந்துகொண்டனர். இங்கு உரையாற்றியாற்றும் போது மருத்துவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்திய அரசு இலங்கைக்கு ஆயுததளபாட உதவிகளை மற்றும் படைத்துறைப் பயிற்சிகை வழங்குவதை நிறுத்த வேண்டும். இலங்கைத் தமிழர்களுக்கு நியாமான தீர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.