ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143361 topics in this forum
-
கிழக்கு தேர்தலில் முஸ்லிம் ஒருவரை முதலமைச்சராக்க வேண்டுமென்பதில் ரவூப் ஹக்கீமை தவிர ஏனைய சகலரும் உறுதியாக உள்ளனர். ஆனால் முஸ்லிம் ஒருவர் கிழக்கின் முதலமைச்சரானால் தமது இருப்புக்கு ஆபத்து ஏற்படுமென அஞ்சியே முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராவதை ஹக்கீம் விரும்பவில்லை. இதன் மூலம் அஸ்ரப்பின் கனவை அவர் தகர்த்தெறிந்து விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டுச் சேர்ந்ததன் மூலம் எதிர்வரும் தேர்தலில் அவர்களின் தோல்............................. தொடர்ந்து வாசிக்க........................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9376.html
-
- 2 replies
- 1.9k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தவிர சங்கரியின் கட்சியும், மற்றும் சில ஆயுதக் குழுக்களும் இணைந்து அன்று திம்பு பிரகடத்தை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆயினும் தமிழர் தாயகத்தைக் கூறு போட எண்ணி பேரினவாதத்தால் நடத்தப்படும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு தமிழ் மக்களின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்த, இவ்வினத்திற்கு துரோகம் இழைக்க சங்கரியும் மற்றும் தமிழ் குழுக்களும் முயல்வதாக அரசியல் ஆய்வாளரான குசலா பெரேரா தெரிவித்துள்ளார். சங்கரிக்கு, குசலா பெரேரா அனுப்பியுள்ள கடித்தில் கிழக்கு மாகாணத் தேர்தலில் போட்டியிடுவது சிங்களப் பேரினவாத்தின் தமிழர் தாயக கோட்பாட்டை சிதைக்கும் கபட எண்ணத்தை தாங்கள் ஏற்றுக் கொள்வதாகவே அமைகிறது. அத்துடன் சங்கரி மற்றும் தமிழ் குழுக்கள் திம்பு…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ், குடாநாட்டு மக்கள் நாள் தோறும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவர்கள் படுகின்ற துயரங்களை எண்ணில் அடக்கிக்கொள்ள முடியவில்லை. கடந்த 2006. டிசெம்பர் முற்பகுதியில் படையினருக்கும்,புலிகளுக்கும
-
- 0 replies
- 1.1k views
-
-
கிறிஸ்தவ மக்களின் புனிதத்தலமான மடு தேவாலயம் அமைந்துள்ள பகுதி மீது சிங்களப்படைகள் கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு, ஒரு போர்ப் பூமியாக மாறி வருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 1.3k views
-
-
அகில இலங்கை மட்டத்தில் .மட்டக்களப்பு மாணவி முதலிடம் அடுத்து யாழ். இந்து, வேம்படியுடன் கரவெட்டி விக்னேஸ்வரா அதி சிறப்புச் சித்தி கடந்த டிசெம்பர் மாதம் நடைபெற்ற ஜி.சி.ஈ. (சாதாரண) தர பரீட்சைக்கு தமிழ் மொழி மூலம் தோற்றிய மாணவர்களில் அகில இலங்கை ரீதியில் மட்டக்களப்பு மாணவி ஷாலினி முதல் இடத்தைப் பெற்றுள்ளார். இவர் 10 "ஏ' சித்திகளைப் பெற்றுள்ளதுடன் அதி கூடுதல் புள்ளிகளையும் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த நான்கு இடங்களையும் யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள்(குகநந்தன் நிரூஜன், நரேந்திரன் திருத்தணிகன்), வேம்படி மகளிர் கல்லூரி மாணவி (ருக்ஷகா சந்திரபோஸ்), கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மாணவன் (அனந்தலிங்கம் நிதர்ஷன்) ஆகியோர் பெற்றுள்ளனர். பரீட்சை முடிவுகள் திணைக்களத்தின் இணையத…
-
- 11 replies
- 2.8k views
-
-
வவுனியா பாலமோட்டையில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா சிங்கள வன்பறிப்பாளர்கள் மடு மாதாவை வன்பறிப்புச் செய்யும் நோக்கத்தை வெற்றியடையச் செய்யாமல் மடு மாதா அங்கிருந்து வெளியேறியமை நிம்மதி தருவதாக கத்தோலிக்க மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
வன்னிக்களமுனையான மணலாறு, மன்னார் மற்றும் வவுனியாப் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மோதல் சம்பவங்களில் சிறிலங்காப் படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 719 views
-
-
'களத்திற்கு வெளியே எழுந்துள்ள சவால்கள்" -சேனாதி- கடந்த ஒக்ரோபர் மாதம் 22 ஆம் நாள் அனுராதபுரத்தில் இருந்த சிறிலங்காவின் வான்படைத் தளத்தின் மீது விடுதலைப் புலிகள் வான் வழியிலும் தரை வழியிலுமான தாக்குதலொன்றைச் செய்ததை அடுத்து, அம் மாவட்டத்தின் பாதுகாப்பு பற்றி சிறிலங்கா படைத்தரப்பும், அரச தலைமையும் சிண்டைப் பிய்த்துக்கொண்டு யோசித்த பின், அம் மாவட்டத்தின் ஒட்டுமொத்த நடவடிக்கைகளுக்கான கட்டளை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சனத் கருணாரத்ன நியமிக்கப்பட்டார், அவருக்கு உச்ச அளவு அதிகாரங்கள் தரப்பட்டன. அதிகாரங்கள் அள்ளிக் கொடுக்கப்பட்டிருந்த போதும் அதைச் செலுத்துவதற்கான ஆட்தொகையை இட்டு நிரப்பும் பணி இன்றுவரை நடந்துகொண்டே இருக்கிறது. கிழக்கில் இருந்து அகற்றப்பட்ட காவல்துறைக் …
-
- 0 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா படையினரின் கடுமையான எறிகணை வீச்சைத் தொடர்ந்து மடுத்திருத்தலத்திலிருந்து மாதா சிலை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு தேவாலய பங்குத்தந்தை மற்றும் பணியாளர்களிற்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அவர்கள் உத்தரவிட்டிருந்தார். மன்னார் ஆயரே தான்தான் மாதா சிலையை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதாக டெய்லி மிரர் மற்றும் தமிழ்நெட் ஆகியவற்றிற்குத் தெரிவித்திருந்தார். ஆனால் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு புலிப்பயங்கரவாதிகளின் தேவாலய வளாகத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறு பலவந்தப்படுத்தியதாகவும் மன்னாரில் உள்ள செல்வாக்குமிக்க பயங்கரவாதிகளின் ஆதரவாளர் ஒருவரின் முழுமையான ஒத்துழைப்பு இதற்குக் கிடைத்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு இணையத் தளத…
-
- 6 replies
- 2.4k views
-
-
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 927 views
-
-
தமிழர்களுக்குத் தெற்கு விரிக்கும் வலைப் பொறியே கிழக்குத் தேர்தல் [ வெள்ளிக்கிழமை, 04 ஏப்ரல் 2008, 05:37.52 AM GMT +05:30 ] [ உதயன் ] ஈழத் தமிழர்கள் ஒரு தேசிய இனமாகத் தமது பூர்வீகத் தாயகப் பூமியில் ஒருங்கிணைந்து வாழ்வதற்கும் தமது இனத்தின் தனித்துவத்தை அடையாளப்படுத்தி நிற்பதற்கும் அவசியமான அடித்தளங்களைத் தகர்ப்பதன் மூலம், இலங்கைத் தீவில் தமிழினத்தின் பாரம்பரிய இனத்துவ உரிமையைச் சிதைத்து, இன ஒடுக்குமுறையை வெற்றிகரமாக முன்னெடுப்பதே பௌத்த, சிங்களப் பேரினவாதத்தின் ஒரே வெறியாகவும், தீவிரமாகவும் இருந்து வருகின்றது. இலங்கைத் தீவின் பெரும்பான்மை இனம் என்ற ஒரேயொரு வாய்ப்பைச் சாதகமாகப் பயன்படுத்தி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்துக்கொண்டு தமிழ்த் தேசிய இனத்தை அடக்கி, ஒட…
-
- 0 replies
- 643 views
-
-
முருங்கன் சிறீலங்கா காவல் நிலையத்திற்கு எறிகணை வீச்சு இன்று காலை 9.30 மணியளவில் மன்னார் முருங்கன் சிறிலங்கா பொலிஸ் நிலையத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகளால் ஏவப்பட்ட எறிகணைகள் அதனை அண்மித்த பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன. இதில் பல சிறிலங்கா காவல்துறையினர் காயமடைந்ததாக தெரியந்துள்ளது. இதில் காயமடைந்த கான்ஸ்டபிள் ஒருவர் முருங்கன் தை்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். pathivu.com
-
- 0 replies
- 748 views
-
-
வெள்ளி 04-04-2008 13:12 மணி தமிழீழம் [நிலாமகன்] வவுனியாவில் கைக்குண்டுத் தாக்குதல்: மூன்று படையினர் படுகாயம் வவுனியாவில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிறீலங்காப் படையினரை இலக்கு வைத்து கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கைக்குண்டுத் தாக்குதலில் மூன்று சிறீலங்காப் படையினர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்கள் வவுனியா மருதுவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 644 views
-
-
எமது மனிதநேய நடவடிக்கைகள் எல்லாம் வடக்குப் பகுதியை நோக்கியே திட்டமிடப்படுகின்றன. மடு தேவாலயம் இருக்கும் திசையை நோக்கி அல்ல என்று சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் கட்சியான விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் இரு மாவட்டங்களில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கிழக்கு மாகாணசபைக்கு திருகோணமலை, மட்டு., அம்பாறை மாவட்டங்களில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி சார்பில் (புலிச்சின்னம்) நேற்று முன்தினம் புதன் கிழமை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. யோகரட்னம் யோகியை செயலாளராகக் கொண்ட இக்கட்சி சார்பில் மட்டு. மாவட்டத்தில் 14 பேரது பெயர் பட்டியலைக் கொண்ட வேட்பு மனுத்தாக்கல் செய்யபட்ட அதே நேரம் அம்பாறை மாவட்டத்தில் இந்தக் கட்சியின் பெயரில் எஸ். பத்மசேன என்பவரால் இரு பெண்கள் உட்டபட 17 வேட்பாளர்களின் பெயர் பட்டியலைக் கொண்ட வேட்பு மனு தாக்கல் செய்யபட்…
-
- 1 reply
- 1.5k views
-
-
பொல்லா வேடச் சாக்கியப் புல்லர் -மறவன்புலவு க. சச்சிதானந்தன் (தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினர்) புத்தத் துறவியான வணக்கத்துக்குரிய அத்துரிலிய இரத்தின தேரர், இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர். தேசிய எல (ஈழ) உறுமல் கட்சியின் நாடாளுமன்றக் குழத் தலைவர். 45 வயதினர். புத்த சமயத்தவர் ஆய்தம் ஏந்திப் போராட வேண்டும், போர்மூலம் தமிழரின் எதிர்ப்பை முறியடிக்க வேண்டும். சிங்கள புத்த மேலாட்சியை நிலை நிறுத்த வேண்டும். இவ்வாறாக அவர் கடந்த ஆறு ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகிறார். சிங்களச் சிற்றூர்கள் தொடக்கம் நகரங்கள் வரை அனைத்து இடங்களுக்கும் பயணித்து இலங்கைப் போர்ப் படைக்குச் சிங்கள இளைஞர்களைத் திரட்டுகிறார். போர் முனைகளுக்குச் சென்று சிங்…
-
- 1 reply
- 1.5k views
-
-
வீரகேசரி இணையம் 4-3-2008 12:42:33 - மன்னாரில் மடுவை அண்டிய பகுதிகளில் படையினருக்கும்,விடுதலைப்புல
-
- 17 replies
- 4.7k views
-
-
ஈழத்தமிழ் மாணவர்கள் கல்வியை தொடர்வதில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து தங்களுக்கு பல தடவைகள் தெரியப்படுத்தியுள்ளோம் இருந்தபோதும் எமது கல்வியை அமைதியாக தொடர்வதற்கு இலங்கையரசு தொடர்ந்து முட்டுக்கட்டையாகவே இருந்துவருகின்றது என சர்வதேச தமிழீழ மாணவர் பேரவை தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் செயலாளர் பான் கீ மூனுக்கு தமிழீழ மாணவர் பேரவை அனுப்பியுள்ள மனுவிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த வாரம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் முதலாம் தவணை பரீட்சை தொடங்கி நடைபெற்று வருகின்றது. இது இலங்கை அரசுக்கும் நன்கு தெரியும். இருந்தும் கடந்த சில வாரங்களாக மிலேச்சத்தனமான முறையில் மக்கள் வாழ்விடங்கள் ம…
-
- 0 replies
- 853 views
-
-
வன்னிப் போரரங்கில் "ஜயசிக்குறு" போன்றதொரு படை நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. சிங்களப்படை வன்னிக்குள் வரவேண்டும், படை நடவடிக்கையைச் செய்ய வேண்டும். அனைத்து படைகளையும் பயன்படுத்தட்டும், அதனைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஜயசிக்குறுவைப் போல் சிங்களப் படையினரை நாங்கள் கொன்றொழித்து வெற்றிபெறுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றும் வன்னி என்பது சிங்களப் படைக்குரிய சாவுக்களம் என்றும் பொதுமக்களிடத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் துணைத் தளபதி அமுதாப் விளக்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.5k views
-
-
அரசாங்கம், இன்னுமொரு பாரிய அதிகூடுதலான வட்டிவீதத்திற்கு வர்த்தக கடன் பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது. அத்துடன் அரசாங்கத்தின் தவறான பொருளாதார கொள்ளை காரணமாக பணவீக்கம் பாரிய விதத்தில் அதிகரித்துள்ளமையை சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்ட.............................. தொடர்ந்து வாசிக்க................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_03.html
-
- 1 reply
- 1k views
-
-
வீரகேசரி இணையம் 4/3/2008 9:32:58 PM - ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தியாகராஜா மகேஸ்வரனின் படுகொலை வழக்கின் இரண்டாவது சந்தேக நபரின் பிணை மனு கோரிக்கை, கொழும்பு பிரதம நீதிவான் ரவீந்திர பிரேமரட்ணவினால் இன்று மீண்டும் நிராகரிக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலை தொடர்பான வழக்கு நேற்று கொழும்பு பிரதம நீதவான் ரவீந்திர பிரேமரட்ண முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மகேஸ்வரன் எம்.பி.யின் படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முதலாம் இரண்டாம் சந்தேக நபர்களான கொலின் வெலன்டைன் மற்றும் பிரான்சிஸ் சுதர்ஸன் ஆகியோர் மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர். விசாரணையின் போது மன்றில் ஆஜரான குற்றத்…
-
- 0 replies
- 847 views
-
-
ரூபவாஹினி கூட்டுத்தானபத்திற்கு மேர்வின் சில்வா நடத்திய ரவுடித்தனம் போல சிறிலங்காவின் மற்றொரு அமைச்சரான துமிந்த திசநாயக்கவும் பெற்றோலியக் கூட்டுத்தானத்திற்குள் புகுந்து தனது திருவிளையாடலைக் காட்டியுள்ளார். அவரின் திருவிளையாடலுக்கான காரணம் அவரின் தொலைபேசி கட்டணத்தை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் செலுத்தாமையே. Mervin the second, Duminda Disanayaka assaults Petroleum Corporation workers (Lanka-e-News, 2008 April 03, 6.20 PM) The Deputy Minister of Petroleum Resources Development Duminda Disanayaka rushed into the head office of the Petroleum Corporation this morning (03), scolded the Deputy Financial Manager and took away her office telephone. The Deputy Mini…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் இடையில் அண்மையில் ரகசிய பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது....................... .... தொடர்ந்து வாசிக்க....................................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_8798.html
-
- 0 replies
- 999 views
-
-
பதவிமோகமும், அரசியல் குத்துகரணங்களும் வீரகேசரி இணையம் 4/3/2008 4:07:51 PM - பசப்பு வார்த்தைகளுக்கு மதிமயங்காத கொள்கைபற்றாளர்களாக நாம் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலரையே நம்மிடையே பார்க்கிறோம். அரசியல் தலைவர்களையும், அரசியல் தலைமைத்துவங்களையும் மக்களே உருவாக்குகிறார்கள்.இவர்கள் வேற்றுக்கிரக வாசிகள் அல்லர். இவர்கள் உடலில் ஓடுகின்ற குருதியும் செங்குருதிதான். மக்கள் இவர்களை தங்கள்சேவகர்களாகவே பார்க்கிறார்கள்.மக்கள் சேவை மகேசன் சேவை என்பர். இவற்றுக் கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பது போல நாட்டில் உள்ள பல அரசியல் வாதிகளின் செயற்பாடுகளும் அவ்வப்போது மாற்றங்களுக்குட்படுகின்றன. மக்கள் போடும் வாக்கு பிச்சையிலேயே இவர்களது அரசியல் வாழ்வு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. மக்க…
-
- 0 replies
- 851 views
-