ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143595 topics in this forum
-
இலங்கையில் ஊடவியலாளர்கள் கைது இலங்கை தலைநகர் கொழும்பில், பயங்கரவாத புலன் விசாரணை காவல் துறையினர் இரண்டு தமிழ் ஊடக வியலாளர்களையும், ஒரு சிங்கள ஊடகவியலாளரையும் தடுத்துவைத்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து சரிநிகர் சஞ்சிகையின் ஆசிரியரும் சுதந்திர ஊடகவியாலாளர் இயக்கத்திற்காக பேசவல்லவருமான சிவகுமார் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, காவல்துறையினர் தன்னையும் விசாரணைக்கு வரும்படி அழைத்திருப்பதாகக் கூறினார். காவல்துறையின் விசாரணைக்கு செல்வதற்கு முன்னர் சிவகுமார் தமிழோசைக்கு வழங்கிய செவ்வியை நேயர்கள் செய்தி அரங்கத்தில் கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml
-
- 0 replies
- 715 views
-
-
இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளிடையே யாழ்பாணம் வவுனியா மன்னார் வெலிஓயா ஆகிய பகுதிகளின் முன்னரங்குகளில் பெரும் மோதல்கள் இடம் பெறுவதாகவும் பெரும் இழப்புகள் இரு பகுதிக்கும் ஏற்பட்டு இருப்பதாகவும் களத் தகல்கள் தெரிவிக்கின்றன. http://www.ajeevan.ch/
-
- 13 replies
- 3.9k views
-
-
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தி.மகேஸ்வரனின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் மூன்று பெண்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இருவரைத் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 645 views
-
-
வன்னிப் போர்க்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வெவ்வேறு மோதல்களில் சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 851 views
-
-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் இயக்கும் விமானமொன்று நாளை இலங்கை வரவுள்ளது 3/7/2008 2:12:08 PM வீரகேசரி இணையம் - சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முழுக்க முழுக்க பெண்களே இயக்கும் விமானம் ஒன்று நாளை சென்னையில் இருந்து இலங்கை வரவுள்ளதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் நாளை சனிக்கிழமை மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு சர்வதேசரீதியில் பெண்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அரச தகவல் திணைகளம் தெரிவித்துள்ளது. நாளை இலங்கை வரும் மகளிர் தின விசேட விமானத்தில் விமானிகள் பணிப் பெண்கள் என அனைவரும் பெண்களே இடம்பெறுகின்றனர். இந்திய விமானி எம். தீபா இந்த விமானத்தை ஓட்டிவருவார்…
-
- 5 replies
- 1.2k views
-
-
சிவநேசனின் கொலைக்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்.! சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு பலியான சிறிலங்காவின் பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் க. சிவநேசனின் கொலையை கண்டித்து டென்மார்க் நாட்டை சார்ந்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சோன் சொன்னகோ அவர்கள் சுதந்திரத்திக்கும் உரிமைக்குமான போராட்டம் தொடரட்டும் என்ற தலைப்புடன் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அமரர் க. சிவநேசன் கடந்த நவம்பர் மாதம் டென்மார்க் வருகை தந்திருந்த பொழுது பல டெனிஸ் அரசியல் வாதிகளை சந்தித்திருந்தார். அப்பொழுது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சோன் சொன்னகோ அவர்களையும் சந்தித்திருந்தார். சோன் சொன்னகோ அவர்கள் தனது கண்டன அறிக்கையில் அமரர் க. சிவநேசனுடனான தனது சந்திப்பில் சிவநேசன் அவர்கள் தனக…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 710 views
-
-
நகரில் வாழும் உலகம் [07 - March - 2008] இன்று உலகெங்கும் நகரமயவாழ்க்கை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் அண்மையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில் தரப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், உலக சனத்தொகை தீர்க்கமான அளவுக்கு நகரமயமாக மாறியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. சுமார் 330 கோடி மக்கள் நகரப்பகுதிகளில் வாழ்கிறார்கள். 2030 ஆம் ஆண்டளவில் இத்தொகை சுமார் 500 கோடியாக அதிகரிக்கும். இது உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் கூடுதலானதாக இருக்கும். நகரங்களிலேயே உலகம் வாழப்போகிறது என்றுகூடச் சொல்லலாம். நகரமயமாதலே பிரதான வாழ்க்கைப் போக்காக மாறிவரும் வேளையில், மனித குலம் எதிர்நோக்கப் போகின்ற சவால்களும் அச்சந் தருப…
-
- 0 replies
- 1k views
-
-
தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் அருமையான மனிதர் சிவநேசன் - செ.கஜேந்திரன் தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் அருமையான மனிதர். சிவனேசன் அண்ணை, அன்பும் பண்பும் கடமையுணர்வும் நேர்மையும் ஆளுமையும் மிக்க ஓர் ஐனநாயகவாதி என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளாது. சிவநேசன் அவர்களது படுகொலை தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பாக அவர் விடுத்த அறிக்கை வருமாறு.... செ.கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் தேர்தல் மாவட்டம் 06.03.2008 பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் அவ…
-
- 0 replies
- 589 views
-
-
சிறீலங்கா தளபதி ஆயுத உதவி கோரல் ! உண்ணாவிரத போராட்டத்தில் வை.கோ 07.03.2008 / நிருபர் குளக்கோட்டன் டெல்லிக்கு வருகைதந்துள்ள இலங்கை ராணுவ தளபதி ஜி.எஸ்.சி. பொன்சேகா இந்திய ராணுவ தலைவர் தீபக் கபூரை சந்தித்துப் பேசினார். விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் புலிகளை ஒடுக்க ஆயுதம் வழங்க வேண்டுமென்று பொன்சேகா கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. . இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது முப்படைகளும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்நாட்டின் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜி.எஸ்.சி.பொன்சேகா அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ளார். நேற்று அவர் இந்திய ராணுவ தலைவர் ஜெனரல் தீபக் கபூரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின…
-
- 0 replies
- 878 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதன் மூலம் தமிழ் இனத்தின் உரிமைக்காக - விடுதலைக்காக குரல் கொடுப்பதை - போராடுவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 787 views
-
-
ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே இன்று ராமேஸ்வரம் மீனவர் ஒருவரை இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டமும், பரபரப்பும் நிலவுகிறது. ராமேஸ்வரம், மண்டபம் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை 262 படகுகளில் கடலுக்குச் சென்றனர். கச்சத்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, திடீரென அங்கு இலங்கை கடற்படை வீரர்கள் வந்தனர். தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த கடற்படையினர், குயின்ராஜ் என்பவருக்குச் சொந்தமான படகில், இருந்த அக்காள் மடம் கிறிஸ்டி (30), அந்தோணி ராயப்பன், மரியகுவிட்டன், மரியபிச்சை ஆகியோரை துப்பாக்கி முனையில், நிறுத்தினர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அவர்களை கையை உயர்த்தியபடி நிற்க வைத்த சிங்களப் படையினர் பின்னர் த…
-
- 4 replies
- 1.4k views
-
-
கடத்தல் காணமல் போதல்களிற்கு சிறிலங்கா அரசே பொறுப்பு 07.03.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு சிறிலங்காஅரசசே பொறுப்பு என சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு அமைப்பான ஹியுமன் ரைட்ஸ் வோச் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா.வின் கீழான சர்வதேச குழுவொன்றின் பிரசன்னம் அவசியம் என்றும் அது மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நியூயோர்க்கை தளமாக கொண்டியங்கும் ஹியுமன் ரைட்ஸ் வோச் நேற்று வெளியிட்டுள்ள 241 பக்க அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பமான கடந்த 2006 …
-
- 0 replies
- 946 views
-
-
Posted on : 2008-03-07 மஹிந்தரின் அரசுக்கு மகுடம் சூட்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் பரவலாக இடம்பெறும் ஆட்கடத்தல்களும், பின்னர் காணாமற் போகச் செய்யப்படுதலும் ஒரு தேசியப் பிரச்சினையாக மாறியிருக்கின்றன. இலங்கை அரசே அவற்றுக்கு முழுப் பொறுப்பு என்று அப்பட்டமாக வெளிப்படையாக அம்பலப்படுத்தியிருக்கின்றத
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆட்கள் பலவந்தமாக காணமல் போதல் நடவடிக்கைகளில் உலகிலேயே மோசமாக குற்றமிழைத்தவர்களில் இலங்கை அரசாங்கமும் ஒன்றென மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கும் கொழும்பு, இந்தப் பிரச்சினையின் பரிமாணத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பெருப்பித்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவுக்குக் குறைந்து விட்டதாகவும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் புதிய நடவடிக்கைகளினால் இவை வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் வெளிவிவாகாரச் செயலாளர் பாலித ஹோகண தெரிவித்தாக பி.பி.சி. நேற்று குறிப்பட்டுள்ளது. 'துரதிஷ்டவசமாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உண்மையகான நிலைவரத்தை அளவுக்கு அதிகமாக பெருப்பித்துக் காட்டியிருப்பதாக கோஹணெ கூறி…
-
- 0 replies
- 1.3k views
-
-
கொசோவோ போன்ற நிலையை எமது தாயகப் பூமியிலும் ஏற்படுத்த முயற்சிஎன்கிறார் - வீரவன்ச 3/6/2008 9:30:55 PM வீரகேசரி நாளேடு - ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் பிரிவினை வாதத்திற்கு தூண்டுதலான பொய்க் கருத்துக்களின் அடிப்படையிலேயே இன்று கொசோவோ தனிநாடானது. இதேபோன்றதோர் நிலையை எமது தாயக பூமியிலும் தோற்றுவிக்க அவர் அரும்பாடுபட்டு வருகிறார் என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். எதிர்வரும் 16 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் இலங்கையிலும் ஒரு பிரிவினை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது. இவ்வாறான பயங்கர சூழலை எதிர்…
-
- 2 replies
- 1.7k views
-
-
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான பரப்பன்கண்டல் மேற்கினூடாக இராணுவத்தினர் இன்று முற்பகல் மேற்கொண்ட படைநடவடிக்கை மூலம் அப்பகுதி தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். மன்னார் பரப்பன் கண்டல் பகுதி விடுதலைப்புலிகளின் முக்கியதளமாக காணப்பட்டது.. இராணுவத்தினர் இப்படை நடவடிக்கை மூலம் பரப்பன் கண்டல் பிரதேசம் இராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கிய போராளிகளான லக்ஸ்மன்,பானு.ரமேஷ் ஜெயம் போன்றோர் பரப்பன் கண்டல் முன்னரங்கு மோதலில் முக்கிய பங்குவகித்தனர். இராணுவத்தினர் படைநடவடிக்கை மேற்கொண்டு பரப்பகண்டல் பகுதியை கைப்பற்றியுள்ளனர்.அதிகாரத்த
-
- 6 replies
- 4.2k views
-
-
கண்காணிப்பு பணிகளை நிறுத்த போவதாக சர்வதேச சுயாதீன குழு அறிவிப்புபணியை தொடருமாறு - ஜனாதிபதி அழைப்பு 3/6/2008 9:32:18 PM வீரகேசரி நாளேடு - பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும் புலனாய்வு செய்வதற்குமாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளை கண்காணித்து வந்த சர்வதேச சுயாதீன குழு தனது கண்காணிப்பு பணிகளை நிறுத்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. சர்வதேச சுயாதீன குழுவின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ளõத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்களது பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. மனித உரிமை மீறல்கள் த…
-
- 1 reply
- 1.5k views
-
-
புலிகளுக்கு தார்மீக ஆதரவு தொடரும் - தொல். திருமாவளவன் 3/6/2008 9:22:40 PM வீரகேசரி நாளேடு - விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவு தொடரும் என தொல். திருமாவளவன் கூறினார். உடுமலையை அடுத்துள்ள சாளரப்பட்டி கிராமத்தில் அருந்ததியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள உடுமலை வந்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது, சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் திருமுறைகளை பாடிய சிவ பக்தர் ஆறுமுகசாமி உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். தீட்டுப் பட்டு விட்டதாகக் கூறப்பட்ட கோவிலின் வடக்கு வாசலை உடனே திறக்க வேண்டும். மாநிலங்களவைக்கான தேர்தலில் தாழ்த்தப்பட்டோரும்…
-
- 0 replies
- 1.5k views
-
-
சீமானின் 'புலி'ப்பேச்சு... ''பிரபாகரனுக்கு நோபல் பரிசு கொடுக்கணும்!'' 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை...' -பேராசிரியர் சுப.வீரபாண்டியன் சமீபத்தில் ஆரம்பித்த அமைப்பு இது. மார்ச் முதல் தேதி, நாகப்பட்டினத்தில் இந்தப் பேரவையின் அறிமுகக் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் விடுதலைப்புலிகளை ஆதரித்து சினிமா இயக்குநர் சீமான் முழக்கம்தான் ஹைலைட்! சீமானின் சீற்றத்திலிருந்து சில துளிகள்.... ''இந்திய இறையாண்மை பற்றிப் பேசுகிறார்களே... அவர்கள் இலங்கை இறையாண்மையைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும். அங்கே சிங்கள பௌத்தர்கள் மட்டுமே ஆளமுடியும். புத்தரின் பல்லைப் பாதுகாத்து வைத்திருக்கிறோம் என்பவர்கள், அவருடைய சொல்லைப் பாதுகாக்க மறந்து விட்டார்கள். பி…
-
- 2 replies
- 2.3k views
-
-
மட்டு. உள்ளூராட்சி சபை தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு [Wednesday March 05 2008 06:03:00 PM GMT] [யாழ் வாணன்] கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாது என்று எண்ணி ஆயுதக்குழுக்களுடன் இணைந்து அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது. இந்நிலையில், மட்டக்களப்பு உள்ளூராட்சி சபைத் தேர்தலை தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நடைபெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த அவசரகாலச் சட்டமனது…
-
- 3 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 10 ஆம் நாள் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைய வேண்டும் என்று தெரிவித்துள்ள தேர்தல் திணைக்களம் மேற்படி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 905 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் ஹரவபொத்தான, துட்டுவேவ பகுதியில் இன்று காலை கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. திருகோணமலை - அனுராதபுரம் சாலையில் ஹரவபொத்தன பகுதி அமைந்துள்ளது
-
- 8 replies
- 3k views
-
-
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களில் காந்த குண்டுகளை பொருத்த புலிகள் திட்டம்- இராணுவ பேச்சாளர் 3/6/2008 9:56:27 AM வீரகேசரி இணையம் - கொழும்பு நகரில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்களில் காந்தங்களைப் பயன்படுத்தி குண்டுகளைப் பெருத்த புலிகள் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் மூலம் அரசாங்கத்துக்குத் தெரியவந்துள்ளதாகவும் இது குறித்து வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணாயக்கார தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக விளக்கமளிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று காலை தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். …
-
- 2 replies
- 1.7k views
-