Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கதிரேசன் வீதி விடுதியிலிருந்து சிங்கப்பூர் பிரஜை கடத்தல் வெள்ளை வானில் வந்தோர் கைவரிசை 2/25/2008 6:56:56 PM வீரகேசரி இணையம் - கதிரேசன் வீதியில் அமைந்துள்ள தற்காலிக விடுதி ஒன்றிலிருந்து சிங்கப்பூர் பிரஜையொருவர் இனந்தெரியாத ஆயுத தாரிகளினால் இன்று கடத்தப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 12.00 மணிக்கும் 1.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளை வானில் வந்த சிலரே இவரை கடத்திச்சென்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான என்.கே. இலங்ககோன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் சீருடைக்கு சமனான ஆடையணிந்த மூவர் மற்றும் சிவில் ஆடையுடன் கூடிய மூவர் அடங்கிய குழுவினாலேயே இவர் கடத்தப்பட்டுள்…

  2. ஆயுதங்களை பரிசோதிப்பதற்கு - அமெரிக்க நிபுணர்கள் வருகை 2/25/2008 6:34:47 PM வீரகேசரி இணையம் - அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்காக தமிழீழ விடுதலைப்புலிகளால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை பரிசோதிப்பதற்காக அமெரிக்க நிபுணர்கள் ஏழுபேர் இலங்கைக்கு வருகைதந்துள்ளனர். அனுராதபுர விமான படைத்தளத்தின் மீது தாக்குதல்களை மேற்கொள்வதற்கு புலிகள் இலங்கை இராணுவத்தினரால் பயன்படுத்தப்படாத அதிநவீன ரக ஆயுதங்களை பயன்படுத்தியதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவந்துள்ளதையடுத்தே அந்த ஆயுதங்களை பரிசோதிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து விசேட நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கு வருகைதந்துள்ள அமெரிக்க அரசாங்கத்தின் விசேட விசாரணை பணியகத்தை சேர்ந்த…

    • 8 replies
    • 3.2k views
  3. திங்கள் 25-02-2008 17:39 மணி தமிழீழம் [தாயகன்] வன்னியில் இறக்கும் படையினரைப் புதைக்க புதிய அணி வன்னி களமுனைகளில் கொல்லப்படும் சிறீலங்காப் படையினரின் இழப்பை தென்னிலங்கை மக்களிற்கும், ஊடகங்களிற்கும் தெரியாது மூடி மறைப்பதற்கு புதிய உத்தியொன்றை அரசு மேற்கொண்டு வருகின்றது. மன்னார், மணலாறு களமுனைகளில் தொடர்ச்சியான மோதல்கள் இடம்பெற்றுவரும் நிலையில், நாளாந்தம் சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டு வருகின்றனர். இதனை ஊடகங்களிற்கும், கொல்லப்படும் படையினரின் உறவினர்களுக்கும் தெரியப்படுத்தாது விடுவதற்காக, கொல்லப்படும் படையினரின் உடலங்களைப் புதைப்பதற்கென புதிய அணிகள் களமிறக்கப்பட்டுள்ளன. மருத்துவ உதவி என்ற பெயரில் களமிறக்கப்பட்டுள்ள இந்த அணியினர், ஏனைய படையினருக்கு உ…

  4. திங்கள் 25-02-2008 17:46 மணி தமிழீழம் [தாயகன்] பேராதெனிய பல்கலைக்கழகத்தில் மோதல் - 11 மாணவர்கள் காயம் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் இரண்டு மாணவ அணிகளுக்கு இடையில் இன்று காலை ஏற்பட்ட மோதலில் 11 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். கலை, மற்றும் விஞ்ஞானபீட மாணவர்களுக்கு இடையில் நேற்று நடைபெற்ற விளையாட்டுப் போட்டியைத் தொடர்ந்து இந்த மோதல் ஆரம்பமாகி இன்று காலை கைகலப்பில் முடிவடைந்தது. காயமடைந்த 11 மாணவர்களில் சிறிய காயங்களுக்கு உள்ளாகியிருந்த 9 மாணவர்கள் சிகிச்சையின் பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  5. மஹிந்த ஜனாதிபதியான பின்னர் பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்துள்ளன- ஜெனீவா ஆய்வாளர் 25.02.2008 / நிருபர் எல்லாளன் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து பொதுமக்களின் உயிரிழப்புக்கள் அதிகரித்திருப்பதாக ஜெனீவாவின் சிறிய ஆயுதங்கள் தொடர்பான ஆய்வுநிலையத்தின் பணிப்பாளர் ரொபேர்ட் முஹா தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்ஜெயவர்த்தன, பிரேமதாச, சந்திரிகாகுமாரதுங்க ஆகியோர் போல விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியுமென்ற பிடியைத் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் வைத்துக்கொண்டுள்ளார். எனினும், கடந்த கால அரசாங்கங்களைவிட வித்தியாசம் என்னவெனில் சமாதானப் பேச்சு மூலமான அரசியல் தீர்வுக்கான அனைத்து …

  6. ஜ.நா தூதுவர் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை சந்தித்து கலந்துரையாடினார் 2/25/2008 3:04:53 PM வீரகேசரி இணையம் - இலங்கை வந்துள்ள ஜக்கிய நாடுகள் சபையில் அரசியல் விவகாரங்களுக்கான பிரதி செயலாளர் அன்ஜெலா இன்று காலை இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார். கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்த ஜக்கிய நாடுகள் சபையின் அரசியல் விவகாரங்களிற்கான பிரதி செயலாளர் அன்றைய தினம் மட்டக்களப்பில் இருந்து விட்டு மறுநாட்காலை கொழும்பு திரும்பினார். கிழக்கே அரசாங்கம் முன்னெடுக்கும் பாரிய வேலைத் திட்டங்களை அவர் பாராட்டினார் . அதே வேளை இன்னும் முன்னோக்கிச் செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார். என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தா…

  7. ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட ரம்பொடை சுரங்க பாதை திறந்து வைக்கப்பட்டுள்ளது 2/25/2008 3:17:35 PM வீரகேசரி இணையம் - மத்திய மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான சுரங்கப் பாதையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த சனிக்கிழமை உத்தியோகபூர்வமாககத் திறந்துவைத்தார்.225 மீற்றர் நீளமான ரம்பொட சுரங்கப் பாதை ஜப்பானிய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ரூபா 2 பில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணத்தில் 54 கிலோ மீற்றர் நீளமான கம்பளை – நுவரேலியா வீதியையும் 17 கிலோ மீற்றர் தூரமான கம்பளை – நாவலப்பிட்டிய வீதியையும் இணைக்கும் வகையில் இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் இலகுவாக்கப்பட…

  8. திங்கள் 25-02-2008 16:47 மணி தமிழீழம் [தாயகன்] மட்டக்களப்பு பெண் அமெரிக்காவில் கைது போலியான கடவுச்சீட்டு மூலம் அமெரிக்காவிற்கு நுழைய முற்பட்ட குற்றச்சாட்டில் மட்டக்களப்பு பெண்ணொருவர் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். 26 அகவையுடை சாமினி குமார் என்ற இந்தப் பெண் கனடியப் பிரசையான அஸ்வேவி ஜெகதீஸ்வரன் என்பவரது கடவுச்சீட்டைப் பயன்படுத்தி அமெரிக்காவிற்குள் நுழைய முற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த 17ஆம் நாளன்று கைது செய்யப்பட்ட குறிப்பிட்ட பெண் அமெரிக்க குடிவரவு அதிகாரிகளால் தொடர்ந்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  9. கொழும்பில் இதுவரை 214 பேர் கடத்தப்பட்டுள்ளனர் - மக்கள் கண்காணிப்புக் குழு கொழும்பிலும், கொழும்பின் புறநகரிலும் இதுவரை 214 பேர் கடத்தப்பட்டுள்ளதாக மக்கள் கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இன்றுவரை 214 பேர் கொழும்பிலும் அதன் புறநகரங்களிலும் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட 214 பேர் தொடர்பில் சிறீலங்கா காவல்துறையினர் ஏதுவித தகவல்களையும் வெளியிடவில்லை என மக்கள் கண்காணிப்புக் குழு குற்றம் சுமத்தியுள்ளது. கடத்தப்பட்டவர்களில் 99 விழுக்காட்டினர் தமிழர்கள் எனவும் இவர்களின் சுயவிபரங்களை திரட்டி வைத்துள்ளதாகவும் மக்கள் கண்காணிப்புக் குழு சுட்டிக்காட்டுகின்றது. இவ்வாறு காணாமல் போனோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளதாக சிறீலங்கா…

  10. மேலும் 3 லட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயரும் ஆபத்து நேரலாம்! இப்படி ஐ.நா. மதிப்பீடு இலங்கையின் தற்போதைய மோதல் சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது இவ்வருடம் மேலும் மூன்று லட்சம் மக்கள் உள்நாட்டில் இடம்பெயரக்கூடிய அபாயகரமான சூழ்நிலை காணப்படுவதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பு அத்தகைய நெருக்கடி ஏற்பட்டால் அதனை எதிர்கொள்வதற்காகத் தனது கட்டமைப்புகளைத் தயார்ப் படுத்தியும் வருகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதாபிமான விவகாரங்களுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள இலங்கைக்கான பொதுவான மனிதாபிமான செயற்பாட்டுத் திட்டம் குறித்த அறிக்கையிலேயே இது பற்றித் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008இல் இலங்கையில் பாதுகாப்பு சூழ்நிலை மேலும் மோசமடையலாம் எனத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள…

  11. இரவு பகலாக மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டாலும் பௌத்த துறவிகள் சிலர் எதிர்மாறான செயற்பாடு [25 - February - 2008] * இன்றைய அவலத்திற்கு இதுவே காரணம்; கலாநிதி விக்கிரமபாகு கௌதம புத்தர், விடயங்களை ஆராய்ந்து உண்மையின் பிரகாரம் செயற்படுமாறே தமது சீடர்களுக்கு போதித்தார். ஆனால், எமது நாட்டிலுள்ள சில பௌத்த துறவிகள் இரவு பகலாக மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டாலும் மாறாக செயற்படுவதே இன்றைய நிலைமைகளுக்கு காரணம் என்று இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை திராவிட இயக்கத்தின் தலைவர் ஈ.மா. அருமைதாசனின் நினைவஞ்சலிக் கூட்டம் கடந்த புதன்கிழமை கொழும்பு புறக்கோட்டை பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்ட கலாநிதி விக்ரமபாகு …

    • 3 replies
    • 1.8k views
  12. யாலகாட்டில் விஷேட பயிற்சிபெற்ற 40 பேரைக்கொண்ட புலிகளின் அணி [25 - February - 2008] யாலகாட்டுப்பகுதியில் விஷேட பயிற்சிபெற்ற 40 பேரைக் கொண்ட விடுதலைப்புலிகளின் அணியொன்று சுற்றித்திரிவதாக இராணுவ புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த 40 பேரைக்கொண்ட விஷேட படையணியில் நன்கு பயிற்சி பெற்ற 4 பெண்புலிகளும் உள்ளடங்குவதாகவும் புலனாய்வுத் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான இராணுவ புலனாய்வுத் தகவல்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; `யால, புத்தல காட்டுப் பகுதிகளில் விஷேட பயிற்சி பெற்ற 40 பேரைக் கொண்ட அணியொன்று செயற்பட்டுவருகின்றது. இந்த அணி ராம் மற்றும் ராகுலன் ஆகியோரின் தலைமையின் கீழ் வழிநடத்தப்பட்டு வருகின்றது. இந்த 40 பேரைக் கொண்ட குழ…

    • 6 replies
    • 3.1k views
  13. மகிந்தவின் முட்டாள்த்தனமான போரினால் என்றேனும் ஒருநாள் இலங்கையின் வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள் கொசோவோவாக பிரியும் என்று சிங்கள வார ஏடான "இருதின" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  14. மன்னார் நகரத்தை அண்டி படையினரின் நிலைகளில் இருந்து விடுதலைப் புலிகளின் பகுதிகளை நோக்கி நேற்றுப் பலத்த ஷெல்இ பீரங்கித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதனால் ஏற்பட்ட அதிர்வுகளினால் அப்பகுதி மக்கள் பெரும் பதற்றமடைந்து காணப்பட்டனர். இதேசமயம்இ,நேற்று மன்னார் பகுதியில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் படுகாயமடைந்த நான்கு இராணுவத்தினர் மன்னார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின்னர் வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட விருந்தனர். இதற்கிடையில் வடக்கின் கள முனைகளில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற பல்வேறு மோதல்களில் பத்து இராணுவத்தினர் படுகாயமடைந்தனர் என்று படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வவுனியா, முள்ளிக்குளப் பகுதியில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற…

    • 3 replies
    • 2.2k views
  15. இலங்கைத் தமிழர்களின் "தமிழர் தாயகம்' குறித்து பகிரங்க விவாதமொன்றிற்கு வருமாறு அமெரிக்காவின் முன்னாள் உதவி சட்டமா அதிபர் புருஸ் பெய்ன் அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதுவர் பேர்னாட் குணத்திலகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். பேர்னாட் குணதிலகவிற்கு தாம் எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளவை வருமாறு: தமிழ், தாயகம் தொடர்பாக பெப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் என்னுடன் பகிரங்க விவாதத்தில் ஈடுபட முன்வருமாறு அழைப்பு விடுக்கிறேன். நீங்கள் பெருமையாகச் சொல்லிக் கொள்வது போலஇ இலங்கை அரசு தமிழர்களை முதல்தர பிரஜைகளாக நடத்துகிறதென்றால் அவர்களுக்கு குறைபட்டுக் கொள்வதற்கு எதுவுமில்லை யென்றால் தனி நாடா அல்லது ஐக்கியமா என்பதை தமிழ் மக்கள் வெளிப்படுத்துவதற்…

    • 7 replies
    • 2.6k views
  16. கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் படையினரும் பொலிஸாரும் இணைந்து தீவிர சோதனை ! கொழும்பிலும் சுற்றுப் புறங்களிலும் முப்படையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்று அதிகாலை முதல் நண்பகல் வரை விசேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். வெளியிடங்களிலிருந்து கொழும்புக்குள் வந்த பஸ்கள் உட்பட சகல வாகனங்களும் பயணிகளும் கடும் சோதனைக்குள்ளாக்கப்பட்டதுடன

    • 0 replies
    • 832 views
  17. Started by NMa,

  18. இலங்கையில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட யார் காரணம்? : இந்தியா தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம் புதுடில்லி: விடுதலைப்புலிகளுடன் அமைதி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு, கடும் சண்டையில் இலங்கை ராணுவம் இப்போது இறங்கி விட்டது; ஆனால், கடந்த சில ஆண்டுகளாக நீடித்த சண்டை நிறுத்த ஒப்பந்தம் பின்னணியில் இந்தியா இருந்தது பலருக்கும் தெரியாத ரகசியம். இலங்கை அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே நடந்து வரும் கடும் சண்டையை இந்தியா, "அமைதி பார்வையாளராக' பார்த்து வருகிறது என்று தான் பலரும் நினைத்து வருகின்றனர். ஆனால், இலங்கையில் அமைதி ஏற்பட வேண்டும்; சண்டையால் பலனில்லை என்று முடிவுக்கு வந்து, அந்த நாட்டுக்கு உதவ முன்வந்தது இந்தியா தான். தொடர்ந்து போர் நீடிக்கும்: அதிபராக ரணசிங்கே …

  19. வடக்கிலும் விரைவில் மாகாணசபை தேர்தல் அமைப்பாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி அறிவிப்பு 2/24/2008 7:20:19 PM வீரகேசரி நாளேடு - நாட்டை பிரிக்காது, காட்டிக் கொடுக்காது அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்திற்கமைய தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள் ளப்படும். புலிகளின் தலைவர் பிரபாகரனே 13ஆவது திருத்தத்தினை அமுல்படுத்த தடைபோட்டவரா வார் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்திய பின்னர் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படும். அதேபோல் வடக்கிலும் விரைவில் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டு நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்…

  20. ஒன்பது போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் சிறீலங்காப் படையினருடன் ஏற்பட்ட மோதல்களில் வீரச்சாவடைந்துள்ள ஒன்பது போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 22-02-2008 அன்று… 1) லெஃப்ரினன்ட் கலைச்சுடர் அல்லது தங்கமலர் என்றழைக்கப்படும் யாழ் மாவட்டத்தை நிலையான முகவரியாகவும், 8ஆம் வாய்க்கால், மாணிக்க பிள்ளையார் கோவிலடி, உருத்திரபுரம், கிளிநொச்சியை இடைக்கால முகவரியாகவும் கொண்ட கந்தசாமி கேமனா, 2) கப்டன் கடலொளியன் என்றழைக்கப்படும் மட்டக்களப்பு மாவட்டத்தை நிலையான முகவரியாகக் கொண்ட சாமித்தம்பி கோவிந்தன், 21-02-2008 அன்று… 1) வீரவேங்கை செல்வக்கதிர் என்றழைக்கப்படும் 5ஆம் வட்டாரம், இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவைச் சேர்ந்த சாமிந…

  21. ஈழப் பிரச்சினையில் அமெரிக்காவின் தலையீட்டை அம்பலப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  22. மன்னார் பாலைக்குழியிலிருந்து அடம்பன் நோக்கி முன்னேறிய சிறிலங்காப் படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தினர். இதில் 10-க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டனர். 20-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

  23. ------------------------------------------------------------------------------------------------------------------------------------

  24. Started by nunavilan,

    கொசோவோ பாடங்கள் [24 - February - 2008] முன்னாள் யூகோஸ்லாவிய சம்மேளனத்தில் எஞ்சியிருக்கும் பெரியநாடான சேர்பியாவில் இருந்து பிரிந்து செல்வதற்கு அல்பேனிய இனத்தவர்களை அதிகப்பெரும்பான்மையாகக் கொண்ட கொசோவோ மாகாணம் கடந்த வாரம் செய்த சுதந்திரப் பிரகடனம் அரசொன்றை அங்கீகரிப்பதில் இருக்கக் கூடிய தகுதிகள் பற்றி உலகில் இன்று பரந்தளவில் விவாதங்களை மூளவைத்திருக்கிறது. கொசோவோவை சுதந்திரநாடாக முதன்முதலில் அமெரிக்கா அங்கீகரித்திருக்கின்றமையும

    • 1 reply
    • 1.3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.