Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஞாயிறு 10-02-2008 16:12 மணி தமிழீழம் [மகான்] மட்டு உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பணியில் 4 ஆயிரம் காவல்துறையினர் மட்டக்களப்பில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் போது 4 ஆயிரம் சிறீலங்காக் காவல்துறையினர் பணிக்கு அமர்த்தப்படவுள்ளதாக சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவர்கள் உள்ளுராட்சித் தேர்தலின் போது சிறீலங்கா ஆயுதப்படையினருடன் இணைந்து தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. pathivu.com

  2. பாதுகாப்புச் செலவினம் எந்தவகையிலும் குறைக்கப்படமாட்டாது: மகிந்த சிறீலங்காவில் பணவீக்கம் அதி உச்சத்தை அடைந்திருந்த போதும் பாதுகாப்புக்கான செலவீனம் எவ்விதத்திலும் குறைக்கப்படமாட்டாது என சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அவர்கள் ''இந்தியா டுடே'' சஞ்சிகைக்கு அளித்த செவ்வியிலே குறிப்பிட்டுள்ளார். பணவீக்கம் அதி உச்ச நிலையில் சிறீலங்காவில் நிலவும்போது, சிறீலங்கா மக்கள் போர்ச் செலவீனங்களை அதிகரித்துக் கொண்டு செல்வதை விரும்புவார்களா என்று ''இந்தியா டுடே'' நிருபர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும்போதே மேற்கண்டவாறு சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  3. சிறிலங்காவில் 2000 ஆம் ஆண்டில் இருந்து 2005 ஆம் ஆண்டு வரையிலும் நடைபெற்ற ஆயுதக்கொள்வனவுகளில் நடைபெற்ற ஊழல்களில் முப்படையினரின் தளபதிகளும், மேலும் பல மூத்த அதிகாரிகளும் சம்பந்தப்பட்டுள்ளதாக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  4. மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. 3ஆவது மேடையில் இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது!

  5. சிறிலங்காவின் துணைப்படை ஆயுததாரி கொல்லப்பட்டார் சிறிலங்காவின் துணைப்படை ஆயுததாரி கொல்லப்பட்டார் பிள்ளையான் அணியைச் சார்ந்த துணைப்படை ஆயுததாரி அடையாளம் தெரியாத நபரால் இன்று பகல் சுட்டுக்கொhல்லப்பட்டார். உந்துருளியில் வந்த இரு ஆயுதம் ஏந்திய நபர்களால் அம்பாறை மாவட்டத்தின், திருக்கோயில் நகரத்தில் வைத்து துணைப்படை ஆயுதாரி கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் 23 வயது நிரம்பிய கனகரட்னம் யோகி என அடையாளம் காணப்பட்டுள்ளார். http://www.pathivu.com/

    • 0 replies
    • 1.7k views
  6. சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரிகளுக்கு இந்தியாவில் பயிற்சி. 09.02.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா இராணுவ உயர்அதிகாரிகள் குழுவென்று இந்தியாவில் பயிற்சி பெற்றுவருவதாக இந்திய ஊடகமொன்று செய்திவெளியிட்டுள்ளது. படையப்புலனாய்வுத்துறையினரை உள்ளடக்கிய இந்த அதிகாரிகளுக்கு புனேயில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்னர் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இந்தியாவின் பல்வேறு படைத்தளங்களில் இவர்களுக்கான பயிற்சிகள் நடைபெறும் என்றும் இதுகுறித்த தகவல்கள் வெகு இரகசியமாகப் பேணப்படுவதாகவும் அவ்ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

    • 3 replies
    • 1.2k views
  7. பெர்ணாண்டோ புள்ளேயின் நியமனம் போகல்லாகமவால் நிராகரிப்பு. 09.02.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால் தற்காலிக வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளேயால் வழங்கப்பட்டிருந்த மூன்று வெளிநாடுகளிற்கான தூதர்களுக்கான நியமனங்களை சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம நிராகரித்திருப்பது- ரோகிதபோகல்லாகம ஜனாதிபதி மகிந்தராஜபக்சவுடன் நேரடியாக முட்டிமோதுவதாக இராஜதந்திரவட்டாரங்களால் கருதப்படுகின்றது. அண்மையில் ஜெயராஜ் பெர்ணாண்டோ புள்ளே மகிந்தராஜபக்சவால் தற்காலிக வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் மூன்று வெளிநாடுகளுக்கான தூதுவர்களை நியமனம் செய்திருந்தார். அதன்படி ஏச்.எம.ஜி.எஸ் பலிகக்…

    • 0 replies
    • 1.3k views
  8. ஒடுக்கப்படும் தமிழ் மக்களும் ஏமாற்றப்படும் சிங்கள மக்களும் [09 - February - 2008] * வடக்கு, கிழக்கு இணைக்கப்பட்ட தமிழர்கள், முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசத்தில் சுயாட்சி அமைப்பொன்றை ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் நடைமுறைக்கு கொண்டுவந்து அதிகாரப் பகிர்வை வழங்குவதே அரசினால் பயங்கரவாதம் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வாக இருக்கமுடியும். ஆனால், ஜனாதிபதியின் சுதந்திர தின உரையானது ஒற்றையாட்சி, பதின்மூன்றாவது திருத்தப் பகுதிகள் என்பன பற்றியே மீள் உரைப்புச் செய்து கொண்டது. இதன்மூலம் பேரினவாத வேதாளம் மீண்டும் முருங்கையில் ஏறிக் கொண்ட கதையைத் தான் நினைக்க வேண்டியுள்ளது. காலகண்டன் கடந்த 4 ஆம் திகதி இலங்கைக்கு சுதந்திரம் என்பது வழங்கப்பட்டதன்…

    • 3 replies
    • 988 views
  9. அமைதிக்கு எதிரி இராசபக்சே பிரிட்டன் நாடாளுமன்றத்தில் குற்றச்சாற்று இலங்கைப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிக்கு ராஜபக்சே அதிபராக உள்ள இலங்கை அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று இங்கிலாந்து அமைச்சர் குற்றம் சாற்றியுள்ளார். இலங்கை இனச்சிக்கலைத் தீர்க்க அங்கு வாழும் தமிழர்களுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று இங்கிலாந்து வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஹிம்ஹாவல் வலியுறுத்தியுள்ளார். இலங்கை இனச்சிக்கலைத் தீர்ப்பதற்கான அமைதி ஏற்படுத்தும் முயற்சிக்கு உதவவும் தயாராக இருப்பதாக அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் விவாதம் இலங்கை இனச்சிக்கல் குறித்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பல்வேறு கட்சியினரும் பங்கேற்ற…

  10. ஓயாத அலைகள் 3 இன் போது கைப்பெற்றப்பட்ட தெற்கு அடம்பன் உள்ளிட்ட பகுதிகளை இராணுவம் மீளக் கைப்பெற்றி தொடர்ந்து மன்னார் நகரில் இருந்து வடக்கு நோக்கி முன்னேறி வருவதாக இராணுவப் பேச்சாளரை மேற்கோள் காட்டி டெயிலி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது..! இச்சண்டையில் 12 புலிகளின் உடலங்களை தாங்கள் கண்டிருப்பதாகவும் இராணுவத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும் இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது. கள முனையில் இராணுவத்தின் முன்னேற்றங்களை விடுதலைப்புலிகள் நேரடியாக ஒப்புக்கொள்ளா விட்டாலும்.. செய்திகளில் மோதல்கள் நடக்கும் இடங்களின் பெயர்களை மாற்றி வருவதை அவதானிக்கலாம். உயிலங்குளத்தில் ஆரம்பித்த சண்டை அப்புறம் பாப்பாமோட்டை.. பாலக்குழி வரை தொடர்ந்து இப்போ அடம்பன் வரை நகர்ந்திருக்கிறது. இது…

  11. வவுனியா மாறம்பைக்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வீடுகளில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டபோது பொதுமக்களினால் சுற்றிவளைத்துப் பிடிக்கப்பட்ட 6 சந்தேக நபர்களை எதிர்வரும் 22 ஆம் நாள் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா மாவட்ட நீதிபதி எம்.இளஞ்செழியன் காவல்துறையினருக்கு இன்று உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  12. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபச்சவின் சகோதரரான பசில் ராஜபக்சவுக்கு அமைச்சுப் பதவியைக் கொடுக்கும் நோக்கில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேயின் அமைச்சுப் பதவியைப் கைமாற்றத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  13. சிறிலங்காவின் சப்ரகமுவ மாகாண ஆளுநர் ரெஜி ரணதுங்க வாகன விபத்தில் உயிரிழந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிறீபதி சூரியராச்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு நியமிக்கப்படவுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  14. மன்னார் பண்டிவிரிச்சான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல் முயற்சிகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  15. மன்னாரில் இருமுனைகளில் இன்று சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வுகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  16. தமிழரைக் கொன்று குவிக்க இந்திய அரசு உதவி நன்றி தெரிவிக்கிறார் சிங்கள அமைச்சர் ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க சிங்களக் கடற்படைக்கு இந்தியக் கடற்படை பெரும் துணை புரிந்ததாக சிங்களக் கடற்படைத் தளபதி வசந்தா கரணகோடா என்பவர் "கொழும்பு போஸ்ட்" என்னும் பத்திரிகைக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது: "ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஒடுக்குவதில் எங்களுக்கு இந்தியக் கடற்படை மிகச்சிறந்த வகையில் ஒத்துழைத்தது. கடற்புலிகளை எதிர்கொண்டு போராடுவதற்கு இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை ஆகியவை எங்களுக்குப் பேருதவி புரிந்தன. இந்தியக் கடற்படையும் இலங்கைக் கடற்படையும் ஆண்டுதோறும் நான்குமுறை கூடிப் பேசுகின்றனர். மேலும்…

  17. சுதந்திர தினத்தன்று குடும்பிமலையில 16 அடி புத்தர் சிலை திடீரென முளைத்ததன் மூலம் சிங்களப் பேரனவாதம் தமிழர் தாயகத்தை அபகரிக்பப் போவது நிரூபணமாகியுள்ளதாக மட்டு. மாவட்ட த.தே.கூட்டமைப்பின் பா.அரியநேத்திரன் எம்.பி தெரிவித்தார். 60 வருடத்திற்கு முன்னர் இரத்தம் சிந்தாமல் பெறப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாக்க இன்று இரத்தம் சிந்தப்படுகின்றது. குடும்பிமலையில் சுதந்திர தினத்தன்று 16 அடி புத்தர் சிலை முளைத்தள்ளது. இதன் மூலம் தமிழர் தாயகத்தை சிங்களப் பேரினவாதம் அபகரிககப் போவது நிரூபணமாகியுள்ளது. கிழக்கின் உதயம் என்ற போர்வையிலேயே இவை மேற்கொள்ளப்படுகிறது. எனினும், தமிழர் சக்தியை ஸ்ரீலங்கா அரசினால் இலகுவில் அழித்து விட முடியாது என்றார். நன்றி தினக்குரல்

    • 4 replies
    • 1.9k views
  18. புலிகள் விஷயத்தில் கலைஞரின் உள்ளம் வேறு; நிலை வேறு! - சொல்கிறார் சுப.வீ இலங்கையின் போர் பதற்றம் தமிழக அரசியலில் தடதடத்து எதிரொலிக்கிறது. இந்த முறை கொஞ்சம் அழுத்தமாகவே காங்கிரஸார் புலி எதிர்ப்புக் குரல் கொடுக்க, திடீர் நண்பனாய் வந்து ஒட்டிக்கொண்ட அ.தி.மு.க.வும் அவர்களோடு சேர்ந்து சட்டசபையிலிருந்து வெளிநடப்புச் செய்திருக்கிறது. ஆனால் எந்தவித பதற்றமுமின்றி கூட்டணிக் கட்சிகளைச் சமாளித்து சாமர்த்தியமாக காய் நகர்த்தி வருகிறார் முதல்வர் கருணாநிதி. இந்நிலையில் தி.மு.க.வின் தீவிர விசுவாசியும், ஈழத்தமிழர்களுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருபவருமான ‘திராவிட இயக்கத் தமிழர் பேரவை’யைச் சேர்ந்த சுப.வீரபாண்டியனைச் சந்தித்தோம். எப்போதும் இல்லாத வகையில் புலிகளுக்கு …

    • 1 reply
    • 1.9k views
  19. புதிய மொந்தையில் புளித்த கள் -மறவன்புலவு க. சச்சிதானந்தன் 1935இல் இந்திய அரசுச் சட்டத்தைப் பிரித்தானிய அரசு நிறைவேற்றியது. இந்தியத் தேசியவாதிகளுக்கு அந்தச் சட்டம் எட்டிக் காயானது. இந்தியா மீதான மேலாதிக்கத்துக்கு மேலும் வலுவூட்டும் சட்டம் எனக் கூறினர்; ஏற்க மறுத்தனர். தன் மேலாதிக்க நோக்கை நிறைவேற்றவும் நீடிக்கவும் அரசியல் அடிமைகளாக இந்திய மக்களைத் தொடர்ந்து வைத்திருக்கவும் இத்தகைய சட்டங்கள் பிரித்தானிய அரசுக்குச் தேவை என இந்தியத் தேசியவாதிகள் கருத்துத் தெரிவித்தனர். 1978இன் இலங்கை அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை 1987 கார்த்திகையில் இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றிய பொழுது, தமிழர் மீதான சிங்கள மேலாதிக்கத்தை நீடிக்க உதவும் திருத்தம் எனத் தமிழ்த் தேசியவாதிகள் கூ…

  20. வயிற்றில் உணவுப் பொதியை மறைத்து எடுத்துவந்த தமிழ்ப் பெண் கைது! நாசவேலைக்கான ஒத்திகை எனச் சந்தேகம்.நாசவேலைக்கான ஒத்திகை எனச் சந்தேகம். உணவுப் "பார்ஸல்' ஒன்றைத் தனது வயிற்றின் முன்புற ஆடைக்குள் பதுக்கி மறைத்து வைத்திருந்த தமிழ் யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டார். ஏதேனும் நாசவேலை ஒன்றுக்கான ஒத்திகையாக இந்த நடவடிக்கையில் அவர் ஈடுபட்டாரா என்பது குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர் என்று கூறப்படுகின்றது. நேற்று முற்பகல் கண்டி, திகணப் பகுதியில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்துக் கூறப்படுவதாவது: கண்டி மணிக்கூண்டுக் கோபுரத்துக்கு அருகில் கண்டி திகண பஸ் ஒன்றில் ஏறிய அந்தப் பெண்ணின் செயற்பாடு குறித்து "119' இலக்க அவசர தொலைபேசி அழைப்பு மூலம் பொலிஸாருக்குத் தகவல் கிடை…

  21. புதிய சிங்கள ஆளும் வர்க்கத்தின் தீர்வு முயற்சியும் கற்பனாவாதமும் -தாரகா- அரசியலை சுவார்ஷ்மாகவும் எள்ளல் பாணியுடனும் எழுத வேண்டுமென்று எண்ணுபவர்களுக்கு சிறிலங்கா ஒரு மிகச் சிறப்பான தேசமாகும். உலகில் வேறு எங்கும் இவ்வாறான சிறப்பான தன்மைகளை நாம் கானமுடியாது. அரசியலை இந்தளவிற்கு கோமாளித்தனமாக கையாளும் அரசியல் வாதிகள் வேறு எந்த நாட்டிலும் இருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அரசியல்வாதிகள்தான் தங்களது அரசியல் ஏகபோக நலன்களுக்காக கோமாளிக் கூத்தாடுகின்றார்கள் என்றால், இவ்வாறான ஒரு அரசை சகித்துக் கொண்டு சிங்கள மக்களால் எவ்வாறு இருக்க முடிகின்றது? இதுவும் சிறிலங்காவைப் பொருத்த வரையில் இன்னொரு பெரிய வேடிக்கையான விடயமாகும். இதனை சிங்கள மக்களின் அறி…

  22. மன்னார் பண்டிவிரிச்சான் நோக்கிய சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 812 views
  23. இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைகள் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் முடிவற்ற துயரத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. எனத் தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம். விடுலைப் புலிகளை இராணுவ ரீதியாகத் தோற்கடிக்க முடியாது என்றும் கருத்து வெளியிட்டுள்ளார். புது டில்லி இந்தோ-ஆசிய செய்திச் சேவைக்குஅளித்துள்ள பேட்டியில்லேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளர். 'தமிழர் தாயகத்திற்கான விடுதலைப் புலிகளின் போராட்டம் மக்கள் போராட்டமாகப் பரிணமித்துள்ளது' என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சாதாரண கிரமத்தவர்கள் ஆயுதமேந்தியுள்ளனர். இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியினரின் நடமாட்டத்தைத் தடுப்பதற்காக அவர்கள் 24 மணிநேரமும் கண்காணிப்ப…

  24. ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் படுகொலை தொடர்பான உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 636 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.