ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
மன்னாரில் இரு முனைகளில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சிகள் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
கொள்ளையடிக்கச் சென்ற துணை ஆயுதக்குழுக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் நாவற்காடு பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டினுள் கொள்ளையடிக்கச் சென்ற, பிள்ளையான் அணியினர் ஐவரை, பொதுமக்கள் கையும் மெய்யுமாக பிடித்துள்ளனர். பிடிபட்ட ஐவரில் ஒருவரான கனகரட்னம் அதிரவன் கல்லடி பிள்ளையான் குழுவிற்கு பொறுப்பானவர் என்பது குறிப்பிடத்தக்கது. கொள்ளையடிக்கச் சென்ற துணைப் படைக்குழுவினரிடம் இருந்த டி.56 ரக துப்பாக்கிகளையும் கைப்பற்றிய பொதுமக்கள் காத்தான்குடி காவல் துறையினரிடம் அனைத்தையும் ஒப்படைத்துள்ளனர். காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட ஐவரும் தாம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனத் தம்மை அடையாளப்படுத்தியுள்ளனர். கல்லடி பிள்ளையான் முகாம் சிறீலங்கா படைகளின் பாதுகாப்புக்குட்பட்டிருப்ப
-
- 3 replies
- 2.2k views
-
-
இலங்கையில் போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைபட்சமாக வெளியேறிய நிலையில் சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கினை புரிந்துகொண்டு தமிழர் தேசத்தின் நியாயமான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று வியாழக்கிழமை (10.01.08) வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்கா அரசின் இனவாதப் போக்கினை புரிந்துகொண்டு தமிழர் தேசத்தின் நியாயமான போராட்டத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் 2002 ஆம் ஆண்டு நோர்வே அரசாங்கத்தின் ஆதரவுடன் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையினை சிறிலங்கா அரசாங…
-
- 1 reply
- 972 views
-
-
வியாழன் 10-01-2008 11:42 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] பத்திரிகையாளர்கள் தேசத்துரோகிகள் சில பத்திரிகையாளர்கள் தேசத்துரோகிகள் என முத்திரை குத்தி இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்த கருத்துக்கு, அனைத்துலக செய்தி பாதுகாப்பு நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அனைத்து ஊடகவியலாளர்களது பாதுகாப்பையும் உறுதிப்படுத்த சிறீலங்கா அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையை, நம் மத்தியில் பணியாற்றும் சில பத்திரிகையாளர்களால் மேற்கொள்ளப்படும் தேத்துரோகத்தால் பின்னடையச் செய்கின்றது என கடந்த சனவரி 2ம் திகதி அரச சார்பு பத்திரிகையான ’தினமின’வுக்கு, இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் சரத் பொன்சேக அவர்கள் அளித்த செவ்வியிலே தெரிவித்திருந்தார். இராணுவத் தளபத…
-
- 2 replies
- 1.9k views
-
-
எவருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை புத்தாண்டில் அமைதியும் சமாதானமும் கிடைக்கட்டும் என்று ஆசி கூறி அன்பர்கள், அனுதாபிகளினால் அனுப்பப்பட்ட வாழ்த்து மடல்கள் வருடம் பிறந்து 10 நாட்களாகியும் கூட இன்னமும் தபாலில் வந்து கொண்டிருக்கின்றன. அந்த மடல்களை விரித்துப்பார்க்கும் போது ஒரு சம்பிரதாயத்துக்கேனும் மனம் மகிழக்கூடிய அருகதையுடன் இலங்கையர்களாகிய நாம் இருக்கின்றோமா என்று கேட்க வேண்டியிருக்கிறது. முன்னைய வருடங்களையும் விட 2008 ஆம் ஆண்டில் வன்முறைகள் படுமோசமாக அதிகரிப்பதற்கான அபாயச் சமிக்ஞைகளையே அன்றாடம் காணக்கூடியதாக இருக்கிறது. இவ்வருடம் பிறந்த ஒருவாரகாலத்திற்குள் இரு அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். புத்தாண்டு தினத்தன்று தலைநகர் கொழும்பில் பொன்னம்பல…
-
- 0 replies
- 1.5k views
-
-
சர்வகட்சி ஆலோசனை குழுவின் யோசனைகள் 23 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பா தெரிவிப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள சர்வகட்சி ஆலோசனை குழுவின் யோசனைகள் அடங்கிய அறிக்கை 23 ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான அனுர பிரியதர்சன யாப்பா தெரிவித்தார். சர்வகட்சி ஆலோசனை குழுவினால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் யோசனைகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு கலந்துரையாடியதன் பின்னர் வெளியிடப்படும் இந்த யோசனையை பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அவர் சொன்னார். பாராளுமன்ற கட்டிட தொகுதியில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்…
-
- 0 replies
- 845 views
-
-
மணலாற்றில் தாக்குதல் நடத்த வந்த படையினர் புலிகளால் விரட்டியடிப்பு மணலாற்றுப் பகுதியில் தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளால் விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். மணலாற்றுக் களமுனையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 3:30 மணியளவில் படையினர் தாக்க வந்த வேளை விடுதலைப் புலிகள் பதில் தாக்குதல் நடத்தி படையினரை விரட்டியடித்தனர். இத்தாக்குதலின் போது படையினரின் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. http://www.puthinam.com/
-
- 0 replies
- 855 views
-
-
பயங்கரவாதத்தை ஒழிக்கும் ஒரு கட்டமாகவே போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகினோம் புலிகளை தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகளாக ஏற்கமுடியாது ரட்ணசிறி விக்கிரமநாயக்க பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு கட்டமா கவே போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசு விலகி யுள்ளது. ஒரு தலைப்பட்சமாக அந்த ஒப்பந்தத்தைப் பேணுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒருமாதத்திற்கு நீடிக்கும் பிரேரனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து பேசு கையில் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார் அவர் அப்போது மேலும் கூறியதாவது: சமாதானப் பேச்சுக்கு நாம் என்றும் தயாராகவே உள்ளோம். ஆனால், அதற்காகப் புலிகளை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக நாம் ஏற்க முடியாது. ஜனநாயக ரீதியாகத் த…
-
- 11 replies
- 1.8k views
-
-
எத்தகைய சவால்களுக்கும் முகம்கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளைத் தடை செய்வது தொடர்பாக அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து வருவாதாக மஹிந்தவின் அரசியல் ஆலோசகரும் எம்.பி.யுமான பசில் ராஜபக்ஷ் தெரிவித்தார். 'தினக்குரல்' க்கு நேற்று புதன் கிழமை மாலை இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் :- விடுதலைப்புலிகள் தமது பயங்கரவாதத் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். பயங்கரவாதிகளின் இலக்குகளாக பொதுமக்களும் அரசில்வாதிகளுமாக மாறியுள்ளனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தை தமக்கு சாதகமாகப் புலிகள் பயன்படுத்தினார்கள். ஆயிரக் கணக்கில் அதனை மீறினார்கள். எனவே தான், போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் வெளியேறியது. தோல்வி காணும் புலிகள் இப்போது தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளனர். என்வே, அரசு புலிகளை தடைசெய்வது குறித்து தற்ப…
-
- 6 replies
- 1.8k views
-
-
அரசுடான போரை எதிர்கொண்டு, தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பலம் புலிகளுக்கு உண்டு - பா. நடேசன் சிறீலங்கா அரசுடனான போரை எதிர்கொண்டு, தமிழ் மக்களைப் பாதுகாக்கும் பலம் விடுதலைப் புலிகளுக்கு உண்டு என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று நடைபெற்ற கண்காணிப்புக் குழுவின் தலைவருடனான சந்திப்பை அடுத்தே உடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கம் யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருருந்து தன்னிச்சையாக விலகுவதாக அறிவித்ததுடன், கண்காணிப்புக் குழுவினர் எதிர்வரும் 16ம் நாள் தமது நாடுகளுக்குத் திரும்புகின்றனர். இவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்பும் முன்னர் இவர்களுடன் ஒரு சுமூகமான சந்திப்பை ஏற்படுத்தினோம்.…
-
- 6 replies
- 2.4k views
-
-
கண்காணிப்புக்குழு விடுதலைப் புலிகள் விடைபெற்றுச் செல்லும் இறுதிச் சந்திப்பு இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையேயான விடைபெறும் இறுதி ஒன்று இடம்பெற்றுள்ளது. சந்திப்பானது இன்று காலை 9 மணிக்கு விடுதலைப் புலிகளின் அரசியல் செயலகத்தின் நடுவப் பணியகத்தில் நடைபெற்றது. கண்காணிப்புக் குழுவில் கண்காணிப்புக் குழுவின் தலைவர் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க் உட்பட மேலும் சில கண்காணிப்பு அதிகாரிகளும் கலந்துகொண்டனர். விடுதலைப் புலிகள் தரப்பில் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பபாளர் செ.புலித்தேவன், மனித உரிமைகள் பேச்சாளர் செல்வி ஆகியோர் கலந்துகொண்டனர். சந்திப்பில் சிறீலங்கா அரசாங்…
-
- 2 replies
- 2.5k views
-
-
09.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....9fa097b85867d9a
-
- 0 replies
- 2.1k views
-
-
கிழக்கு தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி போட்டியிடும் [Thursday January 10 2008 04:04:13 PM GMT] [யாழினி] கிழக்கில் நடைபெறவுள்ள உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் தமது கட்சி போட்டியிடும் என, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரேணுகா ஹேரத் தெரிவித்துள்ளார். கிழக்கு தேர்தல் தொடர்பாக ஒட்டுக் குழுக்கள் மத்தியில் மறைமுக மோதல்கள் ஆரம்பித்துள்ள நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி இன்று (வியாழக்கிழமை) தமது நிலைப்பாடு தொடர்பாக அறிவித்துள்ளது. tamilwin.com ஆசை யாரை தான் விட்டு வைத்தது. ரனிலுக்கு ஒரு சின்ன நப்பாசை தான்.
-
- 0 replies
- 985 views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் கல்லடியில் நேற்று புதன்கிழமை இரவு இரண்டு இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர
-
- 0 replies
- 611 views
-
-
யா-எலவில் இடம்பெற்ற கிளைமோர்த் தாக்குதலில் உயிரிழந்த அமைச்சர் தசநாயக்கவின் இறுதிச் சடங்கிற்கு செல்லவுள்ள அரச தலைவர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சர்கள் சிலருக்கான பாதுகாப்பு அதிகாரிகள் தங்குவதற்கு என புத்தளத்தில் உள்ள இரண்டு பாடசாலைகள் முன்னறிவித்தலின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்தியாவின் தலையீடு தீர்வைத் தருமா? போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்க அரசு விலகிக் கொண்டதை எதிர்த்துள்ள இந்திய அரசு, இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வே சரியான வழிமுறையாக இருக்கும் என்று கூறியுள்ளது. இந்திய அரசின் எண்ணத்தை அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி பிரதிபலித்துள்ளார். “சிறிலங்க அரசு அதிகாரப் பகிர்வுத் திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகிறது. அத்திட்டத்தின் தர்க்க ரீதியான முடிவைப் பொறுத்து இந்தியாவின் அணுகுமுறை இருக்கும்” என்று அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். உலக நாடுகளின் வற்புறுத்தலால் ராஜபக்ச அரசு ஏற்படுத்திய அனைத்துக் கட்சி மற்றும் நிபுணர்கள் குழு உருவாக்கிவரும் தீர்வுத் திட்டத்தையே நமது அயலுறவு அமைச்சர் குறிப்பிடுவதாகத்…
-
- 9 replies
- 2.4k views
-
-
அண்மைக்கால குண்டு வெடிப்புக்களுக்கு சிறீலங்கா நீதிமன்றமே பொறுப்பு என நாடாளுமன்ற அமைப்பாளரும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னான்டோப் புள்ளே குற்றம் சுமத்தியுள்ளார். சிங்கள வானொலியான ''இசிர'' வானொலியில் நடைபெற்ற ''பத்திரிகைத் தலைப்பு'' எனும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் மற்றும் படுகொலைகளுக்கு நீதிமன்றின் தீர்ப்புக்களே காரணம் என நீதிமன்றின் தீர்ப்பை பெர்னான்டோ புள்ளே விமர்சித்தார். வீதிச் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட வேண்டும், மற்றும் வீடுகள், விடுதிகளை இரவு நேரங்களில் சோதனையிட முடியாது என்ற சிறீலங்கா உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்களையே அவர் கடுமையாக விமர்சித்துள்ளார். இத்தீர்ப்புக்க…
-
- 3 replies
- 1.5k views
-
-
சிறிலங்கா - இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் ஏற்படுத்தப்பட்ட சிறிலங்காவின் 13 ஆவது அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு அனைத்து கட்சிக்குழுவிற்கு அரச தலைவர் மகிந்த ராஜபக்ச கடும் அழுத்தங்களை கொடுத்து வருவதாக அனைத்து கட்சிக்குழுவில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகள் சிலர் விசனம் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
யுத்த நிறுத்தம் இன்றேல் அமைதிப் பேச்சும் இல்லை 10..01.2008 தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்த நிறுத்த ஒப் பந்தத்தை முறித்துக் கொள்ளும் முடிவை அரசு எடுத்ததை அடுத்து, இன்னும் ஆறு நாள்களில் யுத்த நிறுத்தம் பெயரள விலும் செத்துவிடும். இனி முழு யுத்தம்தான் என்பது உறுதி. "யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே' என் பது போல, பிரகடனப்படுத்தப்பட்ட நான்காவது ஈழ யுத்தம் எதிர்வரும் 16ஆம் திகதி நடைமுறைக்கு வரமுன்னரே பேர ழிவு யுத்தத்துக்குக் கட்டியம் கூறும் போரழிவுகளும் வன் முறைகளும் தலைவிரித்தாடத் தொடங்கிவிட்டன. யுத்த நிறுத்தம் முறிக்கப்படுவது என்பது அமைதிப் பேச்சுக்கான வாய்ப்புகள் நிரந்தரமாக அடிபட்டுப் போகின்றன என்பதைத்தான் குறிக்கின்றது என இலங்கை இனப்பிரச் சினையின் போக்…
-
- 0 replies
- 1.7k views
-
-
மியான்மாரில் சமாதானத்தை நிலைநாட்ட ஒத்துழையுங்கள்- இலங்கையில் மியான்மார் புத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் மியான்மாரின் இராணுவ ஆட்சியால் சமாதானமும் அமைதியும் முடங்கிப் போயுள்ளதை வெளிப்படுத்தி இலங்கையில் மியான்மார் நாட்டைச் சேர்ந்த புத்த பிக்குகள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். கொழும்பில் உள்ள ஐ.நா செயலகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது. சமாதானத்தை நிலைநாட்ட ஒத்துழைப்பு வழங்குமாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புத்தபிக்குள் கோரிக்கை விடுத்துள்ளனர். மியான்மார் புத்த பிக்குகளுக்கு ஆதரவாக சிங்கள புத்த பிக்குகளும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர். -pathivu.com-
-
- 0 replies
- 1.1k views
-
-
சுயநல இலங்கைக்கு தோள் கொடுக்கலாமா? ரவிக்குமார் எம்.எல்.ஏ. கடந்த ஆறு வருடங்களாக நடைமுறையிலிருந்த போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வாபஸ் பெறுவதாக இலங்கை அரசாங்கம் அறிவித்திருப்பதை உலக நாடுகள் பலவும் இப்போது கண்டித்து வருகின்றன. இதன் மூலம் இலங்கை அரசு வெளிப்படையான ஒரு போர்ப் பிரகடனத்தையே செய்திருக்கிறது என்று கருதப்படுகிறது. இனி இலங்கையில் அமைதிக்கான வாய்ப்பு இல்லை என்பதையே இந்த அறிவிப்பின் மூலம் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயின் அரசு பிரகடனப்படுத்தி உள்ளது. 2002-ம் ஆண்டு பிப்ரவரியில் இலங்கை அரசும் விடுதலைப்புலிகளும் செய்துகொண்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தால் முழுமையான அமைதி ஏற்பட்டுவிடவில்லை என்றாலும், அதனால் சுமார் பத்தாயிரம் உயிர்களாவது காப்பாற்றப்பட்டது என்பதை எவர…
-
- 2 replies
- 1.7k views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் வாக்களிக்கும் உரிமையை சிறிலங்கா இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.5k views
-
-
விடுதலைப் புலிகள் மகேஸ்வரன் எம்.பி.யை படுகொலை செய்யவில்லை. மஹிந்த ராஜபக்ஷ்வை புலிகள் ஒரு போதுமே கொலை செய்ய மாட்டார்கள் என ஐ.தே.கட்சி எம்.பி. லக்ஷ்மன் செனவிரட்ண தெரிவித்தார். நாடாளுமன்றில் செவ்வாயன்று அவசரகால சட்டப் பிரேரணையில் பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் :- முன்னைய பல அரசியல் தலைவர்கள் புலிகளால் கொல்லப்பட்டுள்ளார்கள். ஆனால், மகேஸ்வரன் புலிகளினால் கொலை செய்யப்படவில்லை. மகேஸ்வரனை புலிகள் கொல்லவில்லை என்பதை அரசின் பாதுகாப்புத் தொடர்பான பேச்சாளா கெஹெலிய ரம்புக்வெல கூட ஒப்புக் கொண்டுள்ளார். அரசு வரவு செலவுத் திட்டத்தில் வெற்றி பெற பலருக்கு வாக்குறுதிகளை அள்ளி வழங்கியது. இவ் வாக்குறுதிகளை நம்புவதற்கு மகேஸ்வரன் தயாராக இருக்கவில்லை. இந்நிலையிலேயே…
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா அரசாங்கம், அதனுடன் சேர்ந்தியங்கும் டக்ளஸ் மற்றும் அனந்தசங்கரி போன்றோருடன் இணைந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை தகர்ப்பதில் "அயல்நாடு" ஒன்று உதவுகிறது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-