ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143554 topics in this forum
-
சவூதியில் வீட்டு வேலை பார்த்து வந்த இலங்கையைச் சேர்ந்த 28 வயதுப் பெண்ணை சாப்பாடு கூட தராமல் பட்டினி போட்டதால் அவர் பரிதாபமாக இறந்து போனார். அந்த குற்றத்திலிருந்து தப்ப ரூ. 40 ஆயிரம் மதிப்புள்ள வைர நெக்லஸை, அந்தப் பெண்ணை வேலைக்கு அனுப்பிய ஏஜென்சிக்கு கொடுத்துள்ளனர் சவூதி தம்பதியினர். இலங்கையைச் சேர்ந்த பரிதாபத்துக்குரிய வசந்தி (28) என்கிற அந்தப் பெண் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலை பார்க்க வந்தார். தனது சகோதரனின் இருதய அறுவைச் சிகிச்சைக்குத் தேவையான பணத்தை சம்பாதிப்பதற்காக கடல் கடந்து அந்தப் பெண் வந்தார். ஒரு சவூதி தம்பதியின் வீட்டில் அவர் வேலைக்கு விடப்பட்டார். நன்றாக வேலை வாங்கிய அந்த தம்பதியினர், வசந்திக்கு சரியான முறையில் சாப்பாடு கூ…
-
- 3 replies
- 2.3k views
-
-
தமிழக அரசின் துரிதமான திறன் மிக்க நடவடிக்கையால் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என கருணாநிதி அறிக்கை யொன்றின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். அரசின் நடவடிக்கைகளால் தமிழகத்தில் தொடர்ந்தும் அமைதி நிலவுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. அ.தி.மு.க ஜெயலலிதா அன்றாடம் அறிக்கைவிடத் தவறுவதில்லை. தமிழகத்திலே சட்டம், ஒழுங்கு கெட்டு விட்டது. மத்தி அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்,தி.மு.க ஆட்சியை மாற்ற வேண்டும். மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறுவதன் காரணம், தான் மீண்டும் எப்படியாவது பதவியிலே வந்து அமர வேண்டும் என்பதற்காகவே. ஆனால், உண்மையில் அறிக்கையிலே குறிப்பிடுவதைப் போல சட்டம், ஒழுங்க…
-
- 1 reply
- 1.7k views
-
-
மகேஸ்வரன் எம்.பி. படுகொலை தொடர்பில் அமைச்சர் கெஹலியவிடம் வாக்கு மூலம் பெறப்படும். - கொழும்பு நீதிமன்றத்தில் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு 2/7/2008 9:09:48 PM வீரகேசரி இணையம் - மகேஸ்வரன் எம்.பி. படுகொலை தொடர்பில் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்து குறித்து அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேரசிங்க நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார். ஐ.தே.க.வின் கொழும்பு மாவட்ட எம்.பி. தி.மகேஸ்வரனின் படுகொலை தொடர்பான விசாரணை நேற்று கொழும்பு மேலதிக நீதிவான் ரவீந்திர பிரேமரட்ண முன்னிலையில் நடைபெற்றது. இதன்போது மகேஸ்வரன் எம்.பி.யின் குடும்ப நலனைக் ககனிக்கவென மன்றில் ஆஜரான சட்டத்தரணி சுஜீவ சேரசிங்க, பட…
-
- 0 replies
- 1k views
-
-
மன்னார் கடற்பரப்பில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தாக்குதலின் போது உந்துகணைத் தாக்குதலிலேயே சிறிலங்கா கடற்படை படகு முழ்கடிக்கப்பட்டதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா இராணுவம் தனது படை பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் மேலும் ஒரு புதிய படைப்பிரிவினை உருவாக்கத் திட்டமிட்டிருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
அப்பாவி பொது மக்கள் மீது கை வைக்காதே என இந்தியா விடுதலைப்புலிகளை எச்சரிக்க வேண்டும். - வீ ஆனந்தசங்கரி கோட்டை புகையிரத நிலைய மிருகத்தனமான தாக்குதலில் 12 பேர் உயிரிழந்து 100 பொது மக்கள் படுகாயம் அடைந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். கண்டியிலிருந்து தம்புள்ள நோக்கி வந்த பேருந்தில் ஏற்பட்ட குண்டுத் தாக்குதலில் 20 பேர் மரணித்தும் 16 பேர் காயமுற்ற சம்பவமும் படு கோழைத்தனமான செயலாகும். கடந்த வாரம் மன்னார் மடுவுக்கு அண்மையில் ஏற்பட்ட கிளைமோர் தாக்குதலில் மாணவர்கள் சிலர் உட்பட 18 பேர் மரணித்தது மற்றும் பல பேர் படுகாயமடைந்ததும் மகிழ்ச்சிக்குரிய விடயமல்ல. இரு தினங்களுக்கு முன் திருநெல்வேலி தற்கொலைக் குண்டுதாரி முட்டாள் தனமாக தனது உயிரையும் மேலும் நான்கு பேரின் உயிரை எடுத…
-
- 16 replies
- 3.8k views
-
-
உலகஒழுங்கும் சிறிலங்காவின் போரும் பொருளாதாரமும் Sunday, 03 February 2008 (நன்றி - புலிகளின் குரல்) சிறிலங்காவின் பொருளாதாரம் புதிய வருடத்திலே மிக மோசமான நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. பொருட்களின் விலைகள் உயர்ந்திருக்கின்றன. மக்களின் அன்றாட வாழ்வு என்பது கேள்விக்குறியாகியிருக்கின்
-
- 0 replies
- 811 views
-
-
தம்புள்ள பேரூந்து குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடையவர் என 48 வயது சிங்கள மூதாட்டி ஒருவரை சிறீ லங்கா காவல்துறை கைது செய்துள்ளது. ஆதாரம் Daily Mirror Police arrest Dambulla bomb suspect A 48 year old Sinhala woman a resident of Kilinochchi who had brought the bomb which exploded in a private bus at Dambulla on Saturday was arrested by Dambulla police yesterday while she was undergoing treatment for burn injuries at the Dambulla hospital.
-
- 1 reply
- 2.3k views
-
-
பிறேமதாசாவின் கொள்கையைப் பின்பற்றுவோர் போருக்கு ஆதரவு தரவேண்டும் - சனாதிபதி பிறேமதாசவின் கொள்கையைப் பின்பற்றுவோர் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஆதரவு தரவேண்டும் என சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றக் கட்டடத்தில் ரணசிங்க பிறேமதாசவின் உருவப்படத்தைத் திறந்து வைத்த உரையாற்றும் போதே மகிந்த ராஜபக்ச இதனைக் கூறியுள்ளார். இதேநேரம் அரச அதிபர் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார். உரையாடலின் போது விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்திற்கு ஜக்கிய தேசியக் கட்சி தங்களுடன் துணை நிற்க வேண்டும் என தெரிவித்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php…
-
- 3 replies
- 1.3k views
-
-
வடக்கைக் கைப்பற்றும் படைநவடிக்கை நிறுத்தப்படமாட்டாது - லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன வடக்கைக் கைப்பற்றும் சிறீலங்கா அரசாங்கத்தின் படை நடவடிக்கை ஒருபோதும் இடை நிறுத்தப்படமாட்டாது என சிறீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து இன்று கொழும்பில் ஊடகவியலாரிடம் கருத்துரைத்திருக்கும் அந்தஸ்து அல்லாத ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன இதனைக் குறிப்பிட்டுள்ளார். விடுதலைப் புலிகள் தெற்கில் தாக்குதல்களை நடத்துவதைத் நிறுத்தினாலும் வடக்கு நோக்கிய படை நடவடிக்கைகள் தொடரும் எனச் சூழுரைத்துள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 1.2k views
-
-
வரலாற்றில் ஆயுதக்குழுவுடன் தேர்தல் உடன்படிக்கை மேற்கொண்ட பெருமை மஹிந்த அரசாங்கத்தையே சாரும் - ஐ.தே.க. பரிகாசம் 2/7/2008 6:33:23 PM வீரகேசரி இணையம் - இலங்கை வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே முதன்முதலாக ஆயுதக்குழு ஒன்றுடன் தேர்தலில் போட்டியிடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை செய்து கொண்டுள்ள பெருமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தையே சாரும். இது இலங்கையின் அரசியலமைப்பையும் சர்வதேச சட்டங்களையும் மீறிய செயற்பாடாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார். வட கிழக்கில் பயங்கரவாதத்தை தோல்வியடையச் செய்வோம் எனக்கூறும் அரசாங்கம் நாடு முழுவதும் பயங்கரவாதத்தை வியாபிக்க செய்துள்ளது என்றும் அவர் கூறினார்…
-
- 0 replies
- 835 views
-
-
விடுதலைப் புலிகளை தி.மு.க ஆதரிக்கவில்லை சோனியாவுடனான சந்திப்பில் கனிமொழி தெரிவிப்பு 2/7/2008 7:03:42 PM வீரகேசரி இணையம் - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கனிமொழி எம்.பி. முன்தினம் டில்லியில் சந்தித்துப் பேசிய போது விடுதலைப் புலிகளை தி.மு.க.வோ அல்லது தமிழக அரசோ ஆதரிக்வில்லை எனத் தெரிவிததுளாளர். அங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில் இலங்கையில் அப்பாவி தமிழர்களின் நிலை குறித்து தமிழக அரசும் தி.மு.க.வும் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் எந்த சூழ்நிலையிலும விடுதலைப்புலிகளை தி.மு.க.வோ அல்லது தமிழக அரசோ ஆதரிக்கவிலலை என்றும் கனிமொழி தெளிவுபடுத்தினார். மேலும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க.வுக்கு உள்ள உறவு உறுதியாக உள்ளது என்றும் அவர்கள் அனைவரம் ஒற்று…
-
- 6 replies
- 2.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போருக்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச ஐக்கியக் தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 757 views
-
-
வியாழன் 07-02-2008 16:40 மணி தமிழீழம் [மோகன்] கிளைமோர் தாக்குதலில் படுகாயமடைந்து சின்னப் பண்டிவிரிச்சான் பாடசாலை முதல்வர் உயிரிழந்தார் கடந்த 29ம் நாள் மன்னார் மடுக் கிளைமோர் தாக்குதலில் படுகாயமடைந்து அநுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சின்னப் பண்டிவிரிச்சான் பாடசாலை முதல்வர் இன்று சிகிற்சைகள் பலனிற்றி உயிரிழந்துள்ளார். இவரது உடலத்தை மன்னாருக்கு கொண்டு செல்லவதற்கு சிறீலங்காப் படையினர் இழுத்தடிப்புச் செய்து வருகின்றனர். பாடசாலை முதல்வரின் உலடத்தை எடுத்துச் செல்லும் நடவடிக்கையில் மன்னார் மறைமாவட்ட சபையினர் ஈடுபட்டு வருவதாகத் தெரியவருகின்றது. இன்று மதியம் இவரது உடலத்தை கொண்டு செல்லும் முயற்சியும் சிறீலங்காப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள…
-
- 2 replies
- 1.3k views
-
-
பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் கொழும்பில் நேற்று கூடி தற்போதைய நிலைமை குறித்துவிரிவாக ஆராய்ந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக கிரிக்கெட் போட்டிகளை இடைநிறுத்துவதென முடிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் இது தொடர்பாக கல்வியமைச்சு செயலாளர் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் என்றும் சங்கத்தின் செயலாளர் தெரிவித்தார். நன்றி : தமிழ் வின் பாடசாலை மாணவர்களை வெளிமவட்டங்களிற்கு அனுப்புவதை தவிர்க்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் உத்தரவு வீரகேசரி இணையம் - பாடசாலை மாணவர்களை போட்டிகள் அல்லது வைபவங்களில் கலந்துக்கொள்வதற்காக வெளியிடங்களுக்கு அனுப்புவதை தவிர்க்கும்படி கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். மாணவர்களின் ப…
-
- 0 replies
- 857 views
-
-
யுத்தத்தில் எந்தத் தரப்பும் வெற்றிபெறாத ஸ்தம்பித நிலையை நோக்கி இலங்கை' [07 - February - 2008] விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வடபகுதியை வருட முடிவுக்குள் கைப்பற்றப் போவதாக இலங்கைத் தலைவர்கள் கூறுகின்றபோதும் அந்த நம்பிக்கைக்கு பொருத்தமானதாக கள நிலைவரம் இல்லையெனவும் எந்தவொரு தரப்புக்கும் வெற்றிகிட்டாத இராணுவ ரீதியில் ஒரு ஸ்தம்பித நிலையே ஏற்படும் என்று யுத்த விடயங்கள் தொடர்பான ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வருட இறுதியில் ஓய்வுபெறும் போது பயங்கரவாதப் பிரச்சினையை, தனக்கு அடுத்துவரும் தளபதிக்கு விட்டுச் செல்லப்போவதில்லை என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை கொல்லப்போவ…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவில் உள்ள சீன அன்பளிப்பில் கட்டப்பட்ட ஒரே ஒரு சிவில் தேவைக்கான மாநாட்டு மண்டபமான பண்டாரநாயகா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் தற்போது இராணுவ தளபாடக் கண்காட்சியின் மையமாக மாறியுள்ளது. சிங்கள மக்கள் மத்தியில் இராணுவ வெற்றிப் பிரதாபத்தை எடுத்துச் சொல்லவும் சிங்கள இளைஞர் யுவதிகளை இராணுவத்தின் பால் கவரவும் சுமார் 2 பில்லியன் செலவு செய்து இக்கண்காட்சியை மகிந்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. சிறீலங்காவின் 60வது சுதந்திர தினம் சிங்களவர்களால் தமிழர்களை அழிக்கப் பயன்படும் பேராயுதங்களின் கண்காட்சியின் மூலம் கொண்டாடப்படுகிறது..! இவைதான் பன்னாட்டு அரசுகளால் சமாதானம் என்ற போர்வையில் சிறீலங்காவுக்கு செய்யப்பட்ட உதவிகளின் வெளிப்பாடுகள்..! நீங்களும் உங்கள் சகோதர…
-
- 26 replies
- 4.4k views
-
-
நாகர்கோவில் முன்னேற்ற முயற்சிகள் முறியடிப்பு: ஆயுதங்கள் சில மீட்பு வடபோர் முனையில் சிறீலங்காப் படையினரின் முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப் பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. நாகர்கோவில் முன்னரங்க நிலைகள் நோக்கி இன்று அதிகாலை 5 மணியளவில் மேற்கொண்டு வலிந்த முன்னேற்ற முயற்சியே விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. விடுதலைப் புலிகளின் எதிர்த் தாக்குதல்களால், படையினருக்கு ஏற்பட்ட இழப்புகள் காரணமாக படையினர் வலிந்த தாக்குதல்கள் முயற்சிகளை கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். ஒரு மணிநேரம் இப்பகுதியில் கடும் சமர் இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது. இன்றைய மோதலின்போது விடுதலைப் புலிகளால் துப்பாக்கி ஒன்றும், டோப்பிற்றோ நா…
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழீழ விடுதலைப் போரில் இதுவரை 20,251 போராளிகள் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரச்சாவடைந்த மாவீரர்களின் விரிப்பை தமிழீழ மாவீரர் பணிமனை வெளியிட்டுள்ளது. இதில் 31-01-2008ம் ஆண்டு வரை வீரச்வாடைந்த மாவீரர்கள் எண்ணிக்கை உள்ளடக்கப்படுகின்றது. வீரச்சாவடைந்த மாவீரகளின் எண்ணிக்கை 20251 ஆண் மாவீரர்கள் 15959 பெண் மாவீரர்கள் 4292 தரைக்கரும்புலி மாவீரர்கள் 102 கடற்கரும்புலி மாவீரர்கள் 246 எல்லைப்படை மாவீரர்கள் 279 காவல்துறை மாவீரர்கள் 38 மாமனிதர்கள் 18 நாட்டுப்பற்றாளர்கள் 466 http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 2 replies
- 1.2k views
-
-
தமிழர் குணங்கள் அன்றும் மாறவில்லை; இன்றும் மாறவில்லை [07 - February - 2008] [Font Size - A - A - A] * இரத்மலானை இந்துக்கல்லூரியின் முத்தமிழ் விழா அண்மையில் வெள்ளவத்தை இராமகிருஷ்ணமிஷன் மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் ஆற்றிய உரை மீண்டும் உங்கள் கல்லூரி விழாவொன்றில் பங்குபற்றுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன். அதுவும் முத்தமிழ் விழா என்பதால் உங்கள் இயல், இசை, நாடகத் திறமைகளைக் காணும், இரசிக்கும் ஒரு வாய்ப்பைப் பெற்றுள்ளேன். எப்பொழுதுமே ஒரு காலகட்டத்தில் இயல், இசை, நாடக இலக்கியப் படைப்புகள் அக்கால கட்டத்தின் சமகால அரசியல், பொருளாதார, சமூக நிலைமைகளை, சிந்தனைகளை, எதிர்பார்ப்புகளை, வெளிக்கொண்டு வருவனவாக, சித…
-
- 12 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவுக்கான இராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் என்று 10 லட்சம் தமிழ் மக்கள் கையெழுத்திட்ட படிவங்கள் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியிடம் இன்று வியாழக்கிழமை நேரில் கையளிக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 673 views
-
-
ஜனாதிபதி ஆணைக்குழுவும் மனித உரிமை மீறல்களும் [07 - February - 2008] மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு செயலிழக்கும் நிலைமைக்குச் சென்றிருப்பதாகக் கூறப்படுகின்றது. அதன் எதிர்காலமும் கேள்விக்குறியாகவே இருப்பதாக நேற்று வெளியான செய்தியொன்று தெரிவிக்கின்றது. இந்த ஆணைக்குழுவை ஜனாதிபதி செயலகம் கையாளும் முறையே இந்த நிலைமைக்குக் காரணமாகும். இப்போது எழும் கேள்வி என்னவென்றால் இந்த ஜனாதிபதி ஆணைக்குழுவை செயலிழக்க அரசாங்கம் விடப்போகின்றதா அல்லது அதனை அரசாங்கம் பலப்படுத்தப்போகின்றதா என்பதுதான்! இலங்கையில் கடந்த சில வருட காலத்தில் இடம்பெற்ற மிகமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்காகவே இந்த ஆ…
-
- 0 replies
- 899 views
-
-
http://www.keetru.com/periyarmuzhakkam/jan08/singalam.php தமிழ்நாட்டின் பார்ப்பன ஊடகங்கள் - விடுதலைப்புலி களை பயங்கரவாதிகளாக சித் தரித்து - ராஜபக்சேயின் ஆட்சியை நியாயப்படுத்திவரும் நிலையில் - சிங்களர் சமூகத்தைச் சார்ந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் - இலங்கையில் அரச பயங்கரவாதத்தை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார். இந்த அடக்கு முறைக்கு இந்தியா முழு ஆதரவு தருவதை உறுதிப் படுத்திய அவர், இந்திய இடது சாரிகளும், தொழிற் சங்கங்களும் இதைக் கண்டிக்க முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார். ‘விடுதலை சிறுத்தைகள்’ கடந்த ஜன.25 ஆம் தேதி ‘கண்டனமும் இரங்கலும் தேசத் துரோகமா’ என்ற தலைப்பில் எழுச்சியான மாநாட்டை சென்னையில் நடத்தியது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்ட அந்த மாநாட்டில் இலங்கைய…
-
- 0 replies
- 1.8k views
-
-
விடுதலைப் புலிகளிடம் இருந்து வடபகுதியை இவ்வருட இறுதிக்குள் முற்றாக விடுவித்து கைப்பற்றுவோம் என இலங்கையின் அரசியல் தலைவர்ர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள போதிலும், கள யாதார்த்தங்கள் இதற்கேற்றால் போல அமைந்திருக்கவில்லையென தெரிவிக்கும் இராணுவ ஆய்வாளர்கள், இரு தரப்புகளில் ஒன்று வெற்றி பெறுவதற்குப் பதிலாக இந்தப் படைப்பலப் பரீட்சை இறுதியில் இராணுவ முட்டுக்கடைடை நிலையையே எட்டலாம் என எதிர்வு கூறியுள்ளது. 'இராணுவ முட்டுக்கட்டையை நோக்கி இலங்கை நகருகின்றதோ...!' என்ற தலைப்பில் இந்தோ - ஆசிய செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பயங்கரவாதப் பிரச்சினையை தமக்குப் பின்னர் புதிய இராணுவ தளபதிக்கு விட்டுச் செல்லமாட்டார் என இர…
-
- 2 replies
- 2k views
-