ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143327 topics in this forum
-
சர்வகட்சி குழுவின் தீர்மானங்களை இந்தியா வரவேற்றுள்ளது 1/25/2008 5:21:28 PM வீரகேசரி இணையம் - அதிகாரப்பரவல் மூலம் இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியாக, அரசால் அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, இடைக்காலப் பரிந்துரைகளை அளித்திருப்பதற்கு இந்தியா வரவேற்பு தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாக, நேற்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளர் நவ்தேஜ் சர்னா, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள அதிகாரப்பகிர்வு வழிமுறைகள் மற்றும் ஆட்சிமொழி வழிமுறைகள் தொடர்பாக, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு அளித்திருக்கும் இடைக்காலப் பரிந்துரைகள் தொடர்பாக இலங்கை அரசு இந்தியாவிடம் தெரியப்படுத்தியிருக்கிறது. …
-
- 1 reply
- 763 views
-
-
ஈழவேந்தனின் இடத்துக்கு இமாம் தேசியப் பட்டியல் எம்.பியாகிறார் தமிழ்க் கூட்டமைப்பில் முஸ்லிம் ஒருவருக்கு இடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவிருந்த ஈழவேந்தன் அப் பதவியை இழந்தமையை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு தமிழ்த் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் எம்.பியாக முஸ்லிமான சட்டத்தரணி ரஸீன் முகம்மது இமாம் (வயது 63) நியமிக்கப்பட்டிருக்கின்றார
-
- 5 replies
- 1.8k views
-
-
இடைக்கால தீர்வு யோசனை வெற்றுக் காசோலைக்குச் சமம் பிரச்சினைகளும் அதிகரிக்கும் - என்கிறார் விமல் 1/25/2008 12:25:32 AM வீரகேசரி இணையம் - அமைச்சர் திஸ்ஸ விதாரணவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால தீர்வு யோசனையானது வங்கிகளில் கொடுக்கப்படுகின்ற வெற்றுக்காசோலைக்கு சமனானது. இதனால் மேலும் பிரச்சினைகளே அதிகரிக்கும் என்று ஜே.வி. பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச தெரிவித்தார். பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்காக தமது உயிர்களை தியாகம் செய்து கொண்டிருக்கும் முப்படையினர் புலிகளின் தலைவர் பிரபாகரனின் தளத்தை தாக்கியழித்துள்ள இத்தருணத்தில் பிரிவினைவாத சக்திகளின் கரங்களை பலப்படுத்தும் நோக்கிலமைந்த அதிகாரப் பரவலாக்கல் திட்டத்தை முன்வைத்திருப்பதிலிருந்து ஜனாதிபதியின் அட…
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 1 reply
- 1.4k views
-
-
இலங்கைத் தமிழர்கள் சந்தித்து வரும் இன்னல்கள் தொடர்வதைக் கருத்தில் கொண்டு பல ஆண்டுகளாக நிலவிவரும் இலங்கை இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண மத்திய அரசை நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியுள்ளார் தமிழக ஆளுநர் தமிழக சட்ட சபையில் 2008ம் ஆண்டுக்கான முதாலவது கூட்டத் தொடரை புதன்கிழமை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஆளுநர் மேலும் கூறியதாவது : இலங்கைத் தமிழர்கள் பல ஆண்டுகளாக இன்னல்களையும் துன்பங்களையும் எதிர் கொண்டு வருகின்றனர். இவர்களின் பிரச்சினைக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணப்பட வேண்டும். எனவே, இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு அரசியல் ரீதியான தீர்வொன்றை அவர்களுக்கு பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டுமென க…
-
- 0 replies
- 1.7k views
-
-
Posted on : 2008-01-25 அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளா? அரசுத் தரப்புப் பிரதிநிதிகளா? "மலையைக் கெல்லி எலியைப் பிடித்த கதையாக' சுமார் ஒன்றரை வருடத்துக்கும் அதிகமான காலத்தை இழுத்தடித்து, ஒவ்வொன்றும் பல மணி நேரம் நீடித்த அறுபதுக்கும் அதிகமான அமர்வுகளை நடத்தி, கடைசியில் ஒரு சிறிய இடைக்கால அறிக்கையை முன்வைத்திருக்கின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு. ஆக, 1988இல், இலங்கை இந்திய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப் பகிர்வுகளை, நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதியைக் கோரும் ஒரு துண்டு ஆவணத்தோடு வந்திருக்கிறது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு. அரசமைப்புச் சட்டத்தில் விலாவாரியாகக் குறிப்பிடப்பட்…
-
- 0 replies
- 1k views
-
-
வியாழன் 24-01-2008 15:59 மணி தமிழீழம் [மதுசன்] சிறிலங்கா விமானசேவைகளில் பயணித்து இரத்தக்காசு வழங்காதீர் -பிரித்தானிய தமிழர் பேரவை.சிறிலங்கா விமானசேவைகளில் பயணித்து சிறிலங்கா அரசாங்கத்திற்கு இரத்தக்காசு வழங்காதீர் என பிரித்தானியாவாழ் மற்றும் ஐரோப்பா வாழ் மக்களிற்கு பிரித்தானியா தமிழர் பேரவை வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சிறிலங்கா விமானசேவையில் கொழும்புக்கும் மற்றைய இடங்களுக்கும் பயணம் செய்வதைப் புறக்கணிக்குமாறு பிரித்தானிய தமிழர் பேரவை தமிழர்களிடை பரப்புரை ஒன்றினை ஒழுங்கு செய்துள்ளது. பிரித்தானியத் தமிழர் பேரவை 85 தமிழர் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாகும். பிரித்தானியாவில் 3…
-
- 3 replies
- 1.3k views
-
-
அனைத்து கட்சிக்குழுவின் 11 ஆயிரம் பக்க அறிக்கையை குப்பைக்கூடைக்குள் எறிந்துவிட்டு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தன்னிச்சையான தீர்வுத்திட்டத்தை முன்வைத்திருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல குற்றம்சாட்டியுளளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 880 views
-
-
வியாழன் 24-01-2008 22:47 மணி தமிழீழம் [தாயகன்] ப.நோ.கூ.சங்கத்தின் முன்னாள் தலைவர் சுட்டுக்கொலை கொடிகாமம் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவரான 61 அகவையுடைய எஸ். நடேசபிள்ளை இன்று (வியாழக்கிழமை) காலை 6.30 அளவில் வரணி, நாவற்காட்டிலுள்ள அவரது வீட்டின் முன்பாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உந்துருளியில் சென்ற படைப் புலனாய்வாளர்கள் நடேசபிள்ளையை வீட்டிற்கு வெளியே அழைத்து சுட்டுக்கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் பிராந்தியத் தலைவர்களான சுப்பிரமணியம் (கைதடி), கணநாதன் (யாழ்), சிவமகாராஜா (தெல்லிப்பளை) போன்றவர்கள் வரிசையில் நான்காவதாக நடேசபிள்ளை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். யாழ் குடாநாட்டில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தி…
-
- 0 replies
- 1.3k views
-
-
வியாழன் 24-01-2008 22:28 மணி தமிழீழம் [தாயகன்] மணலாற்றில் ஊடுருவல் முறியடிப்பு - ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன மணலாறு சிலோன் தியேட்டர் பகுதியில் சிறீலங்காப் படையினர் இன்று (வியாழக்கிழமை) மாலை 3.00 மணியளவில் ஊடுருவ முற்பட்டபோது விடுதலைப் புலிகளின் கடுமையான எதிர்த்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து மூன்று ரி-56 ரக துப்பாக்கிகள், 40 எம்.எம் துப்பாக்கி, நூறுக்கும் மேற்பட்ட 7.62 எம்.எம் துப்பாக்கி ரவைகள் போன்றவற்றைக் கைவிட்டு பலத்த இழப்புக்களுடன் படையினர் பின்வாங்கியுள்ளனர். மணலாற்றில் இன்று இடம்பெற்ற மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் எவ்வித இழப்பும் ஏற்படவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.5k views
-
-
மன்னாரில் முன்னேற்றம் முறியடிப்பு - படையினர் மூவர் பலி, 16 பேர் காயம் மன்னாரில் சிறீலங்காப் படையினர் இன்று (வியாழக்கிழமை) காலை மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பாலக்குழியில் காலை 6.00 மணி முதல் 8.15வரை இடம்பெற்ற மோதலில் சிறீலங்காப் படையினர் தரப்பில் மூவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 16 படையினர் காயமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடுமையான ஆட்டிலறி எறிகணை சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் முன்னேறிய போதிலும், விடுதலைப் புலிகள் கடும் சமராடி முன்னேற்ற நகர்வு முறியடிக்கப்பட்டது. இன்றைய மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் போராளி ஒருவர் வீரச்சாவடைந்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&am…
-
- 0 replies
- 962 views
-
-
கருணாவிற்கு இராஜதந்திர கடவுச்சீட்டு எதனையும் வெளிவிவகார அமைச்சு வழங்கவில்லையென அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார். இராஜதந்திர கடவச்சீட்டுடன் லண்டன் சென்ற கருணா அங்கு கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், கருணாவிற்கு இராஜதந்திர கடவுச்சீட்டை வெளிவிவகார அமைச்சு வழங்கவில்லை. அத்தோடு தனது பெயரிலான கடவுச் சீட்டுடன் கருணா லண்டனுக்கு செல்லவில்லை என்பதும் தற்போது உறுதியாகியுள்ளது. அது தொடர்பாக தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. விசாரணையின் முடிவிலேயே உண்மை புலப்படும் என்றார். tamilwin.com
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்திய அரசியலமைப்புச் சட்டம் எமக்கு வழங்கியுள்ள கருத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் உண்டா இல்லையா என்பதன் அடிப்படையில்தான் சென்னையில் நாளை வெள்ளிக்கிழமை (25.01.08) "கருத்துரிமை மீட்பு மாநாட்டை" நடத்துகிறோம் என்று தமிழ்நாட்டின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு உள்ளுராட்சித் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுமா என்பது சந்தேகமே? அமெரிக்கா மட்டக்களப்பு உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறுமா எனச் சந்தேகம் எழுந்துள்ளதாக சிறீலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். நேற்று மட்டக்களப்பு சென்றிருந்த அமெரிக்கத் தூதுவர் கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தல் நிலவும் போது அங்கே ஒரு நியாயமான தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்க முடியாது. இவ் ஆயுதக்குழுவின் நடவடிக்கைகளினால் அபிவிருத்திகள் பாதிப்படையும். விடுதலைப் புலிகள் உட்பட அனைத்து ஆயுதக்…
-
- 1 reply
- 735 views
-
-
22.01.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....15fa3c5a946e826
-
- 3 replies
- 2.3k views
-
-
அனைத்துலக ரீதியில் பாரிய பிரசாரம் - மகிந்த பணிப்பு வடக்கில் இடைக்கால நிருவாக சபை ஒன்று ஏற்படுத்தப்ப இருப்பதாகவும், இது தொடர்பாக அனைத்துலக ரீதியில் பாரிய பிரசாரங்களை மேற்கொள்ள வேண்டுமென, சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ பணிப்புரை விடுத்திருக்கின்றார். நேற்றிரவு (புதன்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த உத்தரவை விடுத்த மகிந்த ராஜபக்ஸ, வடக்கிற்கு விரைவில் ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார். வடக்கையும், கிழக்கையும் நீதிமன்றம் ஊடாகப் பிரிப்பதாக அறிவித்த மகிந்த அரசாங்கம், கிழக்கிற்கு ஏற்கனவே தனியான ஆளுநரை நியமித்துள்ளது. வடக்கு கிழக்கிற்கு தனியான ஆளுநர்கள், தனியான நிருவாக அலகுகளை உருவாக்குவதன்மூலம் வடக்கையும், கிழக்கையும் நி…
-
- 0 replies
- 945 views
-
-
வீரகேசரி இணையம் - மத்திய கிழக்கு நாடொன்றுக்கு செல்வதற்காக கொழும்புக்கு வந்த மட்டக்களப்பு இளைஞர்கள் ஏழு பேர் கொழும்பு கோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மட்டக்களப்பைச் சேர்ந்த ஜீவரூபன், நேசராஜா திலக்ஷன், குணநாயகம் பத்மநாதன், கந்தசாமி நிஷாந்தன், இளைய தம்பி, பாக்கியராஜா சபேஷன், யோகேந்திரன் கிருஷ்ணராஜா, பாக்கியராஜா ஹரிஹரன் ஆகிய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ் இளைஞர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
-
- 0 replies
- 812 views
-
-
தமிழ் மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் குணேந்திரன் யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்குள் வைத்து இன்று காலை 10.30மணியளவில் படைப்புலனாய்வாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். துவிச்சக்கரவண்டியில் சென்ற குணேந்திரன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்துவிட்டு தனது வீட்டிற்கு செல்லமுற்படுகையில் துவிச்சக்கரவண்டியில் சிவில் உடையில் பல்கலைக்கழகத்திற்குள்வந்த படைப்புலனாய்வாளர்கள் இருவர் இவரை சுட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இவரது சடலம் யாழ்போதனா மருத்துவமனையில் சிறிலங்கா காவல்துறையினரால் ஒப்படைக்கப்பட்டுள்ளது. sankathiiiiiii
-
- 11 replies
- 3.5k views
-
-
இந்திய தூதுவர் மற்றும் இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடன் வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல் 1/24/2008 12:39:02 PM வீரகேசரி நாளேடு - இடைக்கால அரசியல் தீர்வு குறித்து எடுத்துரைப்பு வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நேற்று இரவு இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மற்றும் இணைத்தலைமை நாடுகளின் தூதுவர்களை வெளிவிவகார அமைச்சில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதன்போது அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவால் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இனப்பிரச்சினைக்கான இடைக்கால தீர்வு யோசனைகள், அதனை அரசியல் யாப்பிற்கு அமைவாக அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துக்கூறியுள்ளார். முன்னதாக நேற்று மாலை 7 மணியளவில் இலங…
-
- 0 replies
- 1k views
-
-
ஆக்கிரமிப்புப் போரை எதிர்கொள்ள உறுதி, அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் : க.வே.பாலகுமாரன்24.01.2008 / நிருபர் எல்லாளன் சிங்களப் படைகள் வன்னியை ஆக்கிரமிக்கும்போரை ஆரம்பித்துவிட்டன. இதனை எங்களது போராளிகள் மிகவும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் எதிர்கொள்ளத் தயாரக இருக்கிறார்கள். போராளிகளின் களப்பணிக்கு எமது மக்கள் தங்களது முழுமையான ஒத்துழைப்புக்களையும் வழங்கவேண்டும் இவ்வாறு விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பிரதேசசெயலகத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற சமகால அரசியல் கலந்துரையாடலில் பங்குகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் சர்வதேச அனுசரணையுடன் இந்தத்தீவில் செய்துகொ…
-
- 0 replies
- 1.3k views
-
-
காலாவதியான காகிதத் திட்டத்துக்கு உயிர் கொடுத்து உசுப்பேற்றும் முயற்சி 24.01.2008 அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களையும் ஏனைய சில கட்சிகளின் தலைவர்களையும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் மாலையில் தமது அலரி மாளிகை இல்லத்துக்கு அழைத்துப் பேச்சு நடத்தினார். அதிகாரப் பகிர்வுக்கான முன்னேற்பாடாக அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் கூறப்பட்டவற்றைத் தாம் நடைமுறைப்படுத்த விழைகின்றார் என்ற தகவலை ஜனாதிபதி அங்கு கூடியிருந்த கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு எடுத்துரைத்தார். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் 1988 இல் இந்திய அமைதிப்படைகளின் பிரசன்ன காலத்தில் கொண்டுவரப்பட்டதே அரசமைப்பின் இந்த 13 ஆவது திருத்தம். அதை அப்போது முழு அளவில் எதிர்த்த மஹிந்தர் அணியே…
-
- 0 replies
- 901 views
-
-
கிளிநொச்சியில் புலிகளின் இலக்குகள் மீது தாக்குதல் கிளிநொச்சி இரணைமடு கிழக்கு கலாமக்குளம் பகுதியில் இன்று முற்பகல் ஸ்ரீலங்கா விமானப்படையினர் விமானத்தாக்குதல் நடத்தியுள்ளனர். விடுதலைபுலிகளின் முக்கிய முகாமொன்றின் மீது இன்ரு முற்பகல் 11.15 மணியளவில் விமானபடையினர் வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ் இலக்கு குறித்த பகுதியில் காட்டுப்பகுதியிலுள்ள விடுதலைப்புலிகளின் இராணுவ இலக்கு மீது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.. -வீரகேசரி இணையம் -
-
- 5 replies
- 4.5k views
-
-
அரசியல் யாப்பின் 13வது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் மாகாண சபை முறைமையினை உடனடியாக முழுமையாக நடைமுறைப்படுத்துவதுடன் கிழக்கு மாகாண சபைத் தேர்தலையும் வடக்கிற்கு இடைக்கால நிர்வாக சபையினையும் ஏற்படுத்த சர்வகட்சி பிரதிநிதிகளும் கட்சித்தலைவர்களும் முடிவெடுத்த நிலையில் அதனை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இறுதி தீர்வு நோக்கிய நடவடிக்கையினை விரைவுபடுத்தவும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
-
- 11 replies
- 8k views
-
-
இந்தியாவினால் இலங்கைக்கு நவீன நீர்மூழ்கி படகு அன்பளிப்பு. The Sri Lankan Navy has put in place an underwater defence system between Kachchatheevu and Neduntheevu (Delft Island) as part of efforts to curtail the movement of Sea Tigers of the LTTE. A communication about laying of sea mines was sent to the Indian Navy, the Indian media reported.
-
- 7 replies
- 3.8k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் விவகாரங்களுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரின் கருத்துக்களைக் கண்டித்து கொழும்பில் உள்ள ஐ.நா. தூதரகத்திற்கு முன்பாக இன்று ஜே.வி.பி. கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.3k views
-