ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
வவுனியாவிற்கான ரயில் சேவை (யாழ்தேவி) நேற்று வியாழக்கிழமை நனபகல் முதல் இடைநிறுத்தபட்ட மதவாச்சிவரையே சேவைகள் நடைபெறுகின்றது. வவுனியாவுக்கான ரயில் சேவை மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளாக நேற்று காலை வவுனியா புகையிரத நிலையத்திற்கு அறிவிக்கபட்டுள்ளது. இதன்படி மறு அறிவித்தல் வரை கொழும்புக்கும் மதவாச்சிக்குமிடையிலே ரயில் சேவை நடைபெறும். கொழும்பிலிருந்து மதவாச்சி வரும் ரயில்கள் அங்கிருந்தே கொழுமபுக்குப் புறப்படும். நேற்று நண்பகல் முதல் இது நடைமுறைக்கு வந்துள்ளதுடன் பயணிகள் எவருக்கும் பயணச்சீட்டு வழங்க வேண்டாமென வவுனியா ரயில நிலைய அதிபருக்கு புகையிரதத் திணைக்களம் அறிவித்துள்ளது. வவுனியாவிலிருந்து இ.போ.ச மற்றும தனியார் பஸ்களில் பயணம் செய்வோர் தகுந்த காரண…
-
- 0 replies
- 890 views
-
-
வியாழன் 29-11-2007 20:12 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பு , கிளிநொச்சி தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் கொழும்பு மற்றும் கிளிநொச்சி மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து இன்று வியாழக்கிழமை வெளியிட்ட பத்திரிகை செய்திக் குறிப்பிலேயே இக்கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பில் கடையொன்றினுளும், பாடசாலை மாணவர்களை ஏற்றிச்சென்ற சிற்றூர்தி மீது மேற்கொள்ளகப்பட்ட தாக்குதல்களுக்கும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த இன முரண்பாடுகளுக்கு சமாதான வழியிலேயே தீர்வு எய்தப்படவேண்டும் எனவும் இராணுவ வழியில் அல்ல எனவும் அதில் மேலும் அச் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php…
-
- 7 replies
- 2k views
-
-
இலங்கைப் பிரச்னை: ஐரோப்பா தலையிட நெடுமாறன் கோரிக்கை டர்பன்: இலங்கைப் பிரச்னையில் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ. நெடுமாறன் கோரிக்கை விடுத்தார். நிகழ்ச்சி ஒன்றுக்காக டர்பன் சென்றுள்ள அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கை அரசின் தவறான கொள்கைகளால் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் புலம்பெயர்ந்து பசி, பட்டினியால் வாடுகின்றனர். இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் தொடர்ந்து மனித உரிமைகள் மீறப்படுகின்றன. அங்கு நடைபெறும் இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்த ஐரோப்பிய நாடுகள் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். -குமுதம்
-
- 0 replies
- 1.3k views
-
-
கொழும்பு தாக்குதலுக்கு கண்டனம்- வன்னி மோதலில் பொதுமக்கள் சிக்குவது குறித்து கவலை: ஐரோப்பிய ஒன்றியம் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 09:03 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் வன்னி, கொழும்பு ஆகிய மோதல் நிகழுமிடங்களில் பொதுமக்களும் சிக்கிக் கொள்வது குறித்து கவலைப்படுவதாகவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகம் இன்று வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் திட்டமிட்ட வகையிலான பொதுமக்களின் மீதான தாக்குதல்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் …
-
- 3 replies
- 1.4k views
-
-
புலம்பெயர் தமிழர்களால் மாவீரர் நாள் உரை தயாரிக்கப்பட்டது என அனைத்துலக சமூகம் சொல்கிறது: பசில் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 08:54 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் மாவீரர் நாள் உரையானது புலம்பெயர் தமிழர்களால் தயாரிக்கப்பட்டது என அனைத்துலக சமூகம் தன்னிடம் கூறியதாக மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், அவரது ஆலோசகருமான பசில் ராஜபக்ச கூறியுள்ளார். கொழும்பு ஊடகவியலாளர்களிடம் பசில் ராஜபக்ச இன்று வியாழக்கிழமை கூறியதாவது: மக்களின் உயிர்களைக் காப்பாற்றவும், பொதுமக்களின் சொத்துக்களுக்கு ஏற்படும் அழிவுகளை தடுப்பதற்கும் மக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டும். இன்றைய சூழ்நிலையில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுவது அவசியம். பி…
-
- 3 replies
- 1.8k views
-
-
http://www.tamilcanadian.com/page.php?cat=365&id=4468 கடந்த வருடம் எழுதப்பட்டிருந்தாலும் இன்றும் இது பொருந்துகிறது.
-
- 0 replies
- 1.7k views
-
-
வியாழன் 29-11-2007 16:16 மணி தமிழீழம் [மயூரன்] மட்டக்களப்பில் இரு சிங்களவர் சுட்டுக்கொலை இன்று மதியம் 12 மணியளவில் மட்டக்களப்பு ஜயங்கேணிப்பகுதியில் இருசிங்களவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது கொல்லப்பட்டவர்கள் 42 அகவையுடைய டொடான் ரட்ணசிறி குணதிலக 22 அகவையுடைய கேவா பொன்சேகா டில்றுக் பொன்சேகா எனவும் தெரியவருகிறது. இதனையடுத்து மட்டக்களப்பு சிறீலங்கா படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.4k views
-
-
இரு நாட்டுப்பற்றாளர்களின் இறுதி வணக்க நிகழ்வு [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 08:42 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] நாட்டுப்பற்றாளர் இசைவிழிசெம்பியன் மற்றும் ம.சுரேஸ்லின்பியோ ஆகியோரது இறுதிவணக்க நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. கிளிநொச்சி கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கலைவாணன் தலைலைமயில் கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் 10:25 மணியளவில் நிகழ்வு நடைபெற்றது. பொதுச்சுடரினை தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளா பா.நடேசன் ஏற்ற, நாட்டுப்பற்றாளர் இசைவிழி செம்பியனின் புகழுடலுக்கு கணவர் செம்பியன் சுடரேற்றி மலர்மாலை சூட்டினார். நாட்டுப்பற்றாளர் சுரேஸ்லிம்பியோவின் புகழுடலுக்கு துணைவியார் சுடரேற்றி மலர்மாலை சூட்டினார். புலிகளின்குரல்…
-
- 0 replies
- 888 views
-
-
அம்பாறை பக்கி மிட்டியாவில் நிலக்கண்ணி வெடியில் சிக்கி 4 அதிரடி படையினர் காயம் வீரகேசரி இணையம் அம்பாறை பக்கியாமிட்டியவில் இன்று புதன்கிழமை முற்பகல் அதிரடிப் படையினரை இலக்கு வைத்து நிலக் கண்ணி வெடித் தாக்குதல் இடம் பெற்றுள்ளது . இதில் 4 விசேட அதிரடிப்படை வீரர்கள் காயமடைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது . காயமடைந்த அதிரடிப்படை வீரர்கள் அம்பாறை பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை பக்கிமிட்டியா , கோவில் சந்தியில் இராணுவத்தினர் பயணித்த பவள் வாகனத்தை இலக்கு வைத்து இன்று முற்பகல் 10.30 மணியளவில் இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்லது . இதனையடுத்து குறித்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்ட…
-
- 3 replies
- 2.5k views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரன் நேற்று முன்தினம் ஆற்றிய உரை வெறும் ஓலங்களும், கெஞ்சல்களும் நிறைந்ததுதான். நேற்று நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய வேளை விமல் வீரவன்ஸ இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் :- புலிப் பயங்கரவாதத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் வெளியிடப்பட்ட 'நம்பிக்கையின்மையின் வெளிப்பாட்டின் மீது' ஒரு சில காரணங்களுக்காகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். எந்த முறையிலாவது நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தாலும் பிரபாகரனுடைய மாவீரர் தின அறிக்கை, அவரது நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அது வேதனை தரக்கூடிய படுதோல்வியிலிருந்து மீள்வதற்காக, வெளியிலிருந்து உதவிக்காகக் கெஞ்சும் நிர்காகதியான ஒருவரது ஓலமேயல்லாது வேறோன்றுமல்ல. ந…
-
- 7 replies
- 2.6k views
-
-
இலங்கை தாக்குதல்களுக்கு கனடா கண்டனம்- அனைத்துத் தரப்பும் வன்முறைகளைக் கைவிட வலியுறுத்தல் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 11:15 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைத் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கனடா. அனைத்துத் தரப்பினரும் வன்முறையைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கனடாவின் வெளிவிவகார அமைச்சு நேற்று புதன்கிழமை (28.11.07) வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவதற்கு குறிப்பாக எதிர்பாராத விதமாகவோ அல்லது இலக்கு வைத்தோ பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கனடா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.. இனங்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக…
-
- 5 replies
- 2k views
-
-
பயங்கரவாதம் களைத்தெறியப்பட்ட வேண்டும் - ஜனாதிபதி வீரகேசரி இணையம் பயங்கரவாதம் உலகத்திலிருந்து களைத்தெறியப்பட வேண்டும்மென ஜனாதிபதி மஹிந்த ராஜபச்ச தெரிவித்துள்ளதாக ஏ.எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது ஆயுதங்களை ஏந்தி போராடும் குழுவினரா ஆயுதங்களை களைத்து அரசியல் நீரோட்டத்தில் இணையுமாறு கோடுகின்றோன் அத்துடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்கு தயராக உள்ளேன் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பானின் அசாசி சிம்புனிற்கு தெரிவித்த்தாக ஏ,எப்.பி செய்தி வெளியிட்டுள்ளது அசாகி சிம்புனி கடந்த 15ம் திகதி கொழும்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேர்காணல் கண்ட போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேவேளை டிசெம்பார் மாதம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஜப்பானிற்கு விஜ…
-
- 4 replies
- 2.2k views
-
-
பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது 12 வான்குண்டுகளை வீசியது சிறிலங்கா வான்படை [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 01:58 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] கிளிநொச்சி புறநகர்ப் பகுதியில் பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா வான்படையின் 3 கிபீர் வானூர்திகள் 12 வான்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. கிளிநொச்சி புறநகர்ப் பகுதியான ஜெயந்திநகரில் நேற்று புதன்கிழமை பிற்பகல் 12:25 முதல் 20 நிமிடங்கள் தொடர்ந்து குண்டுகளை வீசி இத்தாக்குதலை சிறிலங்கா வான்படை வானூர்திகள் மேற்கொண்டன. இதில் 3 வீடுகள் அழிவடைந்தன. சிறிலங்கா வான் படை நடத்திய பகுதிக்கு அருகாமையில் இயங்கி வரும் சிறிலங்கா இராணுவத்தால் ஆதரவற்றோராக்கப்பட்ட சிறார்களைப் பராமரிக்கின்ற காந்தி சிறார் இல்லம், கிறிஸ்தவவ அ…
-
- 0 replies
- 1.5k views
-
-
[புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 12:50 PM ஈழம்] சிறிலங்கா இராணுவத்தினர் பற்றிய தகவல்களை அறிய விடுதலைப்புலிகள் உயர் தொழில்நுட்பங்களையும், கணணி மென்பொருட்களையும் பயன்படுத்தி வருவதாக த பொட்டம்லைன் பத்திரிகை தெரிவித்துள்ளது. அந்த இதழில் வெளியாகியுள்ள செய்தி விவரம்: விடுதலைப்புலிகளின் வான்படையை வடிவமைப்பதில் பிரதான பங்கு வகித்தவர் கேணல் சங்கர். அவர் ஒரு வான் பொறியியலாளர். சங்கருக்குப் பின்னர் ரத்னம் மாஸ்ரர் தற்போது வான்படையின் கட்டளை தளபதியாக பணியாற்றி வருகின்றார். ரத்னம் மாஸ்ரர் என்பது அவரது இயக்க பெயராகும், அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. ரத்னம் மாஸ்ரர் சரளமாக ஆங்கிலம் பேசுவார், அவர் அவுஸ்திரேலியாவில் வான் பொறியியல் கல்வி பயின்றவர். அதன் பின்னர் அமெரிக…
-
- 11 replies
- 3k views
-
-
கொழும்பு 2 தாக்குதல்களுக்கும் வன்னி 3 தாக்குதல்களுக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபை கண்டனம் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 12:56 பி.ப ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா தலைநகரில் நடத்தப்பட்ட 2 தாக்குதல் களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதிகளில் நடத்தப்பட்ட 3 தாக்குதல்களுக்கும் அனைத்துலக மன்னிப்புச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அனைத்துலக மன்னிப்புச் சபை நவம்பர் நேற்று புதன்கிழமை (28.11.07) வெளியிட்ட அறிக்கை: தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் என நம்பப்படும் இரு தற்கொலைக் குண்டுதாரிகளால் நடத்தப்பட்ட தாக்குதலிலில் 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 30-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை தமிழீழ விடுதலைப் பு…
-
- 1 reply
- 1.5k views
-
-
சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை குறித்து.... [29 - November - 2007] விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை வன்னியில் இருந்து நிகழ்த்திய இவ்வருடத்தைய மாவீரர் தின உரையின் பிரதான செய்தி சர்வதேச சமூகத்தைக் குறிவைத்ததாகவே அமைந்திருந்தது. இலங்கை அரசாங்கத்துடன் அரசியல் இணக்கத் தீர்வைக் காண முடியுமென்ற நம்பிக்கை தனக்கில்லை என்றும் தென்னிலங்கையின் எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தும் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்ப்பது அரசியல் அசட்டுத்தனமாகும் என்றும் குறிப்பிட்ட பிரபாகரன் இலங்கை அரசாங்கத்தின் சாதுரியமான, சாணக்கியமான பிரசாரங்களுக்கு பலியாகி அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேச சமூகமும் இழைத்து நிற்கிறது என்று குற்றஞ்சாட்டியி…
-
- 0 replies
- 1.5k views
-
-
முகமாலை முன்னரங்கில் இன்று அதிகாலை மோதல் வீரகேசரி இணையம் வடக்கு முகமாலை முன்னரங்க நிலையில் இன்று அதிகாலை விடுதலை புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது . இதில் 7 விடுதலை புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதுடன் புலிகள் 3 பதுங்கு குழிகள் இராணுவத்தினரால் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 1.10 மணியளவில் முகமாலை முன்னரங்கு பகுதியில் விடுதலை புலிகளிற்கும் இராணுவத்திற்குமிடையே பலத்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலினை இராணுவத்தினர் முறியடித்துள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இராணுவ்த்தினர் டீ-56 ரக துப்பாக்கி யொன்றையும் 01x மகசின்கள் 18டையும் , வெடி பொருட்களையும் மீட்ட…
-
- 0 replies
- 1.7k views
-
-
Posted on : 2007-11-29 விபரீத விளைவுகளுக்கு சர்வதேசமும் பொறுப்பு மாவீரர் தினத்தை ஒட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய உரையும் அந்த மாவீரர் தினத்தில் வன்னி மீது இலங்கைப் படைகள் பல்வேறு முனைகளில் நடத்திய தாக்குதல்களில் 22க்கும் அதிகமான அப்பாவிகள் உயிரிழக்க, டசினிற்கும் அதிகமானோர் காயமடைந்தமையும் புலிகளின் தலைவர் பிரபாகரனை விரைவில் கொன்றொழிப்போம் என இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையில் அதி சக்தி வாய்ந்தவரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சூளுரைத்திருக்கின்றமை பற்றிய செய்தி வெளியாகியமையும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இலங்கைத்தீவின் நிலைமை மிக மோசமான விபரீத கட்டத்துக்குள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
மாவீரர் உரை எனது பார்வையில் மாவீரர் உரை முடிவடைந்தவுடன் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இன்று இருந்திருந்தால் அவற்றிற்கான விளக்கவுரை ஒன்றினை வழங்கியிருப்பார். மாவீரர் உரை நிகழ்தி இன்றுவரை அதுபற்றிய சரியானதொரு கண்ணோட்டம் வெளிப்படவில்லை. எனது சிற்றறிவிற்கு உட்பட்டு இவ்வுரையை ஆராயலாமென நினைக்கின்றேன். இதுவரை இந்த உரை பற்றி வெளிவந்த கருத்துக்கள், அதைச் சொன்னவர்கள் என்றுவைத்துப் பார்த்தால் அவர்களிடமுள்ள வெற்றிடம் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்பட்ட விடயம், அதன் செயல் வடிவமும், சொல்லாமல் விட்ட விடயம், அதன் செயல்வடிவமும் என்ற இரு வேறு ஆய்வுகளில்தான் இந்த உரை நோக்கப்படுதல் வேண்டும். அதை விடுத்து சொல்லப்பட்ட விடயத்தில் நின்றே இதுவரை…
-
- 4 replies
- 2.5k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிகாரபூர்வமாக, உடனடியாக இரத்துச் செய்ய ஜே.வி.பி. வலியுறுத்தல் [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 07:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] போர் நிறுத்த ஒப்பந்தத்தை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உடனடியாக அதிகாரபூர்வமாக இரத்துச்செய்ய வேண்டும் என்று ஜே.வி.பியினர் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை பேசியதாவது: பிரபாகரன் தனது உரையில் தனிநாட்டை உருவாக்கித் தருமாறு அனைத்துலகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தேசத்துரோக செயல் ஆகக்கருதப்பட்ட போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காரணமான நோர்வே என்ற போலி சமாதான செயற்பாட்டு நாட்டிடமும் இணைத்தலைமை என்று தன்னை அடைய…
-
- 4 replies
- 2.1k views
-
-
ஈரானிடமிருந்து இராணுவ உதவிகளைபெறுவது ஐ.நா.சபையின் தீர்மானத்துக்கு எதிரானது அமெரிக்கா எச்சரிக்கை இலங்கை ஈரானிடமிருந்து இராணுவ தளபாடங்கள், ஆயுதங்களை வாங்கினால் அது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானத்திற்கு எதிரானதாக அமையும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஈரான் விஜயம் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த கொழும்பிலுள்ள அமெரிக்க அரசாங்கத்தின் பேச்சாளர் ரெஜி வைற் ஈரான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கை மிகவும் வெளிப்படையானது. ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை சர்வதேச அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைக்கு திறந்து விட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது. அக்டோபர் மாத இறுதியில் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து…
-
- 2 replies
- 2k views
-
-
மேல் மாகணப் (கொழும்பு) பாடசாலைகள் அனைத்திற்கும் இருநாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக திடீரென கல்வியமைச்சு இப்போது அறிவித்தள்ளது. மறுபடியும் டிசம்பர் 3ம் திகதியே மீண்டும் திறக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜானா
-
- 18 replies
- 4.9k views
-
-
புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்களிப்பை வழங்கும் பாகிஸ்தானுக்கு எதிராக செயற்படுவதா? * போகொல்லாகமவை பதவி நீக்க ஜோன் அமரதுங்க வலியுறுத்தல் பாகிஸ்தானை பொதுநலவாய நாடுகளின் அமைப்பிலிருந்து நீக்குவதற்கு உதவிய வெளிவிவகார அமைச்சரை உடனடியாக பதவியிலிருந்து ஜனாதிபதி நீக்க வேண்டும். இல்லையேல் முக்கிய எதிர்க்கட்சிகள் இது தொடர்பான முக்கிய தீர்மானத்தை மேற்கொள்ளுமென ஐ.தே.க. எம்.பி. ஜோன் அமரதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்டமூல குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தாவது; "இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நாடு பற்றிய நல்லபிப்பிராயம் சர்வதேச மட்டத்தில் குறைவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் உத்தியோகப+ர்வ வானொலியான புலிகளின்குரல் நிறுவனம,; சிறீலங்கா வான்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கிபீர் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது. மேலதிக செய்திகள் இன்னும் சில நிமிடங்களில்........ -புலிகளின்குரல்.கொம்
-
- 52 replies
- 9.2k views
-
-
கொழும்பு நாரம்்பிட்டிப் பகுதியில் உள்ள ஈபிடிபி அலுவலகத்திற்கு முன்பாக குண்டுதாரி குண்டை வெடிக்கவைத்ததாக பாதுகாப்பு அமைச்சின் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது
-
- 30 replies
- 5.8k views
-