ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143550 topics in this forum
-
தமிழீழத்தின் கிளிநொச்சியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் மீதான வான் தாக்குதல் குறித்து கவலை கொள்வதாகவும் சிறிலங்காவின் கொழும்பில் நடத்தப்பட்ட இரு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான் கி மூன் தனது அறிக்கையில் கூறியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 9 replies
- 2.2k views
-
-
இலங்கை தாக்குதல்களுக்கு கனடா கண்டனம்- அனைத்துத் தரப்பும் வன்முறைகளைக் கைவிட வலியுறுத்தல் [வியாழக்கிழமை, 29 நவம்பர் 2007, 11:15 மு.ப ஈழம்] [செ.விசுவநாதன்] இலங்கையில் அதிகரித்து வரும் வன்முறைத் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கனடா. அனைத்துத் தரப்பினரும் வன்முறையைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. கனடாவின் வெளிவிவகார அமைச்சு நேற்று புதன்கிழமை (28.11.07) வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவதற்கு குறிப்பாக எதிர்பாராத விதமாகவோ அல்லது இலக்கு வைத்தோ பொதுமக்கள் கொல்லப்படுவதற்கு கனடா கடும் கண்டனம் தெரிவிக்கிறது.. இனங்களுக்கு அப்பால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக…
-
- 5 replies
- 2k views
-
-
ஜப்பானின் விஷேட தூதுவர் அகாஸி அடுத்த வாரம் இலங்கை வருகிறார் [29 - November - 2007] -ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- இலங்கைக்கான ஜப்பானிய விஷேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஸி அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளார். யசூசி அகாஸி இலங்கைக்கு அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளதை அரசதரப்பும் உறுதிப்படுத்தியது. 15 ஆவது தடவையாக இலங்கை வரும் யசூசி அகாஸி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட மேலும் பல அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். இலங்கை விஜயத்தின் போது அவர் பல்வேறு பகுதிகளுக்கும் செல்லவுள்ளதாகவும் தெரியவருகிறது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மாவீரர்தின உரையில் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாட்டை கடும…
-
- 8 replies
- 2.2k views
-
-
சர்வதேச சமூகத்தின் அணுகுமுறை குறித்து.... [29 - November - 2007] விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை வன்னியில் இருந்து நிகழ்த்திய இவ்வருடத்தைய மாவீரர் தின உரையின் பிரதான செய்தி சர்வதேச சமூகத்தைக் குறிவைத்ததாகவே அமைந்திருந்தது. இலங்கை அரசாங்கத்துடன் அரசியல் இணக்கத் தீர்வைக் காண முடியுமென்ற நம்பிக்கை தனக்கில்லை என்றும் தென்னிலங்கையின் எந்தவொரு அரசியல் கட்சியிடமிருந்தும் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்ப்பது அரசியல் அசட்டுத்தனமாகும் என்றும் குறிப்பிட்ட பிரபாகரன் இலங்கை அரசாங்கத்தின் சாதுரியமான, சாணக்கியமான பிரசாரங்களுக்கு பலியாகி அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேச சமூகமும் இழைத்து நிற்கிறது என்று குற்றஞ்சாட்டியி…
-
- 0 replies
- 1.5k views
-
-
முகமாலை முன்னரங்கில் இன்று அதிகாலை மோதல் வீரகேசரி இணையம் வடக்கு முகமாலை முன்னரங்க நிலையில் இன்று அதிகாலை விடுதலை புலிகளிற்கும் இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம் பெற்றுள்ளது . இதில் 7 விடுதலை புலி உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளதுடன் புலிகள் 3 பதுங்கு குழிகள் இராணுவத்தினரால் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 1.10 மணியளவில் முகமாலை முன்னரங்கு பகுதியில் விடுதலை புலிகளிற்கும் இராணுவத்திற்குமிடையே பலத்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளது. இத் தாக்குதலினை இராணுவத்தினர் முறியடித்துள்ளனர். இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இராணுவ்த்தினர் டீ-56 ரக துப்பாக்கி யொன்றையும் 01x மகசின்கள் 18டையும் , வெடி பொருட்களையும் மீட்ட…
-
- 0 replies
- 1.7k views
-
-
Posted on : 2007-11-29 விபரீத விளைவுகளுக்கு சர்வதேசமும் பொறுப்பு மாவீரர் தினத்தை ஒட்டி தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஆற்றிய உரையும் அந்த மாவீரர் தினத்தில் வன்னி மீது இலங்கைப் படைகள் பல்வேறு முனைகளில் நடத்திய தாக்குதல்களில் 22க்கும் அதிகமான அப்பாவிகள் உயிரிழக்க, டசினிற்கும் அதிகமானோர் காயமடைந்தமையும் புலிகளின் தலைவர் பிரபாகரனை விரைவில் கொன்றொழிப்போம் என இலங்கை அரசின் பாதுகாப்புத் துறையில் அதி சக்தி வாய்ந்தவரான பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ சூளுரைத்திருக்கின்றமை பற்றிய செய்தி வெளியாகியமையும் ஏறத்தாழ ஒரே சமயத்தில் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் இலங்கைத்தீவின் நிலைமை மிக மோசமான விபரீத கட்டத்துக்குள் …
-
- 0 replies
- 1.3k views
-
-
கொள்ளுப்பிட்டியில் குண்டு ஒன்று வெடித்ததாக தகவல் ஒன்று கொழும்பிலிருந்து வந்துள்ளது? உண்மையா? மேலதிக தகவல்கள் தெரியவில்லை.
-
- 11 replies
- 2.7k views
-
-
தேசியப் பிரச்சினைக்கு அமைதிப் பேச்சு மூலமாக தீர்வு எட்டப்படும் வரை புலிகளால் ஒருபோதும் தன்னைக் கொலை செய்யவே முடியாது என்றும், புலிகள் தன்னைக் கொலை செய்ய மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றியளிக்காது என்றும் அமைச்சன் டக்கிளசு நேற்று கூறினார். டக்ளஸ் நேற்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் ஊடகவியலாளர்களைச் சந்தித்துத் தம்மை கொலை செய்ய மேற்கொள்ளபட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் முயற்சி தொடர்பாக விளக்கினர். அப்போதே அவர் மேற்கண்டவர்று கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் :- இன்று புதன்கிழமை நான் மக்களைச் சந்த்த்த அவர்களின் குறை நிறை??? களைக் கேட்டறியும் நாளடாகும். இந்தத் தினத்தில் நான் நிச்சயம் அமைச்சில் இருப்பேன் என்று புலிகளுக்குத் தெரியும். அதே போல நான் கால…
-
- 12 replies
- 4.8k views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரன் நேற்று முன்தினம் ஆற்றிய உரை வெறும் ஓலங்களும், கெஞ்சல்களும் நிறைந்ததுதான். நேற்று நாடாளுமன்றில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு உரையாற்றிய வேளை விமல் வீரவன்ஸ இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் :- புலிப் பயங்கரவாதத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் வெளியிடப்பட்ட 'நம்பிக்கையின்மையின் வெளிப்பாட்டின் மீது' ஒரு சில காரணங்களுக்காகக் கவனம் செலுத்தப்பட வேண்டும். எந்த முறையிலாவது நுணுக்கமாக ஆராய்ந்து பார்த்தாலும் பிரபாகரனுடைய மாவீரர் தின அறிக்கை, அவரது நம்பிக்கையின்மையின் வெளிப்பாடாகவே தெரிகிறது. அது வேதனை தரக்கூடிய படுதோல்வியிலிருந்து மீள்வதற்காக, வெளியிலிருந்து உதவிக்காகக் கெஞ்சும் நிர்காகதியான ஒருவரது ஓலமேயல்லாது வேறோன்றுமல்ல. ந…
-
- 7 replies
- 2.6k views
-
-
மாவீரர் உரை எனது பார்வையில் மாவீரர் உரை முடிவடைந்தவுடன் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் இன்று இருந்திருந்தால் அவற்றிற்கான விளக்கவுரை ஒன்றினை வழங்கியிருப்பார். மாவீரர் உரை நிகழ்தி இன்றுவரை அதுபற்றிய சரியானதொரு கண்ணோட்டம் வெளிப்படவில்லை. எனது சிற்றறிவிற்கு உட்பட்டு இவ்வுரையை ஆராயலாமென நினைக்கின்றேன். இதுவரை இந்த உரை பற்றி வெளிவந்த கருத்துக்கள், அதைச் சொன்னவர்கள் என்றுவைத்துப் பார்த்தால் அவர்களிடமுள்ள வெற்றிடம் எனக்குத் தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்பட்ட விடயம், அதன் செயல் வடிவமும், சொல்லாமல் விட்ட விடயம், அதன் செயல்வடிவமும் என்ற இரு வேறு ஆய்வுகளில்தான் இந்த உரை நோக்கப்படுதல் வேண்டும். அதை விடுத்து சொல்லப்பட்ட விடயத்தில் நின்றே இதுவரை…
-
- 4 replies
- 2.5k views
-
-
புலிகளுக்கு எதிரான போரில் முக்கிய பங்களிப்பை வழங்கும் பாகிஸ்தானுக்கு எதிராக செயற்படுவதா? * போகொல்லாகமவை பதவி நீக்க ஜோன் அமரதுங்க வலியுறுத்தல் பாகிஸ்தானை பொதுநலவாய நாடுகளின் அமைப்பிலிருந்து நீக்குவதற்கு உதவிய வெளிவிவகார அமைச்சரை உடனடியாக பதவியிலிருந்து ஜனாதிபதி நீக்க வேண்டும். இல்லையேல் முக்கிய எதிர்க்கட்சிகள் இது தொடர்பான முக்கிய தீர்மானத்தை மேற்கொள்ளுமென ஐ.தே.க. எம்.பி. ஜோன் அமரதுங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஒதுக்கீட்டுச் சட்டமூல குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவித்தாவது; "இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கை தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் நாடு பற்றிய நல்லபிப்பிராயம் சர்வதேச மட்டத்தில் குறைவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈரானிடமிருந்து இராணுவ உதவிகளைபெறுவது ஐ.நா.சபையின் தீர்மானத்துக்கு எதிரானது அமெரிக்கா எச்சரிக்கை இலங்கை ஈரானிடமிருந்து இராணுவ தளபாடங்கள், ஆயுதங்களை வாங்கினால் அது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை தீர்மானத்திற்கு எதிரானதாக அமையும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஈரான் விஜயம் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த கொழும்பிலுள்ள அமெரிக்க அரசாங்கத்தின் பேச்சாளர் ரெஜி வைற் ஈரான் தொடர்பான அமெரிக்காவின் கொள்கை மிகவும் வெளிப்படையானது. ஈரான் தனது அணுசக்தி திட்டங்களை சர்வதேச அணுசக்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிசோதனைக்கு திறந்து விட வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றது. அக்டோபர் மாத இறுதியில் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்து…
-
- 2 replies
- 2k views
-
-
மேல் மாகணப் (கொழும்பு) பாடசாலைகள் அனைத்திற்கும் இருநாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக திடீரென கல்வியமைச்சு இப்போது அறிவித்தள்ளது. மறுபடியும் டிசம்பர் 3ம் திகதியே மீண்டும் திறக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜானா
-
- 18 replies
- 4.9k views
-
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை அதிகாரபூர்வமாக, உடனடியாக இரத்துச் செய்ய ஜே.வி.பி. வலியுறுத்தல் [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 07:14 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] போர் நிறுத்த ஒப்பந்தத்தை மகிந்த ராஜபக்ச அரசாங்கம் உடனடியாக அதிகாரபூர்வமாக இரத்துச்செய்ய வேண்டும் என்று ஜே.வி.பியினர் இன்று நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர். ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறிலங்கா நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை பேசியதாவது: பிரபாகரன் தனது உரையில் தனிநாட்டை உருவாக்கித் தருமாறு அனைத்துலகத்திடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தேசத்துரோக செயல் ஆகக்கருதப்பட்ட போர்நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் காரணமான நோர்வே என்ற போலி சமாதான செயற்பாட்டு நாட்டிடமும் இணைத்தலைமை என்று தன்னை அடைய…
-
- 4 replies
- 2.1k views
-
-
யாழில் சிறிலங்கா இராணுவத் தளபதி [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 03:00 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் பயணம் மேற்கொண்டார். யாழில் பாதுகாப்பு நிலைமைகள் குறித்து யாழ். தளபதி ஜி.ஏ. சந்திரசிறீ மற்றும் படையணிகளின் தளபதிகளுடன் அவர் ஆலோசனை நடத்தி அறிவுறுத்தல்களை விடுத்ததாக சிறிலங்கா இராணுவ தலைமையகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதினம்
-
- 0 replies
- 1.7k views
-
-
வடக்கு - கிழக்கில் மக்கள் கண்காணிப்புக் குழு பணியாற்ற அனைத்துலகம் உதவ வேண்டும்: மனோ கணேசன் [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 03:29 பி.ப ஈழம்] [சி.கனகரத்தினம்] வடக்கு கிழக்கில் மக்கள் கண்காணிப்புக் குழு பணியாற்ற அனைத்துலகம் உதவ வேண்டும் என்று அக்குழுவின் நிர்வாகியும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பில் அவர் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் பணம் அறவிடவும் முன்னர் கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. தற்போது வரவு - செலவுத் திட்ட அறிக்கை மீது வாக்களிக்க வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கனகசபையின் மருமகன் கடத்தப்பட்டுள்ளார். இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வர…
-
- 0 replies
- 779 views
-
-
மட்டக்களப்பில் சூட்டுக்காயங்களுடன் இளைஞர் சடலம் மீட்பு- மூவர் கடத்தல் [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 04:14 பி.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பு ஒந்தாச்சிமடத்தில் தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் எருவில் பிரதேசத்தைச் சேர்ந்த யோகராசா சுதன் (வயது 22) என அடையாளம் காணப்பட்டுள்ளது. தனியார் பாதுகாப்புத்துறை ஊழியரான இவர், மரக்காலையில் பணி செய்து வந்தார். களுவாஞ்சிக்குடியில் அந்த இளைஞரை நேற்று முன்நாள் கடத்திச்சென்ற சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர், ஒந்தாச்சிமடத்தடியில் அவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சுட்டுக்கொலை செய்திருக்கலாம் என்ற…
-
- 0 replies
- 881 views
-
-
நுகேகொட பிரதேசத்தில் தற்போழுது குண்டு ஒன்று வெடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காயப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு எடுத்தச் செல்லப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் விரைவில் ஜானா
-
- 49 replies
- 8.7k views
-
-
படுகொலை செய்யப்பட்ட புலிகளின்குரல் பணியாளர்கள் "நாட்டுப்பற்றாளர்"களாக மதிப்பளிப்பு [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 05:37 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா வான் படைத்தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட புலிகளின்குரல் பணியாளர்கள் மூவரும் நாட்டுப்பற்றாளர்களாக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளனர். புலிகளின்குரல் வானொலி நிறுவனத்தின் மீது சிறிலங்கா வான் படை நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் இசைவிழி செம்பியன் அல்லது க.சுபாஜினி, கிருஸ்ணபிள்ளை தர்மலிங்கம், மகாலிங்கம் சுரேஸ் லிம்பியோ ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களை நாட்டுப்பற்றாளர்களாக விடுதலைப் புலிகள் மதிப்பளித்துள்ளனர். கி.தர்மலிங்கத்தின் இறுதி நிகழ்வு இன்று புதன்கிழமை முள்ளி…
-
- 0 replies
- 1.7k views
-
-
"நாடாளுமன்றத்தில்" த.தே.கூவினர் உரையாற்றவும் மகிந்த "அரசாங்க"த்திடம் அனுமதி பெற வேண்டும்: ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே [புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 05:12 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சிறிலங்கா அரச படைகளின் வான் குண்டுத்தாக்குதல்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உரையாற்ற சபாநாயகர் அனுமதியைவிட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் அனுமதிதான் முக்கியம் என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கூறியுள்ளார். கிளிநொச்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வான் குண்டுத்தாக்குதல் மற்றும் கிளைமோர் தாக்குதல் குறித்து சிறிலங்கா நாடாளுமன்றில் உரையாற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சபாநாயகரிடம் சிறப்பு …
-
- 2 replies
- 1.5k views
-
-
அடுத்த வருடம் பெப்ரவரியில் மன்மோகன்சிங் இலங்கை விஜயம் [28 - November - 2007] இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங் 2008 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதமளவில் இலங்கை வரவிருப்பதாகத் தெரியவருகிறது. இலங்கையின் 60 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே இந்தியப் பிரதமர் இலங்கை வரவிருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதேநேரம் கலாநிதி மன்மோகன்சிங் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முற்பகுதியில் இலங்கை வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. இலங்கை அரசின் வேண்டுகோளையடுத்தே இந்தியப் பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது http://www.thinakkural.com/news/2007/11/28...s_page41216.htm
-
- 1 reply
- 963 views
-
-
கலிப்போனியாவிற்கு 1000 இலங்கை தாதியர்கள் அனுப்படவுள்ளனர் வீரகேசரி இணையம் இவ்வருடம் முதல் ஆயிரம் பயிற்சி பெற்ற தாதியர்களை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்க்காக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அண்மையில் செய்துகொள்ளவுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1000 தாதியர்கள் கலிபோனியாவிற்கு அனுப்படவுள்ளனர். இவர்கள் கலிப்போனியாவில் இரு வருடங்கள் சேவையாற்றுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. ஐக்கிய இராசியம்,அமெரிக்கா,சீனா,இத்த
-
- 1 reply
- 1.7k views
-
-
[புதன்கிழமை, 28 நவம்பர் 2007, 12:50 PM ஈழம்] சிறிலங்கா இராணுவத்தினர் பற்றிய தகவல்களை அறிய விடுதலைப்புலிகள் உயர் தொழில்நுட்பங்களையும், கணணி மென்பொருட்களையும் பயன்படுத்தி வருவதாக த பொட்டம்லைன் பத்திரிகை தெரிவித்துள்ளது. அந்த இதழில் வெளியாகியுள்ள செய்தி விவரம்: விடுதலைப்புலிகளின் வான்படையை வடிவமைப்பதில் பிரதான பங்கு வகித்தவர் கேணல் சங்கர். அவர் ஒரு வான் பொறியியலாளர். சங்கருக்குப் பின்னர் ரத்னம் மாஸ்ரர் தற்போது வான்படையின் கட்டளை தளபதியாக பணியாற்றி வருகின்றார். ரத்னம் மாஸ்ரர் என்பது அவரது இயக்க பெயராகும், அவரது உண்மையான பெயர் யாருக்கும் தெரியாது. ரத்னம் மாஸ்ரர் சரளமாக ஆங்கிலம் பேசுவார், அவர் அவுஸ்திரேலியாவில் வான் பொறியியல் கல்வி பயின்றவர். அதன் பின்னர் அமெரிக…
-
- 11 replies
- 3k views
-
-
[Wednesday November 28 2007 08:29:25 AM GMT] [யாழ் வாணன்] பொதுநலவாய அமைப்புகளின் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயற்பட்டதன் மூலமாகவும் பொதுநலவாய அமைப்பின் அடுத்த பொதுச் செயலாளராக இந்தியர் ஒருவரை தெரிவு செய்ததன் மூலமும் இலங்கை அரசாங்கம் ஒரு கல்லில் இரு மாங்காய்களை வீழ்த்தியுள்ளது என்று வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம சபையில் தெரி வித்தார். இந்தியா எப்போதும் எமக்கு ஆதரவாகவே செயற்படும். அடுத்த ஆண்டு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார். பொதுநலவாய அமைப்பிலிருந்து பாகிஸ்தானை வெளியேற்றாது ஜனநாயகத்தை அங்கு ஏற்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசத்தையும் சந்தர்ப்பத்தையும் வழங்க வேண்டும் என்பதே எமது அரசின் நிலை…
-
- 0 replies
- 1.1k views
-
-
வென்னப்புவ, கிரிமெட்டியான பிரதேசத்தில் வான்படையின் குண்டு தவறுதலாக விழுந்துள்ளது வென்னப்பு, கிரிமெட்டியான பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு அருகில் இலங்கை வான்படைக்குச் சொந்தமான குண்டு, வானூர்தியிலிருந்து தவறுதலாக விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிரிமெட்டியான பாடசாலை வீதியில் அமைந்துள்ள பிரசாத் சம்பத் என்பவரின் வீட்டுக்கு அருகிலேயே இந்தக் குண்டு நேற்று பிற்பகல் 3.30 அளவில் விழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை வான்படைக்குச்சொந்தமான எஸ் - 7 ரகத்திலான வானூர்த்தியில் இருந்த இந்தக் குண்டு தவறுதலாக விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்தக் குண்டு விழுந்த போதிலும், வெடிக்காததன் காரணமாக நிகழவிருந்த பாரிய அனர்த்தம் தவிர்க்கப்பட்டத…
-
- 3 replies
- 2.6k views
-