Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இதயச்சந்திரன் எழுதிய ''அனுராதபுர அதிரடியும் கடன் முறிவுப்பொறியும்'' அநுராதபுரத்தில் "எல்லாளன்' நடவடிக்கை என்ற பெயரிடப்பட்ட பாரிய தாக்குதலொன்றை நடத்தியுள்ளனர் தமிழீழ விடுதலைப் புலிகள். வட பிராந்திய ஊர்காவல் படையின் தலைமையகம் அண்மையில் திறக்கப்பட்ட இடமும் அநுராதபுரம்தான். அந்த திறப்பு விழாவில் அரச படைத்துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள், வடபகுதியின் பின்தளமாக இப்பிரதேசம் உருவாக்கப்படுவதனை புலப்படுத்தின. அதாவது மணலாறு, வவுனியா, மன்னார் ஆகிய முன்னரங்க நிலைகளின் ஆயுத, ஆளணி குவிமையமாக அநுராதபுரம் திகழப் போவதனையும் வெளிப்படுத்தியது. பின்தளச் சிதைப்பினூடாக பெரும்போர் ஆரம்பமாகுமென்கிற கருத்து நிலைக்கு வலுவூட்டக்கூடிய நிகழ்வுகள் துரிதப்படுத்தப்படுவதை உணரக்கூ…

  2. "சண்டே லீடர்" வார ஏட்டின் ஊடகவியலாளர் ஆர்தர் வாமணனை குற்றத்தடுப்பு புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் விசாரணை என்ற பெயரில் தடுத்து வைத்திருப்பதற்கு அனைத்துலக ஊடகவியலாளர் சம்மேளனம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.5k views
  3. திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற மோதல்களில் வீரச்சாவடைந்த 8 போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.2k views
  4. யாழ். வளலாய்ப் பகுதியில் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள காணிகளில் சிறிலங்காப் படையினர் மிதிவெடி வயல்களை உருவாக்கி வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 585 views
  5. மணலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 514 views
  6. யாழ். தென்மராட்சி வரணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் எறிகணை வீச்சில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 457 views
  7. வவுனியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் மிதிவெடியில் சிக்கி சிறிலங்காப் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 644 views
  8. இராணுவத் தீர்வுக்கனவை கலைத்த அதிரடித்தாக்குதல் -அருஸ் (வேல்ஸ்)- இந்த மிலேனியத்தில் இலங்கை விமானப் படை பெருமளவான படைகல அதிகரிப்புக்களையும், நவீனமயப்படுத்தல்களையும் கண்டிருந்தது. எனினும் அதே காலப்பகுதியில் தான் அவை பேரழிவையும் சந்தித்திருந்தன. அதாவது இந்தக் காலப்பகுதியில் இலங்கை விமானப்படையின் இரு பிரதான தளங்கள் பேரழிவை சந்தித்ததுடன், பெருமளவான வான்கலங்களும் அழிக்கப்பட்டுள்ளன. பிரகடனப்படுத்தாத நான்காம் கட்ட ஈழப்போரில் இலங்கையின் விமானப் படையினர் வன்னிப் பகுதியிலும், கிழக்குப் பகுதி மீதும் தொன் கணக்கில் குண்டுகளை வீசியிருந்ததுடன், வன்னிப்பகுதியில் தற்போதும் வீசி வருகின்றனர். நவீன உலகின் போர் தத்துவங்களில் வான் ஆதிக்கம் போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தும…

  9. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளான சிறிலங்காவின் அனுராதபுரம் வான்தளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.10.07) இரவு முழுவதும் கேளிக்கை விருந்தும் நடத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து வாசிக்க

  10. தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்குள்ளான சிறிலங்காவின் அனுராதபுரம் வான் படைத்தளத்தில் கரும்புலி மாவீரர்களில் ஒருவர் பணிபுரிந்து வந்தாரா என்பது குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  11. சிறிலங்காவுக்கு தொடர்ந்து இராணுவப் பயிற்சி மற்றும் உதவிகளை வழங்குகிறோம் என்று இந்திய இராணுவத் தலைமை தளபதி தீபக் கபூர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  12. மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதல்களில் வீரச்சாவடைந்த போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.9k views
  13. யாழ். முகமாலை மற்றும் பருத்தித்துறை கடற்பரப்பில் வீரச்சாவடைந்த மூன்று போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 971 views
  14. சனி 27-10-2007 17:35 மணி தமிழீழம் [தாயகன்] பணியில் நித்திரைசெய்த காவல்துறையினர் இடமாற்றம் கண்டி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள தலதா மாளிகையில் காவல் நிலையத்தில் இரவு நேரப்பணியின்போது நித்திரைசெய்த ஐந்து சிறீலங்கா காவல்துறையினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமது துப்பாக்கிகளை அருகில் வைத்துவிட்டு நித்திரைசெய்த காரணத்தினால் இடமாற்றம் செய்யப்பட்ட இந்த ஐவரில் இருவர் இளநிலை அதிகாரிகள் என கண்டி காவல்துறை பொறுப்பதிகாரி ஜகத் அபயசிறி குணவர்த்தன தெரிவித்துள்ளார். Pathivu

  15. அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தாக்குதல் படையினரின் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த தோல்வி என்று கொழும்பிலிருந்து வெளிவரும் சிங்கள இனவாத ஏடான "த ஐலன்ட்" தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 767 views
  16. மகிந்த அரசாங்கத்தின் கிழக்கின் அபிவிருத்திக்கான "நவ உதயம் 180 நாள் வேலைத்திட்ட" நிகழ்வுகளை அனைத்து கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் புறக்கணித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 634 views
  17. "சண்டே லீடர்" வார ஏட்டின் ஊடகவியலாளர் ஆர்தர் வாமணனை பிணையில் விடுவிப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்த குற்றப் புலனாய்வுத்துறையினர் அதற்கான ஒரு காரணமாக அந்த ஊடகவியலாளர் தமிழர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 969 views
  18. ஐக்கிய தேசியக் கட்சி அதிருப்தியாளர்கள் கரு ஜயசூரிய தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை பதிவு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 758 views
  19. சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மூத்த அதிகாரிகள் பலர் இருக்கையில் அரசியல்வாதிகளின் ஆதாயத்துக்காக இளநிலை அதிகாரியை நிலையப் பொறுப்பதிகாரி பதவிக்கு நியமிக்கும் முயற்சியால் சிறிலங்கா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு இடையே பாரிய குழப்பம் எழுந்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  20. மக்களின் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டிருக்கிறது மகிந்த அரசாங்கம்?: ஜே.வி.பி. மக்களின் எந்தப் பிரச்சினைக்குத் தீர்வு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கண்டிருக்கிறது என்று ஜே.வி.பி. கேள்வி எழுப்பியுள்ளது. பதுளையில் நடைபெற்ற நிகழ்வில் ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா பேசியதாவது: மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு திடீரென ஜே.வி.பி. நினைவுக்கு வந்துள்ளது. அதனால் அரசாங்கத்தைப் பாதுகாக்க தற்போது முற்போக்கு சக்திகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அரசாங்கத்தைப் பார்த்தால் யாராலும் அதனையிட்டு மகிழ்ச்சியடைய முடியாது. யாராலும் இதனைக் காக்கவும் முடியாது. இந்த அரசாங்கத்தை அமைக்க பங்களிப்புச் செய்த யாருக்கும் மகிழ்ச்சியில்லை. இந்த அரசாங்கத்தைப் பாதுகாக…

  21. `ஏன் இந்தத் தயக்கம்?' இலங்கைப் பிரச்சினையில் பாதிக்கப்பட்டிருப்பது தமிழர்கள் என்பதால், இந்திய அரசாங்கம் தனது தார்மீக கடமையிலிருந்தும் விலகி நிற்பது நியாயமில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கும் தமிழகத்தின் முன்னணி நாளேடான `தினமணி' ஈழப்பிரச்சினைக்கு நல்ல முடிவை ஏற்படுத்தும் பொன்னான வாய்ப்பு தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கிடைத்திருப்பதாகவும் அவர் முன்னின்று செயற்பட்டால் நல்ல தீர்வு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. `ஏன் இந்த தயக்கம்' என்று மகுடமிட்டு நேற்று வெள்ளிக்கிழமை ஆசிரியர் தலையங்கம் தீட்டியிருக்கும் `தினமணி' மேலும் தெரிவித்திருப்பதாவது; விடுதலைப் புலிகள் எப்போது? எப்படி? எங்கே? தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாமல் நிச்சயம் இலங்கை இராணுவம் குழம்பிப…

    • 0 replies
    • 1k views
  22. அனுராதபுரம் தாக்குதலில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை தொடர்புபடுத்த சிறிலங்கா தீவிர முயற்சி அனுராதபுரம் வான் படைத்தளம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அனைத்துலக அரச சார்பற்ற நிறுவனங்களை தொடர்புபடுத்த சிறிலங்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. அனுராதபுரம் வான் படைத்தளத் தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்திய வெடிபொருட்கள், ஆயுதங்கள், தற்கொடை அங்கிகள் உள்ளிட்ட தாக்குதல் உபகரணங்களை விடுதலைப் புலிகள் எடுத்துச் சென்றது எப்படி என்பது குறித்து சிறிலங்கா அராசாங்கம் விசாரணைகளைத் தொடங்கியுள்ளது. மேலும் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்படாத ஏதேனும் அமைப்புக்களுக்கு சொந்தமான வாகனத்திலா அப்பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டன என்றும் ச…

    • 0 replies
    • 700 views
  23. மகிந்தவின் வரவு - செலவுத் திட்டம் நிறைவேறுமா? சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் செயற்பாடுகளுக்காக எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் உதவியைப் பெறுவதற்காக இரகசியப் பேச்சுவார்த்தைகளை ஐக்கிய தேசியக் கட்சி தொடங்கியுள்ளதாக அரசியல் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பேச்சுவார்த்தைகள் இருவிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மங்கள சமரவீர மற்றும் சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் சந்திரிகாவுடன் இணைந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் உதவியைப் பெற பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளனர். ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளின்…

    • 0 replies
    • 739 views
  24. கரும்புலிகளின் வித்துடல்களை புதைக்க உத்தரவிடவில்லை: அனுராதபுரம் நீதிமன்றம் அறிவிப்பு. ஜ வெள்ளிக்கிழமைஇ 26 ஒக்ரேபர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ அனுராதபுரம் வான் படைத்தளம் மீது தாக்குதல் நடத்தி வீரச்சாவடைந்த கரும்புலிகளின் வித்துடல்களை புதைக்குமாறு உத்தரவிடவில்லை என்று அனுராதபுரம் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அனுராதபுர மாவட்ட நீதிபதி ஜனதாசவின் உத்தரவுக்கிணங்கவே கரும்புலிகளின் வித்துடல்களை அனுராதபுரத்தில் புதைத்ததாக சிறிலங்கா இராணுவம் அறிவித்திருந்தது. ஆனால் இது குறித்து நீதிமன்ற செய்தித்தொடர்பாளர் கூறுகையில், அனுராதபுரம் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்டோம். ஆனால் கரும்புலிகளின் உடலங்களை புதைக்கும் உத்தரவு எதனையும் நீதிமன்றம் வழங்கவில்லை. பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலங்க…

    • 7 replies
    • 2.7k views
  25. யுத்த முன்னெடுப்புகள் தென்னிலங்கை நோக்கிப் பரவுகிறது - தேசிய சமாதானப் பேரவை கவலை சிறீலங்கா அரசாங்கத்தின் யுத்த முன்னெடுப்புகள் தென்னிலங்கை நோக்கிப் பரவி வருவதாக தேசிய சமாதானப் பேரவை கவலை வெளியிட்டுளள்து. எல்லாளன் நடவடிக்கை குறித்து, இன்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் தேசிய சமாதானப் பேரவை, கிழக்கில் சிறீலங்கா அரசாங்கம் ஈட்டியதாக கூறப்படும் வெற்றிகள், ஒருபுறம் வடக்கில் யுத்த முன்னெடுப்புக்களை தீவிரமடைய வைத்து, மறுபுறம் தெற்கை நோக்கி யுத்தத்தை நகர்த்தத் தொடங்கியிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இது, கடந்த கால வரலாற்றின் மீள்பதிவாக அமைந்திருப்பதோடு, வரலாற்றில் இருந்து பட்டறிவைப் பெற்றுக் கொள்வதற்கு, நாட்டின் அரசியல் - படைத் தலைவர்கள் தவறியிருப்பதையே உணர்த்த…

    • 0 replies
    • 672 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.