ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142799 topics in this forum
-
கருணாவின் முதலமைச்சர் கனவைக் கலைத்தார் டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இராணுவ துணை படையான கருணா குழுவை தேர்தல் ஆணையாளர் அரசியல் கட்சியாக அங்கீகரிக்க மறுத்தமைக்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு துணை ஆயுதக் குழுவான கருண குழுவே காரணம் என தெரியவந்துள்ளது. அரசியல் கட்சியாக தோற்றம் பெற்ற காலம் முதலே சிங்கள அரசாங்கங்களுக்கு விசுவாசமான துணைப் படையாக செயல்பட்டு வரும் ஈ.பி.டி.பியின் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஸ்ரீலங்கா ஜனாதிபதியிடம் முன்வைத்த வேண்டுகோளின் பேரிலேயே கருணா குழுவை அரசியல் கட்சியாக அங்கீகரிக்காத நிகழ்வு இடம்பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் படையினரின் ஆக்கரமிப்பிற்குட்பட்டுள்ள நிலையில் அங்கு நடத்தப்படும் தேர்தல்களின் போது அரசாங்…
-
- 1 reply
- 1.7k views
-
-
கிழக்கில் ஆயுதக் குழுக்களால் ஆபத்து - மனித நேய அமைப்புகள் அச்சம் தென் தமிழீழத்தில் ஒட்டுக் குழுக்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு உதவி செய்ய முடியாத நிலை தோன்றியிருப்பதாக, பல உள்ளுர், மற்றும் அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன. மக்கள் மீளக்குடியமர்ந்துள்ள பல பகுதிகளுக்கு செல்வதற்கு சிறீலங்காப் படையினர் விதித்துவரும் தடைகளும், தமது பணிகளுக்கு இடையூறாக இருப்பதாக இந்த அமைப்புகள் கூறியுள்ளன. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சுடன் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடலில் தமது நிலை பற்றி எடுத்துக்கூறிய போதிலும், ஆக்கபூர்வமான செயற்பாடுகள் எதுவும் அரசினால் ஆரம்பிக்கப்படவில்லை என தொண்டர் அமைப்புகள் கூறுகின்றன. “வோல்ட் விஸன்” எனப்படும் “உலக…
-
- 0 replies
- 1.1k views
-
-
புவாக்பிட்டியவில் கடத்தப்பட்ட தமிழ்ப் பொறியாளரின் சடலம் மீட்பு அவிசாவளை புவாக்பிட்டியப் பகுதியில் 5 மில்லியன் ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட தமிழ்ப் பொறியாளரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. விக்னேஸ்வர கடசரனத் மகோதரர் (வயது 27) என்ற தகவல் தொடர்புப் பொறியாளர் கடந்த ஜூலை 15 ஆம் நாள் வெள்ளவத்தையிலிருந்து தன்னுடைய வீட்டுக்குத் திரும்பும்போது காணாமல் போனார். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை முத்துவலப் பகுதியைச் சேர்ந்த கண்ணா மற்று சீலன் ஆகியோரை கொட்டாஞ்சேனை காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததாகவும் இருவரும் மகோதரரை கடத்தியதை ஒப்புக்கொண்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் புவாக்பிட்டிய றப்பர் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த மகோதரரின…
-
- 1 reply
- 696 views
-
-
வடக்கில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் திட்டத்தை அரசாங்கம் கைவிட வேண்டும் * அவுஸ்திரேலிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை -ஏ.ரஜீவன்- "இலங்கை அரசாங்கம் வடபகுதியில் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் எண்ணத்தை கைவிட வேண்டும், சர்வதேச சமூகமும் இதற்கான அழுத்தங்களை கொடுக்க வேண்டும்' என அவுஸ்திரேலியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் கரெத் இவான்ஸ் கேட்டுக் கொண்டுள்ளார். யுத்தம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்லும் பட்சத்தில், கடும் மோதல் மூழ்வதுடன், பொதுமக்களுக்கு பேரழிவு ஏற்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் தற்போது ருவாண்டா, கொசோவோ போன்ற நிலைமை காணப்படாவிட்டாலும் நிலைமை அந்தளவிற்கு மோசமடைவதற்கான சாத்தியக் கூறுகள…
-
- 0 replies
- 689 views
-
-
Posted on : Mon Jul 30 5:50:42 EEST 2007 வன்னிக்கான படை நடவடிக்கைக்கு தயார் நிலையில் பாதுகாப்புப் படை கிழக்குப் பிரதேசத்தை விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து விடுவித்த பாதுகாப்புப் படையினர் அடுத்து வன்னிப் பிரதேசத்தை மீட்டெடுக்கும் படை நடவடிக்கைக்கு ஆயத்தமாகி வருகின்றனர் என்று சிங்கள பத்திரிகை ஒன்று தகவல் வெளி யிட்டுள்ளது. முதற்கட்டமாக இராணுவத்தினர் மேற்குக் கடலோர மன்னாரிலிருந்து கிழக்குக் கடலோர கொக்கிளாய் வரையிலான கடலோரத்தைப் பலப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளனர். அங்கிருந்து சிறிய குழுக்களாக முன்னேறிச் சென்று முல்லைத்தீவு உட்பட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள வன்னிப் பிரதேசத்தில் தாக்குதல் மேற்கொள்ளப் படையினர் திட்டம் தீட்டியுள்ளனர். இந்நோக்கில் ஏற்கனவே ஓம…
-
- 5 replies
- 2.7k views
-
-
மீள்குடியேற்றத்தின் பேரினால் வீட்டுச் சிறைகளில் தமிழர்கள்": பி.பி.சி. மீள்குடியேற்றப்படும் இடம்பெயர்ந்த தமிழர்களில் சந்தேக நபர்கள் என்ற பேரில் புகைப்படங்கள் எடுப்பதும் அவர்கள் வீடுகளை விட்டு வெளியேறக்கூடாது என்றும் கூறி வீட்டுச்சிறைகளில் வைக்கப்படுகின்ற அவலத்தை பி.பி.சி. சிங்கள சேவை வெளிப்படுத்தியுள்ளது. பி.பி.சிங்கள சேவையான சந்தேசியவில் நேற்று திங்கட்கிழமை வெளியான சிறப்புக் கட்டுரையில் இடம்பெற்றுள்ளதாவது: இலங்கையின் கிழக்கில் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அதிகாரிகள் தடங்கல் ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். தாங்கள் வீடுகளுக்குச் செல்ல விரும்புவதாகவும் ஆனால் தங்களின் பாதுகாப்பு குறித்து கவலை கொள்வதாகவும் மட்டக்களப்பு நாவற்குடா…
-
- 1 reply
- 710 views
-
-
சனி 28-07-2007 14:42 மணி தமிழீழம் [மோகன்] முதலீட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸநாயக்கா - ராகுல் காந்தியுடன் பேச்சு ஸ்ரீலங்காவின் முதலீட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திஸநாயக்கா இந்திய ஆளும் காங்கிரஸ் கட்சியின் எதிர்கால தலைவராக கருதப்படும் ராகுல் காந்தியுடன் பேச்சு நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு நாள் அரசு முறை பயணம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா செல்லவுள்ள நவீன் திஸநாயக்கா இந்தியாவின் முக்கிய அரசியல் தலைவர்களையும் சந்தித்து பேசவுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் மகனான ராகுல் காந்தி இந்திய அரசாங்கத்தில் செல்வாக்கு செலுத்தும் முக்கிய நபர் என்ற வகையில் அவர் மூலமாக இலங்கையின் இனப்பிரச்சினையில் ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கு …
-
- 3 replies
- 1.2k views
-
-
சிறிலங்காவுக்கான அனைத்து இராணுவ உதவிகளை முடக்க அமெரிக்க செனட்டில் பிரேரணை சிறிலங்காவுக்கான அனைத்து இராணுவ உதவிகளையும் முடக்குவதற்கான பிரேரணயை அமெரிக்க செனட் சபை முன்வைத்துள்ளது. அமெரிக்காவின் வெளிநாடுகளுக்கான 2008 ஆம் ஆண்டுக்கான இராணுவ உதவி தொடர்பிலான உத்தேச சட்ட முன்வரைபின் கீழ் சிறிலங்காவுக்கான அனைத்து இராணுவ உதவிகளை முடக்கும் பிரேரணையை அமெரிக்க செனட் முன்வைத்துள்ளது. சிறிலங்காவில் சீர்குலைந்து போய்விட்ட மனித உரிமைகளைச் சுட்டிக்காட்டி இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த சட்ட முன்வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச சட்டமுன்வரைபின் 690 ஆம் பிரிவில் சிறப்பு குறிப்பாக இது குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்வதற்க…
-
- 5 replies
- 1.9k views
-
-
மகிந்த அரசாங்கத்தைக் கண்டித்து மீன்பிடி தொழிலாளர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம் எரிபொருள் விலையை திடீரென மகிந்த அரசாங்கம் அதிகரித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து இன்று திங்கட்கிழமை முற்பகல் நீர்கொழும்பில் ஆயிரக்கணக்கான மீன்பிடி தொழிலாளர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் நடத்தினர். சிறிலங்காவில் எரிபொருட்களின் விலையை மகிந்த அரசாங்கம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நேற்று முன்தினம் இரவு திடீரென உயர்த்தியது. பெற்றோலின் விலை 6 ரூபாவாலும், டீசலின் விலை 4 ரூபாவாலும், மண்ணெண்ணெயின் விலை ஒரு ரூபாவாலும் உயர்த்தப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இறுதியில் எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் எரிபொருட்களின் விலையை அரசாங்கம் அதிகரித்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு…
-
- 0 replies
- 678 views
-
-
கொழும்பில் மாணவர்கள் போராட்டம்- காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகள் வீச்சு [திங்கட்கிழமை, 30 யூலை 2007, 16:07 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் செய்த ராஐரட்டை பல்கலைக்கழக மாணவர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும் தண்ணீர் பாய்ச்சியும் கலைத்தனர். லிப்டன் சுற்றுவடத்தில் இன்று திங்கட்கிழமை முற்பகல் 10.30 மணியளவில் குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் முழக்க பதாகைகளையும் முழக்கமிட்டு தமது ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பல்கலைக்கழகத்திற்கான போதுமான வளங்கள், விடுதி வசதி ஆகியவற்றைப் பெறுத்தர ராஜரட்டை பல்கலைக்கழக நிர்வாகமோ அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவோ முன்வரவில்லை என்று கண்டனம் தெரிவித்து இந்த ஆர்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஆமர் பிளேற் இல்லாத இராணுவ வாகனம் குறித்து புலிகளுக்கு தகவல் கொடுப்பது யார்? [30 - July - 2007] [Font Size - A - A - A] இராணுவ வாகனங்களுக்குப் பாதுகாப்புக்காகப் பொருத்தப்படும் உறுதியான உலோகத் தகட்டு உபகரணமே `ஆமர் பிளேற்' என்பதாகும். பொதுவாக இராணுவ வாகனங்களுக்கு ஆமர் பிளேற் பொருத்தப்பட்டிருக்கும். எதிரிகள் மேற்கொள்ளும் அனைத்து வகையான வெடிகுண்டுத் தாக்குதல்களிலிருந்தும் இந்த ஆமர் பிளேற் பொருத்தப்பட்ட வாகனங்கள் பெருமளவில் பாதுகாக்கப்பட்டுவிடும். 25 வருடங்களாக இந்த நாட்டில் போர் நடந்து வருவதால் பாதுகாப்பு முப்படையினர், பொலிஸார், படையினரின் வாகனங்களுக்கு மேற்படி ஆமர் பிளேற் பொருத்தப்பட வேண்டிய அவசியம் பற்றிக் கூறத்தேவையில்லை. புலிகள் இயக்கத்தினர் துப்பாக்கி மற்ற…
-
- 2 replies
- 2.8k views
-
-
திங்கள் 30-07-2007 02:03 மணி தமிழீழம் [மோகன்] அதிகாரப்பரவல் மூலம் தீர்வு முன்வைத்தால் போராட்டம் வெடிக்கும் : ஜே.வி.பி சிறீலங்காவில் சர்வகட்சிக்குழு அதிகாரப்பரவலாக்கம் மூலம் தீர்வு காணலாம் என தீர்வை முன்வைத்தால் இதனை ஜே.வி.பி ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என ஜே.வி.பி யின் பாராளுமன்ற முக்கியஸ்தர்களில் ஒருவரான விஜியஹேரத் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான போராட்டம் தொடரும், ஐதேக வின் தலைவர் ஆட்சியமைக்கவும் நாம் அனுமதிக்கமாட்டோம் எனவும் ஐதேக அண்மையில் நடத்திய போராட்டம் சர்வதேச சதித்திட்டத்தின் ஒரு அங்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இன்று நாட்டின் உண்மையான எதிர்க்கட்சியாக ஜே.வி.பி யே செயற்படுவதாகவும் மக்களுக்கான கட்சியாக ஜே.வி.பி யே செயற்பட…
-
- 3 replies
- 1.2k views
-
-
நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு- போதுமான மருந்துகள் இல்லை: துணுக்காய் மருத்துவமனை அதிகாரி கவலை [திங்கட்கிழமை, 30 யூலை 2007, 15:22 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் மருத்துவமனையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் போதுமான மருந்துப் பொருட்கள் இல்லை என்று மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி பு.குகதாஸ் கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது: மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளர்களின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டதாக உள்ளது. நோயாளர்கள் அனைவருக்கும் சிகிச்சை வழங்க முடியாத நிலை காணப்பட்டாலும் முடிந்தவரை இருக்கின்ற மருந்து வகைகளைக் கொண்டு நோயாளர்களின் தேவைகளைப் பூர்த்தி …
-
- 0 replies
- 749 views
-
-
திங்கள் 30-07-2007 15:13 மணி தமிழீழம் [சிறீதரன்] மனிதநேய விவகாரங்களுக்கான ஐநா வின் உயர் அதிகாரி சிறீலங்காவிற்கு விஜயம் ஐக்கிய நாடகள் சபையின் மனிதநேய விவகாரங்கள் மற்றும் இடர் அனர்த்த பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளர் திரு.ஜோன் கொல்மிஸ் அவர்கள் எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 6 ல் இருந்து 9 ம் திகதி வரை சிறீலங்கா அரசின் அழைப்பை ஏற்று விஜயம் ஒன்றை மேற்கொள்ள இருப்பதாக தெரியவருகிறது. பட்டினிக்கு எதிரான அமைப்பின் 17 ஊழியர்கள் கொலை செய்யப்பட்டு ஒருவருடம் பூர்தியாகும் நிலையில் இவரது விஜயம் இடம்பெறுகின்ற போதும் இதற்கும் இவரது விஜயத்திற்கும் எதுவித தொடர்பும் இல்லை எனத் தெரியவருகிறது. இதேவேளை பட்டினிக்கு எதிரான அமைப்பு கொழும்பு ஐக்கிய நாடுகள் சபை மண்டபத்தினுள் எதிர்வரும் ஓகஸ்ட் …
-
- 2 replies
- 1k views
-
-
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரும் யாழ் மற்றும் கிளி. மாவட்டங்களுக்கான அபிவிருத்திக் குழுவின் தலைவருமான டக்ளசு நேற்று யாழ் சென்றுள்ளார். தொடர்ந்து யாழ் நகரில் தங்கியிருக்கும் இவர் எதிர்வரும் திங்கள் முதல் பொதுமக்களை நேரில் சந்திக்க உள்ளார். அத்துடன் பலவெறு அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொண்டர் ஆசிரியர்கள், அரச நிர்வாகிகள், வன்னியிலிருந்து இடம் பெயர்ந்துள்ள ஆசிரியர்கள், அரச துறை பணியாளர்கள் உட்பட பல்வேறு துறை சார்நதவர்களையும் சந்தித்து அவர்களது பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகளை மேற் கொள்ள உள்ளனர். பாதுகாப்புத் தரப்பினருக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான உறவுகளை மேலும் உறுதிப்படுத்தி பொதுமக்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை வழங்குவதும் அமைச்சரின்…
-
- 6 replies
- 1.4k views
-
-
திங்கள் 30-07-2007 16:00 மணி தமிழீழம் [சிறீதரன்] அடையாள அட்டையைப் பெற இராணுவ முகாமிற்குச் சென்ற இளைஞர் வீடு திரும்பவில்லை யாழ்ப்பாணத்தில் நேற்று பிற்பகல் இராணுவ முகாமிற்குச் சென்ற இளைஞர் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து இராணுவ முகாமிற்குச் சென்று பெற்றோர்கள் விசாரித்த போது குறிப்பிட்ட இளைஞர் தமது முகாமிற்க்கு வரவில்லையென இராணுவத்தினர் கைவிரித்துவிட்டார்கள். வடமராட்சி தொன்டமானாறு அரசடியைச் சோந்த குமாரசாமி சிவனேசன் வயது 24 என்பவருக்கே இந்த நிலமை ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பெற்றோர்களினால் யாழ் மாவட்ட மனித உரிமைகள் ஆனைக் குழுவில் இன்று முறையிடப்பட்டுளளது. கடந்த சனிக்கிழமை குறிப்பிட்ட இளைஞரிடம் வீதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் தேசிய அ…
-
- 0 replies
- 977 views
-
-
கிழக்கின் வெற்றியால் அரசுக்கு எந்தவொரு நன்மையுமில்லை வீரகேசரி நாளேடு மஹிந்த அரசாங்கம் பரப்புரை செய்ததுபோல கிழக்கின் வெற்றி அவர்களுக்கு எந்தவொரு நன்மையையும் பெற்றுக்கொடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற புலிகளின் குரல் முத்தமிழ் கலையரங்கில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது: தமிழர்களுக்கான தீர்வை முன்வைக்க மஹிந்த அரசாங்கம் தயாராக இல்லை. தீர்வை முன்வைக்குமாறு பன்னாட்டு சமூகமும் அழுத்தங்களைக் கொடுக்கத்தவறிவிட்டது. மஹிந்த அரசாங்கம் பரப்புரை செய்ததுபோல கிழக்கின் வெற்றி அவர்களுக்கு…
-
- 0 replies
- 1.2k views
-
-
கிழக்கு மாகாணத்தின் கட்டுப்பாடும் அரச அதிகாரிகளும் கிழக்கு மாகாண சபையின் ஆளுநரான றியல் அட்மிறல் றொகான் விஜயவிக்கிரமவுக்கு அடுத்த அதிகாரம் கொண்ட சக்தி மிக்க பதவியை வகித்தவர் மட்டுமன்றி, நுவரெலியா மாவட்டத்திலும், அம்பாறை மாவட்டத்திலும் அரச அதிபராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர் இவர். அம்பாறை அரச அதிபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் அங்கு சிங்களக் குடியேற்றங்களை விரிவுபடுத்துவதிலும் தீவிரமாக உழைத்தவர். தமிழ், முஸ்லிம் மக்களின் பாரம்பரிய நிலங்களை சிங்களவர்கள் பலவந்தமாக ஆக்கிரமிப்பதற்குத் துணை நின்றவர். சுனாமியால் தங்கள் வீடுகளை இழந்த தமிழ், முஸ்லிம் கிராமங்களில் வாழ்ந்தவர்களை சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருந்த கிராமங்களில் குடியேற்றுவதன் மூலம், அவர்களைக் கிராமிய அள…
-
- 0 replies
- 926 views
-
-
மகிந்தவின் நிகழ்ச்சி நிரல் தமிழின அழிப்புத்தான் நாய்களின் விடயத்தில் தாம் பௌத்த தர்மத்தைக் கடைப்பிடிப்பதாக காட்டும் மகிந்தரின் ஆட்சியில், தமிழர்களின் உயிர்கள் நாயிலும் கேவலமாகிவிட்டது. தமிழர்களைக் கொள்வதற்காக தன்னினத்தின் உயிர்களையும் பலி கொடுக்க மகிந்த தயாராகவே உள்ளார். கொலைகள் இன்றேல் ஆட்சி இல்லை என்ற தற்போது நிலையே நாட்டில் நிலவுகிறது. மகிந்தர் அணியைப் பொறுத்தவரை தமிழின அழிப்பே முதன்மையானதாக இருக்கின்றது. இலங்கையில் மாறி மாறி ஆட்சிப்பீடத்தில் இருந்த அரசுளும், சிங்களத் தலைவர்களும் செய்ததையே மகிந்தரும் செய்தாலும், மகிந்தர் இப்போது முன்னணி வகிக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏனைய ஆட்சியாளர்கள் உலகை ஏமாற்றும் விதத்தில் தமிழருக்கு கூடுதல் அதிகாரங்களை வழ…
-
- 0 replies
- 835 views
-
-
இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பான சமாதான முயற்சிகளில் பங்கு பற்றிய தரப்பினரும் அக்கறையுடைய தரப்பினரும் சற்றுப்பின்னகர்ந்துள்ள ஒரு நிலை காணப்படுகிறது. போர் எல்லாக்கட்டுகளையும் மீறி தன்பாட்டில் விரிவடைந்து செல்லும்போது அதனை வெளியே நின்று பார்க்கும் ஒரு நிலைக்கு இந்தத்தரப்பினர் இப்போது தள்ளப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. போர் நிறுத்தக்கண்காணிப்புக்குழு
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியா அயல்நாடு எனும் வகையில் தனது பிரசன்னத்தை ஆழமாகவே பதிக்க வேண்டிய தேவைகள் ஏற்பட்டமையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளும் பலன்களும் இலங்கையின் தமிழர் உரிமைப் போராட்டத்தினை மிக மிக ஆழமாகவேம் பாதித்துள்ளன என்பதை மறுக்கவோ, மறக்கவோ முடியாது. அண்மைக்கால வரலாற்றில் 1987 இல் இலங்கை - இந்திய இணைவு ஆவணம் உண்மையில் அதன் பின் வந்துள்ள அரசியற் போக்குகளை தீர்மானித்துள்ளது. அதன் மிகப்பெரிய சாதனைகளிலொன்று வடக்கு - கிழக்கை ஒரு அலகாகக் கொண்டமையாகும். இதனோடு, இணைந்த முக்கியத்துவமுடையது தமிழை இலங்கையின் தேசிய மொழிகளிலொன்றாக பிரகடனப்படுத்தியமை. இந்த இணைவு ஆவணத்துக்கு பிரேமதாஸ உட்பட பல சிங்கள அரசியல்வாதிகள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதன் அடியாகவே சமாதானக்கா…
-
- 0 replies
- 951 views
-
-
ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை நிகழ்ந்து நேற்றுடன் இரண்டு தசாப்தங்கள் இருபது ஆண்டுகள் பூர்த்தியாகியிருக்கின்றன. இலங்கைத் தீவின் அயல் தேசமான இந்திய வல்லாதிக்கம், தனது புவியியல், அரசியல் கேந்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில் தான் வகுத்த உருப்படியற்ற அரைகுறை தீர்வுத்திட்டம் ஒன்றை, இலங்கை இனப்பிரச்சினைக்கான அரசியல் முடிவாக இத்தீவின்மீது வலிந்து திணித்த செயற்பாட்டின் இருபது ஆண்டுகளே இப்போது பூர்த்தியாகியிருக்கின்றன. இந்திய மேலாதிக்கத்தின் நெருக்குவாரத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் தமது இலட்சியங்களைக் கூடக் கைவிடத் தயாரான ஈழத் தமிழ்த் தலைவர்களின் அரைகுறை ஒப்புதலோடும் கொள்கையிலும், இலட்சியத்திலும் பற்றுறுதி மிக்க ஈழத் தமிழ்த் தலைமையைப்…
-
- 0 replies
- 871 views
-
-
இலங்கையின் சமா தான முன்னெடுப்புகளில் காத்திரமான பங்கு வகிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளேயர் தட்டிக்கழித்து விட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதைவிட மத்திய கிழக்குச் சமாதானத் தூதுவராகப் பதவி வகிப்பது பெரிதும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்பது ரொனி பிளேயரின் கணிப்பீடு என்று தெரிவிக்கப்படுகிறது. எப்படியிருப்பினும் பிளேயர் பிரதமராக இருந்தபோது இலங்கை நிலைவரத்தில் அதீத அக்கறை செலுத்தி வந்துள்ளார். தற்போது அவர் மத்திய கிழக்குச் சமாதானத் தூதுவராகப் பதவியேற்றிருப்பதால் இலங்கை தொடர்பாக பிரிட்டன் மேற்கொள்ளும் முயற்சிகளில் அவர் தீவிர பங்கேற்பார் என எதிர்பார்க்க இயலாது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இரு தசாப்த காலங்களாக, இலங்கை இன…
-
- 0 replies
- 1.1k views
-
-
இராணுவத்தில் பாரிய மாற்றம் வீரகேசரி நாளேடு இராணுவ கட்டளை தளபதிகள் பலரும் இடம் மாற்றப்பட்ட நிலையில் இராணுவத்தில் பாரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரம் வருமாறு; வன்னிப்பகுதிக்கான புதிய பாதுகாப்பு தளபதியாக மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கடந்த வெள்ளிக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளார். வன்னிப் பகுதியின் தற்போதைய கட்டளைத் தளபதியான மேஜர் ஜெனரல் உபாலி எதிரிசிங்க இராணுவத் தலைமையகத்தின் பொது அதிகாரிகள் பிரிவின் பணிப்பாளராக பதவியேற்றுள்ளார். இராணுவத் தலைமையகத்தின் பொது அதிகாரிகள் பிரிவின் பணிப்பாளர் பிரிவையும் கண்காணித்து வந்த இராணுவத்தின் பிரதம அதிகாரியான மேஜர் ஜெனரல் லோரன்ஸ் பெர்ணான்டோ அப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ஜெயசூரிய…
-
- 1 reply
- 1.2k views
-
-
சீன அபாயத்தைத் தடுக்க சிங்களருக்கு ஆயுதமா? தமிழரைக் கொன்று குவிக்கத் துணைபோகாதீர்! -பழ.நெடுமாறன் இந்திய அரசில் அங்கம் வகிக்கும் மூத்த அமைச்சர்கள் இருவர் இலங்கை இனப்பிரச்சினை குறித்துத் தெரிவித்த கருத்துக்கள் அப்பிரச்சினையின் உண்மையான வடிவத்தினை அவர்கள் முற்றிலுமாகப் புரிந்துகொள்ளவில்லை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே. அந்தோணி தில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகளின் மாநாட்டினைத் தொடங்கி வைக்கும்போது (19-06-07) பின்வருமாறு கூறினார்: "விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசு கேட்கும் அனைத்து உதவிகளையும் இந்தியா செய்யும். அதே வேளையில் இலங்கை இனப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியான தீர்வைவிட அரசியல் ரீதிய…
-
- 0 replies
- 823 views
-