ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143312 topics in this forum
-
மட்டு மாவட்டத்தில் ஏறவூர், ஐயங்கேணியில் நேற்று நண்பகல் 12 மணியளவில் ஈ.பி.டி.பி அமைப்பின் இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கண்ணன் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி சீனிவாசன் (வயது 31),குட்டி என அழைக்கப்படும் சித்திரவேல் வசந்தன் (வயது29) ஆகியோரே கொல்லப்பட்டவர்களாவர். செங்கலடியில் உள்ள தமது அலுவலகத்தில் இருந்து இவர்கள் இருவரும் ஐயங்கேணிக்கு தனிப்பட்ட அலுவலாகச் சென்று கொண்டிருந்தனர் என்றும் அவர்களை வழிமறித்த பிஸ்ரல் குழு இருவரையும் சுட்டு விட்டுத் தப்பிவிட்டது என்றும் பொலிஸார் தெரிவித்தனர். விடுதலைப்புலிகளின் பிஸ்ரல் குழுவே இந்தத் தாக்குதலை மேற்கொண்டது என்று பாதுகாப்புப் படையினரும் ஈ.பி.டி.பியினரும் அறிவித்துள்ளனர். நன்றி : சுடர் ஒளி
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்படும் குடிசன மதிப்பீட்டினை உடன் நிறுத்த வேண்டும் கிழக்கு மாகாணத்தில் அவசர அவசரமாக மேற்கொள்ளபட்டு வரும் குடிசன மதிப்பீட்டு நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவ நடவடிக்கை மூலம் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில் குடிசன மதிப்பீட்டை மேற்கொள்வதானது கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இனவிகிதாசாரத்தை திட்டமிட்டு குறைக்கும் முயற்சி எனவும் கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு மேலும் தெரிவித்துள்ளதாவது: கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் கடந்த…
-
- 0 replies
- 848 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....8fcb0b968dbbbd6 ஆய்வு: கொழும்பு குழம்பியிருக்கின்றதா?
-
- 2 replies
- 2.2k views
-
-
வெள்ளி 31-08-2007 00:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஏறாவூரில் இரு ஈ.பி.டி.பி யினர் சுட்டுக்கொலை மட்டக்களப்பு மாவாட்டம் ஐயங்கேணி ஏறாவூரில் வியாழக்கிழமை மதியம் 12.30 மணியளவில் இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணைஇராணுவக்குழுவான ஈ.பி.டி.பியின் இரு உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். உந்துருளியில் சென்ற இருவரே இவர்களை சுட்டுக்கொன்றபின் தப்பித்துச் சென்றதாக தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 680 views
-
-
வெள்ளி 31-08-2007 00:48 மணி தமிழீழம் [செந்தமிழ்] சிறீலங்காவில் ஊடக வன்முறைக்கு எதிராக போராட்டம் நேற்று வியாழக்கிழமை மதியம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக ஐந்து ஊடக நிறுவனங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. ஊடகவியலாளர்களுக்கு எதிராக அண்மையில் விடுக்கப்பட்டுவரும் கொலை அச்சுறுத்தல்கள் பயமுறுத்தல்களுக்கு எதிராகவே இப்போராட்டம் நடைபெற்றதாக தெரியவருகிறது. சிறீலங்காவில் பணியாற்றும் பத்திரிகையாளர் சங்கம் ,சிறீலங்கா தமிழ் பத்திரிகையாளர் அமைப்பு, சிறீலங்கா முஸ்லீம் ஊடகவியலாளர் அமைப்பு, ஊடக பணியாளர்கள் வர்த்தக ஒன்றியம், சுதந்திர ஊடகவியலாளர் அமைப்பு ஆகியன இவ்ஆர்பாட்டத்தில் பங்கேற்றிருந்தனர். நன்றி ப…
-
- 0 replies
- 596 views
-
-
இந்த நிகழ்சியில் தமிழரின் நிலை தெளிவாக தெரிகின்றது.ஒருவர் நிருபருக்கு சொல்கின்றார் அதோ பாருங்கள் ஆமி குளிர்பானம் குடுக்குது சனத்துக்கு அது எவ்வளவு மனிதாபிமான உதவி என கேட்க சிரிப்புத்தான் வந்தது அதுமட்மல்ல இன்னொரு இராணுவ அதிகாரி சொல்கிறார் சனம் பாதிக்ககூடாதென்பதற்காகத்தா
-
- 3 replies
- 5.1k views
-
-
வியாழன் 30-08-2007 20:05 மணி தமிழீழம் [தாயகன்] அம்பாறையில் முஸ்லீம்கள் வெளியேற்றப்படுவர் - சம்பிக்க ரணவக்க அம்பாறையில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப் படையினர், மற்றும் ஊர்காவல்ப் படையினரின் பாதுகாப்புடன் தமிழ் - முஸ்லீம் மக்களின் கிராமங்களை ஆக்கிரமித்துக் குடியேறியுள்ள சிங்களவர்கள் அந்தப் பகுதிகளில் புத்த சிலைகளை நிறுவி, புனித பௌத்த நகரங்களாக சித்தரித்து வருகின்றனர். இதன் ஒரு கட்டமாக தீகவாபிய என சிங்களப் பெயர் சூட்டப்பட்டுள்ள பழந்தமிழ்க் கிராமத்திலுள்ள முஸ்லீம் மக்களை அங்கிருந்து வெளியேற்றப் போவதாக, இனவாதக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். பௌத்த புனித நகரத்தில் முஸ்லீம் மக்கள் பலவந்தமாகக் குடியே…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிள்ளையான் குழுவின் முக்கிய நபர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007, 13:09 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவின் ஒரு பிரிவான பிள்ளையான் குழுவின் முக்கிய நபர் முரளி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டதாக தெரிகிறது.கருணா குழுவுக்கும் பிள்ளையான் குழுவுக்கும் இடையேயான மோதலில் நேற்று புதன்கிழமை காலை முரளி என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.?ுட்டுக்கொல்லப்பட்ட முரளியின் உடல் திருகோணமலையிலிருந்து நேற்று இரவு மட்டக்களப்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. மட்டக்களப்பில் துணை இராணுவக் குழுவினர் இருவர் சுட்டுக்கொலை [வியாழக்கிழமை, 30 ஓகஸ்ட் 2007, 18:33 ஈழம்] [தாயக செய்தியாளர்] மட்டக்களப்பில் சிறில…
-
- 2 replies
- 938 views
-
-
ஆள்கடத்தல் அரசு அனுசரணையுடன் ஆசியாவில் இலங்கை முதலிடத்தில்! தண்டனை விலக்குடன் ஊக்குவிக்கப்படுவதாக மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல் வல்வந்தமான ஆள் கடத்தல்களுக்கு நேர்முகமாகவும் மறைமுகமாகவும் அரசாங்கங்கள் அனுசரணை வழங்கும் ஆசிய நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. அரசாங்கத்துக்கும் அதன் சார்பு அமைப்புகளுக்கும் எதிரானவர்களே கடத்தப்பட்டு காணா மற்போகச் செய்யப்படுகிறார்கள். இவற்றில் ஈடுபடுவோருக்கு தண்டனை விலக்கு அளிக்கப் படுகிறது. இவ்வாறு அறிவித்துள்ளது, ஹொங்ஹொங்கை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் ஆசிய மனித உரிமைகள் ஆணைக் குழு. இன்று ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி, காணாமற்போனோர் சர்வதேச தினமாகும். அதனை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கை யிலேயே ஆணைக்குழு மேற்சொன்ன தக வல்களை வெளியி…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடத்தல்களில் இராணுவம், - வான்படை அதிகாரியின் வாக்குமூலம். - நடவடிக்கைக்காக பயன்படுத்தப்பட்ட வான் படை சார்ஜன் கொடித்துவக்கு முடியன்சிலகே சமன் ஹேமந்த தேசப்பிரிய என்பவர் திருமண உறவின் மூலமாக கருணாவுக்கு நெருங்கிய உறவுக்காரர் ஆவார். ஜ வெள்ளிக்கிழமைஇ 31 ஆகஸ்ட் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ சிறிலங்கா இராணுவமும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவும் இணைந்து கடத்தல்களை மேற்கொண்டது குறித்து கடத்தல் சம்பவங்களில் தொடர்புடைய சிறிலங்கா வான்படை அதிகாரி தேசப்பிரிய விரிவான வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளியாகும் வார ஏடு தெரிவித்துள்ளது. கடந்த ஜூன் 21 ஆம் நாள் சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னாள் வான்படை ஸ்குவான்ரன் லீடரான நிசந்த …
-
- 1 reply
- 1.4k views
-
-
வியாழன் 30-08-2007 17:54 மணி தமிழீழம் [தாயகன்] இவ்வாண்டில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்து வெளியிட்டு பரப்புரை மேற்கொள்ளும் அரச சார்பு ஊடகங்கள் சிறீலங்காப் படைகளின் விமானக் குண்டுத் தாக்குதலிலும், எறிகணை வீச்சிலும், நாளாந்த படுகொலைப் பட்டியலிலும் 2006ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து இதுவரை ஐயாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இன்று செய்தி வெளியிட்டிருக்கும் தெற்காசிய ஊடக மையம், சிறீலங்காப் படைகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இந்த ஆண்டில் 547 பேர் மட்டுமே படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், 396 பேர் மட்டுமே காணாமல்ப் போயிருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான கண்டனங்கள் அனைத்துலக…
-
- 1 reply
- 984 views
-
-
ஹிந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் ? அவர் இந்து நாளிதழின் ஆசிரியர், ஈழப்பிரச்சனைப் பற்றி தவறான தகவல்களை எழுதுகிறார் என்பது மட்டும் தானே ? என்.ராம் ஏன் ஈழப் பிரச்சனைப் பற்றிய தவறான தகவல்களை எழுத வேண்டும் ? அதுவும் ஈழ விடுதலையை வெறித்தனமாக எதிர்த்து சிறீலங்கா ரத்னாவாக வேண்டும் ? கடந்த ஆண்டு என்னுடைய ஒரு கட்டுரையின் மறுமொழியிலே அது பற்றி கூறியிருந்தேன். "ஏன் ஹிந்து இவ்வாறு நடந்து கொள்கிறது என்பதை ஆராய வேண்டியதன் அவசியம் உள்ளது இலங்கை-இந்திய ஒப்பந்தத்தின் பொழுது ஹிந்து ராமின் பங்களிப்பு முக்கியமானது. விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் அவரை சந்தித்து பேசியது, அதன் பிறகு அவர் ஜெயவர்த்தனே அரசின் அமைச்சர்களை சந்தித்து பேசியது, ராஜீ…
-
- 1 reply
- 2.1k views
-
-
ஆயித்தியமலையில் கிளைமோர் தாக்குதல்: மூன்று காவல்துறையினர் பலி! மேலும் இருவர் படுகாயம் ஆயித்தியமலைப் பகுதியில் விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் மூன்று சிறீலங்கா காவல்துறையினர் கொல்லப்பட்டு மேலும் இரு காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று புதன்கிழமை காலை காவல்துறையினரை இலக்கு வைத்து இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் போது காயமடைந்த காவல்துறையினர் அம்பாறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளளனர். - பதிவு
-
- 0 replies
- 1.2k views
-
-
பயங்கரவாதிகளிடமிருந்து முழு நாட்டையும் கைப்பற்றுவோம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு வீரகேசரி நாளேடு எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு விரைவில் முழு நாட்டையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும் அமைதியாகவும் வாழ்வதற்கான தேசத்தை கடியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுகிகன்றேன் என்று ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஷ தெரிவித்தார். கண்டி பெரஹெரவை கண்டுகளிப்பதற்காக வந்திருந்த அம்பாறை மாவட்டத்தின் டீ.எஸ் சேனாநாயக்க, திவுலான வித்தியாலயம், சம்மந்துறை பாடசாலை மற்றும் உகன மகா வித்தியாலயங்களின் மாணவர்கள் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். கி…
-
- 7 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக கருணா அணியின் 10 பணிமனைகள் கிழக்கு மாகாணத்தைப் படையினர் புலிகளிடமிருந்து மீட்டதை அடுத்து கருணா அணியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்து அலுவலகங்களைப் புதிதாகத் திறக்க வுள்ளனர் எனப் புலனாய்வுத் துறையினர் அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றா
-
- 2 replies
- 1.7k views
-
-
புதன் 29-08-2007 22:25 மணி தமிழீழம் [தாயகன்] ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான யுரோ நாணயத் தாள்கள் வயிற்றுக்குள் கண்டுபிடிப்பு ஐம்பது இலட்சம் ரூபா பெறுமதியான யுரோ நாணயத் தாள்களை விழுங்கி வயிற்றுக்குள் எடுத்துச் சென்ற இந்திய பிரசைகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த இவர்கள் இருவரும் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வயிற்றிலிருந்த யுரோ நாணயத் தாள்கள் வெளியே எடுக்கப்பட்டுள்ளன. pathivu
-
- 4 replies
- 2.2k views
-
-
இன நெருக்கடித் தீர்வு முயற்சிக்கு வெளிநாட்டு உதவி தேவையில்லை * சர்வ கட்சியூடாகவே யாவும்; பிரதமர் அறிவிப்பு எம்.ஏ.எம்.நிலாம் இலங்கை இன நெருக்கடித் தீர்வு விடயத்தில் இனிமேல் வெளிநாட்டு உதவியை பெற்றுக் கொள்வதில்லையென அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவித்திருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரம நாயக்கா, பாராளுமன்றத்தில் அங்கம்வகிக்கும் அரசியல் கட்சிகளைக் கொண்ட சர்வகட்சி மாநாட்டின் மூலமே தீர்வை எட்டுவதற்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதி பூண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார். அதேசமயம், முழு உலகுக்கும் சவால் விடுத்துக் கொண்டிருக்கும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட அனைத்து நாடுகளும் ஒரே நிகழ்ச்சி நிரலின் கீழ் இயங்குவதற்கு ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் பிரத…
-
- 2 replies
- 1.6k views
-
-
அன்பளிப்பாகக் கிடைத்த பேரீச்சை விற்பனையில்! அரசியல் வாதிகளின் கைவரிசை இது ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு என சவூதி அரேபிய அரசினால் வழங்கப்பட்ட பல மெற்றித் தொன் பேரீச்சம்பழம் இப்பொழுது கொழும்பிலும் கிழக்கு மாகாணத் திலும் சந்தையில் விற்பனைக்கு வந் துள்ளதாம். ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சத்துணவு வழங்கும் திட் டத்தின் கீழ் பெருந்தொகையான பேரீச் சம்பழத்தை சவூதி அரசு வழங்கியுள் ளது. இவை அனைத்தும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியிடமே ஒப்படைக்கப்பட்டன. இவ்வாறு கிடைக்கப் பெற்ற பேரீச் சம்பழம் உரிய முறையில் பங்கீடு செய் யப்படாததனால் அவை பொதுச் சந்தை யில் விற்பனை செய்யப்படுகின்றன என முறைப்பாடுகள் கிடைத்திருக்கின் றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு…
-
- 1 reply
- 1.3k views
-
-
மேலும் ரூ. 3400 கோடிக்கு ஆயுதக் கொள்வனவு மற்றோர் ஊழலுக்கு தயார் என்கிறது ஐ.தே.க.! ராஜபக்ஷ அரசு இந்த வருட இறுதிக் குள் மேலும் 30 கோடி அமெரிக்க டொலர் (சுமார் மூவாயிரத்து நானூறு கோடி ரூபா) பெறுமதியான யுத்தத் தளபாடங்களை விமானப் படையினருக்குக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மற்றொரு ஊழல் மோசடிக்கு ஆரம்ப ஏற் பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு குற்றம் சுமத்தும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, ராஜபக்ஷ குடும்பத்தின் ஊழல் வர்த்தகம் கட்டுமட்டில்லாமல் தொடர்வதாகவும் சீறி யிருக்கின்றது. "மிக்' ரக யுத்த விமானக் கொள்வனவில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான விசா ரணைகள் இன்னும் முடுக்கி விடப்படாத நிலையில் மீண்டும் ஒரு ஊழல் நடவடிக்கை யில் ஈடுபட அரசு முடிவெடுத்து…
-
- 0 replies
- 994 views
-
-
உலக வலைபதிவாளர் சங்க இணையத்தில் ஈழப்பிரச்சினை பற்றிய கருத்தாடல்கள் தொடங்கப்பட்டு இருகின்றது கீழ் வரும் இணைப்புகளில் அந்த கருத்தாடல்களை காணலாம் madu church Massacre by srilankan govenment http://worldub.blogspot.com/2007/08/madu-c...-srilankan.html Rajiv Gandhi's War Crimes in Tamil eelam http://worldub.blogspot.com/2007/08/rajiv-...amil-eelam.html Sri Lanka : The National Question and the Tamil Liberation Struggle http://worldub.blogspot.com/2007/08/sri-la...-and-tamil.html உங்களின் பங்களிப்பினை நல்குவதன் மூலம் இன்னும் சிறப்பாக செயற்பட முடியும் என நம்புகின்றோம் உங்களின் கருத்துகளை முன்வையுங்கள்
-
- 0 replies
- 1.3k views
-
-
லெப். ஆழிசையின் வித்துடல் முழுப்படைய மதிப்புடன் விதைப்பு [புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007, 20:04 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] மன்னார் தம்பனைப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (27.08.07) சிறிலங்கா இராணுவத்தினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த லெப். ஆழிசை என்ற மாவீரரின் வித்துடல் இன்று முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. முன்னதாக முழங்காவில் அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் இன்று புதன்கிழமை காலை 10.30 மணிக்கு தேசியப் பணிக்குழுச் செயலாளர் ராஜன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் பொதுச்சுடரினை போராளி நம்பி ஏற்றினார். ஈகச்சடரேற்றி மலர்மாலையை மாவீரரின் பெற்றோர் அணிவ…
-
- 6 replies
- 1.8k views
-
-
Posted on : 2007-08-30 சர்வதேசத்தைக் கையாள்வதில் தவறு இழைத்து வரும் கொழும்பு மோசமான மனித உரிமை மீறல்கள் காரணமாக உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் இலங்கையின் பெயர் கெட்டுப் போயி ருக்கும் இந்தச் சூழலில் அடுத்து வரும் மாதங்களில் முக்கிய மான நிகழ்வுகள் இடம்பெறவிருக்கின்றன. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகிறது. அதேசமயம் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டமும் நியூயோர்க்கில் நடைபெற விருக்கிறது. மனித உரிமை மீறல்களுக்காக இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் ஒன்று ஐ.நா.மனித உரிமைக் கவுன்ஸில் கூட் டத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சில தரப்புகள் வற்புறுத்தி வரும் பின்னணியில், அந்த முயற்சி மேற்படி கவுன்ஸிலின் முன்னைய கூட்டத் தொடர்களில் ஆரம்பிக்…
-
- 0 replies
- 845 views
-
-
வியாழன் 30-08-2007 04:25 மணி தமிழீழம் [மயூரன்] ரணில் சந்திரிக்கா சந்திப்பு சிறீலங்காவின் எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்காவை நேற்று சந்தித்து மனிதஉரிமை மீறல்கள்இ சமாதான முயற்சி உட்பட பலவிடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது. இச்சந்திப்பு சுமார் 45 நிமிடநேரம் குமாரதுங்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதாகவும் தெரியவருகிறது. இதேவேளை சுதந்திரக்கட்சி மக்கள் முன்னணி தலைவர் மங்களசமரவீர அவர்கள் குமாரதுங்கவை நாளை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.
-
- 0 replies
- 692 views
-
-
ஐ.நா. தீர்மானத்தை தடுக்க சிறிலங்கா குழு ஜெனீவா பயணம் [புதன்கிழமை, 29 ஓகஸ்ட் 2007, 20:50 ஈழம்] [செ.விசுவநாதன்] ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதைத் தடுக்க சிறிலங்கா அரசாங்கத்தின் குழு ஒன்று எதிர்வரும் மாதம் ஜெனீவாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளது. செப்ரெம்பர் 10 முதல் 28 ஆம் நாள் வரை ஜெனீவாவில் மனித உரிமைகள் சபையின் கூட்டம் நடைபெறுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு தற்போது போர்த்துக்கல் தலைமைப் பொறுப்பு வகிக்கிறது. சிறிலங்காவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமைகள் சபையில் தீர்மானம் கொண்டு வருவது குறித்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தற்போது விவாதித்து வருகின்றன. கடந்த மார்ச் மாதம் …
-
- 1 reply
- 862 views
-
-
மாத்தளையில் மகாத்மா காந்தியின் சிலை இனம் சிங்களவர்களால் நொருக்கப்பட்டது! ஜ புதன்கிழமைஇ 29 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மாத்தளையிலுள்ள மகாத்மா காந்தி ஞாபகார்த்த மண்டபத்தில் மக்களின் பார்வைக்கென கடந்த 20 ஆம் திகதி திறக்கப்பட்ட காந்தியின் உருவச்சிலை சிங்களவர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சிலை வைக்கப்பட்டிருந்த ஞாபகார்த்தக் கட்டிடம் 1927 ஆம் ஆண்டு மாத்தளைக்கு மகாத்மா காந்தி மேற்கொண்டிருந்த விஜயத்தின் நினைவாக 1948 இல் அவரது அபிமானிகளால் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 1983 இல் இடம்பெற்ற ஜூலை வன்செயலின் போதும் இக்கட்டிடம் முற்றாக சேதத்திற்குள்ளாகியிருந்தமை
-
- 3 replies
- 1.2k views
-