Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான ஈ.பி.டி.பி. கட்சிக்குள் பிளவுகள் தோன்றியுள்ளதாகவும், அக்கட்சியின் இரண்டாம் நிலை தலைவர் எஸ்.தவராஜா நாட்டை விட்டு தப்பி ஓடிவிட்டதாகவும் கொழும்பு ஊடகம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க

  2. ஞாயிறு 09-09-2007 03:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] பருத்தித்துறையில் சிறீலங்கா புலனாய்வுபிரிவின் உறுப்பினர் சுட்டுப்படுகொலை! சனிக்கிழமை மாலை 4.45 மணியளவில் தட்டாதெரு பகுதி பருத்தித்துறையில் சிறீலங்கா புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவர் விடுதலைப்புலிகளின் பிஸ்டல்குழு உறுப்பினர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இக்குறிப்பிட்ட சிறீலங்கா புலனாய்வு உறுப்பினர் பிரதானவீதியில் தட்டாதெரு பகுதியில் பிரயாணிக்கும்போது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இதனையடுத்து சிறீலங்கா படையினர் பெரும்எடுப்பில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இதன்போது கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் இன்னமும் வெளியிடப்படவில்லை எனவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.

  3. ஞாயிறு 09-09-2007 04:01 மணி தமிழீழம் [செந்தமிழ்] உயிலங்குளம் பாதையை மீளதிறப்பதற்கான பேச்சுகள்! கடந்த வாரம் முதல் மன்னார் - உயிலங்குளம் சோதனைசாவடி மூடப்பட்டுள்ளமை தெரிந்ததே. இதனை மீளதிறப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் சிறீலங்கா இராணுவத்தினருடனும் விடுதலைப்புலிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது. கடந்த செப்ரம்பர் மாதம் 3ம் திகதி முதல் சர்வதேச செஞசிலுவை சங்க ஊழியர்கள் இப்பிரதேசத்தை விட்டு விலகியமை தெரிந்ததே. இருதரப்பினருடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின் இருதரப்பையும் சர்வதேச மனிதாபிமான விதிகளை மதிக்கவேண்டும் எனவும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளதாக தெரியவருகிறது. இத…

  4. லண்டனிலிருந்து ஒலிபரப்பாகும் ஐபிசி தமிழின் 10 ஆவது ஆண்டு விழா கிளிநொச்சி பொது விளையாட்டரங்கில் இன்று நடைபெற்றது. மேலும் வாசிக்க

  5. இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு படகு மூலம் உணவுப்பொருட்களை அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என்று சென்னையில் உள்ள இந்தியாவுக்கான சிறிலங்காவின் துணைத் தூதுவர் பி.எம்.ஹம்சா தெரிவித்துள்ளதுடன் படகு மூலம் உணவுப் பொருட்களை கொண்டு செல்லப்போவதாக கூறும் பழ.நெடுமாறன், இலங்கை கடல் எல்லைக்குக்கூட வரமாட்டார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  6. எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்திற்குப் பின்னர் 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஆரம்பமாகும் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க

  7. வவுனியா தம்பனை பகுதியில் நடைபெற்ற மோதலில் சிறிலங்கா இராணுவத்தினர் மூவர் கொல்லப்பட்டுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. மேலும் வாசிக்க

  8. மட்டக்களப்பு மாவட்டம் இலுப்படிச்சேனையில் அநாதரவாக நின்ற வாகனமொன்றிற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் சிறிலங்கா இராணுவ அதிகாரியொருவர் கொல்லப்பட்டதுடன், ஆறு இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் வாசிக்க

  9. ஐக்கிய நாடுகள் சபையின் 62 ஆவது பொதுக்கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ள சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மற்றும் பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். மேலும் வாசிக்க

  10. சிறிலங்காவின் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே அண்மையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கூறிய விடயங்கள் தொடர்பாக, முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் கருத்துக்களை அறிய சிங்கள வார ஏடொன்று அவருடன் தொடர்பு கொண்ட போது, ஜெயராஜ் பலவித கேலிக் கதைகள் கூறுவதாகவும் அவற்றிற்கு பதிலளிக்க தனக்கு நேரம் இல்லை என்று சந்திரிகா தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  11. சிறிலங்காப் படையினர் கிழக்கு மாகாணத்தை விடுவித்த பின்னர் தற்போது அங்கு மேற்கொள்ளப்படும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் ஊடாக அந்த மாகாணம் முஸ்லிம் மயப்படுத்தப்படுவதாக ஜாதிக ஹெல உறுமய குற்றம் சாட்டியுள்ளது. மேலும் வாசிக்க

  12. யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் மீன்பிடித்தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் நடத்திய தாக்குதலில் மீன்பிடித் தொழிலாளி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க

  13. போரின் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை மேலும் பலவீனமடையச் செய்த பிறகே வடக்கு - கிழக்குப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக இந்தியாவிற்கு சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பின் வார இறுதி சிங்கள நாளேடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க

  14. பல்வேறு அமைப்புகளுடன் தொடர்புடைய வெளிநாட்டவர்கள் இந்த நாட்டு தேசிய பாதுகாப்பிற்கு அதிகளவில் தலையீடுகளை மேற்கொள்வதாக கண்டறியப்பட்டமையினால் இனிமேல் வெளிநாட்டு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வெளிநாட்டவர்களுக்கு மூன்றுவருடங்களுக்கு மாத்திரம் தங்கியிருப்பதற்கு அனுமதியளிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க

  15. சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களுக்குமிடையில் அடுத்த வாரம் முக்கிய சந்திப்பு நடைபெறவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் வாசிக்க

  16. யாழ்ப்பாணம் போவோம் வாருங்கள் தமிழர்களே !!! ஏறத்தாழ 5 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் உணவுக்கும் மருந்துக்கும் தவித்துக்கொண்டிருக்கிறார்க

    • 4 replies
    • 2.8k views
  17. அம்பலப்படுத்துகிற தமிழக 'தினமணி" தமிழர்களுக்குரிய பாராம்பரிய பண்பாட்டைக் காப்பாற்றுவதற்காக ஈழத்தின் புகழ்பெற்ற கலாசார நகரம் என வர்ணிக்கப்படும் யாழ். குடாநாடு கொடுக்கும் விலை அதிகமானது. இவ்வாறு தனது ஆசிரியர் தலையங்கத்தில் உணர்வுபூர்வமாக குறிப்பட்டிருக்கின்றது தமிழகத்தின் பிரபல நாளேடான தினமணி யாழில் தொடர்ச்சியாக இடம் பெற்றுவரும் கொலைக் கலாச்சாரம், இலங்கை அரசினால் திமிட்டமிடப்பட்ட நடவடிக்கைகளில் ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் என்பவற்றைக் கோடிட்டுக் காட்டும் தினமணி தனது நேற்றைய ஆசிரியர் தலையங்கத்தை வரைந்துள்ளது. அதன் முழு விவரமும் அந்த எழுத்து நடையிலேயே வருகின்றது. தமிழ்ப் பண்பாட்டில் ஊறிய தமிழ்ப் பெண்களை தமிழ்நாடு முழுவதும் தேடியும் கிடைக்கவில்ல…

  18. நாம் அனைவரும் குற்றச்சாட்டுக்களின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளோம். நிரபராதிகளான எம்மை விடுவிக்க நடவடிக்கை எடுங்கள். எமக்கு வேறொன்றும் வேண்டாம். விடுதலையே வேண்டும் என்று பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வாசிக்க

  19. சனி 08-09-2007 02:25 மணி தமிழீழம் [மயூரன்] நாகர்கோவில் முன்னரங்க நிலைகளில் செறிவான எறிகணைவீச்சு வெள்ளி காலை முதல் சுமார் 3 மணித்தியாலங்கள் செறிவான ஆட்டிலறி எறிகணை வீச்சுத் தாக்குதல்களை விடுதலைப்புலிகளும் சிறீலங்காபடையினரும் மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இவ்வாறக எறிகணைவீச்சுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தபொழுது உலங்குவானூர்திகள் இராணுவ முகாமிற்கும் சென்று திரும்பிவண்ணம் இருந்ததாகவும் விடுலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட எறிகணைகள் நாகர்கோவில் மற்றும் மணற்காடு ஆகியபகுதிகளில் இராணுவமுகாமினுள் வீழ்ந்து வெடித்துள்ளதாகவும் அறியமுடிகிறது. சிறீலங்கா இராணுவத்தினரும் பதிலுக்கு மணற்காடு இராணுவமுகாமில் இருந்தும் அதற்கு அடுத்துள்ள பகுதிகளில் இருந்தும் எறிகணைத் தாக்கு…

  20. சனி 08-09-2007 02:56 மணி தமிழீழம் [மயூரன்] வயதான தேநீர் கடை உரிமையாளர் சுட்டுப் படுகொலை இனம்தெரியாத ஆயுதாரிகளால் வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் கைதடி பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் 24 மணிநேர கண்காணிப்பு உள்ள பகுதியில் அவரது தேநீர் கடையில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதன்போது கொல்லப்பட்டவர் 61 அகவையுடைய கைதடி வடக்கை சேர்ந்தசெல்லையா ஜெயபாலசிங்கம் எனத்தெரியவருகிறது. இவர் சுட்டுக்கொல்லப்பட்ட பகுதியில் இராணுவத்தினர் இரவும் பகலும் நடமாடுவதாகவும் சுட்டவர்கள் இராணுவத்திடம் இருந்து இந்தபகுதியில் தப்பியிருக்க முடியாது எனவும் அவ்வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை சிறீலங்கா துணைப்படைக்குழுவினர் தென்மராட்சி பகுதியில் ஒரு கிராமசேகவர் உட்பட…

  21. உறுதியான இலக்குடன் யுத்தத்தை முன்னெடுக்க ஜே.வி.பி. வலியுறுத்தல் *`மனித உரிமைகளை பாதுகாத்து போரிடுவது சாத்தியமில்லை' தேசியப் பிரச்சினை தீர்வுக்கு இராணுவ ரீதியான தீர்வை முன்னெடுக்க விடுதலைப்புலிகளே அரசாங்கத்தையும், படையினரையும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாக்கியிருப்பதாக ஜே.வி.பி.யின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அநுரகுமார திஸாநாயக்க கடந்த புதன்கிழமை சபையில் சுட்டிக்காட்டினார். தேசியப் பிரச்சினைக்கு அதிகார பகிர்வின் மூலம் ஒரு போதும் தீர்வுகாண முடியாதெனவும் அது மக்களை சென்றடைவதற்கு எந்தச்சாத்தியமுமில்லை எனவும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன் நடைபெற்ற வடக்கு, கிழக்கின் தற்போதைய நிலைவரங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத…

  22. இந்தியா – இலங்கை உயர்நிலைப் பாதுகாப்புக்குழு: உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுப்பு இந்தியா – இலங்கை இடையே, பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக, இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கையை உறுதி செய்ய இந்திய அதிகாரிகள் மறுத்துவிட்டார்கள். இலங்கை ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோட்டாபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர், கடந்த வாரம் புதுடெல்லி வந்து, இந்தியாவின் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசினார்கள். அதைத் தொடர்ந்து, நேற்று வியாழக்கிழமை இலங்கை ஜனாதிபதி செயலகத்தால் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தியா – இலங்கை இடையில் ஓர் உயர்நிலைக்க…

  23. http://www.yarl.com/videoclips/view_video....964b07152d234b7

  24. விசேட அதிரடிப்படை அதிகாரி றஞ்சித் ஜெயகூரிய சுவீடன் தூதுவராக நியமனம். ஜ வெள்ளிக்கிழமைஇ 7 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ லண்டனில் பாதுகாப்பு நிலவரங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த றஞ்சித் ஜெயசூரிய தற்போது சுவீடன் நாட்டிற்கு நியமிக்கபட்டுள்ளார். விசேட அதிரடிப்படையை உருவாக்கிய ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் மகன் ரவி ஜெயவர்த்தன இவருடைய திருமணத்திற்கு 1986ல் கையெழுத்திட்டார். இவர் மருத்துவர் பஞ்சலிங்கத்தின் மகள் சூட்டியை திருமணம் செய்துகொண்டார். ரவி ஜெயவர்த்தனவின் தகப்பனார் ஒரு எஸ்.எஸ்.பி தர அதிகாரி. இவர் ஒரு தமிழ் ஆங்கில ஆசிரியையை திருமணம் முடித்தார். பிரித்தானிய தூதுவராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கபட்ட இவர் லக்ஸ்மன் கதிர்காமரால் ஓரங்கட்டப்பட்டிருந்தார். தற்போது சுவீடன் நாட…

  25. இலங்கையில் யுத்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள 84 சதவீத சிங்கள மக்கள் ஆதரவு [Fரிடய் ஸெப்டெம்பெர் 07 2007 01:29:28 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல 84 சதவீதமான சிங்கள மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தேசிய சமதான சபை மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலேயே இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது. யுத்த முன்னெடுப்புகளுக்கு 84 சதவீமான மக்கள் ஆதரவைத் தெரிவித்திருப்பதோடு, யுத்த நடவடிக்கைகளில் அரசாங்கம் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வில் சிறீலங்காப் படைகளின் யுத்த நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகள் யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வார்கள் என தமிழ், முஸ்லிம் மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். http://www.tam…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.