ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு பிணை! பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு – கோட்டை நீதிவான் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது. காலி முகத்திடல் பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் குறித்த வழக்கில் அவரை 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. https://athavannews.com/2…
-
- 0 replies
- 193 views
-
-
நயினாதீவில் தோன்றிய அம்மன் சிலை By Nanthini 27 Jan, 2023 | 10:05 AM அண்மையில் நயினாதீவில் முருகைக்கல்லில் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று மேற்கிளம்பியுள்ளது. நயினாதீவு மேற்குப் பகுதியில் வாழும் மக்கள் ஆதிகாலந்தொட்டு இந்த அம்மனை வழிபட்டு வருகிறார்கள். ஆலடி அம்மன் ஆலயம் எனவும் அழைக்கப்படுகிற இவ்வாலயம் ஆரம்பத்தில் சிறியளவில் அமைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இன்று பெரிதாக புனரமைக்கப்பட்டுள்ள நிலையில், சில தினங்களில் கும்பாபிஷேகமும் நடைபெறவுள்ளது. இக்கும்பாபிஷேக சிரமதான வேலைகளின்போதே முருகைக்கல்லால் வடிக்கப்பட்ட அம்மன் சிலையொன்று நிலத்திலிருந்து…
-
- 1 reply
- 768 views
-
-
கூட்டமைப்பு தலைவர் பதவியில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டாரா? தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருந்து சம்பந்தன் விலக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் தெரிவித்தள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். ”தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் வரைக்கும் தமிழரசு கட்சி ஒரு செயலிழந்த கட்சியாகவே பார்க்கப்பட்டது தமிழீழ விடுதலைப் புலிகள் அதற்கான அங்கீகாரத்தை வழங்கி வீட்டுச் சின்னத்தை ஒரு பொதுச் சின்னமாக தலைவர் அவர்கள் அங்கீகாரம் வழங்கி நாங்கள் ஒரு தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தினோம். இன்று தமிழரசு…
-
- 11 replies
- 1.7k views
-
-
மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட நகைகளை அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடிச் சென்றதன் காரணமாகத் தமது நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிக விரைவில் உரிய தீர்வு பெற்றுத் தரப்படும் என மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ. சூரியகுமார தெரிவித்துள்ளார். அடகு வைத்த நகைகளை மீட்க முடியாமல் பாதிக்கப்பட்டிருக்கும் வாடிக்கையாளர்களுடனான சந்திப்பின் போதே மக்கள் வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் ரி.எம்.டபிள்யூ. சூரியகுமார இவ்வாறு தெரிவித்துள்ளார். மக்கள் வங்கியின் திருநெல்வேலி சேவை நிலையத்தில் அடகு வைக்கப்பட்ட ஒரு தொகுதி நகைகளை அங்கு பணியாற்றிய அதிகாரி ஒருவர் கையாடிச் சென்று விட்டார் என்ற…
-
- 1 reply
- 1k views
-
-
படையினரை பௌத்தவழிபாட்டுத்தலங்களில் இருந்து அகற்றவேண்டாம் - மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் By RAJEEBAN 27 JAN, 2023 | 02:21 PM படையினரை பௌத்தவழிபாட்டுத்தலங்களில் இருந்து அகற்றவேண்டாம் என மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வடக்குகிழக்கு உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பௌத்தவழிபாட்டு தலங்களின் பாதுகாப்பிற்கு என பணியில் அமர்த்தப்பட்டுள்ள படையினரை அங்கிருந்து அகற்றவேண்டாம் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பௌத்தவழிபாட்டுத்தலங்களின் பாதுகாப்பை இருப்பை உறுதிசெய்யவேண்டியது என அரசாங்கத்தின் கடமை என அவர்கள் தெரிவித…
-
- 2 replies
- 550 views
- 1 follower
-
-
யாழில் மீற்றர் வட்டி விவகாரம் : கடனாளிகளை அடித்து துன்புறுத்திய நபர் கைது By NANTHINI 27 JAN, 2023 | 12:28 PM யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு, பணத்தை மீள வசூலிப்பதற்காக கடன் பெற்றவர்களை அடித்து துன்புறுத்தும் நபர் நேற்று (26) மாலை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், அளவெட்டியைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறுகின்றனர். இது தொடர்பில் தெரியவருவதாவது: குறித்த நபர் மீற்றர் வட்டிக்கு பணம் பெற்ற இருவரை தோட்டக் காணியொன்றுக்கு அழைத்துவந்து, கொடூரமாக தாக்கி துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. …
-
- 3 replies
- 849 views
- 1 follower
-
-
யாழ். பல்கலைக்கழக பேரவைக்கு மேலும் 5 உறுப்பினர்கள் நியமனம்! By NANTHINI 27 JAN, 2023 | 04:21 PM யாழ். பல்கலைக்கழக பேரவைக்கான வெளிவாரி உறுப்பினர்களாக மேலும் 5 பேர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரவையின் வெளிவாரி உறுப்பினர்களாக பதவி வகித்தவர்களின் பதவிக்காலம் கடந்த 15ஆம் திகதியுடன் முடிவடைந்ததை தொடர்ந்து, கடந்த 16ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்றாண்டு காலத்துக்கு 9 வெளிவாரி உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அதன் பின்னர், தற்போது மேலும் 5 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம…
-
- 0 replies
- 367 views
- 1 follower
-
-
மனித உரிமைகளை மதிப்பது இலங்கையின் ஸ்திரதன்மைக்கு அவசியமான விடயம் - அமெரிக்க அதிகாரி By RAJEEBAN 27 JAN, 2023 | 12:38 PM மனித உரிமைகளிற்கான மதிப்பு இலங்கையின் ஸ்திரதன்மைக்கும் பொருளாதார செழிப்பிற்கும் அவசியமான விடயம் என அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்சர்வதேச குற்றம் நீதிக்கான தூதுவர் பெத்வான் சாக் தெரிவித்துள்ளார். கனடாவின்தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடனான சந்திப்பின் பின்னர் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நீதி பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்காக கனடாவை சேர்ந்த தமிழ் புலம்பெயர் அமைப்புகளுடன் அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். …
-
- 0 replies
- 580 views
- 1 follower
-
-
இலங்கையின் பொருளாதார நெருக்கடி வேகமாக சுகாதார நெருக்கடியாக மாறுகின்றது - உலக சுகாதார ஸ்தாபனம் By RAJEEBAN 25 JAN, 2023 | 12:29 PM இலங்கை முன்னொருபோதும் இல்லாத சுகாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது மிகவும் அவசியமான மருந்துகள் குறைந்தளவிலேயே உள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி சுகாதார துறையை மோசமாக பாதிப்பதால் பல இலங்கையர்கள் மருத்;துவசேவையை பெறும் வாய்ப்பை இழக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் அபிவிருத்தி சகாக்கள் நிதிஉதவி செய்பவர்களுடன் இணைந்து இலங்கையின் மருந்து மற்றும் மருத்துவ பொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதில் விரைவான ஒத்திசைவா…
-
- 1 reply
- 463 views
- 1 follower
-
-
பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு : காணி உரிமையாளர்களுக்கான நஷ்டஈட்டு தொகை வழங்க நடவடிக்கை By VISHNU 26 JAN, 2023 | 04:29 PM யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்புக்காக காணி சுவீகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்களுக்கான நட்ட ஈட்டு தொகை வழங்குவதற்கான பதிவு செய்யும் செயற்பாடு இன்று (26) தெல்லிப்பழை பிரதேச செயலகத்தின் காணி பிரிவில் இடம்பெற்றுவருகிறது. காணி உறுதிப் பத்திரம், தோம்பு, வங்கி கணக்கு புத்தகம், தத்துவ உரித்தாளர் சத்தியக்கடுதாசி முடித்த படிவம் , தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் வருகை தந்து குறித்த காணி உரிமையாளர்கள் பதிவு செய்ய முடியும். காணி கிராம சேவையாளர் பிரிவுகளான J 246 , J256, J240 இற்குள் அடங்குக…
-
- 2 replies
- 774 views
- 1 follower
-
-
மட்டக்களப்பில் வரிக்கொள்கைக்கு எதிராக வங்கி ,வைத்தியசாலை, மற்றும் பல்கலைக்கழக உத்தியோகத்தர்கள் ஆர்பாட்டம்! By kugen (கனகராசா சரவணன்) அரசாங்கத்தின் சட்டவிரோதமான தன்னிச்சையான அடக்கு முறை கொண்ட வரிக் கொள்கைக்கு எதிராக ஜனவரி 23 முதல் 27 வரை கறுப்பு வாரம் எனும் தொனிப் பொருளில் இலங்கை வங்கி ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், அரச பல்வைத்திய சங்கம், இணைந்து மட்டக்களப்பு காந்திபூங்காவில் இன்று வியாழக்கிழமை (26) ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தல் நிறைவேற்றபட்ட வரிக் கொள்கையை எதிராக இலங்கை வங்கி ஊழியர் சங்கம், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம், அரச பல்வைத்திய சங்கம், இணைந்து ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து …
-
- 0 replies
- 608 views
-
-
யாழ்.வந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு ; யாழ்.பல்கலை மாணவன், காணாமல் ஆக்கப்பட்ட சங்க செயலாளருக்கு அழைப்பாணை! By T. Saranya 27 Jan, 2023 | 10:19 AM தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணம் வந்த ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மேலும் இருவருக்கு நீதிமன்ற அழைப்பாணை கையளிக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் தொடர்பில் கடந்த 17ஆம் திகதி தவத்திரு வேலன் சுவாமிகளை பொலிஸார் கைது செய்து , விசாரணைகளின் பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்றினால் அவருக்கு பிணை வழங்கப்பட்டு குறித்த வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. …
-
- 0 replies
- 317 views
-
-
கடன்வழங்கிய முக்கிய நாடுகளின் இறுதி உத்தரவாதம் கிடைத்ததும் கடனுதவியை இறுதிசெய்ய முடியும் - நாணயநிதியத்தின் முக்கிய அதிகாரி By RAJEEBAN 26 JAN, 2023 | 05:00 PM சர்வதேச நாணயநிதியத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கிருஸ்ணமூர்த்தி சுப்பிரமணியன் பிரதமர் தினேஸ் குணவர்தனவை இன்று சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சிக்காக இலங்கையின் அரசியல் தலைமைத்துவம் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கும் கடுமையான வரிகளை அமுல்படுத்;துவதற்கும் காண்பித்துவரும் அரசியல் உறுதிப்பாடு பாராட்டத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கான சர்வதேசநாணயநிதியத்தின் கடன் உதவிக்கான அனைத்து தேவைகளும் பூர…
-
- 2 replies
- 674 views
- 1 follower
-
-
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை 8 ஆயிரம் பேருடன் நடாத்துவதற்கு தீர்மானம்! கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை 8 ஆயிரம் பேருடன் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 4 ஆயிரத்து 500 இலங்கை பக்தர்கள், மூவாயிரத்து 500 ஆயிரம் இந்திய பக்தர்கள், ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் விருந்தினர்களின் பங்கு பற்றுதலுடன், இவ்வருட கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவத்தினை நடாத்துவதற்கு இலங்கை மற்றும் இந்திய தரப்புகளின் இணக்கத்துடன் தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்ட செயலகத்தில் கட்சி அந்தோனியார் ஆலய வருடாந்த உற்சவம் தொடர்பில் நடைபெறும் முன்னாயத்த கூட்டத்தில் மேற்படி தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1…
-
- 0 replies
- 428 views
-
-
குறைந்த டொலர் மதிப்பில் சம்பளம்; ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 85 விமானிகள் இராஜிநாமா? -சி.எல்.சிசில்- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 42 விமானிகள் கடந்த வாரம் இராஜிநாமா கடிதங்களைக் கையளித்ததாகவும், 85 விமானிகள் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் சான்றிதழ் கடிதங்களுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானி ஒருவர் 10,000 டொலர் மாதாந்த சம்பளமாகப் பெறுகிறார். ஆனால் டொலர் மதிப்பு 225 ரூபா என்ற குறைந்த அளவில் கணக்கிடப்படுகிறது. மற்ற சர்வதேச விமான நிறுவனங்களின் விமானிகளுக்கு 370 ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது…
-
- 2 replies
- 749 views
-
-
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் 14 வயதுடைய சிறுமிக்கு தொடர்ச்சியாக போதைப்பொருட்கள் கொடுத்து, இளைஞர்களால் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தி வந்த நிலையில் சிறுமி பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு அபிவிருத்தி உத்தியோகத்தரால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக மனநலம் குன்றிய குறித்தம சிறுமி அண்ணனின் நண்பர்களால் போதைப் பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஹெரோயினுக்கு அடிமையான சிறுமியின் அண்ணன் அவனது நண்பர்களிடம் ஆயிரம் ரூபா பணத்தினை வாங்கிவிட்டு நான்கு பேரை அழைத்துக்கொண்டுவந்து சிறுமியுடன் ஒன்றாக இரு…
-
- 2 replies
- 753 views
-
-
படகில் 49 கிலோ கஞ்சா கடத்திய மூவர் கைது By VISHNU 26 JAN, 2023 | 04:05 PM (எம்.எம்.சில்வெஸ்டர்) படகொன்றின் மூலமாக 49 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை கடத்திச் செல்ல முற்பட்ட மூவர் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இந்த சந்தேக நபர்கள் முவரும் கடந்த 25 ஆம் திகதி அதிகாலைவேளையில் நெடுந்தீவு தெற்கு கடற்பரப்பில் படகொன்றின் மூலமாக பயணித்துள்ளனர். இதன்போது அப்பகுதியில் கடமையிலிருந்த இலங்கை கடற்படையினர் இவர்களிடம் மேற்கொண்ட சோதனையிட்டுள்ளனர். இந்த சோதனையையடுத்து, அவர்கள் 49 கிலோ கிராமும் 906 கிராமு…
-
- 5 replies
- 575 views
- 1 follower
-
-
ஜனநாயக போராளிகள் கட்சி இன்று(26.01.2023) இந்தியாவுக்கு பயணமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருட இறுதிப் பகுதியில் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொண்டிருந்த ஜனநாயக போராளிகள் கட்சியினர் நாடு திரும்பியிருந்த நிலையில் உள்ளூராட்சி தேர்தலிலும் பங்கேற்கும் முனைப்பில் ஈடுபட்டிருந்தது. ஜனநாயக போராளிகள் கட்சி இந்நிலையில் உள்ளூராட்சி தேர்தலுக்கான புதிய கூட்டணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக உள்ளூராட்சி தேர்தலிலும் ஜனநாயக போராளிகள் கட்சி களமிறங்கியுள்ளது. இச் சூழலில் மீண்டும் இந்தியாவிற்கான பயணத்தை மேற்கொள்ளவுள்ள ஜனநாயக போராளிகள் கட்சி பிரதிநிதிகள், அரசியல் உயர்மட்டங்களையும் சந்தித்து வடக்கு கிழக்கு அரசியல் செய…
-
- 4 replies
- 566 views
- 2 followers
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சுமந்திரன் எம்.பியே உடைத்தார்-செல்வம் எம்.பி. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைவதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்கியவர் சுமந்திரன்தான். தமிழரசுக் கட்சியினர் கூட்டமைப்பை நேசிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பகிரங்கமாகச் சாடியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அறிமுகம் நேற்று நடை பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அத்துடன் தமிழரசுக் கட்சியினர் இழுத்தடித்து விட்டு இறுதியில் சொல்வார்கள் நாம் கேட்கும் ஆசனங்களைத் தர முடியாது என்று. அப்போது நாங்கள் வெளியில் வரமுடியாது. வந்தால் மக்கள் என்ன கருதுவார்கள் என்றால் இவர்கள் ஆசனம் இல்லை என்று வெளியே வந்தார்கள் என்…
-
- 3 replies
- 766 views
- 1 follower
-
-
இலங்கையில் மார்ச் 9இல் உள்ளூராட்சி சபை தேர்தல்: எதிர்க்கட்சிகள் சந்தேகம் நீங்குமா? கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண்பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கை பொருளாதார ரீதியில் பல்வேறு சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், சவாலுக்கு மத்தியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் 9ம் தேதி உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை நடத்தாதிருப்பதற்கு அரசாங்கம் பல்வேறு முயற…
-
- 1 reply
- 486 views
- 2 followers
-
-
மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட கரடியன்குளம் பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க குசனார்மலைக்கு சுவிஸ் தூதுவர் இன்று (26) புதன்கிழமை மாலை விஜயம் செய்தார். கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்துள்ள சுவிஸ் தூதுவர் டொமிங்க் பேர்கிலர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் விஜயத்தினை மேற்கொண்டுள்ளார். இதன்போது மாவட்டத்தில் தொல்லியன் செயலணி ஊடாக தமிழர்களின் பாரம்பரிய இடங்களை தொல்லியல் திணைக்களம் கையகப்படுத்துவதற்கு முன்னெக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனால் தூதுவரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து இந்த விஜயத்தினை முன்னெடுத்தார…
-
- 0 replies
- 693 views
-
-
யாழில் இந்தியாவின் குடியரசு தின நிகழ்வு! January 26, 2023 இந்தியாவின் 74 வது குடியரசு தின நிகழ்வு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் இந்தியா படையினரின் அணிவகுப்பு மரியாதையை அடுத்து, யாழ் இந்தியத்துணை தூதுவர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரனினால் இந்திய தேசியக்கொடி ஏற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு இந்திய குடியரசு தலைவரின் சிறப்புரையும் யாழ் இந்திய துணை தூதுவரால் வாசிக்கப்பட்டது. https://globaltamilnews.net/2023/186745/
-
- 2 replies
- 596 views
- 1 follower
-
-
ரீயூனியன்தீவில் கைதுசெய்யப்பட்ட 38 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். By RAJEEBAN 26 JAN, 2023 | 03:17 PM ரீயூனியன்தீவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 38 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர். டிசம்பர் முதலாம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகொன்று ஐந்து பேருடன் புறப்பட்டதாகவும் இதன் பின்னர் 13 -14ம் திகதிகளில் புத்தளத்திலிருந்து 64 குடியேற்றவாசிகள் படகில் ஏற்றப்பட்டனர் எனவும தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து குறிப்பிட்ட படகு டியோகார்சியாவை நோக்கி பு…
-
- 0 replies
- 449 views
- 1 follower
-
-
நாம் ஏன் சர்வகட்சி மாநாட்டில் பங்குபெற வேண்டும்? ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இன்றைய சர்வ கட்சி மாநாட்டில் தமிழ் முற்போக்கு கூட்டணி கலந்துக்கொள்ளவில்லை என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். எமது பிரச்சினைகள் பற்றியும் பேசப்படாவிட்டால் எதற்காக நாங்கள் பார்வையாளர்களாக கலந்துக்கொள்ளவேண்டும்?” என்ற கேள்வியுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இது தொடர்பான நடத்தை தொடர்பில் அதிருப்தியை வெளியிட்டுள்ளார், இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தேசிய இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான உங்கள் அறிவிக்கப்பட்ட செயற்பாட்டில், இந்திய வம்சாவளி மலையக தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடனும், எமது மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்…
-
- 0 replies
- 247 views
-
-
இலங்கைக்கு இத்தாலி ஹெலிகொப்டர்! மனிதக் கடத்தலுக்கு எதிராக இலங்கை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும், அதற்கு தேவையான ஹெலிகொப்டர்களை வழங்கவும் இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா ஜி. மன்னெல்லா (Rita G. Mannella) விருப்பம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை நேற்று (25) பிற்பகல் சந்தித்த போது இத்தாலிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் இத்தாலிக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்குமிடையிலான சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது, முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது, கலாசார நிகழ்ச்சிகளை பரிமாறிக்கொள்வது, மற்றும் இக்கட்டான நேரத்தில் இ…
-
- 0 replies
- 343 views
-