ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143537 topics in this forum
-
புதன் 25-07-2007 14:34 மணி தமிழீழம் [மயூரன்] பேரணியை குழப்ப ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கை - சூரியாராட்சி நாளை கொழும்பில் நடைபெறவுள்ள அரசாங்கத்திற்கு எதிரான பேரணியை குழப்ப ஸ்ரீலங்கா அரசாங்கம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவின் இணைப்பாளர் ஸ்ரீபதி சூரியாராட்சி தெரிவித்துள்ளார். இதன் ஒரு அம்சமாக வெடிகுண்டுகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் கொழும்பினுள் ஊடுருவியிருப்பதாக அரசாங்கம் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமது பேரணியில் மக்கள் கலந்து கொள்வதை தடுப்பதற்காகவே அரசாங்கம் வெடிகுண்டு புரளியை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராட்சி மேலும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா புலனாய்வு…
-
- 1 reply
- 1.2k views
-
-
புதன் 25-07-2007 14:38 மணி தமிழீழம் [மயூரன்] ஸ்ரீலங்காவின் துணை ஆயதக் குழுவின் தலைவராக கருணா ஸ்ரீலங்காவின் துணை ஆயதக் குழுவின் தலைவரான கருணா அரச பாதுகாப்புடன் இருப்பதை ஸ்ரீலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மற்றுமொரு துணை ஆயுதக் குழுவான ஈ.பி.டி.பியின் செயலாளரும் சமூக சேவைகள் அமைச்சருமான டக்களஸ் தேவானந்தா இந்த தகவலை வெளியிட்டுள்ளார். அரசாங்க படைகளின் பாதுகாப்பிலேயே கருணா இருப்பதாகவும் அவருடை இருப்பிடத்திற்கும் அவருடைய போக்குவரத்திற்கும் ஸ்ரீலங்கா இராணுவம் பாதுகாப்பு வழங்கி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இதுவரை காலமும் கருணாவிற்கும் தமக்கும் தொடர்புகள் இல்லை என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் க…
-
- 6 replies
- 2.8k views
-
-
புதன் 25-07-2007 14:43 மணி தமிழீழம் [மயூரன்] குறைந்தளவு அதிகாரங்களையே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு இந்தியா இந்திய மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை விட குறைந்தளவு அதிகாரங்களையே இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு வழங்குமாறு இந்தியா ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் சகோதரரும் ஆலோசகருமான பசில் ராஜபக்ச இந்த விடயத்தை தமிழ் அரசில்வாதி ஒருவரிடம் தெரிவித்துள்ளார். இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை ஏற்படுத்துமாறு இந்தியா தொடர்ந்து தமது அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதாகவும் எனினும் இந்தியாவில் உள்ள மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கை விட குறைவான அதிகாரங்களை கொண்ட அலகின…
-
- 4 replies
- 2k views
-
-
மன்னாரில் குவியும் விடுதலைப் புலிகளின் படையணிகள்: கொழும்பு வார ஏடு [புதன்கிழமை, 25 யூலை 2007, 14:26 ஈழம்] [பி.கெளரி] கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளதாக எண்ணிக்கொண்டு இருக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் பெரும் தாக்குதலுக்கு தயாராகுவதாகவும், அவர்களின் படையணிகள் மன்னாரில் குவிக்கப்படுவதாகவும் கொழும்பு வார ஏடு தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.07.07) வெளிவந்த "லக்பிம" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வுப்பகுதியில் தெரிவித்துள்ள முக்கிய பகுதிகள்: கடந்த வெள்ளிக்கிழமை 1,000 தொடக்கம் 1,200 வரையிலான விடுதலைப் புலிகள் கிளிநொச்சியில் ஒன்று கூடியிருந்தனர். இருபுறமும் உள்ள அவர்களது முன்னணி பாதுகாப்பு நிலைகளுக்கு அவர்கள் நகர்த்தப்படனர். ப…
-
- 5 replies
- 2.9k views
-
-
விடுதலை புலிகளிற்கு ஆயுதம் விநியோகிப்பதாக தெரிவிக்கப்படுவதை கம்போடியா மறுத்துள்ளது.< நிஷாந்தி கம்போடியா விடுதலைப்புலிகளிற்கு ஆயுதம் வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டினை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் ரூபன்ஷா மறுத்துள்ளார். இவ்வறிக்கையில் உண்மையில்லை இதனை நிரூபிக்க தகுந்த ஆதாரம் இல்லை கம்போடிய அரசாங்கத்திற்கு சொந்தமான ஆயுதங்கள் கம்போயியாவிலுள்ளன. அதனை யாரும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என கப்போடிய பாதுகாப்பு அமைச்சர் மேலும் தெரிவித்தார். கம்போடிய விடுதலை புலிகளிற்கு ஆயுதம் விநியோகிப்பதாக தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பாக கூறுகையிலேயே கம்போடிய பாதுகாப்பு அமைச்சர் ரீ பன்ஷா இவ்வாறு தெரிவித்துள்ளதாக கொழும்பு இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளத…
-
- 2 replies
- 1.4k views
-
-
கிழக்கு வெற்றியை நிலைநிறுத்துவதற்கு மேலும் 30 ஆயிரம் படையினர் தேவை வடக்கில் யுத்த நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்தி கிழக்கில் பெற்றுக்கொண்ட வெற்றியை நிலை நிறுத்துவதற்கு இன்னமும் 30 ஆயிரம் படையினர் தேவைப்படுகின்றனர் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல மேற்படி கருத்தை தெரிவித்தார். இங்கு அவர் மேலும் கூறியதாவது: கிளிநொச்சி, முல்லை தீவுடன் தமிழீழம் வழங்கப்பட்டாலும் பிரபாகரன் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை ஏனெனில் கிழக்கு மாகாணத்தை படையினர் கைப்பற்றியதன் மூலமாக பிரபாகரனின்…
-
- 5 replies
- 1.6k views
-
-
Posted on : 2007-07-25 நில ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்று நடக்கும் கடையடைப்பு தமிழர்களின் பாரம்பரிய பூர்வீக தாயகமான மூதூர் கிழக்கை இலங்கை அரசுப்படைகள் கைப்பற்றி, ஆக்கிரமித்து, இராணுவக் கெடுபிடிகளால் அங்கிருந்து வல்வந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்களை மீளக்குடியமரவே வாய்ப்பளிக்காமல் தடுக்கும் நோக் கில் அப்பிரதேசத்தை உயர் பாதுகாப்பு வலயமாக அறிவித்து நிற் கின்றது. கடந்த ஜூன் 10 ஆம் திகதி விடுக்கப்பட்ட விசேட வர்த்த மானி அறிவித்தலின் மூலம் இவ்வாறு மூதூர் கிழக்கில் சுமார் 22 கிராமங்களில் வசித்த நாலாயிரத்து ஐந்நூறு குடும்பங்களைச் சேர்ந்த ஏறத்தாழ பதினையாயிரம் தமிழர்கள் நிரந்தர ஏதிலிகளாக் கப்பட்டுள்ளனர். பத்தொன்பது பாடசாலைகள், இருபத்தியைந்துக்கும் மேற்பட்ட வணக்க ஸ்தலங்கள் , …
-
- 1 reply
- 963 views
-
-
இலங்கையை எட்டும் இந்திய செல்போன் நிறுவனங்களின் சிக்னல்! ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் உள்ள பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட செல்போன் நிறுவனங்களின் கோபுரங்களின் சிக்னல் இலங்கை வரை எட்டுகிறதாம். இதனால் பிஎஸ்என்எல் உள்பட இந்திய தொலைத் தொடர்பு நிறுவனங்களின் சேவையை பயன்படுத்தி இலங்கையில் பல பகுதிகளில் பேச முடிகிறதாம். கடந்த 1978ம் ஆண்டு ராமேஸ்வரம் நம்புநாயகி கோவில் அருகே 80 மீட்டர் உயரத்தில் டிரான்ஸ்மிஷன் கோபுரம் அமைக்கப்பட்டது. இதே போல் இலங்கையின் தலைமன்னாரிலும் ஒரு கோபுரம் அமைக்கப்பட்டது. இவற்றின் மூலம் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு தொலைபேசி சேவை அளிக்கப்பட்டது. 1983ல் இலங்கையில் ஏற்பட்ட இனப் பிரச்சனை தீவிரமடைந்தபோது இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவையை வ…
-
- 0 replies
- 1.3k views
-
-
இடம்பெயர்ந்த 160 தமிழ் குடும்பங்கள் மூதூர் திரும்பினர். சிறீலங்கா இராணுவத்தின் வலிந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை காரணமாக இடம்பெயர்ந்து கரடியனாறு, ஆயித்தியமலை, செங்கலடி, கிரண் மற்றும் கோரலைப்பற்று ஆகிய பகுதிகளில் இருந்த 160 குடும்பத்தை சேர்ந்த 570 பேர் 20 பேரூந்துகளில் கடந்த திங்கட் கிழமை காலை அரச அலுவலகர்களால் ஈச்சிலம்பற்று, முகத்துவாரம், கல்லடி, ஆகிய பகுதிகளிற்கு ஏற்றிச் செல்லப்பட்டு அவர்களது கிராமங்களுக்கு அக்குறிப்பிட்ட கிராம அலுவலர் சகிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. கடந்த வருடம் திருமலை மாவட்டத்தில் இருந்து 3542 குடும்பங்கள் அகதிகளாக மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்திருமை தெரிந்ததே. இவர்கள் தற்பொழுது அவர்களது சொந்தக் கிராமங்களுக்கு மீளவும் குடியமர்த்தப…
-
- 0 replies
- 822 views
-
-
தமிழர்கள் கடத்தப்படும் சம்பவங்களை நாடகமாக்குவதற்கு பொலிஸார் முயற்சி * மக்கள் கண்காணிப்புக் குழு குற்றச்சாட்டு சிங்கள நபரொருவரின் கடத்தல் நாடகத்தை உதாரணமாகக் கொண்டு அனைத்து கடத்தல் சம்பவங்களையும் ஏமாற்று நாடகங்களாக காட்டுவதற்கு பொலிஸார் முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய மேலக மக்கள் முன்னணி தலைவரும் மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளருமான மனோகணேசன் எம்.பி.கடத்தல் நாடகம் தொடர்பாக ஊடகவியலாளர் மாநாடு நடத்துவதை விடுத்து உண்மையில் காணாமல் போனோர் தொடர்பாக பொலிஸ்மா அதிபர் விளக்கமளிக்கவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மனோ கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிலிருந்து கடத்தப்பட்டதாக…
-
- 1 reply
- 950 views
-
-
கொழும்பு உட்பட தென்னிலங்கையில் புலிகளின் தாக்குதல் இடம்பெறலாம் [24 - Jஉல்ய் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] * விழிப்புடன் இருக்குமாறு அரசு அறிவுறுத்தல் -எம்.ஏ.எம்.நிலாம்- தலைநகரிலும் தென்னிலங்கையின் கேந்திர நிலையங்களிலும் விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் இடம்பெறலாமென எச்சரிக்கை விடுத்திருக்கும் அரசாங்கம், பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளது. கறுப்பு ஜூலையை மையமாக வைத்து இவ்வாரத்தில் தெற்கில் பெரும் தாக்குதலொன்றுக்கு புலிகள் திட்டமிட்டிருப்பதாகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலைகள் மீது குண்டுத் தாக்குதல்களை நடத்த முனைப்புக் காட்டி வருவதாகவும் பாதுகாப்புத் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தேசிய பா…
-
- 0 replies
- 1.4k views
-
-
அமெரிக்காவில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்ற எழுச்சிப் பேரணி தமிழீழ தனியரசை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி அமெரிக் வோசிங்டன் நகரில் ஈழத் தமிழர்களால் எழுச்சிப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்கிழமை மதியம் 12 மணிக்கு கப்பிற்றல் கட்டிட முன்றலில் ஆரம்பித்த பிற்பகல் 3 மணி வரை இடம்பெற்றுள்ளது. இப் பேரணியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈழத் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர். புளோரிடா, ஓகையோ, கலிபோர்னியா, போஸ்ரன் போன்ற நகரங்களிலிருந்து அதிகளவு மக்கள் கலந்துகொண்டுள்ளதோடு நியூயேர்சி போன்ற மாநிலங்களிலுந்த வருகைதந்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. பேரணியில் மனித உரிமைகள் சட்டவாளர் கரன் பாக்கர், சட்டவாளர் ருத்திரகுமாரன், மருத்துவர் எலின் சண்டெர்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிழக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவது பெரும் சவால் வீரகேசரி நாளேடு பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்வதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. அந்த திட்டங்களை முன்னெடுப்பதற்காக அரசாங்கம் 6.5 பில்லியன் ரூபாவை திறைசேரியூடாக ஒதுக்கியுள்ளது என்று தேசிய பாதுகாப்பு தொடர்பான அரசாங்கத்தின் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். கிழக்கு மாகாணம் முழுமையாக மீட்கப்பட்டுள்ள போதிலும் அங்கு சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்திற்கு பெரும் சவாலாகவேயுள்ளது. பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து கிழக்கு மாகாணம் மீட்கப்பட்டிருப்பதனால் கிழக்கிலுள்ள இதர ஆயுத குழுக்கள் சட்டத்தை பின்பற்ற வேண்டும் என்றும் அவர…
-
- 0 replies
- 1.1k views
-
-
செவ்வாய் 24-07-2007 23:25 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] அனைத்துவித போரியல் யுத்திகளையும் தளபாடங்களையும் பயன்படுத்துவோம் - இளந்திரையன் தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கு அனைத்து வித போரியல் யுத்திகளையும் படைத்துறைத் தளபாடங்களையும் பயன்படுதப் போவதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று அமெரிக்காவில் வெளிவரும் '' புளும் பேர்க் ''' செய்தி நிறுவனத்திற்கு வழங்கி செவ்வியில் விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் இதனைத் தெரிவித்துள்ளார். தென் தமிழீழத்தை சிறீலங்காப் படைகள் கைப்பற்றியுள்ளதாகத் தெரிவிக்கும் கருத்துக்கள் முற்றிலும் அரசியல் நலன் சார்ந்தது எனச் சுட்டிக்காட்டினார். குடும்பிமலையை சிறீலங்காப் படைகள் ஆக்கிரமித்த போதும் தென…
-
- 0 replies
- 2.6k views
-
-
~மகிந்த ராஜபக்சவின் வெ(ற்)றி விழா!| -சபேசன் (அவுஸ்திரேலியா)- குடும்பிமலைப் பகுதியைக் கைப்பற்றியதோடு, கிழக்கு மாகாணம் முழுவதும், முதல் முறையாகத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதாகச் சிறிலங்கா அரசு அறிவித்துள்ளது. இந்த ஆக்கிரமிப்பைக் கொண்டாடு;ம் முகமாகக் கடந்தவாரம் கொழும்பு நகரில் ~வெ(ற்)றி| விழாவொன்;றையும் சிறிலங்காவின் அதிபர் மகிந்த ராஜபக்ச நடாத்தியுள்;ளார். விரைவில், கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடாத்தப்பட்டு, ~ஜனநாயகம்| நிலை நிறுத்தப்படும் என்றும், மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். இந்தச் சம்பவங்களின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு கூறைச் சுட்டிக்காட்டிச் சில தர்க்கங்களை முன்வைப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்! இன…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழீழத் தொலைக்காட்சியில் இவ்வார ஆய்வாக நடைபெற்ற "சிறீலங்காவும், நிதி நிலமையும்" - கலந்து கொண்டவர்கள் திரு.வீராவுடன் தமிழீழ பொரூளதார ஆய்வாளர் திரு.பாலகிருஸ்ணன் மற்றும் தமிழீழ வைப்பகத்தின் நடுவப் பணி மேலாளர் திரு.இந்திரமோகன்
-
- 0 replies
- 1.5k views
-
-
தற்போதைய யுத்தம் எவராலும் வெற்றிகொள்ளப்பட முடியாது: அங்கிலிக்கன் திருச்சபை. யுத்ததிற்கான முதலீடுகள் இலங்கையில் வாழும் சிறுவர்களின் வாழ்வை பாதிக்கும் என அங்கிலிக்கன் திருச்சபையின் ஆயர் வணக்கத்திற்குரிய டுலிப் டீ சிக்கெர தெரிவித்துள்ளார். நடைமுறையில் உள்ள யுத்த நகர்வுகள் குறித்து ஆயர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்.... தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்த நடவடிக்கைகள் சரியானதல்ல என்றும் ஜனநாயக நாட்டின் தலைமைத்துவம் நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். வன்முறைகள் அற்ற சமரச தீர்வினை அடைவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தற்…
-
- 0 replies
- 1.3k views
-
-
40 இலட்சம் இளம்பராயத்தவரின் கல்விக்கு வேட்டு வைத்திருக்கும் வறுமை, கோர யுத்தம் * லலித் கொத்தலாவல கவலை [24 - July - 2007] -எம்.ஏ.எம்.நிலாம்- வறுமையும் கோர யுத்தமும் இந்த நாட்டில் சுமார் 40 இலட்சம் இளம்பராயத்தவரின் கல்வியை மிக மோசமாக பாதிப்படையச் செய்துள்ளதாக தெரிவித்த செலிங்கோ நிறுவனங்களின் தலைவர் கலாநிதி லலித் கொத்தலாவல இந்தப் பிள்ளைச் செல்வங்களின் எதிர்காலத்தை இருளடையச் செய்யாமல் பாதுகாப்பதற்கு காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். செலிங்கோ சசெக்ஸ் கல்லூரியினால் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் பிறப்பிலேயே மனநிலையை பாதிக்கும் நரம்பியல் நோயான ஓரிசம் (Autism)தினால் பீடிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான கல்விக் கூடத்தை நுக…
-
- 0 replies
- 1.1k views
-
-
சந்தர்ப்பவாத தலைமைத்துவங்கள் அரங்கேற்றிவரும் அழிவுகள் [24 - July - 2007] -வ. திருநாவுக்கரசு- தொப்பிகல (குடும்பிமலை) வெற்றிவிழா கொண்டாடப்பட்டதாகிய "கிழக்கு உதயம்" நிகழ்வில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரையில், பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனம் (சிங்கள மொழியில் "மஹ ஜாதிய", "சுலு ஜாதிய") எனும் சொற் பிரயோகங்களை தான் விரும்பவில்லை எனவும், நாம் எல்லோரும் இலங்கையர்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழர் தாம் சிறுபான்மை இனம் என்பதை நிராகரித்து, பல ஆண்டுகள் கழிந்துவிட்டன என்பதை சென்றவார கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன். அதாவது, தமிழர் இந்த நாட்டில் ஒரு தேசிய இனமே ஒழிய, சிறுபான்மை இனம் எனும் வரைவிலக்கணம் ஏற்கனவே காலாவதியாகிவிட்டது என்பதாகும். ஒருவேளை, ஜனாதிபதி ரா…
-
- 0 replies
- 988 views
-
-
இன்று மதியம் செட்டிக்குளத்தில் இராணுவ வாகனத்தினை இலக்கு வைத்து கிளைமோர்த் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பமைச்சின் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று மதியம் 12.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் விடுமுறையில் செல்லும் இராணுவத்தினரை மதவாச்சி நோக்கி கொண்டுசென்றுகொண்டிருந்த வாகனம் இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- 21 replies
- 3.7k views
-
-
தமிழர்கள் உட்பட 113 பேர் தாய்லாந்தில் தடுத்துவைப்பு சட்டவிரோதமான முறையில் குடியேறி னார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் தாய் லாந்தில் 113 இலங்கையர்கள் தடுத்து வைக் கப்பட்டிருக்கின்றனர் என ராஜதந்திர வட் டாரங்களை மேற்கோள்காட்டிச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இவர்களில் பெரும்பாலானோர் ஈழத் தமி ழர்கள் என்றும், அனைவரும் தாய்லாந்திலி ருக்கும் மூன்று தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் அந் தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களை விடுவிப்பதற்கான முயற்சி களை தாய்லாந்திலிருக்கும் இலங்கைத் தூதரகம் முடுக்கிவிட்டிருப்பதாக அறிய வரும் அதேவேளை இந்த முயற்சிக்கு உதவுவோம் என அகதி களுக்கான ஐ.நா.வின் உயர்ஸ்தானிகரா லயமும் உ…
-
- 1 reply
- 1.4k views
-
-
பயங்கரவாதிகளை தோற்கடித்த நாட்டின் தலைவருக்கு கௌரவம் அளித்தமை சரியானது வீரகேசரி நாளேடு ஹக்கீமின் விமர்சனத்துக்கு அதாவுல்லா பதில்(பாலமுனை மேலதிக நிருபர்) கிழக்கின் உதயம் விழா நிகழ்வின்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு நான் வாழ்த்து தெரிவித்து, பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசில் வழங்கியதால் முஸ்லிம் சமூகத்துக்கு அவப்பெயர் எதுவும் ஏற்படவில்லை. பயங்கரவாதிகளை தோற்கடித்த நாட்டின் தலைவருக்கு இவ்வாறான கௌரவத்தை வழங்கியமையானது சந்தோசத்துக்குரிய ஒரு விடயமாகும் என்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தை விடுதலைப்புலிகளிடமிருந்து விடுவித்ததைக் கொண்டாடும் முகமாக கடந்த வியாழக்கிழமை 19ஆம் திகதி கொழும்பு சுதந்திர சதுக்கத்…
-
- 0 replies
- 1.4k views
-
-
தமிழர்களுக்கு நில உரித்து எதுவுமில்லை; சுயாட்சி என்ற பேச்சுக்கே இடமுமில்லை ஹெல உறுமயவின் தீர்வு யோசனையின் சாராம்சம் இது அனைத்துக்கட்சிக் குழுவுக்கு ஜாதிக ஹெல உறுமய முன்வைத்த யோசனை களின்படி தமிழர்களுக்கு இந்த நாட்டில் நில உரித்து இல்லை. அதனால் அவர்களுக்கு சுயாட்சி என்ற பேச்சுக்கே இடம்கிடையாது. இவ்வாறு தமது கட்சியின் தீர்வு யோச னைத்திட்டத்தை விளக்கியிருக்கின்றார் ஜாதிகஹெல உறுமயவின் பிரமுகரும் அக் கட்சியின் சட்ட ஆலோசகருமான உதய கம்மன்பில. ஹெல உறுமயவின் தீர்வுத்திட்ட யோச னைகள் தொடர்பாக விளக்கமளிக்கும் கூட் டம் ஒன்று கடந்த 20 ஆம் திகதி கொழும்பு தேசிய நூல் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு விளக்கமளிக்கும்போதே உதய கம்மன்பில இதனைத்…
-
- 1 reply
- 1k views
-
-
தவிர்க்கவே முடியாத யுத்தம் போராட்டம் நிறைந்ததாக மாறியிருக்கின்றது இந்தப் பூமிப் பந்து. எங்கும் போர், யுத்தம், புரட்சி. விடுதலையின் பெயரால் சுதந்திரம், சமத்துவம், நீதி, நியாயம் வேண்டி மக்கள் புரட்சிகளை நடத்துகின்றார்கள். போர்களை முன் னெடுக்கின்றார்கள். அழிவுகள் அரங்கேறுகின்றன; அவலங்கள் பீடிக்கின்றன; அனர்த்தங்கள் நீடிக்கின்றன. போரியலின் கொடூரத்தில் சிக்கி நிற்கும் இலங்கை மக்களும் இது தேவைதானா அவசியம்தானா தவிர்க்கமுடியாத தளையா என்று எக்கணமும் சிந்தித்துக் கலங்கும் அளவுக்குக் கோர யுத்தக் கொடுமைகள் அவர்களை வாட்டி வதைத்து வறுத்தெடுத்து நிற்கின்றன. வெந்தணலாகத் தவிக்கும் யுத்தத்தின் குரூரப் பிடிக்குள் அல்லலுறும் அந்த மக்களின் நினைவெல்லாம் இந்த அகோர யுத்தம் அவசியமா என்பத…
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்கா - சிறீலங்கா ஒப்பந்தம் தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றினால் நிராகரிப்பு. அமெரிக்காவிற்கும், சிறீலங்காவிற்கும் இடையில் இரகசிய இராணுவ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தொடரப்பட்ட வழக்கினை, சிறீலங்காவின் உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஜனநாயக இடதுசாரி முன்னணியின் செயலாளரும், சிறீலங்கா அதிபரின் ஆலோசகர்களில் ஒருவருமான வாசுதேவ நாணயக்காரவினால் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கினை நேற்று விசாரணை செய்த உயர் நீதிமன்ற நீதியாளர்களான பிரதம நிதியரசர் சரத் என். சில்வா, சிறானி திலகவர்த்தன, என். ஜி. அமரதுங்க அடங்கிய குழுவினரே வழக்கை நிராகரித்தனர். சிறீலங்காவின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸவிற்கும், சிறீலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேட் …
-
- 0 replies
- 829 views
-