Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் – இரா.சம்பந்தனிடம் கேள்வி! இல்லாத கூட்டமைப்பிற்கு எவ்வாறு தலைவராக இருக்க முடியும் என இரா.சம்பந்தனிடம் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் K.V.தவிராசா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். 2009 ஆம் ஆண்டு யுத்தம் மெளனிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய அரசியலை சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்பிற்குள் நுழைந்ததாகவும், திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி, சம்பந்தனைக் கொண்டே அதனை நடைமுறைப்படுத்தியதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கூட்டமைப்பு இல்லாமல், அதன் தலைவர் என்ற பதவ…

    • 2 replies
    • 541 views
  2. இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும்! தவறினால் கறுப்புக்கொடி போராட்டம்-சிவாஜிலிங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இம்மாத இறுதிக்குள் தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யவேண்டும். அதை செய்யத் தவறின், ஜனாதிபதி வரும் இடமெல்லாம் கறுப்புக்கொடி போராட்டத்தை நடத்துவோம் என முன்னாள் வடக்குமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “வேலன் சுவாமியை கைதுசெய்தமையை கண்டிப்பதோடு இவ்வாறெல்லாம் ஜனநாயக போராட்டங்களை அடக்க முடியாது ஜனாதிபதி இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் அனைத்து தமிழ் அரசிய…

  3. வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சர் அல் சப்ரியுடன் இணைந்து கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே, இந்திய வெளிவிவகார அமைச்சர் இதைக் குறிப்பிட்டார். இந்த ஊடக சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தார். ''ஏனையோர் செய்வார்கள் எனக் காத்திருப்பதைத் தவிர்த்து, நாங்கள் சரியானது என நம்புவதை செய்தோம்," என எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளார். இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சான்றிதழை, இந்தியா சர்வதேச நாணய நிதியத்திற்குக் காலதாமதமின்றி அனுப்பியுள்ளதாகவும் ஏனைய கடனாளிகளும் அவ்வாறே செய்வார்கள் என எதிர்பார…

  4. 13 ஐ முழுமையாக அமுல்படுத்த இடமளியோம் - சரத் வீரசேகர By T. Saranya 18 Jan, 2023 | 09:31 AM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) வீடு தீப்பற்றி எரியும் போது புகைப்பிடிக்க முயற்சிப்பதை போன்று தமிழ் தலைமைகள் பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் நாட்டை பிளவுப்படுத்தும் வகையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்ற முயற்சிக்கிறார்கள். நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்கவே 69 இலட்ச மக்கள் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். எக்காரணிகளுக்காகவும் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்த இடமளிக்க முடியாது. வடக்கு மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரத்தை வழங்கினால் நாட்டின் தேசிய பாதுக…

    • 10 replies
    • 999 views
  5. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சீன தூதரக அதிகாரிகளின் விஜயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதனால் அப்பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் அச்சமடைந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான மக்கள் தொகையில் தமிழர்களும் முஸ்லிம்களுமே உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது. சீனத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஹ வெய் தலைமையிலான உயர்மட்டக் குழு ஜனவரி மாதம் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. அங்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல், பாடசாலை உபகரணங்களை வழங்குதல் மற்றும் இப்பகுதி முழுவதும் உள்ள தொலைதூர கிராமங்களில் குடிநீர் ஆலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை ச…

  6. 'பயங்கரவாதி போல பார்க்கிறார்கள்' - ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் கட்டுரை தகவல் எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத் பதவி,பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி நடத்தப்பட்ட ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதல் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு 31 கோடி ரூபாவை நட்டஈடாக வழங்குமாறு, தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற தவறிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவருக்கு உயர்நீதிமன்றம் கடந்த 12ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த நீதிமன…

  7. வெளியானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான முக்கிய தீர்ப்பு ! மைத்திரி 100 மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உத்தரவு ! By DIGITAL DESK 5 12 JAN, 2023 | 12:11 PM முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன, முன்னாள் உளவுத்துறை பிரதானி சிசிர மென்டிஸ் ஆகியோர் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்கள் தொடர்பில் தொடரப்பட்ட 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணை செய்து அதன் தீர்ப்பை அளித்த 7 பேர் கொண்ட உயர் நீதிமன்ற உ…

  8. ரணிலின் சாதனையை முறியடித்தார் ஜீவன் தொண்டமான்! இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், இலங்கையில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இளம் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வசமிருந்த சாதனையை ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க 1977 ஆம் ஆண்டு தனது 29 வயதில் இலங்கையின் இளம் அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றதே சாதனையாக இருந்தது. இந்தநிலையில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமான் நேற்று நியமிக்கப்பட்டார். ஜீவன் தொண்டமான் தனது 28வது வயதில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து, இலங்கையின் இளம் அமைச்சரவை அமைச்சராக வர…

  9. புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதில் ஒரு கட்டத்தில் தன்னால் பாடசாலைக்குளுக்கு வழங்கப்பட்டுவரும் பஸ்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் பட்டியலிட்டார் . இதன்போது குறுக்கிட்ட அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, உங்கள் தந்தையான பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு திறைசேரி ஊடாக காசோலைகள் வழங்கப்பட்…

  10. சீனாவிடமிருந்து அடுத்த சில நாட்களில் பதில் - இலங்கை நம்பிக்கை By RAJEEBAN 20 JAN, 2023 | 02:41 PM இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடர்பில் சீனாவிடமிருந்து அடுத்த சில நாட்களில் பதிலை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது. இலங்கையின் திறைசேரியின் பிரதி செயலாளர் பிரியந்த ரட்ணாயக்க இதனை தெரிவித்துள்ளார். நெருக்கடியில் சிக்குண்டுள்ள இலங்கை சீனாவிடமிருந்து அடுத்த சில நாட்களில் நிதி உத்தரவாதத்தினை பெற முடியும் என கருதுகின்றது இதன் மூலம் சர்வதேச நாணயநிதியத்திடமிருந்து 2.9 மில்லியன்; டொலர் கடனுதவியை பெறுவது சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார். சீனாவுடனான பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தில் உள்…

  11. மனோவுக்கு ரணில் வழங்கிய உறுதிமொழி! இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம் கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். சபாநாயகர், அமைச்சர்கள், நசீட் அஹமத், அலி சப்ரி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந…

    • 1 reply
    • 700 views
  12. சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் – விமல் ரத்நாயக்க! சுதந்திரம் இல்லாத நாட்டில் எதற்காக கோடிக்கணக்கில் செலவழித்து சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க கேள்வி எழுப்பியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த காலத்தில் நாட்டில் கொடுங்கோல் ஆட்சி புரிந்த ஆட்சியாளர்களை விரட்டுவதற்கு, ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பல இளைஞர்கள் யுவதிகள் தற்போதும் சிறையில் வாடுகின்றார்கள். அவ்வ…

    • 1 reply
    • 319 views
  13. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சன்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார். எஸ். ஜெய்சங்கருடன் வெளிநாட்டலுவல்கள் துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் நான்கு பேரும் வருகைதந்துள்ளனர். இந்த குழுவினர் மாலைதீவில் இருந்து இந்தியாவிற்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். இவரது இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் தமிழ்த்தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார். அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவையும் சந்தித்து கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது…

    • 4 replies
    • 819 views
  14. யாழ்.இராணுவ தளபதியுடனான சந்திப்பில் காணி விடுவிப்பு தொடர்பில் மாவட்ட செயலர் பேச்சு! By Digital Desk 5 20 Jan, 2023 | 12:54 PM யாழ். மாவட்ட செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை, யாழ். மாவட்ட இராணுவ கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட மரியாதை நிமித்தமாக சந்தித்தார். யாழ். மாவட்ட செயலகத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற குறித்த சந்திப்பில், யாழ்ப்பாண மாவட்டத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் விபரங்கள் தொடர்பாகவும், முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களை மீளக்குடியேற்றுதல் தொடர்பாகவும், விவசாயம் சார் உற்பத்திகளை ஊக்குவித்தல் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால…

  15. ரணிலின் சாதனையை முறியடித்தார் ஜீவன் தொண்டமான்! இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஜீவன் தொண்டமான், இலங்கையில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இளம் அரசியல்வாதி என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வசமிருந்த சாதனையை ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க 1977 ஆம் ஆண்டு தனது 29 வயதில் இலங்கையின் இளம் அமைச்சரவை அமைச்சராக பதவியேற்றதே சாதனையாக இருந்தது. இந்தநிலையில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ஜீவன் தொண்டமான் நேற்று நியமிக்கப்பட்டார். ஜீவன் தொண்டமான் தனது 28வது வயதில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து, இலங்கையின் இளம் அமைச்சரவை அமைச்சராக வரலாற்றை மாற்றி எழுதிய…

  16. சுதந்திர தின செலவுகள், எதிர்காலத்திற்கான முதலீடு – ஜனாதிபதி சுதந்திர தினக் கொண்டாட்டச் செலவுகள் எதிர்காலத்திற்கான முதலீடாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் அதிகளவு செலவு செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இன்று சுதந்திரத்திற்குப் பின்னர் எமக்கு 75 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளன. சுதந்திரம் அடைந்து 100 வருடங்கள் பூர்த்தியாகும் சந்தர்ப்பத்தில் நாட்டின் மறுசீரமைப்புக்கு அவசியமான பல நிறுவனங்களை உருவாக்க நடவடிக்கை எடுப்போம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்ட…

  17. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான பணத்தை சேகரிக்கும் வகையில் கலைஞர் சுதத்த திலகசிறி நேற்று (ஜன 17) கொழும்பு கோட்டையில் உண்டியல் குலுக்கி பண சேகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டார். இதன்போது திரட்டப்பட்ட 1,810 ரூபா பணத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரியிடம் கையளிக்க தேவையான ஏற்பாடுகளை குறித்த கலைஞர் முன்னெடுத்துள்ளார். நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்ட 10 கோடி ரூபா நட்டஈட்டை செலுத்துமளவுக்கு தன்னிடம் சொத்துக்கள் இல்லை எனவும், அதனால் பணத்தை தனது நண்பர்களிடம் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி அண்மையில் …

    • 2 replies
    • 767 views
  18. பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி கலந்து கொண்ட போது யாழ். பல்கலை கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற எதிர்ப்பு போராட்டத்தின் போது பொலிஸார் தடுப்புக்களை ஏற்படுத்தி இருந்தனர். அதன் போது பொலிஸாரின் தடுப்புக்களை தாண்டி செல்ல முற்பட்டனர். அதன் போது பொலிஸார் தண்ணீர் தாரை பிரயோகம் மேற்கொண்டர். அவ்வேளை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என குற்றம் சாட்டி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் புதன் கிழமை யாழ்ப்பாண பொலிஸாரினா…

    • 4 replies
    • 739 views
  19. ஆண்களுக்கு பெண்கள் மஸாஜ் பன்ன முடியாது என்ற சட்டத்தினால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படும் என ராஜாங்க அமைச்சர் டயனா கமகே குறிப்பிட்டுள்ளார். ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாத வகையிலும், ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் ஈடுபடும் வகையில் என்ற புதிய சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் நாயகம் தம்மிக்க அபேகுணவர்தன தெரிவித்துள்ள நிலையில் இது தொடர்பில் கருத்து பெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார். https://www.madawalaenews.com/2023/01/blog-post_62.html ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் பணிகளில் ஈடுபட முடியாது... ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மட்டுமே மசாஜ் பணி செய்யலாம். இலங்கையில் புதிய சட்டம் கொண்டு வரப்படுகி…

    • 17 replies
    • 1.6k views
  20. இலங்கையின் இரு ஜனாதிபதிகளிற்கு எதிராக கனடா விதித்துள்ள தடையை ஏனைய நாடுகளும் பின்பற்றவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார். கனடா அரசாங்கம் இலங்கையின் இரு சகோதரர்களான ஜனாதிபதிகளிற்கும் இரு படைவீரர்களிற்கும் எதிராக தடைகளை விதித்துள்ளதன் மூலம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் 1983 முதல் 2009 வரை இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளிற்கும் இடையிலான உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற மோசமான திட்டமிடப்பட்ட மனித உரிமை மீறல்கள் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச சட்டங்களை மீறுபவர்கள் தண்டனையின் பிடியிலிர…

  21. கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு எதிராக மேன் முறையீட்டு நீதிமன்றில், முழங்காவில் அன்புபுரம் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கமும் கொழும்பினை தலைமையகமாக கொண்ட அமைப்பொன்றும் அவற்றின் பிரதிநிதிகளினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையின் கடல் வளத்திற்கும் கடற்றொழிலாளர்களுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும், இந்திய கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்று குற்றச்சாட்டியுள்ள வழக்கு தொடுநர் தரப்பு, சம்மந்தப்பட்ட சட்டங்களை முழுமையாக பயன்படுத்தி இந்தச் சட்ட விரோதச் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான எழுத்தாணையை வழங்குமாறு மேல் முறையீட்டு நிதிமன்றிடம் கோரியுள்ளனர். இந்த எழுத்தாணை க…

  22. கொழும்பு குதிரை பந்தய திடலில் பெண்ணின் சடலம் மீட்பு – நடந்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள குதிரை பந்தய திடலில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், யுவதியொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு 07 பகுதியிலுள்ள குதிரை பந்தயத் திடலில் நேற்று பிற்பகல் சடலமொன்று காணப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, குதிரை பந்தயத் திடலுக்கு போலீஸ் குழுவொன்று சென…

  23. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனிடமிருந்து மாத்தயா. யோகி ஆகியோரை பிளவுபடுத்தவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன. 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற மஹிந்த ராஜபக்ஷ விடுதலை புலிகளுக்கு நிதியுதவி வழங்கியதை இல்லை என்று மறுக்க முடியுமா என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆளும் தரப்பின் பிரதம கோலாசனை நோக்கி வினவினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதில் ஒரு கட்டத்தில் தன்னால் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டு வரும் பேருந்துகள் மற்றும் உதவிகள் தொடர்பில் பட்டியலிட்டார் . …

  24. (நா.தனுஜா) நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் ஸ்தாபிக்கப்பட்ட காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் ஊடாக தற்போதுவரை எமக்கு உரியவாறான நீதி வழங்கப்படவில்லை. எனவே அவ்வலுவலகத்தின்மீது நாம் கொண்டிருந்த நம்பிக்கையை இழந்திருக்கின்றோம். இன்னும் சில நாட்களில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகமும் காணாமல்போகுமா என்று தெரியவில்லை என காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர். பெரும்பாலும் தெற்கில் ஜனதா விமுக்தி பெரமுனவின் (மக்கள் விடுதலை முன்னணி) எழுச்சியின்போது இடம்பெற்ற வலிந்துகாணாமலாக்கப்படல் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை உள்ளடக்கி கொழும்பைத் தளமாகக்கொண்டியங்கிவரும் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தினால் நேற்று வியாழக்கிழமை சமூக மற்ற…

  25. (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். தெற்கு அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்ததாக வடக்கிற்கு பொய்யுரைக்கிறார். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும். ஆகவே ஜனாதிபதியின் இந்த பாவசெயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்ப…

    • 4 replies
    • 706 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.