Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஈழத் தமிழர் பிரச்சினையில் - உளவு நிறுவனங்கள் தொடர்ந்து தலையிட்டு, தமிழ் ஈழ விடுதலைப் போராளிகளுக்கு எதிராக அரங்கேற்றி வரும் நாடகங்களின் சில உண்மைக் காட்சிகளை, ‘புரட்சி பெரியார் முழக்கம்’ வழியாக அம்பலப்படுத்தி வருகிறோம். இந்திய கப்பல் படையும், இலங்கை கப்பல் படையும் இணைந்து, இந்தியக் கடற்பரப்பில் ‘கூட்டு ரோந்து’ நடத்தும் திட்டத்தை அமுல்படுத்திவிட்டால், ஈழப் போராளிகளின் கடல்வழி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திவிடலாம் என்ற நோக்கத்தோடு - இந்திய உளவு நிறுவனங்கள் தமிழகத்தில் முகாமடித்து, தமிழகக் காவல்துறையையும் மிரட்டி, செயல்படத் துவங்கியதை ஏற்கனவே சுட்டிக் காட்டினோம். ஆனால், முற்றிலும் இவர்கள் எதிர்பாராத நிலையில், ஈழப் போராளிகள், வான் வழித் தாக்குதலைத் துவக்கியவுடன், உளவுத் துறை அதி…

  2. தமிழர்களை வெளியேற்றியது கோத்தபாயாதான்": ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது "சண்டே லீடர்" ஜஞாயிற்றுக்கிழமைஇ 24 யூன் 2007இ 09:05 ஈழம்ஸ ஜபி.கெளரிஸ கொழும்பிலிருந்து தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியது மகிந்தவின் சகோதரரும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்சதான் என்று கொழும்பிலிருந்து வெளியாகும் "சண்டே லீடர் வார" ஏடு ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் கடந்த மே மாதம் 31 ஆம் நாள் நடைபெற்ற பாதுகாப்பு இணைப்பு மாநாட்டில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையையும் அதில் பங்கேற்ற இராணுவத் தளபதிகள்இ காவல்துறை அதிகாரிகள் பெயர்ப் பட்டியலையும் "சண்டே லீடர்" பகிரங்கப்படுத்தியுள்ளதோடு அந்தக் கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் வெ…

  3. ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை கூட்டத்தில் சிறீலங்காவிற்கு எதிராக பாரிய குற்றச்சாட்டு. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கியநாடுகள் பாதுப்புசபை கூட்டத்தில் சிறீலங்காவிற்கு எதிராக மனிதநேயப்பணியாளர்களின் பாதுகாப்பின்மை உட்பட பலகுற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. சூடான், லெபனான், மத்திய ஆபிரிக்க குடியரசு போன்று மனிதநேயப்பணியாளர்களை கொன்றவர்களை சட்டத்துக்கு முன்நிறுத்ததவறியமை போன்ற குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டிருந்து. ஐக்கியநாடுகள் சபையின் 2006 ம் ஆண்டு மனிதநேயப்பணிகளுக்கு பொறுப்பாக ஜோன் கொல்மிஸ் சிறீலங்காவில் 24 உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஒருசம்பவத்தில் மாத்திரம் 17 அக்சன் பாம் உதவிப்பணியாளர்கள் கொல்லப்பட்டமையும் இதுதொடர்பில் பாதுகாப்…

  4. விளாத்திக்குள சமரில் ஒரு பற்றாலியன் படையினர் இழப்பு: சண்டே ரைம்ஸ். வவுனியா - மன்னர் எல்லையில் உள்ள விளாத்திக்குளம் பகுதியில் கடந்த 02.06.07 இல் இடம்பெற்ற சமரில் படையினர் கொல்லப்பட்டு, காயமடைந்தது, காணாமற் போனோர் என ஏறத்தாழ ஒரு பற்றாலியன் படையினரை இழந்துள்ளதாக சண்டே ரைம்ஸ் தெரிவித்துள்ளது. சண்டே ரைம்சில் வெளிவந்த பாதுகாப்பு ஆய்வுப் பத்தியின் முக்கிய பகுதிகள்: ஓமந்தை நுழைவுப் பாதைக்கு மேற்காக முன்னகர்வுகள் மூலம் படையினர் தமது முன்னணி நிலைகளை முன்னகர்த்தியிருந்தனர். இந்த பகுதிகளில் மேலதிக பகுதிகளை கட்டுப்பாட்டில் கொண்டு வரும் பொருட்டு ஜூன் 2 ஆம் நாள் காலை இராணுவத்தின் 56 ஆவது படையணியும் (4 பற்றாலியன்கள்) 57 ஆவது படையணியும் (7 பற்றாலியன்கள்) கல்மடுவுக்கு வடக்…

  5. தமிழ்க் குடிமக்கள் மீது கருணா வரிகள் விதிக்கிறார்.! - கோதுமைத்திருடன் கே.ரீ.றாஜசிங்கம் அம்பலப்படுத்துகிறார். ஜ ஞாயிற்றுக்கிழமைஇ 24 யூன் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில், சிங்கள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாழ்கின்ற மீனவர்கள் மீது வரிகளை விதிப்பதன் மூலம், இப்பொழுது கருணா குழு நிதியைத் திரட்டி வருகிறது. இந்த இரண்டு மாவட்டங்ளில் உள்ள கிராம சேவை அதிகாரிகள் மூலமாக, அங்குள்ள தனியார்கள் மற்றும் குடும்பங்களின் வருவாய்களைப் பற்றிய விவரங்களைக் கருணா குழு திரட்டி வருவதாகவும் தகவல் அறிய முடிகிறது. வரிகளை விதிக்கும் நோக்கத்துடன், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இருக்கும் கடைக்காரர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் பற்றிய ஒரு பட்டியலைய…

  6. சர்வதேசத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுமாறு தமிழ் இனத்தின் துரோகிகள் மகிந்தவால் அவசரமா நியமனம். - அடுத்தவாரம் ஆணந்தசங்கரி தலைமையில் சுவிசிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ் சிறீதரன் தலைமையில் ஜேர்மனியிலும் ஆரம்பம்;. ஜ புதன்கிழமைஇ 27 யூன் 2007 ஸ ஜ பா.சிவரஞ்சன் ஸ சர்வதேசத்தில் தமிழ் தேசியத்திற்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுமாறு தமிழ் இனத்தின் துரோகிகள் மகிந்தவால் அவசரமா நியமிக்கபட்டுள்ளனா.; இலங்கையில் இருந்து விமானத்தில் தமிழ் குழுக்களின் உறுப்பினர்கள் ஜரோப்பாவில் அனுப்பப்பட்டுள்ளனர். ஜரோப்பிய நாடுகளில் ஈழத்தமிழருக்கு எதிராக தமிழ் தேசவிரோதிகள் ஆர்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு ஏற்பாடுகள் நடைபெறுவருகின்றன. சுவிஸ் நாட்டில் ஆரம்பமாகும் நிகழ்வு ஜேர்மனி உட்பட பல நாடுகளி…

  7. சர்வதேச சமூகம் மகிந்த அரசினை வழிக்கு கொண்டுவருமா? -புரட்சி (தாயகம்) தென்னிலங்கையிலே மகிந்த அரசானது பதவி ஏற்ற காலப்பகுதியில் இருந்து தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு மனித உரிமை மீறல்களையும் மனித அவலங்களையும் மேற்கொண்டு வந்த போதிலும் அண்மையில் கொழும்பு நகரத்திலே விடுதியில் தங்கியிருந்த தமிழ் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவமானது முன்னெப்பொழுதும் இல்லாத அளவிற்கு சர்வதேச ரீதியாக பலத்த கண்டனங்களையும் எதிர்ப்புக்களையும் சிறிலங்கா அரசிற்கு ஏற்படுத்திவிட்டது. வெளிநாட்டு தூதுவராலயங்கள், ஐ.நா செயலாளர் நாயகம் உட்பட பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு மனித உரிமை அமைப்புக்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மகிந்த அரசின் இந்த மனிதநேயமற்ற தான்தோன்றித்தனமான நடவடிக்கையின…

  8. யாழ்ப்பாணத்திற்குள் புலிகள் முன்னேற முடியாது: மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி [சனிக்கிழமை, 23 யூன் 2007, 19:12 ஈழம்] [சி.கனகரத்தினம்] யாழ்ப்பாணத்திற்குள் புலிகள் முன்னேற முடியாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று சிறிலங்கா இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தினால் கொழும்பிலிருந்து யாழ். குடாநாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஊடகவியலாளர்களிடம் நேற்று வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது: யாழ். குடாவில் உள்ள மக்களுக்கு அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. சனி, ஞாயிறு ஆகிய நாட்கள் உட்பட வாரத்தின் ஏழு நா…

  9. மூதூர் படுகொலை வழக்கின் குற்றவாளிகள் கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும்: அக்சன் பார்ம் [சனிக்கிழமை, 23 யூன் 2007, 18:09 ஈழம்] [செ.விசுவநாதன்] மூதூரில் 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டதில் தொடர்புடைய குற்றவாளிகள் கண்டுபிடித்து தண்டிக்கப்பட வேண்டும் என்று அக்சன் பார்ம் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: மூதூரில் அக்சன் பாம் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டு 10 மாதங்களாகி விட்டன. இது தொடர்பாக கந்தளாய் நீதிமன்றில் கடந்த ஜூன் 6 ஆம் நாள் விசாரணை நடைபெற்றது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகள் இடை நிறுத்தப்பட்டன. விசாரணைகளை 3 மாதங்களுக்கு ஒர…

  10. இணைத் தலைமை நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஜூன் 26 ஓஸ்லோவில் நடைபெறவுள்ளது. இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் நோர்வேயின் ஓஸ்லோவில் எதிர்வரும் 26 ஆம் நாள் நடைபெற உள்ளதாக நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எரிக் சொல்ஹெய்ம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இலங்கை தொடர்பான நிலைமைகளையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ள இக்கூட்டம் கூட்டப்படுகிறது. வன்முறையை இருதரப்பும் கைவிட்டு மீண்டும் அமைதிப் பேச்சுக்குத் திரும்புவதற்கான வழிகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்றும் அதில் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். வாசிங்ரனில் கடந்த நவம்பர் மாதம் இணைத் தலைமை நாடுகளின் கடைசிக…

  11. எமது பேனாக்கள் சரிகின்றபோது தூக்கி நிறுத்த அடுத்தவர்கள் வந்து கொண்டுதான் இருப்பார்கள்: வித்தியாதரன். ஒரு போராளியின் துப்பாக்கி சரிகின்ற போது அதனை மீண்டும் தூக்க ஒரு புதிய போராளி வருவதைப் போல் உரிமைக்காகக் குரல் கொடுக்கின்ற எங்களுடைய தமிழ் ஊடகவியலாளர்களின் பேனாக்கள் சரிகின்றபோது அடுத்தவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள் என்று கொலை அச்சுறுத்தலுக்குள்ளாகி இருக்கும் "உதயன்", "சுடரொளி" நாளிதழ்களின் ஆசிரியர் நடேசபிள்ளை வித்தியாதரன் தெரிவித்துள்ளார். தனக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் குறித்தும் அதன் பின்னணி மற்றும் எதிர்விளைவுகள் குறித்தும் அவுஸ்திரேலியா, சிட்னியிலிருந்து ஒலிபரப்பாகும் "தமிழ்முழக்கம்" வானொலிக்கு வித்தியாதரன் அளித்த சிறப்பு நேர்காணல்: இலங்கையில்…

    • 6 replies
    • 1.7k views
  12. ;.. மட்டகளப்பில் நூற்றுக் கணக்கான தமிழர் இராணுவத்தால் சுட்டக் கொலை - விசேட காலால்படை கோர தாண்டவம். மட்டகளப்பில் கடந்த இரண்டு தினங்களில் மட்டும் சும்மார் 100 பொதுமக்கள் இராணுவ விசேட முன்னேறும் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இராணுவத்திற்கு அஞ்சி இரவு நேரங்களில் காடுகளில் நித்திரைக்கு சென்றவர்களே இவ்வாறு கொல்லபட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலதிக தகவல் தொடரும்.. http://nitharsanam.com/?art=23412

    • 2 replies
    • 3.2k views
  13. ஊரடங்கு நேரம் அதிகரிப்பு குடாநாட்டில் முதலில் இரவு 8 மணியில் இருந்து அதிகாலை 4 மணிவரை அமுலில் இருநத ஊரடங்கு தற்போது இரவு 7 மணியில் இருந்து காலை 5 மணிவரை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இதனை பலாலி இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளது பதிவு

  14. சமாதானத்தை அடைவதாயின் சிறிலங்கா இராணுவம் பலமிக்கதாக விளங்கவேண்டும் - ஜீ.எல்.பீரிஸ் மேற்குலக நாடுகளின் மனிதவுரிமை மீறல்கள் குறித்த அழுத்தமும் நிதிக்குறைப்பினையும் எதிர்நோக்கியுள்ள சிறிலங்கா, தீவிரவாதிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில,; தமது பலத்தினை காட்டுவதன் மூலம் இனப்பிரச்சினைக்கான தீர்வினை எட்டக்கூடியதாக இருக்குமென வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். றோய்ட்டேர்ஸ் செய்தி நிறுவனத்தின் ஆசியப் பிராந்திய செய்தியாளர் போல் எக்கேர்டிற்கு, சிறிலங்காவின் வர்த்தகத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் வோசிங்டனில் வைத்து வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்திருக்கின்றார். விடுதலைப்புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் வெற்றிபெறுவதன் மூலம், அரசாங்கம் ப…

    • 3 replies
    • 2.2k views
  15. Posted on : 2007-06-23 மங்கள சமரவீர அணிக்கு காலம் பிந்திப் பிறந்த ஞானம் காலம் பிந்திப் பிறக்கும் ஞானம் குறித்து விளக்குவதற்கு தமிழில் நல்ல பழமொழிகள் உண்டு. "கண்கெட்ட பின் சூரிய நமஸ் காரம்', "குதிரை ஓடிய பின்னர் லாயத்தை மூடுவது' என்று பல உள்ளன. முன்னாள் அமைச்சரும் தற்போது "ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவு' என்ற கட்சியை உருவாக்கியவருமான மங்கள சமரவீர தற்சமயம் கூறும் கருத்துக்களைக் கவனத்தில் எடுக்கும்போது இந்தப் பழமொழிகள்தான் நமக்கு நினைவுக்கு வருகின்றன. மங்கள சமரவீர தற்போதைய அரசையும், அரசுத்தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் மிக மோசமாக விமர்சித்திருக்கின்றார். தமது அரசியல் வாழ்க்கையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியைப்போல ஒரு மோசமான அரசைத் தாம் இதற்கு முன…

  16. யாரேனும் கட்சி தாவினால் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிடுவேன்: மகிந்த எச்சரிக்கை. மங்கள சமரவீரவின் புதிய கட்சிக்கு யாரேனும் தாவினால் சிறிலங்கா நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுவேன் என்று மகிந்த ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிறப்புக் கூட்டம், மகிந்தவின் அலரி மாளிகையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய மகிந்த ராஜபக்ச, வேறு வழியே இல்லையெனில் தேர்தலைச் சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி ஆகியோர் சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சியைத் தொடங்கியதனைத் தொடர்ந்து அவசர கூட்டம் ஒன்றுக்கு மகிந்த் அழைப்பு விடுத்திருந்தார். இக்கூட்டத…

  17. சிறிலங்காவின் அனைத்து சட்டங்களுமே அனைத்துலக ஊடக சுதந்திர விதிகளுக்கு எதிரானவை சிறிலங்காவின் அனைத்து சட்டங்களுமே அனைத்துலக ஊடக சுதந்திர விதிகளுக்கு எதிரானவை என்று இலங்கைக்கு வருகை தந்த அனைத்துலக ஊடகவியலாளர்கள் குழு சாடியுள்ளது. எல்லைகள் அற்ற ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் வின்செண்ட் ப்ரோசெல், அனைத்துலக ஊடகவியலாளர்கள் கூட்டமைப்பின் இயக்குநர் ஜாக்குலின் பார்க் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்தனர். கொழும்பு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பிரதேசங்களில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து நிலைமைகளைக் கேட்டறிந்தனர். அதன் பின்னர் கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர்கள் மாநாட்டில் இருவரும் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள், இராணுவம் மற்றும் துணை இராணுவக் குழுவின…

  18. ஜனநாயக விரோத செயற்பாடுகளை முறியடிக்க கட்சி வேறுபாடுகளின்றி அனைவரும் ஒன்றுபடுங்கள் வீரகேசரி நாளேடு நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஜனநாயக விரோதச் செயற்பாடுகளை முறியடிக்க அனைவரும் அணிதிரண்டு செயற்பட வேண்டுமென ஐ.தே.க. தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஐ.தே.கட்சியின், அரசுக்கு எதிரான பிரசாரக்கூட்டத்தின் முதலாவது கூட்டம் குருணாகல் சத்தியவதி மைதானத்தில் நடைபெற்றது. குருணாகல் ஐ.தே.க. அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கொட்டும் மழையிலும் பெருமளவு மக்கள் கலந்து கொண்டனர். ஐ.தே.க. தவிசாளர் ருக்மன் சேனாநாயக்க, தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திசாநாயக்க, பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாராளுமன்ற உறுப்…

    • 1 reply
    • 1.1k views
  19. வவுனியாவில் அப்பாவித் தமிழ் இளைஞர்கள் மூவரை படுகொலை செய்தது இராணுவம் [வெள்ளிக்கிழமை, 22 யூன் 2007, 20:44 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியாவில் அப்பாவி தமிழ் இளைஞர்கள் மூவர் சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு நாட்களில் செட்டிக்குளத்தில் காணாமற் போன 27 வயதுடைய மூன்று இளைஞர்கள் இன்று வெள்ளிக்கிழமை சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக எடுக்கப்பட்டுள்ளனர். செட்டிகுளம் மெனிக்பாம் குடியேற்றவாசிகளான 27 வயதுடைய ரட்ணம் ரகுநாதன் அர்ச்சுனர் ரகுநாதன் மாணிக்கம் ரமேஸ் ஆகியோர் சடலங்களாக எடுக்கப்பட்டவர்களாவர். ரட்ணம் ரகுநாதன், அர்ச்சுனர் ரகுநாதன் ஆகிய இருவரும் நேற்று முன்னாள் மெனிக் பாமில் இர…

  20. சிறிலங்கா அரசால் மேலும் பல இணையத் தளங்கள் மூடப்படலாம் Written by Ellalan - Jun 22, 2007 at 10:03 PM தமிழ்நெட் சிறிலங்காவில் தடை செய்யப்பட்டுள்ளது போன்று மேலும் சிறி லங்கா அரசையும், அரசியல்வாதிகளையும் விமர்சனம் செய்யும், விடுதலைப்புலிகள் ஆதரவு நிலையினை கொண்டுள்ள பல இணையத்தளங்களை தடை செய்ய கொழும்பு உயர்மட்டங்கள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்காவில் செயற்பட்டுவரும் இணைய சேவை வழங்குணர்களை சிறி லங்கா அரசாங்கமே தமிழ்நெட் இணையத்தளத்தை தடை செய்யவேண்டும் எனத் தெரிவித்தன் பிரகாரம் கடந்த 15ஆம் திகதி முதல் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது இதேபோல செய்திகள் தகவல்களை வழங்கும் சக…

  21. புலிபாய்ந்தகல் நோக்கிய வலிந்த தாக்குதல்: இரு தரப்பினரிடையே கடும் மோதல் மட்டக்களப்பு புலிபாய்ந்தகல் பகுதி நோக்கி சிறீலங்காப் படையினர் வலிந்த தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இன்று காலை மேற்கொள்ளப்பட்ட முன்னேற்ற முயற்சியை அடுத்து அப்பகுதியில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. வலிந்த தாக்குதல் முயற்சி தொடர்ப்பில் விபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. சிறீலங்காப் படையினர் மட்டக்களப்பு மாவட்டம் மீதான ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஆரம்பித்த பின்னர் புலிபாய்ந்தகல் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பகுதியாகவே இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது பதிவு

  22. உலகில் ஊடகவியலளார்க்கு மிகவும் அச்சுறுத்தலான இடம் யாழ்ப்பாணம் சர்வதேச ஊடக அமைப்பினர் வீரகேசரி இணையத்தளம் இலங்கை ஊடகவியலாளர்களிற்கு அச்சுறுத்தல் உள்ள நாடுகளில் முக்கிய நாடாக திகழ்கின்றது என சர்வதேச ஊடக உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் . தொடரும் கொலைகள் , தாக்குதல்கள் , அச்சுறுத்த்ல்கள் மற்றும் கடத்தல்கள் ஊடகவியலாளார்கள் சுதந்திரமாக செயற்பட முடியாமையால் சுதந்திரம் வலுவாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடக சுதந்திர ஆர்வலர்கள் மேலும் தெரிவித்துள்ளனர் . 2005ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 11 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனத்தின் பிரதிநிதி ஜகுவிஸ் பார்க் தெரிவித்துள்ளனர் . அதே வேளை யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களிற்கும் மிகவும் அச்சுறுத்தல்…

  23. ரனில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ராஜபக்ச குடும்பத்தினால் மூன்று வழக்குகள் தாக்கல். ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக ராஜபக்ச குடும்பத்தினால் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர்களான ஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவருடைய இரு சகோதரர்களான பசில் ராஜபக்ச கோட்டபாய ராஜபக்ச ஆகியோர் தனித்தனியாக இந்த வழக்குகளை தாக்கல் செய்யவுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார் ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் பற்றி தவறாக கருத்துக்களை ரனில் விக்கிரமசிங்க பொதுக் கூட்டங்களில் வெளியிட்டமைக்கு எதிராகவே இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது இந்த வழக்கின் சாட்சிகளாக ஐக்க…

  24. கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை நியாயமானது: முஸ்லீம் கோடீஸ்வரர். கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை நியாயமானது என தெரிவித்து கொழும்பில் உள்ள முஸ்லீம் கோடீஸ்வரர் ஒருவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் இடையீட்டு மனுவினை தாக்கல் செய்துள்ளார் கொழும்பில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு எதிராக மாற்று கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு மீதான இரண்டாம் நாள் விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில் இந்த இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது கொழும்பில் சிங்களவர்களை விட அதிகளவில் சிறுபான்மையினரே வாழந்து வருவதாகவும் ஏறத்தாள இரண்டு இலட்சம்…

  25. கைகளைத் தூக்கினால் குண்டு வெடிக்கும் புதிய உத்தியை பயன்படுத்தும் புலிகள் [22 - June - 2007] கிழக்கு மாகாணத்தில் படையினர் மேற்கொண்ட தொடர்ச்சியான தீவிர இராணுவ நடவடிக்கைகளால் தோல்வியடைந்து கிழக்கிலிருந்து புலிகள் இயக்கத்தினர் வெளியேறிக்கொண்டிருக்கும் நிலையில், ஏனைய பகுதிகளாகிய யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களில் வீதித் தடைமுகாம்களில் வைத்துப் படையினர் மீது தாக்குதல் நடத்தி படையினரின் நடமாட்டங்களைத் தடுக்கும் புதிய தாக்குதல் உத்தியைக் கையாளத் தொடங்கியிருப்பதாக இராணுவத் தரப்பு தெரிவித்துள்ளது. இந்த வகையில் படையினரின் வீதித்தடைப் பகுதியில் வைத்து சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவரை இராணுவத்தினர் சோதனையிட முற்படும்போது, குறித்த நபர் கைகளை உயர்த்தும் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.