ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
போவோர் போனால் போகட்டும் இருப்போரை பாதுகாப்போம் அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீரவும் ஸ்ரீபதி சூரியாராச்சியும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துகொண்டமை அரசாங்கத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விடயமன்று. அவர்கள் எதிர்த்தரப்பிற்குச் சென்றாலும், அரசு பலமுடனேயே இருக்கின்றது. போவோர் போனால் போகட்டும். இருப்பவர்களை நாம் பாதுகாப்போம் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். தொப்பிகல காட்டுப்பகுதியில் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிறைப்பட்டுள்ளனர் என்ற விடயம் உலகமறிந்தது. ஆனால், அங்கு படையினரே விடுதலைப் புலிகளிடம் சிக்கியுள்ளதாக பொறுப்புள்ள எதிர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
சில தினங்களில் தொப்பிகல பகுதியை கைப்பற்றுவோம் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தொப்பிகல பிரதேசத்தை அரசாங்கம் இன்னும் சில தினங்களில் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும். தற்போதைக்கு தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றிவிட்டன என்று இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் கூறியதாவது : தொப்பிகல பகுதியில் 95 சதவீதமான பிரதேசத்தை அரசாங்கப் படைகள் கைப்பற்றியுள்ளன. இன்னும் சில தினங்களில் நாங்கள் எஞ்சிய பகுதிகளையும் கைப்பற்றிவிடுவோம். தொப்பிகல பகுதியில் உள்ள ஏழுக்கு…
-
- 0 replies
- 1.5k views
-
-
‘எமது உரிமைகளுக்காக நாம் போராடுவோம்’ – சம்பூர், மூதூர் கிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் புதன்கிழமை சர்வதேச சமூகத்திடம் தம்மை தமது பரம்பரையான இடங்களில் நிம்மதியாக வாழ்வதற்கு வழிவகை செய்யக்கோரி அமைதியான போராட்டம் ஒன்றை சம்பூர், மூதூர்கிழக்கு ஆகியபிரதேசங்களில் சிறீலங்கா அரசாங்கத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து அகதிகளாக வாழும் மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சர்வதேச அகதிகள் தினத்தையொட்டி இவ் அமைதிப்போராட்டத்தை Interfaith Organisation for Peace (இன்ரபெய்த் போ பீஸ்) என்ற அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது. இதில் 25 கிராமசேகவர் பிரிவிலும் இருந்து இடம்பெயர்ந்த மக்கள், மதத்தலைவர்கள், ஆதரவாளர்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். சிறீலங்கா ஜனாதிபதியால் மே …
-
- 0 replies
- 956 views
-
-
கொழும்பில் பிரதான மின்வழங்கும் கேபிள் பாதிப்பு : கொழும்பு நெருக்கடியில் கொழும்பின் பிரதான பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கும் கேபிள் நீண்டகாலத்துக்கு முன்பு புதையுண்ட பொருட்களையோ அல்லது கட்டடத்தையோ தேடி இனம்தெரியாத நபர்கள் தோண்டியதில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதனை திருத்துவதற்கு சுமார் 15 மில்லியன் ரூபா செலவாகும் எனத் தெரியவருகிறது. இதனால் சாதாரணமாக மின்வழங்கும் கொலன்னாவ பிரதான மின்வழங்கும் பாதையூடாக மின்சாரம் வழங்க முடியாது மாற்று வழியான பன்னிப்பிட்டிய வழியாக மின்வழங்கப்படுவதாகவும் மேலும் அறியமுடிகிறது. சிலோன் மின்சார சபையின் பிரதான பொறியியலாளர் மேலும் தெரிவிக்கையில் இதனை திருத்துவதற்கு இருமாதங்கள் ஏற்படும் எனவும் திருத்த வேலைகள் இடம்பெறும்போ…
-
- 1 reply
- 1.3k views
-
-
சிங்கள இராணுவதுணை ஆயுததாரி தற்கொலை கருணா கூலிக்குழுவால் இராணுவத்துணைக்குழுவில் இணைக்கப்பட்ட 16 வயதுடைய பொலநறுவை மட்டக்களப்பு எல்லைக்கிராமத்தை சேர்ந்த சிங்கள சிறுவன் அசிறி சம்பத் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவருகிறது. இவர் தொடர்பாக பெற்றோர் காவல்துறையில் முறையிட்டதை அடுத்து இவரது வழக்கு நீதிமன்றுக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை இவர் காவல்துறையினரிடம் இருந்து எடுத்த கைத்துப்பாக்கி மூலமே தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. -பதிவு
-
- 0 replies
- 1.4k views
-
-
கச்சத் தீவை மீட்டால்தான் காப்பாற்ற முடியும் மீனவர்களை! கச்சத் தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை அத்துமீறி துப்பாக்கியால் சுட்டதில் மீனவர் ஒருவர் குண்டடிபட்டு அபாயகரமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது தமிழக மீனவர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது! ராமேஸ்வரத்தில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 780 படகுகளில் சென்று கச்சத் தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இத்தாக்குதல் நடந்துள்ளது. இதில் குண்டடிபட்ட குணபாலன், ராமேஸ்வரம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றார். இலங்கையுடன் நல்லுறவை ஏற்படுத்தும் பொருட்டு இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது நமக்குச் சொந்தமான கச்சத் தீவு …
-
- 0 replies
- 1.1k views
-
-
தொண்டர் அமைப்பு பணியாளரைகாணவில்லையென முறைப்பாடு யாழ்ப்பாணத்தில் மிதிவெடி அகற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுவந்த டென்மார்க் நாட்டின் தொண்டர் அமைப்பின் பணியாளர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதுதொடர்பாக யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வலிகாமம் குப்பிழானை சேர்ந்த சிவராசா விமலராசா (20 வயது) என்ற இளைஞரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. - வீரகேசரி
-
- 0 replies
- 1k views
-
-
இனிவரும் காலங்களில் சிறீலங்கா போர்நிறுத்த கண்காணிப்பு குழு அறிக்கை வெளியிடமாட்டாது. வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தெரிவிக்கையில் இனிவரும் காலங்களில் சிறீலங்கா போர்நிறுத்த கண்காணிப்புக்குழு அறிக்கைகளை வெளியிடமாட்டாது எனவும் அவர்கள் முறைப்பாடுகளை மாத்திரம் பெற்றுக்கொள்வார்கள் எனவும் அவர்மேலும் தெரிவித்துள்ளார். கண்காணிப்புக்குழுவின் தலைவரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். தாம் வெளியிடும் அறிக்கைகளுக்கு மதிப்ளிப்பதில்லை எனவும் இனிவரும் காலங்களில் தாம் முறைப்பாடுகளை மாத்திரம் பதிவு செய்வதாகவும் யாரையும் கண்டித்து அறிக்கைகளை வெளியிடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். 2002 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் இலங்கை …
-
- 6 replies
- 1.7k views
-
-
கடந்த 10 வருடங்களின் பாதுகாப்புச் செலவு 1,404 பில்லியன் ரூபாய்கள் [புதன்கிழமை, 20 யூன் 2007, 17:54 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரசானது கடந்த 10 வருடங்களில் பாதுகாப்புக்கு 1,404 பில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்காவின் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது: 1996 ஆம் ஆண்டில் இருந்தான 10 வருட காலத்தில் அரசுகள் 1,404 பில்லியன் ரூபாய்களை பாதுகாப்புக்கு செலவிட்டுள்ளன. இதில் அதிகளவான தொகை கடந்த வருடமே செலவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுக்கான மொத்த பாதுகாப்புச் செலவு 244 பில்லியன் ரூபாய்கள். 2005 ஆம் ஆண்டுக்கான…
-
- 1 reply
- 1.1k views
-
-
உலகில் 25 ஆவது மோசமான நாடு சிறிலங்கா [புதன்கிழமை, 20 யூன் 2007, 16:01 ஈழம்] [சி.கனகரத்தினம்] 2007 ஆம் ஆண்டு உலகில் தோல்வியடைந்த நாடுகளில் சிறிலங்கா 25 ஆவது இடத்தில் உள்ளது. "வெளிவிவகாரக் கொள்கை" இதழ் நிறுவனமும் அமைதிக்கான நிதி அமைப்பும் இணைந்து அனைத்துலக நாடுகள் தொடர்பில் ஒரு ஆய்வை மேற்கொண்டன. அகதிகள், இடம்பெயர்ந்தோர், பொருளாதாரம், மனித உரிமைகள், பாதுகாப்பு நிலைமைகள், நகர்ப்புற அபிவிருத்தி, பொதுசேவைகள் உள்ளிட்ட 12 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு நாடுகள் மதிப்பிடப்பட்டன. மொத்தம் 117 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் முதலிடத்தில் சூடான் நாடு (113.7புள்ளிகள்) உள்ளது. இரண்டாம் இடத்தில் ஈராக் (111.4) உள்ளது. உலகிலேயே மிக மோசமான- தோல்விய…
-
- 7 replies
- 2.4k views
-
-
எமக்காய் உரத்துக் குரல் கொடுங்கள் உறவுகளே......: நெளரு தீவு தமிழ் அகதிகள் கண்ணீர் வேண்டுகோள் [புதன்கிழமை, 20 யூன் 2007, 15:26 ஈழம்] [சி.கனகரத்தினம்] ஐக்கிய நாடுகள் சபையால் அனைத்துலக அகதிகள் நாள் கடைபிடிக்கப்படும் இன்றைய நாளில் நெளரு தீவில் (அவுஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தீவு) "இலங்கை அகதிகள் தடுப்பு முகாம்"-இலிருந்து தமிழீழ உறவுகளுக்கு விடுக்கப்பட்டிருக்கும் கண்ணீர் வேண்டுகோள்: இலங்கை அகதிகள் தடுப்பு முகாம், நெளரு 20.06.2007 எமது உறவுகளுக்கு, நீங்கள் எங்களுக்கான உதவிகளை செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதனை நாம் அறிவோம். அதற்காக முதலில் உங்களுக்கு எங்களது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் உங்களுக்கு எழுதிக்கொள்…
-
- 6 replies
- 1.6k views
-
-
அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐ.நா. வரை செல்லும் அவலம் [20 - June - 2007] * வரலாற்றில் துரதிர்ஷ்டம் என்கிறது ஐ.தே.க. -எம்.ஏ.எம். நிலாம்- இலங்கை நிலைவரங்கள் தொடர்பாக அரசுக்கு எதிரான குற்றச்சாட்டு ஐ.நா. சபை வரை செல்லும் நிலை உருவாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, நாட்டின் அரசியல் வரலாற்றில் இது பெரும் துரதிர்ஷ்ட சம்பவமெனவும் விசனம் தெரிவித்திருக்கின்றது. முன்னொருபோதுமில்லாத விதத்தில் எமது நாட்டில் ஒழுங்கீனமானதொரு ஆட்சி நடந்து கொண்டிருப்பதாகவும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட…
-
- 1 reply
- 1.4k views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையும் அரசியல்வாதிகளின் அணுகுமுறையும் [20 - June - 2007] -இஸ்மாயில் பி.ம ஆரிஃப்- நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைக் கொண்டு வருவதற்கான இலங்கையின் அரசியலமைப்பு 1977 ஆம் ஆண்டு ஓக்டோபர் மாதம் நான்காம் திகதி நிறைவேற்றப்பட்டது. ஏனைய பல அரசமைப்புகளிலிருந்து பல சிறப்பம்சங்கள் உள்வாங்கப்பட்டன. அன்று ஐ.தே.க. தம்மால் பாராளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியும் என்பதை தேர்தல்களுக்கு நீண்ட காலத்துக்கு முன்பே அறிந்திருந்தது. ஆனால், இஷ்டப்படியும் சுதந்திரமாகவும் எதனையும் நிறைவேற்றத்தக்க மிகப்பெரிய ஆறில் ஐந்து பெரும்பான்மைப் பலம் தம்மீது உதயமாகும் என்று ஒருபோதும் எதிர்பார்த்திருக்காது. 1977 ஆம் ஆண்டில் ஐ…
-
- 1 reply
- 1.2k views
-
-
புதன் 20-06-2007 13:35 மணி தமிழீழம் [மயூரன்] தேசியத் தலைவரின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை திரட்டுவதில் இந்தியப் புலனாய்வுப் பிரிவு தீவிரம் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகனான சார்ள்ஸ் அன்ரனி தொடர்பான தகவல்களை இந்திய புலனாய்வு பிரிவு தீவிர அக்கறை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது மும்பாயை சேர்ந்த இந்திய புலனாய்வு பிரிவு அதிகாரி ஒருவரை மேற்கொள் காட்டி இந்திய ஊடகம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளின் விமானப்படைப் பிரிவினை சார்ள்ஸ் அன்ரனியே வழி நடத்துவதாகவும் அவர் விமானப்பயிற்ச்சி உடப்பட நவீன தாக்குதல் உத்திகள் பலவற்றை இஸ்ரேலிய உளவு அமைப்பான மோசட் மூலம் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள…
-
- 12 replies
- 3.7k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்
-
- 1 reply
- 1.5k views
-
-
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு வீரகேசரி நாளேடு இராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.இராமேஸ்வரத்
-
- 4 replies
- 1.6k views
-
-
Posted on : Wed Jun 20 6:25:39 EEST 2007 இலங்கை கேட்கும் ஆயுத உதவிகளை வழங்குவதற்கு இந்திய அரசு தயார் இராணுவத் தளபதிகள் மாநாட்டில் அந்தோனி இலங்கை அரசு கேட் கும் அனைத்து இராணுவ உதவி களையும், தளபாடங்களை யும் வழங்க இந்திய அரசு தயாராகவே உள்ளது என அறிவித்திருக்கின்றார் அந் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ. கே. அந்தோனி. இராணுவத் தளபதிகளின் ஒருங்கி ணைப்பு மாநாடு புதுடில்லியில் கடந்த திங்கட்கிழமை ஆரம்பமானது. அதனைத் தொடக்கிவைத்து உரைநிகழ்த்தியபோதே அந்தோனி மேற்கண்ட தகவலையும் கசிய விட்டார் என டில்லி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. விடுதலைப்புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபடும் நோக்கில் "ராடர்' உள்ளிட்ட கருவி களை எம்மிடம் இலங்கை கேட்டிருக்கின் றது. அதற்கமைய அவர்களுக்குத்…
-
- 5 replies
- 1.6k views
-
-
Posted on : 2007-06-20 தமிழர்களின் தனித்துவ உரிமைகளை ஏற்காத தீர்வினால் பயனே இல்லை ""நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மாவட்ட மட்டத்திலேயே பகிர்ந்தளிக்கலாம் என்ற தனது நிலைப்பாட்டில் இருந்து பிரதான ஆளுங்கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி விட்டுக்கொடுத்து இறங்க வேண்டும். பெரும்பாலான கட்சிகள் முன்வைத்துள்ள மாகாண மட்ட அதிகாரப்பரவலாக்கல் திட்டத்தை அக்கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காணும் முயற்சி முறிந்துபோகும்.'' இப்படித் தெரிவித்திருக்கின்றார், இனப்பிரச்சினைத் தீர்வுக்கான ஆலோசனைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் அவரது ஸ்ரீலங்கா சுத…
-
- 0 replies
- 885 views
-
-
தொடரும் சிங்களப் பாசம்: தமிழக மீனவர்களை காட்டிக் கொடுக்கும் "இந்து" தமிழ்நாட்டிலிருந்து வெளியாகும் "இந்து" நாளிதழ் தனது சிங்களப் பாசத்தை வெளிக்காட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் மீது அபாண்டமாக பழிசுமத்தி காட்டிக் கொடுக்கும் துரோகத்தனத்தைச் செய்துள்ளது. இராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது கடந்த ஜூன் 17 ஆம் நாள் சிங்கள மீனவர்கள் குண்டுவீசித் தாக்குதல் நடத்தினர். இதில் தமிழக மீனவர்களின் படகு தகர்க்கப்பட்டு 4 பேர் படுகாயமடைந்தனர். சிங்கள மீனவர்கள் நடத்திய இந்த வெறியாட்டத்தில் இராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் பிரவீன்குமார் (வயது 20), பாலமுருகன் (வயது 35), சூசை(வயது 45), போதகராஜ் (வயது 30) ஆகிய 4 பேர் படுகாயமடைந்தனர். சிறிலங்கா அரசாங்…
-
- 2 replies
- 1.3k views
-
-
"சிங்கள ஹிட்லர்களின் கருதுகோள்" -சபேசன் (அவுஸ்திரேலியா)- சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வசித்து வந்த தமிழர்களைப் பலவந்தமாக வெளியேற்றி, வடக்கு-கிழக்குப் பகுதிகளுக்கு அனுப்பிய சிறிலங்கா அரசின் செய்கையை, அமெரிக்க அரசு உட்படப் பலரும் கண்டித்துள்ளனர். ஜே.வி.பி உட்படப் பல சிங்கள அரசியல் கட்சிகளும், சிறிலங்கா அரசின் இச்செயலைக் கண்டித்துள்ளன. ~இச் செயல், தமிழர்களை நாடு கடத்துவதற்கு ஒப்பானது| - என்கின்ற வகையில் கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன. ~வடக்கு-கிழக்குப் பிரதேசங்கள், தமிழர்களின் தாயகப்பகுதி என்ற உண்மையை, இந்த வெளியேற்றம், நிரூபணம் செய்து விட்டது| என்ற தர்க்கமும் இப்போது முன்வைக்கப்பட்டு வருகின்றது. ~நாடு கடத்தல், தமிழர் தாயகத்திற்கான நிர…
-
- 0 replies
- 921 views
-
-
குடும்பிமலை பாலமடு நோக்கிய படைநகர்வு முறியடிப்பு மட்டக்களப்பு குடும்பிமலை பாலமடு நோக்கிய சிறீலங்காப் படையினரின் வலிந்த படைநகர்வு இன்று விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 10 மணியளவில் எறிகணைச் சூட்டாதரவுடன் பாலமடு நோக்கி பெருமளவு சிறீலங்காப் படையினர் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டபோது போராளிகள் படையினரை வழிமறித்து சமராடி படையினரை விரட்டியடித்துள்ளனர். 6 மணி நேர சமர்களின் பின்னர் பலத்த இழப்புக்களுடன் சிறீலங்காப் படையினர் தமது பழைய நிலைகளுக்குத் தப்பியோடியுள்ளனர். இன்றைய மோதல்களில் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் இதுவரை வெளியாகவில்லை. இதேநேரம் இன்று மாலை 6 மணியளவில் குடும்பிமலை திருமாவடி எனும் மற்றொரு பகுதியில் சிறீலங்க…
-
- 0 replies
- 1.3k views
-
-
போர் நிறுத்த மீறல்கள், கள நிலைமைகளை உள்ளடக்கிய விசேட அறிக்கையொன்றை இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்துச் செல்லும் போர் நிறுத்த மீறல்கள் மற்றும் கள நிலைமைகளின் உண்மைத் தன்மையை உள்ளடக்கிய அறிக்கையொன்றை இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்திற்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தொபினோர் மேர்ஸன் மேலும் கூறியதாவது: நோர்வே தலைநகர் , ஒஸ்லோவில் எதிர்வரும் 25,26 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் பரிசீலிப்பதற்க…
-
- 0 replies
- 980 views
-
-
அதிகாரப்பகிர்வு யோசனையை அமுல்படுத்த விடமாட்டோம் அதிகாரப்பகிர்வின் அடிப்படையில் அமைந்த தீர்வு யோசனையை சர்வகட்சி பிரதிநிதிகள் குழு வெளியிட்டால் நாங்கள் வீதியிலிறங்கி போராட்டம் நடத்துவோம். இந்த நாட்டில் ஒருபோதும் அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனையை நடைமுறைப்படுத்த விடமாட்டோம் என்று ஜே. வி.பி. யின் கம்பஹா மாவட்ட பாராளு மன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனை இன்னும் ஆறு வாரங்களில் வெளியிடப்படும் என்று சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் தலைவர் அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளமை குறித்து கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இவ்விடயம் குறித்து அவர் மேலும் கூறியதாவது : அதிகாரப்பகிர்வில் அமைந்த தீர்வு யோசனையை…
-
- 1 reply
- 1.3k views
-
-
"தமிழ்நெட்" இணையத்தளத்தை முடக்கியது சிறிலங்கா [செவ்வாய்க்கிழமை, 19 யூன் 2007, 22:07 ஈழம்] [செ.விசுவநாதன்] "தமிழ்நெட்" இணையத்தளத்தை சிறிலங்கா அரசாங்கம் முடக்கியுள்ளது என்று "தமிழ்நெட்" இணையத்தளம் அறிவித்துள்ளது. "சுயாதீனமான குழுவைச் சேர்ந்தவர்களால் இலங்கையின் வடக்கு - கிழக்கு செய்திகளை கடந்த 10 ஆண்டுகளாக நாம் வெளியிட்டு வருகிறோம். சிறிலங்காவில் எமது இணையத் தளத்தை முடக்கி "தமிழ்நெட்" இணையத்தளத்துக்கு 10 ஆம் ஆண்டு பரிசை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது. இதில் ஆச்சரியப்பட ஏதும் இல்லை" என்றும் தமிழ்நெட் கருத்துத் தெரிவித்துள்ளது. "தமிழ்நெட்" முடக்கப்பட்டது குறித்து உள்ளுர் இணைய சேவையாளர்களிடம் எமது படிப்பாளர்கள் கேட்டபோது சிறிலங்காவின் உயர் அதிகாரிகளின் உத்…
-
- 43 replies
- 7.5k views
-
-
வடக்கு கடற்பரப்பில் மோதல்...ஒன்று இடம் பெற்று இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன...இராணுவ தரப்பு தகவல்படி விடுதலைப்புலிகளின் ஒரு படகு ழூழ்கடிக்க பட்டுவிட்டதாகவும் தங்கள் தரப்பில் இழப்பு இல்லை என்றும் கூறி இருக்கின்றார்கள்..புலிகள் தரப்பிடம் விபரங்கள் பெறமுடியவில்லை... செய்திகள் எடுத்து வந்தது.....SNS
-
- 15 replies
- 5.7k views
-