ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கண்டனம் Saturday, 09 June 2007 கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டதற்கு அமெரிக்காவைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றியமும் இன்று கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை, அனைத்துலக மனித உரிமைச் சட்ட விதிகளை மீறும் செயல் என, ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்ட அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் வெளியேற்றப்பட்டதை அவர்களுக்கு வழங்கப்பட்ட “ஒட்டுமொத்த தண்டனை” என பல உலக நாடுகளும், மனித உரிமை அமைப்புகளும் தமது கடுமையான கண்டனத்தை வெளியிட்டு வருகின்றன. தமிழோசை
-
- 0 replies
- 865 views
-
-
வடக்கு - கிழக்கில் பதிவு செய்யப்பட்ட பாரவூர்த்திகள் கொழும்புக்கு வரத் தடை - படையினர் அறிவிப்பு வடபகுதியில் பதிவு செய்யப்பட்ட பாரவூர்த்திகள் கொழும்பு நோக்கி பயணிக்க சிறீலங்காப் படையினர் தடைவிதித்துள்ள நிலையில் தற்போது கிழக்குப் பகுதியில் பதிவு செய்யப்பட்ட பராவூர்த்திகளும் கொழும்புக்கு வரமுடியாது என சிறீலங்காப் படையினர் அறிவித்துள்ளனர். பதிவு
-
- 0 replies
- 796 views
-
-
சிறீலங்காவின் கிழக்கே தொப்பிக்கல காட்டுப்பகுதிகளில் இராணுவம் மேற்கொண்ட அமெரிக்க உச்சரிப்பிலான பயங்கரவாதத்திற்கு எதிரான புலிகளைக் கிழக்கில் இருந்து வெளியேற்றும் யுத்தத்தில் புலிகளின் நாங்கு முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டதுடன் சுமார் 30 புலிகள் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என்று இராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது..! இராணுவம் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு 17 பேர் காயமடைந்துள்ளனர். கிழக்கு பிரேமதாச அரசின் காலத்திலும் இராணுவத்தின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் இருந்தது என்பதுவும்.. அப்போது கூட தொப்பிக்கல நோக்கி இராணுவம் நடவடிக்கையில் இறங்கி பல பிரதேசங்களை மீட்டது என்பதும்.. அதன் பின்னர் வடக்குப் போர்முனை.. கிழக்கின் நிலவரத்தை தலை கீழாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. 90 களின் போது …
-
- 1 reply
- 2.3k views
-
-
மட்டக்களப்பு-கொழும்பு புகையிரத தண்டவாளத்தைக் கழற்றிய படையினர்! http://www.alaikal.com வெளிவரும் உண்மைத் தகவல்கள். மட்டக்களப்பிலிருந்து “சன்யு” கடந்த புதன்கிழமை காலை 6.30 மணியளவில் மட்டக்களப்பு புகையிரத நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்ட புகையிரதம் வாழைச்சேனை-புணானைப் பிரதேசத்தில் தடம்புரண்டது. இதில் மூன்று பெட்டிகள் தடம்புரண்டதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவத்தின்போது ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் மற்றும் குழந்தை உட்பட நால்வர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் மூவர் பொலனறுவை வைத்தியசாலையிலும் ஒருவர் வாழைச்சேனை ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் புகையிரதம் மீது கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒரு …
-
- 0 replies
- 1.5k views
-
-
கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்ட செயல் பேரினவாதத்தின் இன ஒழிப்பு நிகழ்ச்சி நிரலின் ஒரு அம்சம் [09 - June - 2007] ஒரு நாட்டின் அரசியலமைப்பு அது எத்தகையதாக இருந்தபோதிலும் அதில் கூறப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையிலேயே சட்ட ஆட்சி நடப்பதாகக் கூறப்படுகிறது. இலங்கை ஜனநாயகக் சோஷலிசக் குடியரசின் அரசியலமைப்பு அனைத்துப் பிரசைகளினதும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாத்து நிற்கும் ஒன்றாகவே காட்டப்படுகின்றது. உயிர் வாழும் உரிமை, நடமாடும் சுதந்திரம் இலங்கையில் எப்பாகத்திலாவது வாழ்க்கை நடத்தும் உரிமை உட்பட பேச்சு, எழுத்து கூட்டம் கூடும் உரிமைகள் எனப் பலவற்றை மிக அலங்காரமாக எடுத்துக் கூறுகின்றது. தோற்றமளவில் கூறப்படும் இவற்றை ஆளுவோரும் அரசு இயந்திரமும் எவ…
-
- 0 replies
- 1.5k views
-
-
சிறிலங்காவுக்கான நிதி உதவியை நிறுத்த அகாசியிடம் த.தே.கூ. வலியுறுத்தல் [சனிக்கிழமை, 9 யூன் 2007, 10:02 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்காவுக்கான நிதி உதவியை நிறுத்த வேண்டும் என்று ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தங்கேஸ்வரி ஆகியோரை உள்ளடக்கிய குழு அகாசியை சந்தித்தது. அகாசியிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறியதாவது: கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் வடக்கு - கிழக்கிலும் தமிழர்கள் கடத்தப்படுகின்றார்கள், காணாமல் போகின்றார்கள்…
-
- 4 replies
- 1.1k views
-
-
Posted on : 2007-06-09 "படுமுட்டாள்தனமான நடவடிக்கை!' பல தரப்பிலும் இப்படித்தான் விமர்சனம் கொழும்பு தங்குமிட விடுதிகளில் இருந்து ஈழத் தமிழர் களைப் பலவந்தமாக வெளியேற்றும் இலங்கைப் பாதுகாப் புத் தரப்பினரின் அடாவடித் தனமான நடவடிக்கைக்கு எதி ராக உயர்நீதிமன்றமே இடைக்காலத் தடை விதித்து விட்டிருக் கின்றது. இவ்விவகாரத்தில் தமிழருக்கு ஆதரவான பச்சாதாப உணர்வு இனம், மொழி, மதம் கடந்து இலங்கைத்தீவு முழு வதும் ஒரே சமயத்தில் பீறிட்டுப் பிறந்திருப்பதையும் உணர முடிகின்றது. இத்தகைய நடவடிக்கையை எடுப்பதற்கு அரசின் பாதுகாப்புத்துறை மேற்கொண்ட தீர்மானம் குறித்து இலங்கை யின் எந்தத் தரப்பிலிருந்தும் எந்தப் பக்கத்திலிருந்தும் எந்தத் தலைவர்களிடமிருந்தும் வந்த ஒரே கணிப்பு இது தான்: ""இது …
-
- 1 reply
- 1.4k views
-
-
காவல்துறை மா அதிபர் மீது பழியை போட்டுவிட்டு மகிந்த ராஜபக்ச தப்பிக்க முயற்சி. சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியதற்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேராதான் காரணம் என்று பழிபோட்டுவிட்டு அனைத்துலக நாடுகளின் கண்டனங்களிலிருந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தப்பிக்க முனைகிறார். மகிந்தவை நல்லவராக்க சிங்கள மற்றும் கொழும்பு ஆங்கில ஊடகங்களும் முனைந்துள்ளன. கொழும்பு சம்பவம் தொடர்பாக காவல்துறை மா அதிபரிடம் மகிந்த விளக்கம் கேட்டுள்ளதாகவும் "உடனடி" அறிக்கை ஒன்றை தம்மிடம் தாக்கல் செய்யுமாறு மகிந்த உத்தரவிட்டுள்ளதாகவும் அந்த ஏடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. -Puthinam-
-
- 16 replies
- 2.3k views
-
-
கேகலிய ரம்புக்வெல மீது நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு விசாரணை நடத்த வலியுறுத்தல். கொழும்பில் தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமை குறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பொய்யான தகவலைத் தெரிவித்தமைக்காக அமைச்சர் கேகலிய ரம்புக்வெல மீது நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துக்கோறள வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் நேற்று வெள்ளிக்கிழமை இப்பிரச்சினையை முன்வைத்து தலதா அத்துக் கோறள பேசியதாவது: கொழும்பில் விடுதிகளிலிருந்து தமிழ் மக்கள் வெளியேற்றப்படுகின்றார்கள் என்று தியாகராசா மகேஸ்வரன் தெரிவித்தபோது, அதற்கு விளக்கமளித்த அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தமிழ்மக்களின் வி…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையைப் பிரிக்க மகிந்த முயற்சி: மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள். இனங்களுக்கு இடையில் நாட்டைப் பிரிக்கும் நடவடிக்கையில் சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச இறங்கியிருப்பதாக மனித உரிமைச் செயற்பாட்டார்கள் தெரிவித்துள்ளனர். கொழும்பு விடுதிகளில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியதனை எதிர்த்து நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்புப் போராட்டத்தின் போதே மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இவ்வாறு தெரிவித்தனர். பொதுமக்கள் பாதுகாப்பு குழுவின் தலைவரான சிறீதுங்கா ஜெயசூர்ய தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் ஆதரவை அரச தரப்பு இழப்பதற்கு முயன்று வருகின்றது. அரசு நாட்டை பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இம்முயற்சியில் தனது முதலடிய…
-
- 1 reply
- 845 views
-
-
"தமிழீழம்" உருவாவதை சிறிலங்கா அரசு அங்கீகரித்து விட்டதா?: விஜயகாந்த். சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றியதன் மூலம் "தமிழீழம்" உருவாவதை சிறிலங்கா அரசு அங்கீகரித்துவிட்டதா? என்று தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறிலங்காவின் தலைநகரான கொழும்பிலிருந்து தமிழர்கள் சிங்கள அரசால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். விடியற்காலை 3 மணிக்கு தட்டி எழுப்பி அரை மணி நேரம் கூட அவகாசம் தராமல் வீட்டைக் காலி பண்ணச் சொல்லி துப்பாக்கி ஏந்திய சிங்கள காவல்துறை தமிழர்களை பேரூந்துகளில் ஏற்றிக்கொண்டு கொழும்பு மாநகரத்திற்கு அப்பால் கொண்டு போய் விட்டுள்ளது. அவர்கள் மீண்டும் கொழும்புக்கு வ…
-
- 10 replies
- 2.1k views
-
-
பிரித்தானிய அமைச்சர் திங்கட்கிழமை சிறீலங்கா விஜயம். பிரித்தானிய வெளிவிவகார அலுவல்கள் அமைச்சர் டொக்ரர் கிம் ஹவல் அவர்கள் சிறீலங்காவிற்கு திங்கட்கிழமை விஜயம் செய்யவுள்ளார். இவர் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் அண்மைக்கால நடைமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது. பிரித்தானிய அமைச்சர் எதிர்கட்சி தலைவர், அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளுடனும் தற்போதைய முரண்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடவுள்ளதாக தெரியவருகிறது. ஏற்கனவே கடந்த பெப்ரவரி மாதம் அமைச்சர் அவர்கள் சிறீலங்காவிற்கு விஜயம் செய்து சிறீலங்கா ஜனாதிபதியை சந்தித்ததோடு மட்டுமல்லாமல் அம்பாறை மாவட்டம் பகுதிகளுக்கும் விஜயம் செய்து இனமுரண்பாடுகளின் தாக்கம்பற்றி உள்ளுர் ம…
-
- 0 replies
- 884 views
-
-
தமிழர்களுக்கு ஆத்திரமூட்டும் செயல் - நியூயோர்க் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கொழும்பிலிருந்து தமிழர்களை வெளியேற்றி இருப்பதன் மூலம் அதியுச்ச ஆத்திரமூட்டும் செயலை சிறீலங்கா அரசு புரிந்திருப்பதாக, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள நியூயோர்க் மனித உரிமைகள் கண்காணிப்பகம், அரசின் இந்த நடவடிக்கை ஏற்கனவே இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களின் உச்ச கட்டமாக இருப்பதுடன், இனப் பிரச்சினையை மேலும் தீவிரமாக்கும் எனவும் எதிர்வு கூறியுள்ளது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், தமிழ் மக்களை வெளியேற்றி “ஒட்டுமொத்த தண்டனை” கொடுப்பதற்கு, அரசிற்கு எந்தவித உரிமையும் இல்லை எனவ…
-
- 0 replies
- 1.1k views
-
-
மகிந்த அரசின் எதிர்காலமும் கள யதார்த்தங்களும்-புரட்சி (தாயகம்)- கடந்த மே 20 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நெற் இணையத்தளத்தில் வெளிவந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளரினால் வழங்கப்பட்ட செவ்வியானது கொழும்பில் உள்ள தூதுவராலய வட்டாரங்களினால் மிகவும் கவனமாக படிக்கப்பட்டு கருத்தில் எடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. சர்வதேச சமூகத்தின் சமாதான முன்னெடுப்புக்கள் விடயத்தில் அவர்கள் மேற்கொண்ட சில நடவடிக்கைகள் எவ்வாறு சமாதான முயற்சிகள் சீர்குலைக்கப்பட்டு சிறிலங்கா அரசு தனது போர் முயற்சிகளை முனைப்புடன் தீவிரப்படுத்த உதவியது என்பது தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்களானது தற்போதைய சூழ்நிலையில் மிகவும் முக்கியத்துவம் வ…
-
- 1 reply
- 1.8k views
-
-
http://www.khaleejtimes.com/DisplayArticle...tinent&col=
-
- 9 replies
- 2.7k views
-
-
கொழும்பில் கிளைமோர் குண்டு - தமிழர்கள் வெளியேற்றப்பட்டதை திசை திருப்பும் நடவடிக்கை கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட அரசின் நடவடிக்கைக்கு அனைத்துலக ரீதியில் எதிர்ப்புத் தோன்றியுள்ளதால், அரசு சங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொழும்பு, மாளிகாவத்தையிலுள்ள சேர் பறோன் ஜயதிலக்க வீதியில் இன்று ஏழு கிலோ எடையுள்ள கிளைமோர் குண்டு ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக, அரசு தகவல் வெளியிட்டுள்ளது, சிங்கள, ஆங்கில பெரும்பான்மை இன ஊடகங்களும் அரசின் இந்த அறிவிப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிட்டுள்ளன. கொழும்பில் தங்ககங்களில் தங்கியுள்ள தமிழர்களால் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருக்கின்றது என்ற அரசின் கூற்றுக்கு வலுச்சேர்க்கும் வகையில், …
-
- 1 reply
- 1.2k views
-
-
-
புத்தளத்தில் உருக்குலைந்த நிலையில் 15 சடலங்கள் மீட்பு புத்தளம் மாவட்டம் டுமலடெனியா வென்னப்புவ பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் உருக்குலைந்த நிலையில் 15 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டள்ளன. மீட்கப்பட்ட சடலங்களில் 13 ஆண்களின் சடலங்கள், 2 பெண்களின் சடலங்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. -Pathivu-
-
- 9 replies
- 2.1k views
-
-
வடக்கு, கிழக்கு தமிழருக்கு அரசின் செய்தி என்ன? [08 - June - 2007] [Font Size - A - A - A] தலைநகர் கொழும்பில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடு என்ற பெயரில் நேற்று வியாழக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கை தமிழ்மக்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வெள்ளவத்தை, புறக்கோட்டை மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் தனியார் விடுதிகளில் தங்கியிருந்த வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்களில் 500 க்கும் அதிகமானவர்களை பலவந்தமாக வெளியேற்றிய பொலிஸார் அவர்களை பஸ்களில் ஏற்றி வவுனியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்புக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள். தமிழர்கள் தங்கியிருக்கும் கொழும்பு விடுதிகளில் முன்னரெல்லாம் அடிக்கடி சோதனைகளை மேற்கொள்ளும் பொலிஸார் அவர்களை விருப்…
-
- 3 replies
- 1.4k views
-
-
குடும்பிமலை நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல். இன்று காலை 5-30 மணியளவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியான குடும்பிமலை நோக்கி முன்னேற முயன்ற படையினர் மீது புலிகள் கடும் எதிர் தாக்குதல் நடத்தியதில் 16 படையினர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது. Stiff resistance to SLA assault in Batticaloa, 16 troopers wounded Sri Lankan forces launched a three pronged offensive attempting to move towards Liberation Tigers of Tamileelam (LTTE) territory in Kudumpimalai jungles in Batticaloa district since 5:30 a.m. Friday. The SL forces encountered stiff resistance from Tiger forces at the Forward Defence Line in E…
-
- 4 replies
- 2.2k views
-
-
த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வீடு மீது கைக்குண்டுத் தாக்குதல். வவுனியாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் இல்லம் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. உந்துருளியில் வந்த இரு அடையாளம் தெரியாத நபர்கள், சிவசக்தி ஆனந்தனின் வீட்டில் உள்ள காவல்நிலை மீது இத்தாக்குதலை நடத்தியதாகவும் இத்தாக்குதலில் எதுவித சேதமும் ஏற்படவில்லை என்றும் சிறிலங்கா இராணுவ இணையத்தளத்தில் கூறப்பட்டுள்ளது. -Puthinam-
-
- 0 replies
- 983 views
-
-
மகிந்தவுக்கு அமெரிக்கா கண்டனம் சிறிலங்கா தலைநகர் கொழும்பிலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கொழும்பிலிருந்து தமிழர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிக்கிறது. இலங்கைக்குள் அந்நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரும் சுதந்திரமாக நடமாட அரசியல் யாப்பு வழங்கியுள்ள உரிமையை இது மீறுவதாகும். பயங்கரவாததத்துக்கு எதிராக தன்னைப் பாதுகாக்க சிறிலங்கா வேண்டுகோளை முன்வைப்பதை அமெரிக்கா புரிந்துகொண்டு ஆதரிக்கிறது. ஆனால் 25 ஆண்டுகால தேசிய இனப் பிரச்சனைக்கு தேசிய அளவிலான ஒருமித்த கருத்தை உருவாக்க முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நி…
-
- 4 replies
- 1.7k views
-
-
மகிந்தவின் கொழும்பு நடவடிக்கையில் கேள்விக்குறியாகிப் போன இளம் பெண்ணின் எதிர்காலம் [வெள்ளிக்கிழமை, 8 யூன் 2007, 10:09 ஈழம்] [ப.தயாளினி] சிறிலங்காவின் கொழும்பு நகரில் மகிந்த மேற்கொண்ட தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றும் நடவடிக்கையினால் திருமணத்துக்கு காத்திருந்த இளம்பெண்ணின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டது. யாழ். கரவெட்டியைச் சேர்ந்த சரஸ்வதி அம்மாள் மற்றும் அவரது 23 வயது மகள் தர்சனி செல்வம் ஆகியோர் வெள்ளவத்தை விடுதியில் தங்கியிருந்தனர். தனது கணவர் மறைந்ததையடுத்து கரவெட்டியில் உள்ள தங்கள் வீட்டை அடமானம் வைத்து பணம் பெற்றுக் கொண்டு கொழும்பில் தங்கியிருந்து, மகள் தர்சனியின் திருமணத்துக்கான ஏற்பாடுகளை சரஸ்வதி அம்மாள் செய்து வந்தார். லண்டனில் உள்ள ஒருவரைத் …
-
- 3 replies
- 2k views
-
-
சிறீலங்கா உயர்நீதிமன்றம் பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை இடைநிறுத்த உத்தரவு. சிறீலங்கா உயர்நீதிமன்றம் கொழும்பு தங்ககங்களில் இருந்து பொதுமக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை தற்காலிகமாக இடைநிறுத்த சிறீலங்காவின் காவல்துறை மா அதிபர் விக்ரர் பெரேராவிற்கும் அவரது திணைக்களத்திற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இவ் உயர் நீதிமன்ற இடைநிறுத்தத்தினை மாற்றுக்கொள்ளைகளுக்கான மையத்தின் நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபர் பாக்கியசோதி சரவணமுத்து அவர்கள் பெற்றுக்கொண்டுள்ளார். -Pathivu-
-
- 8 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சியில் இலங்கை விமானப்படை விமானங்கள் தாக்குதல். இன்று இலங்கை விமானப்படையின் ஐந்து விமானங்கள் கிளிநொச்சியை அண்டிய பகுதியில் குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்தியுள்ளன. SLAF bombs Kilinochchi suburbs, normalcy disturbed Five bombers of the Sri Lanka Air Force flew at low altitude Friday morning and bombed southern suburbs of Ki'linochchi town. The first air raid took place at 7:40 a.m. when children were on their way to schools. Tension prevailed in the town and normalcy was disturbed. Later, the bombers returned around 12:20 p.m. to bomb the same area. No casualties were reported in the air attacks. Tension prevailed in the town. Peopl…
-
- 1 reply
- 1.1k views
-