Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழ்மொழியை அரச சேவையில் முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் உக்கிரமடைந்துள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது இலகுவாக இருக்கும் வீரகேசரி நாளேடு அரச சேவையில் தமிழ்மொழியை முழுமையாகப் பயன்படுத்துவதன் மூலம் நாட்டில் உக்கிரமடைந்துள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இலகுவாக இருக்கும் என்று அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான ராஜா கொல்லுரே தெரிவித்தார். நாட்டில் இனப்பிரச்சினை ஏற்படுவதற்கு மொழியே அடிப்படையாக அமைந்தது. எனவே, அரசகரும மொழிகளின் பயன்பாட்டை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். அரசகரும மொழிகள் கொள்கையை செயற்படுத்தும் பொருட்டு அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் 20…

  2. வெள்ளி 11-05-2007 04:51 மணி தமிழீழம் [சிறீதரன்] கடந்த நான்கு மாதத்தில் 80 பேர் கடத்தல் இந்த வருடம் கடந்த நான்கு மாதத்தில் மனித உரிமைகள் ஆணையகத்தின் தகவலின்படி ஜனவரி மாதத்தில் 20 பேரும் பெப்ரவரி மாதத்தில் 8 பேரும் மார்ச் மாதத்தில் 33 பேரும் ஏப்ரல் மாதத்தில் 19 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதேவேளை யாழ் சிறைச்சாலையில் உயிருக்கு அஞ்சி தஞ்சம் கோரி 72 பேர் உள்ளதாகவும் தெரியவருகிறது. யாழ்பாணத்தில் அமெரிக்க தூதுவர் றிச்சாட் பௌச்சர் விஜயம் செய்தபோது இதுதொடர்பில் அவர்களது தாய்மார் கோரிக்கைவிடுத்துள்ளதாக தெரியவருகிறது. யாழ்ப்பாண மனித உரிமைகள் ஆணையகம் இவ்வாறு பலவந்தமாக ஆட்கடத்தலுக்கு உட்படுத்துவதற்கு புள்ளிவிபரங்களை திரட்டுதல் போன்றவை தவிர எது…

  3. 28 வருடங்கள் கழிந்தும் எத்தரப்பும் வெற்றி பெற முடியாமலிருக்கும் யுத்தம் [11 - May - 2007] * ஐ.தே.க. எம்.பி. சரத் ரணவக்க இலங்கையில் யுத்தம் ஆரம்பித்து 28 வருடங்கள் நிறைவடைந்துள்ளபோதும் எத் தரப்பும் அதில் வெற்றி பெற முடியவில்லையென ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்; "இலங்கையில் யுத்தம் ஆரம்பித்து 28 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், யுத்தத்தில் இதுவரை வெற்றி பெற முடியவில்லை. தற்போது யுத்தம் சில வருடங்களாகவே நடைபெறுகின்றதென்ற போலியான தோற்றப்பாட்டை உருவாக்க சிலர் முற்படுகின்…

    • 2 replies
    • 1.7k views
  4. நிதி சேகரிப்பை தடுக்குமாறு சர்வதேசத்திடம் கோருவோரே புலிகளுக்கு இரகசியமாக உதவி [11 - May - 2007] * சாடுகிறது ஐ.தே.க. - எம்.ஏ.எம்.நிலாம் - சர்வதேச சமூகம் அரசு மீது நம்பிக்கை இழந்திருப்பதாகவும் மனித உரிமை மீறல் விவகாரத்தில் அரசு- புலிகள் இருதரப்பினர் மீதும் சர்வதேசம் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஐக்கிய தேசியக்கட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மீது ஆளும் தரப்பினரே குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ள நிலையில் அவற்றை மூடி மறைப்பதிலேயே அரசு தீவிரம் காட்டி வருவதாகவும் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளித்த ஐக்கிய தேசியக் கட்சி ஊடகப் பேச்சாளரான பாராளுமன்ற உறுப்பின…

    • 3 replies
    • 2.4k views
  5. ஐ.தே.க. வெளியிடும் கவலை கடந்த ஒன்றரை வருட காலத்துக்குள் விடுதலைப் புலி களின் இராணுவப் பலத்தைப் பெரிதும் உடைத்துவிட்டோம் என்று இலங்கை அரசு மார்தட்டி மேற்கொண்ட பிரசாரத்தின தும், அதற்கு ஒத்து ஊதிய தென்னிலங்கை ஊடகங்களின தும் குட்டைப் போட்டுடைத்திருக்கின்றது ஐக்கிய தேசியக் கட்சி. நாட்டின் நிலைமை குறித்து அக்கட்சி நேற்றுமுன்தினம் வெளியிட்ட பகிரங்க அறிக்கையிலேயே இவ்விடயம் தெரி விக்கப்பட்டிருக்கின்றது. ""ஒவ்வொரு இராணுவ நடவடிக்கையின் பின்னரும் புலிகளின் இராணுவ வலிமை முடிவுற்று விட்டதாகப் பாது காப்பு அமைச்சும் ஊடகங்களும் நாட்டுக்கு அறிவித்து வந் தன. ஆனால் இன்று புலிகளின் இராணுவ வலிமை பாது காப்பாக உடையாமல் இருப்பது மட்டுமல்ல, உலகில் தனியான விமானப்படையைக் கொண்ட ஒரே பயங்கர வ…

  6. சிறீலங்காவில் மனித உரிமைகள் மோசமாக மீறப்படுவதாகவும் ஆட்கள் கடத்தப்படுதல் கொலைகள் மற்றும் சட்டவிரோத ஆயுதக்குழுக்களை அரசு இயக்குதல் என்று அரசு தரப்பு மனித உரிமை மீறல்கள் தீவிரமடைந்துள்ளதைக் கண்டித்து அதை நிறுத்த அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் நிலைமை சீரடையும் வரை சிறீலங்காவுக்கான நிதி உதவிகளின் குறித்த அளவை நிறுத்தப் போவதாகவும் அமெரிக்கா எச்சரித்துள்ளது..! அமெரிக்க சிறப்புத் தூதரின் செய்தியாளர் மகாநாட்டில் இவ் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆதாரம் skynews.

  7. வான்புலிகளைச் சமாளிக்க வாடகை மிக் - 29 ரக வானூர்தி வான் புலிகளின் தாக்குதல்களால் சிறிலங்காவில் உருவாகியிருக்கும் அச்சுறுத்தலைச் சமாளிப்பதற்காக மிக் - 29 ரக வானூர்தி ஒன்றை சிறிலங்கா வான்படை அவசரமாக வாடகைக்குப் பெற்றுக்கொள்ளவிருக்கின்றது. உக்ரேனிலிருந்து அதிநவீன மிக்-29 ரக வானூர்திகள் சிலவற்றைக் கொள்வனவு செய்வதற்கான முயற்சிகளை அரசாங்கம் மேற்கொண்டிருக்கின்ற போதிலும், அவற்றைப் பெற்றுக்கொள்வதில் காலதாமதம் ஏற்படும் என்பதால்தான் அவசரமாக வாடகைக்கு மிக்-29 ரக வானூர்தி ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் இப்போது இறங்கியிருக்கின்றது. மிக்-29 ரக வானூர்திகளைச் செலுத்துவதில் சிறிலங்கா வான்படையினருக்கு அனுபவம் இல்லாமையால், உக்ரேனிலிருந்து வானோடி…

    • 4 replies
    • 2k views
  8. பிரித்தானியா நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் - இன்று லண்டன் தூதரகத்தில் ஆலோசனை சிறீலங்கா விடயங்களில் பிரித்தானியா தலையிடுவது தொடர்பாக லன்டனிலுள்ள சிறீலங்கா தூதரகத்தில் இன்று ஆலோசனை நடத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற விவாதத்தினால் கலக்கமடைந்துள்ள சிறீலங்கா அரசு, பிரித்தானியாவிலுள்ள சிங்கள, மற்றும் தேசவிரோத தமிழ் சக்திகள் மூலம் பிரித்தானிய அரசிற்கு அழுத்தம் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகின்றது. இது பற்றியும் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடப்பட இருக்கின்றது. தம…

    • 0 replies
    • 891 views
  9. சிறிலங்கா அரசிற்கு கடுமையான செய்திகளை வழங்கியிருக்கும் பௌச்சர் சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுக்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி, மனித உரிமைகளை மேம்படுத்துவதுடன் ஊடக சுதந்திரத்தையும் உறுதி செய்யும் படி அமெரிக்காவின் பிரதி வெளியுறவுச் செயலாளர் ரிச்சர்ட் பௌச்சர் சிறிலங்கா அரசாங்கத்துக்கு கடுமையான வேண்டுகோளை விடுத்துள்ளார். இலங்கைக்கான தனது மூன்று நாள் பயணத்தின் முடிவின் போது ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் தெரிவித்துள்ளதாவது: இலங்கையில் இடம்பெற்று வரும் சம்பவங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது. நான் அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் கொண்டலீசா றைஸ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இலங்கை தொடர்பாக தொடர்ச்சியான சந்திப்பு…

    • 4 replies
    • 1.6k views
  10. ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்கள் யார் என்று எம்மால் கூற முடியாது; ஆனால் தற்போது குறைந்துள்ளது ஆட்களை கடத்துபவர்கள் யார் என்று எங்களால் கூறமுடியாது. ஆனாலும் கடந்த ஒரு மாதகாலமாக காணாமல் போதல் மற்றும் ஆட்கடத்தல் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண சபையில் தெரிவித்தார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்: ஆட்கடத்தல், காணாமல் போதல் மற்றும் இடம்பெயர்வுகள் தொடர்பாக நாங்கள் கவலைப்படுகின்றோம். இருந்தாலும் ஆட்கடத்தல் கடந்த மாதம் குறைவடைந்துள்ளது. அரசாங்கம் மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. ஆட்களை யார் கடத்துகின்றனர் என்று எங்களினால் கூறமுடியாது. ஐக்கிய தேசியக…

    • 7 replies
    • 1.7k views
  11. வெள்ளி 11-05-2007 02:44 மணி தமிழீழம் [தாயகன்] அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு - மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் சிறீலங்காவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அமைத்தல் அவசியம் என, நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சிறீலங்கா அரசுத் தலைவருடனான சந்திப்பில், அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு அவசியத்தை வலியுறுத்துமாறும், றிச்சட் பௌச்சரிடம் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் ஏற்கனவே கேட்டிருந்தது. அமெரிக்காவின் மத்திய-தெற்காசிய இராஜாங்க அமைச்சின் உதவிச் செயலாளர் றிச்சட் பௌச்சரின் சிறீலங்காவிற்கான பயணத்தின் ஊடாக மனித உரிமை விடய…

  12. சம உரிமை, சுயநிர்ணயம் என்பன தீர்வுக்கான அடித்தளம்: அமெரிக்காவிடம் யாழ் ஆயர் தெரிவிப்பு யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை சென்றிருந்த அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சருடன் யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பில் யாழ். ஆயர் தோமஸ் செந்தரநாயகம் ஆண்டகையும் கலந்து கொண்டார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கும் கலந்து கொண்டார். இச்சந்திப்பு தொடர்பாக யாழ். ஆயர் இல்லத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை: இலங்கை இனப்பிரச்சனை தீர்வுக்கான ஒரு பொதியாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியால் வெளியிடப்பட்ட திட்டம், தமிழர்களின் நியாயமான அபிலாசைகள் எதனையும…

    • 0 replies
    • 845 views
  13. வியாழன் 10-05-2007 19:07 மணி தமிழீழம் [செந்தமிழ்] முல்லைதீவில் பகுதியில் வான்வெளித் தாக்குதல்கள் அண்மைக்காலமாக சிறீலங்கா வான்படைகளின் தாக்குதல்கள் குறைவடைந்த நிலையில் இன்று காலை 8.30 மணியளவில் சிறீலங்கா வான்படைகளுக்குச் சொந்தமான மிக்-27 மிகையொலி விமானங்கள் முல்லைத்தீவில் மக்கள் குடியிருப்புக்களை மையப்படுத்தி வான் தாக்குதலை நடத்தியுள்ளன. மிக உயரத்தில் பறப்புக்களை மேற்கொண்டவாறு தாக்குதுலை நடத்திவிட்டு சென்றன. இதன் போது ஏற்பட்ட தேசவிபரங்கள் தெரியவரவில்லை. நன்றி - பதிவு

  14. சுட்டது புதினம் சம உரிமை, சுயநிர்ணயம் என்பன தீர்வுக்கான அடித்தளம்: அமெரிக்காவிடம் யாழ் ஆயர் தெரிவிப்பு [வியாழக்கிழமை, 10 மே 2007, 21:26 ஈழம்] [காவலூர் சங்கீதன்] யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை சென்றிருந்த அமெரிக்காவின் வெளிவிவகார அமைச்சின் உதவிச் செயலாளர் ரிச்சர்ட் பெளச்சருடன் யாழ். பொது நூலகத்தில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பில் யாழ். ஆயர் தோமஸ் செந்தரநாயகம் ஆண்டகையும் கலந்து கொண்டார். நேற்று பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்ற இச்சந்திப்பில் சிறிலங்காவிற்கான அமெரிக்கத் தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக்கும் கலந்து கொண்டார். இச்சந்திப்பு தொடர்பாக யாழ். ஆயர் இல்லத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கை: இலங்கை இனப்பிரச்சனை தீர்வுக்கான ஒரு பொதியாக, சிறிலங்கா சுதந்த…

  15. சிங்கள நாட்டின் மிச்சம் மீதியையும் பிடுங்கிச் செல்லப்போகும் மஹிந்த குடும்பம் -குயின்ரஸ் துரைசிங்கம் (கனடா)- கானமயில் ஆடக் கண்டிருந்த வான்கோழி, தன் சிறகையும் விரித்தாடி, தானும் மயில் என்று கற்பனையில் மகிழ்வடைந்த இலக்கியக் கதைபோல், இலங்கையை ஒரு இஸ்ரேல் நாடு என்று கற்பனை பண்ணிக்கொண்டு, தன்னை பிறிதொரு துட்டகைமுனு என்று தானே புகழ்பாடிக்கொண்டு, எழுந்தமானத்திற்கு தமிழர் தாயகத்தைத் துவம்சம் பண்ணப் புறப்பட்ட மகிந்த ராஜபக்ஷவும் அவரது குடும்ப சோதரர்களும், கனவு கலைந்து நிஜவுலகிற்குள் இடது காலை எடுத்து வைத்திருக்கிறார்கள். தமிழினத்தையும் தமிழ் மண்ணையும் தமிழ் நாகரீகத்தையும் தமிழ் விழுமியங்களையும் மட்டுமல்லாது, தமிழ் உணர்வுகளையும் தமிழரிடமிருந்து அப்புறப்படுத்தி, …

    • 1 reply
    • 1.5k views
  16. சிறிலங்கா நாடாளுமன்றத்திலிருந்து நா.உ. கஜேந்திரன் வெளியேற்றப்பட்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சிறிலங்கா நாடாளுமன்ற கூட்டத் தொடரிலிருந்து சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொக்கு பண்டாராவினால் வெளியேற்றப்பட்டார். நேற்று நாடாளுமன்றத்தில் விடுதலைப் புலிகளின் வான்தாக்குதல் தொடர்பாக கஜேந்திரன் ஆற்றிய உரை நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. கஜேந்திரனின் உரையை ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கடுமையாக எதிர்த்திருந்தார். கஜேந்திரனின் உரையானது நாட்டின் 6 ஆவது யாப்பு விதிகளை மீறியுள்ளதாக கூறிய சபாநாயகர், கஜேந்திரனை சபையிலிருந்து வெளியேற்றினார். ஜே.வி.பியின…

    • 8 replies
    • 2.1k views
  17. கொழும்பு சிறைச்சாலையில் தமிழகத்தைச் சேர்ந்த ஐவர் உண்ணாவிரதம் [வியாழக்கிழமை, 10 மே 2007, 19:01 ஈழம்] [க.நித்தியா] சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தமிழகத்தைச் சேர்ந்து ஐவர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். மன்னார் கடற்பரப்பில் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டு, தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த திங்கட்கிழமை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள இவர்கள், உடனடியாக தம்மை விடுதலை செய்யக்கோரியும், தமது நிலை குறித்து தமிழக அரசு கவனம் செலுத்த வலிறுத்தியுமே இப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். தமிழகம், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த றீகன், யாக்ரூப், சுரேஸ், இராமகிருஸ்ண் ஆகியோருட…

  18. வியாழன் 10-05-2007 16:35 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழீழ சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச் சபையின் அவரச வேண்டுகோள் சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச் சபை தமிழீழம் அவரச வேண்டுகோள் வன்னிப் பெருநிலப்பரப்பினுள் விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து கொண்ட வயது குறைந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கு 2006 ஆம் ஆண்டு சனவரி மாதம் அமுலுக்கு வந்த தமிழீழச் சிறுவர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைப்படுத்துவதைச் சிறுவர் பாதுகாப்பு வழங்குரிமைச் சபை கண்காணித்து வருகின்றது. இதனுடைய முக்கிய பணியாக வயது குறைந்த சிறுவர்களை விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கி மீளவும் அவர்களை குடும்பத்துடன் இணைந்து வருகின்றது. இதன் அடிப்படையில் 1990 ஆம் ஆண்டிலிலும் அதற்குப் பின்பு பிறந்…

  19. மனித உரிமை மீறல்களை நிறுத்த வெளிநாடுகள் அக்கறையுடன் உதவ வேண்டும் பொது அமைப்புகள் பௌச்சரிடம் வலியுறுத்து யாழ்ப்பாணம்,மே 10 குடாநாட்டில் மோசமடைந்துள்ள கடத்தல், கொலைகள், கைதுகள் போன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை நிறுத்த வெளிநாடுகள் அக்கறையுடன் உதவ வேண்டும் என்று பொது அமைப்பு கள் வலியுறுத்தியுள்ளன. யாழ்ப்பாணத்துக்கு நேற்று ஒரு நாள் விஜயம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் றிச்சர்ட் பௌசருடன் நேற்று நடைபெற்ற சந்திப்பில் மேற்கண்டவாறு பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். யாழ். பஸ்ரியன் ஹோட்டலில் நடந்த இச் சந்திப்பில் பொது அமைப்புப் பிரதிநிதிகள் வலியுறுத்திய முக்கிய விடயங்கள் வருமாறு: * குடாநாட்டில் ஊரடங்கு நேரத்தில் வீடுகளுக்குள் புகுந்த…

  20. துணிவிருந்தால் வெளியே வந்து வாழ்த்தட்டும் பார்க்கலாம்: பிக்கு சவால்! கொழும்பு, மே 10 புலிகளின் வான்படைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் நாடாளுமன்றில் வாழ்த்துக் கூறியமைக்காக அவரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் வண. எல்லாவெல மேதானந்த தேரர் நேற்று நாடாளுமன்றில் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார். முடிந்தால் இதே வார்த்தையை நாடாளுமன்றத்திற்கு வெளியே வந்து சொல்லட்டும் பார்க்கலாம் என்றும் அவர் கஜேந்திரனுக்கு சவால் விட்டார். நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தேரர் மேலும் கூறியதாவது: பயங்கரவாதியான த…

    • 18 replies
    • 4.6k views
  21. யாழ். எம்.பி. கஜேந்திரனை கைது செய்யவேண்டும் ஜாதிக ஹெல உறுமய [Thursday May 10 2007 01:27:12 AM GMT] [virakesari.lk] தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செல்வராஜா கஜேந்திரனை கைது செய்யுமாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் எம்.பியுமான எல்லாவல மேதானந்த தேரர் சபையில் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.எல்லாவல மேதானந்த தேரர் உரையாற்றுவதற்கு முன்பாக கஜேந்திரன் எம்.பி உரையாற்றினார். அவர் தமதுரையில், தரைப்படை, கடற்படை, விமானப்படை என முப்படைகளும் புலிகளிடம் இருக்கின்றன. அந்தப் படைகள் எமது மக்களின் உரிமைகளுக்காகவும், எதி…

  22. யாழ். மாணவர்களின் பிரச்சினைகளை நன்கறிவேன்'' யாழ்ப்பாணம், மே 10 ""யாழ்.மாவட்ட மாணவர்கள் கல்வியைத் தொடர்வதில் உள்ள பிரச்சினைகளை நன்கு அறிவேன்.'' யாழ்.வந்த அமெரிக்க ராஜாங்க அமைச் சர் றிச்சார்ட் பௌச்சர் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.பொது நூலகத்தில் நேற்று நடைபெற்ற ஆங்கில ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பில் பேசுகையில் இவ்வாறு கூறினார். யு.எஸ்.எயிட் நிறுவன உதவியுடன் நடத்தப்பட்டு வரும் இப் பயிற்சி வகுப்பில் பேசுகையில் அவர் மேலும் கூறியதாவது: யாழ்.மக்களின் துன்பதுயரங்களை நான் நன்கு அறிந்துள்ளேன். மாணவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், மாணவர்கள் கல்வியைத் தொடர் வதில் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளை யும் நன்கு அறிந்துள்ளேன் என்றும் அவர் சொன்னார் uthayan

  23. கொழும்பு ஊர்வலத்தில் ஜே.வி.பி – பொலிஸார் இடையே முறுகல். Written by Ellalan - May 10, 2007 at 10:09 AM கிளிநொச்சி சென்று விடுதலைப் புலிகளை சந்திக்க விரும்பும் பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கு அவருடைய அலுவலக வாசலில் வந்து காத்திருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்திக்க முடியாமல் போனது கண்டனத்துக்குரியது என ஜே. வி. பி.யின் விமல் வீரவன்ச தெரிவிதிருக்கின்றார். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் சிறிலங்கா அரசுக்கு எதிராக தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தும் பிரித்தானிய நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாக குற்றஞ்சாட்டியும் ஜே. வி. பி. யினர் நேற்று பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது த…

  24. தோல்வியுற்ற நாடுகளின் பட்டியலில் முதன்மை இடம் இலங்கைக்கே! ` போரழிவுகளினாலும், ஆழிப்பேரலை, மழை, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றத்தின் பேரழிவுகளினாலும் அல் லாடும் இலங்கைத் தீவை, பொருளாதாரச் சீரழிவு என்ற மற்று மொரு நெருக்கடி மோசமாகத் தாக்கி முடக்கும் ஏதுநிலைகள் தென்படுகின்றன. நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்திருப்பதாக அரசியல் தலைவர்களும், அவர்களுக் குச் சார்பான புள்ளி விவரங்களை அள்ளி வெளியிடும் மேல் மட்ட அதிகார வர்க்கத்தினரும் வாய்வீச்சாக அறிவித்தாலும் கூட, களத்தில் என்னவோ மக்களின் பாடு திண்டாட்டமாகத் தான் இருக்கின்றது. வடக்கு , கிழக்கை தமிழர் தாயகத்தை பொறுத்தவரை போரழிவு மற்றும் ஆழிப்பேரலைப் பேரழிவுகளிலிருந்து அப் பகுதி மக்கள் இன்…

    • 5 replies
    • 2.7k views
  25. விடுதலைப் புலிகளை பலப்படுத்தி வரும் ராஜபக்ச குடும்பம்: ஐ.தே.க. [வியாழக்கிழமை, 10 மே 2007, 06:36 ஈழம்] [அ.அருணாசலம்] எந்தவொரு உருப்படியான இராணுவ திட்டங்கள் இல்லாமலும், உயர் இராணுவ அதிகாரிகளின் ஆலோசனைகளைப் பெறாமலும் மகிந்த அரசாங்கம், போரை நடத்தி வருவதுடன், ராஜபக்ச குடும்பம் விடுதலைப் புலிகளை பலப்படுத்தி வருகின்றது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தை குற்றம் சாட்டியுள்ளது. இது தொடர்பில் அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகளை ராஜபக்ச குடும்பம் பலப்படுத்தி வருவதுடன் பேச்சுவார்த்தை மேசையில் அரசாங்கம், பலவீனப்பட்டும் வருகின்றது. 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அரச தலைவர் தேர்தலின் போது விடுதலைப் புலிகள் மக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.