ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143516 topics in this forum
-
திருகோணமலை தம்பலகாமம் பகுதி யில் இனந்தெரியாத ஆயுததாரிகளால் வர்த் தகர் ஒருவர் நேற்று சுட்டுக்கொல்லப்பட் டார். நேற்றுப் பி.ப. 4 மணியளவில் இடம் பெற்ற இந்தச் சம்பவத்தில் அதே இடத் தைச் சேர்ந்த பரமகுரு ரமேஸ்பாபு (வயது 35) என்பவரே சுடப்பட்டார் என்று அடை யாளம் காணப்பட்டது. ----uthayan------
-
- 0 replies
- 789 views
-
-
மட்டக்களப்பு அகதி முகாமில் 31 பேர் பொலீஸாரால் கைது அவர்களில் ஒன்பது பேர் விளக்கமறியலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போர்ச்சூழல் காரண மாக இடம்பெயர்ந்து அகதி முகாம்களில் தங்கியிருந்த இரு பெண்கள் உட்பட ஒன்பதுபேர் விடுதலைப் புலி களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். களுவன்கேணியிலுள்ள அகதி முகாம்களில் நேற்று முன்தினம் படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுத லின் போது விடுதலைப் புலிகளுக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 31 பேர் கைது செய்யப்பட்டு விசா ரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர் என்று கூறப் பட்டது. தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப் பட்ட குறிப்பிட்ட 31 பேரில் இரு பெண்கள் உட்பட 9 பேர் புலிகளுடன் ஆ…
-
- 0 replies
- 563 views
-
-
[08 - ஆப்ரில் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] கடந்த இரண்டு நாட்களாக இலங்கையின் அச்சு, மின்பொறி ஊடகங்களில் பெரிதும் எடுத்துப் பேசப்படுகின்ற விடயம் இந்த ஆய்வுப் புள்ளி விபரங்களாகும். பாக்கியசோதி சரவணமுத்து அவர்களை தலைமைப் பொறுப்பாளராக கொண்டுள்ள சமூகக் குறிசுட்டி (ஸொcஇஅல் ஈன்டிcஅடொர்) எனப்படும் ஆய்வு நிறுவனம், 2007 பெப்ரவரியில் செய்த ஆய்வின் முடிவுகளென இவை தரப்பட்டுள்ளன. மே 2001 இலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் 25 ஆவது ஆய்வு முயற்சி இதுவாகும். சமாதான முறைவழி பற்றி அரசாங்கம் பொருத்தமான கொள் நெறியை உருவாக்கும் பொழுது இப்புள்ளி விபரங்கள் பயன்படும் என்பது ஆய்வாளர்களின் நோக்கமாகும். வெளிவந்திருக்கும் இந்த அறிக்கை மிக முக்கியமான ஒரு சூழலிலே வெளிவந்துள்ளது. யுத்த…
-
- 1 reply
- 1.5k views
-
-
அன்றூ இராசையா Tகுர்ச்டய், 05 ஆப்ரில் 2007 கடந்த 2001 ஆம் ஆண்டு, விடுதலைப்புலிகளின் படையணிகளின் பாரிய தாக்குதலுக்கு உள்ளான ஸ்ரீலங்கா விமானப்படைத் தளத்தாக்குதல் - யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கும், சமாதானப் பேச்சுவார்த்தைக்கும் அடித்தளம் ஒன்றை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், ஆறு வருடங்கள் கடந்த நிலையில் விடுதலைப்புலிகளின் வானோடிகள் முதன்முதலாக மீண்டும் நீர்கொழும்பு - கட்டுநாயக்காவில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா விமானப்படையின் பிரதான தளத்திற்கு மூன்று குண்டுகளை விழுத்தியதன் மூலம் புதியதொரு செய்தியை ஸ்ரீலங்கா அரசுக்கும், சர்வதேசத்திற்கும் தெரியப்படுத்தியுள்ளனர். ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் உத்தியோகப் பற்றற்ற முறையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற ‘ஈழப்…
-
- 0 replies
- 871 views
-
-
: நந்தன குணதிலக்க [ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2007, 05:20 ஈழம்] [க.திருக்குமார்] ஜே.வி.பி கட்சியின் உண்மையான தலைவரான குமார மாத்தையா (குமார் ஐயா) என்று அழைக்கப்படும் கே.குணரட்ணத்தை சிறிலங்காவின் தேசிய புலனாய்வுத் துறைக்கு காட்டிக்கொடுக்கவில்லை என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய குழு உறுப்பினருமான நந்தன குணதிலக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: "கட்சியில் குமார் ஐயாவின் உண்மையான அடையாளத்தை நான் காட்டிக் கொடுக்கவில்லை. நான் தான் காட்டிக் கொடுத்ததாக கட்சியின் பிரச்சார செயலாளர் விமல் வீரவன்சவே குற்றம் சாட்டியுள்ளார். எனக்கும் குமார் ஐயாவிற்கும் கருத்து வேறுபாடுகள் தோன்றியதுண்டு. எனினும் அவர் கட்சியி…
-
- 0 replies
- 907 views
-
-
திங்கள் 09-04-2007 03:07 மணி தமிழீழம் [மோகன்] கடவத்தை, பேலியகொட பகுதியில் இரு இளைஞர்கள் காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள் கடந்த புதன் கிழமை கடவத்தை மற்றும் பேலிய கொட பகுதிகளில் இரு தமிழ் இளைஞர்கள் வெள்ளை வானில் சென்ற ஆயுததாரிகளால் கடத்தப்பட்டு காணாமல் போகடிக்கப்பட்டுள்ளார்கள். மட்டக்குழியவை சேர்ந்த 23 அகவையுடைய பத்மநாதன் பிரதீபன், வத்தளையை சேர்ந்த 24 அகவையுடைய ராமையா ஜெயகுமார் ஆகியோரே கடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதுதொடர்பில் சர்வதேச மனித உரிமைகள் ஆணையகத்திலும் காவல்நிலையத்திலும் முறையடப்பட்டுள்ளது. பிரதீபனின் பெற்றோர் கருத்துத் தெரிவிக்கையில் இவரை கடத்துவதற்கு முதல்நாள் பெலியகொட காவல்துறை சார்ஜன்ட் ஒருவர் இவர்களது வீட்டுக்கு சென்று வியாழக்கிழமை க…
-
- 0 replies
- 700 views
-
-
இராணுவ ஆட்சிமுறைப் போக்கை தொடர விரும்பும் தென்னிலங்கை ` தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீது பெரும் இராணுவ நடவடிக்கைகளைத் தொடுத்து, அவர்களைப் பலவீனப்படுத்தி, இனப்பிரச்சினைத் தீர்வுக்கான சமரச முயற்சிகளில் தமிழர் தரப்பின் பேரம் பேசும் வலுவை உடைத்து நொறுக்கிய பின்னர், தான் விரும்பிய தீர்வு ஒன்றைத் தமிழர் மீது திணிப்பதே மஹிந்த அரசின் உபாயமாகத் தோன்றுகின்றது. குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வுடன் இலங்கைத் தீவில் பௌத்த சிங்கள அரசின் மேலாண்மைப் பலத்தை நிலைநிறுத்தி, உறுதிப்படுத்தும் சிந்தனைப் போக்கில் அமைந்த இந்தப் பேரினவாதக் கருத்து நிலைப்பாடு யதார்த்தத்தில் சாத்தியமாகப்போவதில்லை என்பதைத் தென்னிலைங்கை அரசியல் பேராசிரியர் ஒருவர் "மௌபிம' சிங்களப் பத்திரிகையில் தான் வெளியிட்ட …
-
- 1 reply
- 911 views
-
-
வான் புலிகளின் அச்சுறுத்தலை அரசு எப்படி சமாளிக்கப் போகிறது? *பாதுகாப்பு நிலைவரம் -விதுரன்- வான் புலிகளின் மீள் வருகைக்காக முப்படையினரும் காத்திருக்கின்றனர். முதல் முறை வான் புலிகள் நடத்திய தாக்குதலால் அதிர்ந்து போயிருக்கும் அரசு, புலிகளின் அடுத்த வான் வழித் தாக்குதலை எப்படியாவது முறியடித்து விடவேண்டுமென்பதில் தீவிரம் காட்டுகிறது. இதற்காக, ஆயிரம் அடிக்குக் கீழ் பறக்கும் வானூர்திகளைக் கண்டுபிடிக்கும் ராடர்களை உலகெங்கும் தேடும் இலங்கை அரசு, இரவு நேரத்தில் வரும் வான் புலிகளை எதிர்கொள்ள முப்படைகளையும் தயாராக்கி வருகின்றது. வன்னியிலிருந்து வரும் விமானங்களை வான்பரப்பில் எதிர்கொள்ள முடியாவிட்டாலும் அவை வன்னிக்குத் திரும்பிச் சென்று தரையிறங்கும் போதாவது தாக்க…
-
- 4 replies
- 1.8k views
-
-
இம்சை அரசன் பிரான்ஸ்ம் 14 ஆவது சார்க் மாநாடும் -சி.இதயச்சந்திரன்- இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையோடு காலூன்றியுள்ள பிராந்திய நலன் தேடும் சக்திகள் ஒன்றுகூடுமிடமாக சார்க் மாநாடு அமைந்துள்ளது. பார்வையாளராக சீனா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டது இங்கு கவனிக்கப்பட வேண்டிய விடயமாகிறது. ஏற்கனவே சார்க் அமைப்பிலுள்ள பெரும் புள்ளிகளான இந்தியா, பாகிஸ்தானுடன் ஏனைய வல்லரசுகளும் குவிக்கப்படும் இடத்தில், பிராந்திய பயங்கரவாதத்தை முறியடிப்பது குறித்து பேசப்பட்டது இலங்கை அரசின் அடுத்த நகர்விற்கு மூலப்பொருளாக அமையும். சர்வதேசம் திணிக்க முனையும் பேச்சுவார்த்தைப் பாதையைத் திசைமாற்ற, பயங்கரவாதத்திற்கெதிரான நகர்வினை முன்னிலைப்படுத்துவதை எவ…
-
- 2 replies
- 1k views
-
-
வாகரை வெறிக்களிப்பில் வீறு நடை போடுகிறது சிங்களம் ! ஆனால் புலி பதுங்குகிறது எதற்கு ? கீழுள்ள இணைப்பை பிரதுசெய்து உங்கள் இணைய உலாவியில் புகுத்துவதன் மூலம் இதனை காணலாம் mms://hiendprsol.wmod.llnwd.net/a771/o1/ltte/wakara_sinhala.wmv
-
- 13 replies
- 4.1k views
-
-
மட்டக்களப்பில் தமிழ் மக்கள் பெருமளவில் கைது செய்யப்படுவதற்கு கடும் கண்டனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் கிராமங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள அகதி முகாம்களையும் சுற்றிவளைத்து வகைதொகையின்றியும் வயது வித்தியாசமின்றியும் படையினர் மக்களை கைது செய்வதை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி வன்மையாகக் கண்டித்துள்ளார். கடந்த வாரம் சித்தாண்டி கிராமத்தைச் சுற்றி வளைத்த படையினரும் பொலிஸாரும் 27 பேரைக் கைது செய்திருந்தனர். இக் கைதை அடுத்து ஜெயானந்தமூர்த்தி எம்.பி. எடுத்துக் கொண்ட முயற்சி காரணமாக அவர்கள் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். எனினும், இருவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, நேற்று முன்தினம் ஏறாவூர…
-
- 19 replies
- 2k views
-
-
பாக்கியசோதி சரவணமுத்து அவர்களை தலைமைப் பொறுப்பாளராக கொண்டுள்ள சமூகக் குறிசுட்டி (Social Indicator) எனப்படும் ஆய்வு நிறுவனம், 2007 பெப்ரவரியில் செய்த ஆய்வின் முடிவுகளென இவை தரப்பட்டுள்ளன. மே 2001 இலிருந்து மேற்கொள்ளப்பட்டு வரும் 25 ஆவது ஆய்வு முயற்சி இதுவாகும். சமாதான முறைவழி பற்றி அரசாங்கம் பொருத்தமான கொள் நெறியை உருவாக்கும் பொழுது இப்புள்ளி விபரங்கள் பயன்படும் என்பது ஆய்வாளர்களின் நோக்கமாகும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 17 மாவட்டங்களில் வட கிழக்கு மாவட்டங்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. (சேர்த்துக் கொள்ளப்பட்ட மாவட்டங்கள்: கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலநறுவை, பதுளை…
-
- 0 replies
- 916 views
-
-
கைப் பொம்மை கமலசபேசன் இளைப்பாறுகிறார். http://www.colombopage.com/archive_07/April7150359CH.html
-
- 16 replies
- 2.8k views
-
-
யாழில் கிளைமோர் தாக்குதல் - ஒரு இராணுவம் பலி – 6பேர் காயம் யாழ்நகருக்கு வடமேற்காக 12 கிலோமீற்றர் தொலைவில் பண்டத்தரிப்பு வலிகாமம் பகுதியில் சிறீலங்கா இராணுவத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் ஒரு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டும் மற்றும் ஆறு சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாகவும் தெரியவருகிறது. காயமடைந்த இராணுவத்தினருள் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது. இருவர் சிறுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரியவருகிறது. அச் சம்பவம் பண்டத்தரிப்பு இந்துக்கல்லூரிக்கு அண்மையில் காலை 11.45மணியளவில் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. pathivu.com
-
- 0 replies
- 881 views
-
-
மறுபக்கம் விடுதலைப்புலிகளின் விமானத் தாக்குதல் அதன் உண்மையான பெறுமதியை விட பெரிய சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறதாகவே நான் நினைக்கிறேன். அதுபோல் இன்னொரு தாக்குதலைக் குறுகிய காலத்தில் ஒரு முக்கிய இராணுவ இலக்கின் மீது தொடுக்க இயலுமா என்பது மிகவும் ஐயத்துக்குரியது. எனினும், அரசாங்கத்தின் தயார் நிலை பற்றிய கேள்விகளை அத் தாக்குதல் எழுப்பியுள்ளது. அரசாங்கத்தால் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இயலவில்லை என்று யூ.என்.பி. தலைமை குற்றச்சாட்டுகளை அடுக்குகிறது. மறுபுறம், யூ.என்.பி. செய்துகொண்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் விளைவாகவே விடுதலைப்புலிகளால் ஒரு விமான ஓடுபாதையை நிர்மாணிக்கவும் விமானங்களைக் கொள்வனவு செய்யவும் இயலுமாயிருந்தது என்று அரசாங்கத் தரப்பிலிருந்து குற்றஞ்சுமத்த…
-
- 1 reply
- 1k views
-
-
ஈரம் கசியும் கண்களுடன் ஈழத்தமிழ் அகதிகள்... விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் சிங்கள ராணுவத்தை சின்னா பின்னமாக்கியிருந்தாலும், எதிர்த் தாக்குதலால் பல தமிழ்க் குடும்பங்கள் பரிதாபகர மாகப் பாதிக்கப்பட்டிருப்பது மறக்கமுடியாத சோகம். ‘ஒண்ணு, சாகணும்; இல்ல, சாவோட பயமில்லாம வாழணும். அதுக்கு ஒரே வழி உயிரைப் பணயம் வைத்தாவது தமிழ் நாட்டுக்குப் போறதுதான்’னு பல இலங்கைத் தமிழ் குடும்பங்கள் கடந்த சில தினங்களாக வந்த வண்ணம் உள்ளனர். சாவின் விளிம்புவரை சென்று; உடன்வந்தவர்கள் ஒரு சிலரை காவு கொடுத்துக் கடைசியாக கரை சேர்ந்த அவர்களின் கதை கேட்கவே நடுக்கமாக இருக்கிறது. கடந்த வாரம் இரண்டு அகதிகளை நடுக்கடல் திட்டில் பார்த்த தமிழக மீனவர்கள், பரிதாபப்பட்டு படகில் ஏற்றிக்கொண்டு…
-
- 0 replies
- 851 views
-
-
சார்க் உச்சிமாநாடும் பயங்கரவாத ஒழிப்பும் கடந்த 3 ஆம், 4 ஆம் திகதிகளில் இந்தியத் தலைநகர் புதுடில்லியில் தெற்காசிய நாடுகளின் பிராந்திய ஒத்துழைப்பிற்கான (சார்க்) அமைப்பின் 14 ஆவது உச்சி மகாநாடு நடைபெற்றது. ஏற்கனவே, உள்ள ஏழு நாடுகளுடன் இம்முறை எட்டாவது நாடாக ஆப்கானிஸ்தான் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. எட்டு நாடுகளின் தலைவர்களும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி கைகோர்த்து நின்ற போதிலும் இந்நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும் பிரச்சினைகளும் அவநம்பிக்கைகளும் ஒவ்வொருவரிடமும் உறைந்திருப்பதை நிராகரிக்க முடியாது. அதன் காரணமாகவே சார்க் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு இருபத்திரண்டு வருடங்கள் கடந்த நிலையிலும் எந்தவொரு பலாபலனையும் எட்ட முடியவில்லை என்பது யதார்த்தமாகும். இவ்வேளை, சா…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவளித்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் எஞ்சிய 17 பேரையும் தக்க வைப்பதற்கு ஒவ்வொருவருக்கும் தலா 50 மில்லியன் ரூபாய்களை அன்பளிப்பாக வழங்க அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்ச கடந்த வாரம் உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த வாரம் ஏப்பிரல் 3 ஆம் நாள் அரசாங்கத்துக்கு ஆதரவு அளித்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களில் தொடரூந்து போக்குவரத்து பிரதி அமைச்சர் எட்வேட் குணசேகர மீண்டும் தனது கட்சிக்கு தாவியதை தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களை சந்தித்த பசில் ராஜபக்ச, இந்த உடன்பாட்டை ஏற்படுத்தியதாக கூறப்படுகின்றது. இந்த 50 மில்லியன் ரூபாய்கள் அன்பளிப்பு ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து அரசா…
-
- 2 replies
- 988 views
-
-
பேலியகொடை, கடவத்தை பகுதிகளில் 2 தமிழ் இளைஞர் கடத்தப்பட்டனர் பேலியகொடை மற்றும் கடவத்தை பகுதிகளில் கடந்த புதன்கிழமை இரு தமிழ் இளைஞர்கள் வெள்ளை வான்களில் வந்தோரால் கடத்தப்பட்டது தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. மட்டக்குளியை பிறப்பிடமாகவும் பேலியகொடையை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் பிரதீபன் (23 வயது) என்பவரும், கெலாபோக்கை, கரச்சா மலைத் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும் வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டவருமான இராமையா ஜெயகாந்தன் (24 வயது) ஆகிய இருவருமே வெள்ளை வான்களில் கடத்தப்பட்டுள்ளனர். பிரதீபன் பேலியகொடை சந்தியில் வைத்து தாக்கப்பட்ட பின் கடத்தப்பட்டதாகவும், ஜெயகாந்தன் கண்டி பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த போது கடவத்தை சந்தியில் வைத்து வெள்ளை வானில் வந்தவ…
-
- 0 replies
- 594 views
-
-
காணாமல்போனோர் மாநாட்டில் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு A] கடத்தப்பட்டு காணாமல்போனோரின் குடும்பத்தவர்களின் மாநாட்டை நாளை திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை இலக்கம் 146, கதிரேசன் வீதி வீரமைலன் மண்டபத்தில் நடாத்துவதற்கு மக்கள் கண்காணிப்புக்குழு தீர்மானித்துள்ளது என இக்குழுவின் ஏற்பாட்டாளரும் மேலக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; காணாமல்போனோரின் குடும்ப அங்கத்தவர்கள் மற்றும் நண்பர்களை ஒன்று கூட்டி இந்த பாரிய மனித அவலம் தொடர்பிலான சர்வதேசியத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக இம்மாநாடு நடத்தப்படுகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் ரணில…
-
- 0 replies
- 624 views
-
-
யுத்த அவலத்தில் வாழும் நமது சகோதரர்களுக்கு சமாதான சூழலில்தான் விடியல் பிறக்கவேண்டும் இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவை கிறிஸ்தவ உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், கிறிஸ்துவின் உயிர்ப்பு தரும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அனைவருக்கும் கிடைக்க வேண்டுமென வாழ்த்துகிறோம். என திருகோணமலை - மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் அதி வண.கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்டகை விடுத்துள்ள ஈஸ்டர் செய்தியில் தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச்செய்தியில் ஆயர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. மனித வாழ்வில் ஏற்படுகின்ற ஈடுசெய்ய முடியாத சோகம் சாவு; அதுவே வாழ்வில் முடிவு என்ற எண்ணமே இதற்கு காரணம். அந்தச் சாவையே வென்று கிறிஸ்து உயிர்ப்பு அடைந்தார் என்ற செய்தி முழு உலகுக்கும் நம்பிக்கை தரு…
-
- 0 replies
- 668 views
-
-
புலிகளின் வான் வழித் தாக்குதலின் எதிரொலி இந்திய கடற்படை துவக்கு சூட்டுப் பயிற்சியில் தீவிரம் இலங்கையில் விடுதலைப்புலிகள் வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இராமேஸ்வரத்தில் இந்திய கடற்படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளனர். இராமநாதபுர மாவட்டம் இராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை பிரிவு அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மூலம் கடல்வழிப் பாதை கண்காணிக்கப்பட்டு இது குறித்து இந்திய கடற்படையின் இராமேஸ்வரம் பிரிவு கமாண்டர் முகர்ஜி வெள்ளிக்கிழமை தெரிவித்ததாவது: இராமேஸ்வரத்தில் உள்ள அலுவலகத்திலிருந்து 30 வீரர்கள் தனுஷ்கோடி பகுதி அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்துச் செல்லப்படுவர். அவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி தரப்படவு…
-
- 0 replies
- 654 views
-
-
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் க.பொ.த. சாதாரண பரீட்சையில் சாதனை வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய மாணவர்கள் அண்மையில் வெளியாகிய க.பொ.த. பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். பரீட்சைக்கு தோற்றிய 246 மாணவர்களில் 200 பேர் உயர் தரம் கற்க தகுதி பெற்றுள்ளனர். 10 ஏ சித்திகளை 8 மாணவர்களும் 9 ஏ சித்திகளை 17 மாணவர்களும் 8 ஏ சித்திகளை 11 மாணவர்களும் பெற்று கல்லூரிக்கு பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். 10 ஏ சித்திபெற்ற மாணவர் விபரம் சிவகுமாரன் ஜனகன், விஸ்வலிங்கம் அருணாத், சண்முகவேல் வித்தியாசங்கர், சிவசேகரம் யதுர்ஷன், நவரத்தினலிங்கம் யதார்த்தனன், தனபாலசிங்கம் ராஜ்குமார், சிறிகாந்தன் ஜினேஷ், ஜெயந்திநாதசர்மா கௌரிநாதன் ஆகிய 8…
-
- 0 replies
- 761 views
-
-
யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்து வகைளுக்கு பெரும் தட்டுப்பாடு யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்குத் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக நோயாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிளினிக்குக்குச் செல்லும் இருதய நோய் மற்றும் ஆஸ்மா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் மருந்து வகைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. கிளினிக்குச் செல்லும் மேற்குறித்த நோயாளர்களின் குறிப்பு புத்தகத்தில் வைத்திய நிபுணர்கள் ஆறுவகையான மருந்துவகைகளை எழுதி விட்டாலும் - மருந்தகத்தில் மூன்று வகையான மருந்துகளே வழங்கப்படுகின்றதென்றும் தெரிவிக்கப்படுகின்றது. நோயாளர்கள் அன்றாடம் உட்கொள்ள வேண்டிய மாத்திரைகள் சில 15 நாட்களுக்கு மட…
-
- 0 replies
- 578 views
-
-
மீராவோடையில் இளைஞன் சுட்டுக்கொலை வாழைச்சேனை மீராவோடைப் பகுதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு இளைஞனொருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இரவு 7.30 மணியளவில் வீடொன்றுக்குச் சென்ற ஆயுதபாணிகளே அங்கிருந்த இளைஞனை சுட்டுக் கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். பி.கோகிலராஜா (21 வயது) என்பவரே கொல்லப்பட்டவராவார். இவரது சடலம் நேற்று வாழைச்சேனை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது thinakkural.com
-
- 0 replies
- 619 views
-