Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆட்சேர்ப்புக்கான வயது எல்லையை 17ஆக விடுதலைப் புலிகள் வரையறை செய்துள்ளனர். தமிழர் தாயகத்தில் நடைமுறை அரசு நடைமுறையில் உள்ள போதும் தமிழர் தாயகத்தில் ஆட்சேர்ப்புக்கான அகவை 17 ஆக வரையறை செய்யப்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இன்று புதன்கிழமை தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் தலைமையில் கூடிய விடுதலைப் புலிகளின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஐ.நா பாதுகாப்பு சபையின் அலன் ரொக் சமர்ப்பித்த அறிக்கையை ஆராயந்துள்ளனர். இன்றைய கூட்டத்தின் முடிவில் வயது குறைந்த இளையோர் ஆட்சேர்ப்புக்களை நிறுத்துவதற்கும் இயக்க கட்டமைப்பில் அகவை குறைந்தோரை வெளியேற்ற அனுமதிக்கவும் கடந்த நவம்பர் மாதம் அலன் ரொக்கிடம் வழங்கப்பட்ட உறுதியை நிலைநாட்டவும் இணக்கம் காணப்பட…

  2. சிறிலங்காப் படையினரின் மீசாலை முகாம் மீது எறிகணை வீச்சு: 10 படையினர் காயம் [புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007, 20:30 ஈழம்] [காவலூர் கவிதன்] யாழ். தென்மராட்சியில் ஏ-9 வீதியுடன் இணைந்ததாக உள்ள மீசாலை சிறிலங்காப் படையினரின் முகாம் மீது இன்று எறிகணை வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை மதியம் 11.30 மணியிலிருந்து 12 மணிவரை நடத்தப்பட்ட இத்தாக்குதலில் 40-க்கும் அதிகமான எறிகணைகள் வீசப்பட்டுள்ளன. இதில் முகாமிலிருந்த 10-க்கும் அதிகமான படையினர் காயமடைந்துள்ளனர். கொடிகாமம், மீசாலை, சாவகச்சேரி உட்பட அப்பகுதிகளில் அமைந்துள்ள பல்வேறு படை முகாம்கள் மீதும் தமிழீழு விடுதலைப் புலிகள் ஏக காலத்தில் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை நடத்தினர். படையினரின் முகாம்க…

  3. பதிவு இணையத்தளம் தினமும் தாயக விடுதலைக்காகப் புறப்பட்ட போராளிகளின் படங்களை பிரசுரிப்பது யாவரும் அறிந்ததே! அவ்வாறு பிரசுரிக்கப்பட்ட ஒரு படத்தை பார்த்த சிங்கள இனவாதப் பத்திரிகையான டெய்லி நியூஸ், அப்படத்தில் ஆயுதத்துடன் காணப்படும் போராளி 18 வயதிற்கு குறைந்த ஒரு பாலகன் எனக் கண்டுபிடித்துள்ளது. இப்படத்தை தமிழீழக் குழந்தைகளின் தாய் ராதிகா குமாரசாமிக்கு ஈ மெயிலில் அனுப்பி தமிழீழ விடுதலைப் புலிகளை சர்வதேச நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்போவதாகவும் மிரட்டியுள்ளது. சிங்கள இனவாத ஆங்கிலப் பத்திரிகை இவ்வாறு கற்பனை செய்து மகிழ்கின்றது: Child soldier in action on LTTE website COLOMBO: The LTTE website pathivu.com has published an exclusive picture of an LTTE child sol…

  4. [Tuesday February 13 2007 09:28:58 PM GMT] [tharan] 20 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்கள் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணவில்லை. அதேவேளை, விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படவுமில்லை. புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை சொல்லிலும் செயலிலும் கைவிடும் பட்சத்தில் புலிகள் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றத்தைக்கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க முடியும். புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக்கொள்ளுதல் நிறுத்தப்படவேண்டும். இலங்கை அரசாங்கம் நீதி நியாயம் என்பனவற்றை கடைப்பிடிக்கவேண்டும். இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி ஹெலனா ரற்றோர் தெரிவித்துள்ளார். அவர் இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது. ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஏற்…

    • 13 replies
    • 2.7k views
  5. மகிந்த ராஜபக்ஷவால் உருவாக்கப்பட்ட சர்வதேச பிரதிநிதிகள் குழு, மனித உரிமை மீறல் குறித்து இருநாள் ஆய்வு [வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2007, 02:23 ஈழம்] [து.சங்கீத்] சிறீலங்காவில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விரிவான ஆய்வுகளை நடத்துவதற்கு சர்வதேச நிபுணர் குழுவொன்றை நியமிக்க இணங்கிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தான் சிபாரிசு செய்த பிரதிநிதிகளை அந்தந்த நாடுகள் அனுப்ப இணங்கிபோது, அவர்களை சேர்த்துக்கொள்ள அனுமதியும் வழங்கியிருந்தார். அதன்படி, 16 சர்வதேச பிரதிநிதிகள் அடங்கிய குழு, இந்திய முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதி தலைமையில் தங்களது இருநாள் கருத்தரங்குடன் கூடிய சந்திப்பை, கடந்த சனி ஞாயிறு தினங்கள் கொழும்பில் நடத்தியிருக்கிறது. சிறீலங்காவின் மனித உரிமை…

  6. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கொள்கைகளுக்கு எதிராக செயற்படுபவர்கள் நாட்டின் எதிரியாகவே கணிக்கப்படுவார்கள் [13 - February - 2007] [Font Size - A - A - A] * இரத்தினபுரியில் வாசுதேவ நாணயக்கார "இலங்கையில் இன்று கட்சித்தாவல்கள், அமைச்சு மாற்றங்கள், அமைச்சர்கள் பதவி விலகுதல், விலகுதல் சர்வ சாதாரண விடயமாகிவிட்ட நிலையில் அதனை பலரும் பல கோணங்களில் நோக்குகின்றனர். எனினும், இன்றைய சூழ்நிலையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மேற்கொண்ட அமைச்சரவை மாற்றத்தை யதார்த்தபூர்வமாக புரிந்துகொண்டு நாம் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதே சாலச் சிறந்தது" என கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இரத்தினபுர…

  7. சிறிலங்காப் படையினரின் புதிய போர் முனையாகும் வவுனியா. வவுனியா மாவட்டத்தின் மாமடுப் பகுதிக்கு சிறிலங்காப் படையினரால் பெருமளவில் படைக்கலங்கள் நகர்த்தப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில வாரங்களாகவே சிறிலங்காப் படையினர், வவுனியாவில் போர்முனை ஒன்றை திறக்க உள்ளதாக செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. தற்போது ஏ-9 வீதிக்கு கிழக்காக உள்ள சிங்களக் குடியேற்றப் பகுதியான மாமடுப் பகுதியில் கடந்த சில நாட்களாக படையினர் படைக்கலங்களை நகர்த்திக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கி

  8. 'பொன்னம்மான் கண்ணிவெடி அளப்பரிய பங்கினை வகித்து வருகின்றது': கண்ணிவெடிப் பிரிவு சிறப்புத் தளபதி [புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007, 19:06 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] "பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு என தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிட்டு தொடங்கிய எமது பிரிவு அளப்பரிய பங்கினை போர்க்களங்களில் வகித்து வருகின்றது" என்று பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு சிறப்புத் தளபதி நவநிதி அல்லது அஸ்வினி தெரிவித்துள்ளார். லெப். கேணல் பொன்னம்மானின் 20 ஆம் ஆண்டு நினைவும், கண்ணிவெடிப் பிரிவின் 8 ஆம் ஆண்டு நிறைவும் இணைந்ததான நிகழ்வில் சிற்ப்புரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வு பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இன்று புதன்கிழமை காலை 10.00 மணியள…

  9. சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணிகளுக்கு தமிழ்க் கூட்டமைப்பு முண்டுகொடுக்காது: சுரேஷ். மங்கள சமரவீர குழுவினரதும், ஜே.வி. பியினரதும் தனிப்பட்ட நோக்கங்களை நிறை வேற்றிக் கொள்வதற்காக அமைக்கப்படும் எதிர்க் கூட்டணிக்கு முண்டு கொடுத்து துணைபோக வேண்டிய அவசியம் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு இல்லை. அத்தகைய கூட்டணி எதற்கும் ஆதரவு கேட்டு அழைப்பு எதுவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு இது வரை விடுக்கப்படவில்லை. இவ்வாறு நேற்று உதயனுக்குத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் பதவிகளை ஜனாதிபதி திடீரெனப் பிடுங்கியதை அடுத்து தென்னிலங்கை அரசியலில் அதிரடியான திருப்பங்கள் …

  10. யாரை நம்புவது? எம்மைத்தான் - சூரியனுக்காக புனிதன் (அவுஸ்திரேலியா) "..செய்திகளுக்கு மட்டும்தான் யாரை நம்புவது என்ற வினா எழுப்பப் படவில்லை. பொருளாதார மேம்பாட்டுக்கு யாரையும் நம்ப இயலாது - எம்மைத் தான் நாம் நம்பவேண்டும் என்ற விடை உரத்துக் கேட்கிறது.." செய்திகள் இணையத் தளங்களில் தினசரி வருகின்றன. பத்திரிகைச் செய்திகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களையும், நேர்காணல்களையும் தாங்கியபடி அவை வீட்டில் உள்ள கணணி மூலம் வருகின்றன.எந்தெந்த இணையத் தளங்களைப் பார்க்கலாம்? யார் யாரின் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் வாசிக்கலாம்? எந்த நேர்காணல்களையும், ஒலிமூலம் வருகின்ற செய்திகளையும் கேட்கலாம்? என்று ஒருவாறு தெரிவு செய்து முடித்தாலும், தேர்ந்தவையை மட்டும் உள்வாங்கினாலும்,…

  11. அம்பாறை அரந்தலாவ பகுதியில் நேற்றிரவு நடந்த கிளைமோர் தாக்குதலில் 12 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியதாகவும் அது தெரிவித்துள்ளது. பிரத்தானிய அமைச்சரின் வருகையின்போது பொதுமக்களை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டு விடுதலைப் புலிகள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது.

    • 3 replies
    • 1.7k views
  12. புதன் 14-02-2007 15:37 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] பொதுத் தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது - நிமால் சிறீபால டி சில்வா பொதுத் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு கிடையாது என அமைச்சர் நிமல் ஸ்ரீபால டீ சில்வா தெரிவித்துள்ளார் பொதுத்தேர்தல் ஒன்றிக்கு முகம் கொடுக்க தயாராகுமாறு ஐக்கிய தேசிய கட்சி தனது கட்சியின் அமைப்பாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளமை குறித்து கருத்து வெளியிடும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார் அரசாங்கம் பெரும்பான்மை பலத்தை கொண்டுள்ளதாகவும் எந்த காரணத்திற்காகவும் பொதுத் தேர்தலை நடத்த வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார் இதேவேளை பொதுத் தேர்தல் ஒன்று நடத்தப்படுமானா…

  13. புதன் 14-02-2007 15:35 மணி தமிழீழம் [பதிவு நிருபர்] கொழும்பில் 5 தற்கொலைதாரிகளை கைது செய்துள்ளதாக பாதுகாப்பு மத்திய நிலையம் அறிவிப்பு. கொழும்பில் தற்கொலை தாக்குதல்களை நடத்துவதற்கென தங்கியிருந்த 5 தற்கொலை குண்டு தாரிகளை விசேட காவல் துறையினர் கைது செய்துள்ளதாக ஸ்ரீலங்காவின் பாதுகாப்பு மத்திய நிலையம் அறிவித்துள்ளது கொழும்பு நகரின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது தற்கொலை தாக்குதல்களை இவர்கள் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக அந்த மையம் தெரிவித்துள்ளது மத்திய வங்கி தலைமையகம்,மின்சார சபை தலைமையகம்,மற்றும் கோட்டை தொடரூந்து நிலையம்,ஐந்நது நட்சத்திர விடுதிகள் ஆகியனவே தற்கொலை தாரிகளில் இலக்குகள் என தெரியவந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது நன்றி…

  14. வவுனியாவில் சிறிலங்காப் படையினரின் அச்சுறுத்தலால் மக்கள் இடம்பெயர்வு. சிறிலங்காப் படையினரின் அச்சுறுத்தல் காரணமாக வவுனியா மாவட்டம் புளியங்குளம், மகிழங்குளம் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அப்பகுதிகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் சிறிலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகளை அண்டிய சேமமடு, பன்றிக்கெய்தகுளம், புளியங்குளம், மகிழங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் படையினரின் தொடர் அச்சுறுத்தல் காரணமாகத் தமது வாழ்விடங்களை விட்டு பல்வேறு இடங்களிற்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். -Puthinam-

  15. ஜே.வி.பியுடன் மங்கள சமரவீர இரகசியப் பேச்சு. சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய திரும்பிய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சில மணி நேரத்தில் ஜே.வி.பி உறுப்பினர்களை சந்தித்து அரசியல் உடன்பாடுகள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜே.வி.பியின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் முக்கிய உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்க மங்கள சமரவீரவை இரவு 8.00 மணியளவில் அவரது வீட்டில் சந்தித்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு நள்ளிரவு கடந்தும் தொடர்ந்ததாகவும் மங்கள சமரவீரவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனுரகுமார திசநாயக்க, முதலில் மங்கள சமரவீரவின் ஸ்ரான்மோ கிறசன்ற் வீட்டிற்கு சென்றதாகவும் ஆனால் அங்கு காவற்கடமையில் இருந்த சிறிலங்கா காவல்துறையின…

  16. அரை நூற்றாண்டு அமைச்சர் அவையில் தமிழர் எத்தனை பேர்? -நம்முள் கவீரன்- நண்பர் ஒருவர் எனக்கு தந்துதவிய எங்கள் பாராளுமன்ற அங்கீகாரம் பெற்ற பிரசுரமொன்றில் 1947 தொடக்கம் 1994 வரையிலான காலகட்டத்தில் பதவியேற்ற வெவ்வேறு அமைச்சர் அவைகளில் இடம்பெற்ற மந்திரிமார்களின் பெயர்கள் தரப்பட்டிருந்தன. அவற்றுள் இடம்பெறும் தமிழ் அமைச்சர்களின் விபரங்களை இங்கு வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 1947 - 1952 டி.எஸ்.சேனநாயக்கவின் அமைச்சர் அவை (04.02.1948 - 30.03.1952) சி.சிற்றம்பலம் - தபால், தொலைத் தொடர்பு அமைச்சர். சி.சுந்தரலிங்கம் - வணிக, வியாபார அமைச்சர். ஜீ.ஜீ.பொன்னம்பலம் - (1948 ஆம் ஆண்டு கடைசி மாதங்களில் இருந்து) தொழிற்துறை, தொழிற்துறை ஆராய்ச்சி, மீன்…

  17. (13.02.2007- நிதர்சன் தமிழீழ விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்காவில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சர்வதேச பாதுகாப்பு விவகாரம் தொடர்பான ஆய்வாளர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வடக்கு கிழக்குப் பிரச்சினைகள் காரணமாக அகதிகள் என்ற போர்வையில் தென்னாபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகள் அங்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளிலும் யுத்தப்பயிற்சிகளிலும்; ஈடுபட்;டு; வருகின்றனர்; தென்னாபிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி மகள்களை 'கோவெயிட்" என்ற பிரதேசத்தில் ஒன்றுதிரட்டி விடுதலைப் புலிகள் யுத்தப் பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். சுமார் 35 பேரடங்கி…

  18. ஐரோப்பிய ஓன்றியம் மீது மகிந்த கடும் தாக்கு [புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007, 04:49 ஈழம்] [க.திருக்குமார்] "ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக சிறிலங்கா அரசையே குற்றம் சட்டுகின்றது. ஆனால் விடுதலைப் புலிகளால் மீறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பாக அது கண்டுகொள்ளாமல் உள்ளது." மாலைதீவுக்குச் சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அங்குள்ள சிறிலங்கா தொழிலாளர்களின் மத்தியில் உரையாற்றிய போதே ஐரோப்பிய ஒன்றியத்தை மேற்கண்டவாறு கடுமையாக சாடியுள்ளார். மாலைதீவில் உள்ள டாறுபறுகே தேசிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மகிந்த மேலும் தெரிவித்துள்ளதாவது: "நாட்டின் தேசிய பிரச்சினையான இனப்பிரச்சனையின் தீர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு …

  19. யாழ்ப்பாணத்தில் கடந்த 12 தினங்களில் 11 பேர் கொலை; 14 இளைஞர்கள் கடத்தல் யாழ்ப்பாணத்தில் கடந்த பன்னிரண்டு தினங்களில் 11 பேர் கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் 14 பேர் கடத்தப்பட்டிருப்பதாக யாழ். மனித உரிமை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை கொலை அச்சுறுத்தல் காரணமாக கடந்த இருமாதங்களில் 59 பேர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடைந்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக கடத்தல்கள் காணாமல் போதல்கள், இடம்பெற்றுவருவதாகவும் இது தொடர்பாக படை உயரதிகாரிகளுக்கு எடுத்துக்கூறியிருப்பதாகவும

    • 0 replies
    • 755 views
  20. வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாம் மீது எறிகணை தாக்குதலில் - 4 பேர் காயம் வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 4 விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்று காலை 7 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தாக்குதலில் காயமடைந்த அதிரடிப்படையினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    • 0 replies
    • 741 views
  21. ஐ.தே.கவின் மாநகர சபை உறுப்பினர் கொழும்பில் சுட்டுக்கொலை. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தெகிவளை-கல்கிசைக்கான கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் கொழும்பு புறநகரான தெகிவளையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. கொல்லப்பட்டவர் ஆரியரட்ன சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார். -Puthinam-

    • 4 replies
    • 1.5k views
  22. சிறிலங்காவின் காவல்துறை செயலிழந்து விட்டது: ஆசிய மனித உரிமை ஆணைக்குழு சாடல். சிறிலங்கா அரசின் காவல்துறை தனது மக்களை பாதுகாக்கும் திறமையற்றது. மேலும் பொதுமக்களுக்கு விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தல்களும் காவல்துறையினரின் பங்களிப்புடனேயே விடுக்கப்படுகின்றன என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையில் சிறிலங்கா அரசை சாடியுள்ளது. ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: பெப்ரவரி மாதம் 8 ஆம் நாள் முன்னணி அரசியல்வாதியும், அமைச்சருமான அனுரா பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் அவர் தனக்கு பல தடவைகள் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை அச்சுறுத்தல் அரச தலைவரால் விடுக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு ந…

  23. படகு மூலம் இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்த முயன்ற இருவர் இராமேஸ்வரத்தில் கைது. இராமேஸ்வரம் பகுதியில் படகு மூலம் இலங்கைக்கு வெடி பொருட்களைக் கடத்த முயன்ற இருவரை இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து குண்டுகளைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் , வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன . கைது செய்யப்பட்ட குறித்த இரு சந்தேக நபர்களும் தனுஷ்கோடியைக் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணை குறித்த இரு சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றிருக்கலாம் என இந்திய கடற்படையினர் சந்தேகிப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவித்தன. -Tamilwin-

  24. படத்தில் இருப்பது கருணா குழுவின் சிறார்கள் ,ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர்கள் அமைப்பின் பிரதிநிதி சிறீலங்கா அரசுடன் இணைந்து நடத்திய பச்சைத்துரோகம்.உடனடியாக ராதிகா குமாரசுவாமியின் பதவி பறிமுதல் செய்யப்பட வேண்டும்.இது சம்பந்தமாக ஐக்கியநாடுகள் சபைக்கு படத்துடன் தகவல் தரவேண்டும்.ஏற்கனவே தெரிந்திருந்தும் மறைத்துள்ளார்.சிறிலங்கா அரசின் ஒத்துளைப்புடன் கருணாவை பேட்டி கண்டார்.பேட்டியில் கருணாவின் உறுதிமொழியாக சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை என்று கூறப்பட்டது. சிறீலங்காவில் நடக்கவிருக்கும் விசாரணையில் ராதிகா குமாரசுவாமி அவர்களும் விசாரணை செய்யப்படவேண்டும். சிறீலங்காபடைகள் கிழக்கில் முக்கிய படை நகர்வுகள் முடிவுற்றதும் கருணாகுழுவை அம்போ என விட்டுள்ளதை படத்தில் காணமுடிகிறது.விரைவில் க…

  25. சட்டவிரோதமாக தங்கியிருந்த 300 பேர் இலங்கையில் கைது வீரகேசரி இணையத்தளப்பிரிவு வெளிநாட்டில் இருந்து வந்து சட்ட விரோதமாக இலங்கையில் தங்கியிருந்து 300 பேரை கடந்த சில மாதங்களில் கைது செய்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் பராக்கிரம பனாண்டோ தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் பெரும் பாலானோர் ஆகிய நாட்டவர்கள் என தெரிவித்தார். முதலில் அமுலிருந்த சட்டத்தின் படி இலங்கையில் விரோதமாக தங்கியிருப்போர் கைது செய்யப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுவர். தற்போது பெப்ரவரி 1ம் திகதி முதல் அமுலில் இருக்கும் சட்டத்தின்படி கைது செய்யப்படுவோரிடம் இருந்து தண்டப்பணமும் அறவிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.