Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. படுவான்கரை பறிபோகுமா??!! பெயர் குறிப்பிடாத வலிந்த படை நடவடிக்கை ஒன்றை சிறிலங்காப் படைகள் மட்டக்களப்பின் படுவான்கரை நோக்கி நடத்தி வருகிறார்கள். மட்டக்களப்பில் வாகரைப் பகுதியை விடுதலைப்புலிகளிடம் இருந்து கைப்பற்றிக் கொண்ட சிறிலங்காப் படைகள் தற்பொழுது படுவான்கரைப் பகுதியையும் கைப்பற்ற கடுமையாக முயன்று வருகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தின் பகுதிகளை படுவான்கரை மற்றும் எழுவான்கரை என்று அழைப்பார்கள். சூரியன் உதயமாகி எழுகின்ற கரையாகிய கிழக்கு திசையில் உள்ள பகுதிகளை எழுவான்கரை என்றும், சூரியன் மறைகின்ற மேற்கு திசையில் உள்ள பகுதிகளை படுவான்கரை என்றும் சொல்வார்கள். படுவான்கரை பல கிராமங்களையும், அடர்ந்த காடுகளையும் கொண்ட ஒரு பெரும் பிரதேசம் ஆகும். இந்த படுவான்கரைப் பி…

    • 0 replies
    • 1.4k views
  2. யுத்தத்தில் உயிர் துறக்கும் உண்மை! பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படவேண்டிய இலங்கையின் இனப்பிரச்சினையை இராணுவத் தீர்வில் வெற்றிக்கொள்ள முடியும் என்ற அதீத நம்பிக்கையில் இலங்கை அரசாங்கம் இன்று வடக்கு கிழக்கில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. அந்த வகையில் அரசாங்கத்தின் தாக்குதல்கள் அனைத்தும் மிகவும் திட்டமிட்ட வகையில் மிகவும் சூட்சுமமாக மேற்கொள்ளப்படுகிறது. அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்று வரும் போரை நியாயப்படுத்துவதற்கும் ஆதரிப்பதற்கும் தென்னிலங்கை அரசியல் சக்திகள் அமைச்சர்கள் என அனைவரும் பெரும் சிரத்தையுடன் செயற்பட்டு வருகின்றனர். அதற்கேற்றாற் போல் இலங்கையின் தேசியப் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும…

  3. உள்ளூர் சிங்கள - தமிழ் வாசகர் வட்டத்தின் மேலே இப்பொழுது சர்வதேச சமூகத்துக்கு கணக்கு கொடுப்பா? -(பீஷ்மர்) சென்ற வாரம் பிரித்தானிய பாராளுமன்றத்தில் பிரிட்டிஷ் பிரதமர் இலங்கை விவகாரம் பற்றி கூறியவை மிக முக்கியமானவை. யுத்த நிறுத்தத்தைப் பேணுவதன் மூலம் தீர்வுகாண வழிவகைகளை காணும் வாய்ப்புகள் இருக்கும் என்ற கருத்துப்பட அவர் கூறியுள்ளார். இன்னும் சில மாதங்களில் தனது பதவியிலிருந்து விலகவுள்ள பிளயர் சர்வதேச விவகாரங்களில் அளவுக்கு மீறிய ஆர்வம் காட்டுவது பற்றி சில குறிப்புரைகள் உள்ளதெனினும், பிரித்தானிய பிரதமர் ஒருவர் இவ்வாறு கூறியது முக்கியமானதாகும். அந்த அளவுக்கு சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக இலங்கையின் யுத்த நிறுத்த விவகாரம் முன்னிலைப்பட்டுள்ளது. இந்த விடயம் இங…

  4. சர்வதேசத்தை ஏமாளியாக்க இலங்கை அரசு எத்தனம் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங் களில் மஹிந்தர் அரசின் கொடூரங்கள் சர்வதேச மட் டத்தில் அம்பலமாகத் தொடங்கியிருப்பதை அடுத்து அவற்றை சமாளிக்கும் பதில் நடவடிக்கைகளை அரசும் சர்வதேச மட்டத்தில் எடுத்திருக்கின்றது. பொய்களால் உண்மைகளுக்குச் சமாதி கட்டி, தனது அபத்த நடவடிக்கைகளுக்கு அர்த்தமும் நியாயமும் கற்பிக்கும் பிரசாரத்தை அரச இயந்திரம் முடுக்கிவிட்டிருக்கின்றது. ஆனால், விஞ்ஞானத்தின் அபார வளர்ச்சியினால் பூமிப்பந்து பூகோளக் கிராமமாகச் சுருங்கி, உலகின் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் சம்பவம் பற்றிய தகவல் உலகின் மற்றொரு மூலைக்கு அடுத்த கணத்தில் எட்டிவிடும் அளவுக்குத் தகவல் தொழில்நுட்பம் விருத்தியடைந்துள்ள இன்றைய சூழ்நிலையில் மனித உரிமை…

    • 1 reply
    • 1.3k views
  5. ஜெனிவாவின் புதிய தூதுவராக டயான் ஜெயதிலக்க நியமிக்கப்படவுள்ளார் ? ஜெனிவாவின் புதிய தூதுவராக டயான் ஜெயதிலக்க நியமிக்கப்படவுள்ளதாக கொழும்பைத் தளமாகக் கொண்ட இராஜதந்திரிகள் தெரிவித்திருக்கின்றனர். சிங்கள அரசியல் விமர்சகராகவும் ஊடகவியலாளராகவும் செயற்பட்டுவரும் ஜெயதிலக்க, ஜேவிபியின் முன்னாள் உறுப்பினர். இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பிரிவின் விரிவுரையாளராகவும் செயற்பட்டு வருகின்றார். முன்னர் வடக்கு கிழக்கு மாகாண சபையின் உறுப்பினராக விளங்கிய ஜயதில்க்க, கடந்த பொதுத் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவான பிரச்சாரத்திலும் ஈடுபட்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அமெரிக்க லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா தூதரகத்…

  6. ஆயுதக் கடத்தலுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் சம்பந்தமில்லை’ - தமிழர் தலைவர் ஆதாரத்தை எடுத்துக்கூறி தெளிவுபட விளக்கம் சென்னை, மார்ச் 14- ஆயுதக் கடத்தலுக்கும், விடுதலைப்புலி களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அப்படி கடத்தலில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கைக்கு விடுதலைப்புலிகள் உறுதுணையாக இருப்பர் என்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விளக்கம் அளித்தார். சென்னை பெரியார் திடல் நடிகவேள் ராதாமன்றத்தில் 6-3-2007 அன்று இரவு ``ஈழத் தமிழர்களின் இன்றைய பிரச்-சினை என்ன?’’ என்ற தலைப்-பில் சிறப்புப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வரு…

  7. சிறீலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் நெடுங்கேணிக்கு உந்துருளியில் பயணித்துக்கொண்டிருந்த பொதுமகன் ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணியளவில் ஆனந்தர் புளியங்குளப் பகுதியில் படுகாயமடைந்துள்ளார். இதன்போது படுகாயமடைந்தவர் 55 அகவையுடைய குலசிங்கம் எனவும் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது

  8. படுவான்கரையில் சிறிலங்காப் படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு: 3 படையினரின் சடலங்கள் மீட்பு. மட்டக்களப்பு மாவட்டம் படுவான்கரையில் சிறிலங்காப் படையினர் இன்று மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். படுவான்கரை தெற்குப் பகுதியில் உள்ள உன்னிச்சை என்ற இடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் படையினர் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சியே விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இம் முறியடிப்புத் தாக்குதலை அடுத்து படைத்தரப்பினர் இழப்புக்களுடன் பின்வாங்கி ஓடினர். இதில் கொல்லப்பட்ட படையினரின் 3 சடலங்களும் ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. படையினரின் சடலங்கள் நாளை அனைலத்துலக செஞ்சிலுவைச் சங…

    • 4 replies
    • 1.5k views
  9. யாழ் முகமாலையில் இராணுவத்தினருடன் துப்பாக்கி மோதல் இன்று அதிகாலை 1.10 மணியளவில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி மோதலில் இராணுவத் தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். யாழ் முகாமாலை முன்னரங்க நிலைகளில் வீதிச் சுற்றுக் காவலில் ஈடுபட்ட சிறீலங்காப் படையினருடனேயே இந்த துப்பாக்கி மோதல் ஏற்பட்டிருந்தது. பதிவு

  10. விடுதலைப் புலிகளுக்கும் மகிந்த ராஜபக்‌ஷவுக்கும் சனாதிபதித் தேர்தலுக்கு முன்பு ஒரு இரகசிய உடன்படிக்கை இருந்ததாகவும் அதன்படியே சனாதிபதி விடுதலைப் புலிகளின் கேந்திர மையத்தைத் தாக்கி அழிப்பதைத் தவிர்த்து வந்துள்ளார் என்றும் முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி சொல்லி வருகிறார். ஒரு மர்மக் கதைக்கு விளம்பரம் செய்வது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக, ஒவ்வொரு தகவலையும் பற்றி மேலும் அறிய ஆவலைத் தூண்டுகிற விதமாக, எதையெதையோ எல்லாம் சொல்லுகிறார். சில விடயங்கள் முன்னுக்குப் பின் முரணாகவும் தோன்றுகின்றன. ஜெனீவா பேச்சுவார்த்தைகளைக் குழப்பியடித்தது முதலாகக் கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் வரையிலானவர்களை இடம்பெயரச் செய்த குண்டுவீச்சுக்களும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்…

  11. வடக்கிலும் திறக்கப்பட்ட போர்முனை! கிழக்கில் மையம் கொண்டிருந்த போர் முனைப்புகள் தற்போது வடக்கிலும் பரவியுள்ளன. கிழக்கிலிருந்து புலிகளை முழுமையாக வெளியேற்றும் நடவடிக்கையெனக் கூறி படையினர் ஆரம்பித்த போர் வடக்கிலும் பரவியதன் மூலம் ஒரேநேரத்தில் படையினர் இரு பெரும் களங்களில் கடுமையான பதிலடியை எதிர்கொள்ளும் நிலைமை ஏற்பட்டுள்ளது. கிழக்கில் திருகோணமலையில் ஆரம்பமான படை நடவடிக்கை தற்போது மட்டக்களப்பு வரை விரிந்துள்ளது. திருமலையில் பல பகுதிகளையும் கைப்பற்றிய படையினர் மட்டக்களப்பை புலிகளிடமிருந்து முழுமையாக மீட்டு விடலாமெனக் கருதினர். திருகோணமலையில் புவியியல் நிலைமை பின்புற கள நிலைமை, விநியோக வசதிகளைக் கருத்தில் கொண்டு புலிகள் சில பிரதேசங்களிலிருந்து விலக வேண்டியிருந்…

  12. அரசாங்கத்தினால் சித்திரவதைக் குள்ளாக்கப்பட்டதாக கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையர் தெரிவிப்பு அவுஸ்திரேலிய கடற்பரப்பில் கைது செய்யப்பட்டு தற்போது கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜைகள் தாங்கள் அரசாங்கத்தினால் சித்திரவை செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் பொருளாதார நோக்கங்களுக்காகவே அவுஸ்திரேலியாவிற்குள் செல்ல முயன்றதாக தெரிவிக்கப்படுவதை அவர்கள் நிராகரித்துள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 82 இலங்கையர்களில் ஒருவரான சஞ்சே செல்வநைனா கடந்த வருடம் ஜனவரி மாதம் இலங்கை இராணுவத்தினால் தடுத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். எனது நண்பர்கள் ஐவர் எனது கண்ணுக்கு முன்னால் சுடப்பட்…

  13. பயிற்சி முகாமில் அதிகாரியை கொல்ல முயன்ற படைவீரர் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை வெள்ளவாயா, ஊவகுடா ஓய இராணுவ முகாமில் இராணுவ கோப்ரல் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பயிற்சி வீரர் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக்கொன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச் சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இராணுவக் கோப்ரல் ஹம்பாந்தோட்டை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட இந்த கோப்ரல் பயிற்சிக்காகச் சென்றிருந்தவர்களை மிக மோசமாக நடத்தியதாகவும், அதன் வெளிப்பாடாகவே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. தற்கொலை செய்துகொண்டவர் …

  14. அகதிகளுக்கு கொழும்பில் நிவாரணப்பொருட்கள் சேகரிக்கும் பணியில் மேலக முன்னணி, தமிழ் கூட்டமைப்பு எம்.பி.க்கள் -தாராள மனதுடன் உதவுமாறு வேண்டுகோள் மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசபடையினரால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் ஷெல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதல்கள் காரணமாக பல்லாயிரக்கணக்கில் இடம் பெயர்ந்துள்ள மக்களுக்கு தலைநகர் கொழும்பில் வசிக்கும் அனைத்து மக்களும் இன மதபேதமின்றி நிவாரண உதவிகளை வழங்குமாறு மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலக மக்கள் முன்னணியும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தலைநகர் கொழும்பிலுள்ள வர்த்தகர்கள், பொதுமக…

  15. உணவு இல்லை, தங்கியிருக்க இடவசதி இல்லை இடம்பெயர்ந்த 1-1/2 இலட்சம் மக்கள் பரிதவிப்பு -கொளுத்தும் வெயிலில் துடிக்கும் குழந்தைகள் மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் கடும் ஷெல் தாக்குதல் மற்றும் பல்குழல் ரொக்கட் தாக்குதலால் இடம்பெயர்ந்த சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் உண்ண உணவின்றியும் தங்க இடமின்றியும் பெரும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். கடந்த 8 ஆம் திகதி முதல் மட்டக்களப்பில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி படையினர் மேற்கொண்டு வரும் உக்கிரத் தாக்குதல்களையடுத்து இரு நாட்களில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் புலிகளின் பகுதிகளிலிருந்து வெளியேறினர். பட்டிப்பளை, வவுணதீவு, வெல…

  16. வடபகுதியில் பெரும் தாக்குதல் ஒன்றிற்கான ஒத்திகைகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருகின்றனர்" என்று சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தி எழுத்தாளர் இக்பால் அத்தாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சண்டே ரைம்ஸ் வார ஏட்டின் பத்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது: "கிழக்கு மாகாணத்தில் இருந்து அதிகளவான விடுதலைப் புலிகள் வடக்கிற்கு நகர்த்தப்பட்டுள்ளனர். அங்கு மிகத் தீவிரமான போர்த் தயாரிப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன. புதிய படையணிகள் பயிற்றுவிக்ப்பட்டுள்ளனர். மண் மூட்டைகள் கொண்டு மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டு சிறப்புப் படையணிகள் தமது ஒத்திகைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிகளவான கைத்துப்பாக்கி வீரர்களும் பயிற்றுவிக்கப்படுகின்றனர். அவர்கள் முக்கிய ப…

    • 5 replies
    • 2.4k views
  17. இன்று அறுகம்பேயில் இருந்து 190 கடல் மைல் தொலைவில் வைத்து விடுதலைப் புலிகளிற்கு ஆயுதங்கள் ஏற்றி வந்த கப்பல் ஒன்றை தாக்கியழித்துள்ளதாக சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கப்பல் அழிக்கப்பட்டது காலை 9.00 மணிக்கு எண்டு பாதுகாப்பு அமைச்சின் இணையத்திலும் காலை 7.00 மணிக்கு என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையத்தின் இணையத்திலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முரண்பாடாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள், கடற்கரையில் இருப்போர் என அனைவரும் இலகுவில் பார்க்கும் வண்ணம் பட்டப்பகலில் தமது கப்பலைக் கொண்டுவந்து புலிகள் ஆயுதங்களை இறக்குவார்களா?

    • 24 replies
    • 7.8k views
  18. ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ விமலேஸ்வரன் ஸ கொழும்பில் வெள்ளைவான் என்றால் பலருக்கும் தெரியும் கொழும்பில் 6 பிரிவுகளாக 60க்கு மேற்பட்ட பொலிசார் வெள்ளைவான் வைத்து படம் காட்டுகிறார்கள். அனைத்து வெள்ளைவான்களும் முன்பு பொலிசாருக்கும் இராணுவத்தினருக்கும் அரச உளவுத்துறையினருக்கும் பயன்படுத்தபட்டு வந்த வாகனங்கள் இவற்றின் வாகன தகட்டு இலக்கங்கள் மட்டுமே கழட்டுபட்டுள்ளது. கொழும்பில் வெள்ளைவானுக்கு பொறுப்பாக இருப்பவர்கள் இருவர் ஒருவர் முதலாவது நபர் நாலாம்மாடிக்கு பொறுப்பாக இருக்கும் பெல்பிட்டிய மற்ற நபர் எஸ்.ஜ றொட்றிகோ. இவர்கள் இருவரும் மிகவும் வெறிகொண்டவர்களாக இந்த வெள்ளைவான் திருவிளையாடல்களை நடாத்தி வருகின்றார்கள். கோட்டகேனா பகுதியில் வெள்ளைவானில் கடத்தப்படுவோர் சென்லூசியஸ் ச…

    • 1 reply
    • 1.7k views
  19. 'விடுதலைப் புலிகளை அழிக்க 3 வருடங்கள் தேவை': கோத்தபாய ஜஞாயிற்றுக்கிழமைஇ 18 மார்ச் 2007இ 03:52 ஈழம்ஸ ஜக.திருக்குமார்ஸ "தற்போது ஆரம்பிக்கப்பட்டிருக்கும் இராணுவ நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதன் மூலம் விடுதலைப் புலிகளை முற்றாக அழிப்பதற்கு 2-3 வருடங்கள் தனக்கு தேவைப்படும்" என சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா தெரிவித்துள்ளார். கடந்த புதன்கிழமை வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மத்தியில் பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது: "எதிர்வரும் 2-3 வருடங்களில் எங்களால் விடுதலைப் புலிகளை அழிக்க முடியும். இராணுவ நடவடிக்கைகள் இடம்பெறும் அதேவேளை அரசாங்கம் இனப்பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வையும் முன்வைக்க உ…

  20. அரசிற்கும் கருணா குழுவுக்கும் தொடர்புகள் உள்ளன: புலனாய்வுத்துறை அதிகாரியின் மனைவி சிறிலங்கா அரச தலைவர் தேர்தலுக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பிற்கு சென்று கருணாவை சந்தித்து வருமாறு தனது கணவரை அரசாங்கம் அனுப்பியதாக சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கடற்படை அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகேயின் மனைவி ராசிக பிரியதர்சினி நேற்று தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகள் உள்ளதாக கூறி சிறிலங்கா கடற்படையின் புலனாய்வுத்துறையின் அதிகாரியான லெப். கொமாண்டர் றோகண கமெகே கடந்த செவ்வாய்க்கிழமை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு அ…

    • 4 replies
    • 1.9k views
  21. [ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2007, 04:45 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மோதல்களை நிறுத்தி அமைதி முயற்சிகளை ஊக்கிவிக்கும் முகமாக சிறிலங்காவிற்கான சிறப்பு பிரதிநிதியை ஒருவரை நியமிக்கும்படி அமெரிக்காவின் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு சிறிலங்கா அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நியூயோர்க்கில் இருந்து சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்ததாவது: "சிறிலங்காவிற்கு சிறப்பு பிரதிநிதியை அமைக்க வேண்டிய தேவை இல்லை. அப்படியான ஒரு பிரதிநிதி எமக்கு தேவையில்லை. காங்கிரஸ் உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு நாம் ஏற்கனவே பதிலளித்துள்ளோம். மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கும் எமக்கு அம…

  22. [ஞாயிற்றுக்கிழமை, 18 மார்ச் 2007, 04:43 ஈழம்] [அ.அருணாசலம்] ஓமந்தை, மணலாறு, மன்னார் ஆகிய பகுதிகளில் உள்ள சிறிலங்காப் படையினரின் முன்னரங்க நிலைகளில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை படையினரால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இத்தாக்குதல்கள் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 57 ஆவது படையணியைச் சேர்ந்த சிறப்பு காலாட் படையின் பட்டலியன் துருப்புக்களும் இராணுவத்தினரின் சிறப்பு அணியினரும் ஈடுபட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இப்படையணிக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் கடந்த வெள்ளிக்கிழமை அதன் முதலாவது தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டது. இதன் போது 4 சிறப்பு படையினர் கொல்லப்பட்டதாகவும் 23…

    • 17 replies
    • 3.6k views
  23. அமெரிக்கா வாழ் தமிழ் மக்களின் சொத்துக்களையும், முதலீடுகளையும் முடக்கும் சதி நடவடிக்கைககளில் சிறிலங்காவின் புதிய வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம ஈடுபட்டு வருகிறார். ஜ சனிக்கிழமைஇ 17 மார்ச் 2007 ஸ ஜ நசார் ஸ விடுதலைப்புலிகளுக்கு எதிரான பரப்புரைகளை செய்வதற்காக வெளிநாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டிருக்கும் அமைச்சர் ரோகித, அமெரிக்க திறைசேரியின் மூத்த உறுப்பினரும், அமெரிக்காவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் நாடுகளான ஈரான் மற்றும் வடகொரியாவைச் சேர்ந்தவர்களின் சொத்துக்களை முடக்குவதில் முக்கிய பங்கு வகித்த ஸ்ருவார்ட் லெவியை சந்திப்பதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்டு வருகிறார். அமெரிக்க ராஜாங்க அமைச்சர் கொண்டலிஸா றைஸை நேற்று சந்தித்து பேசிய சிறிலங்க…

  24. வாகரை வெறிக்களிப்பில் வீறு நடை போடுகிறது சிங்களம் ! ஆனால் புலி பதுங்குகிறது எதற்கு ? கீழுள்ள இணைப்பை பிரதுசெய்து உங்கள் இணைய உலாவியில் புகுத்துவதன் மூலம் இதனை காணலாம் mms://hiendprsol.wmod.llnwd.net/a771/o1/ltte/wakara_sinhala.wmv

  25. -புரட்சி (தாயகம்)- காலத்திற்கு காலம் சிறிலங்கா அரசின் தலைவர்களும் அவர்களின் இராணுவத் தளபதிகளும் புலிகளைப் போரில் வென்று வருவதாகவும் விரைவில் அவர்களை முழுமையாகத் தோற்கடிக்கப்போவதாகவும் தெரிவித்துவருவது வழக்கமாகும். பௌத்த பேரினவாதிகள் மற்றும் இனவாத கடும்போக்காளர்கள் இவ்வாறான கருத்துக்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் மக்களுக்கு எதிராக ஊர்வலம் நடத்துவதும் தென்னிலங்கை சிங்கள, ஆங்கில ஊடகங்கள் இவற்றிற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை முதற்பக்கத்தில் வெளியிடுவதும் நாம் எல்லோரும் அறிந்ததே. எவ்வாறெனினும் சிங்கள அரச தலைவர்கள் மற்றும் சிங்கள பேரினவாதிகள் எதிர்பார்;க்கும் பாரிய இராணுவ வெற்றிகள் எதனையும் துட்டகைமுனுவின் மைந்தர்கள் இதுவரை பெற்றுக்கொடுக்கத் தவறிவி…

    • 0 replies
    • 771 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.