ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142752 topics in this forum
-
மகிந்தவுடன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு [வெள்ளிக்கிழமை, 26 சனவரி 2007, 15:23 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக்கூட்டம் நேற்று வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு நடைபெற்றது. கூட்டத்தில் அரசாங்கத்துக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் செய்யப்படவுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம், முஸ்லிம் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் அமைச்சுப் பொறுப்புக்கள் என்பன தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன. இரு கட்சிகளும் சேர்ந்து ஒரு செயற்திட்டத்தை உருவாக்குவதற்காக அரச தலைவரின் ஆலோசகர் பசில் ராஜபக்சவிற்கும் ஹக்கீமுக்கும் இடையில் நடைபெற்று வந்த பல…
-
- 0 replies
- 742 views
-
-
ரம்புக்வெலவின் கருத்து பக்கச்சார்பானது: பிரித்தானியா, கனடா, சுவிற்சர்லாந்து, சுவீடன், அவுஸ்திரேலியா, யு.எஸ்.எ, ஐ-ஒ தூதரக பிரதிநிதிகள். இலங்கைக்கு உதவி வழங்கும் நாடுகளின் தூதுவர்கள் அண்மையில் வடக்கு கிழக்கிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக அரசாங்க பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் திட்டமிடல் அமுலாக்கல் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்த கருத்துகள் பக்கச் சார்பானதென அந்நாடுகளின் தூதுவர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர். இலங்கையில் உள்ள பிரித்தானியா, கனடா, சுவிற்சர்லாந்து, சுவீடன், அவுஸ்திரேலியா, ஐரோப்பிய ஒன்றிய தூதரக பிரதிநிதி மற்றும் யு.எஸ்.எயிட் பிரதிநிதிகள் உட்பட உதவி வழங்க…
-
- 0 replies
- 1k views
-
-
முல்லைத்தீவில் விமானத்தாக்குதல். - பண்டார வன்னியன் Friday, 26 January 2007 09:29 முல்லைத்தீவு பகுதி வான்பரப்பில் நேற்று காலை 7.45மணிக்கு நுழைந்த சிறிலங்கா விமானப்படையின் கிபீர் குண்டு வீச்சு விமானங்கள் கடலிலும் தரையிலுமாக தாக்குதலினை மேற்கொண்டன. இதன்போது கடலில் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்களை நோக்கியும் சுனாமி மக்கள் குடியிருப்புகளை அண்டிய பகுதிகளிலும் குண்டுகள் வீழ்ந்து வெடித்தன. இதன்போது கடலில் வீழ்ந்த குண்டுகள் மீனவர்களுக்கு அருகாமையிலும் பழுதடைந்த நிலையில் நங்கூரமிடப்பட்டிக்கும் ஜோர்தான் கப்பலுக்கு அருகாமையிலும் வீழ்ந்து வெடித்தன. இதனால் மீனவர்கள் தொழில் ஈடுபடாது உபகரணங்களை கைவிட்டு உடன் கரைதிரும்பினர். இத் தாக்குலில் மக்கள் பாதுகாப்பான…
-
- 1 reply
- 1.1k views
-
-
இராணுவ இணையத்தளம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது. இன்று வாகரைக்குச் சென்ற மகிந்தவின் சகோதரர் கோட்பாய ராஜபக்ச மற்றும் சரத் பென்சேகாவுக்கும் இதர உயர் அதிகாரிகளும் பார்வையிட இவ்வாயுதங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் படங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. படங்கள் இங்கு தடை செய்யப்படக் கூடியதால் தரப்படவில்லை. Army recovered two 152 mm artillery guns, two pieces of damaged 122 mm artillery guns , one 120 mm mortar, two suicide jackets, three hundred and sixty T 56 weapons, two T 81 riffles, two 12.7 mm anti aircraft weapons, two 30 mm weapons, two cannon weapons, two light machine guns, one Multi Purpose Machine Gun (MPMG), seven Rocket Propeller Grenade launchers (RP…
-
- 27 replies
- 8.1k views
-
-
'இராணுவத் தீர்வுக்கே அரசு திட்டம்' : இந்திய- கனடா தூதுவர்களிடம் கூட்டமைப்பு [வெள்ளிக்கிழமை, 26 சனவரி 2007, 09:40 ஈழம்] [கொழும்பு நிருபர்] இராணுவ நிகழ்ச்சித் திட்டம் ஒன்றின் ஊடாக இலங்கைத் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தடுக்க முற்படும் சிறிலங்கா அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக தொடர்ந்தும் மௌனம் சாதிக்கக்கூடாது எனவும், சமாதான முயற்சிகளினுடாக இனநெருக்கடித் தீர்வு முயற்சிகளுக்கு அழுத்தத்தைக் கொடுக்க முன்வர வேண்டும் எனவும் இந்தியா மற்றும் கனடாவுக்கான தூதுவர்களிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்திருக்கின்றது. இலங்கைக்கான இந்திய தூதுவர் அலோக் பிரசாத், பிரதித் தூதுவர் ஏ.மாணிக்கம் ஆகியோருடனான சந்திப்பு நேற்று வியாழக்கிழமை காலையும், கனடியத் தூதுவருனான …
-
- 1 reply
- 997 views
-
-
பயங்கரவாதத்தை தோற்கடிக்க வலுவான ஆயுதம் `அரசியல் தீர்வே' [26 - January - 2007] [Font Size - A - A - A] * மொரகஹகந்த நீர்த்தேக்க அங்குரார்ப்பண வைபவத்தில் ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காண்பதன் மூலமாகவே பயங்கரவாதத்தையும், கொடிய இனவாதத்தையும் வெற்றி கொள்ள முடியுமெனவும் வலுவுள்ளதான அரசியல் தீர்வே இதற்கு சிறந்த ஆயுதமெனவும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சுட்டிக் காட்டி இருக்கின்றார். பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்கான ஆற்றல், தேவைப்பாடு சக்தி என்பன எமது படையினரிடம் காணப்படுவதாகவும் இதனை கிழக்கு மாகாணத்தில் நிரூபித்துக் காட்டப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்து இருபது, முப்பது வருடங்களுக்கு முன்னர் கொழும்பிலிருந்து யாழ்ப்ப…
-
- 0 replies
- 818 views
-
-
வவுனியா - மன்னார் வீதியில் பயணிகள் பேரூந்து மீது படையினர் சூடு - ஒருவர் பலி, இருவர் படுகாயம் - பாண்டியன் Friday, 26 January 2007 10:25 வவுனியா - மன்னார் வீதியில் கண்டுவெட்டுவான் பகுதியில் வைத்து படையினர் மீது இன்று காலை மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து அவ்வழியால் வந்த பயணிகள் பேரூந்து மீது படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து மீதே படையினர் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர். இதன்போது பயணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் இரு பயணிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கின்றது. இதேவேளை குறித்த பகுதியில் உள்ள காவல்துறை நில…
-
- 0 replies
- 743 views
-
-
[25 - January - 2007] [Font Size - A - A - A] வாழ்க்கைச் செலவு அதிகரிப்பையும் பணவீக்கத்தையும் கட்டுப்படுத்துவதற்கான கொள்கைத்திட்டமொன்றை தயாரிப்பதற்கும் அதனை முன்னெடுப்பதற்குமான வழிவகைகளை உடனடியாக காணுமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பொருளாதாரக் கவுன்சில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியிருக்கின்றார். இவ்விடயத்தில் தீவிர ஈடுபாடு காட்ட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தி இருக்கின்றார். பொருளாதார நெருக்கடிமிக்க இன்றைய காலகட்டத்தில் ஜனாதிபதியின் இக்கருத்துக்கள் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால், ஜனாதிபதியின் இந்த முயற்சி வெற்றியளிக்கக் கூடியதாக அமையுமா என்பதையிட்டு சற்றுச் சிந்திக்க வேண்டியுள்ளது. அதிகாரிகளை அழைத்து வட்ட மேசை மகாநாடுகளை நடத்தி ஆராய்வதாலோ, திட்டங்கள் வகு…
-
- 0 replies
- 900 views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு எதிராக பிக்குமார் நேற்று பேரணி, ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு. யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டு அடுத்த மாதம் 22ஆம் திகதியுடன் ஐந்து வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில் அந்த ஒப்பந்தத்தை அரசு உடனடி யாகக் கிழித்தெறிய வேண்டும் எனக்கோரி தேசிய பிக்குகள் முன்னணியினர் நேற்று கொழும்பில் பாதயாத்திரை ஒன்றை நடத்தினர், ஜனாதிபதி செயலகத்தில் மகஜர் ஒன் றையும் கையளித்தனர். தேசிய பிக்குகள் முன்னணியின் தலைவர் வண. தம்பர அமில தேரரின் தலைமையிலான இந்தப் பாதயாத்திரை பிற்பகல் இரண்டு மணிக்கு புறக்கோட்டை போதி மரத்தடிச் சந்தியில் ஆரம்பமாகி ஒல்கோட் மாவத்தையின் ஊடாக ஜனாதிபதிச் செய லகம் நோக்கிச் சென்றது. இருப்பினும் இவர்களை ஜனாதிபதி செயலகம் வரை செல்லவிடாது ப…
-
- 1 reply
- 869 views
-
-
விடுதலைப் புலிகளின் ஆயுத தளபாடங்களை அழித்தொழிக்க அரசு உறுதிபூண்டுள்ளது: கோத்தபாய. விடுதலைப் புலிகளின் கோட்டையான வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள அவர் களின் இராணுவ உடைமைகள் ஆயுத தள பாடங்கள் அழித்து ஒழிக்கப்படும். அவற்றை விட்டுவைத்தால் போர் இன்னும் பல வருடங்களுக்கு நீண்டு செல்லும். இவ்வாறு கடும் தொனியில் கூறியிருக்கிறார் பாதுகாப்பு அமைச்சின் செயலாள ரும் ஜனாதிபதியின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஷ. விடுதலைப் புலிகளின் இராணுவ உடைமைகள் அவை எங்கிருந்தாலும் வடக்கில் என்ன, கிழக்கில் என்ன தெற்கில் என்ன நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தாலும் அவற்றை நாம் அழித்தே தீருவோம் கடற் புலிகளின் தளங்கள் இருக்கும் வரை, அவர்களிடம் ஆட்லறி தளங்கள் இருக்கும் வரை, விடுதலைப் புலிகள் எங்கு அழி…
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளை முறியடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் வாகரைப் படை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பின் அது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்த நடவடிக்கை மூலம் சனாதிபதி அரசியல் இலாபம் தேட முயன்றால் அது மிகவும் கண்டனத்திற்குரியதென்ற ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் கூற்றுக்கள் அரசியலில் அவர் இன்னமும் கற்றுக்குட்டி என்பதையே காட்டுகின்றது. 1971, 1988, 1989 காலப்பகுதியில் ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்தித் தமது கற்றுக்குட்டித்தனத்தால் தோல்வி கண்ட ஜே.வி.பி.யினர் அரசியலில் இன்னமும் அதே நிலையிலேயே உள்ளனர் என்பதையே ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்கவின் இக்கூற்றுக்கள் வெளிப்படுத்துபவையாகவுள்ளன. அவ்வாறு இல்லாதுவிடில் இராணுவ நடவடிக்கைகளை மகிந்த ராஜபக்ச அரசியல் அனுகூலத்திற்காகப…
-
- 0 replies
- 2k views
-
-
யாழ் நாவலர் வீதி பகுதியில் ஒரே இரவில் 8 வீடுகளில் ஆயுததாரிகள் கொள்ளை. யாழ்ப்பாணம் நாவலர் வீதிப்பகுதியில் ஒரே இரவில் 8 வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பணம் மற்றும் பொருட்களை கொள்ளையிட்டுள்ளனர். நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு 3 மணிநேரத்துக்குள் 8 வீடுகளிலும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இரவு 8 மணியளவில் கைத்துப்பாக்கிகள், வாள்கள், கத்திகள் சகிதம் வீட்டு வளவுகளுக்குள் புகுந்த கோஷ்டியொன்று தாங்கள் இராணுவத்தினர் என்றும் சோதனையிட அனுமதிக்குமாறும் கோரியுள்ளனர். எனினும் வீட்டு உரிமையாளர்கள் கதவுகளை திறப்பதற்கு மறுப்புதெரிவித்துளளனர். -Tamilwin-
-
- 0 replies
- 593 views
-
-
யாழில் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்பு. நேற்று வியாழக்கிழமை காலை கோப்பாய் காவல்துறையினரால் புதன்கிழமை இணுவில் கிழக்கு பகுதியில் இனம்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். குடும்பஸ்தரான இவர் வலிகாம் இணுவில் கிழக்கு இணுவில் அம்மன் கோவிலைச்சேர்ந்தவர் எனவும் இவரது உடலம் உரும்பிராய் கோவில் பகுதியில் கடத்தப்பட்ட பகுதியில் இருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடத்தி கொல்லப்பட்டவர் 32 அகவையுடைய நாகேந்திரம் ஆறுமுகதாசன் எனவும் இவர் உந்துருளி தரகர் வேலை செய்பவர் எனவும் அறியப்பட்டுள்ளது. இவரது உடலத்தை அவரது மனைவி இனம் காட்டியுள்ளதாகவும் அவர் திருமணமாகி ஒரு வருடமே பூர்த்தியாகியுள்ளதாகவும் குடிசார் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் க…
-
- 0 replies
- 753 views
-
-
யாழில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம். யாழ். குடாநாட்டில் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவு துண்டுப் பிரசுரம் ஒன்றை இன்று வியாழக்கிழமை வெளியிட்டிருக்கின்றது. இத்துண்டுப் பிரசுரத்தில் யாழ்ப்பாணத்தில் ஒட்டுக்குழுக்கள் மற்றும் இராணுவப் புலனாய்வாளர்களுடன் இணைந்து இயங்குபவர்களுக்கு இறுதி எச்சரிக்கை பகிரங்கமாக விடுக்கப்பட்டிருக்கின்றது. பொதுமக்கள் கூடும் இடங்களில் துண்டுப்பிரசுரம் ஒட்டப்பட்டுள்ளதுடன் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் பொது அமைப்புக்களுக்கும் ஒட்டுக்குழு முறியடிப்புப் பிரிவினர் துண்டுப் பிரசுரம் அனுப்பியிருக்கின்றனர். துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: அன்பார்ந்த யாழ். குடாநாட்டு மக்களே!!! "மல…
-
- 4 replies
- 1.8k views
-
-
கிழக்கு முஸ்லிம் கவுன்ஸில் பிரதிநிதிகள் கொழும்பில் கருணா குழுவுடன் பேச்சு கிழக்கில் அண்மைக் காலமாக இடம் பெற்ற தமிழ் முஸ்லிம்களுக்கு இடையி லான அசம்பாவிதங்களை அடுத்து அங்கு நிரந்தர நல்லுறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் 52 நிறுவனங்களின் கூட்டமைப் பான முஸ்லிம் கவுன்ஸில் கடந்த திங்கட் கிழமை கருணா அணியினரைச் சந்தித்துப் பேசியுள்ளது இச்சந்திப்பு திங்கட்கிழமை கொழும்பில் உள்ள கருணா அணியினரின் அலுவல கத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது தமிழ் முஸ்லிம் உறவைக் கட்டியெழுப்பும் நோக்கில் இரு தரப்பினராலும் எட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முஸ்லிம் கவுன்ஸிலின் சார்பில் அதன் தலைவர் என்.எம். அமீன், பொதுச் செய லாளர் எம்.டிஎம். ரிஷ்வி, அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. ம…
-
- 3 replies
- 1.2k views
-
-
புலிகளின் இராணுவத் தளங்கள் அழித்து ஒழிக்கப்படும் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவத் தேவைகளுக்கான சொத்துகள்,தளபாடங்கள் உட்பட புலிகளின் அனைத்து விதமான இராணுவக் கட்டமைப்புகளும் அழித்தொழிக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள புலிகளின் இராணுவ சொத்துகள் உட்பட கடற்புலித் தளங்களாகட்டும் ஆட்டிலறி தளங்களாகட்டும் அவை நாட்டின் வடக்கோ கிழக்கோ தெற்கோ எங்கிருப்பினும் முற்றாக அழிக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளதுடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறும் தனித் தமிழீழம் என்பது இப்பொழுது ஒரு நகைச்சுவையாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்
-
- 0 replies
- 790 views
-
-
மன்னார் தாளுப்பாடு கடற்பரப்பில் இன்று அதிகாலை 5.45 மணியளவில் விடுதலைப்புலிகள் கடற்படையினரின் முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரு படகுகளில் வந்த விடுதலை புலிகள் தாளுப்பாடு கடற் படை முகாம் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். கடற் படையினர் இத் தாக்குதலிற்கு பதில் தாக்குதல் நடத்தி முறியடித்துள்ளதாகவும் இதில் ஒரு கடற்படை வீரர் காயமடைந்துள்ளதாகவும் ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.
-
- 0 replies
- 812 views
-
-
நேற்று மாலை 5.30 மணியளவில் ஜானகபுரத்திற்கும் கொக்குதொடுவாயிற்கும் இடைப்பட்ட காட்டுப்புறத்தில் இடம்பெற்ற துப்பாக்கி மோதலில் ஒருசிப்பாய் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகமையம் தெரிவித்துள்ளது மணலாற்றுக்கும் திருகோணமலை வடக்கிற்கும் இடைப்பட்ட கரையோரப்பிரதேசங்களை ஆக்கிரமிக்கும் வேலை தொடங்கி விட்டதுபோலுள்ளது.
-
- 0 replies
- 781 views
-
-
குடாநாட்டு பாடசாலைகளை புறக்கணிக்க முடிவு: தமிழ் மாணவர் ஒன்றியம் அறிவிப்பு. கடத்தப்பட்ட வடமராட்சி மாணவர்களின் விடுதலையினை வலியுறுத்தி யாழ். குடாநாட்டு பாடசாலைகள் அனைத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் மாணவர்கள் குதிக்கும் நிலை தோன்றியுள்ளதாக தமிழ் மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது. கடத்தப்பட்ட க.லதீஸ்வரன் உள்ளிட்ட வடமராட்சி பாடசாலை மாணவர்களான ப.தனஞ்சயன், மு.பரமானந்தம் ஆகியோரை விடுவிக்கக் கோரி வடமராட்சி மாணவர்கள் இவ்வாரம் பாடசாலை செல்லாது புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நடவடிக்கைக்கு மதிப்பளித்து சாதகமான சமிக்ஞையினை படைத்தரப்பினர் தெரிவிக்காதததால் அடுத்த வாரம் முதல் யாழ். குடாநாட்டு மாணவர்கள் தங்கள் பாடசாலை செயற்பாடுகளை முற்றாக நிறுத்தி கடத்தப்பட்ட ச…
-
- 2 replies
- 978 views
-
-
மஹிந்தவின் இறுதிப்போரை எதிர்கொள்ளும் விடுதலைப் புலிகள் -சி.இதயச்சந்திரன்- எவராலும் இலகுவில் அனுமானிக்க முடியாததொரு புதிய பரிமாண வடிவத்தை வெளித்தள்ளப்போகிறது நடைபெறவிருக்கும் இறுதி யுத்தம். எதிரியின் சமகால போரியல் உத்திகளை கூர்ந்து அவதானிக்குமொருவர், முன்னைய கால விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரங்களை முறியடிக்கும் தந்திர உபாயங்களை அரசு தற்போது பிரயோகிப்பதை உணர்ந்து கொள்வார். இருப்பினும் இனிவரும் யுத்த களத்தில் புலிகளால் மேற்கொள்ளப்படும் மரபு கெரில்லா போர் வழிமுறைகளைக் கற்று, அடுத்ததொரு யுத்தத்தினை எதிர்கொள்ள வேண்டிய அவசியமும் அரசுக்கு ஏற்படச் சாத்தியமில்லை. ஆயினும் வடக்கை இழந்தாலும், கிழக்கையாவது தக்க வைக்கும் கடைநிலை முடிவினை தமது மூல உபாயத்தில்…
-
- 15 replies
- 4.8k views
-
-
கிழக்கு மாகாணத்தில் தொப்பிகல வரையிலான பகுதிகளைக் கைப்பற்றும் வரை இராணுவ நடவடிக்கை தொடரும் என்று கிழக்கு மாகாண இராணுவ கட்ட ளைத் தளபதி மேஜர் ஜெனரல் பராக்கிரம பன்னிப்பிட்டிய தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இதுவரை கைப்பற்றப்பட்ட பகுதிகளில் பாதுகாப்பைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளில் 20 சதவீதமானவற்றைப் படை யினர் மீட்டுள்ளனர். மட்டக்களப்பு திருகோணமலை நெடுஞ்சாலை மீளத்திறக்கப்பட்டு இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வாக்காளர் பதிவேடுகளின் அடிப்படை யிலேயே மக்கள் மீளக் குடியமர்த்தப்படவுள்ளனர். வாகரைப் பகுதியில் புலிகளால் கைவிடப்பட்ட முகாம் ஒன்றில…
-
- 2 replies
- 1.5k views
-
-
இந்திய தூதுவருடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிகள் சந்திப்பு. திருகோணமலையில் அனல்மின் நிலையம் அமைப்பதற்கான இடம் இன்னமும் தெரிவு செய்யப்படவில்லை. அந்த விடயத்தில் இந்தியா அவதானமாகவே செயற்படும் என இந்தியத்தூதுவர் அலோக் பிரசாத் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிகளிடம் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் சில பிரதேசங்களில் இருந்து இடம் பெயர்ந்த தமிழ் மக்களை மிள குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா கவனம் செலுத்தும் என்றும் அவர் கூட்டமைப்பு எம்பிகளிடம் உறுதியளித்துள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பிகள் இந்திய தூதுவர் அலோக் பிரசாத்தை கொழும்பிலுள்ள அவர் அது உத்தியோகப்பூர்வ இல்லட்தில் இன்று சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கூட்ட…
-
- 0 replies
- 998 views
-
-
பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் யாழில்? பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் இருவர் நேற்று யாழ் குடாநாட்டிற்கு இரகசிய விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இவர்களுடன் கடற்படை உயர்மட்ட குழுவினரும் நேற்று குடா நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர். இக்குழுவினர் உலங்குவானூர்தி மூலம் குடாநாட்டின் கரையோரப் பகுதிகளை பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து இக் குழுவினர் நேற்றும் இன்றும் காங்கேசன்துறைமுக கடற்படை தளத்தில் கடற்படை உயர் அதிகாரிகளுடன் சந்திப்புகளை மேற்கொண்டனா. இச்சந்திப்பின் போது விடுதலைப் புலிகளால் நடாத்தப்படும் கரும்புலித் தாக்குதல்களை கடலில் எவ்வாறு முறியடிப்பது தொடர்பாக பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் சிறிலங்கா கடற்படையினருக்கு விளக்கப்பயிற்சிகளை வழங்கியதாக காங்கேசன்துறைமுக கடற…
-
- 2 replies
- 1.7k views
-
-
மாத்தளைப்பகுதியில் 5 தமிழ்பொதுமக்கள் மீது தாக்குதல் அரசாங்கத்திற்கு சொந்தமான பேரூந்தல் பயணித்த ஐந்து மலையக மக்களை கடந்த திங்கட்கிழமை மாலை மாத்தளை உடத்தனாவ பகுதயில் வைத்து சிங்கள் காடையர்கள் தாக்கியள்ளார்கள். இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில் அப்பகுதியில் வாகரை படைநடவடிக்கையின்போது இறந்த இராணவத்தினரது இறுதிநிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்ததாகவும் பேரூந்தை வழிமறித்த காடையர்கள் தமிழ் மக்களை பேரூந்தில் இருந்து இறங்கச்சொல்லிய பின் அவர்களை தடிகளாலும் பொல்லுகளாலும் தாக்கியுள்ளார்கள். இதேவேளை அதற்கு அண்மையில் சிறீலங்கா படையினர் காவல்நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கதாகும். இதன்போது குறைந்தது இரு பெண் பயணிகளாவது தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கலாம் என ஊட…
-
- 0 replies
- 762 views
-
-
தெகிவளையில் 11 தமிழ் இளைஞர்கள் கைது நேற்று இரவு மற்றும் வியாழக்கிழமை அதிகாலை மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது சிறீலங்கா காவல்துறையினரால் 11 தமிழர்கள் கைதுசெய்யப்பட்டு காவல்நிலையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்கள
-
- 0 replies
- 921 views
-