Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடபோர்முனை, வாகரை களமுனைப்பகுதிகளில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் நான்கு போராளிகள் களப்பலியாகியுள்ளார்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடபோர்முனை கிளாலி களமுனையில் சிறீலங்கா படைகளுடன் நிகழ்ந்த மோதலில் அம்பாவை மாவட்டத்தை சேர்ந்த லெப்ரினட் கீதவாணன் என்றழைக்கப்படும் குவேந்திரராசா தயானந்தன், யாழ்மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை அருளன் என்றழைக்கப்படும் டேவிட் பிரேம்குமார் ஆகியோர் வீரச்சாவடைந்துள்ளனர். அதேநாளன்று முகமாலை களமுனையில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்றமோதலில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை கானகன் அல்லது அறிவுமதி என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணன் நவரதன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வாகரை களமுனையில் சிறீலங்கா படைகளுடன…

  2. மகிந்த - மங்கள மோதல் வலுக்கிறது [புதன்கிழமை, 24 சனவரி 2007, 05:33 ஈழம்] [அ.அருணாசலம்] {புதினம்} சிறிலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசு பக்கம் தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கும் நடவடிக்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மங்கள சமரவீர கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை, மகிந்தவிற்கு எழுதிய இரகசிய கடிதத்துடன் மகிந்தவிற்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் நடந்து வரும் பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக உயர்மட்ட அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. மங்களவின் கடிதத்தின் பிரதிகள் மகிந்தவின் ஆலோசகரான பசில் ராஜபக்ச மற்றும் டல்லஸ் அழகப்பெருமா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள…

  3. கிழக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைத்தரிப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினர் தமக்கான உணவு விநியோகம் தொடர்பில் பிரச்சினைகைள எதிர் நோக்குவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் அறுபதினாயிரம் பேர் இம்மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள போதிலும் அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் மாத்திரமே இடைத்தரிப்பு முகாம்களிலும், தற்காலிக முகாம்களிலுமே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இடைத்தரிப்பு முகாம்களில் தங்க வைக்கப்டப்டுள்ளோரை பொறுத்த வரை தங்களை பராமரித்து வரும் அரச சார்பற்ற அமைப்பகளினால் தொடர்ந்தும் சமைத்த உணவு வழங்கப்படுவது குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். உணவு போதாது என்றும் சிலர…

  4. கொழும்பு காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பில் நான்கு காவல்துறைநிலையங்களில் தடுத்து வைத்திருந்த 12 தமிழ் இளைஞர்கள் காலியில் அமைந்துள்ள பூசா தடுப்பு முகாமிற்கு அனுப்பியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கட்கிழமை இந்த 12 பேரையும் பம்பலப்பிட்டிய காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றபின் பூசா தடுப்புமுகாமிற்கு அனுப்பியுள்ளார்கள். இவர்களுள் ஊடகத்துறையை சேர்ந்த பெண் மற்றும் இருதய நோயிற்கு உள்ளான வயோதிபரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்து. இவர்கள் எவரும் சட்டவிரோதமான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாதபோதும் பூசாவிற்கு அனுப்பியுள்ளதாக அறியமுடிகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  5. நேற்று முன்தினம் மட்டக்களப்பு - கொழும்பு வீதியில் சிறீலங்கா படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது விடுதலைப்புலிகளின் தரப்பில் மட்டக்களப்பு கன்னங்குடா பகுதியை சேர்ந்த கப்டன் உமாமகன் என்றழைக்கப்படும் மாணிக்கம் உமலிப்போடி என்ற போராளி வீரச்சாவை தழுவிக்கொண்டுள்ளார். இந்த மாவீரரின் வித்துடல் நேற்று காலை கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள தமிழீழ அரசியல்துறை மாவட்டத்தில் வைக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  6. புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் தாக்குதல்களை அரசு தொடரும்: கெஹெலிய ரம்புக்வெல. கிழக்கு மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டில் இருந்து மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் அரசு பாரியளவு வெற்றியீட்டியுள்ளது. ஒரு பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டிற்குள் சிக்கும் மக்களை இனவேறுபாடின்றி மீட்டெடுப்பதற்கான தாக்குதல் நடவடிக்கையை அரசு தொடர்ந்து முன்னெடுக்கும். இவ்வாறு அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றுகையில் கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கிழக்கில் மூவின மக்களையும் இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல…

  7. இறுதித்தீர்வுத் திட்டத்தை விடுதலைப் புலிகளுக்கு சமர்ப்பித்து புலிகளுடன் பேசுக: ஐ.தே.க. அனைத்து கட்சிக்குழுவினால் முன்வைக்கப்படும் இறுதித்தீர்வுத் திட்டத்தை விடுதலைப் புலிகளுக்கு சமர்ப்பித்து பின்னர் அதில் உள்ள அதிகாரப்பகிர்வு முறைகள் அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட வேண்டும். திஸ்ஸ விதாரனவின் தீர்வுத்திட்டம் தொடர்பாக கருத்துக் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. திஸ்ஸ விதாரனவின் தீர்வுத் திட்டம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதி கே.என்.சொக்சி கட்சியின் கருத்தினை தெரிவிக்கையில், அனைத்து கட்சிக்குழு புதிய அரசியல் யாப்பை எழுதாது, இனப்பிரச்சனைத் தீர்வுக்கான காரணிகளை கண்டறிவதுடன் அது தொடர்பாக ஏனைய கட்சிகளு…

  8. விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளராக அடேல்? அண்மையில் காலமான விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் புலிகளின் சர்வதேச பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்தியப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசாங்க தரப்பிலிருந்து விடுதலைப்புலிகள் கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்திற்கு புலிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் பணியை அடேல் சிறப்பாக மேற்கொள்வாரென புலிகள் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. தமிழ் மக்களின் போராட்டத்துடனும் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் நீண்டகால தொடர்புவைத்துள்ள அடேல், தமிழீழ விடுதலைப்புலிகள் …

  9. வீதி அபிவிருந்தி அதிகாரசபை ஊழியர்கள் மூவர் கடத்தல் - நால்வர் சுடப்பட்டு படுகாயம். வவுனியா மாவட்டம், உயிலங்குளம் பகுதியில் வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்கள் நால்வர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுப் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். தனியார் ஊர்தி ஒன்றில் குறித்த பணியாளர்கள் வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மகிழுந்து ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இவர்களின் ஊர்தியை வழிமறித்துள்ளனர். முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த இவ்வூர்தியின் ஓட்டுனரை செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் ஆயுததாரிகளின் பிடியிலிருந்து தப்பியோட முயன்ற நான்கு ஊழியர்கள் சுடப்பட்டு படுகாயப்படுத்தப்பட்டனர். ஏனைய மூவரும் கடத்திச்…

  10. நிதி வழங்கும் உலக நாடுகளை ஏமாற்றுகிறது சிறிலங்கா: இளந்திரையன் குற்றச்சாட்டு பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல விடுதலைப் புலிகள், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதாக அறிவித்தால் இராணுவமும் உடனடியாக சண்டையை நிறுத்தும் என கூறியிருந்தார். அது குறித்து கருத்துக் கேட்டபோதே விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தமிழ்முரசிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார். …

  11. அடுத்த கட்டமாக மட்டக்களப்பின் மேற்கு பக்கமாக தாக்குதல் நடவடிக்கை செவ்வாய் 23-01-2007 07:09 மணி தமிழீழம் [செந்தமிழ்] வாகரையில் முன்னெடுக்கப்பட்ட படையெடுப்பு,அடுத்த கட்டமாக தமிழீழ விடுடுதலைப்புலிகளின் ஆளுகைக்கு கீழுள்ள, மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு பீரதேசங்களை நோக்கி தொடுக்கப்படும் என அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இன்று ரொய்டர் செய்திச் சேவைக்கு செவ்வியளித்திருக்கும், சிறீலங்கா பாதுகாப்புத்துறை பேச்சாளர் அமைச்சர் கெஹெலலிய ரம்புக்வெல, வாகரைக்கு அடுத்ததாக தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகையின் கீழுள்ள தொப்பிக்கல் காட்டுப்புறத்தை நோக்ககி, வலிந்த படையெடுப்பை படையினர் தொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

  12. புதன் 24-01-2007 01:27 மணி தமிழீழம் [மோகன்] உடுப்பிட்டியில் இளைஞர் சுட்டுக்கொலை இன்று முற்பகல் 11 மணியளவில் வடமராச்சி உடுப்பிட்டி பகுதியில் இளைஞர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் இன்னமும் இனம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com

  13. கைது செய்யப்பட்ட 571 பேரின் விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் திரட்டியுள்ளது வீரகேசரி நாளேடு சர்வதேச செஞ்சிலுவை குழுவானது பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கைது செய்யப்பட்ட 571 பேர் தொடர்பான தகவல்களை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சேகரித்துள்ளது. அத்துடன் இக்குழு காணாமல் போனதாக அல்லது கைது செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட 334 பேர் தொடர்பிலும் விபரங்களைத் திரட்டியுள்ளது. மேலும் சிறுவர்களை படைகளில் சேர்ப்பது தொடர்பாக 199 முறைப்பாடுகளும், மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக 81 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆறுமாத காலப்பகுதியில் யுத்த சூழ்நிலை காரணமாக திருகோணமலை, கந்தளாய், கிண்ணியா மற்றும்…

  14. வாகரையை கைப்பற்றி விட்டதாக சிறிலங்கா படைகள் அறிவித்துள்ளன.

  15. காங்கேசன்துறைக்கு செல்ல இருந்த படைகளிற்கான வழங்கல்களை தடுக்க முயற்சி? http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20990

  16. நாட்டில் முழு அளவிலான போர் தொடங்கி விட்டது. சமாதானமென்பது இனி சாத்தியமற்றதென்ற நிலையில் போர் தீவிரமடையப் போகின்றது. கிழக்கிலிருந்து புலிகளை முழுமையாக அப்புறப்படுத்தப் போவதாக அரசும் படைத்தரப்பும் சூளுரைத்து வருகையில் கிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. வடக்கு- கிழக்கு மாகாணத்தை வெவ்வேறாகப் பிரிக்கும் திட்டத்தை அரசு தீட்டிய அன்றே, கிழக்கில் தமிழர் பலத்தை வெகுவாகக் குறைத்து விட வேண்டுமென்றும் திட்டமிடப்பட்டது. கிழக்கை தனியாகப் பிரித்து அங்கு புதிய மாகாண சபையொன்று அமைக்கப்படும் போது அந்த மாகாண நிர்வாகத்துக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடாதென்பதில் அரசு மிகவும் கவனமாயிருந்தது. கிழக்கில் தமிழ் பேசுவோரின் பலத்தை இழக்கச் செய்வதன் மூலமே அங்கு சிங்கள ஆதிக…

  17. சாவகச்சேரியில் குண்டுவெடிப்பு: 2 பொதுமக்கள் பலி- 10 பொதுமக்கள் படுகாயம். யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி சந்தையில் விற்பனை கொள்வனவுக்காக மக்கள் கூடிநின்ற இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவ இடத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோர் யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். -Puthinam-

  18. வாகரை வெற்றியை அடுத்து கெயஹலிய இறுமாப்பு உடன் பேச்சுக்கு வாருங்கள் இல்லையேல் சண்டைதான் புலிகளுக்கு அரசு எச்சரிக்கை கொழும்பு, ஜனவரி 23 "மோதல்களை நிறுத்தி பேச்சு மேசைக்குத் திரும்புவதற்கு புலிகள் விரைந்து உடன்பட வேண்டும். இல்லையேல் மேலும் மோசமான சண்டைக்கு அவர்கள் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்." இவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கின்றது இலங்கை அரசு.வாகரையைக் கைப்பற்றிய இராணுவ வெற்றியை அடுத்து இலங்கைப் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, இறுமாப்புடன் இவ்வாறு அறிவித்தார். இத்தகவலை "ரோய்ட்டர்' செய்தி நிறுவனம் வெளியிட்டது. நைந்து போயுள்ள 2002 ஆம் ஆண்டின் யுத்த நிறுத்த உடன்பாட்டின் பிரகாரம் விடுதலைப் புலிகளின் கட்…

    • 3 replies
    • 2k views
  19. ஐந்தாண்டுகள் பூர்த்தியாவதற்குள் போர் நிறுத்த உடன்படிக்கையை இரத்து செய்யவும் - ஜனாதிபதியிடம் தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியம் வேண்டுகோள். தேசிய ஒருங்கமைப்பு ஒன்றியத்தினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பின்போது ஒன்றியத்தின் சார்பில் பிக்குமார்களான பெங்கமுவே நாலக தேரர், தம்பர அமில தேரர், ஓமாரே கஸ்ஸப்ப தேரர் மற்றும் கலாநிதி குணதாச அமரசேகர, விமல் வீரவன்ச எம்.பி., சிரேஷ்ட சட்டத்தரணியான எஸ்.எல்.குணசேகர போன்றோர் கலந்துகொண்டனர். இதன்போது, நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பாகவும் அரசின் எதிர்கால அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் விரிவாக பேசப்பட்டதாக ஜனாதிபதி செயல…

    • 21 replies
    • 4.1k views
  20. அன்பு உறவுகளே! இச்செய்தி முக்கியமாக லண்டன் கனடாக்காரர்களுக்கு பிரத்தியோகமான வேண்டுகோளாகும். தற்சமயம் எங்கள் நாட்டின் நிலையை கருத்தில்கொண்டு ஐக்கியநாடுகள் சபையே உலகநாடுகளிடம் விடுத்திருக்கும் வேண்டுகோளே இலங்கை அகதிகளிடம் கருணைகாட்டுங்கள் என்பதுதான். இதற்கு அவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் தெரியுமா? இவர்களால் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்க கஸ்டமாக இருக்கிறது. குற்றசெயல்களில் முன்ணணியிலிருக்கிறார்கள். எம்மவர்கள் மீது அவர்களிடம் இருக்கும் ஆதாரம் தற்போது உலகவலைப்பின்னலாக நடக்கும் தொழில் வங்கிஅட்டைகள்,போலிஅரச ஆவணங்கள்தயாரித்தல், கோஸ்டி மோதல்கள் (இது சம்பந்தமாக கனடாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவரொருவர் புலனாய்வுபணியகத்தில் தொழில்புரிவதாகவும் ஒரு தகவல். …

    • 4 replies
    • 2.2k views
  21. செவ்வாய் 23-01-2007 13:41 மணி தமிழீழம் [சிறீதரன்] வவுனியாவில் 3 பேர் கடத்தப்பட்டுள்ளார்கள், 4 பேர் காயம் வவுனியாவில் வீதி அபிவிருத்தி சபை ஊழியர்கள் மீது இனம்தெரியாத ஆயுததாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிபிரயோகத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர் இதேவேளை வவுனியாவில் தனியார் வாகனம் ஒன்றில் பயணம் செய்த மூவர் காலை 8 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்கள். மகிளுர்தியில் சென்ற ஆயுததாரிகள் குறிப்பிட்ட வாகனங்தை தடுத்து நிறுத்தி அந்த வாகனத்தின் முஸ்லீம் வாகனசாரதியை விடுவித்தபின் வாகனத்தில் சீருடையணிந்த 7 பேரையும் கடத்த முயன்ற போது தப்பியோட எத்தனித்த 4 பேரும் காயங்களுக்கு உள்ளகியுள்ளதாகவும் ஏனைய மூவரையும் கடத்தில் சென்றுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை காயமடைந்தவர்கள் வவுனியா வ…

  22. வடக்கில் உயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் மக்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாக, மீளக் குடியமர்த்தக்கூடியோரின் விவரங்கள் அடங்கிய பட்டியலை விரைந்து உடனடியாக சமர்ப்பிக்கும்படி யாழ்ப்பாணம் அரச அதிபருக்கு உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வலிகாமம் வடக்குப் பிரதேச விவசாயிகள் இருவர் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் நேற்று நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிமன்றம் இப்படி உத்தரவு பிறப்பித்தது. வலிகாமம் வடக்கில் பெரும் நிலப்பிரதேசம் உயர் பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதால், பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் பாரம்பரிய பூமியிலிருந்து விரட்ட…

  23. சிறிலங்கா அரசின் மோசடி நாடகம்! சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக பலவிதமான பரப்புரைகளை மேற்கோண்டுவருகிறது. இந்தப் பரப்புரைகள் பொய்யும், மோசடியும் நிறைந்தவைகளாக காணப்படுகின்றன. ஆயினும் சில சர்வதேச ஊடகங்கள் சிறிலங்கா அரசின் செய்திகளுக்கு முன்னுரிமை கொடுத்து வெளியிட்டு வருகின்றன. தற்பொழுது சிறிலங்கா அரசு மீண்டும் ஒரு பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. நேற்று (21.01.07) சிறிலங்கா படைகளினால் கைப்பற்றப்பட்ட 4 விடுதலைப்புலிகளின் உடல்களோடு, ஒரு கடிதமும் கைப்பற்றப்பட்டதாகவும், அக் கடிதத்தில் விடுதலைப்புலிகள் தன்னை கட்டாயப்படுத்தி படையில் சேர்த்ததாக எழுதப்பட்டிருப்பதாகவும் சிறிலங்காவின் பாதுகாப்புத் தரப்பு அறிவித்துள்ளது. அத்துடன்…

    • 4 replies
    • 2.1k views
  24. இலங்கை இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது தமிழ் மக்களை அழிப்பது தான் என்பதை சிங்கள் தேசம் மீண்டும் ஒரு முறை நடைமுறைப்படுத்தத்தொடங்கி விட்டது என்பது உறுதியாகியுள்ளது. இதன் வெளிப்பாட்டைத்தான் மன்னார் இலுப்பைக் கடவை படகுத் துறை கிராமத்தின் மீதான தாக்குதல் உணர்த்தி நிற்கின்றது. இத்தாக்குதலானது இன அழிப்பு நோக்கில் சிறிலங்கா பேரின வாதிகளால் நன்றாகத் திட்டமிட்டப்பட்டு மேற் கொள்ளப் பட்டுள்ளது. இத்தாக்குதல் மேற் கொள்ளப் படுவதற்கு முதல் நாள் அதாவது கடந்த ஜனவரி முதலாம் நாள் சிறிலங்காப் படைதுறைப் பேச்சாளர் ஒருவர் மன்னாரில் தமிழீழ விடுதலைப் புலிகள் தளம் அமைத்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். என ஊடகம் ஒன்றிற்கு கருத்துரைத்திருந்தார். ஆனால் விடுதலைப் புலிகளின் தளங்கள் எவையும் மக்கள் கு…

  25. இன்று திங்கட்கிழமை முதல் 15000 க்கு மேற்பட்ட வடமராச்சிப்பகுதி மாணவர்கள் அண்மையில் கடத்தப்பட்ட ஹட்லிக்கல்லூரி, வேலாயுத மகாவித்தியாலய மாணவர்களை விடுவிக்கக் கோரி காலவரையறையற்ற வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொண்டள்ளார்கள். ஹட்லிக்கல்லூரி மாணவன் பிரகலாதன், மற்றும் nஐகன் வேலாயுத மகாவித்தியாலய மாணவன் ஆகியோர் அண்மையில் இனம்தெரியாத ஆயுததாரிகளால் கடத்தப்பட்டமை தெரிந்ததே. கடந்த ஒருவாரமாக மாணவர்கள் போராட்டங்கள் நடாத்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. வடமாராச்சி மாணவர் ஒன்றியம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்குள் இம்மாணவர்களை விடுவிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்காதவிடத்து அனைத்து அரசஅலுவலகங்களின் நடவடிக்கைகளும் முடக்கப்படும் எனவும் தெரிவி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.