ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143296 topics in this forum
-
இன்று திங்கள் காலை 9.30 மணியளவில் மோட்டார் சைக்கிலில் வந்த இரு ஆயுததாரிகளினால் சாவகச்சேரி நகர சபை பொதுசந்தை இறைச்சிக் கடை ஒன்றினுள் வைத்து இரு இளைஞார்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 22 அகவையுடைய குணரெட்ணம் தர்சன் சம்பவ இடத்தில் கொல்லப்பட்டுள்ளார். மற்றொருவரான 27 அகவையுடைய செல்லத்தம்பி செல்வரூபன் என்பவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரழந்துள்ளார். இரு சடலங்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
-
- 0 replies
- 953 views
-
-
விசுவமடு. மக்கள் குடியிருப்புகள் மீது கிபீர் தாக்குதல் - பண்டார வன்னியன் Monday, 12 February 2007 12:02 முல்லைத்தீவு விசுவமடு பகுதியில் இன்று காலை 9.20 மணியளவில் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான ஆறு கிபீர் விமானங்கள் மக்கள் குடியிருப்புகள் அன்டிய பகுதிகளில் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்க்கொண்டுள்ளது.இத் தாக்குதலின் போது மக்கள் பாதுகாப்hன இடங்களை நாடியமையால் எவ்வித உயிர்ச்சேதமும் ஏற்ப்படவில்லை. இத் தாக்குதலில் போது கிபீர் விமானங்களுக்கு உருதுனையாக வேவு விமானங்களும் சுற்றிக்கொண்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. http://sankathi.org/news
-
- 4 replies
- 1.4k views
-
-
அமைச்சர் பதவிகளிலிருந்து அநுரா பண்டாரநாயக்கா, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோர் நீக்கப்பட்ட நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் முக்கிய அமைச்சர்கள் பலர் ஹொரகொல்லையில் அநுரா பண்டாரநாயக்காவை சந்தித்து நீண்ட நேரம் பேசியுள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ 3 நாள் விஜயமொன்றை மேற்கொண்டு மாலைதீவு சென்ற நிலையில் ஹொரகொல்லையில் அநுரா பண்டாரநாயக்காவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்தச் சந்திப்பு முற்பகல் 11 மணியிலிருந்து மாலை 4 மணிவரை இடம்பெற்றதாகவும் தெரியவரும் அதேவேளை, இவ்வாரம் நாடு திரும்பும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரதுங்க தலைமையில் புதிய அணியொன்று உருவாகவிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக மேலும் தெரியவருவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
மாதா சொரூபத்தின் கண்களில் இருந்து இரத்தம் கசிவதைக் காண மக்கள் கூட்டம். யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள புனித யுவானியார் தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள மாதா சொரூபத்தில் இருந்து இரத் தம் கசிவதைப் பார்ப்பதற்கு பெரும் எண்ணிக்கையான மக்கள் நேற்று அங்கு கூடினர். அந்த ஆலயத்துக்கு சமீபமாக வசிக்கும் ஆசிரியர் ஒருவரின் வீட்டில் இருந்த மாதா சிலையின் கண்களில் இருந்து சிவப்பாகக் கண்ணீர் கசியத் தொடங்கியதாகவும், அதனை முதலில் அவ்வீட்டுச் சிறுமி தந்தைக்குக் காட்டியதாகவும் கூறப்பட்டது. மாதாவின் கண்களில் இருந்து இரத்தம் கசிந்து கொண்டிருப்பதை அவதானித்த ஆசிரியர் சொரூபத்தை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று அங்கு வைத்தார் என்றும் அறிய வந்தது. தேவாலயத்தில் உள்ள சிறிய தேர் ஒன்றில…
-
- 37 replies
- 7.9k views
-
-
விமான நிலையத்தில் தடையை மீறி தப்பிச்சென்ற காரினால் பரபரப்பு! தடுக்கமுயன்ற சிப்பாய் மோதுண்டு மரணம். கட்டுநாயக்க விமானநிலையத்துக்குச் செல்லும் பாதையில் கார் ஒன்று சோதனைக்குத் தரிக்காமல் தப்பிச்சென்றிருக்கிறது. அதனை மறிக்க முற்பட்ட விமானப் படைச்சிப்பாய் அந்தக் காரினால் மோதுண்டு உயிரிழந்தார் எனக் கூறப்படுகிறது. தப்பிச்சென்ற காரின் சாரதியைப் பொலிஸார் தேடிவருகின்றனர். நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் விமானநிலைய வீதியில் வாகனச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குறிப்பிட்ட சிப்பாய் வேகமாக வந்த கார் ஒன்றை வழிமறிக்க முற்பட்டார். அப்போது கார் அவரை மோதிவிட்டு வேகமாகச் சென்று மறைந்துள்ளது. மோதுண்ட சிப்பாய் உயிரிழந்தார். தப்பிச் சென்ற கார் பின்னர் மொற கொட…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐ.நாவில் இன்று சிறீலங்கா தொடர்பான விவாதம் சிறுவர்களும், ஆயுதமோதல்களுக்குமான ஐ.நாவின் சிறப்புப் பிரதிநிதியான அலன் றொக் கடந்த ஆண்டு சிறீலங்காவிற்கு மேற்கொண்ட 10 நாள் விஜயம் தொடர்பான அறிக்கையை இன்று ஐ.நா பாதுகாப்புச் சபையின் செயற்குழு கூட்டத்தில் சமர்ப்பிக்கவுள்ளார். றொக்கின் சிறீலங்கா விஜயத்தின் போது சிறீலங்கா அரசின் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் படைக்கு சிறுவர்களை சேர்ப்பதாகவும். அதற்கு அரசு ஆதரவு வழங்கிவருவதாகவும் அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளது எனவும் தெரிவித்திருந்தார். சிலசமயங்களில் அரச படைகள் கருணா குழுவினருக்கான சிறார்படை சேர்ப்பில் நேரடியாக பங்குபற்றியதாகவும் அவர் கூறியிருந்தார். சிறீலங்காவில் மனிதாபிமானப் பணிகளை மேற்கொள்வதில் உள்ள தடை…
-
- 29 replies
- 5.2k views
-
-
நுவரெலியாவில் ஆயுதங்கள் மீட்பு சந்தேகத்தில் ஏழு தமிழர்கள் கைது! நுவரெலியா பஹகஸ் தோட்டம் பகுதியில் ஆயுதங்கள் சில மீட்கப்பட்டமை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஏழு தமிழ் இளைஞர்கள் கைதாகியுள்ளனர் நேற்றுமுன்தினம் இந்தத் தோட்டப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த டெட்டனேற்றர்கள் 7, கைக்குண்டு 01 மற்றும் ரீ 56 ரக துப்பாக்கிக்குரிய மகஸீன்கள், முப்பது ரவைகள், டோர்ச் லைட் என்பவற்றைப் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர். இதனையடுத்து ஆயுதங்கள் கைப் பற்றப்பட்ட பகுதியில் தேடுதல் மேற்கொண்ட பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஏழு தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து தடுத்து வைத்துள்ளனர். -Uthayan-
-
- 0 replies
- 677 views
-
-
சனி 27-01-2007 16:10 மணி தமிழீழம் [சிறீதரன்] சிறீலங்கா இராணுவத்துக்கு புதிதாக ஆட்சேர்ப்பு சிறீலங்கா இராணுவத்திற்கு புதிதாக 2000 பேரை இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன எதிர்வரும் 29ம் திகதி முதல் அடுத்த மாதம் 4ம் திகதி வரை இதற்கான நேர்முகப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளுடனான முழு அளவிலான யுத்தம் ஒன்றிற்கு தயாராகி வரும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது படை பலத்தை அதிகரிப்பதற்கு கடுமையான முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றது கிழக்கில் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் பெறப்பட்ட தற்காலிக வெற்றிகளை பயன்படுத்தி சிங்கள இளைஞர்களை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதற்கு ஸ்ரீலங்கா ஜனாதிபத…
-
- 19 replies
- 3.1k views
-
-
ஞாயிறு 11-02-2007 22:24 மணி தமிழீழம் [செந்தமிழ்] வன்னிக்கான பாதையை சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ளது. வவுனியா ஓமந்தை விளக்கு வைத்தகுளம் சோதனை நிலையத்தை, இன்று முன்னறிவித்தல் இன்றி சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ளது. இன்று வன்னியில் இருந்தும், வவுனியா தெற்கில் இருந்தும் விளக்கு வைத்தகுளம் சோதனை நிலையத்திற்கு சென்ற பொதுமக்கள், சிறீலங்கா படைகளால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். யாழ் குடாநாட்டிற்கான A-9 நெடுஞ்சாலை மூடப்பட்டு இன்றுடன் சரியாக ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வன்னிக்கான தரைவழிப் பாதையையும் சிறீலங்கா அரசாங்கம் மூடியுள்ளது. கடந்த காலத்தில் வன்னியில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் குடாநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்…
-
- 5 replies
- 1.5k views
-
-
[sunday February 11 2007 09:21:58 PM GMT] [pathma] உன்னிச்சை, ஆயித்தியமலை ஆகிய பகுதிகளை நோக்கி மேற்கொள்ளப்படும் எறிகணைத் தாக்குதலினால் உன்னிச்சைக் குளத்துக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அச்சம் தெரிவிக்கப்படுகின்றது. மேற்படி குளம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் அமைந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பாரிய குளம் இதுவாகும். 28 அடி உயர நீர் கொள்ளளவு கொண்ட இக்குளம் 1957ஆம் ஆண்டு உடைப்பெடுத்து பலரைப் பலிகொண்டது குறிப்பிடத்தக்கது. தற்போது அப்பகுதிகளை நோக்கி வீசப்படும் எறிகணை, குளத்தை அண்மித்த பகுதிகளில் வீழ்ந்து வெடிப்பதாகவும் இதனால் குள அணைக்கட்டுக்கு ஆபத்து ஏற்படலாம் என்றும் மட்டக்களப்பு நீர்ப்பாசனத் திணைக்களம், பாதுகாப்புப் படையினர…
-
- 0 replies
- 1.1k views
-
-
[TamilNet, Sunday, 11 February 2007, 00:01 GMT] Palaly military command announced Friday over radio broadcast from Palaly base that curfew hours in Jaffna peninsula have been extended by an hour to ten hours effective Friday. The new curfew hours begin at 6:00 pm and will last till 4:00 am the following day early morning. The new curfews hours will be strictly enforced in Vadamaradchy, Thenmaradchy, Valigamam and in the islands in the peninsula, the Sri Lanka Army (SLA) said in the broadcast. The extension of the curfew hours is believed to have been the direct result of the claymore attack at Urelu on Thursday. Although many SLA troopers are believed killed in…
-
- 0 replies
- 1k views
-
-
[11 - February - 2007] [Font Size - A - A - A] -ரட்ணம் கழகத் தலைவர் கேளி சில்வேரா "எமது" ரட்ணம் கழகம் 1950 ஆம் ஆண்டு தான் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், 1967 ஆம் ஆண்டு, அகில இலங்கை ரீதியில் கழகங்களிடையே யாழ். நகரில் நடாத்தப்பட்ட சினேகபூர்வ உதைபந்தாட்டப் போட்டியில் தான் எமது கழகம் முதலாவது சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. இதன் பின்பு தான் 1968 ஆம் ஆண்டு இலங்கை உதைப்பந்தாட்ட கட்டுப்பாட்டுச் சபை அகில இலங்கை ரீதியில் இளைஞர் அணியிகளிடையே நடாத்திய உதைபந்தாட்டப் போட்டியில் "மீரா" சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினோம்". இவ்வாறு இன்று அகில இலங்கை ரீதியில் முன்னிலை கழகமாகத் திகழும் ரட்ணம் கழகத்தின் தலைவர் கேளி சில்வேரா தெரிவித்தார். இவர் தினக்குரலுக்கு அளித்த விசேட பேட்டியில்…
-
- 0 replies
- 813 views
-
-
''சிறிலங்காவின் போரும் சிதைந்து போகும் தமிழரின் வாழ்வியலும்'' -அ. பிரியன்- நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு என் நெருங்கிய சினேகிதன் வந்தான் அவனை அடையாளம் காண்பதில் சற்றுத் தடுமாறி பின் நிதானித்தேன் ஏனெனில் ஏ-9 பாதை மூடப்பட்டதன் பின்பு அவனுடைய மனைவியும் மூன்று பிள்ளைகளும் கிளிநொச்சிக்கு வரமுடியாத நிலை மனைவியையும் பிள்ளைகளையும் காணாது கவலையோடு இருந்தவனுக்கு அவனது ஒரே ஒரு தம்பியையும் சிறிலங்காப்படையினர் யாழ்ப்பாணத்தில் சுட்டுக் கொன்றனர். இரண்டு துயரங்களும் ஒன்று சேர தலைமுடியும் தாடியும் வளர்த்து முனிவர் நிலை பூண்டிருந்தான் 33 வயதுடைய எனது நண்பன். அதே கோலத்துடன் பார்த்துப் பழகிய என் கண்கள் சற்றுத் தடுமாறியது நியாயமானதே. “இப்ப தான் ஆளப்பாக்கச் சந்தோஷமா…
-
- 0 replies
- 856 views
-
-
இனம் தெரியாதோரால் இருவர் படுகொலை... நேற்று யாழ் மாவட்ட சிறுபிட்டியை சேர்ந்த இருவர் அவர்களது வீட்டிற்க்கு சென்ற ஆயுதம் தரித்த வெள்ளை வான் கும்பலினால் கடத்தப்பட்டு படு கொலை செய்யப் பட்டுள்ளனர். அன்மை காலமாக யாழ் தீவகத்தில் தொடர்ந்து வரும் இந்த கடத்தல் நாடகங்களின் பின்னணியில் ஒட்டுக்குழக்களும் அரச புலனாய்வாளர்களும் ஈடுபட்டுள்ளது பல முறை தெரியவந்துள்ளது. அவ்வாறான ஒரு நிகழ்வே இங்கும் நடைபெற்றுள்ளது. இவ்வாறு இறந்தவர்களின் விபரம் வருமாறு. நவரட்ணம்- கீதன் வயது ( 30) மயில்வாகணம்- வயது - 50 இவர் சிறுபிட்டி பகுதியல் திருமணம் முடித்தவர் கோப்பாயை வசுப்பிடமாகவும் கொண்டவர். தனது உறவுகாறரை பிடிக்க வரும்போது அவரை தடுக்க முற்ப்பட்டபோது இவ…
-
- 0 replies
- 607 views
-
-
இராணுவ ரீதியான வெற்றிகளை அரசியலுக்கு சாதகமாக்க முயற்சி! -விதுரன்- புதிதாக வந்துள்ள அதி நவீன ஆயுதங்களுடன் அடுத்த கட்ட தாக்குதலுக்கு அரசு திட்டம் நாட்டில் ஸ்திரமற்றதொரு நிலை ஏற்பட்டுள்ளது. பெரும் போரில் அரசு குதித்துள்ள நிலையில் பெரும் அரசியல் குழப்பமும் ஏற்பட்டுள்ளது. கட்சிகளைப் பிரித்து ஆட்களை இழுத்து அரசைப் பலப்படுத்த ஜனாதிபதி மகிந்த முயல்கையில் அவரது கட்சிக்குள் பெரும் பிளவு தோன்றியுள்ளது. இந்த அரசு மிகவும் ஸ்திரமாயிருப்பது போன்றதொரு தோற்றப்பாடிருந்தாலும் இது உண்மையிலேயே ஸ்திரமற்றதொரு அரசாகவேயுள்ளது. ஒவ்வொரு கட்சியையும் பிளவுபடுத்தி அமைச்சுப் பதவி ஆசை காட்டி ஆட்களைத் தன்வசப்படுத்துவதன் மூலம் எதிர்க்கட்சிகளே இல்லையென்றதொரு நிலையை ஜனாதிபதி மகிந்த உருவ…
-
- 0 replies
- 551 views
-
-
யாழ். நிலைமையைக் கண்டறிவதற்கு ஐ.நா. உயர்குழு நேற்றுத் திடீர் விஜயம் செயலாளர் நாயகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பர். யாழ்ப்பாணக் குடாநாட்டில் தற்போதைய நிலையைமக்களின் அவலங்களை கண்டறியும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபையின் உயர்மட்டக் குழு ஒன்று, நேற்று திடீர் விஜயம் செய்தது. ஐ.நா செயலாளர் நாயகம் பான்கிமூன் விடுத்த பணிப்பின் பேரில், தலைமை அலுவலகத்தைச் சேர்ந்த உதவிச் செயலாளர் நாயகம் அஞ்சலா கான் தலைமையிலான ஐவர் குழு நேற்று இங்கு வந்தது. குடாநாட்டில் இயங்கும் ஐ.நாவின் உப நிறுவனங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து குடாநாட்டின் நிலைமைகள் குறித்து குழுவினர் விரிவாகக் கேட்டறிந்தனர். நேற்றைய ராஜீக விஜயத்தில் ஐ.நாவின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி பிறட்ரிக் லயன், ஐ.நா.தலைமையக அதிகாரிகள…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறீலங்காவில் உள்ள எதிர்க்கட்சிகளும், அரசில் உள்ள சிலகுழுவினரும் இணைந்து அரசின் மீதும் அதன் பிரதம மந்திரியின் மீதும் நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டுவருவதற்கு முயன்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் இரகசியமாக விவாதிக்கப்பட்டுவரும் இந்த நடவடிக்கையில் அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மீறல்கள், கடத்தல்கள், படுகொலைகள், ஊழல் குற்றச்சாட்டுக்கள், போர் தொடர்பாக பொதுமக்களை தவறாக வழிநடத்துதல், பதவிகளில் உள்ளவர்களின் உறவினர்களின் அத்துமீறிய தலையீடுகள் என்பன நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான காரணங்களாகவும் முன்வைக்கப்பட உள்ளன. இந்த தீர்மானத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு 113 வாக்குகள் தேவை. ஐ.தே.கவின் 43 உறுப்பினர்களும், தமிழ்த…
-
- 3 replies
- 1.2k views
-
-
அம்பாறை மாவட்ட அரசியல் களம் - கிரக மாற்றங்கள் பல்வேறுவிதமான சோதிடங்களுக்கு மத்தியில் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்து முடிந்துள்ளது . அரசியல் கிரக மாற்றங்கள் பல்வேறுவிதமான சோதிடங்களுக்கு மத்தியில் கடந்த வாரத்துக்கு முதல் வாரம் நடந்து முடிந்துள்ளது. முரண்டு பிடித்துக் கொண்டு நின்றவர்களையெல்லாம் பிடித்துக் கொண்டுவந்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று அவரின் அரசுக்கு முண்டு கொடுக்க வைத்துள்ளார். ஆக பாம்புகளும், கீரிகளும் ஒரே பாசறைக்குள் கூடி நின்று கும்மியடிக்க வேண்டிய கால நிர்ப்பந்தம்! தமிழீழப் போராட்டத்துக்கு ஆதரவாக கிளிநொச்சி வரை சென்று தமிழ்ச்செல்வனைக் கண்டு பேசி வந்த பெ. சந்திரசேகரன், அவரின் பரம வைரி ஆறுமுகன் தொண்டமான், ஜனாதிபதியை மிக மோசமான பே…
-
- 0 replies
- 801 views
-
-
புதுக்கோட்டை அருகே இலங்கையிலிருந்து வந்த இலங்கைத் தமிழர்களில் ஐந்து வாலிபர்கள் திடீரென்று மாயமான சம்பவம் பொலிஸாரை அதிர்ச்சியடைய வைத்தது. தப்பிச் சென்ற இலங்கை வாலிபர்கள் ஐந்து பேரும் அழியாநிலை முகாமில் இருந்து பொலிஸார் மீட்டனர். இலங்கையில் அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து வரும் மோதலைத் தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் குறிவைத்து இலங்கை இராணுவத்தினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் உயிருக்குப் பயந்து ஏராளமான தமிழர்கள் தங்கள் குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இதுபோன்று இலங்கை யாழ்ப்பாணம் பஜார் பகுதியில் வசித்துவந்த சிவலிங்கம் மனைவி சுப்புத்தாய் (62) இவரது மகன் ஐங்கர ரூபன் (31) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கந்தசா…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ விளக்கமளித்துள்ளார். இருவருக்குமிடையிலான இந்தச் சந்திப்பு கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. பெங்களூர் யலகங்கா விமானப் படைத் தளத்தில் நடைபெறும் இந்திய விமானக் கண்காட்சியில் கலந்து கொண்ட போதே அங்கு இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். கோதாபாய ராஜபக்ஷ தலைமையில் விமானப் படைத் தளபதி உட்பட சிரேஷ்ட விமானப் படை அதிகாரிகள் பெங்களூர் சென்றுள்ளனர். இந்தக் கண்காட்சியை இந்திய பாதுகாப்பு அமைச்சர் அந்தோனி ஆரம்பித்து வைத்தார். இதன் பின்னர் அமைச்சர் அந்தோனியை சந்தித்த கோதபய, இலங்கையின் தற்போதைய …
-
- 0 replies
- 890 views
-
-
கிழக்கில் கடத்தப்படும் சிறார்களை தகாத முறையில் வழிநடாத்தும் கருணா ஒட்டுக்குழு கும்பல் - வெளிவரத் தொடங்கியிருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் கிழக்கில் சிறுவர்கள், வெள்ளை வான்களில் நடமாடும் கருணா ஒட்டுக்குழு கும்பலின் உறுப்பினர்களினால் கடத்தப்படுவது அன்றாடம் செய்தியாகி விட்டது. வயது பத்துக் கூட ஆகாத சிறார்களே கடத்தப்படும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது. இக்கடத்தல்களின் பின்னணியில் இருப்பது சிறிலங்காப் புலனாய்வுத்துறையினரே என்பதும் இன்று உலகறிந்த விடயம். ஐ.நா சபையிலேயே, இக்கடத்தல்கள் விவாதிக்கும் அளவிற்கு பாரிய அளவில் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், இக்கடத்தப்பட்ட சிறார்கள் எவ்வாறெல்லாம் தகாதமுறையில் நடத்தப்படுகிறார்கள் என்பன போன்ற அதிர்ச்சியூட்டும் தகவல்கள் மெல்ல…
-
- 1 reply
- 2.2k views
-
-
வாகரையைக் கைப்பற்றிய ஸ்ரீலங்காப் படைகள் புகைப்படங்களுக்கு கொடுத்த "போசைப்" பார்த்து புலம் பெயர் தேசங்களிலுள்ள சில தமிழர்கள் கொஞ்சம் ஆடித்தான் போய்விட்டார்கள் போல் தெரிகிறது. மட்டக்களப்பின் குடும்பிமலை, கொக்கட்டிச்சோலை, தரவை, வவுணதீவு பிரதேசங்களையும் விரைவில் பிடித்து விடுவோம் என்று சிங்களப்; படைத்துறைத் தலமை விடுத்துவரும் பகிரங்க அறைகூவல் எம்மவர்களில் பலரை மேலும் கவலையில் ஆழத்தியுள்ளது. தாடையில் கைவவைத்தபடி, கவலையில் உட்கார்ந்து இருந்து புலம்பும் பலரை நான் இங்கு பார்த்து வருகின்றேன். ஏல்லாமே முடிந்து விட்டது போன்று அவர்கள் அபிப்பிராயம் கொள்ளுவதையும் அவதானிக்க முடிகின்றது. தமிழ் தேசியத்தை நேசிக்கும் தமிழர்கள் மட்டுமல்ல, சிங்கள தேசமும் சரி, சர்வதேச சமூ…
-
- 20 replies
- 4.7k views
-
-
மட்டக்களப்பு ஏறாவூர் காவல்துறைக்குட்பட்ட ஐயங்கேணி பகுதியில் நேற்ற சனிக்கிழமை இரவு 8.15 மணியளவில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் வியாபார உரிமையாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் கொம்மாதுறை பகுதியை சேர்ந்த தற்போது பாரதிபுரத்தில் திருமணம் செய்துள்ள இரு பிள்ளைகளின் தந்தையான 32 வயதுடைய மகேஸ்வரன் உதயசேகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சடலம் ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. வீட்டுக்கு வந்த இனம் தெரியாத ஆயுததரிகள் இவரை அழைத்து சென்று சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்கள். இது தொடர்பாக ஏறாவூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றார்கள்
-
- 0 replies
- 912 views
-
-
ஜனாதிபதியின் அழைப்பு புதிய விடயம் இல்லை - இளந்திரையன் - பண்டார வன்னியன் Sunday, 11 February 2007 09:45 விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டுமென்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பானது அடிப்படையற்றது என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கூறினார். கடந்த 3ஆம் திகதி வாகரைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு சமாதானப் பேச்சுக்கு வரவேண்டுமென அழைப்பு விடுத்திருந்தார். “ஜனாதிபதியின் இந்த அழைப்பு ஒன்றும் புதிய விடயமில்லை. மீண்டும் மீண்டும் இதனையே கூறிவருகின்றார். இது அடிப்படையற்றதென்பதுடன், அவரின் இந்த அழைப்புக்கு பதி…
-
- 0 replies
- 1k views
-
-
யுத்த களத்தில்... காதல்! என் திருமணம் நடந்தபோது நான் இலங்கை அரசால் தேடப்படுகிற குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு இருந்தேன். பகலில் காடுகளில் அலைவேன். யுத்தத்துக்கான வெடிபொருளாக கவிதைகள் தயாரித்தேன். கூடவே, காதலித்தேன். அதுவும் 15 ஆண்டுக் காதல். இயக்கத்துக்கு ஆதரவு தேடி உலகமெல்லாம் பறந்த காலம் அது. தகிக்கிற அரசியல் வெப்பத்துக்கு நடுவே காதல் நிழலாக, ஆறாத காயங்களும் தீராத வேதனைகளிலும் திரிந்த எனக்கு ஆறுதலாக இருந்தவள் சரோஜினி. எத்தனையோ முறை எதிரிகளிடம் இருந்து என் னைக் காத்தவள். ஒரு மருத்துவத் தாதியாக அவள் எனக்கு அறிமுகம்! யாழ்ப்பாணத்தில் இருக்கிற செல்வ சன்னதி என்ற முருகன் கோயிலில் நடந்தது ரகசியத் திருமணம். இரு வீட்டாரும் சம்மதிக்கவில்லை என்றாலும், ‘க…
-
- 7 replies
- 3.9k views
-