ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143501 topics in this forum
-
இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு தூதரை நியமிக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் கோரிக்கை தூத்துக்குடி, பிப்.4- 'இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண சிறப்பு தூதர் நியமிக்க வேண்டும்', என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். பாட்டாளி மக்கள்கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று காலை தூத்துக்குடி வந்தார். பின்னர் ஸ்பிக் ஓட்டலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். ஒரு சிறப்பு தூதரை ஈழத்தமிழர் பிரச்சினைக்காக இந்திய அரசு நியமிக்க வேண்டும். சிறப்பு தூதராக முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் ஏ.பி.வெங்கடேசன் போன்றவர்களை நியமிக்கலாம். ஷில…
-
- 16 replies
- 2.6k views
-
-
இரத்தினபுரம் தோட்டத்தொழிலாள்ர்களைத் தாக்கிய கும்பல் தேயிலைத்தோட்டங்கள் யாவும் சிங்களவருக்கு சொந்தமானதாக கூறியுள்ளதே! எங்கே இந்த எலும்பு தின்னும் அமைச்சர்கள்.முன்பு விரட்டியபோது வன்னியில் குடிவைத்தோம்.அவர்கள் தான் இன்று பசுமைப்புரட்சி செய்கிறார்கள்.நினைவு கூரப்படவேண்டியதொன்று;இப்போ இருப்பவர்களை எங்கே போகச்சொல்கிறார்கள்.முதலில் பாதையை திறந்து விடுங்கள். யாழ் வாழ் தமிழர்களை அழித்தீர்கள் நாட்டைவிட்டு துரத்தினீர்கள்.இப்போ இந்தியவம்சாவழியாகையால் இந்தியாவுக்கு போகச்சொல்கிறீர்களா?விளிம்பில் நிக்கிறீர்கள் உங்களை யாரும் காப்பாற்றபோவதில்லை.மீண்டும் புத்தபிரான் தோன்றி சாவறியாத வீட்டில் கடுகு வேண்டி வரச்சொல்லப்போகிரார்.
-
- 1 reply
- 1.1k views
-
-
வாகரையில் மகிந்த (மேலதிக இணைப்பு). சிறீலங்கா அரச அதிபர் மகிந்த ராஜபக்சா அண்மையில் படையினரால் கைப்பற்றப்பட்ட மட்டக்களப்பின் வாகரை பிரதேசத்திற்கு திடீர் விஜயம் ஒன்றை சனிக்கிழமை காலை மேற்கொண்டிருந்தார். மகிந்தவுடன் படைத்தளபதிகளும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் மகிந்தவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சா ஆகியோரும் சென்றிருந்தார்கள். மகிந்தாவும் அவரது தளபதிகளும் விமானப்படை உலங்குவானூர்தி மூலம் வாகரையை அடைவதற்கு முன்னர் மட்டக்களப்பில் உள்ள செல்லிடத் தொலைபேசிகளின் இணைப்புக்கள் யாவும் செயலிழக்கச் செய்யப்பட்டிருந்தன. தென்னிலங்கையில் நாளை நடைபெற உள்ள சுதந்திரதினக் கொண்டாட்டங்களுக்கு முன்னர் மகிந்த வாகரைக்கு விஜயம் மேற்கொண்டது தனது இராணுவ வெற்றியை தெற்கில் காண்பிப்பதற…
-
- 13 replies
- 3.7k views
-
-
தக்காளி நோய்...அச்சத்தில் மக்கள்... தக்காளி என்ற புதிய கொடிய நோய் ஒன்று யாழ்குடா மக்களை பீடித்துள்ளது. இன்று நம்மோடு உரையாடிய சிலர் அந்த நோய் தாக்கம் பற்றி எமக்கு தெரிவித்தபோது அந்த நோயானது தொப்பளமாக வந்து அதை உடைக்கும் போது அதற்க்குள் புழு வருவதாக கூறினர். இதனால் அந்த மக்கள் மத்தியல் பெரும் அச்சம் ஏற்ப்பட்டுள்ளதாகவும் கூறினர். இது இராணுவம் சில கொடிய வெடி பொருட்களை பாவிப்பதனால் அதில் இருந்து தொற்றி இருக்கலாம் என ஜயம் தெரிவித்தனர். -வன்னி மைந்தன்
-
- 4 replies
- 1.6k views
-
-
தீர்வு முயற்சியில் அரசுடன் கைகோக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சுதந்திரதின உரை மூலம் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான கலந்துரையாடல்களில் அரசுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. வடக்கில் பயங்கரவாத அச்சுறுத்தல்களில் இருந்தும், வன்முறைகளின் கீழ்த்தரமான விளைவுகளில் இருந்தும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்பதற்காக அரசுடன் கைகோத்துச் செயற்பட ஒன்றிணையுமாறு ஜனாதிபதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அழைத்திருக்கிறார். நாட்டின் 59 ஆவது சுதந்திரதினமான நேற்று கொழும்பு காலிமுகத்திடலில் இருந்து நாட்டு மக்களுக்கு ஆற்றிய சுதந்…
-
- 6 replies
- 1.5k views
-
-
கின்னஸ் சாதனையில் மகிந்தவின் அமைச்சரவை. ஜஞாயிற்றுக்கிழமைஇ 4 பெப்ரவரி 2007இ 03:43 ஈழம்ஸ ஜஅ.அருணாசலம்ஸ கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவினால் அமைக்கப்பட்ட மிகப்பெரிய அமைச்சவை உலக சாதனைகளை பதியும் கின்னஸ் புத்தகத்தில் இந்த வாரம் பதியப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தவினால் கடந்தவாரம் 54 அமைச்சர்கள்இ 20 பிரதி அமைச்சர்கள்இ 34 அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவை அமைக்கப்பட்டிருந்தது. உலக நாடுகளில் உள்ள அமைச்சரவையில் தற்போது சிறீலங்காவில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையே மிகப்பெரியதாகும். 1.3 பில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 24 அமைச்சர்களும்இ ஒரு பில்லியனைவிட அதிகளவு சனத்தொகையை கொண்ட இந்தியாவில் 30 இற்…
-
- 4 replies
- 1.7k views
-
-
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து ஒளிபரப்பாகும் சனல் 4 தொலைக்காட்சியில் ஸ்ரீலங்காவில் கருனா ஒட்டுக்குழு பற்றி ஒரு விபரணம் ஒளிபரப்பப் பட்டதாம். உண்மையை படம் பிடிதிருப்பதாக சொல்கிறார்கள் யாராவது பார்த்தவர்கள் அது பற்றி தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன் அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பபட்ட பின் தான் ரி.பி.சி வானொலி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தகவல்கள் கசிக்கின்றன. தகவல் இன்றைய தமிழ்பாடசாலைக்கு சென்ற இடத்தில்
-
- 3 replies
- 2k views
-
-
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் எதிர்காலம் இன்று தீர்மானிக்கப்படும். [செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007, 04:14 ஈழம்] [க.திருக்குமார்] இன்று கூடவுள்ள பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சிறீலங்கா சுதந்திரக்கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நிலை என்ன என்பது தொடர்பாக ஐ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கா தெரிவிப்பார் என தெரிவிக்கப்படுகின்றது. இன்று காலை 9.30 மணிக்கு பாராளுமன்றத் தலைவர் ஜே. எம் லொக்குபண்டாரா தலைமையில் கூடவுள்ள பாராளுமன்றத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக விசேட அறிக்கை ஒன்றை ரணில் வெளியிட உள்ளார். அதில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் தற்போதைய நிலையை அவர் விளக்குவார் என ஐ.தே.க. வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 0 replies
- 764 views
-
-
12.5 வீதமாக இருந்த தமிழர் இன்று 4 வீதமாக உள்ளனர் பாலித கோஹன தெரிவிப்பு இலங்கையின் மொத்த சனத்தொகையில் தமிழர்கள் வெறும் 4 சதவீதமே தற்பொழுது உள்ளனர் என அரசாங்க சமாதான செயலகத்தின் பணிப்பாளரும், வெளிவிவகார அமைச்சின் செயலாளருமான பாலித கோஹன தெரிவித்துள்ளார்.1983 ஆம் ஆண்டு இலங்கையில் இனப்பிரச்சினை ஆரம்பித்த போது நாட்டின் மொத்த சனத்தொகையில் 12.5 சதவீதமாக இருந்த தமிழர்கள் இன்று வெறும் 4 சதவீதமாகவே இருப்பதாகவும்அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம மற்றும் பாலித v கோஹன ஆகியோர் கடந்த வாரம் ஜேர்மனிக்கான நான்கு நாள் உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டு விட்டு இலங்கை திரும்பினர். இலங்கை திரும்பும் வழியில் டுபாய் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கல…
-
- 19 replies
- 3.8k views
-
-
விடுதலைப்புலிகளை முறியடிப்போம் - சுதந்திரதின விழாவில் மகிந்த. [ஞாயிற்றுக்கிழமை, 4 பெப்ரவரி 2007, 15:53 ஈழம்] [அ.அருணாசலம்] போர் டாங்கிகளும், துருப்புக்காவி கவசவாகனங்களும் அணிவகுத்துச் செல்ல சிறீலங்காவின் 59 ஆவது சுதந்திரதினத்தை அரச அதிபர் இன்று ஞாயிற்றுக்கிழமை கடும் பாதுகாப்புக்களுக்கு மத்தியில் காலிமுகத்திடலில் கொண்டாடினார். இந்த நிகழ்வில் சிறீலங்கா கடற்படையினரின் கப்பல்கள் காலிமுகத்திடல் கடலில் அணிவகுத்து செல்ல விமானப்படையினரின் போர்விமானங்களும், உலங்குவானூர்திகளும் வானில் பறந்து சாகாசம் காட்டியதுடன், 3,500 படையினரின் அணிவகுப்பும் இடம்பெற்றது. சிறீலங்கா அரசின் இந்த கடுமையான இராணுவ விளம்பரங்கள் விடுதலைப்புலிகளுடனான 20 வருட போரில் தாம் புதிய அத்தியாயத்…
-
- 23 replies
- 3.8k views
-
-
இராணுவ பலத்தை வெளிப்படுத்திய சுதந்திரதின அணிவகுப்பு நிகழ்வு. இலங்கையின் 59ஆவது சுதந்திர தினத்தை ஒட்டி நேற்று காலிமுகத்திடலில் இடம்பெற்ற சுதந்திரதின அணிவகுப்பு, இராணுவ பலத்தை வெளிப்படுத்திக் காட்டும் வகையில் அமைந்தது என்று சர்வதேச செய்தி ஏஜென்ஸிகள் தெரிவித்தன. இலங்கையின் 59ஆவது சுதந்திரதின நிகழ்வுகள் நேற்றுக்காலை கொழும்பு காலிமுகத்திடலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் மிகவும் கோலாகலமாக இடம்பெற்றன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தேசியக் கொடியை ஏற்றிவைத்து உரைநிகழ்த்தினார். ஜனாதிபதியின் உரையை அடுத்து முப்படையினரதும் பொலிஸாரினதும் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது. இந்த அணிவகுப்பு மரியாதையில் 126 படை அதிகாரிகளும் 3,366 படையினரும் கலந்துகொண்டனர். முதலில் படையி…
-
- 10 replies
- 2.2k views
-
-
யாழ் பல்கலைக் கழக வளாகம் சுற்றிவளைப்பு [செவ்வாய்க்கிழமை, 6 பெப்ரவரி 2007, 00:43 ஈழம்] [காவலூர் சங்கீதன்] யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள யாழ் பல்கலைக் கழக வளாகத்தை, 500 க்கும் அதிகமான இராணுவத்தினர் இன்று திங்கட்கிழமை சுற்றிவளைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். பல்கலைக்கழக வளாகத்தினுள் நிறுத்தப்பட்டிருந்த சிறீலங்கா அரசின் சிங்கக் கொடியொன்று அங்கு வந்த சிலரால் அகற்றப்பட்டதாகவும், அந்த சிங்கக் கொடியைக் கண்டுபிடிக்கும்வரை தமது தேடுதல் தொடருமென்றும் இராணுவத்தினர் அடாவடித்தனம் பண்ணியுள்ளனர். சிறீலங்கா சுதந்திர தினத்தை முன்னிட்டு, பல்கலைக் கழக வளாகத்தில் சிங்கக் கொடியை ஏற்றும்படி இராணுவத்தினர் நிர்ப்பந்தித்ததால், தற்போது தற்காலிக பிரதி பொறுப்பாளராக உள்ள …
-
- 1 reply
- 878 views
-
-
மதவாச்சி பிரதான வீதியில் இரு மணிநேரம் கடும் மோதல் பன்னவெட்டுவான் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை விடுதலைப் புலிகளுக்கும் பொலிஸாருக்குமிடையில் சுமார் இரு மணிநேரம் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. நேற்றுக் காலை 8.30 மணிக்கு ஆரம்பமான இருதரப்பினருக்குமிடையிலான மோதல் சம்பவம் காலை 10.30 மணி வரை நீடித்துள்ளது. இந்த மோதல் சம்பவத்தில் விடுதலைப் புலிகள் தரப்பில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் அவரின் சடலத்தை தமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு அவர்கள் எடுத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பவ இடத்திற்கு மேலதிக படையினர் வரவழைக்கப்பட்டு தேடுதல் மேற்கொண்ட போது ரி-56 ரக துப்பாக்கியொன்றும் அதற்குரிய மகஷின்களும் மீட்கப்பட்டுள்ளதாக முருங்கன் பொலிஸ்…
-
- 0 replies
- 1.1k views
-
-
* வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு விடுதலைப் புலிகளுக்கு நிதி கிடைக்கும் வழிவகைகளை தடுத்து நிறுத்துவது குறித்து இலங்கை அரசாங்கம் உறுதியாகவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார். வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பும் வழியில் டோஹா சர்வதேச விமான நிலையத்தில் கல்வ் டைம்ஸிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஜேர்மனி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர்களுடன் தீவிரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாகவும் இலங்கையில் தேசமொன்றை ஏற்படுத்துவதற்காக வன் முறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிரான யுத்தத்திற்கு அவர்கள் தொடர்ந்தும் ஆதரவை உறுதியளித்ததாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கை பயங்கரவாதத்திற…
-
- 1 reply
- 1.6k views
-
-
நேற்று அதிகாலை 2 மணியளவில் வவுனியா உயிலங்குளம் இராணுவமுகாம் மீது எறிகணைத்தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளதாக சிறீலங்கா பாதுகாப்புமையம் தகவல் வெளியிட்டுள்ளது. இத்தாக்குதலின்போது ஒருஇராணுவத்தினர் கொல்லப்பட்டும் மூவர்காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாக அறியமுடிகிறது. காயமடைந்த இராணுவத்தினரை அநுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக மேலும் அறியமுடிகிறது. thanks: www.pathivu.com
-
- 0 replies
- 1.1k views
-
-
மேலும் 10 ஐ.தே.க உறுப்பினர்கள் அரசில் இணைகிறார்கள். சிறீலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐ.தே.கவில் இருந்து மேலும் 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசில் இந்த வாரம் இணைந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றம் கூடும் போது ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மதும பண்டாரா, ஜீ. ஹரிசன், சந்திரானி பண்டாரா, சம்பிக்கா ஆகிய நான்கு பேரும் அரசில் இணைந்து கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இவர்கள் சிறீலங்கவின் அரச அதிபர் மகிந்த ராஜபக்சாவை ஏற்கனவே சந்தித்து அரசில் இணைந்து கொள்வது தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளார்கள் எனவும் மேலும் 6 ஐ.தே.க உறுப்பினர்கள் வாரஇறுதியில் இ…
-
- 2 replies
- 993 views
-
-
பொதுமக்கள் எதிர்நோக்கும் துயரங்கள் குறித்து பிரான்ஸ் ஜனாதிபதி இலங்கை அரசாங்கத்திற்கு கவலை தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையில் மீண்டும் ஆரம்பித்துள்ள மோதல்களினால் பொதுமக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்த தமது அவதானத்தை பிரான்ஸ் ஜனாதிபதி ஜக் சிராக் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தியுள்ளார். இலங்கையின் 59 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஜவிற்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துத் செய்தியில், மீள ஆரம்பிக்கப்பட்டுள்ள மோதல்களினால் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள் குறித்து பிரான்ஸ் அரசின் அவதானத்தை வெளியிட்டுள்ளதோடு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடைய…
-
- 0 replies
- 714 views
-
-
ஆயுத உற்பத்தி நிலையம் வலியத்த, அகுல்மருவ பிரதேசத்தில் சிக்கியது! நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆயுதங்களை உற்பத்தி செய்துவந்த தொழிற்சாலை ஒன்று வலியத்த, அகுல்மருவ பிரதேசத்தில் நேற்று பொலிஸாரிடம் சிக்கியது. இப்பகுதியைத் திடீரென சுற்றிவளைத்த வலியத்த பொலிஸார், இந்த ஆயுத உற்பத்தி நிலையத்தில் இருந்து பேனா வடிவத்திலான சிறிய ரக கைத்துப்பாகி ஒன்றையும் அதற்குப் பயன்படுத்தும் தோட்டாக்கள் மற்றும் ஆயுத உற்பத்திக்கான இயந்திரங்கள் என்பவற்றையும் கைப்பற்றினர் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேகநபர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த நிலையத்தில் இருந்து 40 சிறியரக கைத்துப்பாக்கிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய…
-
- 0 replies
- 1.3k views
-
-
நாட்டின் சில பகுதிகளில் சுழற்காற்று அபாயம்!! கிழக்கு மாகாணம், மலைநாட்டின் கிழக்குப் பகுதி, காலி, மாத்தறை போன்ற பகுதிகளில் இன்று ரொனேற்றா சுழற்காற்றின் தாக்கம்ஏற்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நேற்றுமுன்தினம் மாத்தளைப் பகுதியில் ரொனேற்றா சுழற்காற்று வீசியதில் மாத்தளை பஸ் நிலையப் பகுதியும் அதனை அண்டிய பகுதிகளும் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது. -Sudaroli-
-
- 0 replies
- 1.5k views
-
-
முகமாலையில் சிறீலங்கா இராணுவமும் விடுதலைப்புலிகளும் எறிகணை வீச்சு. [திங்கட்கிழமை, 5 பெப்ரவரி 2007, 04:51 ஈழம்] [க.திருக்குமார்] நேற்று காலை யாழ்குடாநாட்டின் முகமாலை முன்னரங்க நிலைகளில் இருந்து சிறீலங்கா இராணுவம் விடுதலைப்புலிகளும் பரஸ்பரம் மோட்டார் மற்றும் பீரங்கித் தாக்குதல்களில் ஈடுபட்டதாக உசன் மற்றும் மிருசுவில் பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகளால் ஏவப்பட்ட இரு எறிகணைகள் உசன் பகுதியில் உள்ள சிறீலங்கா இராணுவ முகாமினுள் வீழ்ந்து வெடித்ததாகவும், மேலும் ஒரு எறிகணை உசன், மிருசுவில் பகுதியில் உள்ள படைநிலைகளுக்கு அண்மையில் வீழ்ந்து வெடித்ததாகவும் அதன் போது இரு பொதுமக்கள் சிறு காயங்களுக்கு உள்ளாகியதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கட…
-
- 0 replies
- 810 views
-
-
ஈழம்: மத்திய அரசின் ஆதரவு தேவைகருணாநிதி 04.02, 2007 மத்திய அரசின் ஆதரவுடன் ஈழத் தமிழர்களைக் காப்போம் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் ஈழத் தமிழர் பிரச்சினைக்கு மத்திய அரசின் ஆதரவோடும், துணையோடும் தீர்வு காண வேண்டும் என்றும் இந்திய அரசின் ஆதரவோடு இலங்கைத் தமிழர்களைக் காப்போம் என்றும் கூறியுள்ளார். இலங்கைத் தமிழர்களின் அபிலாஷைகளை முழுமையாக நிறைவேற்ற மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்காக காத்திருப்போம், இலங்கைத் தமிழர்களைக் காப்போம். ஏன்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
- 9 replies
- 2.9k views
-
-
[04 - February - 2007] [Font Size - A - A - A] -மப்றூக்- விக்ரமாதித்தன்,வேதாளம் கதை கேள்விப்பட்டிருப்பீர்கள்! தன்னைப் பிடித்துக் கொண்டு போகும் விக்ரமாதித்தனிடம் கதை கூற ஆரம்பிக்கும் வேதாளம்! இறுதியாக கதையில் ஒரு புதிர் வைத்து அதற்கான விடையை விக்ரமாதித்தனிடம் வேதாளம் கேட்கும். ஆனால் நிபந்தனை;விக்ரமாதித்தன் பதில் சொல்லாவிட்டால் அவன் தலை வெடித்து விடும்.மௌனம் கலைந்தால் வேதாளம் தப்பித்து விடும்! இந்த நிலைதான் இப்போது மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுக்கு! எதைச் செய்தாலும் விளைவுகள் பாதகமாகவே அமைந்து விடுகின்றன அவருக்கு! அரசுடன் மு.கா.இணைய வேண்டுமென பல மட்டங்களிலிருந்தும் எழுந்த அழுத்தங்களையும், பிரச்சினைகளையும் சமாளிக்கும் பொருட்டு;கடந்த வாரம் அமைச்சுப் பதவிகள…
-
- 1 reply
- 1.3k views
-
-
சுதந்திரம் என்ன விலை? -யாழின்மைந்தன்- இலங்கை சுதந்திரம் பெற்றதாக கூறப்பட்டு ஐம்பத்தொன்பது ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற போதும், பல்லின மக்கள் வாழும் நாட்டில் இனமுரண்பாடுகள் நீக்கப்படவில்லை. இலங்கையின் முதல் பிரதமர் டி.எஸ்.சேனநாயக்கா ஊன்றிய இனவாத விதை பெருவிருட்சமாக வளர்ந்து நிற்கின்றது. இந்த நிலையிலேயே சிங்களத் தேசிய இனம் சுதந்திரதின நிகழ்வை இன்று கொண்டாடுகின்றது. ஆனால் தமிழ் தேசியமோ அறுபதாவது சுதந்திர தின நிகழ்வைப் பகிஷ்கரித்து வருகின்றது. சுருங்கச் சொன்னால், அரசுக்கு அடிபணியாத தமிழர்கள் மீது இன்றைய அரசு வரலாறு காணாத மனித அவலங்களை ஏற்படுத்தி வருகின்றது. இலங்கை மீது விஜயன் படையெடுப்பதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் இலங்கையில் வடபகுதியில் உயர் நாகர…
-
- 0 replies
- 808 views
-
-
பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" தமிழீழ விடுதலைப் போர்பற்றிய அற்புதப் படப்பிடிப்பு! - பேரா. அய்யாசாமி கடந்த ஆண்டில் நான் படித்த நூல்களில் என்னைக் கவர்ந்தது எது என்று கேட்டால் அன்றன் பாலசிங்கம் எழுதிய "போரும் சமாதானமும்" என்று தயங்காமல் விடை கூறுவேன். இலங்கைத் தீவு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை தமிழர்கள் நடத்தி வரும் உரிமைப் போராட்டங்களை எடுத்துக்கூறி அவை வெற்றி பெறாமல் போனதற்கான காரணங்களையும் விரிவாக விளக்கியிருக்கிறார் பாலசிங்கம். இவற்றை யெல்லாம் சர்வதேச அரசியல்வாதிகளுக்குத் தெரிவிப்பதற்காக முதலில் ஆங்கிலத்தில் எழுதி, பின்னர் அவரே அதனைத் தமிழாக்கியிருக்கிறார். சிங்களவர்கள் திருப்பித் திருப்பிக் கூறுவதைப்போல் தமிழர்கள் கள்ளத் தோணிகளல்லர்…
-
- 0 replies
- 874 views
-
-
ஞாயிறு 04-02-2007 15:19 மணி தமிழீழம் ஜமகான்ஸ ஒரு பொதுமகனையும் கொல்லாது வாகரையை கைபற்றியதாக ஜனாதிபதி தெரிவித்திருப்பது சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் நடவடிக்கை மட்டக்களப்பு வாகரை பகுதியில் பாரியளவிலான இராணுவ நடவடிக்கையின் மூலம் நூற்றுக்கணக்கான பொதுமக்களை படுகொலை செய்தும். காயப்படுத்தியும் அப்பகுதியினை ஆக்கிரமித்து கொண்டு எந்த ஒரு பொதுமகனும் கொல்லப்படாது வாகரையை கைபெற்றியதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்து சர்வதேச சமூகத்தினை ஏமாற்றும் நடவடிக்கை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்தமூர்த்தி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது. வாகரை பகுதிக்கு விஜயம் மேற்கொ…
-
- 1 reply
- 1k views
-