ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
நியூயார்க்: கருணா கும்பலுக்கு சிறுவர்களைப் பிடித்துத் தரும் வேலையில் இலங்கை ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து பிரிந்து போன கருணா தலைமையில் ஒரு கும்பல் அங்கு செயல்பட்டு வருகிறது. இலங்கையின் கிழக்குப் பகுதியில் சொற்ப எண்ணிக்கையில் இருக்கும் இவர்களுக்கு இலங்கை ராணுவம் முழு ஆதரவும் ஆயுதமும் தருகிறது. இலங்கை ராணுவத்தின் பாதுகாப்பு வளையத்தின் கீழ்தான் கருணா கும்பலும் செயல்பட்டு வருகிறது. கடந்த 2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்றார் கருணா. அவருடன் சிறு அளவிலான வீரர்களும் உடன் சென்றனர். அதன் பின்னர் அவர்களைப் பயன்படுத்தி ராணுவம் புலிகள் மீது தாக்குதல் ந…
-
- 8 replies
- 2.2k views
-
-
சென்னை: இதற்கிடையே சென்னையிலிருந்து விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களுக்கான உதிரிப் பாகங்களை அனுப்பியதாக 8 இலங்கைத் தமிழர்கள் உள்பட 12 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னையிலிருந்து புலிகளுக்கு ஆயுதங்கள் தயாரிப்பதற்கான உதி>ப் பாகங்களை சிலர் அனுப்புவதாக கியூ பி>வு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து நகரின் பல்வேறு பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் போரூர், மேடவாக்கம் ஆகிய இடங்களில் புலிகளுக்கு ஆயுத உதிரி பாகங்களை சப்ளை செய்வோர் நடமாடுவதாக உறுதியான தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு போலீஸார் விரைந்தனர். போரூரில் போலீஸ் பிடியில் சிலரும், மடிப்பாக்கத்தில் சிலரும் சிக்கினர். அவர்களில் எட்டு பேர் இலங்கைத் தமிழர்கள், மற்றவர்கள்…
-
- 3 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளினால் ஏற்கக்கூடியவையல்ல: வெளிநாட்டு இராஜதந்திரிகள். - பண்டார வன்னியன் Wednesday, 24 January 2007 10:44 அரசாங்கத்தின் சகல நடவடிக்கைகளுமே சர்வதேச நாடுகளினால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை என்று கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்களிடம் தெரிவித்துள்ளனர். ஜெனிவா உடன்படிக்கை, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சாசனங்கள் போன்றவற்றை மீறி அரசாங்கம் செயற்படுவதாகவும் அது தொடர்பாக அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டியுள்ளதாகவும் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் வதிவிட பிரதிநிதி யூலியன் வில்சன் மற்றும் கொழும்பிலுள்ள இத்தாலி, ஜேர்மன், சுவிஸ் ஆகிய நாடுகளி…
-
- 4 replies
- 1.6k views
-
-
பேரிழப்பை ஈடுசெய்ய இளைஞர்களை பெருந்தொகையில் கடத்தும் புலிகள் [24 - January - 2007] [Font Size - A - A - A] கிழக்கு மாகாணத்தில் தோல்வியடைந்து பின்வாங்கிச் சென்றுகொண்டிருக்கும் விடுதலைப்புலிகள் அமைப்பினர் தமக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளைச் சமாளிக்கும் நோக்கத்தில் இளைஞர்களைக் கடத்திச்செல்லும் தமது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 47 இளைஞர்களை புலிகள் இயக்கத்தினர் கடத்திச் சென்றுள்ளனர். இவ்வாறு அம்பாறை, மட்டக்களப்பு பிரதேசங்களிலிருந்தே மேற்படி இளைஞர்கள் புலிகளால் பலாத்காரமாகக் கூட்டிச் செல்லப்பட்டுள்ளனர். மேலும், இவ்வாறு புலிகள் அமைப்பினர் கடத்திச் சென்றுள்ள இளைஞர்களில் கூடுதலானோர் பாட…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஆக்கிரமிப்பும் அச்சுறுத்தலும் விடுதலைப் புலிகளைப் பணிய வைக்குமா? எல்லோரும் ஏறி விழுந்த நொண்டிக் குதிரையில் சக்கடத்தார் தானும் ஏறி விழுந்தாராம் என்று பேச்சு வழக்கு உண்டு. இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக் குத் தீர்வு காணும் விடயத்தில் மஹிந்த ராஜ பக்ஷவின் அரசு கையாளும் அணுகுமுறையை இப்படித்தான் கணிக்கத் தோன்றுகின்றது. ஜே.ஆர். ஜெயவர்த்தனா, ஆர். பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க போன்ற முன்னாள் ஜனா திபதிகளும், அவர்களது அரசுகளும் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்ப தற்குக் கையாண்டு கடைசியில் தோற்றுப் போன அதே கையாலாகாத அணுகுமுறையைத் தான் தந்திரோபாயத்தைத்தான் மஹிந்தரின் அரசும் இப்போது பின்பற்றுகின்றது என்பது தெளிவாகி வருகிறது. ஒரு தெளிவற்ற தீர்க்கதரிசனமற்ற அ…
-
- 3 replies
- 1.5k views
-
-
வாகரையின் மமதையில் சிங்களம் மூழ்கிக்கொண்டு இருக்கிறது. இப்படித்தான் யாழ்ப்பாணத்தில் கொண்டாட முல்லைத்தீவு படைத்தளம் துவசமானது. ஹா....ஹா......ஹா......
-
- 7 replies
- 2.2k views
-
-
கடந்த சனிக்கிழமை "வெதமாத்தயா" மகிந்தவினால் ஒழுங்கு செய்யப்பட்ட தைப்பொங்கல் கொண்டாட்டம் ஆனது வாகரை வெற்றி விழா கொண்டாட்டமாக்கப்பட்ட நிகழ்வு மிக ஆடம்பரமாக வெதமாத்தயாவின் வாசஸ்தலத்தில் நடைபெற்றதாம். இவ்வெதமாத்தயாவின் ஆடம்பரத்தில் ஈழத்தமிழினத்தின் வெட்கத்துக்குரிய எச்சங்களாகிய ... * "சிறுவர் சில்மிசச் செல்வர்" ஆனந்தசங்கரி * "நிறை தண்ணிக்குட்டி" சித்தார்த்தன் * "மகேஸ்வரி உடையான்" அத்தியடிக்குத்தி டக்கிலசு * எச்ச சொச்ச கூலித்தலைமைகள் * இக்கும்பல்களோடு கடத்தல் நாடமேற்றி தமிழ் தேசிய ஊடகவியலாளராக தன்னை காட்ட முடிந்தவரும், புளொட் கூலிக்கும்பலின் முன்னால்/இன்னால் உறுப்பினரும், சதிப் புளொட்டின் இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் * மற்றும் தன்னை தமிழ்த் தேசியத்திற்க்க…
-
- 13 replies
- 4k views
-
-
பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது - இளந்திரையன். பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல விடுதலைப்புலிகள், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதாக அறிவித்தால் இராணுவமும் உடனடியாக சண்டையை நிறுத்தும் என கூறியிருந்தார். அது குறித்து கருத்துக் கேட்டபோதே விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரை…
-
- 1 reply
- 1.2k views
-
-
வடபோர்முனை, வாகரை களமுனைப்பகுதிகளில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதலில் நான்கு போராளிகள் களப்பலியாகியுள்ளார்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை வடபோர்முனை கிளாலி களமுனையில் சிறீலங்கா படைகளுடன் நிகழ்ந்த மோதலில் அம்பாவை மாவட்டத்தை சேர்ந்த லெப்ரினட் கீதவாணன் என்றழைக்கப்படும் குவேந்திரராசா தயானந்தன், யாழ்மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை அருளன் என்றழைக்கப்படும் டேவிட் பிரேம்குமார் ஆகியோர் வீரச்சாவடைந்துள்ளனர். அதேநாளன்று முகமாலை களமுனையில் சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்றமோதலில், முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த வீரவேங்கை கானகன் அல்லது அறிவுமதி என்றழைக்கப்படும் பாலகிருஷ்ணன் நவரதன் என்ற போராளி வீரச்சாவடைந்துள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வாகரை களமுனையில் சிறீலங்கா படைகளுடன…
-
- 2 replies
- 1.3k views
-
-
மகிந்த - மங்கள மோதல் வலுக்கிறது [புதன்கிழமை, 24 சனவரி 2007, 05:33 ஈழம்] [அ.அருணாசலம்] {புதினம்} சிறிலங்காவின் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து அரசு பக்கம் தாவும் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்வாங்கும் நடவடிக்கையை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி, அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு மங்கள சமரவீர கடிதம் அனுப்பியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை, மகிந்தவிற்கு எழுதிய இரகசிய கடிதத்துடன் மகிந்தவிற்கும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் நடந்து வரும் பனிப்போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதாக உயர்மட்ட அரச தகவல்கள் தெரிவிக்கின்றன. மங்களவின் கடிதத்தின் பிரதிகள் மகிந்தவின் ஆலோசகரான பசில் ராஜபக்ச மற்றும் டல்லஸ் அழகப்பெருமா ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள…
-
- 0 replies
- 926 views
-
-
கிழக்கு மாகாணத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் இடைத்தரிப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒரு பகுதியினர் தமக்கான உணவு விநியோகம் தொடர்பில் பிரச்சினைகைள எதிர் நோக்குவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சுமார் அறுபதினாயிரம் பேர் இம்மாவட்டத்தில் இடம்பெயர்ந்து தங்கியுள்ள போதிலும் அவர்களில் மூன்றில் இரண்டு பகுதியினர் மாத்திரமே இடைத்தரிப்பு முகாம்களிலும், தற்காலிக முகாம்களிலுமே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள். இடைத்தரிப்பு முகாம்களில் தங்க வைக்கப்டப்டுள்ளோரை பொறுத்த வரை தங்களை பராமரித்து வரும் அரச சார்பற்ற அமைப்பகளினால் தொடர்ந்தும் சமைத்த உணவு வழங்கப்படுவது குறித்து அவர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். உணவு போதாது என்றும் சிலர…
-
- 0 replies
- 880 views
-
-
கொழும்பு காவல்துறையினரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொழும்பில் நான்கு காவல்துறைநிலையங்களில் தடுத்து வைத்திருந்த 12 தமிழ் இளைஞர்கள் காலியில் அமைந்துள்ள பூசா தடுப்பு முகாமிற்கு அனுப்பியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த திங்கட்கிழமை இந்த 12 பேரையும் பம்பலப்பிட்டிய காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றபின் பூசா தடுப்புமுகாமிற்கு அனுப்பியுள்ளார்கள். இவர்களுள் ஊடகத்துறையை சேர்ந்த பெண் மற்றும் இருதய நோயிற்கு உள்ளான வயோதிபரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்து. இவர்கள் எவரும் சட்டவிரோதமான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபடாதபோதும் பூசாவிற்கு அனுப்பியுள்ளதாக அறியமுடிகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 865 views
-
-
நேற்று முன்தினம் மட்டக்களப்பு - கொழும்பு வீதியில் சிறீலங்கா படைகளுக்கும் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. இதன்போது விடுதலைப்புலிகளின் தரப்பில் மட்டக்களப்பு கன்னங்குடா பகுதியை சேர்ந்த கப்டன் உமாமகன் என்றழைக்கப்படும் மாணிக்கம் உமலிப்போடி என்ற போராளி வீரச்சாவை தழுவிக்கொண்டுள்ளார். இந்த மாவீரரின் வித்துடல் நேற்று காலை கொக்கட்டிச்சோலை பகுதியில் உள்ள தமிழீழ அரசியல்துறை மாவட்டத்தில் வைக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1k views
-
-
புலிகளிடமிருந்து மக்களை மீட்கும் தாக்குதல்களை அரசு தொடரும்: கெஹெலிய ரம்புக்வெல. கிழக்கு மக்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டில் இருந்து மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கையில் அரசு பாரியளவு வெற்றியீட்டியுள்ளது. ஒரு பொறுப்பு வாய்ந்த அரசு என்ற வகையில் புலிகளின் பயங்கரவாதச் செயற்பாட்டிற்குள் சிக்கும் மக்களை இனவேறுபாடின்றி மீட்டெடுப்பதற்கான தாக்குதல் நடவடிக்கையை அரசு தொடர்ந்து முன்னெடுக்கும். இவ்வாறு அமைச்சரும் பாதுகாப்புத்துறை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல நேற்று கொழும்பில் ஊடகவியலாளர்களைச் சந்தித்து உரையாற்றுகையில் கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கிழக்கில் மூவின மக்களையும் இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல…
-
- 0 replies
- 830 views
-
-
இறுதித்தீர்வுத் திட்டத்தை விடுதலைப் புலிகளுக்கு சமர்ப்பித்து புலிகளுடன் பேசுக: ஐ.தே.க. அனைத்து கட்சிக்குழுவினால் முன்வைக்கப்படும் இறுதித்தீர்வுத் திட்டத்தை விடுதலைப் புலிகளுக்கு சமர்ப்பித்து பின்னர் அதில் உள்ள அதிகாரப்பகிர்வு முறைகள் அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட வேண்டும். திஸ்ஸ விதாரனவின் தீர்வுத்திட்டம் தொடர்பாக கருத்துக் தெரிவிக்கையில் மேற்கண்டவாறு ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. திஸ்ஸ விதாரனவின் தீர்வுத் திட்டம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதி கே.என்.சொக்சி கட்சியின் கருத்தினை தெரிவிக்கையில், அனைத்து கட்சிக்குழு புதிய அரசியல் யாப்பை எழுதாது, இனப்பிரச்சனைத் தீர்வுக்கான காரணிகளை கண்டறிவதுடன் அது தொடர்பாக ஏனைய கட்சிகளு…
-
- 0 replies
- 968 views
-
-
விடுதலைப் புலிகளின் சர்வதேச பேச்சாளராக அடேல்? அண்மையில் காலமான விடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் புலிகளின் சர்வதேச பேச்சாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்தியப் பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது. அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அரசாங்க தரப்பிலிருந்து விடுதலைப்புலிகள் கடுமையான சவால்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், சர்வதேச சமூகத்திற்கு புலிகளின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் பணியை அடேல் சிறப்பாக மேற்கொள்வாரென புலிகள் நம்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. தமிழ் மக்களின் போராட்டத்துடனும் தமிழீழ விடுதலைப்புலிகளுடனும் நீண்டகால தொடர்புவைத்துள்ள அடேல், தமிழீழ விடுதலைப்புலிகள் …
-
- 13 replies
- 3.9k views
-
-
வீதி அபிவிருந்தி அதிகாரசபை ஊழியர்கள் மூவர் கடத்தல் - நால்வர் சுடப்பட்டு படுகாயம். வவுனியா மாவட்டம், உயிலங்குளம் பகுதியில் வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் ஊழியர்கள் நால்வர் அடையாளம் தெரியாத நபர்களினால் சுட்டுப் காயப்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலும் மூவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். தனியார் ஊர்தி ஒன்றில் குறித்த பணியாளர்கள் வவுனியா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது மகிழுந்து ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகள் இவர்களின் ஊர்தியை வழிமறித்துள்ளனர். முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த இவ்வூர்தியின் ஓட்டுனரை செல்ல அனுமதித்தனர். இந்நிலையில் ஆயுததாரிகளின் பிடியிலிருந்து தப்பியோட முயன்ற நான்கு ஊழியர்கள் சுடப்பட்டு படுகாயப்படுத்தப்பட்டனர். ஏனைய மூவரும் கடத்திச்…
-
- 2 replies
- 1k views
-
-
நிதி வழங்கும் உலக நாடுகளை ஏமாற்றுகிறது சிறிலங்கா: இளந்திரையன் குற்றச்சாட்டு பேச்சுக்கு வரவேண்டும் என்று அல்லது அடிவாங்க வேண்டும் என்று கூறுவதற்கு கேகலிய ரம்புக்வெலவுக்கு தகுதி கிடையாது என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ்முரசிடம் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரசின் அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளருமான கேகலிய ரம்புக்வெல விடுதலைப் புலிகள், போரை நிறுத்தி பேச்சுவார்த்தைகளுக்கு திரும்புவதாக அறிவித்தால் இராணுவமும் உடனடியாக சண்டையை நிறுத்தும் என கூறியிருந்தார். அது குறித்து கருத்துக் கேட்டபோதே விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தமிழ்முரசிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார். …
-
- 0 replies
- 658 views
-
-
அடுத்த கட்டமாக மட்டக்களப்பின் மேற்கு பக்கமாக தாக்குதல் நடவடிக்கை செவ்வாய் 23-01-2007 07:09 மணி தமிழீழம் [செந்தமிழ்] வாகரையில் முன்னெடுக்கப்பட்ட படையெடுப்பு,அடுத்த கட்டமாக தமிழீழ விடுடுதலைப்புலிகளின் ஆளுகைக்கு கீழுள்ள, மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கு பீரதேசங்களை நோக்கி தொடுக்கப்படும் என அரசாங்கம் பகிரங்கமாக அறிவித்துள்ளது. இன்று ரொய்டர் செய்திச் சேவைக்கு செவ்வியளித்திருக்கும், சிறீலங்கா பாதுகாப்புத்துறை பேச்சாளர் அமைச்சர் கெஹெலலிய ரம்புக்வெல, வாகரைக்கு அடுத்ததாக தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆளுகையின் கீழுள்ள தொப்பிக்கல் காட்டுப்புறத்தை நோக்ககி, வலிந்த படையெடுப்பை படையினர் தொடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
-
- 1 reply
- 1.1k views
-
-
புதன் 24-01-2007 01:27 மணி தமிழீழம் [மோகன்] உடுப்பிட்டியில் இளைஞர் சுட்டுக்கொலை இன்று முற்பகல் 11 மணியளவில் வடமராச்சி உடுப்பிட்டி பகுதியில் இளைஞர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் இன்னமும் இனம் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com
-
- 0 replies
- 776 views
-
-
கைது செய்யப்பட்ட 571 பேரின் விபரங்களை சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் திரட்டியுள்ளது வீரகேசரி நாளேடு சர்வதேச செஞ்சிலுவை குழுவானது பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக கைது செய்யப்பட்ட 571 பேர் தொடர்பான தகவல்களை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நவம்பர் மாதம் வரையான காலப்பகுதியில் சேகரித்துள்ளது. அத்துடன் இக்குழு காணாமல் போனதாக அல்லது கைது செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்ட 334 பேர் தொடர்பிலும் விபரங்களைத் திரட்டியுள்ளது. மேலும் சிறுவர்களை படைகளில் சேர்ப்பது தொடர்பாக 199 முறைப்பாடுகளும், மனிதாபிமான சட்ட மீறல்கள் தொடர்பாக 81 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆறுமாத காலப்பகுதியில் யுத்த சூழ்நிலை காரணமாக திருகோணமலை, கந்தளாய், கிண்ணியா மற்றும்…
-
- 0 replies
- 895 views
-
-
-
காங்கேசன்துறைக்கு செல்ல இருந்த படைகளிற்கான வழங்கல்களை தடுக்க முயற்சி? http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20990
-
- 78 replies
- 17.1k views
-
-
நாட்டில் முழு அளவிலான போர் தொடங்கி விட்டது. சமாதானமென்பது இனி சாத்தியமற்றதென்ற நிலையில் போர் தீவிரமடையப் போகின்றது. கிழக்கிலிருந்து புலிகளை முழுமையாக அப்புறப்படுத்தப் போவதாக அரசும் படைத்தரப்பும் சூளுரைத்து வருகையில் கிழக்கில் ஆக்கிரமிப்பு நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது. வடக்கு- கிழக்கு மாகாணத்தை வெவ்வேறாகப் பிரிக்கும் திட்டத்தை அரசு தீட்டிய அன்றே, கிழக்கில் தமிழர் பலத்தை வெகுவாகக் குறைத்து விட வேண்டுமென்றும் திட்டமிடப்பட்டது. கிழக்கை தனியாகப் பிரித்து அங்கு புதிய மாகாண சபையொன்று அமைக்கப்படும் போது அந்த மாகாண நிர்வாகத்துக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படக் கூடாதென்பதில் அரசு மிகவும் கவனமாயிருந்தது. கிழக்கில் தமிழ் பேசுவோரின் பலத்தை இழக்கச் செய்வதன் மூலமே அங்கு சிங்கள ஆதிக…
-
- 1 reply
- 1.6k views
-
-
சாவகச்சேரியில் குண்டுவெடிப்பு: 2 பொதுமக்கள் பலி- 10 பொதுமக்கள் படுகாயம். யாழ். தென்மராட்சி சாவகச்சேரியில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சாவகச்சேரி சந்தையில் விற்பனை கொள்வனவுக்காக மக்கள் கூடிநின்ற இடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 8 மணியளவில் இக்குண்டு வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவ இடத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தோர் யாழ். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். -Puthinam-
-
- 11 replies
- 2.4k views
-