ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143292 topics in this forum
-
திருமலை துறைமுகம் யார் வசமோ அவர்கள் பக்கம் சாயப்போகும் சர்வதேசம். இலங்கையின் இனப்பிரச்சினை இப்போது தீர்ந்து விடாது என்ற கருத்து வலுப்பெற்றுள்ள இத்தருணத்தில் கூடவே பாரிய முழுமையான யுத்தத்திற்கான அறிகுறிகளும் வெகுவாக தோற்றம் பெற்று நிற்கின்றது. சமாதானத்திற்கான அறிகுறிகள் தொலைதூரம் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளை சர்வதேசமும் அப்படியே செல்வதாகவே உணரப்படுகின்றது. ஏனெனில் இன்றைய சூழலில் நடைபெறும் யுத்த நடவடிக்கைகளோடு ஒப்பிடுகையில் எத்தனையோ மடங்கு சிறியதான அசம்பாவிதங்கள் நடைபெறுகையில் அழுத்தங்களை அழுத்தமாக தெரிவித்த சர்வதேசம் இப்போது அழுத்தங்களை ஊடகங்களுக்கேனும் கொடுப்பது இல்லை. ஒரு துப்பாக்கி ரவை சுடப்பட்டால் அதனை யுத்தநிறுத்த மீறலாக பதிவு செய்து அறிக்கைகளை வெளியிடும் போர் நி…
-
- 6 replies
- 3.9k views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 14 சனவரி 2007, 04:35 ஈழம் (அ.அருணாசலம்) நோர்வே ஓஸ்லோவின் அமைதி முயற்சிகளை மீள ஆரம்பிப்பது குறித்த முயற்சிகள் நடந்து கொண்டிருக்கையில் அது மற்றுமொரு பின்னடைவை சந்தித்துள்ளது. அனைத்துக்கட்சி குழுத்தலைவரும் அமைச்சருமான திஸ்ஸ விதாரனவினால் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத்திட்ட அறிக்கையை சிறிலங்கா அரச தலைவர் மகிந்த பிழையானது என நிராகரிக்க முடிவு செய்துள்ளார். கோபமடைந்த மகிந்த, நாட்டைப் பலவீனப்படுத்த அனுமதிக்கப் போவதில்லை என தெரிவித்ததுடன், அரசு வெளிப்படையாகவே விதாரனவின் திட்டத்தை கைவிட முடிவெடுத்துள்ளதகவும் கூறப்படுகின்றது. விதாரனவின் அறிக்கையில் வடக்கு - கிழக்கு பிரிப்பு தொடர்பாக விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களில் விவாதிக்க வேண்டும் என தெரி…
-
- 1 reply
- 1k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் ஏ-9 பாதை மூடப்பட்ட பின்னர் 2006 ஆண்டில் யாழ். குடாநாட்டில் உணவுப்பொருட்களின் விலைகள் 800 விகிதத்தால் உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. வடக்கு - கிழக்கு நிலைமைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மீன், மரக்கறி, முட்டை என்பவற்றின் விலைகள் பூச்சியத்தில் இருந்து 100 விகிதமாகவும் வடக்கு மற்றும் கிழக்கில் அதிகரித்துள்ளது. யாழ். குடாநாட்டில் மீனின் விலை 800 விகிதத்தால் உயர்ந்துள்ளது. அரிசி, பருப்பு, பாண் மற்றும் மண்ணெண்ணை அகியவற்றின் விலைகள் கடந்த இரு வாரங்களில் ஓரளவு உறுதித்தன்மைக்கு அல்லது குறைவடையும் நிலைக்கு வந்துள்ளன. எனினும் தேங்காய் எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்…
-
- 0 replies
- 676 views
-
-
அதிகாரப் பகிர்வு பற்றி தமிழர் தரப்பிலிருந்து தெளிவான உறுதிமொழி வழங்கப்பட வேண்டும் நாடாளுமன்றில் நேற்று ஹக்கீம் அறிவிப்பு. வடக்கு கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்கள் நிபந்தனையின்றி ஆதரவு தரவேண்டும் என்றுகொருவதை ஏற்க முடியாது. இணைந்த வடக்கு, கிழக்கிற்குள் முஸ்லிம்களுக்கு வழங்கபடும் அதிகாரம் என்ன என்பது பற்றித் தமிழர் தலைமைகள் தெளிவான உறுதி மொழிகளைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் இணைப்புக்கு ஆதரவு கோரினால் ஒருபோதும் நிபந்தனைகளற்ற முறையில் முஸ்லிம்கள் இணைப்புக்கு ஆதரவு வழங்க முன் வரமாட்டார்கள். சுடர் ஒளி தலைப்புச் செய்தியின் ஒரு பகுதி நன்றி சுடர் ஒளி 11 ஜன 2007
-
- 7 replies
- 2.2k views
-
-
சனி 13-01-2007 19:37 மணி தமிழீழம் [செந்தமிழ்] யாழ்பாணத்தில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை யாழ்பாணம் 1ம்குறுக்கு தெரு, வேம்படி மகளீர் பாடசாலைக்கு முன்பாக உயர்பாதுகாப்பு வலயத்தில் இன்று சனிக்கிழமை காலை 11.15 மணியளவில் இளைஞர் ஒருவர்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இராணுவத்தை தாக்க முற்பற்ட போது அவர்சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கொல்லப்பட்ட இளைஞரின் உடலமானது யாழ்பாண ஆசிரியர் வைத்தியசாலை இனம்காணப்படவதற்காக வைக்கப்பட்டுள்ளது அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பதிவு.கொம்
-
- 3 replies
- 1.2k views
-
-
வாகரை வாழ் மக்களை வாழ வைக்க அரிய சந்தர்ப்பம் CANADATRO&CTR சேர்ந்து வாகரை வாழ் மக்களை வாழவைக்க உடனடி நிவாரண நிதி சேகரிக்கிறார்கள்.வெளி நா டுகளில் உள்ளவர்கள் கடனட்டை மூலமாக நிதி கொடுக்கலாம்.தொடர்புகளுக்கு CTR24.COM.CTR NO 1 416 264 1423 TRO 1416 4185697
-
- 1 reply
- 1.6k views
-
-
யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சிறீலங்கா படையினர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை. நேற்று வெள்ளிக்கிழமை இரவு யாழ்ப்பாணம் அரியாலைப்பகுதியில் அமைந்துள்ள 513வது இராணுவமுகாமினுள் படையினர் ஒருவர் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளதாக இராணுவ முகாம் அலுவலர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். இதேவேளை சம்பவ இடத்துக்கு விஐயம் செய்த யாழ்மாவட்ட நீதிபதி திருநாவுக்கரசு இராணுவமுகாம் அலுவலர்களின் முரண்பாடான தகவல்களும் ஆதாரங்களின் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். -Pathivu-
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைக்கு இத்தாலியின் நிதி உதவி மு.சுப்பிரமணியம் இத்தாலி அரசு சிறிலங்காவில் மீண்டும் நல்லதொரு சூழ்நிலை ஏற்பட தமிழீழ விடுதலைப்புலிகளும் சிறிலங்கா அரசும் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என கேட்டூள்ளது சர்வதேச ஜக்கிய ஊடகம் தெரிவித்துள்ளது. அண்மையில் இத்தாலிய வெளிவிவகார பிரதி அமைச்சர் கியாணி வெனாட்டி சிறிலங்கா ஜனாதிபதி மகிந்தவை சந்தித்து பேசியுள்ளார் . 20 வருடகால இன மோதல்கள் உடனடியாக முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் வலியுருத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இத்தாலிய வெளிவிவகார பிரதி அமைச்சர் அதியுச்ச மனிதாயின நடவெடிக்கைகளும் உதவும் முகமாகவும் வடக்கு கிழக்கு மோதல்களில் இடம் பெயர்ந்து வாழும…
-
- 1 reply
- 1.2k views
-
-
சித்திரைப் புதுவருடத்துக்கு முன்னர் கிழக்கில் புலிகளின் பலம் முற்றாக ஒழிப்பு [12 - January - 2007] [Font Size - A - A - A] எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நிகழும் சிங்கள, தமிழ் புதுவருட தினக் கொண்டாட்டங்களிற்கு முன்னர் கிழக்கு மாகாணத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் பலத்தை முற்றாக ஒழிப்பதே பாதுகாப்புப் படையினரின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு கிழக்கில் புலிகளின் பலம் முறியடிக்கப்பட்ட பின்னர் கிழக்கு மாகாணம் முழுவதும் உள்ளூராட்சி நிர்வாகத்தை ஆரம்பிப்பதற்கும் கூடுதல் அதிகாரங்கள் கொண்ட மாகாண சபையை அமைப்பதற்கும் அதற்காக மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்கும் சாத்தியம் உள்ளது. கிழக்கு மாகாணப் பிரதேசங்களை புலிகள் இயக்கத்தினரின் ஆக்கிரமிப்பிலிருந்து …
-
- 1 reply
- 1.8k views
-
-
இராணுவத்தினரிடம் பாதுகாப்புக்கோரும் துணை இராணுவக்குழு. தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடர்ச்சியான தாக்குதல்களை அடுத்து சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவான கருணா குழுவினர் கிழக்கில் உள்ள தமது அரசியல் அலுவலகங்களுக்கு முழுப் பாதுகாப்பு வழங்குமாறு அரசைக் கேட்டுள்ளது. கடந்த இரு மாதங்களில் மட்டக்களப்பு, திருமலை, அம்பாறை மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுப்பகுதியில் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் அமைக்கப்பட்டிருந்த கருணா குழுவினரின் ஐந்து அலுவலகங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்ததாகவும் ஆறு உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் தமது உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கவேண்டிய முழுப்பொறுப்பு அரசுக்கு உள்ளது என்று கருணா குழுவினரின் பேச்சாளர் அசா…
-
- 1 reply
- 1.2k views
-
-
[11 - January - 2007] [Font Size - A - A - A] பிரித்தானிய உள்நாட்டு அமைச்சகம் 2006 மார்கழி மாதம் 13 ஆம் திகதி ஸ்ரீலங்காவை பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்குவதாக தீர்மானித்தது. பிரித்தானியாவில் வாழுகின்ற இலங்கைத் தமிழர்களிடம் மட்டுமல்ல இலங்கையில் வாழுகின்ற தமிழர்கள் மத்தியிலும் இந்தச் செய்தி மிகுந்த பரபரப்பை நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு பாதுகாப்பான நாடுகளின் பட்டியலிலிருந்து ஸ்ரீ லங்கா நீக்கப்பட்டமை இலங்கையருக்கு ஏதோ வதிவிட உரிமை உடனடியாக வழங்கப்படப் போவது போன்ற மாயையை ஒரு சிலர் ஏற்படுத்தி வருகின்றார்கள். இதனை நம்பி பிரித்தானியாவில் மட்டுமல்ல இலங்கையிலும் ஒரு பாரிய அலை வீசுவதாக அறியப்படுகிறது. இலங்கையில் இன்று உள்ள போர்க்காலச் சூழ…
-
- 2 replies
- 1.5k views
-
-
வாகரை நோக்கி படையினர் எறிகணைத் தாக்குதல்: ஐவர் படுகாயம். திருமலை கல்லாறு இராணுவ முகாமிலிருந்து இன்று மதியம் 12.30மணியளவில் படையினர் வாகரை பகுதி பாற்சேனைக் கிராமம் மீது எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டனர் இத் தாக்குதலில் ஐந்து அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். புன்னையடியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் சுஜீகரன் (13) அவரது சகோதரரான விக்கினேஸ்வரன் திலகராசா (16) கதிரவெளியைச்சேர்ந்த பொன்னையா தியாகராசா (36) அதே கிராமத்தைச் சேர்ந்தவர்களான கந்தையா சிவராசா (47) வீரபத்திரன் வைரவலிங்கம் (42) ஆகியோரே படையினரின் எறிகணை வீச்சில் படுகாயமடைந்த நிலையில் வாகரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வாகரைக்கும் வெளியிடங்களிற்குமான தரைவழிப்பாதை (ஏ-15) படையினரால் மூடப்ப…
-
- 0 replies
- 835 views
-
-
சிறீலங்காவிற்கான நிதிநிறுத்தம் தொடர்பில் வெளியான தகவல் குறித்து ஜேர்மனிய தூதரகம் விளக்கம். சிறீலங்காவிற்கு நிதியுதவிகள் நிறுத்தம் தொடர்பில் வெளியான செய்திகள் தவறானவை என கொழும்பில் உள்ள ஜேர்மனிய தூதரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பில் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் போர்நிறுத்த மீறல்கள் தொடர்பாகவும், ஏனைய இடையூறுகள் காரணமாகவும், கடந்த ஆண்டு ஜேர்மனியின் அனுசரணையின் கீழ் பல செயற்திட்டங்கள் முன்னெடுக்க முடியவில்லை எனவும் இதனால் மேலதிக நிதியொதிக்கீடுகளை மேற்கொள்வதை இடைநிறுத்தியுள்ளதாகவும் அக்குறிப்பீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்கால உதவிகள் கடந்த காலங்களை போலல்லாது புதிய அணுகுமுறையின் கீழ் வழங்கப்படும் என்றும் இதற்கமைய வடக்குகிழக்கில் பாதிக்கப்பட…
-
- 0 replies
- 1.4k views
-
-
கொழும்பு வந்த பிரணாப் முகர்ஜி தெளிவாகப் புரிந்த "ஒரு விடயம்" இலங்கைக்கு சென்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெளிவாகப் புரிந்துகொண்ட ஒரு விடயத்துடன் நாடு திரும்பியிருக்கின்றார். அதாவது கொழும்புக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் சமாதானப் பேச்சுக்கள் அண்மைக்காலத்தில் நடைபெறும் சாத்தியங்கள் இல்லை என்பதே அவர் புரிந்துகொண்ட ஒரு விடயம் என 'ஐ.ஏ.என்.எஸ்' செய்திச்சேவை தெரிவித்திருக்கின்றது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் புதுடில்லியில் நடைபெறவுள்ள பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் (சார்க்) உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்க கொழும்புக்கு வருகை தந்த பிரணாப் முகர்ஜி, மகிந்த ராஜபக்சவுடன் தனியாகப் பே…
-
- 0 replies
- 1.2k views
-
-
வெள்ளி 12-01-2007 21:27 மணி தமிழீழம் (பதிவு நிருபர்) போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை மனித உரிமை மீறல்கள் விடயத்தில் தெற்காசியாவில் ஏனைய நாடுகளை வி;ட முதலிடம் பெற்றுள்ளதாக கியுமன் ரைட்ஸ் வோட்ச் எனப்படும் மனித உரிமைகள் கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை மீறல்கள் கடந்த வருடம் மோசமாகி இருந்தன. தெற்காசியாவில் இலங்கை கடந்த வரும் மனித உரிமைமீறல் விடயத்தில் முதல் இடம்பெறுவதற்கான காரணம்இ தமிழிழ விடுதலைப்புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்களேயாகும். இதன்போது சர்வதேச மனித நேய சட்டங்களும் மற்றும் மனித உரிமை விடயங்களும் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு குறிப்பிட்டுள்ளது. படையினரால் மேற்கொள்ளப்பட்ட பொதுமக்கள் மீத…
-
- 2 replies
- 1.6k views
-
-
சனி 13-01-2007 05:03 மணி தமிழீழம் [மயூரன்] நெதர்லாந்து சோவா நிறுவனம் தொடர்பில் சிறீலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சிங்கள தீவிரவாதத்தை தூண்டும் செயல்கள் என ஐரோப்பிய ராஐதந்திரிகள் கண்டனம் வெளியிட்டுள்ளார்கள். ரொய்ட்ரர் செய்திச் சேவைக்கு செவ்வி வழங்கிய ஐரோப்பிய ஒன்றியத்தின் ராஐதந்திரி ஒருவர் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சீறீலங்கா அரசாங்கம் முன்வைப்பது ஆத்திரமூட்டும் செயல் என கண்டனம் வெளியிட்டுள்ளார். மனிதநேய பணிகள் தேவைப்படும் இடத்தில் இவ்வாறு குற்றச்சாட்டுகள் முன்வைப்பது மனிதநேயபணிக்கு இடையூறுகளை ஏற்படுத்தும் அதற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ராஐதந்திரி சுட்டிக்காட்டியுள்ளார். நெதர்லாந்து அரசாங்கமும், ஐரோப்பிய ஒன்றி…
-
- 1 reply
- 1.4k views
-
-
ஐ-தே-க எம்.பி.க்கள் எவரையாவது ஜனாதிபதி அரசு பக்கம் எடுப்பாரேயானால் ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம் - திஸ்ஸ அத்தநாயக்க. ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்கள் எவரையாவது ஜனாதிபதி அரசு பக்கம் எடுப்பாரேயானால், சுதந்திரக் கட்சியுடன் செய்து கொள்ளப்பட்டிருக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கை கிழித்தெறியப்பட்டுவிடுமெனவ
-
- 0 replies
- 789 views
-
-
முன்னாள் தலைவர்களால் முடியாததை தன்னால் நடத்திக் காட்ட முடியுமென நினைத்து ஜனாதிபதி செயல்படுகின்றார் : சம்பந்தன். முன்னாள் ஜனாதிபதிகளால் முடியாதவற்றை தன்னால் நடத்திக் காட்ட முடியுமென நினைத்து தற்போதைய ஜனாதிபதி செயல்படுகின்றார். இதுவொரு தப்புக்கணக்கென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இ ரா.சம்பந்தன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை (11.02.2007) இடம்பெற்ற மாமனிதர் சந்திரநேருவின் அனுதாபப் பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சம்பந்தன் மேலும் கூறியதாவது அரசாங்கம் யுத்தம் செய்யவில்லையென்று கூறிக்கொண்டே யுத்தமொன்றை தமிழ் மக்கள் மீது நடத்திக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக 2006 ஆம் ஆண்டு மட்டும் மூவாயிரம் பேர்…
-
- 0 replies
- 854 views
-
-
புலிகளை அழித்து பிரச்சினைக்கு தீர்வு காண நினைத்தால் 100 வருடங்கள் கழிந்தாலும் முடியாது: சிறி காந்தா கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை விரட்டியடித்து விடலாமென நப்பாசை கொண்டு அரசு யுத்த முனைப்புகளில் ஈடுபடுகிறது. விடுதலைப்புலிகளை அழிப்பதன் மூலமே பிரச்சினைக்குத் தீர்வு காணலாமென அரசு நினைக்குமாகவிருந்தால் நூறு வருடங்கள் சென்றால் கூட அது நிறைவேறாதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கின் இன்றைய நிலை தொடர்பாக இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது.. விடுதலைப்புலிகளை அழித்து விடலாமென ஜே.ஆ…
-
- 0 replies
- 961 views
-
-
வெள்ளி 12-01-2007 21:32 மணி தமிழீழம் (பதிவு நிருபர்) யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாணவன் காந்தியழகன் ஸ்ரீசனாத் இன்று விடுவிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 6 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் இருந்து உரும்பிராய் சென்ற பின்னர் காணாமல் போனதாக முறையிடப்பட்டிருந்தது. இந்தநிலையில் அவர் இன்று காலை நாவலர் வீதியில் உள்ள வீட்டின் அருகில் வைத்து விடுவிக்கப்பட்டுள்ளார். காணாமல் போன வட்டுக்கோட்டை இந்து கல்லூரி மாணவன் கந்தையா லதீஸ்வரன். அல்லைப்பிட்டியில் வைத்து காணாமல் போன யாழ்ப்பாண பல்கலைகழக கலைப்பீட மாணவன் மார்கண்டு சசிக்குமார் ஆகியோர் தொடர்பில் இன்னும் தகவல்கள் வெளியாகவில்லை. நன்றி : பதிவு
-
- 0 replies
- 960 views
-
-
வெள்ளி 12-01-2007 16:45 மணி தமிழீழம் [மயூரன்]{பதிவ} பாலித கோகன்ன வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமனம். கலாநிதி பாலித கோகன்ன இன்று வெள்ளிகிழமை ஜனாதிபதி ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரச சமாதான செயலகத்தின் பணிப்பாளரான கலாநிதி பாலித கோகன்ன தொடர்ந்து சமாதான செயலக பணிப்பாளராக கடமையாற்றுவதோடு அதெவேளை வெளிவிவகார அமைச்சின் செயலாளராகவும் பணியாற்றுவாரேன ஜனாதிபதியின் பேச்சாளர் சந்திரப்பால லியனகே தெரிவித்தார்
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கையில் தற்கொலை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு. இதற்கு பாலியல் பலவீனம் காரணமாம்: மருத்துவ நிபுணர் தகவல் இலங்கையில் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அநுராதபுரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்கள் பெரும்பாலும் பாலியல் பலவீனம் காரணமாகவே இம்முடிவுக்கு வருகின்றனர் என்றும் மருத்துவ ஆய்வின் ஊடாககக் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமையன்று தாஜ்சமுத்;திரா ஹோட்டல் அரங்கில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் உரையாற்றிய அநுராதபுரம் பொது வைத்திய சாலையின் சட்ட மருத்துவ அதிகாரியான தனஞ்சய வைத்யரட்ன இத்தகவலை வெளியிட்டார். இம்மாவட்டத்தில் தற்கொலை செய்வோரில் 80 சதவீதமானோர் ஆண்கள் என்றும் அவர்களில் பெரும்பாலானோர் 30-50 வயதுக்குட்பட்ட திருமணமானவர்களே …
-
- 1 reply
- 1.3k views
-
-
நாட்டைப்பிரிக்காத அரசியல் தீர்வுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் ஆயர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி மஹிந்த தெரிவிப்பு வீரகேசரி நாளேடு அடுத்த சர்வகட்சி மாநாட்டில் சகல இன மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது. நாட்டை பிரிக்காத அரசியல் தீர்விற்கு நான் பூரண ஒத்துழைப்பு வழங்குவேன் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அநுராதபுரம் ஆயர்களை சந்தித்து கலந்துரையாடியபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த சந்திப்பு அலரிமாளிகையில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த சந்திப்பில் வடக்குகிழக்கின் தற்போதைய நிலை மற்றும் மக்களின் வாழ்க்கை ஆகியவை தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது…
-
- 0 replies
- 775 views
-
-
சி.ஐ.டி. அதிகாரி எனக்கூறி நகை வியாபாரியிடம் கொள்ளை செட்டியார் தெருவில் சம்பவம் வீரகேசரி நாளேடு சி.ஐ.டி. அதிகாரி எனக்கூறி நகை வியாபாரி ஒருவரிடமிருந்து மோதிரம் மற்றும் பணத்தை ஒருவர் கொள்ளையடித்துச்சென்றுள்ளார
-
- 0 replies
- 828 views
-
-
தினக்குரல் ஊழியரான கு.கஜன் (26வயது) என்பவர் தெமட்டகொட வீட்டில் வைத்து 11.01.2007 அன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.அத்துடன் இவருடன் இணைந்திருந்த கல்வியியல் கல்லூரி மாணவனும் கைது.
-
- 0 replies
- 1.3k views
-