Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள இராணுவ முகாங்களில் இருந்து விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி நேற்று சனிக்கிழமை இரவு சரமாரியான எறிகணை தாக்குதலைமேற்கொண்டுள்ளனர். பதிலுக்கு விடுதலை புலிகளும் மோட்டார் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மட்டக்களப்பு வலயிறவு விமான படை முகாம் கடும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத் தாக்குதலால் படையினரிற்கு பலத்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. பதிவு.com

    • 3 replies
    • 1.3k views
  2. இலங்கை ராணுவம் குண்டு வீசி 61 குழந்தைகளை கொன்றது. இறந்த குழ்ந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய வீரப்பன் மனைவி முத்து லட்சுமி. இலங்கை ராணுவம் குண்டு வீசி 61 குழந்தைகளை கொன்றது. இறந்த குழ்ந்தைகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய வீரப்பன் மனைவி முத்து லட்சுமி. http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

  3. மாவிலாறில் தண்ணி கேட்ட படையினருக்கு குடாநாட்டில் ~தண்ணி காட்டும்| புலிகள் -தெய்வீகன்- கடந்த 2000 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி இரவு உதயன் பத்திரிகை தடைசெய்யப்பட்டு அங்கிருந்த நாம் அனைவரும் அலுவலகத்தின் வாயிலுக்கு அழைத்துவரப்பட்டோம். பத்திரிகை நிறுவனத்தின் ஒருவாசல் விடாமல் சீல்வைத்த பொலிஸார், விடியும் வரை எம்மை வாசலிலுள்ள பத்திரிகையின் நூலகத்தில் தங்கியிருந்துவிட்டு விடிந்ததும் வீடு செல்லும்படி கூறிச்சென்றனர். தடை செய்யப்பட்ட நிறுவனத்துக்கு தமது பொலிஸ் அணியொன்றை பாதுகாப்புக்கு விட்டுச்சென்றனர். அவ்வாறு பாதுகாப்புக்கு நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருடன் விடியும் வரை நேரம் போவதற்கு கதைத்துக்கொண்டிருக்கையில் பதவி வழியாகவும் பணி ரீதியாகவும் அவர் தான் சார்ந்த…

    • 1 reply
    • 1.6k views
  4. மலைவாழ் மக்கள் உரிமை இயக்கம் மரணித்த எமது இளம் சிட்டுக்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். இதில் தகவல் என்னவென்றால் பொருளாதாரத்தால் பின்தள்ளப்பட்ட அடிமட்டத்தில் உள்ள தமிழக மக்களுக்கும் எமது துயரங்கள் சென்றிருப்பது நல்ல விடயம். http://www.tamilwin.net/index.php?subactio...t_from=&ucat=1&

    • 2 replies
    • 1.5k views
  5. பாதுகாப்புக்காக மேலும் 500 கோடி ரூபா :shock: ஒதுக்கினார் மகிந்த [ஞாயிற்றுக்கிழமை, 20 ஓகஸ்ட் 2006, 06:11 ஈழம்] [கொழும்பு நிருபர்] பாதுகாப்புச் செலவுகளுக்காக 500 கோடி ரூபாவை மேலதிகமாக சிறிலங்கா அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. பாதுகாப்புச் செலவுகளுக்காக இந்த ஒதுக்கப்பட்டுள்ள நிதிக்கு மேலதிகமாக இந்த 500 கோடி ரூபா ஒதுக்கப்படவுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது தொடர்பாக மகிந்த தெரிவித்துள்ளார். மேலும் ஊர்காவல் படையில் 16,000 பேர் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இதற்காக சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்த ஆண்டு 125 கோடி ரூபா செலவு ஏற்பட உள்ளது.

  6. செந்தளிர்களின் செங்குருதியால் செந்நிறமான செஞ்சோலை - (தேசியன்) [20 - August - 2006] [Font Size - A - A - A] * படுகாயமடைந்த பல மாணவிகள் தமது அவயங்களை இழந்துள்ளனர் சிலர் கைகள், கால்கள் இரண்டையும் இழந்துள்ளனர் குருதியில் தோய்ந்து கண்ணீரால் கழுவப்படும் தமிழரின் நீண்ட சோக வரலாற்றில் `2006 ஆகஸ்ட் 14' ஈனர் படைகளின் ஈவிரக்கமற்ற தாக்குதல்களால் பரிதாபகரமாகக் கொல்லப்பட்ட 61 பிஞ்சுகளின் குருதியால் எழுதப்பட்டுள்ளது. நான்கு மாத பச்சிளம் குழந்தையை கண்முன்னே துடிதுடிக்க சுட்டுக்கொல்லும் வெறிபிடித்த சிங்கள ஆக்கிரமிப்பாளர்களுக்கு இதுவொரு பொருட்டாக இல்லாது போனாலும் அழுது... அழுது... ஆறமுடியாமல் அகதிகளாய் அலையும் தமிழினத்தால் இதைத் தாங்கிக் கொள்ளும் சக்தியில்லையென்றே கூறவேண…

    • 0 replies
    • 613 views
  7. தமிழர் பிரச்சினைக்கு சர்க்காரியா கமிஷன் அடிப்படையில் தீர்வு: கமிஷன் அறிக்கையின் நகலை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வரும் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா உதவ வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இலங்கை அரசும் இந்தியாவை இது தொடர்பாக வற்புறுத்தி வந்தது. இலங்கை பிரச்சினைக்கு தீர்வு காண இந்தியா இப்போது புதிய யோசனையை தெரிவித்து இருக்கிறது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் இடையே நல்லறவு, அதிகாரம் பற்றி ஆராய சர்க்காரியா தலைமையில் முன்பு கமி ஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன் அறிக்கையில் கூறப்பட்ட சிபாரிசுகளை அடிப்படையாக கொண்டு இலங்கை தமிழர் பிரச்சி னைகளுக்கும் தீர்வு காணலாம் என்று இந்தியா யோசனை தெரிவித்து இருக்கிறத…

    • 2 replies
    • 1.5k views
  8. தமிழர்கள் அழிவு கண்டு பொங்கியெழும் தமிழகம் ` "தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்" என்பார்கள். அதுபோலவே ஈழத் தமிழர்களுக்காகத் தமிழகத்தில் ஓங் கிக் குரல் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றது. புது அலை புது வேகத்தோடு வீசத் தொடங்கியிருக்கின்றது. ஈழத் தமிழர்களும், தமிழகத் தமிழர்களும் வாழிடப் பிர தேசத்தால் வேறுபட்டவர்கள். எனினும் பேசும் மொழியால், வாழும் முறையால், பின்பற்றும் கலாசாரப் பண்பாடுகளால், இனத்தால் ஒன்றுபட்டவர்கள். இரு சாராருக்கும் இடையி லான தொடர்பு, தாய் சேய் வாஞ்சை போன்று தொப்புழ்க் கொடி உறவு. அதனால்தான், ஈழத் தமிழர்களின் அழிவு கண்டு கொதித்தெழுந்து நிற்கிறது தமிழகம். "சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி" என்பதுபோல இதுவரை ஈழத் தமிழர் விடயத்தில் நீறு பூத்த…

    • 13 replies
    • 3.2k views
  9. தற்போது நடைபெற்றுவரும் யுத்தத்தையும் மக்கள் மீதான தாக்குதலையும் நிறுத்தும் படி சர்வதேசம் அழுத்தங்கள் சிறீலங்கா அரசிற்கு அதிகரித்துள்ளன. நேற்று தொலைபேசி மூலம் மகிந்தவை தொடர்பு கொண்ட ஐ.நா.பொது செயலாளர் கொபிஆனான் விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சு வார்த்தை நடத்தும் படி கேட்டுக் கொண்டதுடன் தற்போது நடைபெற்று வரும் தாக்குதலை நிறுத்தும் படியும் வேண்டு கோள்விடுத்ததுடன் அண்மையில் செஞ்சோலை வளாகத்தில் நடைபெற்ற சிறுவர்கள் மீதான தாக்குதல்களிற்கு தமது கண்டனங்களை தெரிவித்துள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

    • 6 replies
    • 2.1k views
  10. அரோகரா.... இம்மாதம் முடிவடைய இன்னும் 12 நாட்களே உள்ளன! பொறுத்திருப்போம்! நல்ல சேதிகள், நமைநாடி வரும்!! அதன் பின் ... ...."வெள்ளிப்பனிமலையில் மீதிலாவுவோம் ................................................................ அடிமேலைக்கடல் முழுதும் கப்பல் விடுவோம் .............................................................. பள்ளித்தளம் அனைத்தும் கோயில் செய்வோம் .............................................................. எங்கள் ஈழதேசம் என்று தோள் கொட்டுவோம் ................................................................... ....அரோகரா

    • 3 replies
    • 3.2k views
  11. கட்டுமானத் தள நிலையம் மீது சிறிலங்கா வான்படையின் தாக்குதல். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சுனாமிக்குப் பின்னரான துரித புனர்வாழ்வு அபிவிருத்திச் சேவை நிகழ்ச்சித் திட்டத்திற்கமைவான வேலைத்திட்டங்களில் ஒன்றான வடமராட்சி கிழக்கு நெல்லியானில் அமையப்பெற்றுள்ள படகுக் கட்டுமானத் தள நிலையம் மீது நேற்று பிற்பகல் 1.00 மணியளவில் சிறிலங்கா வான் படையின் கிபீர் குண்டுவீச்சு விமானங்கள் தாக்குதல்களை நடாத்தியுள்ளன. இதன்போது படகு உற்பத்தித்தளம் சேதமடைந்துள்ளதோடு;; அங்கு உற்பத்திசெய்யப்பட்ட பல இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த படகுகள், உற்பத்தித் தளபாடங்கள் யாவும் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன. அத்துடன்; அங்குள்ள பொருட்களைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பணியாளர்கள்…

    • 0 replies
    • 1.2k views
  12. முல்லைத்தீவு படுகொலையைக் கண்டிக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானம் தவறு என்றால் தமிழன் கொல்லப்படுவதை இன்னொரு தமிழன் கண்டிப்பது தவறு என்றால் அந்த தவறை தமிழன் தொடர்ந்து செய்வான் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் இன்று சனிக்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் ம.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் கண்ணப்பன் ஒரு பிரச்சனையை எழுப்பினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த 14 ஆம் திகதி இலங்கை இராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது குறித்து இரங்கல் தீர்மானம் 16 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் குறித்து பத்திரிகையில் ஒரு செய்தி வந்துள்ளது. யூகத்தின் அடிப்படையிலும், திரித்து கூறப்பட்ட செய்தியின் அடிப்படை யிலும் இந்த தீர்ம…

  13. விடுதலைப்புலிகளின் உக்கிர எறிகணைத்தாக்குதல் காரணமாக பலாலி கூட்டுப்படைத்தளத்தில் தொடர்ந்து யாழ்.குடாநாட்டிற்கான கட்டளைபீடத்தை இயக்கமுடியத நிலைக்கு சிறீலங்காபடையினர் தள்ளப்பட்டுள்ளனர். இதனை அடுத்து படையினரின் கட்டளைபீடம் கரைநகர் கடற்படைத்தளத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக யாழ்.செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த 11ம் திகதி பலாலி படைத்தளம் மீது புலிகளின் வான்படையினர் மேற்கொண்ட உந்துகணைத் தாக்குதலை அடுத்து எறிகணைத் தாக்குதல்கள் புலிகளின் பீரங்கி படை போராளிகளால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விமான ஒடுபாதைகள்,வானுர்தி இறங்கு தளங்கள் பிரதான கட்டளைப் பீடம் என்பன புலிகளின் துல்லியமான எறிகணைத் தாக்குதலிற்கு இலக்காகி வரும் நிலையிலேயே கட்டளை பீடத்தை கரைநகரிற்கு படையி…

  14. யாழ்ப்பாணத்திற்கான தரைவழி பாதை மூடப்பட்டரையடுத்து யாழ்ப்பாணத்திற்கும் வெளியிடங்களுக்குமான போக்குவரத்துக்கள் எதுவும் இதுவரை இடம்பெறாத நிலையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் திருமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு விரைவில் பயணிகள் கப்பல் சேவையொன்றை ஆரம்பிக்கயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.nerudal.com/content/view/2433/36/

    • 3 replies
    • 1k views
  15. பேச்சுக்குத் தயார்: கொபி அனானிடம் மகிந்த ராஜபக்ச [சனிக்கிழமை, 19 ஓகஸ்ட் 2006, 17:32 ஈழம்] [கொழும்பு நிருபர்] பேச்சுக்களுக்குத் தயாராக இருப்பதாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் கொபி அனானிடம் சிறிலங்கா அரச தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கை வன்முறைகள் குறித்து அண்மையில் கொபி அனான் கண்டனம் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக கொபி அனானுடன் தொலைபேசியில் உரையாடிய மகிந்த ராஜபக்ச, பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்றார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஐக்கிய நாடுகள் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் சர்வதேச செஞ்சிலுவைப் பணியாளர்களும் நிவாரண உதவியை மேற்கொள்வதற்கான பாதுகாப்பை அரசாங்கம் வழங்கும் என்றும் மகிந்த கூறியதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்…

    • 0 replies
    • 962 views
  16. யாழ். சமரில் 485 படையினர் பலி- 1,250 பேர் காயம்: 88 போராளிகள் வீரச்சாவு யாழ். தென்மராட்சி முகமாலைப் பகுதியிலிருந்து சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த தாக்குதலை முறியடித்து விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல்களில் இதுவரை 485 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டனர். களமுனையிலிருந்து கிடைக்கும் தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன. 485 படையினர் கொல்லப்பட்டும் 1,250 படையினர் காயமடைந்தும் களமுனையிலிருந்து அகற்றப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களில் 88 போராளிகள் வீரச்சாவைத் தழுவியுள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை (11.08.06) படையினர் தமது வலிந்த தாக்குதலை பெருமெடுப்பில் மேற்கொண்டனர். இந்த வலிந்த தாக்குதல்களில் சிறிலங்காப் படையினரின் வலிந்த தாக்குதல் டிவிசன்களான …

    • 16 replies
    • 9.4k views
  17. மாவிலாற்று பகுதியில் இருந்து சிறீலங்கா படையினர் பின்வாங்கினர். திருமலை மாவிலாற்று பகுதியின் ஒரு பகுதியை பெரும் முயற்சியை மேற்கொண்டு கைப்பற்றிய படையினர் தற்போது அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர். யாழ்.குடாநாட்டில் தற்போது நடைபெற்று வரும் தாக்குதலிற்கு பயன் படுத்துவதற்காகவே மாவிலாற்று பகுதியில் இருந்து படையினர் பின் வாங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

    • 7 replies
    • 2.2k views
  18. சிறீலங்கா அரசபடைகளின் மீலேச்சத்தனமான விமானக் குண்டுவீச்சுகளாலும் எறிகணை வீச்சுகளாலும் 141 அப்பாவி பொதுமக்கள் ஆடி 08 -15 வரையான காலப் பகுதிகளில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். முழு விபரங்களோடு விடுதலைப் புலிகளின் சமாதான செயலக அறிக்கை. http://www.ltteps.org/?view=1528&folder=2

  19. இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவில் தங்களது உறுப்பினர்களின் எண்ணிக்கையை பத்தாக அதிகரிக்க ஐஸ்லாந்து தீர்மானித்திருப்பதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் பேச்சாளர் தோப்பினூர் ஒமர்ஸன் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளான டென்மார்க், பின்லாந்து மற்றும் சுவீடன் என்பன எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியுடன் கண்காணிப்புக் குழுவிலுள்ள தங்களது உறுப்பினர்களை விலக்கிக் கொள்வதாக அறிவித்திருப்பதையடுத்தே ஐஸ்லாந்து இந்தத் தீர்மானத்தை அறிவித்திருக்கிறது. இதேவேளை, நோர்வேயும் தங்களது கண்காணிப்புக் குழு உறுப்பினர்களை 15 இலிருந்து 20 ஆக உயர்த்த தீர்மானித்துள்ளதுடன் ஐஸ்லாந்து 04 இலிருந்து 10 ஆக அதிகரிக்க முடிவு செய்திருப்ப…

  20. கொல்லப்பட்ட புலிகளின் உடல்களும்..கைப்பற்றப்பட்ட ஆயுதங்களும். படம் லங்காறுத் எனும் இராணுவ இணையத்தளம். யாழில் நடந்த சண்டைகளில் இதுவரை தாங்கள் 700 புலிகளைக் கொன்று..சகல தாக்குதல்களையும் முறியடித்துள்ளதாகக் கூறும் படைத்தரப்பு..புலிகளின் 80 உடல்களையும் பெருந்தொகுதி ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளதாக தங்கள் இணையத்தளங்களூடும் ஊடகங்களூடும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்..! இவை குறித்த உண்மை நிலைப்பாடுகளை மக்கள் அறியக்கூடியதாக இல்லை..! :roll: :?: :idea:

  21. யாழ்.கோப்பாய் கரந்தன் சந்தியில் ஊரடங்கு தளர்ந்தப்பட்ட வேளையில் கடைக்கு பொருட்கள் கொள்வனவு செய்யச் சென்ற இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சுட்டுக் கொல்லப்பட்டவர் நீர்வேலியை சேர்ந்த சுகுனராசா நிர்மலராசா(அகவை 26)எனும் குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதே வேளை தென்மராட்சிப்பகுதியில் ஆசிரியராக கடமையாற்றிய இளைஞர் ஒருவர் சூட்டுக்காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  22. யாழ். தீவகம் அல்லைப்பிட்டி மண்கும்பான் கரையோரங்களில் சிறிலங்காப் படையினரால் கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் எடுக்கப்படாமல் சிதைவடைந்து காணப்படுகின்றன. இதுவரை 18 சடலங்கள் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கடற்கரைப் பகுதிக்கு கடற்படையினர் மீட்புக்குக்குழுவினரை அனுமதிக்காததால் சடலங்கள் அப்பகுதியிலேயே சிதைந்துள்ளன. கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தற்போது யாழ். அடைக்கல மாதா கோவிலிலும் ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரியிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்களின் உறவுகளின் சடலங்களை அந்த இடத்திலேயே புதைப்பதற்கு குடும்பத்தில் ஒருவரை அனுமதிக்குமாறு யாழ். மேலதிக சிறிலங்கா நீதிபதியிடம் கேட்டுள்ளனர். தொடரும் எறிகணை வீச்…

  23. தமிழீழ விடுதலைப்புலிகளின் வான்படையினர் இன்று சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர்-தமிழ்மதி எமது தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை முறியடிக்கும் நோக்கோடு சிறிலங்கா இராணுவத்தினர் விமானக்குண்டு வீச்சுக்களை தொடர் ந்து நடத்தி வருகின்றனர். ஆனால் இவர்களது தாக்குதல்களை முறியடி த்த நிலையில் தமிழீழ விடுதலைப்பு லிகளின் வான்படையினர் முப்படை களின் பெரும் படையாக சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கின்றது. இவ் வாறு மாவட்ட மகளிர் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்மதி தெரிவித்தார். மட்.முனைக்காடு விவேகனந்தா வித்தியாலயத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற லெப்டினன் புயலவன் அவர்களது வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு வீரவணக்க உரை நிகழ்த்தும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து பேசுகையில்:- …

  24. சென்னையில் உள்ள சிறிலங்கா துணை தூதரகத்தை முற்றுகையிட்ட அகில இந்திய மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த 150 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். அகில இந்திய மாணவர் பெருமன்றத் தலைவர் லெனின் தலைமையில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. ஆழ்வார்பேட்டையில் உள்ள சிறிலங்கா தூதரகம் முன்பாக குவிந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வளாகத்துக்குள் நுழைய முற்பட்ட போது அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இப்போராட்டத்தில் கலந்து கொண்ட மாணவர் பெருமன்ற நிர்வாகிகள் கூறியதாவது: முல்லைத்தீவு படுகொலையானது ஒரு அரச பயங்கரவாதச் செயல். மிகக் கொடூரமான அந்தப் படுகொலையைச் செய்ததோடு மட்டுமில்லாமல் தமிழ்நாட்டிலிருந்து கொண்டு அதை நியாயப்படுத்தும் வகையில் பொய்ச்செய்திகளை சிறி…

  25. வெள்ளி 18-08-2006 17:49 மணி தமிழீழம் [முகிலன்] நாகர்கோவில் பகுதியில் 8 மணிநேர உக்கிர மோதல். நாகர்கோவில் பகுதியில் இன்று சிறீலங்காப் படையினருக்கம் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 8 மணி நேர உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று காலை 4 மணியளவில் ஆரம்பித்த சிறீலங்காப் படையினரின் வலிந்த முன்னேற்ற நகர்வை விடுதலைப் புலிகளின் படையணிகள் முறியடித்துள்ளனர். படையினரின் படைநகர்வை தொடக்கத்திலேயே விடுதலைப் புலிகள் முறியடித்ததை அடுத்து இருதரப்பினாலும் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இதன்போது படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. சண்டை நடைபெற்ற நேரத்தில் பலதடவைகள் இராணுவத்தினரின் காவு வண்டிகள் சென்று வந்ததுள்ளதாகவும் எமத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.