Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பலாலி அதி உயர் பாதுகாப்பு வலயப்பகுதியில் 24 மணிநேரம் படையினர் பாரிய ஒத்திகை. யாழ். குடாநாட்டில் வலிகாமம் வடக்கில் அதி உயர் பாதுகாப்பு வலயத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு முதல் நேற்று இரவு வரை இராணுவத்தினர் போர் ஒத்திகையொன்றில் ஈடுபட்டிருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. வலிவடக்கில் பலாலியை அண்டிய தொண்டமனாறு கடல்நீரேரிப்பகுதி மற்றும் வளலாய் கட்டுவன் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று இரவு வரை சரமாரியமான துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் குண்டுச் சத்தங்கள் கேட்ட வண்ணமிருந்ததாக இப்பிரதேசங்களையண்டிய பகுதிகளிலுள்ள மக்கள் தெரிவித்தனர். இராணுவத்தினர் மேற்கொண்ட போர் ஒத்திகையின் போது ஏற்பட்ட பாரிய சத்தங்களே இவையெனத் தெரியவந்த…

    • 2 replies
    • 1.7k views
  2. திருமலை சேருநுவர பிரதேசசபை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சுட்டுக்கொலை. இன்று திங்கட்கிழமை முற்பகல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் திருகோணமலையில் இராணுவப்புலனாய்வுப்பிரிவனர

  3. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் வீட்டின் தாக்குதல். தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் அவர்களின் வீட்டின் மீது நேற்று ஞாயிற்று கிழமை இரவு 10.00 மணியளவில் கைகுண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனம் தெரியாத ஆயுததாரிகளினால் ஆறு கைகுண்டுகள் வீசப்பட்டுள்ளதாகவும் இதில் ஐந்து குண்டு வெடித்துள்ளது. இதில் அவரின் பாதுகாப்பு கடமையில் இருந்த காவல்துறை சிப்பாய் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அநுராதபுர வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இப்பகுதியில் தேடுதல் நடாத்திய போது வெடிக்காத கைக்குண்டு ஒன்று மீட்டுள்ளதாகவும் தெரி…

    • 0 replies
    • 885 views
  4. அத்துமீறும் சர்வதேச தலையீடு இந்தப் பத்தியில் ஏற்கனவே நாம் சுட்டிக்காட்டிய ஒரு விட யத்தை மீண்டும் வெளிப்படுத்திக்காட்ட வேண்டிய அவசரமும் அவசியமும் எழுந்திருக்கின்றது. இலங்கை இனப்பிரச்சினை இரண்டு பிரதான தரப்புகளுக்கு இடைப்பட்டது.ஒருபுறம் சிங்களவர்கள் மறுபுறம் தமிழ்பேசும் மக்கள். இந்த இரண்டு பிரதான தரப்பினரே இந்தப் பிரச்சினைக் குத் தீர்வுகாண வேண்டியவர்கள். அதுவும் இப்பிரச்சினைக்கு அமைதி வழித் தீர்வு ஒன்று காணப்பட வேண்டுமானால் இந்த இரண்டு தரப்புகளுமே தங்களுக்குள் பேசி உடன்பாடு கண்டு ஒரு தீர்வை எட்டவேண்டும். வேறு புற சக்திகள் எவையும் தீர்வு இதுதான் எனத் திணிக்க முயலக்கூடாது. அது அத்துமீறிய நட வடிக்கை என்று இப்பத்தியில் ஏற்கனவே தெளிவாக விளக்கி யிருந்தோம். தீர்வுக்காக…

  5. சிறிலங்கா மீது நம்பிக்கை இல்லை என்ற நிலைப்பாட்டை நிரூபித்திருக்கிறது ஜெனீவா: சு.ப.தமிழ்ச்செல்வன் தமிழ் மக்களின் மனிதாபிமானப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண சிறிலங்கா அரசாங்கம் ஒத்துழைக்கும் என்று சிறு அளவில்கூட நம்பிக்கையில்லாமல்தான் வந்தோம். ஜெனீவாவில் அது நிரூபணமாகியிருக்கிறது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனீவாப் பேச்சுக்கள் - 02 முடிவடைந்த பின்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்த கருத்துக்களின் தொகுப்பு: மனிதாபிமான அவலத்தை வெளிப்படுத்தவே ஜெனீவாப் பேச்சுக்களத்தை பயன்படுத்துவோம் என்று நாம் தெரிவித்திருந்தோம். உலகத்தின் மனித உரிமைகளின் …

  6. ஏ-9 பாதை திறக்கப்படுமாயின் அடுத்த சுற்றுப் பேச்சுக்களுக்கான திகதிகளைத் தீர்மானிப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். ஜெனீவா பேச்சுவார்த்தை தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்ட அறிக்கை: தமிழீழ விடுதலைப் புலிகளும் சிறிலங்கா அரசாங்கமும் றோயல் நோர்வே அரசாங்கத்தின் ஆதரவுடன் ஒக்ரோபர் 28, 29 ஆகிய திகதிகளில் ஜெனீவாவில் சந்தித்து பேச்சுக்களில் ஈடுபட்டனர். இப்பேச்சுக்களுக்கு சுவிற்சர்லாந்து அரசாங்கம் அனுசரணை வழங்கியது. இணைத்தலைமை நாடுகள், 2006 ஓகஸ்டில் வெளியிடப்பட்ட தமது அறிக்கையில், இரண்டு தரப்பும் உடனடியாக வன்முறைகளை நிறுத்தி, இலங்கைப் போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு அங்கத்தவர்களின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்கும்படியும், சம…

  7. சுவிட்சர்லாந்தில் கடும் சொற்போர்!! ------------------------------- சுவிட்சர்லாந்தின் ëஜனிவா நகரில் ëஜனிவாவின் வரம்பே மாநாட்டு மண்டபத்தில் மேலோட்டமாகப் பார்க்கையில் எல்லாம் அமைதியாகத்தான் தெரிந்தது. எல்லாரும் மனமுவந்து கூடி இருக்கிறார்கள். கைகுலுக்கிக் கொள்கிறார்கள் என்றுதான் தெரிந்தது. ஆனால் பேச்சுவார்த்தை அறைக்குள் மூன்று தரப்புகளும் தங்கள் நிலையில் விடாப்பிடியாக இருந்தது கண்கூடாகத் தெரிந்தது என்று ëஜனிவாவில் இருந்து தமிழ்முரசு தகவல் வட்டாரம் தெரிவித்தது. இலங்கையின் அரசு தரப்பு ஒருபுறம், புலிகள் தரப்பு மறுபுறம், நடுவே நார்வே தரப்பு. மூன்றும் மூன்று நிலைகளில் உறுதியாக இருந்தன. இலங்கையில் போராடும் அரசையும் புலிகள் தரப்பையும் எப்படியும் நேருக்கு நேர்…

  8. வடபோர் முனையில் படைகள் குவிப்பு - தென்மராட்சியில் ஊடரங்கு அமுல் - புலிகளின் நிலைகள் நோக்கி உக்கிர எறிகணை வீச்சு இன்று காலை தென்மராட்சியின் பல்வேறு பகுதிகளில் சிங்களப் படையினால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை நேற்றிரவு முதல் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை நோக்கி உக்கிர எறிகணைத் தாக்குதலை படைகள் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரிரு நாட்களாக வடபோர் முனையில் சிங்களப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டு வரும் அதேவேளை ஆயுத தளபாடங்களும் முன்னரங்கப் பகுதிகள் நோக்கி நகர்த்தப்பட்டு வருகின்றன. (படைகளின் குவிப்பு மற்றும் ஆயுத தளபாடங்கள் நகர்த்தப்படுவது தொடர்பில் சங்கதி நேற்றும் செய்தி வெளியிட்டிருந்தது) இந்நிலையில் நே…

  9. பேச்சுகளுக்கு வரையறை சர்வதேச சமூகம் விதிப்பு இலங்கை இனநெருக்கடிக்குத் தீர்வு காண்பதற் காக நோர்வே அரசின் அனுசரணையுடன் 2002ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் சமாதானப் பேச்சுகள் ஆக்கபூர்வமான பெறுபேறு எதனையும் எட்டாமல் நீண்டுகொண்டு செல்வதும், போர்நிறுத்த உடன்பாட்டை மதிக்காமல் இரு தரப்புகளும் தத் தமது பாட்டில் வன்முறை வழியில் நாட்டம் செலுத் துவதும் கண்டு ஏமாற்றமடைந்திருக்கும் சர்வதேச சமூகம், பேச்சுகளுக்கு வரையறை ஒன்றை விதிக்கும் கட்டத்துக்கு வந்திருக்கின்றது. இணைத் தலைமைகள் உட்பட சர்வதேச சமூகம் இது விடயத்தில் முன்வைக்கவிருக்கும் வரையறை தொடர்பாக பிணக்கில் சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புகளுக்கும் இம்முறை பேச்சு மேசையில் விளக் கப்படும் என்றும் தெரியவந்திருக்கின்றது. * 2002 ம…

  10. யூலை மாதம் முதல் காலி தாக்குதல் வரை இராணுவத்தரப்பில் 613 பேர் பலி- 2,956 பேர் படுகாயம் சிறிலங்கா இராணுவத் தரப்பில் கடந்த யூலை 31 ஆம் நாள் முதல் ஒக்ரோபர் 18 ஆம் நாள் வரையிலான மோதல்களில் மட்டும் சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த 613 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 2,956 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவத்தின் உத்தியோகப்பூர்வ தரவுகளை மேற்கோள்காட்டி கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. யூலை 31 ஆம் நாள் காலை 6 மணி முதல் ஒக்ரோபர் 12 ஆம் நாள் (முகமாலை, ஹபரணை, காலி சேர்க்காமல்) காலை வரையிலான 74 நாட்கள் வரையிலான விவரங்கள்: யாழ்ப்பாணம்: யாழ். இராணுவத் தலைமையகக் குறிப்புக்களின் படி 62 நாட்களில் அதாவது ஓகஸ்ட் 11 ஆம் நாள் முதல் ஒக்ரோபர் 12…

  11. எண்ணெய் ஊற்றப்பட்ட பெண்ணைப் பார்த்து தற்கொலைதாரி என அலறிய காவல்துறை ஹகவத்தவில் காதலனால் எரியக்கூடிய எண்ணெய் ஊற்றப்பட்ட நிலையில் சிறிலங்கா காவல்நிலையத்துக்கு பெண் சென்றபோது அவர் தற்கொலைதாரி என காவல்துறையினர் அலறியுள்ளனர். ஹகவத்தவில் பேரூந்துக்காக அப்பெண் காத்திருந்தபோது அவரைக் காதலித்த நபர், என்ஜின் எரிஎண்ணெயை அப்பெண் மீது வீசியுள்ளார். இதையடுத்து அப்பெண் காவல்நிலையத்துக்குச் சென்றார். ஆனால் அங்கிருந்த காவல்துறையைச் சேர்ந்தவர்கள் தற்கொலைதாரி என்று அச்சமடைந்துள்ளனர். ஆனால் தான் தற்கொலைதாரி அல்ல என்றும் என்ன நடந்ததும் என்று விளக்கி முறைப்பாடு செய்த பின்னர்தான் காவல்துறையினர் பெருமூச்சுவிட்டுள்ளனர். -புதினம்

    • 11 replies
    • 2.4k views
  12. வந்தாறுமூலையில் கொம்மாந்துறை சிறிலங்கா இராணுவ முகாமின் கட்டளைத் தளபதி பி.டி.விஜெதுங்க(வயது 42) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். மட்டக்களப்பு வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக் கழகம் அருகே சனிக்கிழமை பிற்பகல் 12.30மணியளவில் அடையாளம் தெரியாத நபர்களுடனான துப்பாக்கிச் சண்டையில் விஜெதுங்க கொல்லப்பட்டார். விடுமுறைக்காக சென்ற இராணுவத்தினருடன் சிறிலங்கா இராணுவ வாகனத் தொடரணி அப்பகுதியை கடந்த பின்னர் இம்மோதல் நடந்துள்ளது. தாக்குதல் நடத்தியோர் இராணுவ வாகனத் தொடரணியை இலக்கு வைத்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. இம்மோதலில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனையில் விஜெதுங்க முதலில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதனிடையே ஏறாவூர் பண…

  13. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2& http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

    • 7 replies
    • 4.5k views
  14. ஜெனீவாவில் சிறிலங்கா அரசாங்கக் குழுவின் பேச்சாளர் நிமல் சிறிபால டி சில்வா உரையில் இடம்பெற்றவை: - கௌரவமான அமைதியையை நாட்டில் உருவாக்குவதற்கான அடிப்படையான சூழ்நிலைக்கு இந்தப் பேச்சுக்கள் உதவும் - உண்மையான ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அடிப்படையில் அமைதி உருவாக்கப்பட வேண்டும். - அமைதி முயற்சிகளில் உள்ள ஈடுபாட்டினால்தான் அனைத்துக் கட்சி மாநாட்டை மகிந்த கூட்டினார். மேலும் தற்போது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது. - முன்னைய ஜெனீவாப் பேச்சுக்களுக்கும் யூன் ஓஸ்லோ பேச்சுகளுக்கும் விடுதலைப் புலிகள் வர மறுத்து அரசாங்கத்துடன் பேச்சு நடத்தவில்லை. - தென்னிலங்கையின் ஒருமித்த கருத்தை உருவாக்க மகிந்த ராஜபக்ச …

    • 1 reply
    • 1.2k views
  15. நான்கு கோட்பாடுகள் 1)கடந்த ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஒத்துக் கொள்ளப்பட்ட விஷயங்களின் அடிப்படையிலேயே வருகின்ற எந்த ஒரு தீர்வும் இருக்க வேண்டும். 2)போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இணக்கப்பாடு காணப்பட வேண்டும். இரு தரப்பினரும் போர் நிறுத்த ஒப்பந்தத்தை கடைபிடிக்க வேண்டும். 3)ஆஸ்லோ பேச்சுவார்த்தைகளின் போது கொள்கையளவில் ஒத்துக் கொள்ளப்பட்டது போல தமிழ்இ சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் நியாயமான அபிலாஷைகளைத் தீர்க்கும் வகையில் தீர்வு அமைய வேண்டும். 4)இலங்கையின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் உட்பட்டே எந்தத் தீர்வும் அமைய வேண்டும் http://www.bbc.co.uk/tamil/news/story/2004...sbulletin.shtml

  16. தமிழர் தாயகத்தில் சிறிலங்கா உருவாக்கிய மனித அவலங்கள் என்ன?: ஜெனீவாவில் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்க உரை [சனிக்கிழமை, 28 ஒக்ரொபர் 2006, 16:29 ஈழம்] [சுவிஸ் நிருபர்] தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மனித அவலங்கள் என்ன? எத்தகைய வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன? என்பது உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் நிலைமையை ஜெனீவாவில் இன்று தொடங்கிய பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கினார். சிறிலங்கா அரசாங்கக் குழுவினருடனான பேச்சுக்களின் போது தமிழர் தாயக நிலைமைகளை விளக்கி சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய தொடக்க உரை: இலங்கைத்தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அயராத முயற்சிகளை மேற்கொண்டு வரும் நோர…

  17. இலங்கை : கூட்டாச்சியா ? போரா? இலங்கை : கூட்டாச்சியா ? போரா ? ஈழ விடுதலைப் போராட்டம் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிய மாற்றங்களைப் பெற்று இருக்கிறது. உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் மிக நீண்ட விடுதலைப் போராட்டங்களாகத் தான் இருந்து வந்திருக்கிறது. சில வருடங்களில் எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. அரை நூற்றூண்டுக்கும் மேலான போராட்டங்களை நாம் உலக வரலாற்றில் பார்த்து இருக்கிறோம். நீண்ட காலமாக நடந்தாலும் விடுதலைப் போராட்டம் பயணிக்கும் பாதை முக்கியமானது. விடுதலைப் போராட்டம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும், தேங்கிப் போய் விடக்கூடாது. அதற்கு மிகச் சரியான அரசியல் பாதை வகுக்கப்பட வேண்டும். ஈழப் போராட்டம் கடந்த 20 ஆண்டுகளில் அத்தகைய ஒரு திட்டமிட்…

  18. புலிகள்: பாதை திறந்தால் அமைதிப் பயணம் தொடரும்! ------------------------------------------------- இலங்கையில் முக்கியமான சாலைப் பகுதி ஒன்றை அரசாங்கம் திறந்தால் தான் அமைதிப் பேச்சுக்குக் கதவு திறக்கும் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அடிப்படை பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படும் தமிழ் மக்களுக்கு அத்யாவசியப் பொருட்கள் சென்றுவருவதற்கு ஏதுவாக ஏ9 நெடுஞ்சாலையை அரசாங்கம் திறக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இலங்கை அரசுக்கும் புலிகள் அமைப்புக்கும் இடையில் அமைதிப் பேச்சு இன்று தொடங்கும் வேளையில் இந்த மிரட்டல் இடம் பெற்று இருக்கிறது. இரு தரப்புகளுக்கும் இடையில் மோதல் அதிகமானதை …

    • 3 replies
    • 1.6k views
  19. சுவிசில் சமாதானப் பேச்சு, உக்கிரேனில் யுத்த தளபாடப் பேச்சு சனிக்கிழமை, 28 ஒக்ரேபர் 2006கிருஷ்ணப்பிள்ளை சுவிசில் சமாதானப் பேச்சுகளில் பங்குபற்ற என்று கூறிக்கொண்டு இலங்கை அரசு குழுவொன்று சென்றுள்ள நேரம், இலங்கை இராணுவ மற்றும் விமானப்படையின் குழுக்கள் உக்கிரேன் நாட்டின் தலைநகரான கீவ் பகுதியில் உள்ள விசேட உல்லாச விடுதி ஒன்றில் தங்கியள்ளதாகவும், சுமார் 15 எம்.ஜ27 தரத்திலான உலங்கு வானூர்திகள் மற்றும் பாரிய யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்வதற்குரிய ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுவருவதாக அறியமுடிகிறது. சமாதானம் என்ற போலியான நாடகத்தை சுவிசில் ஆடிவரும் இலங்கை அரசு, உக்கிரேன் நாட்டில் தனது யுத்த தளபாடக் கொள்வனவை இதே காலப்பகுதியில் செய்ய முயற்சிப்பது, இலங்கை அரசின் எதிர்கால நோக்கத்…

  20. சிங்கள தரைப்படையின் கவசப்படை புறமுதுகிட்டது எவ்வாறு? -அருஸ் (வேல்ஸ்)- கடந்த 11.10.06 ஆம் நாள் முகமாலை, கிளாலி முன்னரங்கில் நிகழ்ந்த சமர் மகிந்தவின் ஆறு மாதகால இராணுவ மேலாதிக்க கனவையும் அதன் அறுவடையாக அடையவிருந்த அரசியல் நலன்களையும் சுக்குநு}றாக்கியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திங்கள் காலையில் போரிடும் வாளின் கூர்முனை என வர்ணிக்கப்படும் சிங்களப்படையின் 53 ஆவது படைப்பிரிவும், 55 ஆவது படைப்பிரிவும் மேஜர் ஜெனரல் சந்திரகிரியின் வழிநடத்தலில் களமிறக்கப்பட்டது. இப்படை நடவடிக்கையை 53 ஆவது படைப்பிரிவு கட்டளைத்தளபதி பிரிகேடியர் சமந்த சூரியபண்டாரா ஒருங்கிணைக்க 53 ஆவது படையணியின் வான்வளி தாக்குதல் படைப்பிரிவின் (யுசை ஆழடிடைந டீசபையனந) களமுனைத்தளபதி…

  21. ஏ-9 பாதை திறக்கப்படாவிட்டால் பேச்சுக்களுக்கான வாய்ப்புக்கள் இல்லை: தயா மாஸ்டர் [வெள்ளிக்கிழமை, 27 ஒக்ரொபர் 2006, 15:01 ஈழம்] [ச.விமலராஜா] யாழ். ஏ-9 பாதை திறக்கப்படுவதை நிராகரித்தாலோ அல்லது பாதையை திறக்க மறுத்தாலோ தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக அவர் தெரிவித்த கருத்து: மனிதாபிமான பிரச்சனைகளின் கீழ் பிரதானமாக இருப்பது ஏ-9 பாதை திறப்பு. யாழ். ஏ-9 பாதை திறக்கப்படுவதை நிராகரித்தாலோ அல்லது பாதையை திறக்க மறுத்தாலோ தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.…

  22. வெலிக்கந்தையுூடான படை நகர்வு முறியடிப்பு சிறிலங்காப் படையினர் 5பேர் பலி 15ற்கும் மேற்பட்டோர். காயம். வெலிக்கந்தையுூடாக சிறிலங்காப் படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி இன்று காலை 7.00மணியளவில்; எறிகணை வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டு பாரிய படை நகர்வொன்றை மேற்கொண்டனர். இத் தாக்குதலின் போது சுமார் 300ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் முன்னேறியவேளை திருகோணமடுவை நோக்கி படைநகர்வை மேற்கொண்டுள்ளனர். இந்த சிறிலங்காப் படையினரின் படை நகர்வை விடுதலைப்புலிகள் இவர்களை வழிமறித்து முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர் இவ் முறியடிப்புத் தாக்குதலின் போது சிறிலங்காப் படையினர். 5 கொல்லப்பட்டதுடன், 15ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்தநி…

  23. இராணுவ சோதனைக் கெடுபிடிகள் அதிகாலை வேளையில் அதிகரிப்பு யாழ்.குடாநாட்டு பிரதான வீதிகளில் - அதிகாலை வேளைகளில் இராணு வத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.அதிகாலை 4 மணி, 5 மணி வேளைகளில் இராணுவத்தினர் வீதிகளில் செல்வோரை வழிமறித்து கடும் சோதனைக்குட்படுத்துவதுடன், எங்கு வேலை செய்கிறாய், எங்கு போகிறாய் என விசாரிப்பதோடு, உடற்சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் வாக னங்களின் இலக்கங்களை பதிவு செய்தும் வருகிறார்கள். இந்தச் சோதனைக் கெடுபிடிகளால் அதிகாலை வேளைகளில் வியாபாரம், வைத்தியசாலை மற்றும் அரச திணைக்களங்களுக்கு கடமைக்கு செல்வோர் குறித்த நேரத்துக்கு செல்லமுடியாது பல இன்னல்களை அனுபவித்து வருவ தோடு, அதிகாலையில் பயணம் செய்யும்போது பீதி…

  24. வழக்கிலிருந்து மகிந்த விடுதலை சுனாமி அனர்த்தத்தின்போது அம்பாந்தோட்டையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனரமைப்பதற் காக வழங்கப்பட்ட யஹல்பிங் அம் பாந் தோட்டை நிதி மோசடி வழக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்­வின் அடிப்படை மனித உரிமை மீறப் பட்டதாகவும், அவருக்கு 5 ஆயிரம் டொலர் நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.அம்பாந்தோட்ட

    • 4 replies
    • 1.8k views
  25. கண்டி வீதிப் போக்குவரத்தே ஜெனிவாவில் அரசின் துரும்புச் சீட்டு யாழ். குடாநாட்டுக்கான போக்குவரத்துத் தடை தொடர் வதால் "ஏ9' கண்டி வீதி மூடப்பட்டிருப்பதால் அங்கு ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மக்களின் பேர வலம் குறித்து இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக் காட்டி யாகிவிட்டது. தொழில் இழப்பு, வருமானமின்மை மற்றும் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு. இதனால், விலைவாசி பல மடங்கு அதிகரிப்பு என்று இங்குள்ள மக்கள் படும் அல்லாட்டம் சொல்லுந் தர மன்று. "யானைப் பசிக்கு சோழப் பொரி' போல, கடல்வழியாக கொஞ்ச நஞ்சப் பொருள்களைப் பெரும் ஆரவார அறிவிப்பு களுடன் எடுத்துச் செல்வதோடு மக்களின் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.