Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர், ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி ஆகியோர் எதிர்வரும் வாரம் இலங்கைக்கு வருகை தர உள்ளனர். ஒக்ரோபர் 28 மற்றும் 29 ஆகிய நாட்களில் நடைபெற உள்ள பேச்சுவார்த்தைகள் தொடர்பிலான ஆலோசனைக்காக ஜோன் ஹன்சன் பௌயர் இலங்கை வருகை தருகிறார். சிறிலங்கா அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவுடனான நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரின் சந்திப்பின் போது இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே இலங்கைக்கு 13 ஆம் முறையாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜப்பானிய சிறப்புத் தூதுவர் யசூசி அகாசி வருகை தருகிறார். ஜப்பானிய தூதரகம் நேற்று புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து நாள் பயணமாக யசூசி அகாசி இல…

  2. வடபோர் முனையில் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான ஒளிப்பதிவு. வடபோர் முனையில் நேற்று இடம்பெற்ற சிறீலங்காப் படையினரின் வலிந்த படையெடுப்பு எதிராக விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குலில் போது எடுக்கப்பட்ட ஒளிப்பதிவுக் காட்சிகள் http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  3. தாக்குதலில் கொல்லப்பட்ட இராணுவத்தின் ஒரு தொகுதிப்படங்கள்! நன்றிகள்:யாழ்கள உறவு வசந்தனுக்கு

  4. வடபோர்முனையில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட பாரிய அளவிலான வலிந்த தாக்குதல் விடுதலைப் புலிகளால் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் 200-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 300-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளனர். கொல்லப்பட்ட 75-க்கும் மேற்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பறப்பட்டுள்ளன. இராணுவத்தினரின் 4 டாங்கிகள் விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்டுள்ளன. பல நூற்றுக்கணக்கான போராயுதங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. வடபோர்முனையில் முகமாலை முதல் கிளாலி வரையான முன்னரங்கப் பகுதிகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் இன்று புதன்கிழமை காலை 6.30 மணிமுதல் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் விடு…

    • 0 replies
    • 2k views
  5. துணை இராணுவக்குழுவினரால் 35 இளைஞர்கள் கடத்தல் அம்பாறை மாவட்டம் திருக்கோவில், அக்கரைப்பற்று ஆகிய தமிழ்ப் பிரதேசங்களில் 35 தமிழ் இளைஞர்கள் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக்குழுவினரால் கடத்தப்பட்டுள்ளனர். திருக்கோவில், தம்பட்டை, கோணாவில் விநாயகபுரம், அக்கரைப்பற்று போன்ற பல கிரமாங்களில் இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்று வருகின்றது. வெள்ளை வானில் செல்லும் துணை இராணுவக்குழுவினர் 16 வயதுக்கும் 25 வயதுக்கும் இடைப்பட்ட தமிழ் இளைஞர்களை கடத்திச் செல்கின்றனர். இக்கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வரும் துணை இராணுவக்குழுவினர் இளைஞர்களின் உறவினர்களை அச்சுறுத்தி விட்டுச் செல்கின்றனர். இதன் காரணமாக கடத்தப்பட்ட இளைஞர்களின் ஒருசில உறவினர்கள் காவல் நி…

    • 1 reply
    • 2.4k views
  6. ஆட்டோ சாரதியின் தற்கொலையும் நோர்வேயும் [11 - October - 2006] [Font Size - A - A - A] கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆங்கில வாரப்பத்திரிகையொன்றின் முன்பக்கத்தில் படத்துடன் வெளியான செய்தியொன்றை வாசித்தபோது சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுசரணைக்கு எதிராகத் தென்னிலங்கையில் நடத்தப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களில் சம்பந்தப்பட்டவர்கள் தீக்குளித்துத் தற்கொலை செய்கின்ற அளவுக்கு `தீவிரவாதிகளாக' மாறிவிட்டார்களோ என்று நினைக்க வேண்டியிருந்தது. இலங்கையின் தேசிய நலன்களுக்கு நோர்வே துரோகமிழைப்பதாக ஆத்திரமடைந்த ரேமண்ட் பெரெய்ரா என்ற 45 வயதான இரத்மலானையைச் சேர்ந்த ஆட்டோ சாரதி கடந்த வியாழக்கிழமை கொழும்பு வார்ட் பிளேஸில் நோர்வே தூதரகத்துக்கு முன்பாக தனக்குத்தானே தீமூட்டித் தற்கொலை செய்ய ம…

  7. யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மீது கொலைக் குற்றச் சாட்டை ஈ.பி.டி.பி யினர் சுமத்தியுள்ளார்கள் கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் தெல்லிப்பளைதுர்க்கையம்மன் ஆலயத்திற்கு முன்னால் சுடப்பட்ட யாழ் மாவட்ட சமூக சேவைகள் அமைச்சின் இணைப்பாளரும் ஈ.பி.டி.பி கட்சியின் முக்கிய உறுப்பினருமான கதிர்காமத்தம்பி நாகராசாவின் மரணச்சடங்கில் உரையாற்றிய யாழ் மாவட்ட ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்டப் பொறுப்பாளர் உதயன் இந்தக் குற்றச்சாட்டை சுமத்தி உரையாற்றியுள்ளார்இதனை அவர்கள் வலியுறுத்தி தென்றல் வானொலியில் இடம் பெறும் நிகழ்விலும் வலியுறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும் ஒரு மாவட்டத்தின் பொறுப்பான அரச அதிகாரியின் மீது பொறுப்பற்ற முறையில் ஈ.பி.டி.பி யினர் குற்றம் சுமத்தியுள்ளமை யாழ் மாவட்ட அரச அலுவலர்களிடை…

  8. JVP leader Somawansa Amarasinghe left the country yesterday hours after the party’s politburo meeting for London. Amarasinghe’s departure came after the politburo decided to step up the campaign against the government with street protests if the SLFP enters into a MoU with the UNP which is in conflict with that signed with the JVP. There was also speculation yesterday that investigations had commenced into Amarasinghe’s activities. ஜேவிபி தலை சோமவன்ச அமரசிங்க நேற்று 10.10.2006 தன் கட்சிக் கூட்டத்தின் பின்பு லண்டனுக்கு தப்பி ஓட்டம் எடுத்தான்.

  9. கடந்த சனிக்கிழமை அன்று முகமாலைக் களமுனையில் லெப்.கேணல் அக்பர் அவர்கள் வீரச்சாவடைந்தார். எதிரியின் முன்னேற்ற முயற்சிகளை முறியடிக்கும் வகையில் முன்னேற்பாடாக நிலைகளைப் பார்வையிட்டு ஒழுங்கமைக்கும்போது எதிரியின் தாக்குதலில் கொல்லப்பட்டார். இவர் இறக்கும்வரை விடுதலைப்புலிகளின் கவச எதிர்ப்புப் படைப்பிரிவான விக்ரர் கவச எதிர்ப்புப் படையணியின் தளபதியாவார். இலங்கைப் போர்க்களத்தில் ஆர்.பி.ஜி எனப்படும் கவச எதிர்ப்பு ஆயுதத்தை அறிமுகப்படுத்தி வைத்தவர்கள் புலிகளே. அதன்பின்தான் அரசாங்கமே அவ்வாயுதத்தைப் பாவிக்கத் தொடங்கியது. தொடக்க காலத்திலிருந்தே கவச எதிர்ப்பு ஆயுதம் புலிகளுக்கு முக்கியமானதாக இருந்து வந்துள்ளது. முன்னர் சண்டையணிகளில் இருக்கும் ஆர்.பி.ஜி க்களைத் தவிர தனியணியாக க…

  10. இலங்கையில் விடுதலைலப் புலிகளின் பயங்கரவாதத் தாக்குதலில் இருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக சிறீலங்காப் பாதுகாப்பு படையினர் பெரும் அர்பணிப்புக்களை செய்வதாக சிறீலங்காவின் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். சிறீலங்காவின் 57 ஆவது இராணுவதினத்தை முன்னிட்டு விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் இராணுவத் தளபதி 22 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்றுவரும் யுத்த நிலையிலும் இராணுவம் விசேட சேவைகளை ஆற்றியுள்ளதாகவும் தமது பொறுப்புக்களை நன்குணர்ந்து செயற்படுகின்றதோடு ஒருமைப்பாட்டுக்கும் இறமைக்காகவும் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

    • 1 reply
    • 1.1k views
  11. பேச்சுக்களின் போது போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து ஆராயப்படமாட்டாது அரசு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்களின் போது போர் நிறுத்த உடன்படிக்கை குறித்து ஆராயப்படமாட்டாது என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஹேகலிய ரம்புக்வெல இது குறித்து கொழும்பில் செய்தியாளர் மத்தியில் கருத்துரைக்கையில் .... போர் நிறுத்த உடன்படிக்கை குறித்த பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்குவதற்கு அரசாங்கம் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார். ஆவண வேலைகளிலோ அல்லது போர் நிறுத்த உடன்படிக்கையின் சாரம்சம் தொடர்பிலோ சிறீலங்காவின் குடிமக்கள் ஆர்வம் கொள்ளவில்லை எனவும் மாறாக நடைமுறையில் உண்மையான நிகழ்வுகள் அரங்கேறுவதையே மக்கள் விரும்புவதாகவும் க…

  12. தானியங்கி பொம்மைகளுக்கு சிறிலங்காவில் தடை [செவ்வாய்க்கிழமை, 10 ஒக்ரொபர் 2006, 19:34 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்காவில் தானியங்கி பொம்மைகளை இறக்குமதி செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஊடகங்களில் இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளார். விமானம் உளிட்ட பறக்கும் பொம்மை பொருட்கள் இறக்குமதி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்கள் இறக்குமதிக்கு பாதுகப்பு அமைச்சின் அனுமதி பெற வேண்டும் என்றும் அமைச்சின் அனுமதியின்றி இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளை உடனே பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிறிலங்காவின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இத்த…

  13. 'தற்போதைய நிலைமை - சில கருத்துக்கள்" -சபேசன் (அவுஸ்திரேலியா)- தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தற்போதைய காலகட்ட நிலவரம் குறித்துப் பலவிதமான கேள்விகள் நம்மவர் மத்தியில் எழுந்திருப்பதை நாம் காண்கின்றோம். சிறிலங்கா அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பிரகடனப்படுத்தப்படாத யுத்தம் ஒன்றை தமிழ் மக்கள் மீது நடாத்தி வருகி;ன்றது. சம்பூர் போன்ற பிரதேசங்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகியுள்ளன. தமிழ்ப்பொதுமக்கள் தினமும் கொல்லப்பட்டு வருகின்றார்கள். சமாதானப் பேச்சுவார்த்தைகள் சரியான முறையில் அடுத்த கட்டத்திற்கு நகர முடியாமல் தேங்கி போயுள்ளன. சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க தயார் என்று சொல்கின்ற சிறிலங்கா அரசு அதேவேளை தொடர்ந்தும் வான் தாக்குதல்களையும் ஆக்கிரமிப்பு…

  14. ஸ்ரீலங்காவில் இரண்டாயிரம் ரூபா பண நோட்டு அறிமுகம்.11:48:38 எதிர்வரும் 17ஆம் திகதி முதல் 2 ஆயிரம் ரூபா நாணயத்தாள் புழக்கத்தில் விடப்பட உள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. இந்த நாணயத்தாளில் முன்னாள் நிதியமைச்சர் சரத் அமுனுகம, மற்றும் முன்னாள் மத்தியவங்கி ஆளுநர் சுனில் மெண்டிஸ் ஆகியோரின் கையெழுத்து பொறிக்கப்பட்டுள்ளதாக மத்தியவங்கி குறிப்பிட்டுள்ளது. நாணய தாளில் சீகிரிய குன்று அதன் ஓவியம் உள்ளிட்ட முக்கிய தேசிய அடையாளங்களும் அச்சிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. thanks:athirvu.com

  15. சிறிலங்கா அரசுடன் பேச்சுக்கள் இடம்பெறுமாயின் மகிந்த அரசின் போலித்தனங்களை வெளிப்படுத்துவோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இலங்கைக்கான நோர்வேத்தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கரை இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளதாவது: நோர்வேத் தூதுவருடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் முக்கியமாக சிறிலங்கா அரசாங்கம் எமது தேசத்தின் மீது கட்டவிழ்த்து விட்டு இருக்கின்ற அரச பயங்கரவாதம், வன்முறைகள், படுகொலைகள் போன்றவற்றை நிறுத்தி நேர்மையான முறையில் இதயசுத்தியுடன் சமாதான முன்னெடுப்புக்குள் உள்வரவேண்டும். இதனை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும் அழுத்தம் கொடுக்க வேண்டு…

  16. மனித உரிமை மீறல் போக்கு அரசுக்கு விழப்போகும் சுருக்கு ` இலங்கையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கையைக் கண்டிக்கும் விதத்தில் ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத் தொடரில் பிரேரணை ஒன்றை நிறைவேற்ற ஐரோப்பிய ஒன்றியம் எடுத்த முயற்சி இலங்கை அரசை சீற்றமுற வைத்திருப்பதாகத் தெரிகின்றது. ஜெனிவாவில் நடைபெறும் மேற்படி ஆணைக்குழுவின் இரண் டாவது கூட்டத் தொடரின் முடிவில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மேற்படி பிரேரணையை ஐரோப்பிய ஒன்றியம் நிறைவேற்ற முயன்றதாகத் தெரிகின்றது. மனித உரிமைகளைப் பேணும் விடயத்தில் இலங்கையின் மோசமான நடவடிக்கைகள், ஆட்கடத்தல்கள், வகைதொகையற்ற படுகொலைகள், மோசமான குற்றங்களிலிருந்து அரச படைகளுக்கு விசேட விலக்களிக்கும் சட்ட ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்த…

  17. சிறிலங்கா அரசும் மேற்குலக நாடுகளும் சமாதானப் பேச்சுவார்த்தைகளை அணுகாதபோது விடுதலைப்புலிகள் ஏன் இன்னும் சமாதானப்பேச்சு வார்த்தைகளில் அக்கறையாக இருக்கிறார்கள்? தமிழீழ விடுதலைப்புலிகள் பலவீனமடைந்துவிட்டார்களா? இராணுவ ரீதியாகப் புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதா? தமிழ்மக்கள் மீதான கொலைகளையும், மனித உரிமை மீறல்களையும் இன்னும் எத்தனை நாள்தான் பொறுத்திருந்து பார்ப்பது? விடுதலைப்புலிகளின் அடுத்தகட்ட நகர்வு எதுவாக இருக்கும்? என்று பலர் குழம்பிப்போய் இருக்கிறார்கள். சிலர் செய்திகள் பார்ப்பதினைத் தவிக்கிறார்கள். இவர்கள் மெல்பெர்ண் தமிழ்க் குரல் வானொலியில் ஒலிபரப்பாகிய சபேசனின் ஆய்வு வடிவத்தினை ஒருமுறை வாசித்தால் சில விசயங்கள் புரியும். வாசிக்க http://www.tamilnaatham.com/ar…

    • 15 replies
    • 5.5k views
  18. சதிகளை மீறி தமிழீழம் உதயமாகும்! யாழ்ப்பாண எம்.பி. பேட்டி இலங்கையில் சண்டை ஒருபக்கமும்இ சமாதான பேச்சுவார்த்தைக்கான அறிவிப்புகள் மறுபக்கமுமாகப் பிரச்னை உக்கிரமடைந்திருக்கும் நிலையில்இ அண்மையில் புதுக்கோட்டைக்கு பழ.நெடுமாறனின் ‘தமிழர் தேசிய கட்சி’ சார்பான நிகழ்ச்சி ஒன்றுக்காக வந்திருந்தார்இ இலங்கையின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம். இலங்கைத் தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த அவரிடம் இலங்கைப் பிரச்னையைப் பற்றி சில கேள்விகளை முன்வைத்தோம். ‘‘இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசு எப்படி செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?’’ ‘‘எங்களைப் பட்டினி போட்டு கொல்ல நடக்கும் முயற்சிகளுக்கு எதிராக உணவு விநியோகம்இ அத்தியாவசிய மருந்துப் பொருட…

  19. சிறிலங்கா அரசின் தெளிவான போர் முகம் மட்டக்களப்பு மாவட்டம் பனிச்சங்கேணி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி மீது படையினர் மேற்கொண்ட ஆக்கிரமிப்பு முயற்சி சிறிலங்கா அரசின் போர் முகத்தை தெட்டத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. சமாதான முன்னெடுப்புகளுக்கு இவ்வாறான வலிந்த தாக்குதல் என்பது ஒரு போதும் நம்பிக்கையை ஏற்படுத்தமாட்டாது. எதிர்வரும் 28ம் 29ம் திகதிகளில் பேச்சுவார்த்தைக்குத் தயார் என சிறிலங்கா அரசு இணக்கம் தெரிவித்துக் கொண்டு விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசத்துக்குள் பாரிய படை நகர்வை மேற்கொண்டமையால் போர் நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசு ஏற்றுக் கொள்ளவில்லை என்பதுடன் சர்வதேச சமூகத்தை சிங்களப் பேரினவாத அரசு ஏமாற்றுகிறது என்றே அர்த்தம் கொள்ள வேண்டும்…

    • 1 reply
    • 1.4k views
  20. இன்று அதிகாலை முதல் முகமாலையில் பலந்த மோதல்? இன்று அதிகாலைதொடக்கம் முகமாலைப்பகுதியில் பெரும் மோதல்கள் வெடித்துள்ளதாக குடிசார் செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை தொடக்கம் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களுடன் ஆரம்பித்த இம்மோதல்களால் அப்பகுதிகள் அதிர்ந்து கொண்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இருந்தும் இத்தாக்குதல் சம்பந்தமாக உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நன்றி: பதிவு.கொம்

    • 133 replies
    • 21.7k views
  21. இலங்கை அமைதிப் பேச்சுக்கு ஆபத்து. ---------------------------------- இலங்கையில் ராணுவத் தாக்குதல்கள் தொடர்ந்தால் அமைதிப் பேச்சில் தாங்கள் கலந்துகொள்ளப் போவதில்லை என்று புலிகள் அமைப்பு நார்வே சிறப்புத் துìதருக்கு அவசர கடிதம் அனுப்பி இருக்கிறது. அதேவேளையில் யாழ்ப்பாணத்தில் பெரிய தாக்குதலை நடத்த ராணுவம் ஆயத்தமாகி வருவதாகவும் அதை உடனடியாகப் பார்வை யிடும்படி அந்த அமைப்பு அமைதிக் கண்காணிப் புக் குழுவுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. இவ்வேளையில் இவ்வேளையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று இலங்கை பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்தார். இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கை யில் இந்த மாத அமைதிப் பேச்சு நடக…

    • 0 replies
    • 1.3k views
  22. பேச்சுக்களைத் தவிர்ப்பதற்கு புலிகளைச் சீண்டும் அரசு -விதுரன் இலங்கையில் மீண்டும் சமாதானப் பேச்சுகள் சாத்தியமாகுமா? படை வலுச் சமநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகக் கருதும் அரசு, புலிகளை மேலும் பலவீனப்படுத்துவதன் மூலம் பேச்சுகளை இல்லாது செய்துவிடலாம் அல்லது பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் பேரம் பேசும் ஆற்றலை வெகுவாகக் குறைத்து விடலாமெனக் கருதுகிறது. அடுத்த சுற்றுப் பேச்சுக்கு இரு தரப்பும் சம்மதம் தெரிவித்து, பேச்சுகள் நடைபெறும் இடத்தைத் தெரிவு செய்யும் முயற்சியில் நோர்வே அனுசரணையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கையிலேயே மீண்டும் கடுஞ் சமர் வெடித்துள்ளது. வடக்கு - கிழக்கில் போர்முனைக்குச் செல்லப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினருக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையி…

  23. உயர் தரப்பரீட்சை பெறுபேறு; கொழும்பு நாலந்தா மாணவன் அகில இலங்கையில் முதலிடம் * தமிழ்பேசும் மாணவர் இம்முறை பிரகாசிக்கவில்லை க.பொ.த. உயர்தரப்பரீட்சை முடிவுகளின் படி கொழும்பு நாலந்தா கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ஹர்ஸா அனுபுத்திக திசாநாயக்க விஞ்ஞானப்பிரிவில் 3.3142 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியாக சாதனை படைத்துள்ள அதேவேளை, கொழும்பு உட்பட நாட்டின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ், முஸ்லிம் மாணவர்கள் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் இவ்வருடம் பிரகாசிக்கத் தவறியுள்ளனர். கடந்த மே மாதம் நடைபெற்ற க.பொ.த. உயர்தரப்பரீட்சை முடிவுகளை நேற்று வெள்ளிக்கிழமை பரீட்சைகள் திணைக்களம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டது. ஆயினும், உயிரியல், விஞ்ஞானம், பொறியியல் பௌதீக விஞ்ஞானம், …

  24. தென்னிலங்கையின் பழைய தீர்மானங்களும் புதிய அரசியல் காற்றும் பீஷ்மர் சஜீத் பிரேமதாஸ முதல் ஆனந்த சங்கரி, சம்பந்தன் வரை நீளும் டில்லிப் பயணங்களின் சுவாரஷ்யங்கள் ஒருபுறமிருக்க, கடந்த வாரத்து கொழும்பு நிலைப்பட்ட செயற்பாடுகள் சிலவற்றின் முக்கிய காரணமாகவும் பல முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய சாத்தியப்பாடுகள் காரணமாகவும் அரசியல் கவனத்தை வேண்டி நிற்கின்றது. முதலாவது வரவிருக்கும் பேச்சுவார்த்தைபற்றிய தீர்மானமாகும். புதனன்று இரவே `பி.பி.சி.' ஆங்கிலச் சேவையின் இரவு 11.30 மணி நிகழ்ச்சியில் திகதியும் இடமும் கூட கூறப்பட்டதென்றே நினைக்கின்றேன். ஆனால், அடுத்த நாள் காலை அமைச்சர் ரம்புக்வெல அவர்கள் தங்களை கேட்காமலே சொல்லப்பட்டுவிட்டது என்று கூறிவிட்டார். உண்மையில்,…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.