Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சு.க. தலைவர் பதவியிலிருந்து சந்திரிகா விலகல்? [திங்கட்கிழமை, 19 யூன் 2006, 06:13 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்கா சுதந்திர கட்சித் தலைவர் பதவியிலிருந்து சந்திரிகா குமாரதுங்க விலகக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் வரும் 29 ஆம் நாள் தனது 61 ஆவது பிறந்த நாளை லண்டனில் கொண்டாடும் சந்திரிகா குமாரதுங்க, அதே நாளில் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலக உள்ளதாக கூறப்படுகிறது. சந்திரிகாவின் பிறந்த நாளுக்கு முன்னதாக 28 ஆம் நாளன்று சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. கட்சியின் தலைமைப் பதவி தொடர்பான கட்சியின் யாப்பில் அக்கூட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவராக உள்ளவரே கட்சியின் தலைவரா…

  2. முன்னாள் ஜனாதிபதியின் செலவுகளுக்கு பணம் செலுத்த ஜனாதிபதி செயலகம் மறுப்பு [19 - June - 2006] [Font Size - A - A - A] முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் ஏற்படுத்தப்படும் செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாதென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் பதவியைத் துறந்து லண்டனிற்குச் சென்ற சந்திரிகா குமாரதுங்க களியாட்ட நிகழ்வுகளில் பங்குபற்றுவதுடன் அங்கு அதிவிசேட விருந்தினர்களுக்கான உபசாரத்தை பெற்று வருகிறார். இதனால் அவரினால் ஏற்படுத்தப்படும் செலவு அதிகரித்துச் செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் செலவீனங்களுக்கு யார் பணம் செலுத்துவது என்பதில் தற்பொழுது சர்ச்சை ஏற்பட்டுள்ளது. லண்டன் ஹீதுரூ விமான நிலையத்திற்கு சந்திரிகா …

  3. புலிகளின் புதிய கடற்கண்ணிகள் குறித்து பொலிஸாரின் விசாரணைகள் ஆரம்பம் [19 - June - 2006] [Font Size - A - A - A] விடுதலைப் புலிகள் கடற்படை கப்பல்களை தாக்குவதற்காக உருவாக்கியுள்ள புதிய வகை கடல் கண்ணிவெடி குறித்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். கப்பலின் அடிப்பகுதியில் காந்தம் மூலம் இந்தக் கடல் கண்ணி வெடியை பொருத்தலாம் எனவும் பின்னர் இதனை தூரத்திலிருந்து வெடிக்க வைக்கலாம் எனவும் சந்திரா பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 10 முதல் 15 கிலோ எடையுள்ள நிலக்கண்ணி வெடிகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவ

  4. புலிகளின் பகுதியில் பயணிக்கும் எந்த வாகனமானாலும் தாக்குமாறு எமக்கு இராணுவ அதிகாரி உத்தரவிட்டிருந்தார் [19 - June - 2006] [Font Size - A - A - A] புலிகளினால் கைது செய்யப்பட்ட ஆயுதக்குழு உறுப்பினர்கள் தெரிவிப்பு விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இரவு நேரங்களில் பயணஞ் செய்யும் எந்த வாகனமாக இருந்தாலும் தாக்குதல் நடத்துமாறும் அது எந்த வாகனமாக இருந்தாலும் தயங்க வேண்டாம் எனத் தங்களுக்கு உத்தரவிடப்பட்டதாகவும் மேலும், அம்பாறையில் இனிய பாரதியை கொலை செய்துவிட்டு விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த முனைக்காட்டைச் சேர்ந்த ஞான தீபனுடைய குடும்பத்தை அழித்து விட்டு வருமாறும் தமக்கு உத்தரவிடப்பட்டதாகவும் இலுப்படிச்சேனையில் கைதான கருணா குழு உறுப்பினர்கள் மூவரும் தெர…

  5. படுகொலைகளும் சிங்கள ஊடகங்களும் யாழ் செம்மணியில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமி,புங்குடுதீவு தர்சினி படுகொலையினை,நாவலப்பிட்டி உமாதேவி படுகொலையினை, திருகோணமலை மாணவர் படுகொலையினை அல்லைப்பிட்டி பொதுமக்கள் படுகொலையினை, வடமுனையில் இடம்பெற்ற கண்ணிவெடி தாக்குதலில் கொலை செய்யப்பட்டவர்களை மற்றும் கடந்த 9 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மன்னார் வங்காலை தோமஸ்புரியில் இடம்பெற்ற படுகொலையென வட,கிழக்கில் இடம்பெறும் படுகொலைகளை வகைதொகையின்றி அடுக்கிக்கொண்டே போகலாம். அவற்றை இன்று ஊடகங்களும் மறந்து விட்டன. மக்களும் மறந்து விட்டனர். சம்பவமொன்றினைப் பின் தொடர்ந்து செல்லுதலே ஊடகத்தின் பொறுப்பு. இச்சம்பவங்களினூடாக அவை அக்கடமைகளிலிருந்தும் தவறிவிட்டன.எது எவ்வாறிருப்பனும் இச்ச…

  6. நோர்வேயின் தூதுவர் விரைவில் வன்னிக்கு கொழும்புக்கான நோர்வேத் தூதர் ஹான்ஸ் பிரட்ஸ்கரும், இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுத் தலைவர் உல்ப் ஹென்றிக்ஸனும் மிகவிரைவில் கிளிநொச்சிக்கு விஜயம் செய்து விடுதலைப் புலிகளின் மூத்த தலைவர்களோடு விரிவான பேச்சுகளை நடத்துவர் என விடயமறிந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டன. தற்போதைய களநிலைவரங்கள் குறித்து விடுதலைப்புலிகளின் தலைவர்களோடு விரிவான கலந்துரையாடலில் ஈடுபடுவது அவர்களது நோக்கமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. தற்போது களத்தில் ஏற்பட்டுள்ள நெருக் கடியான நிலையில் பதற்றம் மற்றும் போர்ச் சூழலைத் தவிர்த்தல் அமைதி முயற்சிகளை ஆக்கபூர்வமான திசையில் நகர்த்துவதற்கான வாய்ப்புகளை ஆராய்தல் விடுதலைப் புலிகளைத்தடை செய்த…

  7. கலைஞரின் அரசு ஈழத் தமிழர்களுக்கு செய்து கொண்டிருக்கும் ஒரு துரோகச் செயல் குறித்து அதிர்சிகரமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கருணா குழுவினர் தமது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆட்களை சேர்ப்பதற்கு கலைஞரின் அரசு அனுமதி அளித்துள்ளது என்பதே அந்த அதிர்ச்சிகரமான தகவல் ஆகும். இந்தத் தகவலை மிகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கருணா குழு தமிழகத்தில் ஆட்சேர்ப்பதற்கு ஈழத் தமிழரில் அக்கறை கொண்ட பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தும், கலைஞரின் அரசு அதை அலட்சியம் செய்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. கருணா குழுவுக்கான ஆட்சேர்ப்பு தமிழகத்தில் உள்ள ஈழத் தமிழர்களின் அகதி முகாம்களிலேயே நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சேர்ப்பு கருணா குழுவைச் சேர்ந்த பரந்தன்…

  8. இனவன்முறை வெடிக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் அரசை வற்றுபுறுத்துகிறார் மனித உரிமைகள் ஆணையாளர் நாட்டில் இனவன்முறைகள் வெடிக்காமல் இருப்பதற்கு முனைப்பான ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்க வேண்டும். சகல இன பொதுமக்களின் உயிர்கள் மற்றும் சொத்துக்கள் காப்பற்றப்பட வேண்டும். இவ்வாறு இலங்கை அரசை வற்றுபுறுத்திக்கேட்டுக்கொள

  9. தடைகள் எது வந்தாலும் தமிழீழம் அடைவது உறுதி http://www.orupaper.com/issue49/pages_K__Sec3_25.pdf

  10. பதிலடி கொடுக்க நேரிடும் என்ற எச்சரிக்கையை சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் அனுப்பியுள்ளது: சு.ப.தமிழ்ச்செல்வன் சிறிலங்கா இராணுவத்தின் வான் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க நேரிடும் என்று சிறிலங்காவுக்கு எமது தலைமைப்பீடம் எச்சரிக்கையை அனுப்பியுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். இந்த எச்சரிக்கையை சிறிலங்காவுக்குத் தெரிவிக்குமாறு இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் அனுசரணையாளராகிய நோர்வேயின் சிறிலங்காத் தூதுவர் ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டுள்ளனர் என்றும் தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது தொடர்பாக சு.ப.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளதாவது: இலங்கையில் உள்ள கள நில…

    • 1 reply
    • 1.2k views
  11. நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்பதே என் விருப்பம்: ஜே.வி.பி.யிடம் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் நோர்வேயை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் என் விருப்பமும் கூட என்று ஜே.வி.பி. குழுவினரிடம் மகிந்த ராஜபக்ச கூறியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜே.வி.பி.யினருடன் அண்மையில் மகிந்த ராஜபக்ச ஆலோசனை நடத்திய போது நடைபெற்ற விவாதங்களை கொழும்பு ஆங்கில ஊடகம் வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ளதாவது: மகிந்தவுடனான ஜே.வி.பி.யின் சந்திப்பில் நோர்வே குறித்து விமல் வீரவன்ச கருத்துகளை முன்வைத்தார். அதற்குப் பதிலளித்து மகிந்த ராஜபக்ச கூறுகையில், விடுதலைப் புலிகளுக்கு பக்கச் சார்பாகத்தான் நோர்வே செயற்படுவது எ…

    • 3 replies
    • 1.6k views
  12. வரலாற்றின் வழிகாட்டுதலில் "கிளைமோர் முறியடிப்பு" வன்னியிலும், கிழக்கு மாகாணத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் கிளைமோர்த் தாக்குதல்கள் என இப்போது தினசரி செய்திகள் வெளிவருகின்றன. சிறிலங்கா அரசின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரே இவ்வாறு விடுதலைப் புலிகளின் பகுதிகளுக்குள் ஊடுருவிச் சென்று இந்த தாக்குதல்களை நடத்துகின்றார்கள். இதற்கு துணை இராணுவக் குழுக்களின் உதவியும் தாராளமாகக் கிடைக்கின்றது. இருந்த போதிலும், அண்மையில் ஆழ ஊடுருவும் படையணிகளைச் சேர்ந்த பலர் விடுதலைப் புலிகள் விரித்த வலையில் அகப்பட்டுள்ளார்கள். இதில் படையினர் சிலர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த முறியடிப்பானது பல உண்மைகளை வெளிப்படுத்தி நிற்கின்றன. ஆழ ஊடுருவும் படையைப்…

  13. பாராளுமன்றம் முன்பாக உண்ணாவிரதமிருந்த தயாஇடைக்காட்டாரின் போராட்டத்தை இருட்டடிப்புச்செய்து விட்டு நோர்வேக்கு வந்த அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனிடம் தமிழோசைசெய்தியாளன் சுவாமிநாதன் மைக்கை வாய்க்குள் ஓட்டிக்கொண்டு இருந்தார் ஏதோ அப்படியே எல்லா உண்மையையும் போய் சொல்கிறோம் எங்களுக்கு சொல்லுங்கோ என்று அப்ப இந்த இடைக்காட்டார் விசயத்தில் மட்டும் ஏன் இந்த மைக் செத்துபோனது. அல்லது உண்மை தெரிய வரக்கூடாது என்று சதிசெய்தார்களா?

    • 79 replies
    • 11.7k views
  14. வங்காலைப்பாட்டில் பெரும் அட்டூழியம் -நூற்றுக்கணக்கான வாடி வீடுகள், படகுகள் தீக்கிரை; கடலுக்கு சென்ற 400 க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரை திரும்பவில்லை மன்னார் வங்காலைப்பாட்டில் நேற்று சனிக்கிழமை காலை மீனவர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட வாடி வீடு களும், பேசாலை முதல் வங்காலைப்பாடு வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கண்ணாடி நாரிழைப் படகுகளும் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இதேநேரம், நேற்று அதிகாலை தலைமன்னார் முதல் மன்னார் வரையான கடற்பரப்பில் ஆழ்கடல் மீன்பிடிக்குச் சென்ற நானூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் மாலை வரை கரைதிரும்பவில்லையென்றும் தெரிவிக்கப்படுகிறது. பேசாலைக் கடற்பரப்பில் நேற்றுக் காலை கடற்படையினருக்கும் கடற்புலிகளுக்குமிடையே நடைபெற்ற கடற் சமரையடுத்தே கடற்றொழி…

    • 0 replies
    • 983 views
  15. சிறிலங்கா தாம் மூன்று கடற்கலங்களை இழந்துள்ளதாக பீபீசிக்கு தெரிவித்துள்ளது.

    • 16 replies
    • 4.6k views
  16. ஜப்பானிய உதவிகள் நிறுத்தம்? இலங்கைக்கான அபிவிருத்தி உதவிகளை நிறுத்துவது தொடர்பாக ஜப்பான் பரிசீலித்து வருவதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் வன்முறைகள் அதிகரித்து ஒரு முழு அளவிலான யுத்தம் தொடங்கும் நிலை இருப்பதால் தனது உதவிகளை நிறுத்த ஜப்பான் முடிவு செய்திருப்பதாக கொழும்பில் உள்ள ஜப்பான் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. இது தொடர்பில் உத்தியோகப்பூர்வமற்ற முறையில் சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஜப்பான் தெரிவித்திருப்பதாகவும் ஜப்பான் தனது உதவிகளை நிறுத்தினால் ஐக்கிய நாடுகள் சபை உதவியும் நிறுத்தப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் மக்களினது சட்டப்பூர்வமான முறைமைகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று டோக்கியோ இணைத் தலைமை நாடுகள் …

  17. சிறிலங்கா சமாதான செயலகத்துக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே மோதல் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஓஸ்லோ குழுவினருக்கு உலங்குவானூர்தி ஏற்பாடு செய்தமை தொடர்பில் சிறிலங்கா சமாதான செயலகத்துக்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் இடையே மோதல் நடைபெற்றதாக கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: சுவிஸ், சூரிச்சிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் 6 பேர் கொண்ட குழு புறப்படுவதற்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சின் சார்பில் நோர்வே தரப்பினருக்கு ஒரு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அதில் பண்டாரநாயக்க விமான நிலையத்திலிருந்து வவுனியா ஓமந்தை வரைக்கும்தான் உலங்குவானூர்தி ஏற்பாடு செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஓமந்தையிலிருந்து விடுதலைப் புலிகளின் …

  18. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடை அநாகரிகமானது: டென்மார்க் அமைதி சபை கண்டனம் தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பிய ஒன்றியத் தடை அநாகரிகமானது என்று டென்மார்க் நாட்டின் அமைதிச் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. டென்மார்க் அமைதிச் சபையின் பிரதித் தலைவர் லெவி கே.ப்ரவுச் இது குறித்து கூறியுள்ளதாவது: தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான ஐரோப்பியத் தடையானது அமைதியை உருவாக்காது. அமைதியின் பக்கத்தைத் தவிர எந்த ஒரு பக்கச் சார்பு நிலையையும் நாம் மேற்கொள்ளமாட்டோம். இந்தப் பிரச்சனையில் தொடர்புடைய இருதரப்பினருமே வன்முறையை கையாள்கின்றனர். அனைத்து வகையிலான வன்முறைகளையும் நாம் கடுமையாக எதிர்க்கிறோம். இருதரப்பினரையும் ஒரே பாதையில்தான் சர்வதேச சமூகம் அணுக வேண்டு…

  19. ஆழ ஊடுருவும் இராணுவத்தினரை சுட்டுக்கொன்ற மக்கள் படையினர் சிறப்பிப்பு [சனிக்கிழமை, 17 யூன் 2006, 18:44 ஈழம்] [கிளிநொச்சிலிருந்து செ.தனோஜன்] வவுனியா நைனாமடுப் பகுதிக்குள் ஆழ ஊடுருவி தாக்குதல் நடத்த வந்த சிறிலங்கா இராணுவத்தினரை கடந்த மூன்று நாட்களாக சுற்றிவளைத்து தேடுதல் நடத்தி அந்த முற்றுகையை உடைத்து செல்ல முயன்ற சிறிலங்கா இராணுவத்தரப்பைச் சேர்ந்தவரை சுட்டுக்கொன்ற மக்கள் படையினர் இன்று சனிக்கிழமை சிறப்பிக்கப்பட்டனர். நைனாமடுப் பகுதிக்குள் ஊடுருவிய சிறிலங்கா இராணுவத்தினர் கடந்த மூன்று நாட்களாக விடுதலைப் புலிகள், தமிழீழ தேசிய துணைப்படை மற்றும் மக்கள் படை ஆகியவற்றால் சுற்றிவளைக்கப்பட்டிருந்தனர

  20. சிறிலங்கா இராணுவத்தின் விமானத் தாக்குதல் யுத்த நிறுத்த மீறலே: கண்காணிப்புக் குழு [சனிக்கிழமை, 17 யூன் 2006, 18:31 ஈழம்] [ம.சேரமான்] சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய விமானத் தாகுதல், எறிகணைத் தாக்குதல் யுத்த நிறுத்த ஒப்பந்த மீறல்தான் என்று இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு தெரிவித்துள்ளது. திருமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலனை இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் திருமலை மாவட்ட தலைவர் ஓவ் ஜென்சென் நேற்று வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். மூதூர் கிழக்கு சம்பூரில் உள்ள திருமலை மாவட்ட அரசியல்துறை செயலகத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய எழிலன், தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதிகள் ம…

    • 0 replies
    • 1k views
  21. மன்னாரில் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து இராணுவம் தாக்குதல்! 30ற்கு மேற்பட்டோர் படுகாயம்! சிலர் கொல்லப்பட்டிருக்கலாமென அச்சம்! மன்னார் பேசாலையில் இன்று காலை சிறிலங்கா கடற்படையினர் மக்கள் குடியிருப்புக்க ளுக்குள் நுழைந்து மேற்கொண்டு கண்மூடித்தனமான துப்பாக்கி பிரயோகத் தாக்குதலில் சுமார் 30ற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும் சிலர் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. காயமடைந்தவர்கள்; சலர் அவசரமாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் காயப்பட்டவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு போதுமான அம்புலன்…

    • 4 replies
    • 1.7k views
  22. இன்று அனுராதபுரம் கெப்பிடிகொல்லாவவில் பேருந்தில் ஏற்பட்ட பகுதியில் குண்டுவெடிப்பில் 30 இற்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. source: www.battieelanaatham.com

    • 41 replies
    • 6.9k views
  23. அண்மையில் வந்த தமிழீழ காணிச்சட்டத்து சரத்து ஒண்று பற்றிய விவாதம் ஒண்று இங்கு காரசாரமாக நடந்தது. அதுசம்பந்தமாக தெளிவு பெற நான் தமிழீழ சட்டவியல் தலைவர் பரா அண்ணாவுக்கு மின்னஞ்சம் அனிப்பி இருந்தேன். அதுக்கு அவர் பதில் அனுப்பியும் இருக்கிறார். பலர் மனங்களில் இது பாலை வார்க்கலாம்.! எனது மின்னஞ்சல் தமிழில் இருந்ததால் யுனிக்கோட் பிரச்சினையால் எனது அஞ்சலை படிக்க கஸ்ரப்பட்டதுபோல தெரிகிறது.! அதனால்த்தான் தாமதமாக பதிலை பெற்று உள்ளேன். http://img131.imageshack.us/my.php?image=p...araanna16yn.gif நான் அனுப்பிய மடல் நான் தாயகத்தில்சாவகச்சேரியை பிறப்பிடமாககொண்டு.1999ம் வருடத்தில் இருந்து புலம்பெயர்ந்து. இங்கிலாந்துநாட்டில்வாழ்ந்த

  24. தமிழ் மக்களிடம் உலகை நோக்கி கேக்க ஆயிரம் கேள்விகள் http://www.eelamurazu.com/To%20Day%20News/...s/Page%2011.pdf

    • 12 replies
    • 2.5k views
  25. கிளிநொச்சியில் இன்று மாலை 6.30 மணிக்கு சிறிலாங்க இராணுவத்தின் கிபிர் விமானங்கள் மூன்று மக்கள் குடியிருப்பு பகுதிகள் மீது ஐந்து தடவைகள் குண்டுத்தாக்குதல் நடத்தியுள்ளன சேத விபரங்கள் உடன் தெரியவில்லை நன்றி தகவல் வெற்றி

    • 24 replies
    • 4.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.