ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142586 topics in this forum
-
கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை: போர் நிறுத்தத்திலிருந்து விலகவுமில்லை: விடுதலைப்புலிகள் அறிவிப்பு (கிளிநொச்சி) கொழும்புத் தாக்குதலுக்கும் எமக்கும் தொடர்பில்லை என்றும் நாம் போர் நிறுத்தத்திலிருந்து விலகவுமில்லை என்றும் விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகள் போர் நிறுத்த புரிந்துணர்வு உடன்பாட்டிலிருந்து விலகிவிட்டதாக நிலவும் செய்தி தொடர்பாக கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நன்றி: மட்டக்களப்பு ஈழநாதம்
-
- 7 replies
- 1.9k views
-
-
அரச பயங்கரவாதத்திற்கு பலியான மக்களின் படங்கள் சில. படங்களை இணைப்புகளை அழுத்துவதன் மூலம் பார்வையிடலாம். http://www.yarl.com/forum/files/DSC09719.JPG http://www.yarl.com/forum/files/DSC09720.JPG http://www.yarl.com/forum/files/DSC09726.JPG http://www.yarl.com/forum/files/DSC09729.JPG http://www.yarl.com/forum/files/DSC09730.JPG படங்கள்: நன்றி: http://www.eelavision.com
-
- 0 replies
- 755 views
-
-
தாக்குதல் தொடர்ந்தால் பதில் தாக்குதல்: புலிகள் எச்சரிக்கை திருமலையில் முப்படைகளின் தாக்குதல் தொடர்ந்தால் தற்காப்பு இராணுவத் தாக்குதல்கள் நடத்த நேரிடும் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் எச்சரித்துள்ளனர். ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் கூறியுள்ளதாவது: திருகோணமலையில் போர்ச் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆர்ட்டிலரிகளாலும் பீரங்கிகளாலும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.சிறிலங்கா அரசாங்கப் படைகளின் தாக்குதல் நீடித்தால் தற்பாதுகாப்பு இராணுவத் தாக்குதல்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவர் என்றார் புலித்தேவன். திருமலை நிலைமைகள் குறித்து கருத்து தெரிவித்த இலங்கை …
-
- 0 replies
- 837 views
-
-
மூதூர்படகுத்துறைமீது விமானத்தாக்குதல். ஐந்து முஸ்லீம் பொதுமக்கள் பலி. 8பேர் காயம். (திருகோணமலை) நேற்று நடத்தப்பட்ட தாக்குதல்களின் தொடற்சியாக இன்றும் சிறிலங்கா படைத்தரப்பு மக்கள் வாழ்விடங்கள்மீது தொடர்ச்சியான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது. விமானத்தாக்குதல்கள் பல்குழல் எறிகணைத்தாக்குதல்கள் கடற்படை பீரங்கித்தாக்குதல்கள் என இவை தொடர்கின்றன. இன்று காலை திருமலை விடுதலைப்புலிகளின் நிர்வாகப்பகுதிமீது ஆட்லெறி மற்றும் விமானத்தாக்குதல்கள் ஆரம்பித்து தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இத்தாக்குதல்களில் இதுவரை பதின்நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெருந்தொகையானோர் காயமடைந்தும் உள்ளனர். இது இவ்விதமிருக்க இன்று காலை 8.10அளவில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மூதூர் …
-
- 0 replies
- 844 views
-
-
புலிகள் சும்மா இருக்க மாட்டார்கள் - தமிழ்ச்செல்வன் ஜூனியர் விகடனுக்கு வழங்கிய செவ்வி http://www.tamilnaatham.com/pdf_files/juni..._2006_04_25.pdf
-
- 1 reply
- 1.1k views
-
-
திருகோணமலையில் தமிழர்களைப் பாதுகாக்க தவறியது சிறிலங்கா அரசு: மனித உரிமை அமைப்பு சாடல்! திருகோணமலையில் தமிழர்களைப் பாதுகாக்க சிறிலங்கா அரசு தவறிவிட்டது என்று Human Rights Watch எனும் மனித உரிமை அமைப்பு கடுமையாகச் சாடியுள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயற்படும் Human Rights Watch அமைப்பின் ஆசியப் பிராந்திய இயக்குநர் பிராட் அடம்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: திருகோணமலையில் குண்டு வெடிக்க வைக்கப்பட்ட பிறகு ஆயுதக் குழுவினரால் தமிழ் மக்களது வீடுகளும் வர்த்தக நிறுவனங்களும் தாக்கப்பட்டபோது சிங்களவர்கள் பெரும்பான்மையாக உள்ள சிறிலங்கா அரச படையினர் தமிழ் மக்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டனர். விடுதலைப் புலிகளால் குண்டு வெடிக்க வைக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகி…
-
- 1 reply
- 883 views
-
-
ஜெனீவா பேச்சுக்களில் பங்கேற்பு இல்லை: விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு [ஜெனீவாவில் எதிர்வரும் 24 ஆம் நாள் நடைபெற உள்ள இரண்டாம் சுற்றுப் பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர். கிளிநொச்சியில் இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹன்சன் பௌயருடனான சந்திப்புக்குப் பின்னர் இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் தாயகப் பகுதியில் தமிழர்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டு வந்து இயல்பு நிலைமையை ஏற்படுத்தா வரை பேச்சுக்களில் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. www.puthinam.com
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ்.கோண்டாவில்ப் பகுதியில் இன்று நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சுச் சம்பவத்தில் சிறீலங்காப்படையினர் இருவர் காயம் அடைந்துள்ளனர். சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரே காயம் அடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஆரியகுளம் சந்திக்கு அண்மித்த ஆனைப்பந்திச் சந்திப்பகுதியிலும் படையினர் மீது கைக்குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் ஸ்ரீலங்காப் படையாளி ஒருவர் உட்பட நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர். படையாளியும், 20 அகவையுடைய ஜெகதீஸ்வரி, 21 அகவையுடைய கந்தையா விமலன், 15அகவையுடைய அருட்செல்வம் சாஜிராஜ் ஆகியோரும் காயம் அடைந்துள்ளனர் நன்றி: புதினம்
-
- 0 replies
- 1.1k views
-
-
தென் தமிழீழ தளபதிகளின் கிளிநொச்சி பயணம் தொடர்பான நிலைப்பாடு என்ன என்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் விளக்கியுள்ளனர். இது தொடர்பாக இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஹான்சன் பௌயருக்கு சு.ப.தமிழ்ச்செல்வன் இன்று செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள கடிதம்: 25 ஏப்ரல் 2006 திரு ஜோன் ஹான்சன் பௌயர் சிறப்புத் தூதுவர் அன்புள்ள திரு பௌயர் சமாதான முயற்சிகளைப் புத்துயிரூட்டுவதற்கு நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எமது நன்றியைத் தெரிவிக்கும் நோக்கிலும் இது தொடர்பாக எமது நிலைப்பாட்டை உங்களுக்கு அறியத்தரும் நோக்கிலும் இக்கடிதத்தை நான் எழுதுகின்றேன். அரசாங்கமானது ஒரு புறம் தாம் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்று பிரச்சாரம் செய்வதுடன் மறுபுறத்தில் சமாதானத்தை அழிப்பத…
-
- 0 replies
- 1.1k views
-
-
Sri Lanka: Government Must Respond to Anti-Tamil Violence Security Forces Stand by During Mob Attacks in Trincomalee (New York, April 25, 2006) ? The Sri Lankan government has failed to respond adequately to recent attacks by armed groups on ethnic Tamils and their homes and businesses in Sri Lanka?s eastern Trincomalee district, Human Rights Watch said today. Police and other security forces reportedly stood by as Tamils were attacked on April 12 after an alleged Tamil Tiger bomb at a Trincomalee market killed five persons. Witnesses said that within 15 minutes approximately 100-150 ethnic Sinhalese men armed with clubs and long knives attacked Tamil businesses…
-
- 0 replies
- 882 views
-
-
கனகம்புளியடியில் நேற்று மாலை 7.15 மணியளவில் சிறிலங்கா படையினர். பயணிகள் பேரூந்து மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளனர். நேற்று மாலை 7.15 மணியளவில் கனகம் புளியடி சந்தியில் வைத்து பயணிகள் பேரூந்து மீது சிறிலங்கா படையினர் துப்பாக்கி சூடு நடாத்தினர். இதில் குறைந்தத இரு பொது மக்கள் பலியாகியிருப்பார்கள் என்று அறியப்படுகின்றது. முழமையான சேத விபரங்களை எம்மால் இது வரையில் உறுதிப்படுத்த முடியவில்லை. இச்சம்பவம் நேற்று மாலை 5.00 மணியளவில் படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்தி ஒரு படையினர் கொல்லப்பட்ட மீசாலையில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் நடைபெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. தங்கள் மீது பேரூந்திலிருந்து துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்ட பின்…
-
- 0 replies
- 952 views
-
-
மட்டக்களப்பு வவுணதீவு விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அரணைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் விடுதலைப்புலிகள் உறுப்பினர் மூவர் படுமடைந்துள்ளனர். மட்டக்களப்பு வவுணதீவு விடுதலைப்புலிகளின் முன்னரங்க காவல் அரணைப் பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போராளிகள் மீது சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கனரக ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில் விடுதலைப்புலிகள் உறுப்பினர் மூவர் படுமடைந்துள்ளனர். அத்தோடு வீதியில் சென்று கொண்டிருந்த வயது முதிந்த பெண் ஒருவரும் படுகாயமடைந்தார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதி…
-
- 0 replies
- 925 views
-
-
வவுனியா மாவட்டம் வேப்பங்குளம் பகுதியில் கடந்த சனியிரவு 8.00 மணியளவில் இராணுவத்தினரின் உளவுத்துறையைச்சேர்ந்த நால்வரால் தமிழ் வர்த்தகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். வேப்பங்குளம் பகுதியில் மடுமாதா களஞ்சியம் என்ற வணிக நிலையத்தை நடத்திவரும் பற்குணராஜா இராஜபத்மன் (வயது 31) என்பவராவார். இவரின் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக 17.04.2006 அன்று நடைபெற்ற கிளைமோர் தாக்குதலின் பின் தன்னை இராணுவ உளவுத்துறையைச்சேர்ந்த நால்வர் தொடருவதாகவும், தனக்கு என்ன நடைபெறப்போகின்றது என்பது பற்றித்தெரியாதென்றும் தனது நெருங்கியவர்களுடன் தொலைபேசியில் சொல்லியுள்ளார். மரணமான அன்றும் இதுவிடயமாக தனது நண்பர்களுடன் கதைத்துள்ளார். இவரின் கொலை நடைபெற்ற இடத்திலிருந்து பதினைந்து மீற்றர்து}ரத்திலும், எழ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிஸ்டலுடன் வந்த ஈபிடிபி உறுப்பினர் பொதுமக்களால் மடக்கிப் பிடிப்பு. இருபாலை சந்தியில் நேற்று இடம் பெற்ற துப்பாகிகச் சூட்டிற்கு காரணமாக இருந்தவர் எனக் கருதப்படும் ஓருவர் துப்பாக்கியுடன் இருபாலைப் பகுதியில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளார். இன்று நன்பகல் 2.00 மணியளவில் குறிப்பிட்டவர் துப்பாக்கிச் சூடு இடம் பெற்ற இடத்திற்கு சையிக்கிளில் தனது காதலியிடம் செல்வதற்காக வந்துள்ளார். குறிப்பிட்டவர் வருவதை அவதானித்தவர்கள் நேற்றை தினம் இவர் போன்று ஒருவரே குறிப்பிட்ட ஆட்டோ சாரதியின் மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டு மோட்டார் சையிக்கிளில் தப்பிச் சென்றவர் என இனம் கண்டுள்ளார்கள். இதனைத் தொடர்ந்து சென்றவர்கள் தனது காதலியிடம் சென்றவரை பின் தொடாந்து சென்று ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
திருகோணமலையில் 6 சிங்கள விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிக்கேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: திருகோணமலை கோமரங்கடவெல களனியபுரத்தில் மாலை 5 மணியளவில் நெல் வயலில் இருந்த சிங்கள விவசாயிகளை கடத்திச் சென்று சுட்டுக் கொன்றுள்ளனர். இனங்களுக்கிடையேயான மோதலை உருவாக்க விடுதலைப் புலிகள் முயற்சிப்பதையே இது காட்டுகின்றது என்றார் அவர். http://www.eelampage.com/?cn=25724
-
- 9 replies
- 2.4k views
-
-
சிறிலங்கா இராணுவத்தாலும் துணை இராணுவக் குழுவினராலும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாகப் படுகொலை செய்யப்பட்டு வருவதால் இலங்கை ஒரு பயங்கரமான போரை நோக்கிச் செல்கின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் எச்சரித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணல்: வடக்கு-கிழக்கின் நிலைமை மிகவும் மோசமடைந்து சீர்குலைந்துள்ளது. கடந்த டிசம்பர் மற்றும் சனவரியைப் போல் நிழல் யுத்தம் தீவிரப்படுத்தப்பட்டு மிக மோசமான நிலை உருவாகி உள்ளது. ஜெனீவாப் பேச்சுக்களுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னரங்க காவல்நிலைகள் மீது துணை இராணுவக் குழுவினரது உதவியுடன் தாக்குதல்கள் தொடங்கிவைக்கப்பட்டன. சிறிலங்கா அரச படைகளால் கருணா குழுவினருக்கு பாதுகாப்பு வழங்க…
-
- 0 replies
- 804 views
-
-
வெலிகந்தையில் நேரடி மோதல் - இரு படையினர் படுகாயம் பொலநறுவை மாவட்டம் வெலிகந்தைப் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களிற்கும் சிறீலங்கா இராணுவத்தினருக்கும் இடையே இன்று காலை நேரடி மோதல் இடம்பெற்றுள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காலை 6.30 மணியளவில் படையினரின் சோதனை நிலையம் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதலை நடத்தினர். இதனையடுத்து படையினரும் பதில் தாக்குதல் நடத்தி யுள்ளனர். சுமார் இருபது நிமிடநேரம் இரு தரப்பினருக்கும் துப்பாக்கிகள் மூலம் நேரடி மோதலில் ஈடுபட்டனர். இதன்போது படைத்தரப்பில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இதனையடுத்து காலை 9.30 மணிவரை அப்பகுதியில் படையினர் பாரிய தேடுதலில் ஈடுபட்டதாக தெரியவருகிறது. sankathi.com
-
- 0 replies
- 1k views
-
-
ஜெனிவா பேச்சுக்களுக்கான நாட்களை மாற்ற அரசு தயார் கருணா குழு தொடர்பான வீடியோ பதிவின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் உள்ளது. அமைச்சர் ரம்புக்வெல்ல சரியான காரணங்கள் இருப்பின் ஜெனிவா பேச்சுக்களுக்கான நாட்களை மாற்றிக்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது என அமைச்சர் கெஹலிய ரம்புக் வெல்ல தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு முன்னரைப் போல் இராணுவ உலங்குவானூர்தி ஏன் தற்போது வழங்கப்படவில்லை என்று விளக்கம் அளிக்கும் போது அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து கொழும்பு ஊடகவியலாளர்களிடம் அமைச்சர் மேலும் கூறியதாவது: கிழக்கில் இருந்து கிளிநொச்சிக்கு விடுதலைப்புலிப் போராளிகளை அழைத்து வர பொதுப்பயண உலங்குவானூர்தியை ஒழுங்கு செய்வது தொடர்பாக தெரிவித்துள்ளோம். 32 போர…
-
- 0 replies
- 971 views
-
-
இரத்தத்தில் குளிக்கும் மண் இலங்கை மண் இன்னொரு தடவை இரத்தத்தில் குளித்தாக வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகின்றது. தாயகத்தின் முக்கியமான அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறியதைப் போல இந்தத் தசாப்தத்தில் இலங்கைத் தீவு இந்து சமுத்திரத்தில் ஒரு இரத்தக் குழம்பாக மிதந்தாக வேண்டுமா என்பது தெரியவில்லை. என்றாலும் இரத்தம் சிந்தும் போர் ஒன்று நிகழ்ந்து தான் ஆக வேண்டியுள்ளது. இந்தக் கொடுமையான போர் தமிழ் மக்களால் விரும்பப்படாத ஒன்று என்ற போதிலும் அதுதான் தென்னிலங்கையின் ஆளும் வர்க்கம் விரும்பி ஏற்கின்ற ஒன்றாக இருக்கின்றது என்பது உண்மையாகும். சமாதானத்துக்கான காலம் என்பது இப்போது இல்லை. ஒப்புக்கு அப்படி ஒரு காலம் இருப்பதாக சர்வதேசமும் வசதிக்காக சிறிலங்காவும் சொல்லிக் கொண்டிருக்கின…
-
- 0 replies
- 810 views
-
-
மக்கள் மீது தாக்குதல் தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களை ஒப்படைப்போம்: மன்னார் அரசியல்துறை எச்சரிக்கை தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா படையினரது தாக்குதல்கள் தொடர்ந்தால் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரது சடலங்களைப் போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் ஒப்படைக்க நேரிடும் என்று மன்னார் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் இனியவன் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மடுப்பகுதியில் சிறிலங்காப்படையினரும், ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரும் இணைந்து நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் இரண்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். தமிழர்தாயகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறிலங்காப் படையினரின் தமிழ் மக்கள் மீதான கொலைக் கெடுபிடிகள் வௌ;வேற…
-
- 0 replies
- 884 views
-
-
மன்னார் மாவட்டம் பரப்புக்கடந்தான் பகுதிக்குள் ஊடுருவிய ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவு இன்று பிற்பகல் 3.00 மணியளவில் மேற்கொண்ட கிளைமோர் தாக்குதலில் இரு அப்பாவி இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 3.00 மணிக்கு ஆண்டாங்குளம் பகுதியில் இருந்து மடு நோக்கி உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்த இந்த இளைஞர்கள் மீதே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த உந்துருளியில் சென்ற இரு இளைஞர்களும் உயிரிழந்தனர். பெரியபண்டி விரிச்சான்ää மடுää மன்னாரைச் சேர்ந்த 25 அகவையுடைய யோகநாதன் சர்வேந்திரன்ää 20 அகவையுடைய தம்பையா யேசுராஜா (கறா) ஆகிய இரு இளைஞர்களுமே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். சங்கதி
-
- 0 replies
- 1k views
-
-
இருபத்தொரு பேர் சாவு! அறுபது பேர்வரை காயம்! முப்பத்தொரு வர்த்தக நிலையங்கள் எரிப்பு! சேதமதிப்பீடு பன்னிரண்டரைக் கோடி! வாகனங்கள், உடைமைகள் சேதம்! நாற்பத்தொரு வீடுகள் எரிப்பு! தமிழர் தாயகத்தின் தலை நகர் திருமலையில் சிங்களக் காடையர் கும்பலும், சிங்களக் குண்டர்களும் மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக்கையானது தமிழினத்தினைத் திட்டமிட்டு அழிப்பதற்கான ஒரு முயற்சியாகவே கருதவேண்டியுள்ளது. திருமலை மாவட்ட தமிழ் மக்கள் பேரவைத்தலைவர் மாமனிதர் வன்னியசிங்கம் விக்னேஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தினால் சோபையிழந்து சோகத்துடன் காணப்பட்ட மக்களுக்குக் கடந்த 12ம் திகதி நடைபெற்ற சம்பவம் திட்டமிட்ட இனஅழிப்பின் ஒரு உச்ச நடவடிக்கையாக நோக்க வேண்டியுள்ளது. ஏனெனில் நடைபெற்ற சம்பவங்கள் ஒ…
-
- 0 replies
- 870 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதிகள் கிளிநொச்சிக்குச் செல்வதற்குரிய போக்குவரத்து வழிமுறைகளுக்கு சிறிலங்கா அரசு இணக்கம் தெரிவிக்காது மறுத்துரைத்திருப்பதன் காரணத்தால் திட்டமிட்டபடி நடைபெறவிருந்த ஜெனீவா பேச்சுக்கள் நடைபெறாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதனடிப்படையில் வடக்குக் கிழக்கில் இடம்பெற்றுவரும் கள நிலவரங்களையும் அவதானிக்கின்றவிடத்து நாலாம் கட்ட ஈழப்போர் நெருங்கி வருவதற்கான சாத்தியங்களே அதிகரித்துள்ளன. முதலில் ஜெனீவாப் பேச்சுக்கள் நடைபெறாத சூழலை உருவாக்குவதும் போரைத் திணிப்பதும் சிறிலங்கா அரசின் பிரதான நோக்கமாகும். ஏன் ஜெனீவாப் பேச்சுக்களுக்கான சூழலை அரச தரப்பு சீர் குலைக்கின்றது என்பது குறித்து முதலில் ஆராய வேண்டும். கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்…
-
- 0 replies
- 989 views
-
-
திருமலையில் சிங்களப் பேரினவாதிகள் இனக்கலவரம் ஒன்றைத் தோற்றுவிக்கும் முயற்சிகளை மேற்கொண்டிருக்கின்றனர். நண்பகல் திருகோணமலை சந்தைப்பகுதியில் கைக்குண்டு ஒன்று வீசப்பட்டிருக்கின்றது. இதில் அகப்பட்டு ஐந்து பொதுமக்கள் காயமடைந்திருக்கின்றனர். அதனைத் தொடர்ந்து தமிழர்களின் கடைகள் படையினரின் உதவியுடன் சிங்களக் காடையர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. தொடர்ந்து பிற்பகல் 3:45 மணிக்கு மேலும் ஒரு கைக்குண்டு நகர்ப்பகுதியில் வீசப்பட்டிருக்கின்றது. இதனையடுத்து சிறிலங்கா படையினர்ää பொலிசார் நிற்கும் நகர்ப்பகுதியில் தமிழர்களின் கடைகள் தீ வைக்கப்படுகின்றன@ தீ வைக்கப்பட்டவை தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கின்றன என்று அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ் மக்கள் பாதுகாப்பு…
-
- 63 replies
- 7k views
-
-
விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள் தமிழீழத் தாயக விடுதலைப்போராட்டத்தில் 16 பேர் ஒட்டுமொத்தமாக தம்மை இணைத்துக்கொண்டுள்ளனர். கிளிநொச்சி பண்பாட்டு மண்டபத்தில் நேற்று வியாழக்கிழமை (13.04.06) மாலை நடைபெற்ற சமகால அரசியல் கருத்தாடல் நிகழ்வில் 16 பேர் தம்மை விடுதலைப்போராடத்தில் இணைத்துக்கொண்டனர். இளைஞர்கள்இ வயது முதிர்ந்தவர்கள் என 16 பேர் தம்மை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக்கொண்டனர். விடுதலைப் போராட்டத்தில் இணைந்து கொண்ட அவர்கள்இ சிறிலங்கா அரசின் இழுத்தடிப்புகளுக்கு இனியும் விட்டுக்கொடுக்கமுடியாது- விரைவில் நாம் விடுதலையை வென்றெடுக்க வேண்டும் - சமாதானம் என்று சிறிலங்கா அரசு நடத்தும் ஏமாற்று நடவடிக்கையில் இருந்து நாம் தப்பி விடுதலை…
-
- 6 replies
- 1.5k views
-