ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143336 topics in this forum
-
தூத்துக்குடி -இலங்கை: கப்பல் போக்குவரத்து ஆரம்பம் ”தூத்துக்குடி-இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்துச் சேவை வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக” தூத்துக்குடி துறைமுக ஆணையகத் தலைவர் தா.கி.ராமச்சந்திரன் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்” தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கப்பல் நிறுவனத்தினர் கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்போம். தற்போது 2 நிறுவனங்களை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு கப்பலை இயக்க விருப்பம் தெரிவித்து உள்ளனர். இதனால் வரும் மார்ச் மாதத்தில் இலங்கைக்கு பயணிகள் கப்பல் இயக்க வாய்ப்பு உள்ளது. தற்போது மீண்டும் கொ…
-
- 0 replies
- 548 views
-
-
தேசிய பிரச்சினைக்கு தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இடைநிறுத்தம்! தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் அரச தலைமையுடன், தமிழர் தரப்பு நேற்று முதல் நான்கு நாட்களுக்கு தொடர்ந்து நடத்துவதற்கு உத்தேசித்திருந்த பேச்சுவார்தை இடைநிறுத்தப்பட்டது. எனினும் உடனடி விடயங்களை நிறைவேற்ற அரசாங்கத்திற்கு இன்னும் ஒரு வார கால அவகாசம் வழங்கியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சுதந்திர தினத்திற்கு முன்னர் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக 10 ஆம் திகதியில் இருந்து நான்கு நாட்களுக்கு பேச்சுவார்த்தை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், ஜனாதிபதியுடனான இந்த பேச்சுவார்த்தை …
-
- 0 replies
- 449 views
-
-
அரசியல் கைதி விடுதலை செய்யப்படாத போதும் விடுதலை என சிலர் தம்பட்டம் அடித்து அரசியல் செய்கிறார்கள் - அருட்தந்தை சத்திவேல்! அரசியல் கைதி விடுதலை செய்யப்படாத போதும் விடுதலை என சிலர் தம்பட்டம் அடித்து அரசியல் செய்வதனை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு கண்டிப்பதாக அதன் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (11.01.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, …
-
- 0 replies
- 301 views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கில் தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும் – மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரிவு கிழக்கிலே தமிழர்களின் இருப்பை நிச்சயமாக கேள்விக் குறியாக்கும் எனவே இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தனித்து நின்று போட்டியிட்டால் அதற்கு எதிராக மக்களை தூண்டி இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என செயற்பட வேண்டிவரும் என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கே.மோகான் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 2004 ஆம் ஆண்டு காலப்பகுதில் கூட இந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு அடித்தளமிடப்பட்டது கிழக்கில் இருந்து…
-
- 3 replies
- 345 views
-
-
கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைப்போம் – இரா.சாணக்கியன் தேர்தலின் பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைக்கப்படும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், ”அதாவது எதிர்வரும் காலங்களில் நடத்தப்பட இருக்கின்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் நாங்கள் தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ந்த வகையில் அதிகூடிய ஆசனங்கள் பெரும்பான்மைக் கட்சிகளுக்கோ, ஒட்டுக் குழுக்களுக்கோ போகாத வண்ணம் ஒரு தீர்க்கமான முடிவினை எடுத்த…
-
- 4 replies
- 848 views
-
-
(எம்.மனோசித்ரா) நாட்டின் சிறந்த எதிர்காலத்தை இலக்காகக் கொண்டு ஸ்தாபிக்கப்பட்டுள்ள 'சுதந்திர மக்கள் கூட்டணி' உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 90 சதவீத வெற்றியை பதிவு செய்யும். இந்தக் கூட்டணியால் நாட்டை நிச்சயம் கட்டியெழுப்ப முடியும். அதற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 'சுதந்திர மக்கள் கூட்டணியின்' அங்குரார்ப்பண நிகழ்வு இன்று புதன்கிழமை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் , நாட்டின் எதிர்காலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பில் கடும் நெருக்கடிகள் ஏற்…
-
- 1 reply
- 488 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இணைந்திருப்பது கட்சி ஆதரவாளர்கள் எல்லோருக்கும் நல்ல உற்சாகத்தை தந்திருக்கிறது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹகீம் தெரிவித்தார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இணைந்து கொண்ட நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) ஓட்டமாவடி – காவத்தமுனையில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹகீம் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், ஹிஸ்புல்லாஹ்வின் மீள் இணைவு ஸ்ர…
-
- 1 reply
- 413 views
-
-
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்க்ஷ மற்றும் கோட்டாபய ராஜபக்க்ஷ மீது கனேடிய அரசாங்கம் தடைகளை விதித்துள்ளமை தொடர்பில் விசாரிப்பதற்காக, இலங்கைக்கான கனேடிய பதில் உயர்ஸ்தானிகர் இன்று (11) காலை வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். 1983 மற்றும் 2009 க்கு இடையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையின் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்க்ஷ கோட்டாபய ராஜபக்க்ஷ மற்றும் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்க, லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி ஆகியோர் மீது கனடா அரசாங்கம் தடைகளை விதிக்கவுள்ளது. இவர்களுக்கு கனடாவில் சொத்துக்கள் இருந்தால், அந்தச் சொத்துக்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என்றும், அவர்கள் கனடாவுக்குள் நுழைய முடியாத…
-
- 1 reply
- 656 views
-
-
இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் மீண்டும் வீழ்ச்சியடையும் என உலக வங்கிதெரிவித்துள்ளது. உணவு மற்றும் எரிபொருளிற்கு செலுத்துவதற்கான அந்நிய செலாவணி இல்லாமல் போனதால் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்ததால் இறக்குமதிகள் வீழ்ச்சியடைந்தன இதன் காரணமாக இலங்கையின் உற்பத்தி 2022 இல் 9.2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது என மதிப்பிடப்படுவதாக உலகவங்கி தெரிவித்துள்ளது. 2023 ம் ஆண்டிற்கான உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் குறித்த அறிக்கையிலேயே உலக வங்கி இதனை தெரிவித்துள்ளது. இலங்கையின் அதிகாரிகள் ஸ்திரப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதேவேளை உணவு மருந்து எரிபொருள் தட்டுப்பாடுகளை மக்கள் எதிர்நோக்குவது குறித்து உலக வங்கி கவலை வெளியிட்டுள்ளது. நெருக்கடி மற்றும் அதன் விளைவுக…
-
- 0 replies
- 538 views
-
-
By PRIYATHARSHAN 11 JAN, 2023 | 03:47 PM அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் ஐலின் லொவபக்கர் ஜனாதிபதியை சந்தித்தார். அமெரிக்கா தேசிய பாதுகாப்புச் சபையின் தெற்காசியப் பிரிவின் சிரேஷ்ட பணிப்பாளர் ரியர் அட்மிரல் திருமதி ஐலின் லொவபக்கர் ( Eileen Laubacher) இன்று (11) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களைச் சந்தித்தார். நாட்டின் தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னெடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அரசாங்கத்தின் பாராட்டுகளை திருமதி ஐலின் லொவபக்கர் ஜனாதிபதியிடம் தெரி…
-
- 0 replies
- 602 views
-
-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் மாலை (ஜன. 10) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்டத்தில் கட்சியின் தற்போதைய நடவடிக்கைகள் சம்பந்தமாகவும், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது பற்றியும் எதிர்கால கட்சியின் செயற்றிட்டங்கள் பற்றியும் கலந்துரையாடும் நோக்கில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதன்போது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் உரையாற்றுகையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வடக்கு, கிழக்கில் தனித்து தனது மரச் …
-
- 0 replies
- 587 views
-
-
கூட்டணி குறித்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் பேச்சு – செல்வம்! தமிழரசுக் கட்சியை தவிர்ந்த ஏனைய கட்சிகள் கூட்டமைப்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கலந்துரையாடல்கள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக டெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், தமிழ்தேசிய மக்கள் கூட்டணி, ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து இந்த கூட்டமைப்பு அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்தேசிய மக்கள் முன்னணியையும் இந்த கூட்டமைப்பில் இணைத்துக்கொள்ள பேச்சு நடத்தப்படும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.…
-
- 7 replies
- 924 views
-
-
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் செயல்படக் கோரி மன்னாரில் கவனயீர்ப்பு ஊர்வலம் By DIGITAL DESK 5 10 JAN, 2023 | 03:33 PM வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் 'ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டியை வலியுறுத்துவதற்கு' அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளையும் ஓரணியில் திரண்டு செயல்படக் கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களை ஒன்றிணைத்து முன்னெடுத்து வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (ஜன 10) செவ்வாய்க்கிழமை மன்னாரில் 6 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் வடமா…
-
- 1 reply
- 381 views
- 1 follower
-
-
மணிவண்ணன் அணியுடன் இணையவுள்ளோம் - விக்னேஸ்வரன் அறிவிப்பு 09 JAN, 2023 | 07:33 PM உள்ளூராட்சி தேர்தலில் மணிவண்ணன் அணியுடன் ஒன்றாக இணைந்து போட்டியிட நாங்கள் தீர்மானித்து உள்ளோம் என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பதவி விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். யாழ் மாநகர முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் விக்னேஸ்வரன் சந்திப்புக்கு பின்னர் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. குறித்த ஊடக சந்திப்பில் யாழ் மாநகர முன்னாள் முதல்வர் மணிவண்ணன் மற்றும் விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/arti…
-
- 9 replies
- 704 views
- 2 followers
-
-
உள்ளூராட்சி மன்றத்தேர்தல் குறித்து வெளியான முக்கிய இரு அறிவிப்புக்கள் ! 10 JAN, 2023 | 10:08 PM மறு அறிவித்தல் வரும்வரை உள்ளூராட்சி தேர்தலுக்கு கட்டுப்பணம் பெறுவதை நிறுத்துமாறு அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் உள்நாட்டலுவலகள் அமைச்சின் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குத் திட்டமிடப்பட்டபடி கட்டுப்பணம் மற்றும் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/145458
-
- 0 replies
- 434 views
- 1 follower
-
-
ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்ள நடவடிக்கை! புகையிரத திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள வெற்றிடங்களுக்கு ஓய்வுபெற்ற புகையிரத ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் மீள இணைத்துக் கொள்வது தொடர்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். தேவையின் அடிப்படையில் அவர்களை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் சேர்ப்பதற்கு பொதுச்சேவை ஆணைக்குழுவின் அனுமதி இன்று கிடைக்குமென தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் 31ஆம் திகதி புகையிரத திணைக்களத்தைச் சேர்ந்த சுமார் 450 பேர் ஓய்வு பெற்றதையடுத்தே அத்தியாவசிய சேவைகளுக்காக ஒப்ப…
-
- 0 replies
- 219 views
-
-
ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் – பந்துல திறைசேரி தற்போது பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி, அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்காரணமாக ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2023/1319582
-
- 0 replies
- 448 views
-
-
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் அடங்கிய குழுவினர் மாலை 5 மணிக்கு ஜனாதிபதியை சந்தித்து மூன்று முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவித்தல், அரச…
-
- 0 replies
- 381 views
-
-
தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் விக்கினேஸ்வரனுக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு By DIGITAL DESK 5 10 JAN, 2023 | 10:58 AM தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரனுக்கும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் திங்கட்கிழமை (9) நடைபெற்றது. https://www.virakesari.lk/article/145381
-
- 0 replies
- 327 views
-
-
அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13ஆவது திருத்தம் சாத்தியமில்லை – டக்ளஸ் அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட அமுல்படுத்துவது சாத்தியமில்லை என்பதே கடந்த 30 வருடங்களுக்கும் மேலான மாகாணசபை முறைமையின் அனுபவமாக இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், மூன்று கட்டங்களாக 13ஆவது திருத்தச் சட்டத்தினை பூரணமாக அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது நடைமுறைச் சாத்தியமானதாக இருக்கும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றும் நோக்கில் ஜனாதிப…
-
- 0 replies
- 523 views
-
-
அரசாங்கத்திற்கு 7 நாட்கள் காலக்கெடு – தமிழ் தேசியக் கட்சிகள் அதிரடி முடிவு! அரசியலமைப்பின் ஊடாகவும், சட்டங்களின் ஏற்பாடுகளாகவும் வழங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படாதுள்ள அதிகாரப் பரவலாக்க விடயங்கள் அனைத்தையும் 7 நாட்களுக்குள் உடனடியாக நடைமுறைப்படுத்தவேண்டும். அவ்வாறு செய்யத் தவறின் அரசுடனான பேச்சிலிருந்து வெளியேறுவோம் என தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்றைய(செவ்வாய்கிழமை) சர்வகட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கவுள்ளன. அரசுடனான இன்றைய சர்வகட்சிப் பேச்சுக்களில் தமிழ்த் தேசியக் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாடுகளை எடுப்பது என்பது தொடர்பில் நேற்று மாலை, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் கூடிப் பேச்சு நடத்தின. இந்தச் சந்திப்பில் இலங்…
-
- 0 replies
- 156 views
-
-
மான் சின்னத்தில் களம் இறங்கும் மணி அணி! தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்கினேஸ்வரன் மற்றும் யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோருக்கிடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று(திங்கட்கிழமை) பிற்பகல் யாழ்ப்பாணம் கோவில் வீதியில் உள்ள சி.வி.விக்கினேஸ்வரனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1319465
-
- 4 replies
- 435 views
- 1 follower
-
-
பிரேசிலில் இடம்பெறும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை கண்டித்தார் ஜனாதிபதி ரணில் ! பிரேசிலில் இடம்பெறும் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாடுகளை கண்டிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரேசிலில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்து தாம் மிகவும் கவலையடைவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும் அரசியலமைப்புக்கு முரணான ஜனநாயகக் கட்டமைப்புகளை கவிழ்க்கும் முயற்சியை இலங்கையும் அனுபவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய விரோதப் போக்குக்கு மத்தியில் நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் பிரேசில் ஜனாதிபதி, அரசாங்கம் மற்றும் மக்களுடன் இலங்கை ஒன்றிணைந்து நிற்பதாக தெரிவித்தார். உலகளவில் ஜனநாயகம் மற்றும் அதன் நிறுவனங்கள் எ…
-
- 1 reply
- 256 views
-
-
யாழ்.பொற்பதியில் புலிகளின் ஆயுதங்களை தேடி அகழ்வு. யாழ்ப்பாணம் கொக்குவில் – பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் யாழ் நீதவான் நீதிமன்ற பதிவாளர் சுந்தரமூர்த்தி பிருந்தாவின் தலைமையில் கோப்பாய் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஆரிய பந்து வெதகெர, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் யருள், ஆகியோரின் மேற்பார்வையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின. இதன்போது பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் ஆகியோர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அம…
-
- 6 replies
- 502 views
-
-
குருநாகல் - வடகட வீதியில், பொத்துஹெர என்ற இடத்தில் ஜனக சேனாதிபதி என்ற நபரால் போலியான போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சசையை ஏற்படுத்தியிருந்தது. போலி தலதா மாளிகை கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கியள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், போலி தலதா மாளிகையொன்று உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுவதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கையை விடுத்து சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை இவ்வாறானதொரு பின்னணியில், இது தொடர்பாக விசாரணை நடத்துவத…
-
- 6 replies
- 593 views
-