ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143491 topics in this forum
-
நாளை காலை மூதூரை விட்டு 30 ஆயிரம் பொது மக்களும் வெளியேறப்போவதாக முஸ்லீம் காங்கரஸ் அரசுக்கு எச்சரித்துள்ளது. மூதூரில் இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதலினாலேயே பொது மக்கள் பலர் பலியாகி பலர் படுகாயமடைந்துள்ளதாக முஸ்லீம் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக மூதூர் உலமாக்கள் சபைப் பிரதிநிதிகளும், பொது மக்களும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசுக்கு முறைப்பாடு தெரிவித்துள்ளனர். கல்லாறு இராணுவ முகாமிலிருந்து மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலினாலேயே முஸ்லீம் பொது மக்கள் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளதையடுத்து இன்று இரவு அவசரமாக கூடிய ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மத்திய குழு, இது குறித்து ஆராய்ந்துள்ளது.இதனையடுத்து எடுக்கப்பட்ட முடிவில்,ஸ்ரீ லங்கா இராணுவத்தி…
-
- 2 replies
- 1.1k views
-
-
நாளை கொழும்பு வரும் ஹான்சன் பவர், தேசியத் தலைவரையும் சந்திக்க ஆவல்! உ [வெள்ளிக்கிழமை, 4 ஓகஸ்ட் 2006, 00:01 ஈழம்] [காவலூர் கவிதன்] நாளை வெள்ளிக்கிழமை சிறீலங்காவுக்கு வருகைதரும் நோர்வே சிறப்புத் தூதுவர் ஹான்சன் பவர், தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனைச் சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறீலங்கா அரசதரப்பில் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. நேரடியாக தலைவர் பிரபாகரனைச் சந்தித்து, இரு பிரதான விடயங்கள் குறித்து ஆராயப்படவுள்ளதாக தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவிலாறு அணைக்கட்டைத் திறப்பது மற்றும் தற்போதைய தாக்குதல்களை நிறுத்துவது என்ற இரு முக்கிய பிரச்சனைகள் பற்றி நேரடியாக தலைவருடன் பேசுவதற்கு நோர்வே சிறப்…
-
- 1 reply
- 953 views
-
-
ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற அடிப்படைவாத கட்சிகளின் நடவடிக்கையினால் இக்கட்டானநிலை ஏற்பட்டுள்ளது மாவிலாறு பிரச்சினையை பேசித்தீர்த்திருக்கலாம் என்கிறார் பிரதியமைச்சர் டிலான் பெரேரா வீரகேசரி நாளேடு மாவிலாறு அணைக்கட்டு விவகாரத்தை புலிகளுடன் பேசித் தீர்த்திருக்கலாம். ஆனால் ஜே.வி.பி, ஜாதிக ஹெல உறுமய போன்ற அடிப்படைவாத கட்சிகளின் சுய அரசியல் இலாபம் தேடும் நடவடிக்கையால் இன்று இக்கட்டான நிலைமை உருவாகியுள்ளது. சேருவில விகாரையின் தேரர் கூட இதனை உறுதிப்படுத்தியிருந்தார் என்று அரசியல் அமைப்பு விவகார ,தேசிய ஒருமைப்பாட்டு மற்றும் நீதிமன்ற மறுசீரமைப்பு பிரதி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். மாவிலாறு அணைக்கட்டு பிரச்சினை இன்று பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல உ…
-
- 2 replies
- 1.6k views
-
-
10,000 விசேட அதிரடிப்படையினர் மட்டக்களப்பில் இருந்து வாகரைக்கு நகர்கின்றனர். மட்டக்களப்பில் இருந்து பேருந்துகள் இராணுவ கவசவாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் சுமார் 10,000 விசேட அதிரடிப்படையினர் வாகரை நோக்கி நகர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒன்றிணைக்கப்பட்டு வாகரை பகுதியை நோக்கி நகர்த்தப்படுகின்றனர். மட்டக்களப்பு நகர்புறம் மற்றும் கல்முனைப் பகுதியில் இருந்தும் பெரும் தொகையான விசேட அதிரடிப்படையினரை வாகரை நோக்கி இலங்கை அரச படையினர் நகர்த்தி வருகின்றனர். இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான இராணுவ நகர்வு இன்று இரவு 10 மணிவரை தொடர்வதாக அறியமுடிகிறது. வாகரையில் இருந்து ஒரு தாக்குதலை விடுதலைப் புலிகள் மீது நடாத்…
-
- 6 replies
- 2k views
-
-
பிரச்சனைக்குப் புலிகளே காரணமென துணைத்தூதர் குற்றச்சாட்டு மாவிலாறு அணையை ஒட்டி தற்போது விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்தினருக்குமிடையே நடைபெற்று வரும் மோதலுக்கு விடுதலைப்புலிகளே காரணம் என்று தமிழக தலைநகர் சென்னையில் இருக்கும் இந்தியாவுக்கான இலங்கையின் துணைத்தூதர் பி.எம்.அம்சா குற்றம் சாட்டினார். தற்போதைய மோதல் குறித்து இலங்கை அரசின் நிலையை தமிழ்நாட்டில் எடுத்துறைக்கிரார் துணைத் தூதர் பி எம் அம்சா சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் மாவிலாறு அணையை விடுதலைப்புலிகள் திறக்க முன்வந்தால் உடனடியாக இந்த மோதல் முடிவுக்கு வரும் என்று கூறினார். இலங்கை காவல்துறையினர் 44 பேருக்கு கோயம்பத்தூரில் இருக்கும் இந்திய நடுவணரசின் மத்திய பயிற்சிக்கல்லூரியில் பயிற்ச…
-
- 4 replies
- 2k views
-
-
காயப்பட்ட பொதுமக்களை வெளியேற்ற, இருதரப்பும் ஒருமணிநேர யுத்தநிறுத்தம்! [வியாழக்கிழமை, 3 ஓகஸ்ட் 2006, 23:59 ஈழம்] [காவலூர் கவிதன்] மூதூர் பகுதிகளில் சிறீலங்கா படைகளின் மிலேச்சத்தனமான தாக்குதல்களில் காயமடைந்த அப்பாவிப் பொதுமக்களை அங்கிருந்து வெளியேற்றி, வைத்திய உதவிகளை வழங்குவதற்கு ஏதுவாக, அங்கு பணியாற்றும் மனித உரிமைகள் அமைப்பினரின் கோரிக்கையை ஏற்று, இருதரப்பும் ஒருமணிநேர யுத்தநிறுத்தமொன்றைக் கடைப்பிடித்தனர். மூதூர் அராபிய பாடசாலை மற்றும் தோப்பூர் அல்நூர் மகாவித்தியாலம் போன்றவற்றில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்கள் மீதும், கோவிலிலும் பொதுஇடங்களிலும் பாதுகாப்புக்காகத் தங்கியிருந்த மக்கள் மீதான தாக்குதல்களிலும் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களை ஏற்றிச் செல்லும் முதல…
-
- 0 replies
- 786 views
-
-
இரு தரப்பினரும் தமது இராணுவ நடடிக்கைகளை உடன் நிறுத்த வேண்டும் - எரிக் சொல்ஹெய்ம் திருமலைத் தாக்குதலை அடுத்து நோர்வேயில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இரு தப்பினரும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு இரு தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த யுத்தமானது போர் நிறுத்தம் ஏற்றபட்ட பின்னர் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய மோசமான சம்பவம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இருதரப்பினரும் யுத்தத்தை நிறுத்திவிட்டு யுத்தம் ஏற்படுவற்கான காரணங்களை பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து பேசித் தீர்க்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டபோது எந்ததெந்த நிலைகளில் இரு தரப்பினரும் இரு…
-
- 13 replies
- 2.5k views
-
-
சபாஸ் சரியான போட்டி - சிங்களத்தின் குடும்பிச் சண்டை If Ranil was in power they will defeat the Tigers with international support – Johnstan Fernando [03rd Kurunegala District Parliamentarian Johnstan Fernando of the United National Party said if Mr Ranil Wickramasinghe was in power a question on Mawilaru canal would not have arisen. He said this at a media briefing held at the office of the Opposition Leader this morning (03). He said the Government should either wage war or bring peace. Mr Fernando said if they were in power they would either open the canal talking with the Tigers or provide relief for the people while getting international assistanc…
-
- 0 replies
- 1.2k views
-
-
புல்மோட்டைக் கடற்பரப்பில் உக்கிர மோதல்: கடற்படையின் கலன்கள் விடுதலைப் புலிகளால் முற்றுகை. திருமலை புல்மோட்டைக் கடற்பரபில் விடுதலைப் புலிகளின் கடற்படையினருக்கும் சிறீலங்கா கடற்படையினருக்கும் இடையில் உக்கிர மோதல் இடம்பெறுகின்றது. இன்று மாலை 6.30 மணிக்கு இரு தரப்பினருக்கும் இடையில் கடும் மோதல் நடைபெறுவதாக திருமலைச் செய்திகள் தெரிவிக்கின்றன. புல்மோட்டைக் கடற்பரப்பில் நகர்ந்து கொண்டிருக்கும் சிறீலங்கா கடற்படையினரின் கடற்கப்பலை சுற்றிவளைத்த கடற்புலிகள் கப்பலை சுற்றி வளைத்து தாக்குதலை நடத்துகின்றனர். கடற்படையினரின் கப்பலை மீட்கும் முயற்சியில் 6 சிறீலங்கா டோரா அதிவேக பீரங்கிக் கடற்கலன்கள் தாக்குதலைத் தொடுத்து வண்ணம் உள்ளன. எனினும் விடுதல…
-
- 23 replies
- 4.9k views
-
-
வடமராட்சியில் தேவாலயம் மீது விமானக் குண்டுவீச்சு: 2 பொதுமக்கள் காயம் [வியாழக்கிழமை, 3 ஓகஸ்ட் 2006, 15:44 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் நடந்தது. வன்னி வான்பரப்பில் நுழைந்த சிறிலங்கா விமானப்படையின் கிபிர் ரக விமானங்கள் இரண்டு முல்லைத்தீவுப் பகுதியை வட்டமிட்டு தாழப் பறந்து சென்றன. இதனை அடுத்து அதே கிபிர் விமானங்கள் வடமராட்சி கிழக்கு வான்பரப்பிற்குள் நுழைந்து கட்டைக்காட்டுப் பகுதியில் பெருநாள் ந…
-
- 0 replies
- 841 views
-
-
சிறிலங்காப் படைகளின் எறிகணை வீச்சுக்கு மேலும் 12 முஸ்லிம்கள் பலி [வியாழக்கிழமை, 3 ஓகஸ்ட் 2006, 19:50 ஈழம்] [தெ.சந்திரநாதன்] சிறிலங்கா அரச படைகள் தொடர்ச்சியாக மூதூர் பிரதேசத்தின் மீது மேற்கொண்டு வரும் எறிகணைத் தாக்குதல்களுக்கு இலக்காகி மேலும் 12 முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். தோப்பூர் அல் நுரையா முஸ்லிம் பாடசாலையை நோக்கி மேற்கொள்ளப்பட்ட ஆட்டிலெறித் தாக்குதலிலேயே அப்பாடசாலையில் தஞ்சமடைந்திருந்த 12 முஸ்லிம் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்காப் படைகளின் இன்றைய தாக்குதல்களில் மொத்தமாக 22 முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை, மூதூர் காவல் நிலையத்துக்குள் அகப…
-
- 0 replies
- 857 views
-
-
(3 ஆம் இணைப்பு) மூதூர் இறங்குதுறையை கைப்பற்றும் முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிப்பு [வியாழக்கிழமை, 3 ஓகஸ்ட் 2006, 17:21 ஈழம்] [திருமலை நிருபர்] திருகோணமலை மூதூர் இறங்குதுறையை கைப்பற்றுவதற்கு சிறிலங்காப் படையினர் இன்று வியாழக்கிழமை மேற்கொண்ட முயற்சி விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் மூதூர் இறங்குதுறை தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. பல படகுகளில் படையினர் மூதூர் இறங்குதுறையில் தரையிறங்கி அதனைக் கைப்பற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். அந்தப்படகுகள் விடுதலைப் புலிகளால் தாக்கியழிக்கப்பட்டு படையினருடனேயே மூழ்கடிக்கப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பலத்த தாக்குதல்கள் மூலம் படையி…
-
- 7 replies
- 2.1k views
-
-
சேருவில் பிரதேசம் நோக்கி விடுதலைப் புலிகள் இன்று தமது படைநகர்வை நடத்தியுள்ளனர். இன்று காலை ஆரம்பமான தாக்குதல் தற்பொழுதும் தொடர்கிறது. சேருவிலப் பகுதியில் அமைந்துள்ள பல இடங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். பிந்திக் கிடைத்த தகவலின் படி சேருவிலவையும் சேருநுவர பகுதியையும் இணைக்கும் பாலம் விடுதலைப் புலிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. விடுதலைப் புலிகளின் படையணிகள் சேருநுவரப் பகுதி நோக்கி முன்னேறுகின்றன. ஏனைய தகவல்கள் விரைவில்
-
- 8 replies
- 2k views
-
-
மூதூரில் விடுதலைப் புலிகளிடம் அனுமதி கேட்டு காயமடைந்தவர்களை மீட்கும் படையினர் ஜ வியாழக்கிழமைஇ 3 ஆகஸ்ட் 2006 ஸ ஜ ஜெயராசா ஸ மூதூர் மருத்துவமனைக்கு இராணுவம் கிபீர் தாக்குதலையும் ஆட்லறி எறிகணைத்தாக்குதலையும் மேற்கொண்டது. இந்த எறிகனைகள் ஊழியர்களின் அறைகளுக்குள் வந்து விழுந்தது ஸ்தலத்திலையே மூதூர் மருத்துவமனை ஊழியர்கள் 9 பேர் பலியாகினர். மூதூர் நகரத்திற்குள் சுமார் 2 ஆயிரம் விடுதலைப் புலிகள் நிலைகொண்டிருக்கிறார்கள். இவர்கள் இராணுவத்தினரை நோக்கி தாக்குதல்களை தொடர்ந்தவண்ணம் உள்ளனர். தரைவழி போக்குவரத்துகள் தடைப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 4 மணிக்கு உலங்கு வானூர்தி ஒன்று அங்குள்ள பாடசாலை மைதானத்திற்குள் இறங்கி காயமடைந்த இராணுவத்தினரை ஏற்றிச்சென்றது. அவர்கள் திருமலை கொ…
-
- 0 replies
- 1k views
-
-
மன்னாரில் புலிகள் பதில் எறிகணைத் தாக்குதல் படையினர் இருவர் படுகாயம். மன்னாரில் படையினரால் ஏவப்பட்ட ஆட்லறி எறிகைணத் தாக்குதல்கள் விடுதலைப் புலிகளின் ஆட்லறி மற்றும் மோட்டார் எறிகணைத் தாக்குதலை அடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணியளவில் உயிலங்குளம் மற்றும் தள்ளாடி இராணுவ முகாம்களிலிருந்து ஏவப்பட்ட எறிகணைகளுக்கு பதிலடியாகவே விடுதலைப் புலிகளின் மோட்டார் படையினர் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். மன்னார் முருங்கன் இராணுவ முகாமை இலக்கு வைத்து விடுதலைப் புலிகளால் எறிகணைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் 2 படையினர் படுகாயமடைந்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 808 views
-
-
வவுயாவில் தாக்குதல் இரு படையினர் பலி! வவுனியாவில் சிறீலங்காப் படையினர் மீது இனம் தெரியாத தாக்குலாளிகளால் நடத்தப்பட்ட தாக்குதல் ஒன்றில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று மதியம் 1 மணியளவில் வவுனியா வேப்பங்குளப் பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலேயே இவ்விரு படையினரும் கொல்லப்பட்டுள்ளதோடு மேலும் சிலர் காயங்களுக்கு உள்ளாகினர். இதனை அடுத்து வவுனியா நகரம் படையினரால் முழுமையான தேடுதல் வேட்டைக்கு உள்ளாகியது. அத்துடன் பொதுமக்கள் பலந்த சோதனைக்கு உள்ளாக்கிப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 811 views
-
-
அமைச்சர் ஒருவரின் அதிகாரியும் மூதூhரில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் அகப்பட்டுள்ளார். ஜ வியாழக்கிழமைஇ 3 ஆகஸ்ட் 2006 ஸ ஜ ஜெயராசா ஸ இலங்கையின் அமைச்சு ஒண்றின் மிக முக்கிய அதிகாரியான எம்.ஜ.எஸ்.எம்.அமீர்அலி விடுதலைப் புலிகளினால் மூதூர் நகரம் மீட்கப்பட்டபோது அருகில் உள்ள அரபிக் கல்லுரியில் தஞ்சமடைந்துள்ளார் என்று அறியமுடிகிறது. http://www.nitharsanam.com/?art=19835
-
- 0 replies
- 1k views
-
-
2 ஆம் இணைப்பு) திருமலை கடற்படைத் தளம் மீது எறிகணைத் தாக்குதல்- டோராப்படகு தாக்கியழிப்பு: 8 கடற்படையினர் பலி [செவ்வாய்க்கிழமை, 1 ஓகஸ்ட் 2006, 14:52 ஈழம்] [புதினம் நிருபர்] திருகோணமலை நகரில் உள்ள சிறிலங்கா கடற்படை தலைமையக தளம் மீது நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் படைத்தரப்புக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இத்தாக்குதல் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.25 மணிமுதல் நடத்தப்பட்டுள்ளது. சிறிலங்கா கடற்படையினரின் டோராப்படகு மீது விடுதலைப் புலிகளின் ஐந்து தாக்குதல் படகுகள் நடத்திய தாக்குதலில் டோராப் படகு முற்றாக அழிந்துள்ளது. இதில் எட்டு கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். கடற்படைத் தலைமையகத்துக்குள் 36 எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின…
-
- 44 replies
- 7.9k views
-
-
வடமராட்சி கிழக்கில் விமானக் குண்டுவீச்சு: 2 பொதுமக்கள் காயம் [வியாழக்கிழமை, 3 ஓகஸ்ட் 2006, 15:44 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] யாழ். வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது சிறிலங்கா விமானப்படையின் கிபிர் விமானங்கள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் இருவர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணயிளவில் நடந்தது. வன்னி வான்பரப்பில் நுழைந்த சிறிலங்கா விமானப்படையின் கிபிர் ரக விமானங்கள் இரண்டு முல்லைத்தீவுப் பகுதியை வட்டமிட்டு தாழப் பறந்து சென்றன. இதனை அடுத்து அதே கிபிர் விமானங்கள் வடமராட்சி கிழக்கு வான்பரப்பிற்குள் நுழைந்து கட்டைக்காட்டுப் பகுதியில் பெருநாள் நிகழ்விற்காக கூ…
-
- 0 replies
- 821 views
-
-
மூக்குக் கண்ணாடி கொடுப்பதில் தகராறு; பிரதமரின் மகன் தாக்கி ஒருவர் காயம்! புளத்சிங்கள தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் வைபவமொன்றில் கலந்துகொண்ட பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவின் மகன் விதுர விக்கிரமநாயக்க, நிகழ்ச்சி அமைப்பாளரொருவரைத் தாக் கிக் காயப்படுத்தினார் என்று தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தம்மால் சிபார்சு செய்யப்பட்ட சிலருக்கு இலவச மூக்குக் கண்ணாடி வழங்கப்ப டாமையால் கோபமடைந்தே விதுர விக் கிரமநாயக்கா அந்த நிகழ்ச்சியின் அமைப் பாளர்களுள் ஒருவரை தாக்கினார் என்று தெரிய வருகின்றது. சம்பந்தப்பட்ட அமைப்பாளர் தமக் கேற்பட்ட காயங்களுக்கு வைத்திய சிகிச்சை பெற்றுக்கொண்ட போதிலும், விதுர…
-
- 5 replies
- 3.2k views
-
-
போர் நிறுத்தம் இனி சாத்தியமில்லை நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் நாளை இலங்கை வரவிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து விட்டது. போன்றதொரு நிலையில் இருதரப்புக்கு மிடையில் உக்கிர மோதல் வெடித்திருக்கும் நிலையில் நோர்வே சிறப்புத் தூதுவரின் வரவுகள் எந்தளவு திருப்பத்தை கொண்டு வரப் போகின்றது என்பது கேள்விக்குறி. ஏன் எனில் போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட காலத்திலிருந்து அது மெல்ல மெல்ல சாகடிப்பதற்கான முயற்சிகளை சிங்கள அரசும் பேரினவாத சக்திகளும் மேற்கொண்டன.அதே வேளை சமாதான அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வே மீதும் சிறிலங்கா அரச தரப்பிலிருந்தும் இனவாத சக்திகளிடமிருந்தும் வெறுப்புணர்வுடனான கருத்துக்களே வெளி வந்தன. நா…
-
- 0 replies
- 1.3k views
-
-
சரத் பொன்சேகாவின் அராஜகத்தனம் கொழும்பு இராணுவத் தலைமையகத்துக்குள் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த சரத் பொன்சேகா மீண்டும் இராணுவ அதிகாரியாகப் பொறுப்பெடுத்திருக்கிறார். மிக உயிராபத்தான கட்டத்தில் இருந்து தப்பி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சரத் பொன்சேகா மேலதிக சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்று அங்கு சிகிச்சை பெற்ற பின்னர் நாடு திரும்பினார். அடுத்த கட்டமாக அவர் கடமையைப் பொறுப்பெடுத்துள்ளார். இராணுவத் தளபதியாக மீளவும் பொறுப்பெடுத்த நிலையில் தமிழர் தாயகம் மீதான விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. சரத் பொன்சேகா தற்கொலைத் தாக்குதலில் படுகாயமடைந்த போது சிங்களப் படைகளிடையே ஏற்பட்ட உளவியல் ரீதியான பாதிப்புக்க…
-
- 0 replies
- 1.6k views
-
-
மூதூர் நிலவரம் தொடர்பாக மூதூரில் படிக்கும் அப்துல் நவுவ் தரும் தகவல். தமிழீழ விடுதலைப் புலிகள் மூதுர் நகரத்திற்கு வந்துவிட்டார்கள். இராணுவம் முகாமுக்குள்ளே இருக்கின்றது. வெளியிலை வருகிறார்கள் இல்லை. மக்கள் அகதிமுகாமல் இருக்கிறார்கள். பள்ளிவாசல் அரபிக் கல்லுரி அவற்றியல் தங்கியுள்ளனர். எனது கல்லூரிக்கு முன்னாலும் ஒரு போராளியின் வீரச்சாவடைந்த உடல் இருக்கின்றது இராணுவம் விலகி தமது முகாங்களுக்கு போய்விட்டார்கள். நான் இருக்கும் இடத்தில் இருந்து இராணுவ முகாம் 1கிலோ மீட்டருக்குள் இருக்கின்றது. கிராமத்திற்குள் ஒவ்வொரு மூலையிலும் முகாம் இருக்கிறது. விடுதலைப் புலிகள் இராணுவத்தினரையும் பொலிசாரையும் சரண் அடையுமாறு கொடுத்த காலக்கெடு இன்று இரவுடன் முடிவடைகிறது. தற்போது பாரிய…
-
- 0 replies
- 1.4k views
-
-
மாவிலாறு அணையைக் கைப்பற்ற 10 நிமிடம் நடையே உள்ளது - இராணுவப் பேச்சாளர் சேருநுவர மாவிலாறு அணையை திறப்பதற்கான படை நடவடிக்கைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். அணையை 10 நிமிடங்களில் செல்ல கூடிய தொலைவிலேயே உள்ளதாக அவர் குறிப்பிட்டார். எனினும் பிரதேசத்தில் புதைக்கப்பட்டுள்ள வெடிப்பொருட்களினால் இந்த தூரத்தை கடந்து செல்ல முடியாதுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். நேற்று அதிகாலை அடையாளம் காணப்பட்ட இடங்களின் மீது வான் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அணையை மீடப்பது சுலபமான போதிலும் அதனை பாதுகாக்க படையினர் கடுமையான சிரத்தையை மேற்கொள்ள வேண்டும் எனவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்தார். கொழும்பில…
-
- 7 replies
- 2.5k views
-
-
மாவிலாறு அணைக்கட்டைத்திறந்து அதனை மூடமாட்டோம் என புலிகள் உறுதியளித்தால் தாக்குதல்கள் நிறுத்தப்படும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல வீரகேசரி நாளேடு அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையில் 2002 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன் படிக்கையை கூட்டமைப்பு அரசாங்கம் தொடர்ந்தும் கடைப்பிடித்து வருகின்றது. விடுதலைப்புலிகள் மாவிலாறு அணைக்கட்டை திறந்து அதனை ஒருபோதும் மூட மாட்÷டாம் என்று உறுதியளித்தால் படையினரால் மேற்கொள்ளப்படுகின்ற சகல விதமான தாக்குதல் நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்படும். என்று பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார் http://www.virakesari.lk/vira/html/pol_vie...ew.asp?key=100…
-
- 17 replies
- 5.9k views
-