ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143185 topics in this forum
-
தாக்குதல் தொடர்வது குறித்து புலிகளின் தலைமை கடும் அதிருப்தி புலித்தேவன் தெரிவிப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் மீது தொடரும் தாக்குதல்கள் குறித்து விடுதலைப் புலிகளின் தலைமை கடும் அதிருப்தியடைந்திருப்பதாக விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் தெரிவித்துள்ளார். நோர்வேயின் விஷேட தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனைச் சந்தித்து உரையாடிய மறுதினமே மட்டக்களப்பில் விடுதலைப் புலிகளின் போராளி ஒருவர் கொல்லப்பட்டார். அவரது அஞ்சலி நிகழ்விற்காக அழைத்துச் செல்லப்பட்ட அவரது மனைவியும் பிள்ளைகளும் பயணித்த வாகனத்தை குறிவைத்து கிளைமோர் தாக்குதலும் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்களாலேயே விடுதலைப் புலிகளின் தலைமை கடும் அதிருப்தியடைந…
-
- 0 replies
- 812 views
-
-
இந்தியாவின் 57 ஆவது குடியரசு தினத்தையொட்டி கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் உயர்ஸ்தானிகர் நிருபமா ராவ் நடத்திய ஒன்று கூடல் வைபவத்தின் போது நிருபமா ராவ் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சி பிரதித் தலைவர் கருஜயசூரிய, சர்வதேச வை.எம்.எம்.ஏ.தலைவர் அஷ்ரப் ஹுசைன் ஆகியோருடன் உரையாடுவதையும், இ.தொ.கா. தலைவர் ஆறுமுகம் தொண்டமான், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், இந்து பத்திரிகையின் இலங்கை க்கான நிருபர் வி.எஸ்.சம்பந்தன் ஆகியோர் உரையாடு வதையும் காண்கிறீர்கள்.
-
- 0 replies
- 1.1k views
-
-
பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசத்தில் ஊடரங்குச் சட்டம் [வெள்ளிக்கிழமை, 27 சனவரி 2006 இரு இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள மோதலையடுத்து பேருவளை மற்றும் அழுத்கமை பிரதேசங்களில் காவல்துறையின் ஊடரங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அழுத்கமை தர்காநகரிலுள்ள முஸ்லிம் இனத்தவருக்குச் சொந்தமான கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையத்துக்குச் சென்ற சிங்கள இளைஞர்கள் சிலரை நேற்று முன்நாள் அந்த விற்பனை நிலையத்தைச் சேர்ந்தவர்கள் தாக்கியுள்ளனர். தாங்கள் தொலைபேசியை வாங்கச் சென்றதாக சிங்கள இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் திருட வந்தவர்கள் என நினைத்துத் தாக்கியதாக விற்பனை நிலையத்திலுள்ளவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தையடுத்து இரு இனத்தவர்களுக்கும் இடையில் மோ…
-
- 3 replies
- 1.4k views
-
-
மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் வன்னியை வந்தடைந்தார் இன்று காலை 09.30 மணியளவில் பாலசிங்கம் தம்பதியினர் கிளிநொச்சிசியினை வந்தடைந்தனர் ஸ்ரீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான விமானப்படை உலங்கவானூர்தி மூலம் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் சந்திரன் விளையாட்டு மைதானத்தை வந்தடைந்த மதியுரைஞரினை அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்ச்செல்வன வரவேற்றார். அதன்போது கேணல்சூசை, முக்கியஉறுப்பினர் பாலகுமாரன் உள்ளிட்ட விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் பலரும் வரவேற்றனர்.இன்று மதியுரைஞர் அவர்கள் தேசியத்தலைவர் அவர்களைச் சந்தித்து பேச்சு வார்த்தைகள் தொடர்பாக கலந்துரையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது தகவல் மூலம்- சங்கதி
-
- 7 replies
- 1.9k views
-
-
சமீபத்தில் இராணுவத்தால் கொல்லப்பட்ட மற்றும் காணாமல் போனோர் விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளது http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_1.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_2.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...mal_ponor_3.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_1.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_2.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_3.pdf http://www.yarl.com/arikkai/uploads/270106...da_makkal_4.pdf
-
- 2 replies
- 1.4k views
-
-
ஜே.வி.பி. தலைவர் சோமவன்ஸ அமரசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. ரவிராஜ் ஆகியோர் வியாழக்கிழமை இரவு இந்திய இல்லத்தில் நடைபெற்ற குடியரசு வைபவத்தில் கைகொடுத்து கருத்து பரிமாறுவதை படத்தில் பார்க்க http://www.virakesari.lk/VIRA/default.php
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான கெடுபிடிகள் பொலிஸாரும் படையினரும் மேற்கொண்டு வருகின்ற பாதுகாப்பு நடவடிக்கைகளின்போது தமிழ் ஊடகவியலாளர்கள் அநாவசியமாக எதிர்நோக்க வேண்டியிருக்கின்ற நெருக்கடிகள் குறித்து தொடர்ச்சியாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டு வந்திருக்கின்றபோதிலும், அரசாங்கம் அது விடயத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காண்பிக்காமல் அலட்சிய மனோபாவத்தையே கடைப்பிடித்து வந்திருக்கின்றது. அண்மைக்காலமாக தலைநகர் கொழும்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் படையினரின் தேடுதல் வேட்டைகளின் போது தமிழ் ஊடகவியலாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட சம்பவங்களையடுத்து அவர்களின் பிரச்சினை மீண்டும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. ஊடகத்துறை, தகவல் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா தம…
-
- 11 replies
- 2.1k views
-
-
அம்பலப்படுத்தப்பட வேண்டிய அரச பயங்கரவாதம் செந்திரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த அமைதிவழி எதிர்ப்பினால் சிறீலங்காவின் நாடாளுமன்றம் மூன்று நாள்கள் முற்றாக முடங்கிப் போனது. தமிழ் மக்களின் தாயக மண்ணில் அப்பாவித் தமிழ் மக்களின் கொலைகள் தமிழ்; பெண்களின் மேல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள பாலியல் வன்முறைகள் தமிழ் இளைஞர்கள் காரணம் எதுவுமின்றி கைது செய்யப்படுதல்இ காணாமற் போதல்இ படையினரின் அடாவடித்தனங்கள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் யோசெப் பரராஜசிங்கத்தின் படுகொலைஇ திருகோணமலையில் ஐந்து அப்பாவித்தமிழ் மாணவர்களின் படுகொலைகளுக்கு நீதிவேண்டியும் கண்டன எதிர்ப்புத் தெரிவித்துமே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்…
-
- 0 replies
- 901 views
-
-
வெலிக்கந்தையில் சிறிலங்கா இராணுவத் தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவு: விடுதலைப் புலிகள் கடும் கண்டனம் [வியாழக்கிழமை, 26 சனவரி 2006, 19:01 ஈழம்] [மட்டக்களப்பு நிருபர்] மட்டக்களப்பு - பொலன்னறுவ வடமுனை எல்லையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி காவல் நிலை மீது சிறிலங்கா இராணுவ உதவியுடன் துணை ஆயுதக் குழுவினரால் நடத்தப்பட்ட ஊடுருவித் தாக்குதலில் ஒரு போராளி வீரச்சாவைத் தழுவியுள்ளார். தமது முன்னணி காவலரண் பகுதியில் வழமை போல் காலை நேர கண்காணிப்பில் போராளிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மோட்டார்க் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் வீரச்சாவடைந்தவர் போராளி மேஜர் கபிலன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளும் பதில் தாக்குதலை நடத்தினர். இந்த…
-
- 0 replies
- 862 views
-
-
சிங்கள, ஆங்கில ஊடக ஆசிரியர்களுக்கு மகிந்த நேரடி மிரட்டல் சிங்கள, ஆங்கில ஊடகங்களில் செய்திகளை 'அடக்கிப் போடுங்கள்' என்று சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேரடி மிரட்டல் விடுத்துள்ளார். சிங்கள, ஆங்கில ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பின் போது சில ஊடக ஆசிரியர்களை வெளிப்படையாகக் குறிப்பிட்டு, "நீங்கள் எல்லாம் செய்திகளை அடக்கிப் போடுங்கள்" என்று எச்சரித்துள்ளார். மேலும் நோர்வேயில் தனக்கு பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் இல்லை என்றும் தாம் நோர்வேக்கு சென்று பேச்சுக்களை நடத்த வேண்டும் என்பதற்காகவே தற்போதைய தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன என்றும் இதை சிங்கள ஊடக ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் மகிந்த கூறியுள்ளார். விடுதலைப் புலிகளுடன் தாம் பேச்…
-
- 13 replies
- 2.7k views
-
-
விடுதலைப் புலிகளின் தலைவருடன் எரிக் சொல்ஹெய்ம் நாளை சந்திப்பு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கைக்கு வருகை தந்துள்ள நோர்வே அபிவிருத்தி அமைச்சரும் சிறப்புத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் நாளை புதன்கிழமை சந்தித்துப் பேச உள்ளார். கிளிநொச்சியில் இச்சந்திப்பு நடைபெற உள்ளது. இச்சந்திப்பில் சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிறட்ஸ்கர், விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம், விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஆகியோரும் பங்கேற்கின்றனர். சிறிலங்கா அரச தலைவராக மகிந்த பதவியேற்ற பின்பு சர்வதேச சமூகத்துடன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நடத்துகிற முதலாவது சந்திப்பு இதுவா…
-
- 14 replies
- 2.3k views
-
-
வவுனியாவில் இடம் பெற்ற துப்பாக்கிச் சுட்டில் ஆசிரியர் ஒருவர் சுட்டுக் கொலை. கமலநாதன் 35 வயது உடையவர் அத்துடன் 3 பிள்ளைகளின் தந்தையும் ஆவார். இவர் அவருடைய நண்பன் உடன் மோட்டார் ஊர்தியில் சென்று கொண்டிருந்த போதே இனம் தெரியா 3 நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது பற்றிய மேலதிக தகவல் கள உறவுகளுக்கு யாருக்காவது தெரிந்தால் போடுங்கள் நானும் அறிந்தால் போடுகின்றேன்
-
- 7 replies
- 1.7k views
-
-
நுகேகொட பழைய கொஸ்பாவ வீதியில் முதலாவது குண்டும் காசல் வீதியில் இரண்டாவது குண்டும் வெடித்துள்ளது. கொழும்பில் இன்றிரவு இரண்டு குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றது. நுகேகொட பழைய கொஸ்பாவ வீதியில் முதலாவது குண்டும் காசல் வீதியில் இரண்டாவது குண்டும் வெடித்துள்ளது. இரவு எட்டு மணியளவில் இடமம்பெற்ற இக்குண்டு வெடிப்புச் சம்பவத்தால் உயிரழப்புக்கள் ஏற்பட்டவில்லை என முதலில் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்த போதிலும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதுடன், போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் விரைவில்.. நன்றி நிதர்சனம்
-
- 16 replies
- 2.7k views
-
-
அல்-கெய்டாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் வேறுபாடு உண்டு: அமெரிக்காவின் நிக்கலஸ் பேர்ன்ஸ் [திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 21:37 ஈழம்] [ச.விமலராஜா] அமெரிக்க அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அமைப்புகளாக இருந்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அல்-கெய்டா இயக்கத்துக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு என்று இலங்கை வந்துள்ள அமெரிக்காவின் பிரதிநிதி நிக்கலஸ் பேர்ன்ஸ் தெரிவித்துள்ளார். சிறிலங்கா தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் நிக்கலஸ் பேர்னஸ் இன்று திங்கட்கிழமை கூறியதாவது: நாங்கள் இந்த நாட்டின் நண்பர்கள். இந்த நாட்டின் பிராந்திய ஒற்றுமையை ஆதரிக்கிறோம். கண்டனத்துக்குரிய ஒரு பயங்கரவாத அமைப்பினால் இந்த நாட்டினது மக்கள் மேலும் 15 அல்லது 20 ஆண்டுகளுக…
-
- 1 reply
- 1.2k views
-
-
தேச விரோத தமிழ் குழுக்களால் யாழில் அரச ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதே பாணியில் இங்கு களத்திலும் சிலர் அச்சுறுத்துவதை அவதானிக்கலாம்..! அரச ஊழியர்களுக்கு ஈ.பி.டி.பி. கொலை அச்சுறுத்தல் [திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 19:50 ஈழம்] [ம.சேரமான்] யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்கா அரச ஊழியர்களுக்கு இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி.குழுவினர் கொலை அச்சுறுத்தல் விடுத்து கடிதம் அனுப்பியுள்ளனர். சுதந்திரமும், தன்னாட்சியும் இறைமையும் உள்ள இலங்கை சனநாயகக் குடியரசின் அரசியல், நீதி, நிர்வாகத்தை பயங்கரவாத வன்முறைக் கலாசாரத்தில் சீரழிக்கும் தேசவிரோதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளோடு கடந்த காலங்களில் தாங்கள் நெருக்கமாக செயல்பட்டதை நான் அறிவேன். …
-
- 2 replies
- 1.4k views
-
-
மட்டக்களப்பில் சைக்கிள் குண்டுத் தாக்குதல்.நால்வர் பலி.40 பேர் காயம்..இப்ப சிங்கை வசந்தம் தொலைக்காட்சி செய்தி தகவல்... படை ட்ரக் மீது தக்குதல் நிகழ்த்தப்பட்டதாக தெரிவிப்பு
-
- 5 replies
- 1.6k views
-
-
மலையகத்தில் பாரிய சுற்றிவளைப்புத்தேடுதல்! - நூற்றிற்கும் அதிகமான இளைஞர்கள் கைது மலையகப்பகுதிகளில் குறிப்பாக ஹற்றன் மற்றும் நுவரெலியாவில் நேற்று ஸ்ரீலங்கா படையினரால் பாரிய அளவில் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு பலர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நுவரெலியா பகுதிகளில் நேற்று சனிக்கிழமையும், இன்று ஞாயிற்றுக்கிழமையும் சிறப்புத் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டு நூற்றுக்கும் அதிகமான இளைஞர்கள் விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அடையாள அட்டை வைத்திராதவர்கள் மற்றும், சந்தேகத்திற்குரியவர்களையே தாம் கைது செய்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கைத…
-
- 0 replies
- 1k views
-
-
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 15 பேராசிரியர்கள் ஆயுதக்குழுக்களின் அச்சுறுத்தலால் நாட்டை விட்டு வெளியேறினர் [திங்கட்கிழமை, 23 சனவரி 2006, 09:20 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] கருணா குழுவால் படுகொலை செய்யப்பட்ட கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் தம்பையாவின் மறைவை அடுத்து தொடர்ச்சியாக விடுக்கபட்ட கொலை அச்சுறுத்தல்களால் அச்சமடைந்த அந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுமார் 15 பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தும் தனது கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் பேராசியரியர் ஒருவருக்கு அடையாளம் தெரியாத குழு ஒன்று விடுத்து வரும் தொடர்ச்சியான கொலை அச்சுறுத்தலை அடுத்து அவரும் நாட்டை விட்டு வெளியேற தயாராகி வருகிறார் என தெரிவிக்கப்பட்ட…
-
- 0 replies
- 975 views
-
-
செல்ஹெய்ம் பிரபா சந்திப்பு பாலா வந்தால் மட்டுமே சாத்தியம் மதியுரைஞர் வன்னி சென்றுவர அரசு ஹெலி வசதி வழங்குமாம் நோர்வே அனுசரணைக் குழுவின் விசேட பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் எதிர்வரும் 25ஆம் திகதி விடுதலைப் புலி களின் மூத்த தலைவர்களைச் சந்திப்பதற்காக கிளிநொச்சிக்குச் செல்கின்றார். ஆனால், அங்கு அச்சமயம் விடுதலைப் புலிகளின் மதி யுரைஞர் அன்ரன் பாலசிங்கம் இருந்தால் மட்டுமே, அவர் சகிதம் எரிக் சொல்ஹெய்மை விடுதலைப் புலிகளின் தலை வர் வே.பிரபாகரன் சந்திப்பார் என விடயமறிந்த வட்டாரங் கள் தகவல் வெளியிட்டன. இதற்கிடையில் தற்போது லண்டனில் தங்கி இருக்கும் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம் வன்னி செல்வதற்காகக் கொழும்பு வருவாராயின், கொழும்பிலிருந்து கிளிநொச்சிக்கு அவர் சென்று வருவத…
-
- 10 replies
- 2.5k views
-
-
திருகோணமலை மாவட்டத்தின் அரச சார்பற்ற திணைக்கள மேலாளர்களுக்கும் தமிழ் பேசும் மக்களுக்கும் அன்பான வேண்டுகோள் என்ற தலைப்பில் திருகோணமலை மாவட்ட பொங்கியெழும் மக்கள் படையினால் ஒரு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. திருக்கோணமலை நகரில் சிறீலங்கா அரசாங்கத்தாலும் அரச படைகளாலும் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தமிழ் பேசும் மக்களின் அன்றாட வாழ்விற்கும் உயிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையை தமிழ் பேசும் மக்கள் ஒவ்வொருவரும் தமக்கு ஏற்பட்டுள்ள நிலை என்பதை கருத்தில் எடுத்து எமது ஒன்று பட்ட செயலின் மூலம் எமது சமூகத்தை பாதுகாப்பதோடு பேரினவாத அரசிற்கும் படைகளுக்கும் எதிரான எமது எதிர்ப்பினை அந்தந்த வேளையில் உடனடியாகத் தெரிவிக்க வேண்…
-
- 0 replies
- 1k views
-
-
திருகோணமலையும் ஆக்கிரமிப்பும்! தமிழ் மக்களின் வாழ்விடங்களில் இராணுவத்தை நிலை கொள்ளச் செய்தல், திருகோணமலை நகர்ப்பகுதியிலும் நகரை அண்டியிருக்கும் பகுதிகளிலும் மேலும் சிங்கள ஆக்கிரமிப்பை விஸ்தரித்தல். இவையே புத்தர் சிலையின் பின்னாலுள்ள கபட அரசியலாகும் சமீபத்தில் திருகோணமலை சென்றிருந்தபோது அங்கு சில விடயங்களை அவதானிக்கவும் நிலைமைகள் குறித்து சிலருடன் உரையாடவும் முடிந்தது. அவற்றை அடிப்படையாகக் கொண்டு உங்களுடன் சில விடயங்களை பகிர்ந்துகொள்ள விழைகின்றேன். சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலை நகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள மணிக்கூண்டுக் கோபுரத்தின் அருகில் திடீரென புத்தர் சிலையொன்று நிறுவப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை திருகோணமலையின் இயல்பு நிலை சீராக இல்லை. தமிழ் மக்கள் மத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
யுத்தகால அமைச்சரவையை உருவாக்குகிறார் மகிந்த? சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச யுத்தகாலத்துக்கான அமைச்சரவையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களாக கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள மகிந்தவின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரை சந்தித்து வருகின்றனர். மகிந்தவின் நண்பரான மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலிக் அலுவிகார மற்றும் அவரது மகன் ரஞ்சித் ஆகியோர் மகிந்தவை அண்மையில் சந்தித்தனர். தம்மைச் சந்திக்கும் ஐக்கிய தேசியக் கட்சி நண்பர்களிடம், விடுதலைப் புலிகள் யுத்தத்தைத் தொடங்கினால் யுத்த கால அமைச்சரவையை தாம் அமைக்க உள்ளதாகவும் அப்போது உங்களுக்குப் பணிகள் கொடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார். …
-
- 2 replies
- 1.2k views
-
-
நோர்வேயில் பேச்சில்லை ஜனாதிபதி திட்டவட்டம் புலிகளின் மிரட்டலுக்கு அடிபணிந்து எதையும் செய்யவே மாட்டாராம் ""விடுதலைப் புலிகளுடனான உத்தேச சமாதான பேச்சுகளின் முதலாவது சுற்றை விடுதலைப் புலிகள் கேட்டுக்கொண்டபடி நோர்வேயில் நடத்தமுடியாது. எக்காரணம் கொண்டும் ஒஸ்லோவில் பேச்சுக்களை நடத்த இணங்கமாட்டேன். அப்படி ஒஸ்லோ வில் நடத்த நாம் இணங்கினால் அது புலிகளின் தாக்குதல்களுக்கு அஞ்சி நாம் அடி பணிந்ததாகவே அமைந்துவிடும். புலிகளின் மிரட்டல்களுக்குப் பயந்து எந்த நடவடிக் கையையும் நான் எடுக்க மாட்டேன்.'' இவ்வாறு திட்டவட்டமாக உறுதியாக கூறி யிருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ஆங்கில, சிங்கள செய்திப் பத்திரிகைகளின் ஆசிரியர்களை நேற்றுக்காலை அழைத்து அவர்களுக்குக் காலைப் போசன உணவளி…
-
- 0 replies
- 960 views
-
-
மட்டு. அம்பிளாந்துறையில் தமிழ் தேசிய எழுச்சிப் பேரணி மட்டக்களப்பு மாவட்டம் அம்பிளாந்துறையில் எதிர்வரும் 20ம் திகதி தமிழ்த் தேசிய எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட வெகுஜன அமைப்புக்கள் இணைந்து இந்த எழுச்சிப் பேரணியை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளன. எதிர்வரும் 20ம் திகதி பிற்பகல் 3.00 மணிக்கு அம்பிளாந்துறை பொது விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த எழுச்சி நிகழ்வில் பல்லாயிரக் கணக்கான மக்கள் அணிதிரண்டு உணர்வு ரீதியாக தமது உரிமைக் குரலை உலகறியச் செய்ய வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தகவல் மூலம்- ஈழநாதம் - மட்டக்களப்பு பதிப்பு
-
- 11 replies
- 1.9k views
-
-
இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்க் கட்சிகள் ஆர்ப்பாட்டம்: சிறிலங்கா நாடாளுமன்றம் ஒத்திவைப்பு!! தமிழர் தாயகத்தில் தொடரும் சிறிலங்கா இராணுவப் படுகொலைகளைக் கண்டித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் இன்று செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. இதனால் இன்றைய சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. 2006ஆம் ஆண்டின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்குத் தொடங்கியது. வடக்கு கிழக்கில் தமிழ் மக்களைத் தொடர்ந்து சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்து வருவதைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, மேலக மக்கள் முன்னணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் இணைந்து கண்டனக் குரல் எழுப்பி…
-
- 11 replies
- 1.8k views
-