Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திருகோணமலையில் கிளைமோரத் தாககுதல் இன்று 1.15 மணியளவில்திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் கிளைமோரத் தாக்குல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் 12கடற்படை வீரர்கள் உயிரிழந்துள்ளனர். திருகோணமலை கபறன வீதியில ;தம்பலகாமத்திற்கு 9 மைல் தொலைவில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன. நன்றி தமிழ்நெற்

    • 6 replies
    • 1.7k views
  2. சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் 15 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வில் http://www.eezhanatham.com/Daily%20photos/...tony/index.html

    • 0 replies
    • 933 views
  3. தளபதிகள் தலைமைப்பீடத்தைச் சந்திக்கின்ற போதுதான் அடுத்த கட்டம் குறித்த தீர்மானத்தை எடுக்கமுடியும்: அரசியல்துறை பொறுப்பாளர் கிழக்குத் தளபதிகள் தலைமைப்பீடத்தைச் சந்திக்கின்ற போதுதான் அடுத்த கட்டம் குறித்த தீர்மானத்தை எடுக்கமுடியும் என்று அரசியல்துறை பொறுப்பாளர் தெரிவித்திருக்கின்றார். இன்று இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் பின்னர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு குறிப்பிட்டார். தளபதிகளின் போக்குவரத்து தொடர்பாகவோ, கள நிலவரம் தொடர்பாகவோ சாதகமான வெளிப்பாடுகள் எவையும் அரசினால் காட்டப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். சந்திப்பின் நிறைவில் தமிழீழ அரசில்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் ஊடகவியலாளர்களுக்கு வழங்கிய நேர்காணல்…

    • 0 replies
    • 830 views
  4. யாழில் கிளைமோர் தாக்குதல் - நான்கு படையினர் பலி - பாண்டியன் - Monday, 10 April 2006 16:51 யாழ். தென்மராட்சியின் மிருசுவில் பகுதியில் இன்று நடைபெற்ற கிளைமோர் கண்ணிவெ டித் தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தினர் நால்வர் கொல்லப்பட்டதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக படைத்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏ-9 வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ ஊர்தி ஒன்றை இலக்கு வைத்தே இந்த கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த ஊர்தியில் பயணித்த படையினரில் நால்வர் கொல்லப்பட்டும், இருவர் படுகாயமடைந்துள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சிறீலங்கா விமானப்படைக்குச் சொந்தமான இரு உலங்கு வானு}ர்திகளில் படுகாயமட…

    • 3 replies
    • 1.5k views
  5. இணைத் தலைமை நாடுகளின் து}துவர்கள் - விடுதலைப்புலிகள் கிளிநொச்சியில் சந்திப்பு! இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சந்திப்பு கிளிநொச்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. காலை 10:15 மணிக்கு சமாதான செயலகத்தில் ஆரம்பமாகியிருக்கும் சந்திப்பு தொடர்ந்து இடம்பெறுகின்றது. தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், காவல்துறைப் பாறுப்பாளர் திரு பா.நடேசன், சமாதான செயலகப் பணிப்பாளர் புலித்தேவன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருக்கின்றனர். இணைத்தலைமை நாடுகளின் சார்பில் நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் நெதர்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளின் து}துவர்கள் கலந்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

    • 0 replies
    • 894 views
  6. மாமனிதர் வ.விக்கினேஸ்வரனுக்கு கிளிநொச்சியில் இறுதி வணக்கம்! (கிளிநொச்சி) மாமனிதர் வ.விக்கினேஸ்வரனின் இறுதி வணக்க நகழ்வு கிளிநொச்சியில் துயரவெள்ளம் பெருக்கெடுக்க இடம் பெற்றிருக்கின்றது. கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வை அடுத்து அவரது புகழுடல் முல்லைத்தீவக்கு இறுதி வணக்கத்துக்காக எடுத்துச் செல்லப்படுகின்றது. கிளிநொச்சி தேசிய எழுச்சிச் செயலணியின் செயலாளர் திரு த.பிரபாகரன் தலைமையில் பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் அலையெனத் திரண்டிருந்தனர் பாண்ட் வாத்திய இசையுடன் அணிவகுப்பு மரியாதையுடன் பண்பாட்டு மண்டபத்துக்கு புகழுடல் எடுத்துவ…

    • 0 replies
    • 837 views
  7. நல்லூரில் ஆறு வீடுகளில் கொள்ளை வாள்களுடன் வந்த கும்பல் அட்டகாசம் பணம், நகை தர மறுத்தோருக்கு வாள்வெட்டு நல்லூரில் சட்டநாதர் வீதி, சங்கிலியன் வீதிப்பகுதிகளில் நேற்று அதிகாலை கொள் ளைக்கோஷ்டி ஒன்று பல வீடுகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்ததுடன் தங்க நகை, பணம் மற்றும் பொருள்களையும் கொள்ளை யிட்டிருக்கின்றது. முகத்தைக் கறுப்புத்துணியால் மறைத் துக் கட்டிக்கொண்டு வாள்கள், கிறிஸ் கத்திக ளுடன் காணப்பட்ட கொள்ளையர்கள் வீடு களை அடித்து நொறுக்கி உள்நுழைந்து அங் கிருந்தவர்களைப் பயமுறுத்தி, மிரட்டிகொள் ளையில் ஈடுபட்டிருக்கின்றனர். சுமார் இரு பது இருபத்தைதந்து பேர் அடங்கிய கொள் ளைக் கும்பல் ஒன்றே இவ்வாறு பெரும் அடாவடித்தனமான செயலில் ஈடுபட்டிருப் பது தெரியவந்துள்ளது. நேற்று…

    • 2 replies
    • 1.3k views
  8. இன்று சனிக்கிழமை மதியுரைஞரின் சிறப்புச் செய்தி மத்திய ஜரோப்பிய நேரம் 22:30 தமிழ் ஒளி இணையத்தில்.

    • 7 replies
    • 2.1k views
  9. யாழில் கிளைமோர்த் தாக்குதல்- மூதூரில் மோதல்: படைத்தரப்பில் ஒருவர் பலி [சனிக்கிழமை, 8 ஏப்ரல் 2006, 17:44 ஈழம்] [ம.சேரமான்] யாழ்ப்பாணம் நீர்வேலியில் இன்று சனிக்கிழமை நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் சிறிலங்கா படைத்தரப்பில் ஒருவரும் பொதுமகன் ஒருவரும் படுகாயமடைந்துள்ளனர். சிறிலங்கா இராணுவ வாகனத்தை இலக்கு வைத்து இன்று மாலை 4.40 மணிக்கு இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன. இதனிடையே மூதூர் கிழக்கில் பாத்தியடி இராணுவ முகாமில் நடைபெற்ற நேரடி மோதலில் ஒரு படையினர் கொல்லப்பட்டதாகவும் 4 படையினர் படுகாயமடைந்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடந்துள்ளது. மூதூர் தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா இராண…

  10. வாழைச்சேனை பிரதேசத்திலுள்ள சிவன்தீவில் இன்று அதிகாலை படையினர் மற்றும் கருணா குழுவினரும் இணைந்து சுற்றி வளைத்து பொது மக்கள் மீது கெடுபிடிகளை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகாலை 3.00 மணியளவில் கருணா குழுவைச் சேர்ந்த பிள்ளையான் தலைமையிலான குழுவினர் நாசிவன் தீவு கிராமத்திற்குள் புகுந்து பொது மக்களை மிரட்டி கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர். கிராமத்தைச் சுற்றி படையினர் பாதுகாப்பாக நின்றுள்ளனர். அத்துடன் வாழைச்சேனை, பேத்தாளை - கல்குடா வீதியிலும், அதிகளவு படையினர் நிறுத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட நபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்ற கருணா குழுவினர் அந்நபரை மிரட்டியதுடன், பொதுமக்கள் எந்த வகையிலும் அந்நபரிடம் தொடர்பு வைக்கக் கூடாது, தொடர்பு வைத்தா…

    • 0 replies
    • 1.2k views
  11. கண்காணிப்புக்குழு தலைவருக்கு அரசியல் துறை பொறுப்பாளர் கடிதம் இன்று, 07 ஏப்பிரல் 2006, தமிழ்த் தேசியப் பற்றாளரும் மனித உரிமை ஆர்வலருமான திரு.வி.விக்கினேஸ்வரன் திருகோணமலையில் வைத்துக் கொலைசெய்யப்பட்டுள்ளதை, மிகுந்த அதிர்ச்சியுடனும் கவலையுடனும் உங்களது உடனடிக் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். வன்முறையைச்சாராத சனநாயக வழிமுறையில், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க் முன்னின்று உழைத்த இந்த மனிதாபிமானப் பணியாளர் கொல்லப்பட்டுள்ளமையானது தமிழர் தேசத்தையே துக்கத்துக்குள்ளாக்கியுள்ள

    • 0 replies
    • 1k views
  12. :shock: பாகிஸ்தானுக்கு 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி [திங்கட்கிழமை, 3 ஏப்ரல் 2006, 18:40 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை விரிவுபடுத்தும் நோக்கில் 10 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை பாகிஸ்தானுக்கு வழங்குவதற்கு சிறிலங்கா இணங்கியுள்ளது. சிறிலங்காவின் உற்பத்திகளைக் கொள்வனவு செய்வதற்காக பாகிஸ்தான் வர்த்தகர்களுக்கு இந்த கடன் உதவி வழங்கப்படவுள்ளது. மகிந்தவுக்கும் பாகிஸ்தான் அரச தலைவர் முசாரப்புக்கும் இடையில் நேற்று முன்நாள் நடைபெற்ற இருதரப்பு உறவுகள் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளின் போது இந்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகளின் போது கலாச்சார, கல்வி மற்றும் வன்முறைகளைக் கட்டு…

    • 12 replies
    • 1.9k views
  13. கிழக்கில் ஒட்டுப்படைகள் -அரசின் மறுப்பு அடிப்படையற்றது -கக்ரப் கொக்லண்ட். சங்கதியில் வந்த செய்தி விபரம் http://www.sankathi.com/index.php?option=c...=2453&Itemid=56

  14. கிழக்கின் உள்ளுராட்சி தேர்தல் - முகத்தில் அறையும் ஜதார்த்தம் Sunday, April 02 - 07:22:26 (அறிவன்) நடைபெற்றுமுடிந்த உள்ளுராட்சித்தேர்தலில் தமிழ்த்தேசியத்தின் எழுச்சி ஓங்கி உரைக்கப்பட்டிருக்கிறது. எத்தகைய அச்சுறுத்தல்கள், படையினரின் கெடுபிடிகள் இருந்தபோதும் தென்தமிழீழ மக்கள் தமிழ்த்தேசியத்தின் மீதான தமது பற்றுறுதியை வெளிப்படுத்தியுள்ளனர். மட்டு – அம்பாறை மாவட்டங்களில் இத்தேர்தலில் போட்டியிட்ட தமிழரசுக்கட்சியின் வேட்பாளர்களுக்கு கொலை அச்சுறுத்தலை விடுத்திருந்தது கருணா ஒட்டுக்குழு. இத்;தேர்தலுக்கு சிலதினங்களுக்கு முன்னர் வடக்கு கிழக்கைப்பிரிப்பது பற்றிய கூட்டம் விமல் வீரவன்ஸ தலைமையில் நடைபெற்றபோது அதாவுல்லாவின் அணியினரும், கருணாகுழுவினரும் அதில் பங்கேற்றிருந்தனர…

  15. யாழ் குப்பிளான் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் அதிசய நிகழ்வு. - பண்டார வன்னியன் - Sunday, 02 April 2006 23:03 யாழ் குப்பிளான் என்ற இடத்தில் வெள்ளாடு ஒன்று மனித முகத்தை ஒத்த முகஅமைப்புடன் குட்டி ஒன்றை ஈன்றுள்ளது. இன்று நண்பகல் 12.30மணியளவில் இந்த மனிதமுக அமைப்பைக்கொண்ட அபூர்வ ஆட்டுக்குட்டியை தாயாடு ஈன்றெடுத்திருக்கின்றது. (படங்கள் உள்ளே). அபூர்வமுக அமைப்பு உடல் அமைப்புடன் காணப்படும் இந்த ஆட்டுக்குட்டியைப்பற்றி கேள்வியுற்ற பெருந்தொகையான மக்கள் அக்குட்டியை நேரில் சென்று பார்வையிட்டு வருகின்றனர். குப்பிளான் தெற்கு ஞானவைரவர் கோயிலுக்கு அருகில் உள்ள வீடோன்றில் வசித்து வரும் அரியமுத்து பாலச்சந்திரன் என்பவர் வளர்த்து வந்த வெள்ளாடு ஒன்றே இவ் அபூர்வ ஆ…

    • 0 replies
    • 1.4k views
  16. விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்லவே முடியாது: ஹக்ரூப் ஹொக்லெண்ட் [ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2006, 20:34 ஈழம்] [ம.சேரமான்] தமிழீழ விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்ல முடியாது என்று இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் முன்னாள் தலைவர் ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியுள்ளதாக கொழும்பு ஆங்கில வார ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பில் அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவிடம் ஒருவாரத்துக்கு முன்பாக விடுதலைப் புலிகளை சிறிலங்கா இராணுவத்தால் வெல்ல முடியாது என்று ஹக்ரூப் ஹொக்லெண்ட் கூறியுள்ளார். மேலும் விடுதலைப் புலிகள் இயக்கமானது அல்குவைடா போன்று பயங்கரவாத இயக்க…

  17. ஞாயிறு 02-04-2006 17:45 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] ஆசிரியை தாக்கி மாணவி வையித்திய சாலையில். பாடசாலையில் பரீட்சை எழுதிக் கொண்டு இருந்த மாணவி ஏனைய மாணவிகளைப் போன்று பரீட்சையெழுதவில்லையெனக் கூறி மாணவியை ஆசிரியை தாக்கியதில் மாணவி யாழ்ப்பாணம் போதனா வையித்திய சாலையின் 15ம் விடுதியில் அணுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் கல்விகச் கோட்டத்தில் அமைந்துள்ள ஏழாலை சைவசன்மார்க்க வித்தியாலயத்தில் இந்த தாக்குதல் சம்பவம் கடந்த வெள்ளிக் கிழமை இடம் பெற்றுள்ளது. ஏழாலை மத்தியைச் சேர்ந்த ஆண்டு இரண்டில் கல்வி கற்கும் தெய்வேந்திரம் குமுதினி வயது 07 என்பவரே ஆசிரியையினால் தலையை வாங்கில் பிடித்து மோதியதில் கண…

    • 16 replies
    • 2.7k views
  18. வன்னி வந்த தமிழக திரைப்பட இயக்குநர் குறும்படத் துறையில் புதிய திருப்புமுனை * `தமிழீழத் திரைப்படங்கள் மக்களின் வாழ்வையும்விடுதலைப் போராட்டத்தையும் பேச வேண்டும் என்பதில் தலைவர் கொண்டுள்ள கரிசனை மிகப் பெரியது...!' * தொடர்ந்த, இடைவிடாத யுத்த சூழலில் தான் எமது சினிமா கலை பிறந்து வளர்ந்தது' வன்னியில் இயக்குநர் மகேந்திரன் குறும்படம் ஒன்று பற்றி விளக்கமளிக்கையில்.... ஆர்.பி " வருங்காலத்தில் வெளிநாட்டுத் திரையரங்கில் தமிழீழத்தின் திரைப்படம் பார்த்து எழுந்து நின்று கை தட்டு பவர்களில் ஒருவனாக ஒரு நாள் நானும் இருப்பேன்...." இப்படிச் சொல்லியிருப்பவர் யாராக இருக்கமுடியும் ? தமிழகத்தின் பிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன்தான் இவ்வாறு கூறியிருக்கின்றார். த…

    • 6 replies
    • 1.8k views
  19. இலங்கையில் பிரிவினைவாதத்தை எதிர்க்கிறோம்: பாகிஸ்தான் அரச தலைவர் தொப்பி முசாரப் [வெள்ளிக்கிழமை, 31 மார்ச் 2006, 14:31 ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கையில் பிரிவினைவாதத்தை பாகிஸ்தான் எதிர்ப்பதாக அந்நாட்டு அரச தலைவர் பர்வேஸ் முசாரப் தெரிவித்துள்ளார். சிறிலங்கா அரச ஊடகமான "டெய்லி நியூஸ்" நாளேட்டுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல்: இலங்கையில் பிரிவினைவாதத்தை நாம் எதிர்க்கிறோம். சிறிலங்காவின் இறையாண்மையும் பிரதேச ஒற்றுமையும் மதிக்கப்பட வேண்டும். சிறிலங்கா தலைவர்களது எந்த ஒரு பயணத்தையும் பாகிஸ்தான் மகிழ்வோடு வரவேற்கிறது. சிறிலங்கா நாட்டவரையும் சிறிலங்காவின் தலைவர்களையும் எமது உண்மையான நண்பர்களாக நாம் எண்ணுகிறோம். சிறிலங்கா ஒரு ஜனநாயக நாடு. மக்களால்…

    • 12 replies
    • 2.1k views
  20. எம்மீது வலிந்து தாக்குதல்கள் நடத்தப்பட்டால் பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் எழிலன் எச்சரிக்கை. யுத்த நிறுத்தக்கண்காணிப்புக்குழு

    • 0 replies
    • 1.7k views
  21. கரிநாகம் கருணா என்னும் மாயை!!!!!!!!! (பாகம் 1) கருணாவின் துரோகம் அரங்கேறி இரண்டு வருடங்கள் ஆகின்றன. விடுதலைப்புலிகளின் தலைமைக்கு சவால் விட்டபடி 41 நாட்கள் அட்டகாசம் புரிந்த கருணா மூன்றே மூன்று நாட்கள் நடந்த சண்டையின் பின்பு விரட்டியடிக்கப்பட்டார். தப்பி ஓடிய கருணா இந்திய, சிறிலங்கா புலனாய்வுத்துறையின் பாதுகாப்பில் உயிர் வாழ்ந்து வருகிறார். கருணா உயிர் வாழ்வதாலும், இடையிடையே இராணுவத்தின் துணையுடன் தாக்குதல்கள் நடத்துவதாலும், கருணாவைப் பற்றி இன்று வரை பேச வேண்டிய, எழுத வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது. ஜெனீவா பேச்சுவார்த்தைகளை அடுத்து கருணா குழுவின் நடவடிக்கைகளை சிறிலங்கா அரசு ஓரளவாவது கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நிலைமை மேலும் மோசம் அட…

    • 29 replies
    • 7.2k views
  22. வவுனியாவில் சிறிலங்காவின் விமானப்படைக்குச் சொந்தமான ஆளில்லா வேவு விமானம் இன்று செவ்வாய்கிழமை வீழ்ந்துள்ளது. வவுனியா சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதியான மகாரம்பைக்குளத்தில் இன்று முற்பகல் 10.00 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது. வவுனியாவின் வடகிழக்குத் திசையில் 4 கிலோ மீற்றர் தொலைவில் மகாரம்பைக்குளம் உள்ளது. சிறிலங்கா விமானப் படையின் தயாரிப்பான N226 LK சுப்பர் ஸ்டார் என்ற இந்த ஆளில்லா வேவு விமானம், தனியார் வீட்டு தொலைக்காட்சி அன்டெனாவில் மோதி வீட்டின் வெளிப்புறத்தில் விழுந்துள்ளது. இயந்திரக் கோளாறினால் தலைமையகத்தின் கட்டுப்பாட்டை இழந்ததையடுத்து இந்த விபத்து நடந்ததாக தெரியவந்துள்ளது. சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட கிரா…

    • 11 replies
    • 2.4k views
  23. தன்னை தாக்கி காயப்படுத்திய இராணுவத்தினரை பிரபாகரனின் படத்தை காட்டி எச்சரித்த இளைஞன் வவுனியாவில் சம்பவம் தன்னைத்தாக்கி காயப்படுத்திய இராணுவத்தினருக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தைக் காட்டி "இவர் தான் உங்களுக்கு விரைவில் பதில் சொல்வாரென" இளைஞரொருவர் எச்சரித்த சம்பவம் சனிக்கிழமை வவுனியா செக்கட்டிப் பிலவு முத்துமாரியம்மன் கோவிலடியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது; சனிக்கிழமை இரவு பதினொரு மணியளவில் செக்கட்டிபிலவு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்ற இளைஞர்கள் செல்வபுரம் இராணுவ முகாமை அண்மித்த இடத்தில் வீதியில் உரையாடிக் கொண்டிருந்த போது, இந்த இடத்தில் நிற்க வேண்டாம் விலகிச் செல்லுங்கள் என காவலரணில…

  24. ஞாயிறு 26-03-2006 19:13 மணி தமிழீழம் [நிருபர் செந்தூரன்] திருமலை சேருநுவ கெரட் பொயின்ட் காவலரண் மீது தாக்குதல். திருகோணமலை சேருநுவரயில் அமைந்துள்ள கெரட் பொயின்ட் காவல்அரண் மீது இன்று பிற்பகல் 2.30 அளவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிறிய ஆயுதங்களின் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலின் போது படையினர் எவருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த தாக்குதல் தமிழிழ விடுதலைப்புலிகளின் பூநகர் காவல் அரணில் இருந்தே நடத்தப்பட்டதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. குறித்த குற்றச்சாட்டு தொடர்பாக தமிழிழ விடுதலைப்புலிகளின் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் மறுத்துள்ளார். http://www.pathivu.com/inde…

  25. ஞாயிறு 26-03-2006 21:17 மணி தமிழீழம் [நிருபர் மயூரன்] ஹட்டன் சிங்கமலை வனப்பிரதேசத்தில் தீப்பரவல். இந்த தீப்பரவல் இன்று பிற்பகல் 3 மணியளவில் ஏற்பட்டதாக ஹட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் தீப்பரவலானது பாரியளவில் இருப்பதால் அதனை கட்டுப்படுத்தப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஹட்டன் நகருக்கான நீர்வழங்கல் நிலைகள் இந்த வனப்பிரதேசத்தில் அமைந்திருப்பதன் காரணமாக அவற்றிற்கும் பாதிப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. இதேவேளை இந்த தீப்பரவல் இயற்கையாக ஏற்பட்டதல்ல என சந்தேகம் வெளியிட்டுள்ள காவல்துறையினர், இந்த சம்பவத்திற்கு பின்னணியில் எவராவது காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.ph…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.